Friends Tamil Chat

புதன், 31 ஜூலை, 2013

31st July 2013 - இளைப்பாறுதல் தரும் தேவன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஜூலை மாதம் 31-ம் தேதி - புதன் கிழமை
இளைப்பாறுதல் தரும் தேவன்
...

இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். - (ரோமர் 6:22-23).

.
ஒரு குரங்கு கானகத்தில் தன் பாட்டுக்கு மரங்களில் தாவி தாவி விளையாடிக் கொண்டு அங்கு பழுக்கும் பழங்களை சாப்பிட்டு சுகமாக வாழ்ந்து வந்தது. அப்படி ஒரு நாள் மரங்களுக்கு மரம் தாவிக் கொண்டிருந்த போது, ஒரு வீட்டின் முன் வந்து நின்றது. அங்கு ஜன்னலில் பார்த்தபோது, ஒரு தட்டில் சில ஆப்பிள் பழங்கள் வைத்திருப்பதைக் கண்டது. உடனே தன் கையை நீட்டி அந்த பழங்களில் மூன்று, நான்கு பழங்களை எடுத்துக் கொண்டது. பின் அதை கைகளில் பிடித்துக் கொண்டே காட்டிற்கு வந்து சேர்ந்தது.
.
அதை கடிக்க முற்பட்டபோது, அதனால் கடிக்க முடியவில்லை. அது கட்டையினால் செய்யப்பட்ட ஆப்பிள்கள். ஆனால் அந்த குரங்கால் அந்த ஆப்பிள்களை கீழே தூக்கிப் போட முடியவில்லை. மற்ற குரங்குகள் வந்து அதை பிடுங்க பார்த்தபோது, அது தன்னிடம் அந்த பழங்களை இழுத்துக் கொண்டு, மற்ற குரங்குகளுக்கு காண்பிக்கவும் மறுத்தது.
.
அந்த பழத்தை எடுத்துக் கொண்டு அதனால் மரத்திற்கு மரம் தாவ முடியவில்லை. பழத்தை கீழே வைத்தால் மற்ற குரங்குகள் வந்து அதை எடுத்துக் கொண்டு விடுமோ என்று பயந்து, தன் கைகளிலேயே அவற்றை வைத்து கொண்டு, வேறு பழங்களையும் சாப்பிட முடியாமல், பசியால் தவித்தது. கையிலிருந்த பழங்களை அதனால் கீழேப் போட அதற்கு மனம் வரவில்லை.

.

ஆனாலும் அந்த பழங்களை கீழே போடாமலும், தளர்ந்து, பசியினால் வாடி, சந்தோஷத்தை எல்லாம் இழந்து அந்த குரங்கு தவித்தது. பக்கத்தில் இருந்த மரத்திலிருந்து பழ வாசனை அதனுடைய மூக்கை துளைத்தது. ஆரம்பத்தில் அந்த வாசனை வந்தும் அதை கண்டுக்கொள்ளாமல் இருந்த குரங்கு, இப்போது மிகவும் தளர்ந்துப் போன நிலையின் கடைசியில், கையில் கனத்துக் கொண்டிருந்த அந்த கட்டை பழங்களை கீழேத் தூக்கிப் போட்டு விட்டு, அந்த பழ மரத்தில் தாவி ஏறி, தன் மனம் விரும்பும் மட்டும் பழங்களை சாப்பிட்டு சந்தோஷித்தது.
.
நம்மில் கூட அநேகர் சில பாவ காரியங்களையும், சில தேவையில்லாத காரியங்களையும் சுமந்துக் கொண்டு திரிந்துக் கொண்டிருக்கிறோம். அதனால் நமக்கு வீண் பாரமும், மனக்கவலையும், சோர்வும் வந்தாலும் அதை விட்டு விட மனமில்லாமல், கஷ்டத்தோடு அவற்றை சுமந்துக் கொண்டிருக்கிறோம்.
.
இயேசுகிறிஸ்து அப்படிப்பட்ட காரியங்களை சுமந்து கொண்டிருக்கிறவர்களைப் பார்த்துதான், 'வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' (மத்தேயு 11:28) என்று அழைக்கிறார். ஆனால் நாமோ இளைப்பாறுதல் தரும் அவருடைய சமுகத்தை விட்டு கடந்து, நம் பாவங்களையும், பாரங்களையும் நாமாகவே சுமந்துக் கொண்டிருக்கிறோம். அவைகளை கர்த்தருடைய சமுகத்தில் விட்டு விட்டு, இளைப்பாறுதலை நாம் பெற்றுக் கொள்ளாமல் போவோமானால் மிகவும் பரிதபிக்கத்தக்கவர்களாக இருப்போம்.
.
ஆனால் அவருடைய கிருபையை சார்ந்துக் கொண்டு பாவங்களையும், நம் அக்கிரமங்களையும் அவரிடம் அறிக்கையிட்டால் அவர் நம்மை பரிசுத்தமாக்கி நித்திய ஜீவனை கொடுப்பார். 'இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்' என்ற வார்த்தைகள் நம் வாழ்வில் நிறைவேறும்.
.
தேவையற்ற சுமைகளையும் நம் பாரங்களையும் அவருடைய பாதத்தில் வைத்து விடுவோம். தம்முடைய கிருபை வரத்தினால் நம்மை அவர் மூடிக் கொள்வார். பாவத்தினின்றும், நம் பாரங்களினின்றும், சுமைகளினின்றும் நம்மை விடுதலையாக்கி நமக்கு இளைப்பாறுதலை தருவார். ஆமென் அல்லேலூயா!


