Friends Tamil Chat

சனி, 28 பிப்ரவரி, 2015

இந்த வார வாக்குத்தத்தம் & வேதாகம கேள்விகள் - :01 மார்ச் 2015

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

வேதாகம கேள்வி-பதில் போட்டி

 குறிப்பு:கடந்த மாதம் 15 தேதி வேதாகம கேள்விகளில் 4வது கேள்வியில்

புதிய ஏற்பாடு  என்பதற்கு பதிலாக பழைய ஏற்பாடு என்று

போடப்பட்டிருந்தது. டைப் செய்யும்போது தவறி விட்டது.

பிழைக்கு வருந்துகிறோம்.
.
I. இந்த வார கேள்விகள்:  01 மார்ச் 2015.
************************************************
.
1. 'இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்' என

   வாசிப்பதெங்கே?
.
2.  'ஞான திருஷ்டியுள்ள புருஷன்' என அழைக்கப்பட்டது யார்?
.
3.  தகைவிலான் குருவியைப்போல கூவினவன் யார்?
.
4.  இருபுறமும் கருக்கும் ஒரு முழ நீளமுமான ஒரு கத்தியை தன்

    இடுப்பிலே கட்டியிருந்த நியாயாதிபதி யார்?
.
5. வேதத்தில் எத்தனை தெபொராக்கள் உண்டு?
...
.

 உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற

வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும்.
.
குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய

பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை

சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or  Sis. - Bro.)
.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.
.
.

II. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்'
=======================================
.
1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன?
.
2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்?
.
3) எந்த அதிகாரத்தில்?
.
4) எந்த வசனம் எனக் கூறுங்கள்.........
.
=================================================
இந்த சம்பவம் என்ன?
.


=================================================
.
கடந்த  வார கேள்வி பதில்கள்: 22 பிப்ரவரி 2015.
.
1.  ஒரு வேலைக்காரியின் மகன் ராஜாவானான், அவன் யார்?

 

சரியான விடை : அபிமெலேக்  - நியா. 9 - 6 - 17
.
2. நூதனமாய்த் தோன்றிய புது தெய்வங்களாகிய பேய்களுக்கு

   பலியிட்டவர்கள் யார்?
 

சரியான விடை : இஸ்ரவேலர்  - உபா 32:17
.
3. இரண்டு வெண்கல விலங்கு போடப்பட்டிருந்த இருவர் யார்? யார்?

.

சரியான விடை : சிம்சோன், சிதேக்கியா.  நியா. 16:21

– எரேமியா39:7  52:10-11.

.
4.தகப்பன் கிரேக்கன் - தாய் யூதஸ்திரீ, அவர்களுக்கு பிறந்த மகன் யார்?

.

சரியான விடை : தீமோத்தேயு – அப். 16:1
.
5. தகப்பன் யூதன் - தாய் மோவாபிய ஸ்திரீ இவர்களுக்கு பிறந்த மகன்

   யார்?
.

சரியான விடை : ஓபேத் - ரூத் 4:13 - 22
.
 சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை

ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள்.
.

1) Bro.S.Rajesh..2) Bro.R.Silas..3) Sis.R.Sheela..
.
4) Bro.John Sagayam..5) Sis. Sobitha Lawrence...
.
6) Sis.Anita Priyakumar..7) Mrs.Christy Mohan..
.
8) Bro Jebaveerasingh J..9) Sis. Celin Michael..
.
10)Sis.Kamini David..11) Mrs.M.Vijayarani Manonmani..
.
12) Miss.J.Sharon Rachel Mahima..13) Sis.Latha Priyanka (4 only)..
.
14) Miss.V.Rajeswari@Deborah..15) Sis.Chandralekha Martin..
.
16) Mrs. Baby Thangaraj..17) Mrs. Angel Emmanuel..
.
18) Mrs. Vimala Andrews..19) Mrs. Hannah Ezekiel-(only2nhalf)
.
20) Mr.John Manickam (only 2)..21) Mrs.Sudha Kirubanandhan (3 only)
.
22) Mrs.Jeyaseeli Jawahardoss (3only)..23) MRS.Sheeba Samuel (4only)
.
24) Sis.S.Ramila Suther..25) Mrs. Deepa R.Theodore..
.
26) Mrs. Judithara . J..27) Bro.J.Antony Suther...
.
28) Sis.Deborah Vasanthi..29) Mrs.T.L.Sheela Jasmine (3 only).
.
30) Sis.S.Beena Lawrence..31) சகோ.எட்வின் D சுந்தர்.. ..
.
32) Bro.K.Elayaraja..33) Sis.Mercy Karunya..
.
34) சகோதரி. சரஸ்வதி....
************************************************
2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' சரியான விடை :
=====================================================

.
 ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப்போய், தூண்டில்

போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப்பிடித்து, அதன் வாயைத் திறந்துபார்.

ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும்

அவர்களிடத்தில் கொடு என்றார். - மத்தேயு 17:27.
.
வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் :
.
1) Bro.S.Rajesh..2) Bro.R.Silas..3) Sis.R.Sheela..
.
4) Bro.John Sagayam..5) Sis. Sobitha Lawrence...
.
6) Sis.Anita Priyakumar..7) Bro. R.Yabes Raja..
.
8) Mrs.Christy Mohan..9) Bro.K.Naveen Prabhakaran..
.
10) Bro Jebaveerasingh J..11) Sis. Celin Michael..
.
12) Sis.Kamini David..13) Mrs.M.Vijayarani Manonmani..
.
14) Miss.J.Sharon Rachel Mahima..15) Bro.K.Dhileepan..
.
16) Miss.V.Rajeswari@Deborah..17) Sis.Chandralekha Martin..
.
18) Mrs. Baby Thangaraj..19) Sis.S.Ramila Suther...
.
20) Mrs. Angel Emmanuel..21) Mrs. Vimala Andrews...
.
22) Mrs.Kruba John..23) Mrs. Hannah Ezekiel..
.
24) Mr.John Manickam..25) Mrs. S.Merlin Jayakumar..
.
26) Mrs. Sherlin Lelin..27) Mrs. Sudha Kirubanandhan..
.
28) Mrs.Jeyaseeli Jawahardoss..29) Mrs.Sheeba Samuel..
.
30) Mrs. Deepa R.Theodore..31) Mrs. Judithara . J..
.
32) Sis.Deborah Vasanthi..33) Mrs. T.L. Sheela Jasmine..
.
34) சகோ.எட்வின் D சுந்தர்...35) Bro.K.Elayaraja..
.
36) சகோதரி. சரஸ்வதி....

