Friends Tamil Chat

வியாழன், 31 ஜனவரி, 2013

31st Jan 2013 - சர்வ வல்லமையுள்ள தேவன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஜனவரி மாதம் 31-ம் தேதி - வியாழக்கிழமை
சர்வ வல்லமையுள்ள தேவன்
.....

ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையம் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. - (எரேமியா 32:17).

sssingh
1908-ம் ஆண்டு திபெத்திற்கு (Tibet) 19 வயதுள்ள இளைஞனாய் ஊழியம் செய்ய சென்றார் சாது சுந்தர் சிங் (Sadhu Sundar Singh) அவர்கள். திபெத்தில் புத்தமதமே பிரதானமாக இருந்ததால் அம்மதம் நசிந்து போய்விடக்கூடாது என்பதற்காக பிறமத மிஷனரிகள் திபெத்திற்குள் நுழைய கூடாது என்று கடுமையான சட்டமிருந்தது. இருப்பினும் துணிந்து அங்கு சென்றார். ஒரு முறை லாசா பட்டணத்திற்குள் நுழைந்தார். அம்மக்களிடையே சுவிசேஷத்திற்கு வரவேற்பில்லை. அவர்கள் சுந்தரை பிடித்து அவ்வூர் பிரதம லாமாவிடம் கொண்டு வந்தனர். அனுமதியின்று ஊருக்குள் நுழைந்த குற்றத்திற்காகவும், வேறு மதத்ததை பிரசங்கித்த குற்றத்திற்காகவும் லாமா அவருக்கு மரண தண்டனை விதித்தார்.

.

திபெத்தில் மரணதண்டனை கொடுக்கும் முறைப்படி சுந்தர் ஒரு கிணற்றிற்கு அருகில் கொண்டு செல்லபட்டார். அவரது உடைகளை உரிந்து விட்டு எலும்பு குப்பை நிறைந்த இருண்ட கிணற்றிற்குள் தூக்கி எறிந்தார்கள். விழுந்த வேகத்தில் வலது கைதோள் பட்டையில் அடிபட்டு மயக்கமுற்றார். மயக்கம் தெளிந்து எழுந்தபோது எங்கும் இருளாக இருந்தது. இவருக்குமுன் இந்த கிணற்றில் எறியப்பட்ட பலரது அழுகிய மாம்சமும் எலும்புகளும் எங்கும் நிறைந்து தாங்கமுடியாத துர்நாற்றம் வீசியது. கை வைத்த இடமெல்லாம் அழுகிய மாம்சமும் எலும்புகளுமிருந்தன. தோளில் அடிபட்ட இடம் தாங்க முடியாத வலியை கொடுத்தது. அப்பொழுது இயேசு இரட்சகர் வேதனையடைந்து உச்சரித்த வார்த்தைகள் தான் அவர் நாவிலும் வந்தன. 'ஏன் என்னை கைவிட்டீர்?' துர்நாற்றம் பசி, தாகம், வேதனை இவைகளின் மத்தியில் சுந்தருக்கு தூக்கம் வரவில்லை.

.

மூன்றாம் நாள் இரவில் ஜெபித்து மரணத்தை எதிர்பார்த்திருந்தார். திடீரென கிணற்றின் வாயை மூடியிருந்த கதவின் பூட்டை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. பேராவலோடு அண்ணாந்து பார்த்தார். மேலேயிருந்த மனிதர் 'கீழே விடப்படும் கயிற்றை உன் இடுப்பில் கட்டிக்கொள்' என்றார். அதன்படியே செய்தார். மேலே வந்ததும் அவர் சுந்தரை தூக்கி கிணற்றிற்கு வெளியே விட்டார். நல்ல காற்றை சுவாசித்து கர்த்தருக்கு நன்றி செலுத்தும் வேளையில் மறுபடியும் கதவு மூடப்படும் சத்தம் கேட்டது. தனக்கு உதவிய நபருக்கு நன்றி செலுத்தும்படி திரும்பினார். என்ன ஆச்சரியம்! அங்கு யாருமில்லை. அவருடைய தோள்பட்டை வலியும் மறைந்து போனது. அப்போது தன்னை காப்பாற்றியது கர்த்தர் என அறிந்து தேவனுக்கு நன்றி செலுத்தினார்.

.