இளைப்பாறுதல் தரும் தேவா

களைத்தோரை தேற்றிடுமே

சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்

சுகமாய் அங்கு தங்கிடுவேன்

.
திருப்பாதம் நம்பி வந்தேன்

கிருபை நிறை இயேசுவே

தமதன்பை கண்டடைந்தேன்

தேவ சமுகத்திலே

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த உலகத்தின் பாவங்களும், தேவையற்ற சுமைகளும் நாங்கள் அவற்றை விட்டுவிடாதபடி கெட்டியாக பிடித்துக் கொண்டிருப்பதால், நீர் தரும் இளைப்பாறுதலை நாங்கள் பெறக் கூடாதபடி தடை செய்துக் கொண்டிருக்கிறதே. அவற்றை நாங்கள் விட்டுவிட எங்களுக்கு உணர்வைத் தாரும். அவற்றிலிருந்து எங்களை விடுதலையாக்கும். நீர் தரும் இளைப்பாறுதலைப் பெற்றுக் கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 30 ஜூலை, 2013

30th July 2013 - இரட்சிப்பின் வழி

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஜூலை மாதம் 30-ம் தேதி - செவ்வாய் கிழமை
இரட்சிப்பின் வழி
...

'என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்'. - (ரோமர் 10:9-10).

.

ஒரு முறை பில்லி கிரகாம் அவர்கள் இரட்சிப்பைக் குறித்து ஒரு உதாரணத்தின் மூலமாக விளக்கினார். அவர் சொன்னது, 'அநேகர் நான் கர்த்தரை விசுவாசிக்கிறேன், வேதாகமத்தை விசுவாசிக்கிறேன், சபை கூடுதலை விசுவாசிக்கிறேன் இது போதாதா நான் பரலோகம் போவதற்கு? என்று வாதிடுகிறார்கள். இல்லை, இது ஒரு போதும் போதாது, இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, ஒருவன் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விமான டிக்கெட் வாங்கி, குறிப்பிட்ட நேரத்திற்கு ஏர்போர்ட்டும் போய் சேர்ந்து விடலாம். அந்த விமானம் மிகவும் உயர்ரக விமானம். அது அவனை சரியாக அவன் செல்ல வேண்டிய இடத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமேயில்லை.
.
எல்லாம் ரெடியாக இருக்கிறது. விமானம் புறப்பட சில நிமிடங்களே இருக்கிறது. அவனுடைய பெயர் சொல்லி கூப்பிடுகிறார்கள். ஆனால் அவனோ விமானத்தில் ஏறாமல் காலம் தாழ்த்தி கொண்டே இருக்கிறான். விமானத்தின் கதவு மூடப்படுகிறது, விமானம் தளத்தில் ஓடி, உயரே எழும்பி பறக்க ஆரம்பிக்கிறது. அந்த மனிதன் விமானத்தின் மேல், அது தன்னை உரிய இடத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று நம்பிக்கை வைத்திருந்தான். ஆனால் அதில் அவன் போய் ஏறவில்லை. எல்லாமே தயாராக இருந்தும், அவன் அதில் போய் ஏறவில்லை. அதனால் அவனால் தான் போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேர முடியவில்லை. அதுப் போலத்தான் ஒரு வேளை நீங்கள் இயேசுகிறிஸ்துவின் மேலும், வேதத்தின் மேலும், அவருடைய வருகையின் மேலும் நம்பிக்கை வைக்கலாம், ஆனால் நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ளாவிட்டால், உங்கள் நம்பிக்கை எல்லாமே வீண்' என்று கூறினார்.
.
ஆம், பிரியமானவர்களே, நாம் மேலே சொன்னதுப் போல கர்த்தர் வேதத்திலும், கிறிஸ்துவின் மேலும் அதிகமாக விசுவாசம் வைக்கலாம். எத்தனையோ புற மதத்தினர் இயேசுவை நம்புகின்றனர். ஆனால் கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாதவரை நம்முடைய விசுவாசமும், நம்பிக்கை எல்லாமே வீணாகத்தான் இருக்கும்.
.
அனுதின மன்னாவை தினமும் படித்து, மிகவும் நன்றாக இருக்கிறது என்று எழுதுபவர்கள் அநேகர். ஆனால் படிக்கிற ஒவ்வொருவரும் கர்த்தரை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால், மன்னாவை படிப்பதும், வேத வார்த்தைகளைப் படிப்பதும் எல்லாமே வீணாக இருக்கும்.
.
எப்படி கர்த்தரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வது? அதற்காக நாம் போய் நம் உடலை வருத்தி, காணிக்கைகளை கொண்டு வந்து அவரது பாதப்படியில் போட வேண்டும் என்கிற அவசியம் சிறிதும் இல்லை. அவரது நாமத்தை விசுவாசித்து அவரை ஏற்றுக் கொள்ளுகிறவர்களுக்கு இரட்சிப்பு இலவசமே!
.
வேதம் சொல்கிறது, 'என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்'. ஆம், இதுதான் இரட்சிப்பு. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை 'ஆண்டவரே நான் உம்மை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன், என்று வாயினாலே அறிக்கையிட்டு, நீர் என் பாவங்களுக்காக சிலுவையில் அறையுண்டு, மரித்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தீர் என்று விசுவாசிக்கிறேன்' என்றும் விசுவாசிக்க வேண்டும். அப்படி விசுவாசித்ததை வாயினால் அறிக்கை செய்யும்போது நாம் இரட்சிக்கப்படுவோம். அல்லேலூயா!
.
கர்த்தரின் வருகை சமீபமாயிருப்பதினால், நாம் எவ்வளவு துரிதமாய் கர்த்தரை ஏற்றுக் கொள்ள வேண்டுமோ அத்தனை துரிதமாய் ஏற்றுக் கொள்ளவேண்டும். கால தாமதம் செய்வதுக்கூடாது. அந்திக்கிறிஸ்து வருவதற்கான அறிகுறிகளும் தோன்ற ஆரம்பித்து விட்டது. அவன் வருவதற்குள் கிறிஸ்துவின் இரகசிய வருகையில் நாம் எடுத்துக் கொள்ளும்படியாக நாம் கர்த்தரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். 'யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம்பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள்' (மத்தேயு 11:12). ஆம், பலவந்தமாகவோ, இல்லாமலோ பரலோக ராஜ்யத்திற்கு தயாராகும்படி எச்சரிக்கிறார்கள். நாம் அதைப் பிடித்துக் கொள்வோமானால், நித்திய ஜீவன் நமக்கு உண்டு.
.
கர்த்தரை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வோம். கீழ்க்கண்ட ஜெபத்தை விசுவாசத்தோடு கூறுவோம். பரலோக ராஜ்யத்திற்கு தகுதியாவோம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார். ஆமென் அல்லேலூயா!