.

***********************************************************************

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

 

வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

27th February 2015 - அழியாத ராஜ்ஜியம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 பிப்ரவரி மாதம் 27-ம் தேதி - வெள்ளிக்கிழமை
அழியாத ராஜ்ஜியம்
..........

நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம். - நீதிமொழிகள். 14:13.

.

தாவீது ராஜாவைப்பற்றியும், சாலமோன் ராஜாவைப்பற்றியும், அநேக சுவாரஸ்யமான கதைகள் சொல்லப்படுவதுண்டு. ஒரு நாள் தாவீது ராஜா ஒரு கனவுக் கண்டாராம். அதில் ஒரு மோதிரத்தைக் கண்டார். அதை அணிந்தவுடன், அது, துக்கமுள்ள மனுஷனை மகிழ்ச்சியுள்ளவனாக்கவும், மகிழ்ச்சியுள்ள மனிதனை துக்கமுள்ளவனாக்கவும் மாற்றிற்று.

.

அடுத்த நாள் தூங்கி எழுந்தவுடன், அரண்மனையின் நகை செய்பவரை அழைத்து, அதே மாதிரி ஒரு மோதிரத்தை செய்யச் சொல்லி கட்டளையிட்டார். தன்னுடைய வாழ்க்கையின் நெருக்கமான நேரங்களில், அதை அணிந்து, சமாதானம் அடையப் போவதாகக் கூறி சீக்கிரமாய் அதைச் செய்யச்சொல்லி கட்டளையிட்டார்.

.

அதைக் கேட்டு அந்த நகை செய்பவர், தன்னால் எப்படி அந்த மாதிரி மோதிரத்தை செய்ய முடியும்? என்று கலங்கியவராக, தன் வீட்டிற்குச் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது வழியில் இளவரசன் சாலமோனைக் கண்டார். சாலமோனும் அவரைக் கண்டு, 'ஏன் இப்படி, கவலையோடு போய்க் கொண்டிருக்கிறீர்' என்றுக் கேட்டார். தட்டான் நடந்ததைக் கூறியவுடன், 'இதற்குப் போயா கலங்குகிறீர்கள்? ஒரு சாதாரண மோதிரத்தை உண்டாக்கி, அதன்மேல் ''இதுவும் கடந்துப் போகும்'' என்ற எழுத்துக்களை பதித்து விடுங்கள், ராஜா அதை அணிந்து தன்னுடைய சோக சூழ்நிலையில் அதைக் காணும்போது, இது சீக்கிரமாய் கடந்துப் போய் விடும் என்று மகிழ்ச்சி அடைவார். அதே சமயம், மகிழ்ச்சியாயிருக்கும்போது இதைப் பார்த்தால் இந்த மகிழ்ச்சி கடந்துப்போகும் என்று துக்கமடைவார்" என்றுக் கூறினார்.

.

அப்படியே அந்தத் தட்டானும் செய்து தாவீது ராஜாவிடம் கொடுத்தபோது, அவர் மகிழ்ச்சியடைந்து, அவருக்கு பரிசுகளை வழங்கினார். மட்டுமல்ல, தன் மகனின் புத்திக் கூர்மையை பாராட்டினார்.

.

நாம் வாழும் வாழ்க்கை மிகக் குறுகியது. இந்த உலகமும் அதன் ஆசை இச்சைகளும் ஒரு நாள் அழிந்துப் போய் விடும். ஆனால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேல் நாம் வைக்கும் நம்பிக்கை இந்த உலகத்திற்கு மாத்திரமல்ல, நாம் நித்தியமாய் வாழப்போகும் பரலோக ராஜ்ஜியத்திற்கும், நம்மைக் கொண்டு சேர்த்து வாழ வைக்கும். சமீபத்தில் நான் ஒருச் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தபோது செய்தியாளர் சொன்னார், 'என்னவோ நாம் யுகயுகமாய் இந்த உலகத்தில் வாழப் போகிறதுப் போல நம் உடல்நிலை சரியில்லையென்றால், கோடிக் கோடியாய் பணத்தை இறைத்து, சரிப்படுத்தப் பார்க்கிறோம். ஆனால் நித்திய நித்தியமாய் மறுமையில் வாழப் போகும் வாழ்க்கையைக் குறித்து சிறிதளவும் கவலையின்றி வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்' என்று. அது எத்தனை உண்மை!

.

எல்லாமே கடந்துப் போகிறவைகள்தான். எதுவும் நித்திய நித்தியமானவை அல்ல, நாம் படுகிற பாடுகள், வறுமைகள் கஷ்டங்கள், துன்பங்கள் எதுவுமே நிரந்தரமல்ல, எல்லாமே கடந்துப் போகும். ஆனால் நாம் கிறிஸ்துவோடு வாழப் போகும் வாழ்க்கையே நிரந்தரம். அதற்காகவே அவர் இந்த உலகத்திற்கு வந்து தம் சொந்த ஜீவனையும் இரத்தத்தையும் சிலுவையிலே சிந்தி, நமக்கு இரட்சிப்பை இலவசமாக கொடுத்து, நமக்காக ஒரு வீட்டையும் கட்ட பரலோகத்திற்குச் சென்றிருக்கிறார். 'என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்' (யோவான் 14:2,3) என்றுச் சொல்லிச் சென்றவர் சீக்கிரம் வரப் போகிறார். வந்து நம்மைக் கூட்டிச் செல்லப் போகிறார். அவருடைய வருகைக்காக காத்திருந்து, பரிசுத்தமாய் வாழ்ந்து அவரோடு ஆயத்தமாகி செல்வோமாக.

.

மோட்ச யாத்திரை செல்கிறோம் மேலோக வாசிகள்

மாயலோகந் தாண்டியே எம் வீடு தோன்றுதே

கடந்து செல்கிறோம் கரையின் ஓரமே

காத்திருந்து ராஜ்ஜியம் கண்டடைவோம்

.