பிரியமானவர்களே, நாம் ஆராதித்திக்கிற தேவன் சர்வ வல்லமையுளளவர். தம்மை நம்புகிறவர்களுக்கு இயற்கைக்கு அப்பாபற்பட்ட அற்புதங்களை செய்து அவர்களை விடுவிக்க வல்லவர். தமக்காக வைராக்கியம் பாராட்டுகிறவர்களுக்காக வைராக்கியம் பாராட்டும் தேவன் நம் தேவன். தேவனுக்காக வைராக்கியம் பாராட்டின தானியேலை காப்பாற்ற சிங்கங்களின் வாயை கட்டிய தேவனல்லவா நம் தேவன்! அந்த மூன்று எபிரேய வாலிபர்கள் நேபுகாத்நேச்சார் செய்து வைத்த சிலையை வணங்காதபடி வைராக்கியம் பாராட்டிய போது, அவர்களை ஏழு மடங்கு எரியும் சூளையில் தூக்கி எறிந்த போது, தேவன் அவர்களுக்காக வைராக்கியம் பாராட்டி நான்காவது ஆளாக, அவரே இறங்கி வந்து அவர்கள் நடுவில் உலாவி, நெருப்பின் வாசனையும் அவர்கள் மீது வீசாமல், அவர்களை வெளியே கொண்டு வந்த தேவன் அல்லவா நம்தேவன்! ஆம் நாம் ஆராதிக்கும் தேவன் சர்வவல்லமையுள்ள தேவன். நமக்காக யுத்தம் செய்கிறவர். ஆம், அவராலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. தம் நாமத்தினிமித்தம் வைராக்கியம் பாராட்டும்போது, அவர்களுக்காக தாமே இறங்கி வந்து, அவர்களை தப்புவித்து தம் நாமத்தை மகிமைபட செய்கிற தேவன் அவர்! அவரை ஆராதிக்கிற நாம் நிச்சயமாக பாக்கியவான்கள்தான் அல்லேலூயா!

.

நாம் ஆராதிக்கும் தேவன் இயேசு

நம்மை தப்புவிக்க வல்லவர்

அவர் ஜீவனுள்ளவர் வல்லமையுள்ளவர்

நேற்றும் என்றும் மாறாதவர்

ஜெபம்

எங்களை அதிகமாய் நேசிக்கிற எங்கள் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். நாங்கள் ஆராதிக்கிற எங்கள் பரிசுத்தமுள்ள தேவன் சர்வ வல்லமையுள்ள தேவனாக இருக்கிறதற்காக ஸ்தோத்திரம். உம்முடைய நாமத்திற்காக வைராக்கியம் பாராட்டும்போது, அவர்களை அவர்களிலும் பலவான்களுடைய கைகளுக்கு தப்புவிக்கிறவரே உம்மை துதிக்கிறோம். உம்மால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை தகப்பனே. எங்களுக்காக யுத்தம் செய்கிறவர் நீரே, உமது நாமத்தை உயர்த்துகிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 30 ஜனவரி, 2013

30th Jan 2013 - சர்ப்பம் - பாகம் இரண்டு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஜனவரி மாதம் 30-ம் தேதி - புதன் கிழமை
சர்ப்பம் பாகம் இரண்டு
...

தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது -(ஆதியாகமம் 3:1).

