Friends Tamil Chat

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

28th Feb 2014 - எச்சரிப்பின் பிரசங்கம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 பிப்ரவரி மாதம் 28-ம் தேதி – வெள்ளிக்கிழமை
எச்சரிப்பின் பிரசங்கம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன். - (1 இராஜாக்கள் 22:14).

.

அமெரிக்க தேவ ஆலய ஆராதனையில் நடைபெற்ற உண்மை சம்பவம் இது. ஜெபத்தோடு ஆலய ஆராதனை ஆரம்பமானது. தேவ செய்தியை கொடுக்கும்படி தேவ ஊழியர் பீட்டர் கார்ட்ரைட் என்பவர் பிரசங்க பீடத்தில் அமர்ந்திருந்தார். பிரசங்கித்திற்கு முன்பாக பாடி கொண்டிருந்த வேளையில் அந்நாளில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆண்ட்ரூ ஜாக்ஸன் அவர்கள் ஆலயத்தின் நாற்காலியில் வந்து அமர்ந்தார்.

.

இதை கண்ட ஆலய போதகர் மெதுவாக பிரசங்கியாரிடம் சென்று, 'ஜனாதிபதி அவர்கள் வந்து அமர்ந்திருக்கிறார். அவர் சங்கடப்படும்படி எதையும் சொல்லிவிடாதபடி பார்த்து கொள்ளுங்கள்' என்று எச்சரித்து சென்றார், அன்று மனம் திரும்புதலை குறித்து பேசிய பிரசங்கியார், 'எல்லாரும் மனம் திரும்புங்கள், ஜனாதிபதியாயிருந்தாலும் சரி, வேறு எவராக இருந்தாலும் சரி, மனம் திரும்பாத மனிதனுக்கு அழிவு வருவது நிச்சயம்' என்று எச்சரித்தார். ஆலய போதகர் நடுநடுங்கி போனார். பிரசங்கத்தை கேட்ட ஜனாதிபதி, ஆராதனை முடிந்ததும், கார்ட்ரைட்டை தேடி சென்று, அவர் மூலம் கர்த்தர் கொடுத்த செய்திக்காக நன்றி கூறினார். தேவனுடைய சத்தியத்தை சத்தியமாகவே தெளிவாக தைரியமாக கார்ட்ரைட் பேசியதன் மூலம் ஜனாதிபதி ஆண்ட்ரூ ஜாக்சன் அவர்கள் கிறிஸ்து இயேசுவின் இரட்சிப்புக்கு நேராய் வழிநடத்தப்பட்டார்.

.

புதிய ஏற்பாட்டில் கர்த்தருடைய வழியை ஆயத்தப்படுத்திய யோவானஸ்நானகனின் வனாந்திர பிரசங்கம் அநேகரை எச்சரித்து மனம் திரும்பதலுக்கு நேராய் நடத்தியது. பதவிகள் மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்கள், ஏன் தேச தலைவர்களையும் யோவான் ஸ்நானகனின் பிரசங்கம் அசைத்தது (லூக்காக 3:6-14). பாவத்தை கண்டித்து உணர்த்தும் பிரசங்கத்தில் மனுஷர்களுக்காக சிறிதும் முகதாட்சண்யம் பாராதவராய் தேவனுக்கேற்கும் விதத்தில் தெளிவாக பிரசங்கித்தார்.

.

கர்த்தராகிய இயேசுவும் எருசலேமின் தேவாலயத்தில் காணப்பட்ட அருவருப்புகளை கண்டு மென்மையாக அல்ல, சவுக்கை கையில் எடுத்து கொண்டு வேத வசனத்தின் உதவியோடு கடுமையாக சாடி பிரசங்கித்தார்.

.

இன்றைய நாட்களில் எச்சரிப்பின் செய்திகளை நம் திருச்சபைகளில் கேட்பது மிக அரிதாகி விட்டது. அப்படியே ஒரு போதகர் வேத வசனத்தை வைத்து எச்சரித்து பேசினால், என்னை மனதில் வைத்து தான் பேசுகிறார் என்று முகத்தை தூக்கி கொண்டு செல்லும் விசுவாசிகள் ஏராளம் சபைகளில் உண்டு.

.

ஒரு குறிப்பிட்ட சபையில் பிரசங்கி பீடத்தில் 'சுருக்கமாக பிரசங்கிப்பவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் மீண்டும் அழைக்கப்படுவார்கள்' என்று எழுதி வைத்திருந்தார்களாம். வேத வசனத்தை தூரமாக்கி, நடனத்தோடு பாடல்கள், ஆராதனைகள், வெளிநாடு சென்று வந்த சாட்சிகள் என இதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தேவ வார்த்தைகளுக்கு இந்த நாட்களில் கொடுக்கப்படுவது இல்லை.

.

அப்போஸ்தலனாகிய பவுல் தன் உடன் ஊழியர் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது, 'ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று'. - (2 தீமோத்தேயு 4:3-5) என்று கூறி எச்சரித்தார்.

.

லியானோர்ட் ரேவன்ஹில் என்ற ஊழியர் தன்னுடைய புத்தகத்தில் எழுதும்போது, 'என்றும் இல்லாத அளவு இன்றைய நாட்களில் எலியா பவுல், யோவான்ஸ்நானகன் போன்ற நியாயத்தீர்ப்பை எச்சரித்து பேச கூடிய போதகர்களும், ஊழியர்களும் மிக தேவை' என எழுதியுள்ளார். ஏனெனனில் பாவம் நிறைந்த உலகில், திருச்சபையும் அதன் போக்கிலேயே செல்கிறது. ஆகவே இந்த கடைசி காலத்தின் கடைசி நாட்களில் வாழும் நமக்கு தேவனுடைய எச்சரிப்பின் சத்தத்திற்கு செவி கொடுப்போம். நம் சபைகளில் எச்சரிப்பின் வார்த்தைகள் முழங்கத்தக்கதாக ஜெபிப்போம். ஆமென் அல்லேலூயா!

.

கற்று தந்து நடத்துகிறீர்

கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர்

ஆவியானவரே தூய ஆவியானவரே

..

போதிக்கின்றீர் சத்தியங்களை

நினைவூட்டுகின்றீர் வசனங்களை

அனைத்தையும் சொல்லி தருகின்ற

ஆலோசகர் நீர் தானையா

.

ஜெபம்

எங்கள் அன்பின் நேச தகப்பனே, விசுவாசிகளை வரப்போகும் நியாயத்தீர்ப்பை குறித்து எச்சரித்து உணர்த்தும் போதகர்களை ஏராளமாய் எழுப்பும் தகப்பனே. பவுலைப்போலவும், யோவான் ஸ்நானகனை போலவும் தைரியமாக எச்சரித்து உணர்த்த அவர்களுக்கு பெலத்தை தாரும். உம்முடைய வார்த்தைகளுக்கு முழு முக்கியத்துவத்தை கொடுக்கிறவர்களாக மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம் என்று வேத வாக்கியம் உரைக்கிறபடி உமது சித்தத்தின்படி உம்முடைய சமுகத்தில் ஜெபிக்கிறோம் ஐயா. தயவாய் செவி சாய்த்து விண்ணப்பங்களை கேட்பீராக. பதிலை தருவீராக.

.

சகோதரி சித்ரா தேவிக்காக உம்மிடம் ஜெபிக்கிறோம் தகப்பனே, தன்னுடைய குடும்பத்தில் தான் மாத்திரமே புறமதத்திலிருந்து இரட்சிக்கப்பட்டிருப்பதால், முழுக்குடும்பமும் இரட்சிக்கப்பட ஜெபிக்கிறோம். அவர்களுக்கு ஒரு இரட்சிக்கப்பட்ட மகனை துணைவராக கிடைக்க ஜெபிக்கிறோம். அதற்காக கிருபைகளை நீரே சகோதரிக்கு கொடுப்பீராக. அவர்களுடைய இருதய வாஞ்சைகளை நிறைவேற்றும்படியாக ஜெபிக்கிறோம்.

