Friends Tamil Chat

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

30th Sept 2014 - நம் மேல் விழுந்த கடமை

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 செப்டம்பர் மாதம் 30-ம் தேதி - செவ்வாய்க்கிழமை
நம் மேல் விழுந்த கடமை
................

சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. - (1கொரிந்தியர் 9:16).

.

மோட்ச பிரயாணம் என்ற புத்தகத்தை அறியாத கிறிஸ்தவர்கள் யாரும் இருக்க முடியாது. அதனை எழுதியவர் ஜான் பனியன் என்பவர் ஆவார். வேத புத்தகத்திறகு அடுத்தபடியாக 130க்கும் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகம் இதுவே ஆகும். அவர் அப்புத்தகத்தை எப்படி எங்கு எவ்வாறு எழுதினார் என்ற தகவலை அறிந்தோமானால், ஆச்சரியமாக இருக்கும். அவரது வாழ்க்கை குறிப்புகள் நம் கிறிஸ்தவ வாழ்விற்கும் அதிக பிரயோஜனமாயிருககும்.

.

இங்கிலாந்தில் கிறிஸ்தவரல்லாத குடும்பத்தில் பிறந்த இவர் தனது சிறு வயதிலிருந்தே தனது மூதாதையரின் தொழிலான பாத்திரங்களை பழுது பார்த்து விற்பனை செய்யும் தொழிலை தந்தையுடன் சேர்ந்து செய்து வந்தார். குடும்பத்தின் ஏழ்மை நிலையால் பள்ளிப்படிப்பை கூட பாதியிலேயே விட வேண்டியதாயிற்று. இளம் பிரயாத்தில் தீய மனிதனாக வாழ்ந்தார். நிம்மதியற்ற பனியன் 16 வயதில் இராணுவத்தில் சேர்ந்தார். ஒரு முறை அரசின் ஆணைப்படி போருக்கு செல்ல உத்தரவிடப்பட்டார்; ஆனால் கடைசி நேரத்தில் இவருக்கு பதிலாக வேறொருவர் அனுப்பப்பட்டார். அந்த நபர் போரின் முதல நாளிலேயே போரில் மரணமடைந்தார். இந்த நிகழ்ச்சி இவரை சித்திக்க வைத்தது. மயிரிழையில் தன் உயிர் தப்பினது ஏனோ? என்று யோசித்து நல்லவனாக வாழ விரும்பினார். ஆனால் அது முடியவில்லை. இரண்டு ஆண்டுகளில் வீடும் திரும்பினார்.

.

19 வயதில் ஒரு கிறிஸ்தவ பெண்ணை மணமுடித்தார். மனைவி அடிக்கடி கிறிஸ்துவை பற்றி கூறியும் அவர் ஆண்டவரை ஏற்க மனமற்றவராகவே இருந்தார். இந்நிலையில் ஒருநாள் தெருவில் பாத்திரம் ரிப்பேர் செய்யும் மூன்று பெண்கள் இயேசுவை பற்றி கூறி கொண்டிருப்பதை கேட்டு தன்னை முற்றிலும் கிறிஸ்துவுக்கு ஒப்பு கொடுத்தார். ஆண்டவரை ஏற்று கொண்ட கொஞ்ச நாட்களிலேயே அவரது மனைவி இறந்து போனார். தனது வாழ்வை முற்றிலும் ஆண்டவருக்கு அர்ப்பணித்து, அவருக்காக தன்னால் இயன்றதை செய்ய முன் வந்தார். பாத்திரங்களை ரிப்பேர் பார்க்கும் வீடுகளில் தனது தொழிலை செய்து கொண்டே இயேசுவைப் பற்றி அறிவிக்க ஆரம்பித்தார்.

.

அக்காலத்தில் இங்கிலாந்தில் போதகர் தவிர யாரும் சுவிசேஷத்தை பிரசங்கிக்க கூடாது என்ற சட்டம் இருந்தது. ஆனால் வேதத்திலுள்ள 'நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள்' என்ற வசனத்திற்கு கீழ்ப்படிவதே உத்தமம் என உணர்ந்து, சுவிசேஷத்தை தைரியமாய் பிரசங்கித்தார். ஆகவே சட்டத்தை மீறிய குற்றத்திற்காக நீதிபதி முன் நிறுத்தப்பட்டார். 'இனி சுவிசேஷம் அறிவிக்கமாட்டேன் என கூறினால் விடுதலை' என்றார் நீதிபதி. அப்படி உறுதியளிக்க பனியன் முன்வரவில்லை. உடனே நீதிபதி மூன்று மாதம் சிறை தண்டனை என அறிவித்தார். பனியனோ, மறு நிமிடமே 'இன்று நான் விடுவிக்கப்படாமல் தேவ உதவியால் நாளை பிரசங்கிப்பேன்' என்றார். அதனால் மூன்று மாத சிறை தண்டனை பன்னிரண்டு வருடங்களாக நீடித்தது.

.

அதிக அழுக்கு நிறைந்த சிறிய அறையில் 50 பேருடன் தங்க வேண்யதாயிருந்தது. மங்கலான் வெளிச்சம், துஷ்டர்கள், சுகாதாரமற்ற நிலை இந்த நிலையில் தான் மோடச பிரயாணம் புத்தகத்தை எழுதினார். சற்று யோசித்து பாருங்கள், சிறிய அறைக்குள், 50 பேரின் பேச்சு, சத்தம் தொட்டதற்கெல்லாம் குற்றம் சொhல்லி அடிக்க வரும் துஷ்டர்கள் மத்தியில் ஒரு பெரிய புத்தகத்தை எழுதினார். அவர் பிறப்பிலே கிறிஸ்தவரல்ல, படித்தவரல்ல, அவருக்கு தெரிந்தது ஓட்டை விழுந்த பாத்திரத்தை ஈயம் கொண்டு அடைப்பது மட்டுமே. தேவன் இவரது சாமர்த்தியத்தை பார்க்கவில்லை, அர்ப்பணத்தை பார்த்தார். நாற்மெடுக்கும் அறையில் உலகிற்கே மண்ம் வீசும் மோட்ச பிரயாணத்தை எழுதினார்.