.
நேற்றைய தினத்தில் சர்ப்பத்தின் தன்மைகளும், அது மனிதர்களை ஆட்கொள்வதினால் உண்டாகும் கொடிய பழக்கங்களையும் கண்டோம். தொடர்ந்து அதன் தொடர்ச்சியை காண்போம்.
.
6. குடிப்பழக்கம்: மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே. மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும் (நீதிமொழிகள் 23:30-32). குடிப்பழக்கம் உடையவன் சத்துருவினுடையவன். குடிக்கிறவனின் உள்ளே சர்ப்பம் இருக்கிறது என்று நாம் உணர வேண்டும். எந்த விதத்திலும் இந்த அசுத்த பழக்கம் யாருக்கும் இருக்கக் கூடாது. அரசாங்கமே டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து, மக்களை குடியர்களாக மாற்றிக் கொண்டு இருக்கிறது. அரசாங்கத்திற்கு அதன் மூலம் கோடி கோடியான பணம் கிடைப்பதால் தைரியமாக மக்களை பாவத்தில் விழ வைத்துக் கொண்டிருக்கிறது அரசாங்கம். அந்த பழக்கத்தை உடையவர்கள் அதிலிருந்து விடுதலையாக வேண்டும் என்றும், அதற்கு யாரும் அடிமையாகக்கூடாது என்றும் நாம் ஜெபிக்க வேண்டும்.
.
7. குடல்நோய்: அவன் போஜனம் அவன் குடல்களில் மாறி, அவனுக்குள் விரியன்பாம்புகளின் பிச்சாய்ப்போகும் (யோபு 20:14). சில குடல் வியாதிகள் சாத்தானால் கொண்டு வரப்படுகிறது. அநேகருக்கு குடல்களில் வியாதி இருந்து, அதினால் சரியாக சாப்பிடக்கூட முடியாத நிலைமை காணப்படுகிறது. ஆது சத்துருவினால் வருகிறது என்று அறியும்போது, அதை கட்டி ஜெபித்து, சாத்தானின் அந்த கட்டிலிருந்து நாம் வெளியேற வேண்டும்.
.
8. விழப்பண்ணுகிறவன்: தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான் (ஆதியாகமம் 49:17). குதிரையின் மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் குதிரையின் குதிகாலை கடிக்க வழியில் கிடக்கிற சர்ப்பம் என்று பார்க்கிறோம். கர்த்தருக்குள் வளருகிறவனை பின்மாற்றம் செய்யப்பண்ணுகிறவனாக, முன் நோக்கி செல்பவனை காலை வாரி விடும்படியாக கீழே விழத்தள்ளுகிறவன் யாராயிருந்தாலும் அவனுக்குள் சர்ப்பம் இருக்கிறது என்று அர்த்தமாகும்.
.
9. அலப்பு வாயன்: தடைகட்டப்படாத பாம்பு கடிக்குமே, அலப்புவாயனும் அதற்கு ஒப்பானவன் (பிரசங்கி 10:11). எந்த நேரமும் லொட லொட என்று யாராவது பேசிக் கொண்டிருந்தால், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களுக்குள் சர்ப்பம் உண்டு. நமது வார்த்தைகள் அளவோடு இருக்கட்டும். சிலர் போன் எடுத்தால் மணிக்கணக்கில் பேசாமல் கீழே வைக்கமாட்டார்கள். தேவையற்ற வார்த்தைகள் பேசுவது பாவமாகும். அது அலப்பு வாயனுக்கு ஒப்பாகும்.
.
10. சத்தியத்தை கேளாதபடி செவியை விலக்குவது: பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள் (சங்கீதம் 58:5). சேவிட்டு விரியனுக்கு காது கேட்காது. அதுப்போல சத்தியத்தை எந்த விதத்திலே சொன்னாலும், அவர்கள் அதை கேட்காதபடி தங்கள் செவியை அதற்கு விலக்குவார்கள். மன்னாவை அனுப்பும்போது, தயவு செய்து இந்த மாதிரி காரியங்களை எனக்கு அனுப்பாதீர்கள் என்று சிலர் நல்ல விதமாகவும், சிலர் திட்டியும் அனுப்புவது உண்டு. சத்தியத்தை கேளாதபடி நம் செவியை விலக்குவோமானால் சர்ப்பம் உண்டு என்பதை அறிய வேண்டும்.
.
11. மாயக்காரன்: மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே!.. சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே! (மத்தேயு 23:29,33). மாய்மாலம் பண்ணுகிறவர்கள் சத்துருவினால் உண்டானவர்கள். எந்த காரியத்திலும் நாம் மாய்மாலம் பண்ணுகிறவர்களாக இருக்கக்கூடாது. உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்ல வேண்டும். ஒரு இடத்தில் ஒரு மாதிரியும், வேறு இடத்தில் ஒரு மாதிரியும் வாழக்கூடாது. ஒரே மாதிரி எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் ஜீவிக்க வேண்டும்.
.
12. எதிர்பாராத ஆபத்து: சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும் (ஆமோஸ் 5:19). சிங்கத்துக்கு தப்பி ஓடிவந்தவன், கரடிக்கு முன்னே மாட்டிக் கொண்டு, அதனிடமிருந்து எப்படியோ தப்ப, வீட்டுக்குள்ளே வந்து, தான் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டேன் என்று நினைத்து அப்பாடா என்று சுவற்றில் கையை வைத்தபோது, பாம்பு வந்து அவன் எதிர்பாராதபடி கடித்து உயிர் போனால் எப்படி இருக்கும்? ஆம், எதிர்பாராத விபத்துக்களையும், ஆபத்துக்களையும் கொண்டு வருபவன் சத்துருவே!
.
நாம் தொடர்ந்து பன்னிரண்டு காரியங்களை சர்ப்பம் சாத்தானால் கொண்டு வரப்படுகிறது என்று பார்த்தோம். இந்த காரியங்களில் எதுவும் நம் வீட்டிலோ நம்மிடத்திலோ காணப்படவே கூடாது. இந்த சத்துருவை இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலும், சாட்சியின் வசனத்தினாலும் நாம் ஜெயித்தே ஆக வேண்டும். தொடர்ந்து நாம் சத்துரு நம்மை கட்டிவைத்து, அவனுடைய தந்திரங்களில் அகப்பட்டு தவித்தது போதும். நாம் வெற்றி எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது.
.
ஒவ்வொரு நாளும் இந்த காரியங்கள் என் வாழ்வில் காணப்படக்கூடாது என்று நாம் ஜெபிக்க வேண்டும். வீட்டின் நிலைக்கால்களிலும், என் வீட்டைச் சுற்றிலும், இயேசுகிறிஸ்துவின் திரு இரத்தத்தை பூசுகிறேன். சங்காரத்தூதன் என் வீட்டை தொடாதபடி, மனுஷீக போராட்ட ஆவிகளும், பொல்லாத ஆவிகளும் என் வீட்டை அணுகாதபடி இயேசுகிறிஸ்துவின் இரத்தக் கோட்டைக்குள்ளே என் வீட்டை வைக்கிறேன் என்று தினமும் ஜெபிக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே போகும்போவதற்கு முன்பு, இயேசுவே உம்முடைய இரத்தக்கோட்டைக்குள்ளே என்னை வைத்துக் காத்துக் கொள்ளும். சத்துருவின் அந்தகார சக்திகளுக்கும், வல்லமைகளுக்கும் எதுவும் என்னை அணுகாதபடி கிறிஸ்துவின் இரத்தத்திற்குள் வைத்துக் காத்துக் கொள்ளும் என்று ஜெபித்து வெளியே செல்ல வேண்டும். அப்பொழுது தேவ பிரசன்னமும், பாதுகாப்பும் நம்மை மூடிக்கொள்ளும். அப்படி நம்மை பாதுகாத்து தேவ கிருபைக்குள் வளர தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!