.

சகோதரன் யோகநாதன் மகள் கேசியாகவிற்காக காலேஜில் ரேகிங் நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் ஜெபித்த ஜெபத்தைக் கேட்டு, காலேஜில் ரேகிங் நிறுத்தப்படும் என்ற அறிவிற்பிற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவருடைய சகோதரியின் மகளுடைய இரத்தத்தில் குறைவு காணப்படுகிறபடியால், தேவன் தாமே தொட்டு சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம்.

.

சகோதரி மோனிக்கா புறமதத்திலிருந்து கர்த்தரை ஏற்றுக்கொண்டவர்கள், காலேஜில் படிக்கும்போது ஞானஸ்நானமும் பெற்று கர்த்தருக்குள் வளர்ந்து வருகிற இந்த சகோதரியின் பெற்றோர் இன்னும் இரட்சிக்கப்படாததால், அவர்கள் சகோதரிக்கு புறமதத்திலிருந்து மாப்பிள்ளை பார்த்து, நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்து விட்டபடியால், என்ன செய்வது என்று தவிக்கிற சகோதரிக்கு ஆறுதலை தாரும். ம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே. அந்த சகோதரனையும் இரட்சிப்பீராக. ஜூன் மாதம் நடக்க இருக்கிற திருமணத்திற்குள்ளாக அந்த மகனும் இரட்சிக்கப்படவும், அவர்களுடைய குடும்ப வாழ்க்கை கட்டப்படவும் தேவன் கிருபை செய்வீராக.

.

சகோதரி திவ்யா பாலா அவர்கள் புறமதத்திலிருந்து கர்த்தரை ஏற்றுக் கொண்டவர்கள், அவர்களின் தோழி சங்கீதாவிற்கு 31 வயதாகியும் இன்னும் திருமணம் அமையாததால், தேவன் தாமே இரங்கி ஏற்றத்துணையை அவர்களுக்கு கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். மனம் நொந்து காணப்படுகிற அவர்களுக்கு தேவன் தாமே ஒரு நல்ல இரட்சிக்கப்பட்ட மகனை கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். அவர்களுடைய நண்பர் சசிகுமார் அவர்களுக்கு ஒன்றறை வருடங்களாக எந்த சரியான வேலையும் இல்லாமல் இருக்கிறபடியால்,தேவன் தாமே அவருடைய படிப்பிற்கேற்ற ஒரு நல்ல வேலையைக் கொடுத்து ஆசீர்வதிக்கவும், அவருடைய ஆத்தும இரட்சிப்பிற்காகவும், கர்;த்தரே தேவன் என்பதை அவர் அறிந்துக் கொள்ளவும் ஜெபிக்கிறோம்.

.

சகோதரி பால் இரத்தினம் அவர்களின் தாயார் வயிற்றில் வீக்கம் கண்டு, உதிரப் போக்கும் அதிகமாக இருப்பதால், தேவன் தாமே அவர்களை தொட்டு சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம். நல்ல சுகத்தை கட்டளையிடுவீராக. உதிரப் போக்கு நிற்கவும், வயிற்று வீக்கம் குறையவும் ஜெபிக்கிறோம். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 27 பிப்ரவரி, 2014

27th Feb 2014 - மகா ஞானமுள்ள சிலந்தி

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 பிப்ரவரி மாதம் 27-ம் தேதி - வியாழக் கிழமை
மகா ஞானமுள்ள சிலந்தி
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு... தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே.- (நீதிமொழிகள் 30:24,28).

.
எட்டுக்கால் பூச்சி என்று அழைக்கும் சிலந்தியை நாமெல்லாரும் பார்த்திருக்கின்றோம். இது தனக்கென்று ஒரு வலையைப் பின்னும். இந்த வலையைக் கட்ட தேவையான நூலிழைகளை உண்டுபண்ணும் சுரப்பிகள் அதன் அடி வயிற்றில் இருக்கின்றன. மேலும் தன் வலையில் சிக்கிய பூச்சிகளையே உணவாக உண்ணுகின்றது. ஆனால் ஒரு அதிசயம் பாருங்கள், சிலந்தி தன்னுடைய வலையில் ஒருபோதும் சிக்கி கொள்வதில்லை.
.
இந்த சிறிய எட்டுக்கால் பூச்சிக்குள் இவ்வளவு விஷயமா என்று ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் நேர்த்தியாய் பொறுமையாய் பின்னும் இந்த அழகிய வலையை பின்னி, அவைகள் யாரும் செல்ல முடியாத இராஜ அரண்மனைகளிலும் போய் குடியிருக்கும்.
.
ஒரு பெரிய அரண்மனை இப்போதுதான் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு சிலந்தி அந்த பெரிய அரண்மனையின் முன் நின்று, 'நான் இதற்குள் எப்படி செல்ல முடியும்' என்று நினைத்துக் கொண்டு அங்கேயே நிற்பதில்லை, அல்லது தன்னை ஒரு வில்லாக நினைத்து, அந்த அரண்மனைக்குள் பாய்ந்து செல்வதுமில்லை.
.
மாறாக, தன் கைகளினால், வலையை பின்னி, மெதுவாக நகர்ந்து செல்ல ஆரம்பிக்கிறது. ஒரு வேளை அது நினைத்திருந்தால், இத்தனை பெரிய அரண்மனைக்குள் நான் எப்படி போவது என்று நினைத்திருந்தால் அது அப்படியே இருக்க வேண்டியதுதான். ஆனால் அது நம்பிக்கையை இழக்காமல், மெதுவாக தன் வலையை கொஞ்ச கொஞ்சமாக கட்டி, மேல் நோக்கி செல்ல ஆரம்பிக்கிறது. முடிவில் அது அரண்மனையின் உள்ளே சென்று, தன் வீட்டை கட்டி குடியிருக்க ஆரம்பிக்கிறது.
.
பிரியமானவர்களே, ஒரு வேளை தேவன் நமக்கு ஒரு தரிசனத்தை கொடுத்திருக்கலாம், அல்லது, நம் மேல் வைக்கப்பட்டிருக்கிற பொறுப்பு மிகப்பெரியதாக இருக்கலாம், நாம் 'ஐயோ இதை நான் எப்படி செய்து முடிப்பேன்' என்று நினைத்து அப்படியே உட்கார்ந்திருந்தால், ஒன்றுமே செய்து முடிக்க முடியாமல் போய் விடும். ஆனால் கர்த்தர் மேல் நம்பிக்கையோடு, தேவன் எனக்கு உதவி செய்வார் என்று விசுவாசத்தோடு மெதுவாக நம் செயல்பட ஆரம்பிக்கும்போது, நிச்சயமாகவே அதை செய்து முடிக்க முடியும். 'நிச்சயமாகவே முடிவு உண்டு, உன் நம்பிக்கை வீண்போகாது' என்று வேத வசனம் கூறுகிறதல்லவா?
.
இந்த சிலந்திப்பூச்சி, ஐயோ மனிதர்கள் தங்கள் கால்களால் என்னை மிதித்துப் போடுவார்களே என்று பயப்படுவதில்லை. எத்தனை பெரிய மனிதர்கள் வந்தாலும், பயமே இல்லாமல், தன் கூட்டை கலைத்து விடுவார்கள் என்ற பயமும் இல்லாமல், அது தன் காரியத்தில் கண்ணாக இருந்து வலையை கட்டி முடிக்கிறது.
.
நம்மிடத்தில் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பில் சிறிய காரியத்திலும் நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தால் கர்த்தர் நம்மை அநேகத்தின் பேரில் அதிகாரியாக வைப்பது நிச்சயம்! 'ஐயோ மற்றவர்கள் என்ன சொல்வார்கள், ஒருவேளை என் தரிசனத்தில் குறுக்கே வந்த நிறுத்தி விடுவார்களோ' என்று பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. கர்த்தர் உங்களுக்கு அந்த தரிசனத்தை கொடுத்திருப்பாரென்றால், நீங்கள் அதை செய்து முடிக்க கவனமாக இருந்தால், அந்த தரிசனம் நிறைவேறி முடியும் வரை அவர் உங்களுடனே கூட இருப்பார். உங்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பை தட்டிக் கழிக்காமல், மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று கவலைப்படாமல், கர்த்தருடைய உதவியுடன் உங்கள் மேல் வைக்கப்பட்டுள்ள பொறுப்பை கவனமாய் செய்து முடியுங்கள்.
.
எப்படியாவது வேலை முடிய வேண்டும் என்று அவசரப்பட்டு, குறுக்கு வழிகளில் செல்லாமல், உலக காரியங்களின் மேலும், உலக மக்களின் மேலும் நம் நம்பிக்கையை வைக்காமல், கர்த்தர் மேல் மாத்திரம் நம்பிக்கை வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக,மெதுவாக முன்னேறினாலும், கர்த்தர் அதை வாய்க்க செய்வார். சிலந்தியைப் போல இராஜ அரண்மனைகளில் குடியிருக்க செய்வார்.
.
மகா ஞானமுள்ளவைகளில் ஒன்றாகிய சிலந்தியிடமிருந்து இந்த படிப்பை நாம் கற்றுக் கொண்டு, கர்த்தர் நம்மை நம்பி கொடுத்த பொறுப்பை மகா ஞானமாய், சரியாக செய்து முடிப்போமா? கணக்கு கேட்கும் கர்த்தர் சீக்கிரம் வரப்போகிறார். ஆயத்தமாவோமா? ஆமென் அல்லேலூயா!