ஜெபம்
எங்களை நேசிக்கிற எங்கள் நல்ல தகப்பனே, இந்த மாய உலகம் கட்ந்துப் போகும், இதன் மகிழ்ச்சியும், துக்கமும் கடந்துப் போகும். ஆனால் மாறாத எங்கள் நேசரோ, எங்களோடு என்றும் துணையாக இருந்து எங்களை நித்திய, அழியாத ராஜ்ஜியத்திற்கு கொண்டுச் சேர்க்கப் போகிற தயவுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறோம். அதற்கென்று எங்களை ஆயத்தப்படுத்த எங்களுக்கு உதவிச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...............

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

26th February 2015 - இயேசு அற்புதமானவரே

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 பிப்ரவரி மாதம் 26-ம் தேதி - வியாழக்கிழமை
இயேசு அற்புதமானவரே
........

நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை - (யோசுவா 1:5).

.

ஒரு கிறிஸ்தவ சகோதரன் தினச்செய்தியை கேட்டு கொணடிருந்தபோது, அவர் இருந்த அமைதியான பள்ளத்தாக்கில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. அதை கேட்டவுடன் அவர் முழங்காலில் நின்று ஜெபிக்க ஆரம்பித்தார். அவர் ஜெபித்து கொண்டிருக்கும்போதே, தண்ணீர் அவர் இருந்த வீட்டின் வாசலில் நிறைய ஆரம்பித்தது. அவர் உடனே அடுத்த மாடிக்கு விரைந்து, ஜெபித்து கொண்டிருந்தார். தண்ணீரின் வரத்து உயர ஆரம்பித்தது. கடைசியில் மொட்டை மாடியில் நின்று ஜெபித்தார். அப்போது ஒரு ஹெலிகாப்டரில் இருந்து வெள்ள அபாயத்தில் இருப்பவர்களை மீட்டெடுப்பவர்கள், அவரை நோக்கி ஒலிபெருக்கியில் தாங்கள் ஏணியை கீழே விடுவதாகவும், அதில் ஏறி தங்களிடம் வந்துவிடுமாறும் கூவினர். ஆனால் அந்த மனிதரோ, 'கர்த்தர் என்னை காப்பாற்றுவார், எனக்கு எந்த உதவியும் தேவையில்லை' என்று கூறி மறுத்து விட்டார்.

.

சிறிது நேரத்தில் அவர் இருந்த வீடு உடைய ஆரம்பித்தது. அவர் அருகில் இருந்த ஒரு மரத்தை இறுக பற்றி கொள்ள ஆரம்பித்தார். அப்போது அங்கு ஒரு படகில் வந்த காவல் துறை காப்பாளர்கள், அவரை தங்களோடு வந்து விடுமாறு அவரை பார்த்து கூறினர். ஆனால் அவரோ 'இல்லை கர்த்தர் தன்னை காப்பாற்றுவார்' என்று கூறி தொடர்ந்து அந்த மரத்தையே பற்றி கொண்டிருந்தார். கடைசியில் அந்த மரமும் விழுந்து அந்த மனிதர் தண்ணீரில் மூழ்கி மரித்து போனார்.

.

மரித்த அவர் பரலோகம் சென்று, கர்த்தரிடம் 'நான் இங்கு வந்திருப்பதை குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் நான் ஜெபித்த ஜெபத்திற்கு நீங்கள் பதிலளிக்கவில்லையே' என்று முறையிட்டார். அப்போது தேவன், 'நான் உனக்கு ஹெலிகாப்படரையும், படகையும அனுப்பினேனே நீ ஏன் அதில் ஏறி தப்பித்து கொள்ளவில்லை' என்று கேட்டார்.

.

வேதாகமத்தில் நாம் எங்கும் தேவன் அசாதாரண முறையில் தான் தம்மை வெளிப்படுத்துவார் என்று எழுதப்படவேயில்லை. நம்மில் அநேகர், அற்புதங்கள் செய்யப்படும் இடத்தில் மட்டுமே தேவனுடைய கரம் இருக்கிறது என்று நினைக்கிறோம். எப்போதும் ஏதோ ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் மாத்திரம் நாம் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறோம். ஒரு அற்புத பெருவிழாக்களுக்கு போனால், அங்கு பேசும் ஊழியர் தங்கள் பெயரை சொல்ல வேண்டும் என்று எதிர்ப்பார்த்து போகிற கிறிஸ்தவர்கள் அநேகர். 'நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை' என்று தேவன் சொல்லியிருக்க, அதை உறுதியாய் இருதயத்தின் ஆழத்திலிருந்து விசுவாசிக்கிற கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் இந்த நாட்களில்? கிறிஸ்தவர்கள் என்று சொல்லி கொண்டும், தினமும் வரும் தினபலனை பார்க்கிறவர்களும், ஊழியக்காரர் என்னை பற்றியும், என் குடும்பத்தை பற்றியும் , என் எதிர்காலத்தை பற்றியும் என்ன சொல்கிறார் என்று எதிர்ப்பார்த்து ஊழியக்காரரிடம் சென்று ஜெபிக்கிற கிறிஸ்தவர்களும் இன்று எத்தனை பேர்கள்? ஒரு பத்து பேர் போய் ஒரு ஊழியக்காரரிடம் ஜெபித்தால், அந்த பத்து பேருக்கும் கர்த்தர் வெளிப்பாடுகளை வெளிப்படுத்துவதில்லை, யாராவது ஒரு மிகவும் தேவையில் இருக்கும் ஆத்துமாவிற்கு தேவன் ஆவிக்குரிய ஆலோசனையையோ, தேற்றுதலையோ கூறுவார். ஆனால், பத்து பேரும் கர்த்தர் எனக்கு என்ன சொல்கிறார் என்று ஊழியர்களை நெருக்குவதால், சில வேளைகளில் தேவன் சொல்லாததை சொல்ல வேண்டிய நெருக்கம் ஊழியக்காரருக்கு ஏற்படுகிறது. அதை விசுவாசிகளே செய்வதால், அந்த ஊழியரை சொல்லி குற்றமில்லை.

