Friends Tamil Chat

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

4th Feb 2014 - பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 பிப்ரவரி மாதம் 04-ம் தேதி - செவ்வாய் கிழமை
பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். - (வெளிப்படுத்தின விசேஷம் 22:11).

.
உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் நல்லதோ கெட்டதோ ஏதோ ஒரு காரியத்தை மேலும் மேலும் செய்து கொண்டே இருக்கும் இயல்புடையவர்களாய் இருக்கிறார்கள். அதாவது ஒரு மனிதன் பாவத்தில் பெருகி கொண்டேயிருப்பான். அல்லது பரிசுத்தத்தில் நாட்டம் கொண்டு அதில் வளர்ந்து கொண்டே இருப்பான்.
.
முதலாவது பாவ உலகத்தின் மீது நாட்டம் கொண்ட மனிதர்களை பார்க்கும்போது, எப்பொழுதாவது ஒரு சிகரெட் பிடிக்கும் மனிதன், கொஞ்ச நாட்களில் தினமும் ஒன்று என்றாகி, பின்பு ஒரே நாளில் பல சிகரெட்டுகளை பிடிக்க ஆரம்பிக்கிறான். கடைசியில் அவன் வேண்டாம் என்று நினைத்தாலும் அந்த பழக்கத்தை விட முடியாதவனாகி விடுகிறான். இதேப்போலத்தான் பணம் சம்பாதிப்பதும், பொருள் சேர்ப்பதும் மட்டுமே வாழ்க்கை என்று வாழ்பவர்கள் எந்த நிலையிலும் 'போதும்' என்ற மனநிலைக்கு வருவதே இல்லை. இன்னும் சம்பாதிக்க வேண்டும், இன்னும் இடம் வாங்க வேண்டும் என்ற அவர்களது ஆசை முடிவுக்கு வருவதேயில்லை.
.
அடுத்ததாக கிறிஸ்துவின் சிந்தனையோடு வாழ்கின்ற தேவ மனிதர்களை சற்று நோக்கினால், தேவனையும் வேதத்தையும ;அதிகமாய் நேசிக்கும் ஒரு கிறிஸ்தவன் எவ்வளவு பரிசுத்தமாய் வாழ்ந்தாலும் இன்னும் பரிசுத்தமாக வேண்மென்று பிரயாசப்படுகிறான். மணிக்கணக்காக ஜெபித்தாலும் இன்னும் ஜெபிக்க வாஞ்சிக்கிறான். காணிக்கை எவ்வளவு கொடுத்தாலும் அவனால் திருப்தி அடைய முடிவதில்லை. தான் ஒரு சிலரை ஆண்டவருக்கும் நடத்திவிட்டோம் என்று திருப்திப்பட்டுக் கொள்ளாமல் அநேகருக்கு தொடர்ந்து சுவிசேஷம் அறிவிக்கிறான்.
.
பிரியமானவர்களே, வேத வசனம் சொல்கிறது, 'அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்' என்று. நாம் அநியாயம் செய்கிறவர்களானால், அதினால் நமக்கு பயன் எதுவும் இல்லை. நித்திய நரகமே மறுவாழ்வில் காத்திருக்கும். ஆனால் ஒவ்வொரு நாளும் இன்னும் அதிக பரிசுத்தம், இன்னும் பரிசுத்தம் என்று பரிசுதத்ததையும், நீதியையும் வாஞ்சிப்போமானால், மறுவாழ்வில் கர்த்தரோடு என்றென்றும் ஆனந்தமாய் வாழும் பாக்கியத்தை பெறுவோம்.
.
ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திரிக்கும்போது, 'இந்த நாளில் பரிசுத்தம் என்னை சூழ்ந்து கொள்ளட்டும் ஆண்டவரே, என் சிந்தை பரிசுத்தமாய் இருக்கட்டும், என் பார்வை பரிசுத்தமாயிருக்கட்டும், என் பேச்சு பரிசுத்தமாய் இருக்கட்டும்' என்று நம்மை ஒப்புக் கொடுத்து ஜெபித்து, பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் பெற வாஞ்சிப்போம். 'உம்மைப்போல என்னை மாற்றுமே' என்பதே நம் இருதயத்தின் நினைவாகவும், ஜெபமாகவும் அமையட்டும். அநியாயம் செய்கிறவர்கள் இன்னும் அநியாயம் செய்யட்டும், அசுத்தத்தில் வாழ்கிறவர்கள் இன்னும் அசுத்தமாகட்டும், நாமோ தேவன் விரும்பும் பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் அடைந்து, கர்த்தருடைய வருகையில் காணப்படுவோமாக! கர்த்தர் சீக்கிரம் வருகிறார். மாரநாதா! அல்லேலூயா!

.