.


எந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்று

என்னைப் பிரிக்காது காத்துக் கொண்டார்

என்னை நம்பி அவர் தந்தப் பொறுப்பதனை

அவர் வரும் வரை காத்துக்கொள்வேன்

.
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அக மகிழ்வோம்

இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்

இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்

எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, மகா ஞானமுள்ளது என்று நாங்கள் துரும்பாக நினைக்கிற சிலந்திப்பூச்சியைக் குறித்து வேதத்தில் எழுதப்பட்டிருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். அதனிடத்திலிருந்து நாங்கள் கற்றுக் கொண்டு, நீர் கொடுத்த தரிசனத்தை எந்த பயமுமில்லாமல், செய்து முடிக்க தேவன் கிருபை செய்யப்போவதற்காக உமக்கு நன்றி. நீர் எங்களுக்கு கொடுத்திருக்கிற பொறுப்புகளிலும் நாங்கள் பொறுமையாக செய்து முடிக்க கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம் என்று வேத வாக்கியம் உரைக்கிறபடி உமது சித்தத்தின்படி உம்முடைய சமுகத்தில் ஜெபிக்கிறோம் ஐயா. தயவாய் செவி சாய்த்து விண்ணப்பங்களை கேட்பீராக. பதிலை தருவீராக.

.
சகோதரி சித்ரா தேவிக்காக உம்மிடம் ஜெபிக்கிறோம் தகப்பனே, தன்னுடைய குடும்பத்தில் தான் மாத்திரமே புறமதத்திலிருந்து இரட்சிக்கப்பட்டிருப்பதால், முழுக்குடும்பமும் இரட்சிக்கப்பட ஜெபிக்கிறோம். அவர்களுக்கு ஒரு இரட்சிக்கப்பட்ட மகனை துணைவராக கிடைக்க ஜெபிக்கிறோம். அதற்காக கிருபைகளை நீரே சகோதரிக்கு கொடுப்பீராக. அவர்களுடைய இருதய வாஞ்சைகளை நிறைவேற்றும்படியாக ஜெபிக்கிறோம்.
.
சகோதரன் யோகநாதன் மகள் கேசியாகவிற்காக காலேஜில் ரேகிங் நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் ஜெபித்த ஜெபத்தைக் கேட்டு, காலேஜில் ரேகிங் நிறுத்தப்படும் என்ற அறிவிற்பிற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவருடைய சகோதரியின் மகளுடைய இரத்தத்தில் குறைவு காணப்படுகிறபடியால், தேவன் தாமே தொட்டு சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம்.
.
சகோதரி மோனிக்கா புறமதத்திலிருந்து கர்த்தரை ஏற்றுக்கொண்டவர்கள், காலேஜில் படிக்கும்போது ஞானஸ்நானமும் பெற்று கர்த்தருக்குள் வளர்ந்து வருகிற இந்த சகோதரியின் பெற்றோர் இன்னும் இரட்சிக்கப்படாததால், அவர்கள் சகோதரிக்கு புறமதத்திலிருந்து மாப்பிள்ளை பார்த்து, நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்து விட்டபடியால், என்ன செய்வது என்று தவிக்கிற சகோதரிக்கு ஆறுதலை தாரும். ஊம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே. அந்த சகோதரனையும் இரட்சிப்பீராக. ஜூன் மாதம் நடக்க இருக்கிற திருமணத்திற்குள்ளாக அந்த மகனும் இரட்சிக்கப்படவும், அவர்களுடைய குடும்ப வாழ்க்கை கட்டப்படவும் தேவன் கிருபை செய்வீராக.
.
சகோதரி திவ்யா பாலா அவர்கள் புறமதத்திலிருந்து கர்த்தரை ஏற்றுக் கொண்டவர்கள், அவர்களின் தோழி சங்கீதாவிற்கு 31 வயதாகியும் இன்னும் திருமணம் அமையாததால், தேவன் தாமே இரங்கி ஏற்றத்துணையை அவர்களுக்கு கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். மனம் நொந்து காணப்படுகிற அவர்களுக்கு தேவன் தாமே ஒரு நல்ல இரட்சிக்கப்பட்ட மகனை கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். அவர்களுடைய நண்பர் சசிகுமார் அவர்களுக்கு ஒன்றறை வருடங்களாக எந்த சரியான வேலையும் இல்லாமல் இருக்கிறபடியால்,தேவன் தாமே அவருடைய படிப்பிற்கேற்ற ஒரு நல்ல வேலையைக் கொடுத்து ஆசீர்வதிக்கவும், அவருடைய ஆத்தும இரட்சிப்பிற்காகவும், கர்;த்தரே தேவன் என்பதை அவர் அறிந்துக் கொள்ளவும் ஜெபிக்கிறோம்.
.

சகோதரி பால்இரத்தினம் அவர்களின் தாயார் வயிற்றில் வீக்கம் கண்டு, உதிரப் போக்கும் அதிகமாக இருப்பதால், தேவன் தாமே அவர்களை தொட்டு சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம். நல்ல சுகத்தை கட்டளையிடுவீராக. உதிரப் போக்கு நிற்கவும், வயிற்று வீக்கம் குறையவும் ஜெபிக்கிறோம். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 26 பிப்ரவரி, 2014

26th Feb 2014 - இரட்சகரின் மாற்றிவிடும் தொடுதல் - பாகம் - 2

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 பிப்ரவரி மாதம் 26-ம் தேதி – புதன் கிழமை
இரட்சகரின் மாற்றிவிடும் தொடுதல் - பாகம் - 2
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். - (மாற்கு 1:41-41).