.

தேவன் உங்களுக்கு கொடுத்து சிறிய பொறுப்பை நிறைவேற்ற இன்று உங்களுக்கு எத்தனை சௌகரியங்கள் உண்டு? அத்தனை பாடுகள் அசௌகரியங்கள் மத்தியிலும் உலகமே போற்றத்தக்கதான ஒரு புத்தகத்தை, ஒரு ஜான் பனியனால் எழுத முடியும் என்றால், உங்களால் எத்தனை காரியங்களை தேவனுக்காக செய்ய முடியும்! உங்கள் இருதயத்தில் கர்த்தருக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற வாஞ்சை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தால், எந்த சூழ்நிலையிலும் நீங்கள் அவருக்காக எதையும் செய்ய முடியும் என்பதற்கு அவரே சான்றாக இருக்கிறார். நம்மால் இயன்றதை கர்த்தருடைய நாம மகிமைக்காக செய்வோமா? சுவிசேஷத்தை பிரசங்கிப்பது நம்மேல் விழுந்த கடமை என்று பவுல் அப்போஸ்தலன் சொல்கிறாரே, அதை நம் கடமையாக எடுத்து ஏதாவது ஒரு வகையில் நாம் கர்த்தருக்காக காரியங்களை செய்வோமா? இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது என்று சொன்னவர் சீக்கிரம் வருகிறார். அவர் வருகைக்குள் நம்மால் இயன்றதை செய்து, அவருடைய கரத்தினால் நல்ல பலனை பெறுவோமா?

.

ஒருவரும் கிரியை செய்ய இயலா

இருண்ட இராக்காலம் எதிர்படுமுன்

ஏகோபித்து எழும்பிடுவோம்

இயேசுவின் சததியம் சாற்றிடவே

இயேசுவுக்காய் தொண்டு செய்திடவே

ஏகமாய் எழும்பிடுவீர் சபையே

நாசமின் நானிலத்தில் வருதே

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நாங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் உம்மை குறித்து நாங்கள் மற்றவர்களுக்கு சொல்ல எங்களுக்கு உதவி செய்யும். சுவிசேஷத்தை அறிவிப்பது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறபடியால் என்னால் இயன்றதை கர்த்தருக்காக செய்ய என்னை உற்சாகப்படுத்தும். கிருபையின் வாசல் அடைபடுகின்ற காலத்திற்குள் நாங்கள் கடந்து சென்று கொண்டிருப்பதால், ஒருவரும் கிரியை செய்ய கூடாத இருண்ட காலம் வரப்போகிறபடியால், கிடைக்கும் இந்த தருணத்தில் தானே உமக்காக உழைக்க எனக்கும் எங்களுக்கும் கிருபை தருவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 29 செப்டம்பர், 2014

29th Sept., 2014 - சுகமளிக்கும் ஆண்டவர்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 செப்டம்பர் மாதம் 29-ம் தேதி - திங்கட் கிழமை
சுகமளிக்கும் ஆண்டவர்
..............

பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். - (3 யோவான் 1:2).

.

அது ஒரு கன்வென்ஷன் கூட்டம். ஸ்மித் விகிள்ஸ்வொர்த்த என்ற ஊழியர் செய்தியை பகிர்ந்து கொண்டார். கூட்டம் முடிந்தது. மக்கள் தங்கள் விடுகளை நோக்கி நடக்கலாயினர். சுமார் 15 பேர் தங்களுக்கு சுகம் பெற வேண்டி ஸ்மித்திடம்; ஜெபிக்க முன்வந்தனர். அதில் ஒருவர் இரு கைகளிலும் ஊன்று கோலுடன் வந்து நின்றார். அவர் மேல் கைகளை வைத்து ஸ்மித் ஜெபிக்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்? ஊனமுற்றவர் தன் ஊன்று கோல்களை எறிந்து விட்டு துள்ளி குதித்தார். ஸ்மித்தால் நம்பவே முடியவில்லை. ஸ்மித்தை தேவன் பயன்படுத்த ஆரம்பித்தார். ஏராளம் ஏராளமான அற்புதங்கள் நடைபெற்றன. உயிருக்கு போராடி கொண்டிருந்தவாக்ள மீண்டும் புத்துயிர்; பெற்றனர். பிணியாளிகளின் கைகளில் எண்ணெய் பூசி ஜெபித்தவுடன் சுகம் பெற்றனர். ஆதி அப்போஸ்தலர் காலத்தில் நடந்தது போலவே அற்புதங்கள் அவர் மூலம் நடைபெற்றன.

.

ஆம் அன்று இயேசு வாழ்ந்தபோது மட்டுமல்ல, இன்னும் அவர் அதே வல்லமையோடு செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறார். அன்று அவரிடம் வந்தவர்கள், அவரது வஸ்திர தொங்கலை தொட்டவர்கள், அவர் கைப்பட்டவர்கள் என அனைவரும் சுகம் பெற்று சென்றனர். அன்றுள்ள அவரது வல்லமை இன்றும் குறைந்து போகவில்லை. அவரது மகிமையும் மாறவில்லை. ஆனால் தன்னை நாடி வந்தவர்களிடம் அவர் ஒரு காரியத்தை எதிர்பபார்த்தார். ஆம் அவர்களிடம் விசுவாசத்தை எதிர்ப்பார்த்தார். விசுவாசித்த அனைவரும் வியாதியிலிருந்து விடுதலையாகினர். சரீரத்தில் மாத்திரமல்ல, ஆத்துமாவிலும் விடுதலை பெற்றனர். சுகம் பெற்றவுடன் மீண்டும் தங்கள் பழைய வாழ்விற்கு திரும்பாமல், இயேசுவின் அடிச்சுவடிகளை பின்பற்றினர். அவரோடு ஊழியம் செய்ய தங்களை அர்ப்பணித்தனர். புது வாழ்க்கையையே அவர்களுக்கு கொடுத்தார்.