.

ஒரு முறை ஒரு ஊழியர், வரிசையாக உட்கார்ந்திருக்கிறவர்கள் மேல் கைகளை வைத்து ஜெபிக்க ஆரம்பித்தார். அவர் என்னிடத்தில் வந்த போது, என் மேல் கைளை வைத்து, 'உங்களுக்கு இடுப்பு வலி இருக்கிறது, சரிதானே' என்று கேட்டார். எனக்கு இடுப்பு வலியும் இல்லை, ஒன்றும் இல்லை, நான் ஒன்றும் சொல்லாமல் இருந்தபோது அவர் மீண்டும் என்னிடம், 'கர்த்தர் வெளிப்படுத்துகிறார், உங்களுக்கு இடுப்பு வலி உண்டுதானே' என்று எல்லார் முன்னிலும் கேட்டபோது, எனக்கு அவரை வெட்கப்படுத்த விரும்பாமல், ஆம் என்று கூறினேன். அவருக்கு மிகவும் சந்தோஷமாகி விட்டது. இப்படி பொய்யாய் சொல்கிற ஊழியக்காரர்களும் அநேகர் இருக்கிறார்கள். இப்படி இவர்கள் பெருக காரணம், விசுவாசிகளே!

.

ஓவ்வொரு விசுவாசியின் சிந்தனையும் மாற வேண்டும். கர்த்தர் 'உன்னோடு நான் எப்போதும் இருக்கிறேன்' என்று சொல்லியிருக்கிறாரே, நான் ஏன் மற்றவர்களை நோக்கி பார்க்க வேண்டும்? ஏன் அற்புதங்களை எதிர்ப்பார்க்க வேண்டும்? அற்புதங்கள் நடந்தாலும் நடக்கவில்லை என்றாலும் தேவன் என்னோடு இருக்கிறார் என்ற ஆணித்தரமான விசுவாசம் ஒவ்வொரு இருதயத்திலும் இருந்தால், நிச்சயமாக நாம் அற்புதங்களையும் அடையாளங்களையும் தேடி போக மாட்டோம். இந்த எண்ணத்தை நாம் வளர்த்து கொண்டால், நம்முடைய வாழ்க்கை தலைகீழாக அற்புதம் நிறைந்ததாக மாறிவிடும். தம்மை அண்டிக்கொண்ட தம்முடைய பிள்ளைகளின் வாழ்வில் அதிசயங்களை செய்யாமல், வேறு யாருக்கு தேவன் தம்மை நிரூபிக்க போகிறார்? கிறிஸ்துவையே அண்டிக்கொள்வோம், அற்புதங்களை பெற்று கொள்வோம். ஆமென் அல்லேலூயா!

.

அற்புதர் அற்புதர் அற்புதர் அற்புதர் இயேசு அற்புதர்

அண்டினோர் வாழ்வை இன்பமாய்

மாற்றும் இயேசு அற்புதர்

எத்தனை துன்பங்கள் நம்மில் வந்தபோதும்

காத்த இயேசு அற்புதர்

எத்தனை தொல்லைகள் நம்மை சூந்ந்தபோதும்

தீர்த்த இயேசு அற்புதர்

உலகத்தில் இருப்பொனிலும்

எங்கள் இயேசு பெரியவர் அற்புதரே

உண்மையாய் அவரை தேடும் யாவருக்கும் இயேசு அற்புதரே

.

ஜெபம்
எங்கள் வாழ்க்கையை அற்புதமாய் மாற்றும் எங்கள் நல்ல தகப்பனே, இந்த நல்ல நாளுக்காக உமக்கு நன்றி. யார் எங்களை கைவிட்டாலும் நீர் எங்களோடு இருக்கிறீர் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையை ஒவ்வொருவருக்கும் கட்டளையிடுவீராக. வெளிப்படையானஅற்புதங்களை நாங்கள் எதிர்ப்பார்த்து சோர்ந்து போகாமல், தேவரீருடைய கிருபைகளை மாத்திரம் சார்ந்து ஜீவிக்க எங்களுக்கு கிருபை தாரும். தினசரி வாழ்வில் தேவன் ஒவ்வொரு நிமிடமும் எங்களோடு இருக்கிறீர் என்ற நம்பிக்கையோடு எங்கள் வாழ்க்கையை சந்தோஷமாய் நடத்த கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 25 பிப்ரவரி, 2015

25th February 2015 - பாவத்தின் வேரை பிடுங்குவோம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 பிப்ரவரி மாதம் 25-ம் தேதி - புதன் கிழமை
பாவத்தின் வேரை பிடுங்குவோம்
....................

…..யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,.. எச்சரிக்கையாயிருங்கள். - (எபிரேயர் 12:16).

.

ஒரு மனிதர் ஒரு குதிரையை பாசமாக வளர்த்து வந்தார். அந்த குதிரை தன் எஜமான் சொல்வதை கேட்டு அவருக்கு உதவியாக இருந்து வந்தது. ஒரு நாள் அது பின்னால் இருந்த வேலியை எட்டி உதைத்ததினால் அதன் கால்களில் புண் உண்டானது. அதை கண்ட அந்த மனிதர் அதற்கு மருந்து போட்டு, காயத்தை கட்டி விட்டார். ஆனால் அந்த குதிரையால் சரியாக நடக்க முடியவில்லை. ஆகையால் ஒரு மிருக மருத்துவரிடம் போய் அந்த குதிரையை காட்டினார். அவர் அந்த குதிரையை பரிசோதித்து விட்டு, அதற்கு புண் ஆறுவதற்கான மருந்தை கொடுத்தார். அதை சாப்பிடும் நேரத்தில் அந்த குதிரை நன்றாக நடந்தது. ஆனால் மருந்தை நிறுத்தினால், பின் திரும்பவும் நடக்க முடியாமல் போனது. அந்த மனிதர் திரும்பவும் அந்த மருந்தை கொடுத்தார். அதை சாப்பிட்ட குதிரை நடந்தது, பின் திரும்ப பழையபடி நொண்டி நொண்டி நடக்க ஆரம்பித்தது.

.