.
நேற்றைய தினத்திலே குஷ்டரோகியான ஒருவன்; கிறிஸ்துவின் முன்னால் வந்து முழங்காற்படியிட்டு, உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டபோது, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அவனை கர்த்தர் தொட்டு சுகப்படுத்தியதை குறித்து பார்த்தோம். தொடர்ந்து இரட்சகர் அவனை தொட்டதால் அவனில் ஏற்பட்ட மாற்றத்தை குறித்து பார்ப்போம்.

.

'இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான்'. அல்லேலூயா! நம் தேவனால் சுகமாக்க முடியாத வியாதி ஒன்றுமே இல்லை. அவர் தொடுதல் அத்தனை வல்லமையுள்ளது. இயேசுகிறிஸ்துவிடம் வந்த எவரும் ஒரு போதும் வந்த வண்ணமாகவே திரும்பி செல்ல முடியாது.

.

இயேசுகிறிஸ்து தொட்ட மாத்திரத்தில் அழுகி நாற்றம் எடுத்து கொண்டிருந்த அவனது தோலும் புண்களும் புது மாற்றத்தை பெற ஆரம்பித்தது. அவனது தோல் சிறு பிள்ளையின் தோல் போல ஒரு சேதமும் இல்லாமல் மாசற்றதாக மாறினது.

.

பிரியமானவர்களே, ஒரு வேளை நமக்கு தொழு நோய் இல்லை என்று சொல்லலாம், ஆனால் பாவம் ஒரு தொழுநோயை போல கர்த்தரிடமிருந்து நம்மை பிரித்து, அசுத்தமாக இருப்பதால், நான் கர்த்தரிடம் வருவதற்கு தகுதியில்லாதவன், அல்லது இல்லாதவள் என்று நம்மை நாமே கர்த்தரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? தம்மிடத்தில் வந்த ஒருவரையும் புறம்பே தள்ளாத நேசர் மனதுருக்கம் உள்ளவராய், எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு என்று நம் பாவ நோயை தொட்டு சுகப்படுத்துவார். அவர் தொடும்போது நாற்றம் எடுத்தது போன்ற நமது பாவ வாழ்க்கை புதியதாக மாறிவிடும். 'இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின' - (2கொரிந்தியர் 5:17) என்ற வசனத்தின்படி புது சிருஷ்டியாய் மாறிவிடுவோம். பழைய நாற்றமெடுத்த வாழ்க்கை மாறி, எல்லாமே புதிதாக மாறிவிடும். அல்லேலூயா!

.

கிறிஸ்துவால் மன்னிக்க முடியாத பாவம் எதுவுமே இல்லை. அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் வல்லமையுள்ளது. ஆமென். அவர் சுத்தமாக்கியதை யாராலும் அசுத்தம் என்று தள்ளிவிட முடியாது. பாவத்திலிருந்து விடுதலை தரும் ஒரே தெய்வம் இயேசுகிறிஸ்து மாத்திரமே! அவரிடத்தில் விசுவாசத்தோடு வந்து, 'ஐயா என்னை சுத்தப்படுத்தும்' என்று கேட்கும்போது, நிச்சயமாகவே தமது இரத்தத்தால் நம்மை கழுவி, நம்மை சுத்தப்படுத்தி, நித்திய ஜீவனை நமக்கு கொடுத்து, நம்மை பரலோக ராஜ்யத்திற்கு தகுதியாக்குவார். ஆமென் அல்லேலூயா!

.

'அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார்'. அவர் ஏன் அவனை உடனே அனுப்பிவிட்டார் என்றால், இந்த அற்புதத்தை காணும் மக்கள், அவரை அற்புதம் செய்கிறவராகவே பார்ப்பார்களே ஒழிய இராஜ்யத்தின் சுவிசேஷத்தை கேட்கிறவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதே. அவர் எங்கு சென்றாலும் அவரை சுகமளிக்கிறவராக காண்பார்களே ஒழிய, அவர் இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தை உணர மாட்டார்கள். இந்த நாளின் சுவிசேஷகருக்கும் அவருக்கும் தான் எத்தனை வித்தியாசம்! இந்த நாட்களில் ஏதோ ஒரு அற்புதம் நடந்து விட்டால்தான் எத்தனை எத்தனை பிரசித்தப்படுத்துதல், விளம்பரங்கள்!! ஒவ்வொரு முறையும் அதை கூட்டத்தில் சொல்லி, தங்களை உயர்த்தி காண்பிக்கும் தன்மைகள்!!

.

அந்த மனிதனிடம் கர்த்தர் வெளியே சொல்ல வேண்டாம் என்றாலும் அவன் கேட்காமல், 'அவனோ புறப்பட்டுப் போய், இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்' என்று பார்க்கிறோம். ஆம், கர்த்தர் ஒருவனுடைய வாழ்வை தொடும்போதுதான் அது எத்தனை எத்தனை சந்தோஷத்தை அவன் வாழ்வில் கொண்டு வருகிறது! அவனால் சும்மா இருக்க முடியாது. என் தேவன் எனக்கு செய்த அற்புதத்தை பாருங்கள் என்று அவன் துள்ளி குதித்து, கர்த்தரை பிரசித்தம் செய்கிறவனாக மாறி விடுவான். முதலில் தீட்டு தீட்டு என்று கதறினவன், இப்போது நான் சுத்தமானேன், சுத்தமானேன் என்று சந்தோஷமாய் கூற தொடங்கி விடுவான். அல்லேலூயா!

.

இது போன்ற புதிதாக்கப்பட்ட, நம் வாழ்க்கையை மாற்றிவிடும் கிறிஸ்துவின் மனதுருக்கமான தொடுதலுக்கு நம்மை அர்ப்பணிப்போமா? அந்த குஷ்டரோகி எத்தனை அசுத்தமானவனாக இருந்திருந்தாலும் அவன் வாழ்க்கையில் ஒரு அற்புதமான புது மாற்றம் ஏற்பட்டது போல கர்த்தரிடம் வரும் ஒவ்வொரு பாவியின் வாழ்விலும், அது எப்பேற்பட்ட அசுத்தமாய் இருந்தாலும் கர்த்தர் தமது பரிசுத்த வல்லமையுள்ள இரத்தத்தால் கழுவி நம்மை சுத்திகரித்து, நம்மை புதியவர்களாக மாற்றி விடுகிறார். நம்மை அதற்கு அர்ப்பணிப்போமா? ஆமென் அல்லேலூயா!

.

தொடும் என் கண்களையே

உம்மை நான் காண வேண்டுமே

இயேசுவே உம்மையே நான்

காண வேண்டுமே

..

தொடும் என் ஆண்டவரே

தொடும் என் வாழ்வினையே

இயேசுவே உம்மை போல்

என்னை மாற்றுமே

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த வேளையிலும் யார் யார் தங்களை கிறிஸ்து சுத்தமாக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ, அவர்களது பாவ கறைகளை இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவி சுத்திகரிப்பீராக. அந்த குஷ்டரோகியை கண்டு மனதுருகி, எனக்கு சித்தமுண்டு, சுத்தமாகு என்று அவனை தொட்டு சுகப்படுத்தின தேவன், இன்றும் மாறாதவராக அவரண்டை வருகிறவர்களை புறம்பே தள்ளாதவராக, ஏற்று கொள்வதற்காக உமக்கு நன்றி. தொடர்ந்து பரிசுத்தமாய் வாழ கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பு நேச தகப்பனே, இந்த உலகத்தில் அநேகர் பாடுகளின் வழியாக கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள் தகப்பனே, உலகத்தில் உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன் என்ற இயேசுகிறிஸ்து எங்களோடு இருப்பதால், எந்த பிரச்சனைகள் வந்தாலும் நாங்கள் அதை திடமனதோடு தாங்கி, எங்கள் அப்பாவின் பாதத்தில் வைத்து, ஜெபத்திற்கு பதிலை பெற்றுக் கொள்ள கிருபை செய்யும்.