.

இன்றும் சரீரத்தில் வியாதியோடு, தாங்கொண்ணா துயரோடு, என்று எனக்கு விடியால் வரும் என்று கலங்கி தவிக்கிறீர்களோ? இரவெல்லாம் தூக்கமின்றி புரண்டு புரண்டு படுத்து, எப்போது விடியும் என்று காத்து கொண்டிருக்கிறீர்களோ? வியாதியின் கொடுமை உங்களை சலிப்படைய செய்து விட்டதோ? கலங்காதீர்கள், இயேசு உங்களை சுகப்படுத்துவார். உங்களை அற்புத சாட்சியாக நிறுத்த போகிறார். அதற்கு முன் ஒரு விசை உஙக்ளை ஆராய்ந்து பாருங்கள். எனது வியாதிக்கு என் பாவ வாழ்வு காரணமோ, எச்சரிப்பின் சத்தத்தை கேட்டும் மனக்கடினமாய் வாழ்ந்ததினிமித்தம் வந்தததோ, என உங்களை நிதானித்து பாருங்கள். தேவன் உங்கள் உளளத்தில் உணர்த்துவாரென்றால் தேவ சமுகத்தில் உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். புகை, புகையிலை, மதுபானத்தால் உங்கள் சரீரத்தின் சுகம் கெட்டிருக்குமென்றால், அவற்றை விட்டுவிட தீhமானியுங்கள். பின் முழு மனதோடு சுகத்திற்காக மன்றாடுங்கள். தேவன் உங்களை சுகப்படுத்துவார், நீங்கள் அவருக்கு ஊழியம் செய்வீர்கள்.

.

பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் என்ற வசனத்தின்படி உங்கள் ஆத்துமாவாகிய உள்ளான மனிதன் பாவமில்லாமல் பரிசுத்தமாய் வாழும்போது, உங்கள சரீரமும் சுகமாய் வாழும். ஆகவே முதலாவது உங்கள் ஆத்துமா ஆரோக்கியமுள்ளதா என்று பாருங்கள். சரீரத்தைபார்க்கிலும் ஜீவன் விசேஷித்ததல்லவா? இந்த ஆயத்தத்தோடு சுகத்தை எதிர்பாருங்கள். தேவ வல்லமை உஙகளில் வெளிப்படும். நீங்கள் உயிருள்ள சாட்சியாய் வாழ்வீர்கள். ஆமென் அல்லேலூயா!

.

பிரியமானவனே உன் ஆத்துமா

வாழ்வது போல்

நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து

சுகமாயிரு மகனே

.

பிரியமானவளே உன் ஆத்துமா

வாழ்வது போல்

நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து

சுகமாயிரு மகளே

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்திவரும் நல்ல தகப்பனே, இந்த நல்ல நாளுக்காக உம்மை துதிக்கிறோம். இந்த நாளிலும் இயேசுகிறிஸ்துவின் வல்லமையும், மகிமையும், குணமளிக்கும் கிருபைகளும் மாறாதவைகளாக இருப்பதற்காக உம்மை துதிக்கிறோம். இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருப்பதற்காக உம்மை துதிக்கிறோம். இப்போதும் என்னிலே காண்படுகிற எந்த பாவத்தினாலும் என்னிலே குறைகளும் நோய்களும் காணப்படுமானால், இந்த வேளையிலே என்னை உமது சமுகத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் தகப்பனே, வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று என்னையே நான் ஆராய்ந்து பார்க்கிறேன் தகப்பனே, என்னை மன்னியும், எந்த கெட்ட வழக்கங்களையும் நான் விட்டுவிட தீர்மானிக்கிறேன். என்னை சுகமாக்கும். என் வேதனையிலிருந்து என்னை விடுதலையாக்கும். உமக்கென்று சாட்சியாக வாழ கிருபை செய்யும். நீர் அப்படி செய்வதற்காக உமக்கு நன்றி! எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.......

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

இந்த வார வாக்குத்தத்தம் & வேதாகம கேள்விகள் - 27 செப்டம்பர் 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

வேதாகம கேள்வி-பதில் போட்டி

இந்த வார கேள்விகள்:    28th September 2014:

.
1) முப்பத்தேழு வருடம் சிறையிருப்பிற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டு, தான்

    உயிரோடு இருக்கும் நாளெல்லாம் போஜனம் கொடுக்கப்படும்படியாய்

    சொல்லப்பட்ட இராஜாவின் பெயரென்ன?
.

.
2) கண்கள் பிடுங்கப்பட்டு, பிறகு சிறையிலடைக்கப்பட்ட இராஜாவின்

   பெயரென்ன?
.

.
3) அகாஸ்வேரு இராஜாவின் இராஜாங்கத்திலே எந்த யூத சிறைப்பட்டவன்

   வேகமாக பல அதிகாரங்களுக்கு உயர்த்தப்பட்டான்?
.
.

 உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள்


அனுப்பிவைக்கவும்.
.
குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை

                சரியாக எழுதவும். கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா

                என்று எழுதவும். (Mr. - Mrs. -  Miss. - or  Sis. - Bro.)
.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.
.
'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்'
.
1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன?
.
2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்?
.
3) எந்த அதிகாரத்தில்?
.
4) எந்த வசனம் எனக் கூறுங்கள்.........

.

=================================================

இந்த சம்பவம் என்ன?