.


இரத்தக் கோட்டைக்குள்ளே நான் நுழைந்து விட்டேன்

இனி எதுவும் அணுகாது

எந்த தீங்கும் தீண்டாது

இயேசுவின் இரத்தம் என்மேலே

நெருங்காது சாத்தான்

பாசமாய் சிலுவையில் பலியாகி

பாவத்தை வென்று விட்டார்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, சத்துருவின் எந்த அக்கினியாஸ்திரங்களிலிமிருந்து நாங்கள் வெற்றி எடுக்கும்படியாக இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தை எங்களுக்கு பாதுகாப்பாக கொடுத்திருக்கிற தயவிற்காக உமக்கு கோடி நன்றிகள் ஐயா. எங்கள் வீட்டைச் சுற்றிலும், எங்களையும், எங்கள் பிள்ளைகளை சுற்றிலும் எங்களுக்கு உண்டான எல்லாவற்றை சுற்றிலும், எங்களுக்கு நீர் கொடுத்த நல்ல வேலைகளை சுற்றிலும் இயேசுகிறிஸ்துவின் இரத்தக் கோட்டைக்குள்ளே வைக்கிறோம் தகப்பனே. சத்துருவோ, சங்காரத்தூதனோ உள்ளே நுழையாதபடி காத்தருளும். சர்ப்பதின் எந்த குணாதிசயங்களும் யாருக்குள்ளும் இருக்காதபடி எங்களை காத்துக் கொள்ள கிருபை தாரும். இயேசுகிறிஸ்துவின் அதிகாரமுள்ள நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 29 ஜனவரி, 2013

29th Jan 2013 - சர்ப்பம் பாகம் ஒன்று

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஜனவரி மாதம் 29-ம் தேதி - செவ்வாய் கிழமை
சர்ப்பம் பாகம் ஒன்று
...

தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. - (ஆதியாகமம் 3:1)

.
ஒரு சர்ப்பமானது ஏவாளை வஞ்சித்து, தேவன் விலக்கிய ஏதேன் தோட்டத்தின் நடுவிலிருந்து விருட்சத்தின் கனியை புசிக்க வைத்தது என்று அறிவோம். மட்டுமன்றி, அவள் ஆதாமையும் புசிக்க வைத்து பாவத்திற்குட்படுத்தினாள் என்று வேதத்தில் பார்க்கிறோம்.

.

.
சர்ப்பம் என்பது சாத்தானையும், பாவத்தையும், சாபத்தையும் குறிக்கிறது.

அதிலிருந்து நாம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இயேசுகிறிஸ்துவின்

இரத்தத்தினாலும், அவருடைய விலைமதிக்க முடியாத வசனத்தினால்

மாத்திரமே நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
.

.
அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான்

என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது

பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக்

கொன்றுபோடுவார் என்று ஏசாயா 27:1 ல் வாசிக்கிறோம். தேவன் கடிதும்,

பெரிதும், பலத்ததுமான பட்டயத்தால் அந்த சர்ப்பத்தை ஒரு நாளில் கொன்று

போடுவார்.
.

