Friends Tamil Chat

புதன், 30 ஏப்ரல், 2014

30th April 2014 - தேவனுடைய அனந்த ஞானம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஏப்ரல் மாதம் 30-ம் தேதி - புதன் கிழமை
தேவனுடைய அனந்த ஞானம்
...

அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார். - (பிரசங்கி 3:11).

.
தேவனின் படைப்பெல்லாம் மிகவும் விந்தையானது, ஆச்சரியமானது, மனித மூளைக்கு அப்பாற்பட்டது. வேதம் சொல்கிறது, 'தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக் கூடுமோ? அது வானபரியந்தம் உயர்ந்ததுளூ உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறியக் கூடியது என்ன? அதின் அளவு பூமியைப்பார்க்கிலும் நீளமும், சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது' (யோபு 11:7-9). அப்படிப்பட்ட அனந்த ஞானத்தினால் தேவன் படைத்தவைகளை பார்க்கும்போது அவரை துதிக்காமல் இருக்க முடியாது.

.

ஒரு குருவி முட்டையை அடைக்காத்து குஞ்சு வெளிவர 14 நாட்கள் ஆகும். அதே ஒரு கோழி அடைக்காத்து வெளிவர 21 நாட்கள் ஆகும். அதுப்போல வாத்து அடைக்காத்து குஞ்சு வெளிவர 28 நாட்கள் ஆகும். ஒரு கிளியும், தீக்கோழியும் அடைக்காத்து குஞ்சு வெளிவர 42 நாட்கள் ஆகும். இவையெல்லாம் ஏழால் வகுப்படக்கூடியவை.

.

ஒரு யானையை பார்த்தால், அதனுடைய நான்கு கால்களும் முன்னோக்கி மடங்கும் விதத்தில் தேவன் படைத்திருக்கிறார். அவருக்கு தெரியும், இந்த மிருகம் இருப்பதிலேயே பெரிய மிருகம், இதற்கு கீழே இருந்து எழுந்தரிக்க இரண்டு கால்கள் பத்தாது என்று நான்கு கால்களையும் மடக்கி எழும்பும்படி படைத்திருக்கிறார். ஒரு குதிரை தன் முன்னங்கால்களை ஊன்றி எழுந்தரிக்கும். ஒரு மாடு, தன் பின்னங்கால்களை ஊன்றி எழுந்தரிக்கும். கர்த்தரின் ஞானம் தான் எவ்வளவு பெரியது!!

.

உணவு வகைகளை நோக்கும்போது, முலாம்பழத்தில் மேல் இருக்கும் தோலின் வரிகள் இரட்டை எண்ணிக்கையில் இருக்கும். ஒவ்வொரு ஆரஞ்சு பழத்தின் சுளைகளும் இரட்டை எண்ணிக்கையில்தான் இருக்கும். ஒரு சோளத்திலும் இருக்கும் மணிகளின் வரிசையும் இரட்டை எண்களாகத்தான் இருக்கும்.

.

எல்லா உணவு தானியங்களும் கதிரில் இருக்கும்போது, இரட்டை எண்களாகத்தான் இருக்கின்றன. கர்த்தர் சொன்னதுப் போல முப்பது, அறுபது, நூறுமடங்காக அவை பெருக்கம் அடைகிறது.

.

சில மலர்கள் சந்திரனைப்பார்த்து மலர்கின்றன. சில சூரியனைப்பார்த்து மலர்கின்றன. எத்தனை எத்தனை நிறங்களில், எத்தனை எத்தனை விதங்களில் அப்பூக்கள் படைக்கப்பட்டிருக்கின்றன! மழை பெய்து முடித்தவுடன், அவை திரும்ப நிமிர்ந்து நிற்கிறதை பார்க்க அங்குள்ள அணில்களும், பறவைகளும் ஆயத்தமாயிருக்கின்றனவாம்! எத்தனை விந்தை! இப்படி சொல்லிக் கொண்டே போனால் எழுதி முடியாது! அத்தனை அற்புதம் அவருடைய கிரியைகள்! அல்லேலூயா!

.

இவை எல்லாவற்றையும் விட தேவன் மனிதனை படைத்ததுதான் விந்தையிலும் விந்தை! நம் உடலில் வைக்கப்பட்டுள்ள உறுப்புகள் தங்கள் வேலைகளை நாம் அறியாமலேயே பிறந்த நாளிலிருந்து, இறக்கும் நாள் வரையில் தொடர்ந்து செய்துக் கொண்டு இருக்கின்றன.

.