சகோதரன் மார்க் ஜெபக்குமார் அவர்கள் புறமதத்திலிருந்து கர்த்தரை ஏற்றுக் கொண்டு, அளவற்ற வாஞ்சையோடு நேசிப்பதால், தேவன் தாமே அந்த சகோதரனை ஆசீர்வதிப்பீராக. அவருடைய மனைவி எந்த சபைக்கும் செல்லாமல், கடவுளைப்பற்றிய எண்ணமே இல்லாமல் இருப்பதால், அந்த சகோதரி இரட்சிக்கப்பட கிருபை செய்யும். இரண்டரை மாத கர்ப்பிணியாக இருக்கும் அந்த சகோதரியை இரட்சித்து, வயிற்றில் வளருகிற கருவையும் ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். சகோதரன் மாற்றலாய் வந்திருக்கிற ஒஸ்மனாபாதில் எந்த சபையும் இல்லாதபடியால், தேவன் தாமே அவருக்கு ஒரு நல்ல சபையை காட்டிக் கொடுக்கும்படி ஜெபிக்கிறோம்.

.

சகோதரி பிரபா சுமதி அவர்கள் எழுதியிருக்கி டிஎன்பிஎஸ்ஸி பரிட்சையில் நல்ல முடிவு வந்து, சகோதரிக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யும். சகோதரியின் வீட்டில் இருக்கிற எல்லா பிரச்சனைகளும் மாறி, கர்த்தருடைய ஆசீர்வாதம் வீட்டில் தங்கியிருக்கும்படி கிருபை செய்யும். அவர்களுடைய தோழியின் தங்கைக்கு ஆயத்தம் செய்கிற திருமண காரியத்தில் தேவ சித்தம் நிறைவேற ஜெபிக்கிறோம்.

.

சகோதரன் கெர்சோன் பொன்சிங் அவர்களின் மனைவி ஏழுமாத கர்ப்பிணியாக இருப்பதாலும், டாக்டர்கள் குழந்தைக்கு மூளை வளர்ச்சி சரியில்லை என்று சொல்லியிருப்பதாலும், உம்மையே நோக்கி பார்க்கிறோம் தகப்பனே, கருவில் இருக்கும்போதே உம்முடைய கண்கள் எங்களை கண்டது என்று வேதத்தில் வாசிக்கிறோமே, இந்த கருவையும் உம்முடைய கண்கள் கண்டு, இருக்கிற எல்லா பிரச்சனைகளையும் மாற்றும்படியாக ஜெபிக்கிறோம். குழந்தைக்கு சரியானபடி மூளை வளர்ச்சி அடையும்படி கிருபை செய்தருளும். உமக்கு சாட்சியாக விளங்கும்படி தேவன் பெரிய காரியத்தை இந்த குடும்பத்தில் செய்தருளும்.

.

பெயர் சொல்ல விரும்பாத சகோதரி, தன் கணவருக்கு செமன் டெஸ்ட் செய்து, நெகடிவ் ஆக ரிசல்ட் வந்திருப்பதால், மிகவும் சோர்ந்து போயிருக்கிற அவர்களுக்கு தேவன் தாமே ஒரு அதிசயத்தை செய்வீராக. அவர்கள் சில நாட்களுக்குள் செய்ய இருக்கிற டெஸ்ட்டில் எல்லாம் நார்மலாக மாற கிருபை செய்யும். குழந்தை பாக்கியத்தை கொடுத்து ஆசீர்வதித்தருளும்.

.

சகோதரி செல்வநாயகி அவர்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்களாகி, அவர்களுக்கு பத்து மாதத்தில் ஒரு குழந்தை இருந்தாலும், கணவன் தன் அம்மாவின் பேச்சைக் கேட்டு, சகோதரியை துன்பப்படுத்துவதால், தேவன் தாமே அவரோடு இடைபடும்படி ஜெபிக்கிறோம். சகோதரியை நேசிக்கவும், சமாதானமாய் குடும்பத்தை நடத்தவும் தேவன் கிருபை செய்வீராக.

.

சகோதரி கமலா சார்லஸ் அவர்களின் மகள் சார்லட் அமிர்தா அவர்கள் தன் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியை ஆக வேண்டும் என்று விரும்பி, அதற்காக அதிக படிப்பையும் படித்திருப்பதால், வரும் மார்ச் மாதம் 14-ம் தேதி நடக்க இருக்கும் இன்டர்வியூவில் தேர்ச்சி பெற்று அங்கு வேலையில் சேர தேவன் தாமே வழிகளை திறந்து கொடுக்கும்படி ஜெபிக்கிறோம். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

25th Feb 2014 - இரட்சகரின் மாற்றிவிடும் தொடுதல் - பாகம் - 1

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 பிப்ரவரி மாதம் 25-ம் தேதி – செவ்வாய்க்கிழமை
இரட்சகரின் மாற்றிவிடும் தொடுதல் - பாகம் - 1
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். - (மாற்கு 1:41-42).

.
இயேசுகிறிஸ்து செய்த அதிசயமான அற்புதங்களில் குஷ்டரோகியை சொஸ்தமாக்கியது ஒன்றாகும். நாம் சொல்லும்போது இயேசுகிறிஸ்து குஷ்டரோகியை சுத்தமாக்கினார் என்று வெகு எளிதாக சொல்லி விடுகிறோம், பாடி விடுகிறோம். ஆனால் குஷ்டரோகம் என்ற வியாதியை குறித்து நம்மில் அநேகர் அதிகமாக அறிந்ததில்லை. என்னுடைய சிறுவயதில் எங்கள் வீட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களில் நாங்கள் மாத்திரமே கிறிஸ்தவர்கள். எங்கள் வீட்டுக்கு குஷ்டரோகம் பிடித்து, சுகமான ஒரு சகோதரன் வருவார். அவருடைய வீட்டிலேயே அவரை உள்ளே சேர்த்து கொள்ள மாட்டார்கள். எங்கள் தெருவில் ஒருவரும் அவரை வீட்டிற்கு அழைக்க மாட்டார்கள், சேர்த்து கொள்ள மாட்டார்கள். ஆனால் அவர் எங்கள் வீட்டிற்கு வருவார். நாங்கள் குடிக்கும் டம்ளரிலே காப்பி குடிப்பார். நாங்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால் இது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று அவர் கூறுவார். மிகவும் தனிமைப்படுத்தப்பட்டவராக அவர் வாழ்ந்தார். இந்நாட்களிலும் அந்த நோய் அத்தனை பயங்கரமானது, வேதனைக்குரியது.

.

வேதத்தில் நாம் இரண்டு இடங்களில் குஷ்டரோகிகள் சுகமானதை குறித்து வாசிக்கிறோம். முதலாவது மாற்கு 1:40-45 வரை காணப்படுகிற குஷ்டரோகியும், பின்னர் லூக்கா 17:12-19 வரையுள்ள வசனங்களில் பத்து குஷ்டரோகிகள் சுகமானதை குறித்தும் வாசிக்கிறோம். இந்த குஷ்டரோகி சுகமானதை குறித்து வாசிக்கும்போது, கிறிஸ்துவின் அன்பும், அவருடைய மனதுருக்கமும், அவருடைய தொடுதலினால் உண்டாகும் மாற்றத்தையும் காண்கிறோம்.

.