அந்த மனிதர் அந்த குதிரையை நேசித்ததால் மீண்டும் அதை மருத்துவரிடம் கொண்டு போய் காண்பித்தார். அந்த வைத்தியர் மயக்கமருந்து கொடுத்து அந்த காலை சரியாக பரிசோதித்து பார்த்தபோது, அந்த காலுக்குள், ஒரு இரும்பு கம்பி உள்ளே இருப்பதை கண்டார். அந்த குதிரை ஆண்டிபயாடிக் (Antibiotic) என்னும் கிருமி தடுப்பு மருந்தை சாப்பிடும் நேரம் சுகமாக இருந்தது. பின் அது மீண்டும் பழைய நிலைப்படி நொண்டி நொண்டி நடந்தது. அந்த இரும்பு கம்பியை எடுத்து, சரியான மருந்து இட்டபோது, அந்த குதிரை குணமாகி, நன்கு நடக்க ஆரம்பித்தது.

.

நம்முடைய இருதயத்திற்குள்ளும் பாவத்தின் வேர் உள்ளே ஆழமாக பதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. நாம் கர்த்தருடைய வசனத்தை கேட்கும்போது, பாவத்திலிருந்து நாம் அறிக்கையிட்டு, மன்னிப்பை பெற்று விட்டோம் என்று நினைத்து கொள்கிறோம். ஆனாலும் திரும்ப திரும்ப நாம் ஏன் பாவம் செய்து அதில் விழுந்து கொண்டிருக்கிறோம்?

.

நாம் கர்த்தரிடம் வந்து அவரிடம் மன்னிப்பை பெற்றது உண்மைதான். ஆனாலும் அடுத்த முறை வரும்போது, நாம் பரிசுத்தமுள்ளவர்களாய் இருப்பதில்லை, ஏதாவது பாவத்தில் விழுந்தவர்களாகவே காணப்படுகிறோம். ஏனெனில் பாவ சுபாவம் நமக்குள் வேர்விட்டு ஆழ பதிந்திருப்பதால் தான். ஆகையால் தான் நம்முடைய சில கூடபிறந்த சுபாவங்கள் நாம் மறுபடியும் பிறந்தாலும் நம்மை விட்டு மாறிப்போவதில்லை.

.

அப்போஸ்தலனாகிய பவுலும் 'என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மைவாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்' (ரோமர் 7:18-19) என்று சொல்கிறார். நாம் செய்யக்கூடாது என்று நினைத்தாலும் நம் மாம்சம் செய்யும்படி தூண்டுகிறதாகவே இருக்கிறது.

.

அதிலிருந்து நாம் எப்படி வெளிவருவது? பழைய மனிதனுக்கு மரித்து, கிறிஸ்துவுக்குள் வளருவதே. 'கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்' (ரோமர் 8:10). கர்த்தருடைய வருகையிலே நாம் மறுரூபமாக்கப்படும்போது, நமது பாவ சுபாவமும், பாவ சரீரமும் அழிந்து போகும். நாம் முற்றிலும் மறுரூபமாக்கப்படுவோம். அதுவரை நாம் பாவத்திற்கு விரோதமாக போராடி அதிலே வெற்றி காண்பவர்களாக காணப்பட வேண்டும்.

.

நமக்கு உதவியாக பரிசுத்த ஆவியானவர் எப்பொழுதும் துணையாக இருப்பதால் அவர் மூலமாக நாம் பாவத்தின் மேல் வெற்றி பெற்றவர்களாக வாழ முடியும். 'மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்' (1 கொரிந்தியர் 10:13) என்ற வசனத்தின்படி, தேவன் தாமே பாவத்திலிருந்தும், சோதனைகளிலிருந்தும் தப்பும்படியான போக்கை உண்டாக்கி நம்மை அதிலிருந்து வெளியேற்றுவார்.

.

நம் தேவன் பரிசுத்தராய் இருக்கிறது போல நாமும் பரிசுத்தமாய் வாழ்ந்து, 'அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்' (பிலிப்பியர் 2:12) என்ற வார்த்தையின்படி பரலோக ராஜ்யத்திற்கு பாத்திரவான்களாக பரிசுத்தமாய் வாழ பிரயாசப்படுவோம், தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் அந்த கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

.

பாவத்தின கறைகள் நீங்கட்டுமே

சாபத்தின் நுகங்கள் முறியட்டுமே

இயேசுவின் நாமத்தில் ஜெயம்மெடுத்தே

வெற்றியின் கீதங்கள் பாடிடுவேன்

.

அக்கினி ஜீவாலை ஆக்கும் தேவா

கொழுந்து விட்டெறிய ஊற்றும் தேவா

பாவம் நெருங்கா அக்கினியாய்

சாத்தானை ஜெயிக்க உதவும் தேவா

.

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் இருதயத்தின் ஆழத்தில் காணப்படும் பாவத்தின் வேர்கள் வேரோடு பிடுங்கப்படவும், நாங்கள் பரிசுத்தமாய் வாழவும், எங்களுக்கு கிருபை பாராட்டும். ஒவ்வொரு நாளும் நாங்கள் பெற்று கொண்ட இரட்சிப்பு நிறைவேறும்படியாக பயத்தோடும் நடுக்கத்தோடும், தேவனிடத்தில் இருந்து பாவ மன்னிப்பை பெற்று, அதினால் எங்களை பரலோக ராஜ்யத்திற்கு தகுதியுள்ளவர்களாக மாற்றுவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.......

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

24th February 2015 - பொறுப்பான தாய்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 பிப்ரவரி மாதம் 24-ம் தேதி - செவ்வாய்க்கிழமை
பொறுப்பான தாய்
...............

அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள். - (நீதிமொழிகள் 31:28).

.