 ================================================================

கடந்த  வார கேள்வி பதில்கள்: 21st September 2014:
.
1) ஆறுதலின் மகன் என்று சொல்லப்படுவது யார்?
.
சரியான விடை;  பர்னபா  -  அப்போஸ்தலர் 4 :36
.
2)  இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்று அழைக்கப்படுவது யார்?
.
சரியான விடை;  நாத்தான்வேல் - யோவான் 1:47.
.
3) இறந்துபோன தன் மனைவியினிமித்தம் துக்கம் கொண்டாட வேண்டாம்

    என்று கர்த்தரால் கட்டளை பெற்ற தீர்க்கதரிசி யார்?
.
சரியான விடை; எசேக்கியல் -  (எசேக்கியல் 24: 15-18)
.

.
வேதாகம படப் போட்டி சரியான பதில் :
.

.
இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப்

போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை

உரிந்துகொண்டு அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.

அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து,

அவனைக்கண்டு, பக்கமாய் விலகிப்போனான். அந்தப்படியே ஒரு

லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய்

விலகிப்போனான். பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில்,

அவனைக் கண்டு, மனதுருகி, கிட்ட வந்து, அவனுடைய காயங்களில்

எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன்

சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப்

பராமரித்தான். மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து,

சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய்

ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை

உனக்குத் தருவேன் என்றான். இப்படியிருக்க, கள்ளர்கையில்

அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு

எப்படித்தோன்றுகிறது என்றார். அதற்கு அவன்: அவனுக்கு

இரக்கஞ்செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும்

போய் அந்தப்படியே செய் என்றார்.
.

.
மூன்று கேள்விகளுக்கும் சரியான பதிலை எழுதியவர்கள் :


வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக,


தொடர்ந்து பங்கு பெறுங்கள்.   வேதத்தின் இரகசியங்களை தேடிக் கண்டு

கொள்வோம்.
.
.

1)  Mrs. Anita Priyakumar.........2)  Sis. M.Vijayarani..........3)  Bro. Gideon
.
4)  Bro. Timmy Theemotheyu...5)  Mrs. Annie Smiley Paules...6)  Mrs. Santhi Justin
.
7)  Bro. Victor Jayakaran..........8)  Sis. Grace Ravi.............9)  Bro. R. Tamilmani
.
10)  Bro. M.Melvin...................11)  Mrs.Kamini David ......12)  Mrs.Ida shakila Joshua
.
13)  Sis. D. Cherine.................14)  Bro. A.Jesus Kumar...15) Bro. Yahweh.G. Samuel
.
16) Sis. Vanitha Esther...........17)  Sis. Jeba Rani............18)   Mrs. Sudha Kirubanandhan
.
19)  சகோதரி சரஸ்வதி.....20)  Sis. K. Selvi................21)  Sis. V. Rajeswari @ Deborah
.
22)  Bro.G.Johnson............3)  Bro. L. Samuel George.......24)  Mrs.Chandralekha Martin
.
25)  Mrs. Angel Rajkumar................26)  Sis. Beaulah ..............27)  Bro.Edwin D. Sunder
.
28)  Bro. Hezron Libni I. I.............29)  Bro. Ramakrishnan R....30)  Miss.M.Jasmine Zion
.
31)  Mrs Esther Joseph................32)  Mrs. Hannah  Ezekiel.............33)  Sis. Vincy Vin
.
34)  Mrs. Ida Sujil...............35)  Mrs. Judithara . J................36)  Sis. Sudha Prem. R. K
.
37)  Miss K . Exciba............38)  Ms. Sophia Rupert..............39)  Sis. Celin Michael
.
40)  Miss.J.Sharon Rachel Mahima.....41)  Mrs. M.Amutha Sakthi Victor....42) Bro. Sam
.
43)   Bro. Jaising Prakash......44)  Sis. Uma Anbuselvam.............45)  Ms.B.Bala Subha
.
46)  Sis. S.Beena Lawrence...............47)  Mrs.Ebenezer Edwin.............48)  Bro. Rajesh
.
49)  Sis. Sheela Rajesh.................50)  Bro. R.Silas................51)  Mrs.Benita
.
52)  Sis. D.A. Kanakalin Suji..........53)  Bro. D. John Finny ....54)  Sis, Sobitha Lawrence
.
=================================================

.


இரண்டு கேள்விகளுக்கு சரியான பதிலை எழுதியவர்கள் :
.
1) Sis. Stella Rinola ....... 2) Mrs. Christina Joseph........3)  Pr.Santhoshkumar
.
=================================================

.
வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் :
.
1)  Mrs. Anita Priyakumar .....2)  Sis. M.Vijayarani.................3)  Mr. S.Stalin Kumar
.
4)  Bro. Gideon..........5)  Bro. Timmy Theemotheyu..............6)  Mrs. Annie Smiley Paules
.
7)  Mrs. Santhi Justin............8)  Sis. Grace Ravi...................9)  Bro. R. Tamilmani
.
10)  Bro. M.Melvin..............11)  Sis. Stella Rinola ...............12)  Mrs.Kamini David
.
13)  Mrs.Ida shakila Joshua...........14)  Sis. D. Cherine.......15)  Bro. A.Jesus Kumar
.
16)  Bro. Yahweh.G. Samuel...........17)  Sis. Vanitha Esther.........18)  Sis. Jeba Rani 
.
19)  Mrs. Sudha Kirubanandhan............20)  சகோதரி சரஸ்வதி...........21)  Sis. K. Selvi
.
22)  Sis. V. Rajeswari @ Deborah......23)  Bro.G.Johnson......24)  Bro. L. Samuel George.
.
25) Mrs.Chandralekha Martin........26) Mrs. Christina Joseph......27)  Mrs. Angel Rajkumar
.
28)  Mr.Yesu Raja................29)  Sis. Beaulah ...........30)  Bro.Edwin D. Sunder
.
31)  Mrs Esther Joseph..............32)  Mrs. Hannah  Ezekiel.............33)  Sis. Vincy Vin
.
34)  Mrs. Ida Sujil...............35)  Mrs. Judithara . J..................36)  Sis. Sudha Prem. R. K.
.
37)  Miss K . Exciba................38)  Ms. Sophia Rupert...............39)  Sis. Celin Michael
.
40)  Miss.J.Sharon Rachel Mahima..................41)  Mrs. M.Amutha Sakthi Victor..........
.
42)  Bro. Jaising Prakash................43)  Bro. Sam.............44)  Sis. Uma Anbuselvam
.
45)  Ms.B.Bala Subha..........46)  Sis. S.Beena Lawrence......47)  Mrs.Ebenezer Edwin
.
48)  Bro. Rajesh..............49)  Sis. Sheela Rajesh................50)  Bro. R-Silas
.
51)  Mrs.Benita...............52)  Sis. D.A. Kanakalin Suji.........53)  Pr.Santhoshkumar
.
54)  Bro. D. John Finny...............55)  Sis. Sobitha Lawrence..........