குஷ்டரோகம் என்பது வேதாகம காலங்களில் சுகமாக்க முடியாத ஒரு வியாதியாகும். அதுவும் மறற்வர்களை மிகவும் தொற்றி கொள்ளக்கூடிய வியாதியாகும். இந்நாட்களில் அதற்கு மருந்து கண்டுபிடித்ததால் அதை சரிசெய்ய முடியும். வேதாகம காலங்களில் தொழுநோயை போல மோசமான வியாதி வேறு எதுவும் இருந்ததில்லை. அது முழு சரீரத்தையும் ஆட்கொண்டு, மனிதனை செயலிழக்க செய்யும் ஒரு வியாதியாகும். இந்த நோய் உண்டானால் பெரிய பெரிய சீழ் நிறைந்த கொப்புளங்கள் உண்டாகி முகம் விகாரமாக மாறி, ஒரு சிங்கத்தை போல தோற்றமளிக்கும். இந்த வியாதி ஒன்பது வருடங்கள் ஒரு மனிதனை சீரழித்து கடைசியில் அவன் உயிரையே குடித்து விடும். அவனது புண்ணிலிருந்து வரும் சீழ் கட்டப்படாமல், அது சரியாக பராமரிக்கப்படாததால், அதனுள் கிருமிகள் ஏற்பட்டு, அதனால், அவன் உயிரே எடுத்து விடும்.

.

வேதாகம காலங்களில் ஒரு முறை ஒரு மனிதனுக்கு தொழு நோய் இருக்கிறதென்று கண்டுபிடிக்கப்பட்டால் அவன் அந்த கிராமத்திலிருந்தே அப்படிப்பட்டவர்களுக்கென்று குறிக்கப்பட்ட இடத்திற்கு சென்று விட வேண்டும். தன்னுடைய உறவினர், மனைவி, பிள்ளைகள் யாரையும் அவன் தொட முடியாது. வெகு தூரத்தில் இருந்து தான் பார்க்க முடியும். ஒரு சுத்தமான மனிதனுக்கும் அவனுக்கும் இடையில் குறைந்தது 50 அடியாவது தூரம் இருக்க வேண்டும். அவன் பேசும்போது ஒரு துணியை அவன் வாயில் வைத்தவனாக பேச வேண்டும். யாராவது அருகில் வரும்போது தீட்டு, தீட்டு என்று சத்தமிட வேண்டும். அவனது துணியை கிழித்து கொள்ள வேண்டும். அதன் மூலம் மற்றவர்கள் அவன் தொழு நோயாளி என்று அறிந்து கொள்வார்கள். இந்த நோய் அவனது நரம்பு மண்டலத்தை தொடுவதால், அவனுக்கு எந்த உணர்ச்சியும் தெரியாது. சூடாக தொட்டாலோ, நெருப்பை தொட்டாலோ அவனுக்கு உணர்ச்சி இல்லாததால் அவனுக்கு காயம் உண்டான பின்னாலேதான் அவனுக்கு தெரியும் நெருப்பை தொட்டிருக்கிறோம் என்று.

.

இப்படிப்பட்ட தொழுநோய் பிடித்த மனிதன் இயேசுவை நோக்கி வருகிறான். இயேசுவை சுற்றி எப்பொழுதும் கூட்டம் இருந்து கொண்டுதான் இருந்தாலும், அவன் தைரியமாக கர்த்தரை நோக்கி முன்னேறுகிறான். தான் சுத்தமாக வேண்டும் என்பதே அவனுடைய ஒரே நோக்கமாக இருந்தது. கர்த்தரால் மாத்திரமே சுத்தமாக்க முடியும் என்ற அசைக்க முடியாத விசுவாசமும் அவனுக்கு இருந்தது. நினைத்து பாருங்கள், அப்படிப்பட்ட வியாதியுடைய ஒருவன் கூட்டத்தில் நுழைந்து தீட்டு தீட்டு என்று கத்தி கொண்டு வரும்போது, அச்சத்தில் மக்கள் அலறி அடித்து விலகியிருப்பார்கள். எங்களுக்கு அந்த நோய் வந்து விட போகிறது என்று பயந்து ஓடியிருப்பார்கள். அந்த தொழுநோயாளி நினைத்திருப்பான், எனக்கு ஒன்று சுகம் வேண்டும், அல்லது இந்த மக்களே என்னை கல் எறிந்து கொன்று போடட்டும் என்று!

.

ஆகவே அதை குறித்தெல்லாம் கவலைப்படாமல், அந்த மனிதன் கிறிஸ்துவின் முன்னால் வந்து முழங்காற்படியிட்டு, உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். பாருங்கள், அவனுக்கு தெரியும் கர்த்தரால் அவனை சுத்தமாக்க முடியும் என்று, ஆனால் அவருக்கு சித்தமுண்டா என்பதே அவனுடைய கேள்வியாயிருந்தது. இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். குஷ்டரோகியை தொடுவது சட்டப்படி தவறு என்றாலும், இயேசு அவனை தொட்டார். அந்த கூட்டம் எல்லாம் பயந்து அவன் நம்மை தொட்டு விடப்போகிறான் என்று ஓடும்போது, மேசியாவாகிய இயேசு அவனை தொட்டார். அவரை எந்த நோயும் தொட முடியாது, அவருக்குள்ளிருந்த பரிசுத்தம், சுத்தம் அவனது நோயை குணமாக்கியது. அல்லேலூயா! (இந்த கட்டுரை நாளையும் தொடரும்)

.

செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது

பெருங்கோட்டை ஒன்று தரை மட்டமானது

அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது

அவர் தொட குஷ்டரோகி சொஸ்தமாயினான்

..

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

என் உள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்

துன்பத்தில் என்தன் துணை அவரே

என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நீரே எங்கள் யெகோவா ராப்பாவாக இருப்பதற்காக உம்மை துதிக்கிறோம். அந்த நாளில் இயேசுகிறிஸ்து தம்மண்டை வந்த குஷ்டரோகியை முகம் சுளிக்காமல், மனதுருக்கத்தோடு தொட்டு சுகப்படுத்திய அற்புதத்தை நினைத்து உம்மை துதிக்கிறோம் தகப்பனே. உம்மண்டை வந்த ஒருவரையும் புறம்பே தள்ளாத நேசர், பாவ தொழுநோயால் வாடும் ஒவ்வொருவரையும் கூட தொட்டு சுகப்படுத்துவீராக. பாவ நோயிலிருந்து விடுதலை தருவீராக. மனிதனால் சுகப்படுத்த முடியாத எந்த வியாதியை சுகமாக்க வல்லவராகிய நீர் இந்த வேளையில் வியாதியினால் பாடுகள் பட்டு கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் விசுவாசத்தோடு உம்மண்டை வரும்போது அவர்களை தொட்டு குணமாக்கும்படி ஜெபிக்கிறோம். சுகத்தை தருவீராக. உமக்கு சாட்சியாக மாற்றுவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

.

ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பு நேச தகப்பனே, இந்த உலகத்தில் அநேகர் பாடுகளின் வழியாக கடந்து சென்று கொண்டிருக்கிறார்கள் தகப்பனே, உலகத்தில் உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன் என்ற இயேசுகிறிஸ்து எங்களோடு இருப்பதால், எந்த பிரச்சனைகள் வந்தாலும் நாங்கள் அதை திடமனதோடு தாங்கி, எங்கள் அப்பாவின் பாதத்தில் வைத்து, ஜெபத்திற்கு பதிலை பெற்றுக் கொள்ள கிருபை செய்யும்.

.