ஒரு கிராமத்தில் தன் ஒன்றறை வயது மகனை கூட்டிக்கொண்டு ஒரு தாய் ஆற்றிற்கு குளிக்க சென்றாள். ஆற்றங்கரையில் மகனை உட்கார வைத்து விட்டு துணிகளை துவைக்க தொடங்கினாள். சற்று நேரத்தில் ஆற்று நீரில் ஏதோ பளபளப்பாக மிதந்து வருவதை கண்டு வேகமாக நீந்தி சென்று அதை போய் அடைந்தாள். ஆனால் அது ஏதோ ஒரு மினுமினுப்பான கலர் பேப்பர் என அறிந்து அதை விட்டு விட்டு கரைக்கு வந்தாள். வந்தால் கரையில் உட்கார வைத்திருந்த பிள்ளையை காணவில்லை. பதறி போய் எல்லா இடத்திலும் தேடினாள். அந்தோ பரிதாபம், பிள்ளை ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டிருந்தான். பிள்ளையை விட ஏதோ தேவையில்லாத காரியத்தின் மேல் முக்கியம் என்று நினைத்து போய் பிள்ளையை இழந்தாளே!

.

இன்று அநேக தாய்மார்களுக்கு பிள்ளையை விட ஆபீஸ் வேலை, தொலை காட்சி சீரியல்கள், அண்டை வீட்டாரோடு அநாவிசிய பேச்சு போன்றவை தான் முக்கியமாக தோன்றுகிறது. பிள்ளைகள் பள்ளிக்கு சென்ற உடன், வேகவேகமாக சமையலை முடித்து விட்டு, டிவி பெட்டிக்கு முன் உட்கார்ந்து வரிசையாக சீரியல் பார்க்கும் தாய்மார்கள் அநேகர் உண்டு. தாங்கள் சீரியலை பார்க்க வேண்டும் என்பதற்காகவே பிள்ளைகளை டியூஷன் அனுப்பும் தாய்மார்கள் உண்டு. டிவி காரர்கள், தாங்கள் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கண்ட கண்ட கதைகளை சீரியல் என்று போட்டு காட்டி கொண்டு இருக்கிறார்கள். அதை வேலையை விட்டு பார்க்கும் நம் தாய்மார்களை என்னவென்று சொல்வது? தாங்கள் ஊர்க்கதை பேச வேண்டும் என்பதற்காகவே அந்த நேரத்தில் பிள்ளைகளை நீ போய் டிவி பாரு என்று சொல்லும் தாய்மார்களும் உண்டு.

.

வேதம் ஒரு தாய்க்கு சொல்லும் அறிவுரை என்ன? தன் பிள்ளைக்கு தயையுள்ள போதகம் பண்ணுகிறவளாக இருக்க வேண்டும் (நீதிமொழிகள் 31:26). பிள்ளைகள் தவறு செய்யும்போது கடிந்து கொணடு புத்தி சொல்லி தேவைப்படும் போது பிரம்பை கையாடுகிறவளாயும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அன்போடும், பொறுமையோடும் நடந்து கொள்ளுகிறவளாயும் திகழ வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக கர்த்தருக்கு பயப்படும் பயத்தை சொல்லி கொடுக்க வேண்டும்.

.

பிரியமான தாய்மாரே! தேவன் நம்மை நம்பி கொடுத்திருக்கிற பிள்ளைகளை கருவிலிருந்தே பாதுகாப்போடு வளர்ப்பது நமது கடமை. பிள்ளை வளரும்போது அவர்களுக்கு தேவையான சத்தான சுகாதாரமான உணவை வீட்டிலேயே தயாரித்து கொடுங்கள். பிள்ளை போதுமென்ற பின் கட்டாயமாக திணிக்காதீர்கள். நீங்கள் ஒரளவு படித்த தாய் என்றால் பிள்ளையை டியூஷனுக்கு விரட்டாமல் வீட்டிலேயே புரிந்து கொள்ளும் விதத்தில் பாடங்களை செயல் முறையோடு சொல்லி கொடுங்கள். படிப்பில் பிள்ளை மேல் தாயகாட்டும் அக்கறையும் கவனமும் தனிதானே. பிள்ளைகளுக்கு வேதத்தை கற்று கொடுப்பது சண்டே கிளாஸ் டீச்சரின் பொறுப்பு என்று விட்டு விடாமல், நீங்களும் வேதாகம் சம்பவங்களை கூறி, வசனங்களை மனனம் செய்ய வையுங்கள். குடும்ப ஜெபம் செய்யுங்கள். தவறாமல் ஆலயம் செல்லுங்கள்.

.

பெண் பிள்ளைகளாய் இருந்தால் அவர்கள் என்ன உடுத்துகிறார்கள், எப்படி உடுத்துகிறார்கள் என்பதில் தனி கவனம் செலுத்துங்கள். அவள் ரொம்ப பேஷன் என்று சொல்லி, தேவையில்லாத உடலை காட்டக்கூடிய உடைகளை வாங்கி தராதீர்கள். அதற்காக பிள்ளை உங்களிடம் கோப பட்டால், கண்டிப்பாய் இருங்கள். பிள்ளைகளின் உடல் சுத்தத்தை குறித்து கற்று தாருங்கள். தலையை எப்படி வார வேண்டும், சுத்தமாய் வைத்து கொள்ளவேண்டும் என்று கற்று தாருங்கள்.

.

பிள்ளை வளர்ப்பது பணிப்பெண்ணின் வேலை என்று எண்ணி, பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி விடாதீர்கள். ஒவ்வொரு நாளும் பிள்ளைகளுக்காக கண்டிப்பாக ஜெபிக்க வேண்டும். பிள்ளைகள் கெட்ட நண்பர்களோடு சேர்ந்து விடாதபடிக்கு, கெட்ட பழக்கங்களை கற்று கொண்டு விடாதபடிக்கு கர்த்தர் பாதுகாத்து கொள்ளும்படியாக அவரிடம் மன்றாட வேண்டும். பிள்ளைகளின் தாலந்துகளை கண்டறிந்து அவைகளை உற்சாகப் படுத்த வேண்டும். அதை உலக காரியத்திற்காக பயன்படுத்தாதபடிக்கு கர்த்தருக்கென்று பயன்படுத்தும்படியாய் சிறுவயதிலிருந்தே அவர்களுக்கு கற்று தர வேண்டும்.

.