.

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

 

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

26th Sept 2014 - திருப்தியுள்ள வாழ்வு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 செப்டம்பர் மாதம் 26-ம் தேதி - வெள்ளிக்கிழமை
திருப்தியுள்ள வாழ்வு
..................

நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. - (எபிரேயர் 13:5).

.

பழங்காலத்து கதை ஒன்று உண்டு. ஒரு சேவலும், ஒரு எலியும், ஒரு முயலும் நண்பர்களாக ஒற்றுமையாக ஒரு வீட்டில் வசித்து வந்தன. அவை தங்கள் வேலைகளை சரியாக பங்கிட்டு, எந்த பிரச்சனையும் இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. சேவல், காட்டிற்கு சென்று, விறகுகளை பொறுக்கி கொண்டு வந்தும், எலி; பக்கத்திலிருந்த ஓடையில் தண்ணீரை கொண்டு வந்தும், முயலானது சமைத்தும் தங்கள் வேலையை ஒழுங்காக செய்து வந்தன.

.

ஒரு நாள் சேவல் விறகுகளை பொறுக்கி கொண்டு இருந்தபோது, ஒரு காகம் அதனிடம் வந்து, நீ என்ன செய்கிறாய் என்று கேட்டது. அப்போது சேவல் தான் செய்து வருகிற வேலையை சொன்னபோது, அந்த காகம், 'இது சரியே யில்லை, நீ பாவம் எத்தனை கடினமான வேலையை செய்கிறாய், மற்ற இருவரும் சுகமாக இலகுவான தங்கள் வேலைகளை செய்து வருகிறார்கள், நீ பாவம் உன்னை அவர்கள் ஏமாற்றுகிறார்கள்' என்று அதனிடம் மூட்டிவிட்டது. சேவல் தன் வேலையை தொடர்ந்தாலும், அதற்கு காகம் கூறின காரியத்தை மறக்க முடியவில்லை, அதை தொடர்ந்து சிந்தித்து, தான் உண்மையாகவே மற்றவர்களை காட்டிலும் அதிகமாக வேலை செய்வதாக நினைத்து, வீட்டிற்கு சென்றவுடன், கண்ணீரும் கம்பலையுமாக " இது அநியாயம், நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்கிறேன், நீங்கள் ஜாலியாக சின்ன சின்ன வேலைகளை செய்கிறீர்கள், எனக்கு தான் கடினமான வேலை, போதும், இனி நான் விறகு பொறுக்க போக மாட்டேன்" என்று கத்தியது.

.

அதிருப்தியும் கோபமும் அங்கு நிலவ ஆரம்பித்தது. முயலும் எலியும் கூட தாங்களும் மிக கடினமாக வேலைகளை செய்வதாகவும், இனி எந்த வேலையும் செய்ய போவதில்லை என்றும் முடிவெடுத்தன. இதற்காக வாதித்து, வாதித்து கடைசியாக ஒரு முடிவெடுத்தன. அதன்படி, சேவல், தண்ணீர் எடுக்கவும், முயல் விறகு பொறுக்கவும் எலி சமைக்கவும் முடிவெடுத்தன.

.

அடுத்த நாள், முயல் குதித்து, குதித்து விறகு பொறுக்க சென்றபோது, ஒரு நரி அதை தொடர்ந்து வந்து, அதன் மேல் பாய்ந்து அதை கொன்று சாப்பிட்டது. சேவல் தண்ணீர் எடுக்க ஓடைக்கு வந்தபோது, அதில் வந்த சுழியில் சிக்கி தண்ணீரில் மூழ்கி போனது, எலி சமைக்கும்போது, அதற்கு எட்டாதபடியால், எக்கி பார்த்தபோது, அதில் விழுந்து மரித்து போனது.

.

திருப்தியில்லாததால், அது அவர்களுடைய சந்தோஷத்தை குலைத்தது மாத்திரமல்ல, அவர்களுடைய வாழ்க்கையையே அழித்து போட்டது.

.

நாம் எல்லாருக்கும் செய்வதற்கென்று ஒரு வேலையை கர்த்தர் கொடுத்திருக்கிறார். அந்த வேலையில் நாம் உண்மையாக உத்தமமாக செய்ய வேண்டும். எந்த வேலையும் மற்ற வேலையை விட பெரிய வேலை கிடையாது. ஒரு மனிதனும் மற்ற மனிதனை விட பெரிய மனிதனும் இல்லை. அவரவருக்கு தேவன் தகுதிக்கேற்ப வேலையை கட்டளையிட்டிருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தை சுத்தப்படுத்துகிற மனிதன் வரவில்லை என்றால் எத்தனை அசொளகரியங்கள்! அவரவர் செய்ய வேண்டிய வேலையை அவரவர் தான் செய்ய வேண்டும். சாதாரண கிளர்க்காக இருந்து கொண்டு மேனேஜர் வேலையை தான் நான் செய்வேன் என்றால், அது நடக்க கூடிய காரியமா? தேவன் கொடுத்திருக்கிற வேலையில் திருப்தியாக இருந்து, அந்த வேலையை உத்தமமாக செய்ய வேண்டும் என்றே தேவன் எதிர்ப்பார்க்கிறார். சில வேளைகளில், நமக்கு கீழே வேலை செய்பவர்களுக்கு நம்மை விட அதிகபடியான சம்பளம் கிடைக்கலாம், அதற்காக நாம் நான் கொஞ்ச வேலையை மட்டும் தான் செய்வேன், அவன் என்னை விட அதிக சம்பளம் வாங்குகிறான், அவன் செய்யட்டும் என்று பொறாமையோடு இருந்தோமானால், தேவன் அதில் மகிழ்கிறவரல்ல, அவர் அவனுக்கு அந்த சம்பளத்தை கொடுப்பது அவரது சித்தம். மட்டுமல்ல, நாம் உண்மையாக நம் வேலையில் நேர்மையாக இருக்கும்போது, நமக்கு கிடைக்கும் சொற்ப சம்பளத்தையும் தேவன் ஆசீர்வதிப்பார். அது நிச்சயமாகவே அதிக சம்பளம் வாங்குகிறவனைவிட நிறைவானதாக இருக்கும்.