.


பாவ மன்னிப்பின் நிச்சயத்தை

பெற்றுக் கொள்ள வேண்டும்

பரலோகத்தில் ஓரிடம்

நீ பெற வேண்டும்

இயேசு தருகிறார் இன்று தருகிறார்

அதற்காகத்தான் சிலுவையிலே

இரத்தம் சிந்தி விட்டார்

.
நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்

நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, உமது குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னுடைய பாவங்களுக்காக சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்தார் என்றும், மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் என்றும் விசுவாசிக்கிறேன். இயேசுகிறிஸ்துவை என் பாவம் நீக்கும் பரிகாரியாக என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்கிறேன். என் இருதயத்தில் வந்து வாசம் பண்ணுவாராக. என் பாவங்களை மன்னிப்பாராக. என்னை ஏற்றுக் கொள்வாராக. என் ஜெபத்தை கேட்டு என்னை ஏற்றுக் கொண்ட தயவிற்காக உமக்கு நன்றி. இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக் கொள்கிறேன் நல்ல தகப்பனே. ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 29 ஜூலை, 2013

29th July 2013 - இயேசுவை காண வேண்டிய இடம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஜூலை மாதம் 29-ம் தேதி - திங்கட் கிழமை
இயேசுவை காண வேண்டிய இடம்
...

மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள். - (லூக்கா 2:46).