சகோதரன் மார்க் ஜெபக்குமார் அவர்கள் புறமதத்திலிருந்து கர்த்தரை ஏற்றுக் கொண்டு, அளவற்ற வாஞ்சையோடு நேசிப்பதால், தேவன் தாமே அந்த சகோதரனை ஆசீர்வதிப்பீராக. அவருடைய மனைவி எந்த சபைக்கும் செல்லாமல், கடவுளைப்பற்றிய எண்ணமே இல்லாமல் இருப்பதால், அந்த சகோதரி இரட்சிக்கப்பட கிருபை செய்யும். இரண்டரை மாத கர்ப்பிணியாக இருக்கும் அந்த சகோதரியை இரட்சித்து, வயிற்றில் வளருகிற கருவையும் ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். சகோதரன் மாற்றலாய் வந்திருக்கிற ஒஸ்மனாபாதில் எந்த சபையும் இல்லாதபடியால், தேவன் தாமே அவருக்கு ஒரு நல்ல சபையை காட்டிக் கொடுக்கும்படி ஜெபிக்கிறோம்.
.
சகோதரி பிரபா சுமதி அவர்கள் எழுதியிருக்கி டிஎன்பிஎஸ்ஸி பரிட்சையில் நல்ல முடிவு வந்து, சகோதரிக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யும். சகோதரியின் வீட்டில் இருக்கிற எல்லா பிரச்சனைகளும் மாறி, கர்த்தருடைய ஆசீர்வாதம் வீட்டில் தங்கியிருக்கும்படி கிருபை செய்யும். அவர்களுடைய தோழியின் தங்கைக்கு ஆயத்தம் செய்கிற திருமண காரியத்தில் தேவ சித்தம் நிறைவேற ஜெபிக்கிறோம்.
.
சகோதரன் கெர்சோன் பொன்சிங் அவர்களின் மனைவி ஏழுமாத கர்ப்பிணியாக இருப்பதாலும், டாக்டர்கள் குழந்தைக்கு மூளை வளர்ச்சி சரியில்லை என்று சொல்லியிருப்பதாலும், உம்மையே நோக்கி பார்க்கிறோம் தகப்பனே, கருவில் இருக்கும்போதே உம்முடைய கண்கள் எங்களை கண்டது என்று வேதத்தில் வாசிக்கிறோமே, இந்த கருவையும் உம்முடைய கண்கள் கண்டு, இருக்கிற எல்லா பிரச்சனைகளையும் மாற்றும்படியாக ஜெபிக்கிறோம். குழந்தைக்கு சரியானபடி மூளை வளர்ச்சி அடையும்படி கிருபை செய்தருளும். உமக்கு சாட்சியாக விளங்கும்படி தேவன் பெரிய காரியத்தை இந்த குடும்பத்தில் செய்தருளும்.
.
பெயர் சொல்ல விரும்பாத சகோதரி, தன் கணவருக்கு செமன் டெஸ்ட் செய்து, நெகடிவ் ஆக ரிசல்ட் வந்திருப்பதால், மிகவும் சோர்ந்து போயிருக்கிற அவர்களுக்கு தேவன் தாமே ஒரு அதிசயத்தை செய்வீராக. அவர்கள் சில நாட்களுக்குள் செய்ய இருக்கிற டெஸ்ட்டில் எல்லாம் நார்மலாக மாற கிருபை செய்யும். குழந்தை பாக்கியத்தை கொடுத்து ஆசீர்வதித்தருளும்.
.
சகோதரி செல்வநாயகி அவர்களுக்கு திருமணமாகி மூன்று வருடங்களாகி, அவர்களுக்கு பத்து மாதத்தில் ஒரு குழந்தை இருந்தாலும், கணவன் தன் அம்மாவின் பேச்சைக் கேட்டு, சகோதரியை துன்பப்படுத்துவதால், தேவன் தாமே அவரோடு இடைபடும்படி ஜெபிக்கிறோம். சகோதரியை நேசிக்கவும், சமாதானமாய் குடும்பத்தை நடத்தவும் தேவன் கிருபை செய்வீராக.
.

சகோதரி கமலா சார்லஸ் அவர்களின் மகள் சார்லட் அமிர்தா அவர்கள் தன் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் ஆசிரியை ஆக வேண்டும் என்று விரும்பி, அதற்காக அதிக படிப்பையும் படித்திருப்பதால், வரும் மார்ச் மாதம் 14ம் தேதி நடக்க இருக்கும் இன்டர்வியூவில் தேர்ச்சி பெற்று அங்கு வேலையில் சேர தேவன் தாமே வழிகளை திறந்து கொடுக்கும்படி ஜெபிக்கிறோம். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 24 பிப்ரவரி, 2014

24th Feb 2014 - பரிபூரண வாழ்வு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 பிப்ரவரி மாதம் 24-ம் தேதி - திங்கட் கிழமை
பரிபூரண வாழ்வு
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

'திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்'. - (யோவான் 10:10)

.
ஒருஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சிறுவன், அவனது ஊரில் சர்க்கஸ் என்பது வந்ததே கிடையாது. ஒரு முறை சர்க்கஸ் வரப்போகிறது என்று அவன் கேள்விப்பட்டான். அதை பார்க்க வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் எழுந்தது. அவனது தகப்பனிடம், 'அப்பா நான் சர்க்கஸ் பார்க்க வேண்டும்' என்று கெஞ்சிக் கேட்டான். அவனது அப்பாவிற்கு தெரியும், சர்க்கஸை அவன் தன் வாழ்நாளிலேயே பார்த்ததில்லை என்று. ஆகவே அவனை அனுப்ப தீர்மானம் செய்தார்.
.
'உன்னுடைய வேலைகள், வீட்டில் இருக்கும் வேலைகள் எல்லாம் முடித்தால் ஞாயிற்றுக் கிழமை உன்னை அனுப்புவேன்' என்றார். ஞாயிறு வந்தது, காலையிலேயே அவன் எழுந்து எல்லா வேலைகளையும் முடித்து, தன்னிடம் உள்ள சிறந்த உடைகளை எடுத்துப் போட்டுக் கொண்டு, தகப்பனிடம் சென்று நின்றான். அவனது அப்பா தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் அவனிடம் நூறு ரூபாயைக் கொடுத்து 'போய் பார்' என்று சொன்னார்.
.
அந்த நூறு ரூபாயை அவன் பார்ப்பது அதுவே முதல் முறை. சந்தோஷமாய் அதை எடுத்துக் கொண்டு சர்க்கஸ் வர இருந்த இடத்திற்கு ஓடினான். அங்கு பார்த்தால் மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். எல்லாரையும் தள்ளி, முண்டியடித்து உள்ளே சென்றுப் பார்த்தால், அங்கு சர்க்கஸ் ஊர்வலம் பரேட் நடந்துக் கொண்டிருந்தது. கூண்டில் அடைக்கப்பட்டிருந்த மிருகங்கள், உயரே கம்புகளின் மேலே நின்று உயரமான மனிதர்களாக நடந்து கொண்டிருந்த சர்க்கஸ் மனிதர்கள் கோமாளிகள் என்று வரிசையாக சென்றுக் கொண்டிருந்தார்கள்.
.
அதை எல்லாம் சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்த அச்சிறுவன் ஒரு கோமாளி வந்தவுடன் அவன் கையில் தன்னிடமிருந்த நூறு ரூபாய் நோட்டை கொடுத்து, கைகளை தட்டி சிரித்து, அந்த பரேட் முடிந்தவுடன் தன் வீட்டிற்கு சென்று விட்டான். அவன் நினைத்தான், அதுதான் சர்க்கஸ் என்று. அதன்பின் சர்க்கஸ் கூடாரத்தில் நடக்க இருக்கிற காரியங்களுக்கே பணம் என்பது தெரியாமல், அவன் வீட்டிற்கு சென்றான்.
.
திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் என்று இயேசுகிறிஸ்து சொன்னாரே, நாம் கிறிஸ்து நமக்கு கொடுத்த பரிபூரண ஜீவியத்தில் வாழ்கின்றோமா?
.
பரிபூரண ஜீவன் மறுமை உலகத்திற்கு மாத்திரமல்ல, நாம் இப்போது வாழ்கிற இம்மையின் ஜீவியத்திற்கும் சேர்த்துதான். அநேக கிறிஸ்தவர்கள் கர்த்தரை ஏற்றுக் கொண்டோம், இரட்சிக்கப்பட்டோம், இதுபோதும், எனக்கு வேறு எதுவும் வேண்டாம் என்று அந்த சிறுவனைப் போல போய் விடுகிறோமா?
.
கர்த்தருக்குள் நாம் கணுக்கால் அளவு அல்ல, முழங்கால் அளவு அல்ல, இடுப்பளவும் அல்ல, நீச்சல் ஆழம் மூழ்கி அவருக்குள் நாம் அவர் கொடுக்கும் அபிஷேகத்தை, அவரைப் போல மாறுவதை, அவர் நமக்கு கொடுத்திருக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும்; என்று எதிர்ப்பார்க்கிறார். அதற்காகத்தான் கர்த்தர் நம்மை அவருடைய பிள்ளைகளாய் அழைத்திருக்கிறார்.
.
'எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்' (1கொரிந்தியர் 2:9-10) என்று வசனம் கூறுகிறது. இந்த வசனத்தின்படி மனுஷர் அவர் நமக்கு உண்டு பண்ணியிருப்பதை காணவில்லை, ஆனால் தேவன் நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் என்று வாசிக்கிறோம். ஆனால் நம்மில் எத்தனைப்பேர் சாதாரண மனிதர்கள் அனுபவிக்காததை கர்த்தர் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினதை பெற்றிருக்கிறோம்?
.
தேவன் நமக்காகவே எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார். ஆனால் நாம் கொடுக்கப்பட்ட கொஞ்சத்தில் திருப்தி அடையாமல், பரிசுத்தத்தில், அன்பில், பொறுமையில், சந்தோஷத்தில், சமாதானத்தில் அவர் கொடுக்கும் பரிபூரணத்தை பெற வேண்டும். 'அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்' (யோவான் 1:16) என்று வசனம் கூறுகிறது. அந்த கிருபையின் மேல் கிருபை பெற நாம் நம்மை தகுதிப்படுத்திக் கொண்டு, நீச்சல் ஆழம் செல்வோமா?
.
நமக்கு கொடுக்கப்பட்டதிலும், நாம் பெற்றிருப்பதிலும் திருப்தி அடையாமல், தேவன் வாக்குதத்தம் செய்திருக்கிற பரிபூரணத்தை அவருக்குள் நீச்சல் ஆழம் சென்று பெற்றுக் கொள்வோமா? ஆமென் அல்லேலூயா!