.

'நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே'. காகத்தை போன்று மற்ற தந்திரமானவர்கள் சொல்லும் காரியங்களுக்கு செவிகொடாதிருங்கள். உங்கள் வேலையிடத்தில் காணப்படும் சந்தோஷமான சூழ்நிலையை மாற்றி நரகமாக்கி கொள்ளாதிருங்கள். கொஞ்சத்திலும் சந்தோஷமாய் அனுபவிக்கிறவர்களாக நிறைவுள்ளவர்களாக வாழ தேவன் தாமே ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக!

.

குறைவுள்ளோனானாலும் கூடவே இருக்கின்றீர்

நிறைவாம் பள்ளத்தாக்கில் மெதுவாக நடத்துகின்றீர்

இறைவனாம் இயேசு எல்லாவற்றிலும்

திருப்தியாக்குகிறீர் திருப்தியாக்குகிறீர்

.

ஓ இயேசு உமதன்பு எத்தனை பெரியது

ஆகாயம் பூமி ஆழி மலைகளுக்கெல்லாம் பெரியது

.

ஜெபம்
எங்கள் கன்மலையும் கோட்டையுமாகிய எங்கள் நல்ல தகப்பனே, நீர் எங்களுக்கென்று கொடுத்திருக்கிற எல்லா ஆசீர்வாதத்திற்காகவும் உமக்கு நன்றி. நாங்கள் கேட்பதற்கும் நினைப்பதற்கும் அதிகமாக எங்களை ஆசீர்வதிக்கிற உம்முடைய கிருபைக்காக உமக்கு நன்றி. நீர் கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களில் நாங்கள் எப்போதும் திருப்தி அடைய கிருபை செய்யும். அதிருப்தியினால் நீர் எங்களுடைய குடும்பங்களிலும், வேலையிடங்களிலும் கொடுத்திருக்கிற சந்தோஷத்தை நாங்கள் கெடுத்து கொள்ளாதபடிக்கும், எங்கள் வாழ்க்கையை அழித்து கொள்ளாதபடிக்கும் கிருபை செய்யும். காகத்தை போன்று சூழ்ச்சியான மனிதர்கள் சொல்லும் வார்த்தைகளுக்கு செவிகொடுக்காதபடிக்கு கிருபை செய்வீராக. உமக்கென்று சாட்சியாக வாழ கிருபை செய்வீராக, எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
குறிப்பு

pray1another

அன்பு வாசகர்களே, வேதாகம கேள்வி - பதில் போட்டி - இன்று கடைசி நாள், பதிலை அனுப்புங்கள்.தேவன் தாமே வானத்தின் பலகணிகளை திறந்து ஆசீர்வதிப்பாராக! ஆமென் அல்லேலூயா!

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 25 செப்டம்பர், 2014

25th Sept 2014 - தெரிந்து கொள்ளப்பட்டு மாற்றப்பட்டவர்கள்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 செப்டம்பர் மாதம் 25-ம் தேதி - வியாழக்கிழமை
தெரிந்து கொள்ளப்பட்டு மாற்றப்பட்டவர்கள்
.................

எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். - (1கொரிந்தியர் 1:26-28).

.

தாவீது ராஜாவின் ஆரம்ப நாட்களில், அந்நாளில் இராஜாவாகவும், தாவீதின் மாமனாராகவும் இருந்த சவுல் அவரை வேட்டையாட வேண்டி அவரை துரத்தும்போது, அவர் தனது உயிருக்கு பயந்து ஒளிந்து கொள்ள வேண்டியிருந்தது. அப்படி தாவீது வனாந்திரங்களிலே ஒளிந்து கொண்டிருந்தபோது, அவரோடு அநேக உண்மையான நண்பர்கள் இணைந்து கொள்ள ஆரம்பித்தார்கள். அந்த நண்பர்கள் வித்தயாசமானவர்கள். அவர்கள் 'ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள்' - (1சாமுவேல் 22:2).

.

உலகத்தால் வெறுக்கப்பட்ட அவர்கள், தாவீதின் கூட சேர்ந்தபோது, அவர்கள் அதிசய விதமாக மாற்றப்பட்டு, தாவீதினுடைய பராக்கிரமசாலிகளாக மாறினார்கள். தாவீது இராஜாவானபோது, அவர்கள் அவருடைய பிரதிநிதிகளாகவும், அவருடைய ராஜ்ஜியத்தில் முக்கிய பதவியில் இருப்பவர்களாகவும் மாறினார்கள்.

.

