Friends Tamil Chat

புதன், 5 பிப்ரவரி, 2014

5th Feb 2014 - விளையச் செய்யும் தேவன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 பிப்ரவரி மாதம் 05-ம் தேதி - புதன் கிழமை
விளையச் செய்யும் தேவன்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்; இந்த ஜனத்தில் மீதியானவர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன். - (சகரியா 8:12).

.
ஒரு வயதான முதியவர் மாங்கன்று ஒன்றை நட்டுக் கொண்டிருந்தார். அச்சமயம் அவவழியே வந்த ஊர்த்தலைவர் 'தாத்தா உங்களுக்கோ வயதாகி விட்டது. இந்த செடி வளர்ந்து மரமாகி பழம் தரும் காலம் வரை நீங்கள் உயிருடன் இருக்கப்போவதில்லை. பின் ஏன் வீணாக கஷ்டப்படகிறீர்கள்?' என்றார். அதற்கு முதியவர் என்னைச் சுற்றியுள்ள மரங்களெல்லாம் என் முற்பிதாக்களால் நடப்பட்டவை. அதன் கனியை புசிக்கிற நான் என் வருங்கால சந்ததிக்காக இச்செடியை நட வேண்டாமா?' என்றார். முதியவர் தன் பெலவீனத்தையும் பொருட்படுத்தாமல் பின் சந்ததியினருக்காக செடியை நம்பிக்கையோடு நட்டு வைத்தார்.
.
பொதுவாக நாம் மழையை எதிர்ப்பார்த்து விதை விதைப்போம். விதைக்கும்போது உள்ளத்தின் ஓரத்தில் கவலை கொஞ்சம் ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். 'சரியான நேரத்தில் மழை பெய்யவில்லையென்றால் எல்லாம் நஷ்டமாகி விடுமே' என்ற கவலைதான். ஆனால் ஏற்ற நேரத்தில் நல்ல மழை பெய்து நல்ல விளைச்சலைக் காணும்போது நாம் படும் சந்தோஷத்திற்கு அளவேயிராதல்லவா? வேதத்திலே வசனம் விதைக்கு ஒப்பிடப்படுகிறது. இந்த உலகமாம் நிலத்திலே விதை விதைக்கிறவர்களாக தேவன் நம்மை தெரிந்து வைத்திருக்கிறார்.
.
பிரியமானவர்களே, இன்று நாம் கிறிஸ்துவை சுதந்திரமாக ஆராதிக்க காரணம் என்ன? மூன்று நான்கு தலைமுறைக்கு முன்பாக உறவினர்கள் மத்தியிலும், சமுதாயத்திடமிருந்தும் வந்த போராட்டங்களை துச்சமாய் எண்ணி இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்ட நம் முற்பிதாக்களும் ஒரு காரணமல்லவா? அவர்கள் தங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கு வசனமாம் விதையை விதையை விதைத்ததால் தானே இன்று நாம் கர்த்தரை தொழுது கொள்ளுகிறோம்!

.
அதுபோலவே நாமும் இனறு விசுவாசத்தோடு நம் பிள்ளைகளுக்கும், சிறுவர் மத்தியிலும், வாலிபர் மத்தியிலும் தேவ வசனத்தை அறிவிப்போம். சிறுவர் மத்தியில் வசனத்தை விதைத்தும் எந்தவொரு மாற்றத்தையும் நான் காணவில்லையே என்று ஒருவேளை நீங்கள் கலங்கலாம். விதையை விதைக்க வேண்டியது மட்டுமே நமது பொறுப்பு. விளையச் செய்கிறவர் தேவன்.

.

ஒருவேளை நாம் உயிரோடு இருக்கும் மட்டும் பலன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்றாவது ஒரு நாள் நாம் விதைத்த விதை பலன் கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு விதைப்போம். விளையச் செய்கிற தேவன் நூறு மடங்கு விளையச் செய்வார். விதைத்தற்கான பலன் நிச்சயமாய் நமக்கு பரலோகத்தில் உண்டு. ஆமென் அல்லேலூயா!
.