.


முழங்கால்கள் முடக்கியது

முழங்கால் அளவல்ல

நீச்சல் ஆழம் வேண்டுமே

கொண்டு செல்லும் இயேசுவே

.
விண்ணக காற்றே நீர்

என்னை நோக்கி வீசிடும்

வெண்புறாவைப் போல

என் மேல் வந்தமர்ந்திடும்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் பெற்றிருக்கும் ஆவிக்குரிய அனுபவங்களிலும், ஆசீர்வாதங்களிலும் திருப்தி அடைந்து நின்றுவிடாதபடி, கிறிஸ்துவைப் போல நாங்கள் எல்லாவிதத்திலும் மாறும்படி தொடர்ந்து முன்னேறும்படி கிருபை செய்தருளும். கிறிஸ்து வாக்குதத்தம் செய்த பரிபூரண ஜீவனை நாங்கள் பெற்றுக் கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பலனுள்ளதாயிருக்கிறது என்று வேத வசனம் சொல்லுகிறபடி, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறதை பெற்றுக் கொள்ளுகிறோம் என்று விசுவாசிக்கிறோம் தகப்பனே.
.
சகோதரன் ஆலன் சாமுவேலுக்காக ரேபிஸாக இருக்கும் என்று வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த அவருக்காக நாங்கள் ஜெபித்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 20ம் தேதி கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் என்று நாங்கள் கேள்விப்பட்டோமே, அப்பா அவரை இழந்து தவிக்கிற அவருடைய பெற்றோருக்கும், உற்றார் உறவினருக்கும் ஆறுதலை தருவீராக. மூன்று மாதங்களுக்கு முன்பாக நாய்க்குட்டி கடித்திருந்தாலும், அதை லேசாக எடுத்துக் கொண்டதால் உயிருக்கே ஆபத்தாகி விட்டதே அப்பா, எந்த காரியத்தையும் லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று நாங்கள் இந்த காரியத்தின் மூலம் அறிந்துக் கொண்டோமே அதற்காக உமக்கு நன்றி. சகோதரனை இழந்த துக்கத்திலிருந்து குடும்பத்தார் வெளிவர கிருபை செய்யும். ஆறுதலை தந்தருளும். தேற்றியருளும்.
.
சகோதரி ஹெப்சி அவர்களின் பக்கத்துவீட்டு சகோதரி உடல் நிலை மோசமாகி ஐசியூவில் இருப்பதால், அந்த சகோதரன் மட்டும் கர்த்தரை ஏற்றுக் கொண்டிருப்பதால், தேவன் தாமே அந்த சகோதரியை தொட்டு சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம். எந்த வியாதியாக இருந்தாலும், சுகமளிக்கும் கிறிஸ்துவின் வல்லமை இப்போது அ;நத சகோதரியின் மேல் பாய்ந்து சென்று சுகத்தை கொடுக்கும்படியாக ஜெபிக்கிறோம் சீக்கிரமாய் எழுந்து, கர்த்தர் எனக்கு சுகம் கொடுத்தார் என்று சாட்சி சொல்ல கிருபை செய்யும்.
.
சகோதரி ஸ்மைலின் மூன்றாமாண்டு இஞ்சினியரிங் படித்துக் கொண்டிருந்தாலும், குடும்பத்தில் எப்போதும் பிரச்சனை, கடன் தொல்லை, தகப்பனாருக்கு தினமும் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டும், தாயாருக்கு சபைக்கு செல்ல விருப்பமில்லை, சின்ன வயதிலேயே வேலைக்கு செல்லும் அவர்களின் தம்பி என்று பலவித குழப்ப சூழ்நிலைக்குள் சென்றுக் கொண்டிருக்கும் இந்த குடும்பத்திற்காக ஜெபிக்கிறோம் தகப்பனே, எல்லா குழப்பத்தையும் மாற்றுவீராக. எல்ஷடாயாகிய உம்மை உறுதியாக பிடித்துக் கொண்டு, உலகத்தின் மேல் வெற்றி எடுக்கவும், கர்த்தரே எங்களுக்கு தஞ்சம் என்று உம்மையே பற்றிக் கொள்ளவும் கிருபை செய்யும். இந்த குடும்பத்தில் ஒரு நல்ல மாறுதலை உண்டுப்பண்ணுவீராக. முதலாவது கர்த்தரை உறுதியாக பற்றிக் கொள்ளும்போது, மற்ற ஆசீர்வாதங்கள் வருமே, தேவனை பற்றிக் கொள்ளவும், உம்மை நேசிக்கிற நேசத்தையும் இந்த குடும்பம் கண்டுக் கொள்ள கிருபை செய்யும்.
.
சகோதரி ஜெனிட்டா இவாஞ்சலின் அவர்கள் எம்.இ படித்து முடித்திருப்பதால் ஒரு நல்ல காலேஜில் லெக்சரராக வேலை கிடைக்கவும், உமக்கு சாட்சியாக வாழவும் கிருபை செய்யும்.
.
ஷார்ஜாவில் இருக்கும் சகோதரன் ஸ்டீபன் ராஜ் அவர்களின் மனைவி கர்த்தருக்குள் வளர்ந்து, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ள கிருபை செய்யும். அந்த சகோதரியின் சகோதரி டெல்சி அவர்களுக்கு டெலிவரி டைம்மாக இருப்பதால், சுகப்பிரசவத்தை கட்டளையிடுவீராக.
எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.
...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.