தேவன் நம்மை சிருஷ்டித்ததற்கு அநேக உயரிய நோக்கங்கள் உண்டு, அவைகளில் ஒன்று, 'ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்ளூ அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்' (எபேசியர் 2:10). ஆம், நற்கிரியைகளை செய்து அவருடைய மகிமைக்காக வாழ நாம் சிருஷ்டிக்கப்பட்டோம்.

.

தேவன் படைத்த அற்புத சிருஷ்டிகளாகிய நாம் நம்மை கண்ணாடியில் பார்க்கும்போது, என்னை இப்படி படைத்ததற்காக நன்றி தகப்பனே, நீர் என்னை உருவாக்கினதன் நோக்கத்தை நிறைவேற்றும் என்று சொல்வோமா? உம்மை அதிகமாய் நேசிக்கிறேன் தகப்பனே என்று சொல்வோமா?

.

தேவனுடைய அனந்த ஞானத்தினால் சகலத்தையும் சிருஷ்டித்தவர் உங்களையும் என்னையும் கூட அவருடைய சித்தத்தின்படியும், திட்டத்தின்படியும் உருவாக்கியிருக்கிறார். அவர் சித்தம் நம்மில் நிறைவேற நம்மை ஒப்புக்கொடுப்போம். நம் வாழ்வை அவர் பொறுப்பெடுத்துக் கொள்வார். ஆமென் அல்லேலூயா!

.

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே

சர்வ சிருஷ்டியை காப்பவர் நீரே

எங்கள் உள்ளத்தில் உம்மை போற்றுகிறோம்

என்றென்றும் பணிந்து தொழுவோம்

.

ஆ ஆ ஆ அல்லேலூயா

ஆ ஆ ஆ அல்லேலூயா

.

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் பிரமிக்கத்தக்க விதமாக உருவாக்கப்பட்டபடியால் உம்மை துதிக்கிறோம். எங்கள் உடல் உறுப்புகளை நாங்கள் சிந்தித்துப் பார்த்தால் அது எங்கள் ஞானத்திற்கு சிறிதும் எட்டாதது தகப்பனே, அதிசயமாய் எங்களையும், இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் சிருஷ்டித்தவரே உமக்கே கோடி ஸ்தோத்திரம். நீர் எங்களை சிருஷ்டித்ததற்கான நோக்கத்தை எங்கள் வாழ்வில் நிறைவேற்றுவீராக. உம்மிடத்தில் எங்களை படைக்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

29th April 2014 - கீழ்ப்படிதலே ஆசீர்வாதம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஏப்ரல் மாதம் 29-ம் தேதி - செவ்வாய்க்கிழமை
கீழ்ப்படிதலே ஆசீர்வாதம்
...

அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார். - (லூக்கா 5:3).

.
இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் இருந்தபோது, மூன்று வகையான ஊழியங்களை செய்து வந்தார். போதித்தல், பிரசங்கித்தல், சுகப்படுத்துதல் ஆகிய மூன்று ஊழியங்களையும் தாம் சென்ற இடங்களில் செய்து வந்தார்.

.

நம்மிடம் யாராவது சொந்த ஊர் எது என்றுக் கேட்டால், நாம் பிறந்த ஊரையாவது, வளர்ந்த ஊரின் பெயரையாவது சொல்வோம். ஆனால் கிறிஸ்து தம்முடைய பட்டணம் என்று சொன்னது தாம் பிறந்த ஊரையுமல்ல, வளர்ந்த ஊரையுமல்ல, அவர் பிறந்த ஊர் பெத்லகேமாக இருந்தாலும், வளர்ந்த ஊர் நாசரேத் ஆக இருந்தாலும் கப்பர்நகூமையே அவரது பட்டணம் என்று சொன்னார். 'அப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்' (மத்தேயு 9:1). ஏனெனறால் அந்த பட்டணத்திலிருந்தவர்களே அவரை ஏற்றுக் கொண்டார்கள். அதனால் அந்த பட்டணம் அவருடைய பட்டணமாயிற்று. இஸ்ரவேலில் உள்ள கப்பர்நகூமிற்கு உள்ளே நுழையும்போது, Town of Jesus என்றே அங்குள்ள பெரிய கதவில் எழுதப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவ பெயரை வைத்திருப்பதினால் அல்ல, பெற்றோர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதினால் அல்ல, அவரை ஏற்றுக் கொண்டவர்களே அவருக்கு சொந்தமாகிறார்கள். அல்லேலூயா!

.

இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியத்தை ஆரம்பிக்கும்போது, அவா கலிலேயா கடலருகே நிற்கும்போது, அநேகர் அவர் சொல்வதை கேட்கும்படி நெருக்கினார்கள். அதனால் அவர் ஒரு படகின் மீது ஏறி, போதகம் பண்ணலாம் என்று சொல்லி, அந்த படகின் சொந்தக்காரராகிய பேதுருவிடம், கொஞ்சம் படகை உள்ளே தள்ளச் சொன்னார். இயேசுகிறிஸ்து போதகம் செய்ய தெரிந்துக் கொண்ட இடம், ஒரு நாற்றம் எடுத்த படகு. ஏன் நாற்றம் எடுத்த படகு என்றால் சீமோன் பேதுரு ஒரு மீனவராயிருந்தார். அவர் மீன்களை பிடித்து அந்த படகில்தான் வைத்துக் கொண்டு வரவேண்டும். இயேசு அந்தப்படகில் தான் ஏறி, பிரசங்கத்தை ஆரம்பித்தார்.

.

இந்த நாளின் பிரசங்கிகளுக்கும் அவருக்கும்தான் எத்தனை வித்தியாசம்! இந்த நாளில் பிரசங்கி பீடத்திற்கு இலட்சக்கணக்கில் செலவழிக்கிறார்கள். விதவிதமான கலர்களில், புகை வரும்படி செய்து, ஜிலுஜிலு என்று உடைகளை அணிந்து, அப்பப்பா எத்தனை பாவனை? எத்தனை மினுமினுப்பு!

.

கிறிஸ்து பேதுருவின் படகில் ஏறி அவரை படகை சற்றே தள்ளும்படி கேட்டுக் கொண்டார். பேதுருவும் அப்படியே கீழ்ப்படிந்தார். அங்கிருந்து மக்களுக்கு போதனை செய்த ஆண்டவர், முடித்தவுடன் பேதுருவின் நிலை அறிந்த கிறிஸ்து, படகை ஆழத்திற்கு கொண்டு சென்று வலையைப் போடுங்கள் என்று சொன்னார். அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லைளூ ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள் (லூக்கா 5:5-6).

.

சீமோன் பேதுரு ஒரு மீனவராக இருந்தார். அவருக்கு எந்த நேரத்தில் எந்த இடத்தில் மீன்கள் கிடைக்கும் என்று நன்றாகத் தெரியும். ஆனாலும் கர்த்தரிடத்தில் வாக்குவாதம் பண்ணாமல், நீர் சொல்கிறபடியே போடுகிறேன் என்று சொன்ன போது, வலை கிழியத்தக்கதாக மீன்களை பிடித்தார்கள். அல்லேலூயா!

.

சீமோன் பேதுரு கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வலையை வீசி, அநேக மீன்களை பிடித்தபோது, 'சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான் (8ம்வசனம்).அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்' (10ம் வசனம்). ஆம், அப்படியே பேதுருவை மனுஷர்களை பிடிக்கிறவராய் கர்த்தர் மாற்றினார்.

.

ஒன்றுமறியாத பேதுரு, மீனவராயிருந்த பேதுரு செய்த முதல் பிரசங்கத்தில் 3000 பேர் இரட்சிக்கப்பட்டார்கள், அடுத்த முறை செய்த பிரசங்கத்தில் ஐயாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள். அல்லேலூயா!

.

கர்த்தருடைய வார்த்தைக்கு நாம் கீழ்ப்படிவோமானால், கர்த்தர் நம்மையும் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக வைப்பார், மாற்றுவார். நம்முடைய பெலனையோ அறிவையோ நாம் நம்பினால் ஒரு வேளை அதிகமாய் பிரயாசப்பட்டும் மீனவனராயிருந்த பேதுருக்கு ஒரு மீனும் கிடைக்காததுப் போல நம்முடைய எந்த தேவையும் கூட ஒருவேளை சந்திக்கப்பட்டிருக்க முடியாது. ஆனால் கர்த்தரை சார்ந்து, அவருடைய வார்த்தைக்கு முதலிடம் கொடுத்து நம் வாழ்வையும், எந்த காரியத்தையும் செய்வோமானால், எல்லாவற்றிலும் வெற்றி நமக்கே!

.

கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவோம், நம்மைக் கொண்டு ஆயிரமாயிரமான பேர்களுக்கு ஆசீர்வாதமாக கர்த்தர் மாற்றுவார். ஆமென் அல்லேலூயா!

.

என் ஞானம் கல்வி செல்வங்கள் எல்லாம்

ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன்

என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை

என்றே உணர்ந்தேன் என் இயேசுவே

.

அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே

உம் அனுக்கிரகம் தர வேண்டுமே

என்னால் ஒன்றும் கூடாதையா

எல்லாம் உம்மால் கூடும்

ஜெபம்
எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உமக்கு கீழ்ப்படிந்த பேதுருவை அநேக ஆயிரமானவர்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றினீரே, அதைப் போல நாங்களும் நீர் சொல்வதைக் கேட்டு அதற்கு கீழ்ப்படிந்து, அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்க கிருபை செய்யும். எங்கள் ஞானத்தையோ, அறிவையோ, தகுதியையே சாராமல், கர்த்தர் சொல்வதை செய்யவும், சார்ந்து ஜீவிக்கவும் கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 28 ஏப்ரல், 2014

28th April 2014 - நான்கு பேரின் விசுவாசம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஏப்ரல் மாதம் 28-ம் தேதி - திங்கட் கிழமை
நான்கு பேரின் விசுவாசம்
...

இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். - (மாற்கு 2:5).

.

இயேசுகிறிஸ்து கப்பர்நகூம் என்று சொல்லப்படும் தம்முடைய பட்டணத்திற்கு வந்து, ஒரு வீட்டில் இருந்து ஜனங்களுக்கு போதிக்க ஆரம்பித்தார். அங்கு நிற்க இடமில்லாதபடி அநேகர் கூடி வந்திருந்தார்கள். அங்கு ஜனம் நிற்கவே இடம் இல்லாமல் இருக்கும்போது, நான்கு பேர் ஒரு திமிர்வாதக்காரனை ஒரு கட்டிலில் கிடத்தி, எப்படியாவது இயேசுகிறிஸ்துவிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தார்கள்.

.

திமிர்வாதக்காரன் என்றால் படுக்கை கிடப்பானவன். அவனுக்கு தன்னால் எழுந்து எதுவும் செய்ய முடியாது. யாராவது உதவி செய்துதான் அவன் சாப்பிடவே முடியும். கைகளும், கால்களும் மடங்கப்பட்டு, கண்கள் மட்டும் திறந்து பார்த்து, கொண்டு இருப்பவனாகவே இருந்திருக்க முடியும்.

.

அந்த இரண்டு கால்கள் எழுந்து நடக்க வேண்டும் என்று எட்டுக் கால்கள் அவனை சுமந்துக் கொண்டு இயேசுவிடம் கொண்டு வந்தன. அங்கு கொண்டு வந்துப் பார்த்தால் அந்த வீட்டின் முன் ஒரே கூட்டம்! அவர்கள் நிச்சயமாக அங்கு கூடியிருந்தவர்களிடம் கேட்டிருக்க வேண்டும், 'கொஞ்சம் வழிகொடுங்கள், நாங்கள் இந்த மனிதனை இயேசுவிடம் கொண்டு செல்ல வேண்டும்' என்று. ஆனால் ஒருவருக்கும் விருப்பமில்லை, 'நாங்களே எப்போது அவர் எங்களுக்கு உதவி செய்வார் என்று காத்துக் கொண்டு, நிற்க இடமில்லாமல் கஷ்டப்பட்டு நின்றுக் கொண்டிருக்கிறோம், நீங்க வேற ஒரு கட்டிலையே கொண்டு வந்து எங்களிடம் இடம் கேட்கிறீர்களா?' என்று மிரட்டி இருப்பார்கள்.

.

அந்த நான்கு பேரும் யோசித்தார்கள், என்ன செய்வது, எப்படி கிறிஸ்துவிடம் கொண்டு போய் சேர்ப்பது என்று. அவர்களில் ஒருவர் 'நாம் இவரை வீட்டின் மேலே கொண்டுபோய், ஓட்டை பிரித்து, கீழே இறக்கினால் என்ன' என்று சொல்ல, மற்றவர்களும், ஆம், வேறு வழியே இல்லை என்று தடதடவென்று வீட்டின் மேலே ஏறினார்கள். ஓட்டைப் பிரிக்க தொடங்கினார்கள். அதைப் பார்த்து வீட்டு சொந்தக்காரர் சும்மா இருந்திருப்பாரா? நம் வீட்டை யாராவது உள்ளே நுழைந்தாலே நாயை விட்டு விரட்டுகிறோம். ஆனால் அந்த வீட்டுக்காரர், இந்த நான்கு பேரின் உற்சாகத்தையும், நம்பிக்கையையும் பார்த்து, சரி ஓட்டைப் பிரிக்கட்டும், ஆனால் முடிந்த பிறகு திரும்ப சரிசெய்து கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருப்பார். (என் கற்பனைதான் இது).

.