விதைப்பும் அறுப்புமே பூமியின் மீதினில்

மாறி மாறி வருமே

பகலும் இரவுமாய் வருடங்கள்

மாயமாய் நழுவியே சென்றிடுமே

சிந்திப்பீர் சிந்திப்பீர்காலங்களை சிந்திப்பீர்

இயேசுகிறிஸ்துவின் வேலை ஒன்றே இன்று பிரதானம்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் முன்னோர் கர்த்தரை ஏற்றுக் கொண்டதினால் நாங்கள் இன்று உண்மையான தேவனை தொழுதுக்கொள்ளும் சிலாக்கியம் கிடைத்திருக்கிறதே அதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கும் கர்த்தரை குறித்து போதித்து, அவாகளும் உம்மை சேவிக்கும்படி கர்த்தருக்குள் அவர்களை வளர்க்க வேண்டிய ஞானத்தை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, ஜெபத்தை கேட்கிறவரே, உம்மை துதிக்கிறோம். பதிலை தருகிறவரே உம்மை போற்றுகிறோம். இப்போதும் எங்கள் விண்ணப்பங்களைக் கேட்டு பதில் தருவீராக.
.
சகோதரன் கோவிந்தராஜின் அண்ணியின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக எழுதியிருக்கிறாரே அவர்களுக்கு நீர் கொடுத்து வருகிற சுகத்திற்காக உமக்கு கோடி நன்றிகள் ஐயா. தொடர்ந்து பூரண சுகத்தை கொடுப்பீராக. சகோதரனுக்கும் தான் வேலை செய்யும் இடத்தில் இருக்கும் பிரச்சனையால் தான் அங்கு வேலை தொடர்வதா அல்லது மேல் படிப்பிற்காக செல்வதா என்று குழப்ப நிலையில் இருக்கும் அவருக்கு தேவன் தாமே ஒரு தெளிவை கொடுப்பீராக. குழப்பங்களை மாற்றி என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவையும், ஞானத்தையும் கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம்.
.
சகோதரி ஜானு அம்மு அவர்களின் கணவர் எம். இ படித்துக் கொண்டிருப்பதால், தன்னுடைய ஒரே சம்பளத்தில் குடும்பத்தை தாங்க வேண்டும் என்றும், தன் ஒரே பிள்ளையை அம்மாவிடம் கொடுத்து வளர்ப்பதால் அதற்கும் பணம் அனுப்ப வேண்டும் என்பதால் அதிக பிரச்சனை இருப்பதால் அவர்களுடைய பிரச்சனைகள் தீரும்படியாக ஜெபிக்கிறோம். அவர்களுடைய கணவர் படித்து முடித்து நல்ல வேலையில் சேரவும், அவர்களுடைய தம்பிக்கு நல்ல வேலை கிடைக்கவும், அவர்களுடைய அம்மா அவர்களுடனே வந்து தங்கி, பிள்ளையை பார்த்துக் கொள்ளவும் தேவன் கிருபை செய்யும்படியாக ஜெபிக்கிறோம்.
.
சகோதரி புஷ்பா அவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி திருமணம் நடந்தாலும், இரவினில் கெட்ட கனவுகளினால் பாதிக்கப்பட்டிருக்கிற அவர்களுக்கு தேவன் கிருபை செய்யும்படியாக ஜெபிக்கிறோம். அவர்களுக்கு கெட்ட கனவுகளை கொடுத்து பயமுறுத்துகிற அசுத்த ஆவிகளை இயேசுகிறிஸ்துவின் வல்லமையுள்ள நாமத்தில் கட்டி அப்புறப்படுத்துகிறோம். சகோதரிக்கு சந்தோஷமான திருமண வாழ்வை கெடுக்கும் எந்த பிரிவினை ஆவிகளையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அப்புறப்படுத்துகிறோம். சந்தோஷமான திருமண வாழ்வை கர்த்தர் கட்டளையிடுவீராக.
.
சகோதரன் பால் அவர்கள் தன்னுடைய வேலையை இழந்து என்ன செய்வது என்று தவிக்கிறபடியால், அவருடைய படிப்பிற்கேற்ற நல்ல ஒரு வேலையை கர்த்தர் தந்தருளுவீராக.தனக்குநான்கு இலட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும் எழுதியிருக்கிறாரே, தேவன் தாமே அவருக்கு ஒரு நல்ல வேலையைக் கொடுத்து, கடனெல்லாம் அடைக்கப்பட்டு, ஒரு சந்தோஷ வாழ்வை கட்டளையிடும்படியாக ஜெபிக்கிறோம். அவருடைய மனைவியையும், பிள்ளையையும் குடும்பமாக ஆசீர்வதிப்பீராக.
எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.