கெட்ட வார்த்தை ஒன்றும் வாயில் வராதபடி, பிள்ளைகளை வளர்க்க வேண்டும். சில நேரங்களில் பெற்றோர் பேசுவதை கேட்டு பிள்ளைகளும் அதை வேகமாக கற்று கொள்வார்கள். பிள்ளைகள் முன்பு அப்படிப்பட்ட வார்த்தைகளை பேசாதபடி உங்களை காத்து கொள்ளுங்கள். சனியனே, தரித்திரமே பிசாசே என்றெல்லாம் பிள்ளைகளை திட்டாதீர்கள். மிருகங்களின் பெயர்களையும் சொல்லி பிள்ளைகளை அழைக்காதீர்கள். அவர்களுக்கு பெயர் உண்டு, அது பரலோகத்திலும் எழுதப்பட்டிருக்கிறபடியால், அவர்களின் பெயரை சொல்லி அழையுங்கள்.

.

சிறுவயதிலிருந்தே ஜெபிக்க கற்று கொடுங்கள். குடும்ப ஜெபத்தில் பிள்ளைகளும் ஜெபிக்கட்டும். சத்தமாய் ஜெபிக்கும்போது அவர்கள் இன்னும் அழகாய் ஜெபிக்க கற்று கொள்வார்கள்.

.

இவைகளை செய்து வளர்த்தால் உங்கள் பிள்ளைகள் எழும்பி உங்களை பாக்கியவதி என்பார்கள். ஆமென் அல்லேலூயா!

.

ஓரு தாய் தேற்றுவது போல்

என் நேசர் தேற்றுவார்

மார்போடு அணைப்பாரே

மனக்கவலை தீர்ப்பாரே

.

ஜெபம்
ஒரு தாயை போல எங்களை தேற்றி அணைக்கிற எங்கள் நல்ல கர்த்தரே உம்மை துதிக்கிறோம். ஒவ்வொரு கிறிஸ்தவ தாய்மாரும் தங்களுக்கு கிருபையாக தேவன் கொடுத்த பிள்ளைகளின் மேல் உள்ள பொறுப்பை உணர்ந்து பிள்ளைகளை உமக்குள் வளர்க்க கிருபை செய்வீராக. தேவனுக்கு பயந்து பெற்றோருக்கு கீழ்ப்படிகிற பிள்ளைகளாக ஒவ்வொரு பிள்ளையையும் வளர்க்கவும், தேவ பக்தியுள்ள பிள்ளைகளாக வளர்க்கவும் ஏற்ற ஞானத்தை தருவீராக. அவர்களுடைய பிள்ளைகள் எழும்பி அவர்களை பாக்கியவதி என்றழைக்கதக்கதாக தங்கள் வாழ்க்கையை அமைத்து கொள்ள ஒவ்வொரு தாய்மாருக்கும் கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
..........

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 23 பிப்ரவரி, 2015

23rd February 2015 - சிறு நரிகள்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 பிப்ரவரி மாதம் 23-ம் தேதி - திங்கட் கிழமை
சிறு நரிகள்
.....................

திராட்ச தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்கு பிடியுங்கள்: நம்முடைய திராட்ச தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாய் இருக்கிறதே. - (உன்னதபாட்டு 2:15).

.

இந்தியாவில் அநேக இடங்களில் ஆறுகளின் குறுக்கே பெரிய பெரிய அணைகள் கட்டப்பட்டுள்ளன. அவைகள் வெள்ளம் வரும்போது கிராமங்களிலோ நகரங்களிலோ தண்ணீர் உட்புகாதவாறு பாதுகாக்கின்றன. ஒரு முறை ஒரு அணையில் வெள்ளம் வந்தபோது அந்த அணை உடைப்பெடுத்து, தண்ணீர் வெள்ளமாய் பாய்ந்து வந்தபோது, அங்கிருந்த கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்து நூற்றுக்கணக்கானோர் தங்கள் வாழ்வையும் வீடுகளையம் இழக்க நேர்ந்தது.

.

பின்னர் அந்த அணை எப்படி உடைந்தது என்று ஆராய்ந்த போது, அந்த அணையின் பக்கத்தில் ஒரு மரம் தன் வேர்களை அந்த அணையின் நடுவில் பரவ விட்டு இருந்தது. அந்த வேர்களில் ஒன்று அழுகிபோய் ஒரு சிறு துளையை அந்த அணையில் விட ஆரம்பித்தது. தண்ணீரின் வேகத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த துளை இருந்த இடத்தில் அணை பெலவீனமடைய ஆரம்பித்தது. ஒரு நாள் வெள்ளம் வந்தபோது அந்த பெலவீனமான இடம் உடைப்பெடுத்து கிராமத்திற்குள் தண்ணீர் பாய்ந்து வந்து, அநேக இழப்புகளை சந்திக்க நேர்ந்தது.

.

நாங்கள் சேலத்தில் இருந்தபோது, எங்கள் வீட்டு பக்கத்தில் திருமணி முத்தாறு என்ற ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதில் தண்ணீரை பார்ப்பதே அரிது. சாக்கடை தண்ணீரும், பன்றிகளும் அந்த இடத்தில் மேய்ந்து கொண்டிருக்கும். அந்த ஆற்றிலிருந்து சுமார் 15 அடி உயரத்தில் எங்கள் வீடுக்ள் இருந்தன. ஆனால் ஒரு நாள் அந்த ஆற்றில் தூரத்தில் எங்கோ ஒரு அணை உடைப்பெடுத்ததால், தண்ணீர் பாய்ந்து வந்து, நீர் மட்டம் உயர ஆரம்பித்தது. அது நின்று விடும் என்று நாங்கள் எதிர்பார்த்து இருந்த நேரத்தில், தண்ணீரின் மட்டம் கொஞ்ச கொஞ்சமாய் உயர்ந்து, எங்கள் வீடு வரை தண்ணீர் வந்தது. அப்போது நாங்கள் சிறு பிள்ளைகளாய் இருந்த படியால், அந்த தண்ணீரில் விளையாட ஆரம்பித்தோம். ஆனால் படிப்படியாக உயர்ந்து எங்கள் இடுப்பளவு தண்ணீர் வந்தபோது எங்கள் பெற்றோர் எங்களை இன்னும் உயரமான மேட்டிற்கு கொண்டு சென்றனர். அடுத்த இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்குள் தண்ணீர் எங்கள் வீடுகளை மூழ்கடித்து, எங்கள் பொருட்களையும், எங்கள் எல்லாவற்றையும் நாங்கள் இழக்க நேர்ந்தது. பக்கத்தில் இருந்த சூசன்னம்மாள் மண்டபத்தில் நாங்கள் ஏறக்குறைய ஒரு வாரம் தங்கியிருந்தோம். எங்கள் உயிரை மாத்திரம் நாங்கள் அன்று காப்பாற்ற முடிந்தது. அங்கும் அந்த அணையில் ஏதோ ஒரு இடத்தில் ஒரு பெலவீனமான இடம் இருந்த படியால், நாளாக நாளாக அந்த இடத்தில் சிறிதுசிறிதாக உடைப்பு கண்டு ஒரு நாள் முழுவதும் உடைந்து அநேக உயிர்களும் பொருட்களும் வீடுகளும் சேதமடைந்தது.