அவர்கள் நான்கு பேரும், அந்த திமிர்வாதக்காரனை மெதுவாக மேலேயிருந்து, கிறிஸ்து நிற்கும் இடத்தில் இறக்கினார்கள். அங்கு கூடியிருந்தவர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும், இதுவரை யாரும் இப்படிப்பட்ட காரியத்தை செய்திருக்க முடியாது என்று.

.

'இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்' (5ம் வசனம்). ஆம், திமிர்வாதக்காரனின் விசுவாசத்தைக் கொண்டு அல்ல, அவரை சுமந்து வந்த நான்கு பேரின் விசுவாசத்தைக் கண்டு, இயேசு திமிர்வாதக்காரனை சுகப்படுத்தினார்;. அல்லேலூயா!

.

மட்டுமல்ல, 'நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கு முன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்' (11-12 வசனங்கள்).

.

பிரியமானவர்களே, அந்த திமிர்வாதக்காரனைப் போல நம்மோடு இருக்கும் ஜனங்களில் அநேகர் கிறிஸ்துவிடம் சேரும்படி எந்தவித உதவியும் அற்றவர்களாக, நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறவர்களாக, தாங்கள் இருக்கும் பரிதாபமான நிலையில் வாழ்ந்து மடிந்துக் கொண்டிருக்கிறார்கள். நம் நாடு, நம் தேசம், நம் சகோதரர்கள் என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் இந்திய மக்களில் அநேகர் இப்படித்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுவாரும் இல்லை, கர்த்தரைக் குறித்து அறிவிப்பாரும் இல்லை.

.

அந்த நான்கு பேர் அவர்களின் பெயர்களும் சொல்லப்படவில்லை, தங்களை யார் என்ன நினைத்தாலும், சொன்னாலும் சரி, எப்படியாவது தங்களுடைய நண்பனோ, உறவினரோ தெரியவில்லை, அந்த திமிர்வாதக்காரன் சுகமடைய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் கிறிஸ்துவிடம் கொண்டு வந்ததுப் போல் நாமும் நம்மோடு இருக்கும், நம்மோடு வேலை செய்யும், நம்முடைய உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ கிறிஸ்துவை அறிவித்து, அவர்களை கிறிஸ்துவிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமல்லவா? நாம் அவரிடம் கொண்டு போய் சேர்த்தால் போதும் மற்றதை அவர் பார்த்துக் கொள்வார்.

.

அந்த திமிர்வாதக்காரன் உடல் சுகம் பெற்றது மட்டுமல்ல, தன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, இரட்சிப்பையும் பெற்றுக் கொண்டான். கிறிஸ்துவினிடத்தில் வரும்போது, உடல்சுகம் மட்டுமல்ல, உள்ளத்தின் சுகமும் பெற்று, பரலோக இராஜ்யத்திற்கு பங்குள்ளவர்களாக மாறி, நித்திய ஜீவனையும் பெற்றுக் கொள்வார்கள். அப்போது அதை காண்பவர்கள் அதை செய்ய வல்லமையுள்ள தேவனுக்கு மகிமையை செலுத்துவார்கள். அந்த நான்கு பேரைப் போல நாமும் உதவியற்று, நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறவர்களை கிறிஸ்துவிடம் கொண்டு வருவோமா? நாம் பெற்ற இரட்சிப்பை அவர்களும் பெற்றுக் கொள்ள உதவுவோமா? ஆமென் அல்லேலூயா!

.

உலகினில் பிறந்த மனிதர்

அனைவரும் தனித்தனி மனிதர்களே

மனிதர்கள் கூட்டத்தைத் தேடியே

செல்வோர் தேவனின் பிரியர்களே

பரந்த இத்தேசம் இயேசுவைக்

கண்டால் எத்தனை நன்மை பெறும்

விரைந்தே உழைப்போம் அழுதே

ஜெபிப்போம் தொழுவோம் அவர் பாதம்

இந்த தேசத்திற்கே சேஷமம்

.

மனிதன் யாரென்று உலகில் யாருக்கும் தெரியாது

அவன் உருவம் கண்டு இவன் தான் என்று

சொல்லிவிடாதே அவனைத் தள்ளிவிடாதே

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, அந்த திமிர்வாதக்காரன் படுத்த படுக்கையாக இருந்தபோது, அந்த நான்கு பேர் அவன் மேல் இரக்கப்பட்டு, அவனை கட்டிலோடு கொண்டு வந்து, வீட்டின் மேற்கூரையை திறந்து கிறிஸ்துவிடம் இறக்கி விட்டதுப்போல, நாங்களும் கிறிஸ்துவை அறியாமல் இருக்கும் ஒவ்வொருவரையும் எப்படிப்பட்ட முயற்சிகளை எடுத்தாவது, கிறிஸ்துவிடம் கொண்டு சேர்க்கிறவர்களாக எங்களை மாற்றும். அவர்களின் ஆத்துமாக்களை குறித்த பாரம் நிறைந்தவர்களாக எங்களை மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

இந்த வார வாக்குத்தத்தம் & விவிலிய விடுகதைகள் : - 27th April 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

விவிலிய விடுகதைகள்

அடிமேல் அடி அடித்தால்

அம்மியும் நகருமாம் – ஆனால்

உலக்கையால் குத்தினாலும்

உரலிலே இருப்பானாம் - அவன் யார்?