.
ஒரு பெற்றோர் தாங்கள் அன்புடன் வளர்த்த எட்டு வயது மகன் திடீரென்று காணாமற் போனதைக் குறித்து மிகவும் கவலைப்பட்டு தேட ஆரம்பித்தார்கள். முதலில் அவனுடைய பள்ளியில் போய் விசாரித்தார்கள். பின் அவனது நண்பர்களின் வீடுகளில் விசாரித்தார்கள், அக்கம் பக்கத்து வீடுகளில் போய் தேடினார்கள். எங்கும் அவன் காணப்படவில்லை. அவர்களுக்கு செய்தி தாள்களில் வரும் செய்திகள் ஞாபகம் வந்தது. பிள்ளையை வேறு மாநிலத்திற்கு எடுத்துக் கொண்டுப் போய் கண்களை தோண்டி அவனை பிச்சை எடுக்க வைப்பார்களோ என்று மிகவும் பயந்தார்கள்.
.
கடைசியில் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தபோது, திடீரென்று மகனின் சத்தம் கேட்டது. ஓடிப் போய் அவனை கட்டி அணைத்துக் கொண்டு 'மகனே எங்களை தவிக்க விட்டு எங்கே போய் விட்டாய்?' என்று கேட்டபோது, 'நான் இங்கேதானே அம்மா வீட்டின் பின்பக்கம் இருக்கும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தேன்' என்றான். அவனது பெற்றோர் இனி எங்களை இப்படி தவிக்க விடாதே என்று அவனை கட்டி அணைத்தனர்.
.
இயேசுகிறிஸ்துவும் தாம் பன்னிரண்டு வயதாயிருக்கும்போது, எருசலேமுக்கு பெற்றோருடன் பஸ்கா பண்டிகையை கொண்டாடும்படி சென்றிருந்தார். பஸ்கா பண்டிகை முடிந்து எல்லாரும் தங்கள் தங்கள் ஊருக்கு திரும்பி செல்லும்போது இயேசுவோ எருசலேமிலே இருந்து விட்டார். பெற்றோருக்கு இது தெரியாது. அவர்கள் கூட்டத்தோடு கூட்டமாக பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருப்பார் என்று நினைத்து கவனிக்காமல் விட்டு விட்டார்கள்.
.
மூன்று நாள் பயணம் வந்தபோது, அவர்களுக்கு தெரிய வந்தது, இயேசுவை காணவில்லை என்று. அவர்கள் அத்தனை பிஸியாக பிள்ளை கூட இருக்கிறாரா இல்லையா என்பது தெரியாமல் போய்க் கொண்டிருந்தார்கள். உடனே அவரை தேட ஆரம்பித்தார்கள். முதலாவது அவர்கள் பிரயாணக்காரரின் கூட்டத்தில் இருப்போரோ என்று ஒரு நாள் பயணமாக திரும்ப எருசலேமை நோக்கி வந்து தேடினார்கள். அவர் அங்கு இல்லை.
.
பின் அவர்கள் உறவின் முறையாரிடத்தில் வந்து, 'இயேசுவை கண்டீர்களா?' என்று விசாரித்தார்கள். அங்கும் அவர் இல்லை. பின் அவர்கள் தங்களோடு கூட சொந்த ஊரிலிருந்து வந்திருந்து அறிமுகமானவர்களிடத்தில் 'இயேசுவை கண்டீர்களா?' என்று கேட்டார்கள். அவர்களும், 'இல்லையே, நாங்கள் பார்க்கவே இல்லையே' என்று கூறினார்கள்.
.
இயேசுவின் பெற்றோர் பதைபதைப்புடன் தேடி தேடி அலுத்துப் போனவர்களாக இயேசு எங்குதான் போயிருப்பாரோ என்று அலைந்து தேடிக் கொண்டே எருசலேமுக்கு வந்து சேர்ந்தார்கள். மூன்று நாளைக்கு பிறகு அங்கு தேவாலயத்திலே இயேசு 'போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள். அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள். தாய் தகப்பன்மாரும் அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்' (லூக்கா 2:46-48). ஆம் இயேசுவை தேட வேண்டிய இடத்தில் தேடாமல் வேறு இடங்களிலே தேடினபடியினால் அவரை அவர்கள் கண்டடையவில்லை.
.
கிறிஸ்துவின் பெற்றோர் அவரை தேவாலயத்தில் கண்டபோது, உடனே ஓடிப்போய் அவரை பிடித்துக் கொள்ளவில்லை. அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள் என்று வசனம் சொல்கிறது. ஏனெனில் அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள். அதைக்கண்ட உடன் அவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. பின் தான் தாயார் மரியாள், 'மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள்' (லூக்கா 2:48 - 51). 'அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார். தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்' என்று பார்க்கிறோம்.
.
பிரியமானவர்களே, நாமும் இயேசு இங்கிருப்பாரோ, அங்கிருப்பாரோ என்று தேடி தேடி அலுத்துப் போனோமோ? இயேசுகிறிஸ்து அக்கம் பக்கத்திலும், பிரயாணப்பட்டு புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வோர் மத்தியிலும் தேடி களைத்துப் போய் விட்டோமா? தேவன் எங்கிருக்கிறார்? அவர் தேவ ஆலயத்தில் இருக்கிறார். ஆம், கர்த்தருடைய வீடாகிய தேவாலயத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். ஏனென்றால் 'எங்கே இரண்டு மூன்று பேர் என் நாமத்தினாலே கூடியிருக்கிறீர்களோ அவர்கள் மத்தியில் இருக்கிறேன்' என்றவர் தம்மை தொழுது கொள்ளும் விசுவாசிகளின் மத்தியில் இருக்கிறார். அல்லேலூயா!
.
'நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?' (1 கொரிந்தியர் 3:16) என்று வேதம் கூறுகிறது. ஆம், நாமே தேவாலயமாயிருக்கிறோம். நமக்குள்ளே கர்த்தர் வாசம் பண்ணுகிறார். நாம் தேட வேண்டிய இடம், கர்த்தருடைய ஆலயம், மற்றும் நம்முடைய இருதயம்! நம்முடைய இருதயம் தூய்மையாக இருந்தால் கர்த்தர் அங்கு வந்து வாசம் பண்ணுவார். நம் இருதயத்தை பரிசுத்தமாய் பாதுகாக்காமல், கிறிஸ்துவை வேறு எந்த இடத்தில் தேடினாலும் அவர் தென்படமாட்டார்.
கர்த்தர் தங்கும் அரண்மனையாக நம் இருதயங்களை காத்துக் கொள்வோம். கர்த்தர் அங்கு தங்கி அரசாளட்டும்! கர்த்தருடைய பிரசன்னம் நிறைந்து காணப்படும் தேவாலயத்தின் சபைக்கூடுதலை விட்டுவிடாதிருப்போம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார். ஆமென் அல்லேலூயா!