அன்று தாவீது ராஜாவுடன் இணைந்தவர்களை போல இன்று இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகருடன் நாம் இணைந்திருக்கிறோம். கிறிஸ்து பாவிகளை இரட்சிக்க இந்த உலகத்திற்கு வந்தார். மட்டுமல்ல, அவரிடம் வருகிறவர்கள் இராஜாக்களும், பிரபுக்களும் மாத்திரமல்ல, வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்தவர்கள், பாடுகளை அனுபவித்தவர்கள், பிறரால் புறக்கணிக்கப்பட்டவர்கள், பாவிகளும், துரோகிகளும், உதவியற்றவர்களும், நம்பிக்கையற்றவர்களுமாயிருக்கிறவர்கள். அவர்களை அவர் தமக்கென்று தெரிந்து கொண்டு அவர்களுக்கு இரட்சிப்பின் வஸ்திரத்தை உடுத்துவித்து, தமது நீதியின் சால்வையை தரித்து, தம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பி அவர்களை பராக்கிரமசாலிகளாக மாற்றுகிறார். பரிசுத்தமாக்கப்பட்ட அவர்களே, அவருடைய ஆயிரவருட அரசாட்சியில் அவரோடு கூட ஆளுகை செய்ய போகிறவர்கள். அல்லேலூயா!

.

நம்மை எந்த நிலையிலிருந்து கிறிஸ்து தெரிந்து கொண்டார் என்பதை நாம் அறிவோம். அவர் நம்மை தெரிந்து கொண்டு அவருடைய நண்பர்களாகவும், அவருடன் இணைந்து அவருடைய இராஜ்ஜியத்தை கட்டுகிறவர்களாகவும், தேவன் நம்மை மாற்றியிருக்கிறாரே! நாம் இனி துரத்தப்பட்டவர்கள் இல்லை. நாம் இனி நம்பிக்கையற்றவர்கள் இல்லை, நாம் இனி அற்பமாய் எண்ணப்பட்டவர்கள் இல்லை, நாம் இனி இழிவானவர்கள் இல்லை, நாம் இனி புறக்கணிக்கப்பட்வர்கள் இல்லை. மாறாக, கிறிஸ்துவின் அன்பை மற்றவர்களுக்கு சொல்லும் அவருடைய ஸ்தானாதிபதிகளாக இருக்கிறோம். அவருடைய பலத்த பராக்கிரமசாலிகளாக, சாத்தானை எதிர்த்து போராடுகிறவர்களாக இருக்கிறோம். எத்தனை பெரிய பாக்கியமிது! நம்மை எந்த நிலையிலிருந்து கிறிஸ்து அழைத்தார் என்பதை நாம் மறவாமல், அவருக்கு நன்றியாக ஜீவிப்போம். அவருக்கே மகிமையுண்டாக ஜீவிப்போம். ஆமென் அல்லேலூயா!

.

எப்படி பாடுவேன் நான்

என் இயேசு எனக்கு செய்ததை

ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய்

ஆத்தும ஆதாயம் செய்வேன்

எப்பக்கம் நெருக்கப்பட்டும்

ஒடுங்கி நான் போவதில்லை

இயேசுவின் மார்பினில் சாய்ந்தென்றுமே

அவருக்காய் உழைத்திடுவேன்

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, பாவிகளாய் இருந்த எங்களை பரிசுத்தமாக்கினீரே, தாழ்மையில் இருந்த எங்களை கண்ணோக்கி பார்த்து உயர்த்தினீரே அவை உம்முடைய சுத்த கிருபையல்லவா? ஒன்றுமில்லாதவர்களும், அற்பமாய் எண்ணப்பட்டவர்களுமாகிய எங்களை நீர் தெரிந்து கொண்டு, உம்முடைய அன்பின் குமாரனுடைய ராஜ்ஜியத்திற்கு தகுதிபடுத்தினீரே உமக்கு நன்றி. நாங்கள் ஜீவிக்கும் அளவும், உம்முடைய நாமத்தை மற்றவர்களுக்கு பறைசாற்றுகிறவர்களாக எங்களை மாற்றும். இயேசுகிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியில் எங்களையும் அவரோடு கூட ஆளுகை செய்ய கிருபை செய்ய போகிறீரே அதற்கு பாத்திரவான்களாக எங்களை இப்போதிருந்தே மாற்றுவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 24 செப்டம்பர், 2014

24th Sept 2014 - ஐசுவரிய பெருக்கு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 செப்டம்பர் மாதம் 24-ம் தேதி - புதன் கிழமை
ஐசுவரிய பெருக்கு
................

பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். - (லூக்கா 12:15).

.

உலக பிரசித்தி பெற்ற தேவ ஊழியரான பில்லி கிரகாம் தனது சுய வரலாற்று புத்தகத்தில் ஒர நிகழ்ச்சியை பின்வருமாறு எழுதியிருந்தார்: "உலகிலுள்ள மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக இருந்த ஒரு மனிதர் தனது ஆடம்பரமான பங்களாவிற்கு என்னையும் என் மனைவி ரூத்தையும் மதிய உணவிற்கு அழைத்திருந்தார். எழுபத்தைந்து வயதான அவர் நாங்கள் இருந்த நேரம் முழுவதும் கண்ணீர் சிந்த கூடிய நிலையிலேயே இருந்தார். 'உலகிலுள்ள அனைவரைக் காட்டிலும் மிகுந்த வேதனையுள்ளவனாக நான் இருக்கிறேன், உலகில் நான் எங்கு எந்த இடத்திற்கு போக வேண்டுமென்று விரும்பினாலும் என்னால் அங்கு செல்ல முடியும். எனக்கு சொந்தமாக ஆகாய விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களும் இருக்கின்றன. எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய எல்லா காரியங்களும் என்னிடம் உள்ளன. ஆனால் நான் எப்போதும் நரகத்திலிருப்பதை போலவே உணர்கிறேன்' என்றார். நாங்கள் அவருக்காக ஜெபித்து விட்டு கடந்து வந்தோம்.

.