 

விடை: மூடன். நீதி 27:22.

====================================
 

ஏட்டிக்குப் போட்டி, ஏகப்பட்ட வாட்டி

காளையை மாட்டி, கண்டமட்டும் வெட்டி

ஆட்டமெல்லாம் ஆடி, பாட்டெல்லாம் பாடி

எலும்பையெல்லாம் காட்டி, சத்தமெல்லாம் கூட்டி

மாட்டி கொண்டனர் வெட்டிப்போட - அவர்கள் யார்?

 

விடை: பாகால் தீர்க்கதரிசிகள். 1 இராஜா 18:22-40.

====================================
 

ஆண்டவரின் ஆலயத்தை

அழ்குப்படுத்தி பார்ப்பான்

அடியேன் கேட்பதாய்

அமைதியாய் சொல்லுவான்

அனைவருக்கும் மாதிரியான

அன்பான நண்பன் அவன்   -அவன் யார்?

 

விடை: சாமுவேல். 1 சாமு 3-10.

====================================
நன்றி: 'வேதாகம நண்பன்'

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

 

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

25th April 2014 - செய்த நன்மைகளை பாராட்டுதல்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஏப்ரல் மாதம் 25-ம் தேதி - வெள்ளிக்கிழமை
செய்த நன்மைகளை பாராட்டுதல்
...................

ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள். - (1தெசலோனிக்கெயர் 5:11).

.

ஒரு வயதான முதியவர் மரண படுக்கையில் இருந்து, நாட்களை எண்ணிக் கொண்டு இருந்தார். ஒரு நாள் அவருக்கு தன் வீட்டின் கீழே இருந்து அவருக்கு பிடித்தமான ரவா கேசரி செய்யும் வாசனை வந்தது. அதை எப்படியாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை எழுந்தது. மிகவும் கஷ்டப்பட்டு, எழுந்து கீழே விழுந்து, சிரமப்பட்டு கீழே சென்றார்.

.

உயிரை கையில் பிடித்தபடி கீழே சமையறைக்குள் சென்றபோது, அவரால் நம்ப முடியவில்லை. அவருக்கு பிடித்தமான உணவு வகைகளும், கேசரியும் செய்து வைக்கப்பட்டிருந்தது. அவர் நினைத்தார், 'கடைசியாக என் கணவர் நல்ல சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மரித்து போகட்டும்' என்று தன் மனைவி ஆசையாய் சமைத்திருப்பதாக நினைத்து சேகரியை பக்கத்தில் இருந்த ஒரு கரண்டியில் எடுத்து, அதை வாயில் வைக்கும் தருவாயில், அவருடைய மனைவி கையில் ஒரு அடி கொடுத்து, ' இந்தபக்கம் வராதீர்கள், இது உங்கள் அடக்கத்திற்கு வருபவர்களுக்காக செய்தது' என்று முதியவரை துரத்தி விட்டார்கள்.

.

அந்த பாட்டியம்மா மாத்திரம் அல்ல, நாமும் கூட அநேக வேளைகளில் அப்படித்தான் இருக்கிறோம். உயிரோடு இருக்கும் நேரத்தில் நாம் அவர்களிடம் நீர் எத்தனை அருமையானவர் என்று சொல்வதில்லை. ஆனால் மரித்தப்பின் எத்தனை எத்தனை வார்த்தைகள் அவரை புகழ்நது பேசுகிறோம். அவர் உயிரோடு இருக்கும்போது அந்த வார்த்தைகளை சொன்னால் அவர் எப்படி மகிழ்வார்!

.

மலர்களை ஒரு மனிதர் மரித்தப்பின் சார்த்துகிறோம். அவர்கள் உயிரோடு இருக்கும்போதே கொடுத்தால் அவர் அதன் அழகை இரசிப்பாரே!

.