.


தேவன் தங்கும் உள்ளம் அது தேவாலயம்

அது தேவாலயம் அது தேவாலயம்

.
அசுத்தம் இல்லா உள்ளம் அது தேவாலயம்

அதில் ஆணவம் இல்லா உள்ளம் அது தேவாலயம்

இன்முகம் காட்டும் உள்ளம் அது தேவாலயம்

இயேசு என்றும் வாழும் உள்ளம் அது தேவாலயம்

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, இயேசு எங்கே என்று நாங்கள் அங்கும் இங்கும் தேடாமல், கர்த்தரை கண்டடையத்தக்க இடத்தில் கண்டடைய எங்களை பரிசுத்தமாக்கும். தேவன் வந்து தங்கும் இடமாக எங்கள் உள்ளங்கள் காணப்படட்டும். அசுத்தம் இல்லாமல், ஆணவம் இல்லாமல், இயேசு என்றும் வாழும் உள்ளமாக எங்கள் இருதயம் விளங்கட்டும். தேவன் தாபரிக்கும் ஸ்தலமாகிய பரிசுத்த தேவாலயத்தில் உம்மை நாங்கள் தரிசிக்க கிருபை தாரும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

ஞாயிறு, 28 ஜூலை, 2013

இந்த வார வாக்குத்தத்தம் & விவிலிய விடுகதைகள் : - 28th July 2013

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

விவிலிய விடுகதைகள்

விடாமல் விரட்டி விடும்

தொடாமல் துரத்தி விடும்

வீட்டின் வாசற்படியில்

நித்தமும் படுத்திருக்கும்   -அது எது?

 

விடை: பாவம். ஆதி 4:7

====================================

உயிர் உண்டு, உடல் இல்லை

பாதை உண்டு, பள்ளம் இல்லை

மார்க்கம் உண்டு, மரணம் இல்லை

இவ்வழி சென்றால் எவ்வழியும்

தேவை இல்லை    -அது எவ்வழி?

 

விடை: நீதியின் பாதை. நீதி 12:18.

====================================

அரைக்கிற ஆலை தனில்

அடைப்பட்டுக் கிடப்பான்

ஆயுள் சக்கரத்தை

அரை நொடியில் எரிப்பான்

அடக்கினால் வாழ்வு இல்லையெனில் அழிவு -அது என்ன?

 

விடை: நாவு. யாக் 3:5-10.

====================================
 

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

 

வெள்ளி, 26 ஜூலை, 2013

26th July 2013 - எது ஐசுவரியம்?

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஜூலை மாதம் 26-ம் தேதி - வெள்ளி கிழமை
எது ஐசுவரியம்?
...

கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். - (நீதிமொழிகள் 10:22).

.
முழு உலகத்தையும் ஜெயித்த மகா வீரன் அலெக்ஸாண்டர் தான் மரிக்கும்போது, தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார். அப்போது 'என்னுடைய மரித்த சரீரத்தை எடுத்துச் செல்லும்போது, என் கைகளை வெளியே வைத்து எடுத்துச் செல்லுங்கள். ஏனெனில் அதை காண்பவர்கள் யாவரும் அறியட்டும், நான் பிறக்கும்போது எதையும் கொண்டு வரவில்லை, மரித்த போதும் எதையும் கொண்டு போகப்போவதில்லை' என்று கூறினார்.

.
அநேக ஊழியர்கள் இந்த நாட்களில் ஆசீர்வாதங்களைக் குறித்து

பிரசங்கிக்கின்றனர். அதற்கேற்ப வசனங்களை எடுத்துக் கூறுகின்றனர்.