கண்களை பதியவைப்போம்

கர்த்தராம் இயேசுவின் மேல்

கடந்ததை மறந்திடுவோம்

தொடர்ந்து முன்செல்லுவோம்

.
சூழ்ந்து நிற்கும் சுமைகள்

நெருங்கி பற்றும் பாவங்கள்

உதறி தள்ளிவிட்டு

ஓடுவோம் உறுதியுடன்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, ஒவ்வொரு நாளும் நாங்கள் பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தம் பெற வாஞ்சையை தாரும். உலகத்திற்கொப்பான வேஷத்தை தரியாமல், பரிசுத்தத்தின் மேல் தாகம் கொண்டவர்களாக எங்களை மாற்றும். அசுத்தமும் அநீதியும் நாங்கள் செய்யாமல் பரிசுத்தமுள்ளவர்களாக, உம்மை தரிசிக்கிறவர்களாக எங்களை மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, விண்ணப்பத்தை கேட்பவரே, மாம்சமான யாவரும் உம்முடைய தயவிற்காக உம்மிடத்தில் வருவார்களே, தயவாய் செவி சாய்த்து எங்கள் விண்ணப்பங்களை கேட்டு பதில் தருவீராக.
.
சகோதரன் ஆல்பர்ட் அவர்களின் மகன் கெவின் வரும் மார்ச் மாதம் 12ஆவது பரிட்சை எழுதப்போவதால், அவனுக்கு நல்ல ஞானத்தையும், ஞாபகசக்தியும் கொடுத்து, பரிட்சை நன்கு எழுத கிருபை செய்வீராக. நல்ல மதிப்பெண்கள் பெற்று உமக்கு சாட்சியாக வாழ கிருபை செய்யும்.
.
சகோதரி சசிபிரியாவின் தோழி மலர்விழி எழுதியிருக்கிற ரெயில்வே பரிட்சையில் தேர்வு செய்யப்படவும், அதன் மூலம் பிரச்சனைகள் மாறவும், கர்த்தரை அறிந்து அவருக்குள் வளரவும் தேவன் கிருபை செய்யும்படி ஜெபிக்கிறோம்.
.
சகோதரன் சாமிநாதன் அவர்களின் குடும்பம் இரட்சிக்கப்படும்படியாக ஜெபிக்கிறோம். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று வாக்குதத்தம் இவருடைய குடும்பத்தில் நிறைவேறும்படியாக ஜெபிக்கிறோம்.
.
சகோதரி அனிதா அவர்களின் கடன் பிரச்சனைகளை தேவன் அதிசயவிதமாய் அடைக்கும்படியாக ஜெபிக்கிறோம். அவர்களுடைய கணவர் இரட்சிக்கப்படும்படியாக ஜெபிக்கிறோம். அவர்களது தேவைகளை சந்திக்கும்படியாகவும், வறட்சி நிலை மாறி, செழிப்பை கட்டளையிடும்படியாகவும் ஜெபிக்கிறோம். அவர்களுடைய தகப்பனாரும், சகோதரனும் சமாதானமாய் வாழும்படியாகவும், அந்த குடும்பத்தில் தேவ ஆசீர்வாதம் இறங்கவும் ஜெபிக்கிறோம்.
.
சகோதரி ஹேமா கோபி அவர்களின் முழுக்குடும்பமும் இரட்சிக்கப்படும்படியாக ஜெபிக்கிறோம். அவர்களுடைய கர்ப்பிணியாக இருக்கும் சகோதரி கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டிருப்பதால், தேவன் தாமே அவர்களை தொட்டு சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம். சகோதரியின் குடும்பத்தை தேவன் ஆசீர்வதிப்பீராக. அவர்கள் வீடு ஒன்று கட்ட ஆரம்பித்து, பணப்பற்றாக்குறையினால் பாதியில் நின்றுபோயிருப்பதால், தேவைகளை சந்திக்கும் தேவன் அவர்களுடைய பணத்தேவைகளை சந்தித்து, அந்த வீடு சீக்கிரமாய் கட்டி முடிக்கப்பட கிருபை செய்யும்.
.
அன்பின் பரலோக தகப்பனே, அநேக புறஜாதியான சகோதர சகோதரிகள் கர்த்தரை ஏற்றுக் கொண்டு, தங்களைப் போல தங்கள் குடும்பத்தினரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்று கேட்டிருப்பதால், தேவன் பின்மாரியை இந்த குடும்பங்களில் ஊற்றுவீராக. அவர்களது விருப்பத்தின்படி அவர்கள் அனைவரின் முழுக்குடும்பங்களையும் இரட்சிப்புக்கு நேராக வழிநடத்துவீராக. அவர்களின் இருதய வாஞ்சைகளை நிறைவேற்றுவீராக. எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.


...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.