நம்முடைய நாட்டில் மரித்தப்பின் அநேகருக்கு பெரிய பெரிய விருதுகளை கொடுப்பார்கள். அவர் ஒருவேளை மிகவும் வயதாகிதான் மரித்திருப்பார். அவர் உயிரோடு இருக்கும்போதே கொடுத்திருந்தால், அந்த வயதான காலத்தில் மகிழ்ச்சியோடே இருந்திருப்பாரே!

.

ஒருவேளை உங்களுக்கு யாராவது விசேஷித்தவர்களாக இருந்தால், அவர் மரிக்கும்வரை காத்திராதேயுங்கள். அவர் உயிரோடு இருக்கும்போதே அவரை வாழ்த்தி, உள்ளதை உள்ளபடி சொல்லி, அவரை மகிழ செய்யுங்கள்.

.

ஒருவர் செய்கிற நன்மையான காரியங்களை பாராட்ட மறவாதீர்கள். நீங்கள் பாராட்டுவதால் அவர் தலைகீழாக நிற்க போவதில்லை, ஆனால் அவர் கர்த்தருக்குள் இருந்தால் அவர் கர்த்தரை அதற்காக துதிப்பார், பெருமையடைய மாட்டார்.

.

ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள். ஆமென் அல்லேலூயா!

.

அழகானவர் அருமையானவர் இனிமையானவர்

மகிமையானவர் மாறிடாதவர்

அவர் இயேசு இயேசு இயேசு

ஜெபம்
எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நல்ல நாளுக்காக உம்மை துதிக்கிறோம். நீர் எங்களுக்கு பாராட்டுகிற கிருபைகளுக்காக உம்மை துதிக்கிறோம். நீர் செய்த நன்மைகளை நினைத்தால் எங்களுக்கு ஆயிரம் நாவுகள் இருந்தாலும் உம்முடைய துதியை சொல்ல போதாது தகப்பனே. அதுப்போல நன்மையான காரியங்களை செய்கிற யாராயிருந்தாலும், அவர்களை பாராட்ட எங்களுக்கு உதவி செய்யும். அவர்களுடைய மரணம் வரை காததிருக்காமல், அவர்கள் உயிரோடு இருக்கும்போதே அவர்களை பாராட்ட கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.........

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 24 ஏப்ரல், 2014

24th April 2014 -நான் மட்டும்தான் இழுக்கிறேன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஏப்ரல் மாதம் 24-ம் தேதி - வியாழக்கிழமை
நான் மட்டும்தான் இழுக்கிறேன்
..........

நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். - (கலாத்தியர் 6:9).

.

ஒரு மனிதர் புதிதாக ஒரு இடத்திற்கு செல்லும்போது, யாரும் இல்லாத தனிமையான இடத்தில் ஒரு கால்வாயில் அவர் சென்ற கார் மாட்டி கொண்டது. அதிர்ஷடவசமாக அந்த வழியாக சென்ற ஒரு குதிரை ஓட்டுனர், தன் 'தானி' என்ற குதிரையை கொண்டு வந்து, உதவி செய்ய முன் வந்தார். குதிரையை காரில் கட்டிவிட்டு, 'நல்லி காரை இழு' என்று சத்தமிட்டார். தானி நகரவில்லை. பின், அவர் 'லானி காரை இழு' என்று சத்தமிட்டார். அப்போதும் தானி நகரவில்லை. பின் 'சானோ காரை இழு' என்று சத்தமிட்டார். அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை. கடைசியில் 'தானி காரை இழு' என்று சொன்னப்பின் தானி காரை பிடித்து இழுக்க கார் வெளியே வந்தது. அதை கண்ட கார் ஓட்டுனர், 'நீர் என்னன்னவோ பெயர்களை சொல்லி அழைத்தும் குதிரை நகரவில்லையே' என்று கேட்டார். அப்போது, குதிரையின் சொந்தக்காரர், 'நீங்க ஒன்னு, இந்த குதிரைக்கு கண் தெரியாது. நான் மற்ற குதிரைகளின் பெயர்களை சொல்லி அழைத்தபோது, இந்த குதிரை தான் மட்டும் தனியாக இழுக்கவில்லை. இன்னும் நாலு பேர் கூட இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் காரை இழுத்தது, ஆனால் தான் மட்டும்தான் காரை இழுக்கிறோம் என்று தெரிந்தால் இது காரை இழுத்திருக்காது' என்று கூறினார்.

.

நம்மில் அநேகர் அந்த தானி என்ற குதிரையை போலத்தான் இருக்கிறோம். நாம் மட்டும் தான் அந்த வேலை செய்கிறோம் என்று தெரிந்தால் நாம் அதில் ஈடுபடவே மாட்டோம். உதாரணத்திற்கு, 'ஆலயத்தில் யாரும் கண்டு கொள்ளவே இல்லை, நான் மட்டும் ஏன் என் நேரத்தையும் முயற்சியையும் எடுத்து அந்த காரியத்தை செய்ய வேண்டும்' என்று நம்மில் அநேகர் எந்த காரியத்தையும் ஆலயத்திற்கென்று செய்வதில்லை.