அன்று மதியம் அப்பகுதியிலுள்ள 70 வயது நிரம்பிய போதகர் ஒருவரை சந்தித்தோம். அவர் உற்சாகத்தினாலும், கிறிஸ்துவின் மேலும், பிறரின் மேலும் கொண்டிருந்த அன்பினாலும் நிறைந்திருந்தார். அவர், 'என்னுடைய பெயரில் இரண்டு பவுண் நாணயங்கள் கூட இல்லை. ஆனால் நான் மிகுந்த மகிழ்ச்சியோடிருக்கிறேன்' என்றார். அவர் எங்களை விட்டுசென்ற பிறகு, 'இவ்விருவரில் அதிக ஐசுவரியமுளள்வர் யார்' என்று நான் ரூத்திடம் கேட்டேன். எங்களிருவருக்கும் அதற்குரிய விடை தெரியும்" என்று எழுதியிருந்தார்.

.

பிரியமானவர்களே, நாம் பல ஆசீர்வாதங்களை பெற்றிருப்பவாகளாக வாழலாம். ஆனால் நமது வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதாக இருப்பதே மெய்யான ஆசீர்வாதமாகும். வேதத்திலே சாலமோன் ராஜாவின் வாழ்வில் ஏராளமான ஐசுவரியங்களும், ஆசீர்வாதங்களும் நன்மைகளும் காண்பட்டன. அவருடைய வாழ்விலிருந்த செழிப்பு கொஞ்சம் நஞ்சம் அல்ல. ஆனால் அவர் வாழ்வை குறித்து சொன்னது, 'எல்லாம் மாயையும் மனதுக்கு சஞ்சலமுமாயிருக்கிறது' என்பதே. அவர் தங்க தட்டில் சாப்பிடும் அளவிற்கு ஐசுவரியத்தை பெற்றிருந்த போதிலும் விரக்தியுள்ள வாழ்க்கையையே வாழ்ந்து முடித்தார்.

.

பணம், பொருள், புகழ், ஆஸ்தி, அந்தஸ்து இவைகளையே உலக மக்கள் ஆசீர்வாதமென நாடி தேடுகின்றனர். ஆனால் உண்மையான ஐசுவரியம் என்பது நமக்கு வெளியே என்னென்ன செழிப்புகள் இருக்கிறது என்பதல்ல, நமக்குள்ளே இருதயத்தில் காணப்படும் சந்தோஷம், நிறைவு திருப்தி, நற்குணம் இவையே உண்மையான ஆசீர்வாதங்களாகும். ஒருவரது செழிப்பான வாழ்வை மற்றவர் பார்க்கும்போது பசுமையான புல்வெளி போல தோன்றும், ஆனால் அது உண்மையல்ல, 'ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல' என்று இயேசுகிறிஸ்து கூறினார்.

.

கிறிஸ்துவை ஏற்று கொண்ட ஒவ்வொருவருக்கும், தேவன் காட்டும் வழி, உலகப்பிரகாரமான ஆஸ்தியும், மேன்மையும் புகழும், அந்தஸ்தும் அல்ல, 'இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்' (மத்தேயு 6:32-33) என்று இயேசுகிறிஸ்து கூறினார். நம் வாழ்வில் தேவனுடைய ராஜ்ஜியத்தை தேடும்போது, அவர் நமக்கு கொடுக்கும் சந்தோஷம், மன நிறைவு, சமாதான வாழ்வு நிறைவான அமைதி வேறு எவற்றாலும், யாராலும் தர முடியாது. அதுவே மெய்யான ஆசீர்வாதமாகும். கர்த்தர் தரும் ஐசுவரியத்தில் வேதனை இருக்காது. கண்ணீர் இருக்காது, துயரம் இருக்காது. பில்லிகிரகாம் சந்தித்த ஐசுவரியவானிடம் ஐசுவரியம் இருந்தது, பொருள் இருந்தது, ஆனால், அதோடு கூட வேதனையும், கண்ணீரும் இருந்தது. ஏனெனில் அது தேவனில்லாத ஆசீர்வாதம். 'கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்' (நீதிமொழிகள் 10:22) என்று வேதம் கூறுகிறது. முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடும்போது, நிச்சயமாகவே தேவன் வேதனையில்லாத ஆசீர்வாதத்தை கட்டளையிடுவார். ஆமென் அல்லேலூயா!

.

நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போது

நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு

பணங்கொள்ளா போராசீர்வாதத்தை பார் பரலோக

பொக்கிஷமும் வீடும் பார்

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள்

கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்

ஆசீர்வாதம் எண்ணு ஒவ்வொன்றாய்

கர்த்தர் செய்த யாவும் வியப்பை தரும்

.
ஜெபம்
எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த புதிய மாதத்திற்குள் நாங்கள் காலடி எடுத்து வைக்க கிருபை பாராட்டினீரே உமக்கு நன்றி. கடந்த எட்டு மாதங்களும் எங்களை கண்ணின் மணிப்போல காத்து வந்தீரே உமக்கு நன்றி ஐயா. நாங்கள் உலகத்தின் ஐசுவரியத்தை நாடி தேடுகிறவர்களாக இல்லாமல், தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடி உம்மிடத்திலிருந்து வரும் ஆசீர்வாதத்தை பெற்று கொள்ள கிருபை செய்வீராக. இந்நாட்களில் மனிதன் எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று எத்தனையோ நூதன வழிகளை நாடி தேடினாலும், கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும், அதனோடே அவர் வேதனையை கூட்டார் என்ற பொன் வார்த்தைகளை மறந்ததினால், வேதனையையும், கண்ணீரையும் சேர்த்து வாழ்ந்து கொண்டிருக்கிற பரிதாபமான வாழ்க்கையை தேவரீர் காண்கிறீரே, உண்மையான ஆசீர்வாதத்தை ஒவ்வொருவரும் பெற்று கொள்ள தேவன் கிருபை செய்வீராக. ஐசுவரிய பெருக்கு ஒரு நாளும் அவனுக்கு ஜீவனல்ல என்பதை உணர்ந்து, ஐசுவரியத்தை அல்ல, அதை தருகிற தேவனாகிய உம்மையே நோக்கி பார்க்க கிருபை செய்யும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.......

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.