அவர்கள் பேசும் கூட்டங்களுக்கு அதிகமான மக்கள் செல்கின்றனர்.

ஏனெனில் அநேகருக்கு ஆசீர்வாதங்கள் வேண்டும், செல்வாக்கு

வேண்டும் என்கிற விருப்பம் உண்டு.
.

.
பணமோ செல்வமோ இருப்பது தவறு என்று சொல்லவில்லை. பணமோ

எல்லாவற்றிற்கும் உதவும் என்றும், ஆனால் பண ஆசையோ எல்லா

தீமைக்கும் வேர் என்றும் வேதம் கூறுகிறது. பணம் இல்லாவிட்டால் ஒரு

ஆளும் நம்மை மதிக்கப் போவதில்லை. ஆகவே பணம் முக்கியம், ஆனால்

பண ஆசை இருப்பதோ தவறு.
.

.
சாலமோன் இராஜாவை பார்க்கும்போது தேவன் அவருக்கு ஏராளமான

ஐசுவரியத்தை கொடுத்திருந்தார் என்று பார்க்கிறோம். 'ராஜா எருசலேமிலே

வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும், கேதுருமரங்களைப்

பள்ளத்தாக்கில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்'

(2 நாளாகமம் 1:15) என்றுப் பார்க்கிறோம். இத்தனை ஐசுவரியங்கள்

அவருக்கு இருந்தும், பிரசங்கி என்னும் வேதபுத்தகத்தில் எல்லாமே மாயை

என்று புலம்புவதைப் பார்க்கிறோம். எல்லா ஐசுவரியமும்தான் இருக்கிறதே,

வேறு என்ன வேண்டும்? ஏன் மாயை மாயை என்று புலம்ப வேண்டும்?
.

.
அதேப்போல 'ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான

ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான்' (ஆதியாகமம் 13:2) என்று

ஆபிரகாமைக் குறித்து வாசிக்கிறோம். 'ஆபிரகாமுக்கு உண்டான

ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும்,

ஆவியைக் குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம்

விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று' என்று

எழுதியிருக்கிறபடி ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதத்தினால்

புறஜாதிகளாகிய நாம் இன்றளவும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். ஏன்

சாலொமோனின் ஐசுவரியத்தைப் போல நாம் ஆசீர்வதிக்கப்படவில்லை?

ஆபிரகாமின் ஆசீர்வாதத்தினால் ஆசீர்வதிக்கப்படுகிறோம்?
.

.
ஆபிரகாம் ஐசுவரிய சீமானாயிருந்தும், அதன் மேல் தன் கண்களை

வைக்கவில்லை. அவர் எல்லா ஐசுவரியத்திற்கும் சொந்தக்காரரான கர்த்தர்

மேல் தன் கண்களை வைத்திருந்தார். அதனால் அவர் தேவனுடைய

சிநேகிதன் என்று எண்ணப்பட்டார். அவருடைய ஆசை, விருப்பம்,

எல்லாமே தேவன் பேரில் இருந்தது. உலக ஐசுவரியத்தினால் தன்னை

சீராட்டி, பாராட்டி அனுபவிக்காமல், தேவ உறவின் ஐசுவரியத்தினால்

தன்னை பெலப்படுத்திக் கொண்டார்.
.

.
சாலொமோனோ அப்படியிராமல், உலக ஐசுவரியங்கள் அத்தனையையும்

அனுபவித்தார். ஆயிரம் பெண்களை மணந்து, அவர்கள் இராஜாவின்

இருதயத்தை வழுவிப் போகச் செய்தனர். கர்த்தரை மறந்து, உலக

ஐசுவரியத்தினால் மதிமயங்கி போனதினால், அது தரும் இன்பம்

சிற்றின்பமாகவே இருந்தது. பேரின்ப நாதரின் இனிய சமுகத்தை அவர்

இழந்து போனார். 'கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும்.

அதனோடே அவர் வேதனையை கூட்டார்' என்ற பொன்னான

வார்த்தையை அவர் அறியவில்லை. ஆகையால் அவருடைய ஐசுவரியம்

அவருக்கு வேதனையை தந்தது. கர்த்தர் ஐசுவரியத்தை கொடுத்தார்.

ஆனால் தம் ஆசீர்வாதத்தை அதனோடு தரவில்லை. ஆகவே அது

வேதனையை தந்தது. ஆதனால் அவர் அனுபவித்த ஒன்றும் அவருக்கு

நிம்மதியையும், சந்தோஷத்தையும், சமாதானத்தையும் தரவில்லை.

அதனால் எல்லாமே மாயையாக அவருக்கு தோன்றிற்று.
.

.
பிரியமானவர்களே, இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம்.

ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய நம்மை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு பிரியம்.