.

'நான் அந்த மனிதரிடம் பேசினால், எந்த பிரயோஜனமும் இல்லை. அந்த மனிதர் என்னிடம் பேசுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நான் மட்டும் ஏன் போய் வலிய பேச வேண்டும்' என நினைக்கிறோம்.

.

எலியா தீர்க்கதரிசி யேசபேலுக்கு பயந்து, ஓரேப் பர்வதத்தில் ஒளிந்து கொண்டிருக்கையில், தேவனிடம் 'நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன்' என்று முறையிட்டான். (1இராஜாக்கள் 19:10). ஆனால் தேவன் அவனிடம் சொன்னது என்ன, 'நீ மாத்திரம் தனியாக இல்லையப்பா. இன்னும் ஏழாயிரம் பேர் இருக்கிறார்கள்' என்று கூறினார். ஆனால் நாம் செய்ய வேண்டிய காரியங்களை செய்ய மாட்டாதபடி, 'நான் மாத்திரம் தான் தனியாக இருக்கிறேன், வேறு யாரும் என்னோடு இல்லை, எத்தனைதான் நான் செய்வது' என்று தேவனிடம் முறையிட்டு கொண்டிருக்கிறோம்.

.

அந்த தானியைப் போல, எலியா தீர்க்கதரிசியைப் போல மற்றவர்கள் செய்து கொண்டிருக்கிற காரியங்களை அறியாதபடி நாம் ஒரு வேளை குருடாய் இருக்கலாம். ஒரு வேளை நாம் மாத்திரம் தான் கர்ததருக்காக செய்து கொண்டிருக்கிறோம் என்று வைத்து கொண்டாலும் எது நன்மையானதோ அதை தொடர்ந்து செய்ய வேண்டும். சோர்ந்து போகக்கூடாது. நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக. நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆமென் அல்லேலூயா!

.

ஒரு வேளை நீங்கள் தேவனுக்காக செய்கிறதை யாரும் பார்க்கவில்லை, அல்லது யாரும் பாராட்டவில்லை என்று நினைக்கிறீர்களா? மனிதன் பார்க்காவிட்டாலும் எல்லாம் அறிந்த 'எல்ரோயி' நம்மை காண்கிற தேவன், அவருக்காக நீங்கள் படும் பாடுகளை, எடுக்கும் முயற்சிகளை அறிந்தவராயிருக்கிறார். அவர் ஒரு போதும் கண்சாடையாய் விட்டுவிடுகிறவரல்ல. நீங்கள் கர்த்தருக்காக செய்யும் காரியங்களுக்கு நிச்சயமான பலனை தேவன் ஏற்ற வேளையில தருவார். ஆகையால் நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக!

.

ஒரு வேளை ஏன் மற்றவர்கள் செய்யட்டும், நான் ஏன் என் நேரத்தை செலவிட வேண்டும்? எனக்கு குடும்பம் உண்டு, எனக்கு ஏகப்பட்ட வேலை உண்டு என்று தட்டிக்கழிப்போமானால், கர்த்தரால் யாரைக்கொண்டாகிலும் தமக்கு வேலை செய்ய வைக்க முடியும் என்பதை அறிந்து கொள்வோம். ஆனால் நமக்கு வரவேண்டிய ஆசீர்வாதம் தடைபடும் என்பதையும் அறிந்து கொள்வோம்

.

யாரோ செய்யட்டும் எனக்கென்ன - நான்

நலமாய் இருந்தால் அது போதும்

என்றே சுயமாய் வாழ்வதினாலே

பின்னால் நீயும் வருந்திடுவாயே

என்று உணர்வாயோ இன்றே வா

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். இந்த வேளையிலும், யாரோ செய்யட்டும் என்று சுயமாய் வாழாமல், உமக்காக உண்மையாய் உழைக்க தேவன் எங்கள் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வீராக. நான் மட்டும்தான் உண்மையாய் உழைக்கிறேன், மற்ற யாரும் கர்த்தருக்காக எந்த வேலையும் செய்வதில்லை என்று முறுமுறுக்காமல், நீர் எங்களுக்கு கிருபையாய் கொடுத்த ஊழியங்களை உண்மையாய் எங்களுடைய திராணிக்கு தக்கதாக செய்ய எங்களுக்கு கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
......

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.