.

நம் வாழ்விலும் ஏதோ ஒரு சிறிய பாவம் அல்லது பெலவீனம் இருக்கலாம். ஆனால் அது நாளடைவில் மெதுவாக ஊன்றி ஒரு நாள் உங்கள் வாழ்க்கையின் சந்தோஷம் சமாதானம் ஆராக்கியம் எல்லாவற்றையும் திருடிவிடும் நிலை ஏற்படலாம். 'ராஜாவாகிய சாலோமோன் பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல் மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள் மேலும் ஆசை வைத்தான். கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி 'நீங்கள் அவர்களண்டைக்கும் இவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது: அவர்கள் நிசசயமாய் தங்கள் தேவர்களை பின்பற்றும்படி உங்கள் இருதயத்தை சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார். சாலொமோன் அவர்கள் மேல் ஆசை வைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்தான். சாலொமொன் வயது சென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களை பின்பற்றும்படி சாயப் பண்ணினார்கள்: அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதினுடைய இருதயத்தைப் போல தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமாயிருக்கவில்லை' - (1இராஜாக்கள் - 11:1-2,4).

.

ஒருவேளை சாலொமோன் ராஜா நினைத்திருக்கலாம், இவர்கள் பெண்கள் தானே, என்னை என்ன செய்ய முடியும்? நான்தான் ராஜா, நான் சொன்னதுதான் சட்டம்! இவர்கள் என்னை எப்படி மாற்ற முடியும் என்று நினைத்து அவர்கள் மேல் ஆசை வைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் அவனுடைய விசுவாசத்தையும் நம்பிக்கையும் அவனுடைய தகப்பனின் தேவனையும் விட்டு அவனை விலக வைத்தார்கள். அவன் கர்த்தரை விட்டு தன் இருதயத்தை திருப்பி, அவரை விட்டு முற்றிலுமாக விலகினான். அனைவரும் வியக்கும் அற்புதமான தேவாலயத்தை கட்டினவன், அவனுக்கொத்த அரசன் பூமியிலெங்குமில்லாதபடி ஞானத்திலும், அறிவிலும், ஐசுவரியத்திலும் சிறந்து விளங்கினவன், ஆனால் பின் நாட்களில் தேவனை விட்டு பின் வாங்கி போனான். அவனுடைய பின்நிலைமை மிகவும் பரிதாபமாக, இரட்சிப்பை இழந்தவனாக மாறிப்போனான். காரணம் அவனிடமிருந்த சிறு பெலவீனமே.

.

'திராட்ச தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்கு பிடியுங்கள்'. நம் வாழ்விலும் காணப்படும் சிறு பெலவீனங்களையும் நம்மை விட்டு ஒழிப்போம். ஒரு வேளை அது அவ்வப்பொது குடிப்பதாய் இருக்கலாம், அல்லது சீட்டாடுவதாக இருக்கலாம், பான் பராக் போடுவதாய் இருக்கலாம், சினிமா, சீரியல் பார்ப்பதாய் இருக்கலாம், இன்னும் அநேக நமக்கு தெரிந்த அல்லது தெரியாத பெலவீனங்களாய் இருக்கலாம், அவை நம் வாழ்வை நம் குடும்பத்தின் சந்தோஷத்தை, சமாதானத்தை, ஆரோக்கியத்தை கெடுக்கிறவைகளாய் இருக்கிறபடியால், அவைகளை நம்மை விட்டு அகற்றுவோம். சிறு துளி பெரு வெள்ளமாய் மாறி நம்மை அழிக்குமுன்பு நம் வாழ்க்கையை சீர்படுத்துவோம். சாத்தானின் தந்திரங்களுக்கு நம் வாழ்க்கையை காத்துக் கொள்வோம். நீங்கள் அவற்றை விட வேண்டும் என்று வாஞ்சிக்கும் போது, தீர்மானிக்கும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவற்றை விட உதவி செய்வார். அவர் நம்முடைய பெலவீனங்களில் உதவி செய்கிற தேவனாயிற்றே! இன்றே தீர்மானம் செய்வோம். கர்த்தர் தாமே உதவி செய்வாராக ஆமென் அல்லேலூயா!

.

குழிநரிகள் வேண்டாமே

சிறுநரிகள் வேண்டாமே

சபையான திராட்ச தோட்டதில் - தேவ

சபையான திராட்ச தோட்டத்தில்

.

பீடி சிகரெட் குடிக்கும் சிறுநரிகள் வேண்டாமே

சினிமா சீரியல் பார்க்கும் குழிநரிகள் வேண்டாமே

வேண்டாமே நமக்குள் வேண்டாமே

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நல்ல நாளுக்காக உம்மை துதிக்கிறோம். எங்கள் வாழ்க்கையில் காணப்படும் சிறுசிறு பெலவீனங்கள் நிமித்தம் எங்கள் வாழ்க்கை நரகமாக போய் விடாதபடி அவற்றை அகற்றி விட எங்களுக்கு உதவி செய்யும். எங்களால் மாற்ற முடியாதபடி இருக்கிற காரியங்களிலிருந்து பாவங்களிலிருந்து எங்களுக்கு விடுதலை தாரும். எங்கள் வாழ்க்கையை கெடுக்கிற சிறுநரிகளையும் குழிநரிகளையும் பிடித்து, அவற்றை விரட்டி, எங்கள் வாழ்க்கையை பரிசுத்தமாய் காத்து கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
........

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.