அதற்குப்பின்னே எனக்கு அது வேண்டும் என்று நாம் அலையத்

தேவையில்லை. 'முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய

நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக்

கொடுக்கப்படும்' (மத்தேயு 6:33) என்று வாக்களித்தவர் நாம் அவருடைய

இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடும்போது, நமக்கு எல்லா

ஐசுவரியத்தையும் கூட்டித்தருவார். ஆனால் நாம் கர்த்தரோடு இல்லாதபடி

நாம் அனுபவிக்கும் எந்த ஐசுவரியமும் மாயையே. ஆனால் கர்த்தரோடு நாம்

இருந்து அவர் கொடுக்கும் ஐசுவரியத்தினால் நாம் மதிமயங்கி போகாமல்,

அவரது சமுகத்தை வாஞ்சிப்போமானால் அது நிச்சயமாகவே ஆசீர்வாதத்தை

தரும். அதனுடனே வேதனை இராது. ஆமென் அல்லேலூயா!

.


திரண்ட ஆஸ்தி உயர்ந்த கல்வி

செல்வாக்குகள் மிகவிருப்பினும்

குருசை நோக்கி பார்க்க எனக்கு

உரிய பெருமை யாவும் அற்பமே

.

.
விந்தை கிறிஸ்தேசு இராஜா

உந்தன் சிலுவை என் மேன்மை

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, உலக ஆஸ்தியையும், ஐசுவரியத்தையும் தருபவர் நீரே. ஐசுவரியத்தையும் கனத்தையும் கொடுப்பவர் நீரே. நீர் கொடுக்கும் ஐசுவரியங்களின் மேல் எங்கள் கவனமும் கண்களும் செல்லுமானால் அவைகளினால் எங்களுக்கு வேதனைகள் பெருகுமே. நாங்கள் அவற்றின் மேல் எங்கள் கவனத்தை செலுத்தாதபடி, அவைகளை தரும் உம்மீது எங்கள் கவனமும், உம்மோடு நாங்கள் உறவாடவும் அதன் மூலம் அவற்றை அனுபவிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 25 ஜூலை, 2013

25th July 2013 - நல்ல நிலத்தில் விழுந்த விதை

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஜூலை மாதம் 25-ம் தேதி - வியாழக் கிழமை
நல்ல நிலத்தில் விழுந்த விதை
...

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார். - (மத்தேயு 13:23).


ஒரு சிறந்த ஊழியரின் பிரசங்கத்தை கேட்க ஒரு மனிதர் அவர் எங்கு பிரசங்கித்தாலும் செல்வார். அவர் பிரசங்கத்தை முடித்தவுடன்,அவரிடம் சென்று 'நீர் இன்று மிக நன்றாக பிரசங்கம் செய்தீர் நீங்கள் சொன்னபடி கேட்கிறவர்கள் எல்லாம் செய்தால் எத்தனை நன்றாக இருக்கும்' என்று சொல்லுவார்.

.
ஆனால் அவர் தன் வாழ்வில் அவற்றை செய்ய மாட்டார். அந்த பிரசங்கி

சொல்லுகிற காரியங்கள் எல்லாம் மற்றவர்களுக்குத்தான் என்றும், தான்

ஒரு பரிசுத்தவான் என்றும் அவருடைய நினைவுகள் இருந்தன. அதனால்

என்னதான் வசனத்தை விளக்கி, பாவத்தைக் குறித்து கண்டித்து பேசினாலும்

அது தனக்கு இல்லை, மற்றவர்களுக்குத்தான் என்று நினைத்து, தனக்குள்ளே

அந்த பிரசங்கியின் உயிருள்ள வார்த்தைகளை உள் வாங்காதபடியால் அவர்

கேட்கிற எந்த பிரசங்கமும் அவருக்கு பிரயோஜனமாக இருந்ததே இல்லை.
.


நம்மிலும் அநேகர் ஒவ்வொரு வாரமும் கர்த்தருடைய வார்த்தைகளை தேவ

ஊழியர் சொல்வதை கேட்கிறோம். ஆனால் அந்த வார்த்தைகள் நமக்கு

என்ன சொல்கிறது என்று அதை கேட்காமல், 'ஓ, இந்த வார்த்தைகளை

போதகர் அந்த சகோதரிக்குத்தான் சொல்கிறார், அந்த சகோதரனுக்குதான்

சொல்கிறார்' என்று நினைத்துக் கொள்வோமானால் எத்தனை பெரிய

பிரசங்கி பேசினாலும் அதினால் நமக்கு எந்த ஒரு பிரயோஜனமும்

இருக்கப்போவதில்லை.
.

.
கர்த்தர் தம்முடைய பாதத்தில் அமர்ந்து தியானித்து செல்லும்

ஊழியர்களுக்கும் போதகர்களுக்கும் சபை மக்களின் தேவைக்கேற்ற

வார்த்தைகளை அவர்கள் மூலம் அனுப்புகிறார். அவைகளை ஏற்றுக்

கொள்ளும் பக்குவம் சபை மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

இந்த நாளில் கர்த்தர் எனக்கு என்ன சொல்லப் போகிறார் என்று தாகத்தோடு

வருபவர்களுக்கு அந்த நாளில் கர்த்தர் நிச்சயமாக இடைபடுவார். கர்த்தரின்

ஆலோசனைப்படி நடக்கும்படியாக சொல்லிக் கொடுப்பார்.
.

.
ஆனால் இந்த வசனம் யாருக்கோ, எனக்கில்லை என்று

நினைப்பவர்களோடு கர்த்தர் எப்படி இடைப்பட முடியும்? 'ஒருவன்,

ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன்

வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்'

(மத்தேயு 13:19) என்ற வசனம் சொல்கிறது. ஆம், உணர்வில்லாத இருதயம்

இருந்தால் சொல்லப்பட்ட வார்த்தைகளை பொல்லாத சாத்தான் வந்து

பறித்துக் கொண்டு போய் விடுவதால், அங்கு கேட்ட வசனத்திற்கு

பிரயோஜனமில்லாமற் போகிறது. அதற்கு அவர்கள் சபைக்கு வராமலே

இருந்திருக்கலாம்.
.

.
கர்த்தர் தம்முடைய சுய இரத்தத்தை சிந்தி சம்பாதித்த சபையில் தம்முடைய

கிரியைளை அவர் வெளிப்படுத்துகிறார். தம்முடைய சித்தத்தை

வெளிப்படுத்துகிறார், தம்முடைய வல்லமையை வெளிப்படுத்துகிறார்.

அதை ஏற்றுக் கொள்கிறவர்களுக்கு அந்த வல்லமை, சித்தம், அவர்களுடைய

வாழ்வில் செயல்பட ஆரம்பிக்கிறது. ஆனால் அதை ஏற்றுக்

கொள்ளாவிட்டால் கிறிஸ்தவனாக இருப்பதிலேயே அர்த்தம் இல்லாமற்

போகிறது.
.

,
சிலர் சபைக்கு வருகிறார்கள், சத்தியத்தை கேட்கிறார்கள், ஆனால் அந்த

சத்தியம் அவர்கள் வாழ்வில் கிரியை செய்வதில்லை. செய்வதற்கு அவர்கள்

இடம் கொடாததால், அவர்களுடைய வாழ்வும், செயல்களும், சுபாவங்களும்

மாறாமல் இருக்கிறது. எத்தனை சத்தியம் கேட்டும், கர்த்தரே அவர்களுக்கு

இதுதான் காரியம் என்று சொன்னாலும் அவர்கள் அதை ஏற்றுக்

கொள்ளப்போவதில்லை. ஏனெனில் அவர்கள் இருதயம் கல்லாகி

இருக்கிறது. அவர்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம், ஞானஸ்நானம்

எடுத்திருக்கிறோம் என்று சொன்னாலும், கர்த்தருடைய வார்த்தையின்படி

அவர்கள் நடக்காவிட்டால், அவர்கள் பெற்ற இரட்சிப்பால் அவர்களுக்கு

பிரயோஜனமே இல்லை.
.

.
ஆனால் 'நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக்

கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும்

முப்பதாகவும் பலன் தருவான்' என்ற வசனத்தின்படி நல்ல நிலத்தில் விழுந்த

விதைகளாக நம் வாழ்வில் கர்த்தருடைய வார்த்தைகளை கேட்போம்.

அதன்படி நடப்போம், கர்த்தர் நம்முடைய வழிகளை ஆராய்ந்து அறிகிறார்.

அதன்படி நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா!

.

உம்மை வருத்தும் வழியில் நடந்தால்

என்னை திருத்த வேண்டும் தேவா

அன்போடு உமது வசனம்

கற்றுத் தந்து நடத்த வேண்டும்

.
மகிமை மாட்சிமை மாவேந்தன் உமக்கே

துதியும் கனமும் தூயோனே உமக்கே

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் கேட்கும் தேவ செய்தி ஒவ்வொன்றும் நல்ல நிலத்தில் விழுந்த விதைகளைப் போல எங்கள் வாழ்வில் பிரயோஜனப்பட எங்களை உமது கரத்தில் ஒப்புக் கொடுக்கிறோம். சொல்லப்படும் வார்த்தைகள் யாருக்கோ என்று நினைக்காமல் எங்களுக்காகவே கர்த்தர் பேசுகிறீர் என்று எடுத்துக் கொண்டு உம்முடைய வார்த்தைகள் எங்களை புடமிட ஒப்புக் கொடுக்கிறோம்;. நீர் பேசுகிற வார்த்தைகள் எங்கள் வாழ்வில் செயல்பட அர்ப்பணிக்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.