.
அந்த சர்ப்பத்தை தண்டிப்பது சபையின் கடமையுமாகும். சபையாராக ஒன்று

சேர்ந்து நாம் ஜெபிப்போம், சாத்தானை மிதிப்போம் என்று பாடும்போது,

அவன் அங்கு தோற்கடிக்கப்பட்டு போகிறான். நம்முடைய பரிசுத்த

வாழ்வினாலே அவன் அங்கு தோற்கடிக்கபட்டு போகிறான். சாட்சியின்

வசனத்தினாலே அவன் தோற்கடிக்கப்பட்டு போகிறான். இயேசுகிறிஸ்து

தம்மிடம் சாத்தான் சொன்ன வசனங்களுக்கு வசனத்திலிருந்தே பதிலடி

கொடுத்து அவனை தோற்கடிக்கப் பண்ணினார். அல்லேலூயா!
.

.
வேதத்தில் சில பாவமான காரியங்கள் செய்யும்போது அது சர்ப்பத்தினால்

வருகிறது என்று பார்க்கிறோம். அதைக் குறித்து நாம் அறிந்தோமானால்

அதிலிருந்து விலகி ஜீவிக்க நமது உதவியாயிருக்கும். அநேகரை

பிசாசானவன் தன் கட்டிற்குள் வைத்திருக்கிறான். அவர்கள் வெளியே

வரமுடியாதபடி அவன் அவர்களை தன் வியாதியின் கட்டு, மந்திரத்தின் கட்டு

என்று பலவித கட்டுகளால் கட்டி வைத்திருக்கிறான். அவனுடைய

கட்டிலிருந்து நாம் விடுதலையாகி, குமாரன் விடுதலையாக்கினால்

மெய்யாகவே நீங்கள் விடுதலையாவீர்கள் என்ற வார்த்தையின்படி

குமாரனாகிய இயேசுகிறிஸ்துவினால் விடுதலையாக்கப்பட்டு சமாதானமாய்

வாழ்வோர்கள் அநேகர்.
.

.
1. சாத்தான்: உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும்

சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம்

தள்ளப்பட்டது (வெளிப்படுத்தின விசேஷம் 12:9). சாத்தானே

வலுசர்ப்பமானவன். வலுசர்ப்பத்தின் படங்களும், சித்திரங்களும் எங்கெங்கே

இருக்கிறதோ அங்கெல்லாம் சாத்தான் ஆட்சி செய்கிறான் என்று அறிந்து

கொள்வோம்.
.

.
2. தந்திரம்: தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு

ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது

(ஆதியாகமம் 3:1). சாத்தான் தந்திரமுள்ளவன் என்று பார்க்கிறோம்.

யாராவது மிகவும் தந்திரமுள்ளவர்களாக இருந்தால் அவர்கள் சாத்தானை

உடையவர்கள் என்று நாம் அறிய வேண்டும். எந்த விதத்திலும் தந்திரமானது

கிறிஸ்துவுக்குள் வாழுகிற யாருக்கும் இருக்க கூடாது.
.

.
3. சாபம்: அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச்

செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும்

சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும்

நாளெல்லாம் மண்ணைத் தின்பாய் (ஆதியாகமம் 3:14). தேவன் சர்ப்பம்

தந்திரமுள்ளதாக மனிதனை ஏமாற்றினபடியால் அதை சபித்தார். சர்ப்பம்

இருக்குமிடம் சபிக்கப்பட்ட இடமாகும். அங்கு சாபம் தங்கும். யாருடைய

வீட்டிலும் சர்ப்பத்தின் உருவமோ, படமோ, எந்த சாவி செயினிலோ எதிலும்

அதன் உருவத்தை வைத்திருக்கக் கூடாது.
.

.
4. சூனியங்கள்: மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர்

தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு

முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப்

போட்டான், அது சர்ப்பமாயிற்று. அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும்

சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள்

மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள் (யாத்திராகமம் 7:10-12)

சூனியம் செய்பவர்கள் தங்கள் மந்திர வித்தைகளினால் சர்ப்பத்தை தங்கள்

இஷ்டப்படி செய்ய வைக்கிறார்கள். சூனியம் செய்பவர்களும் மந்திர

தந்திரங்கள் செய்பவர்களும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள். பிசாசின்

உதவியால் அவர்கள் செய்யும் அக்கிரமங்கள் அநேகம். கர்த்தருடைய

பிள்ளைகளுக்கு விரோதமாக அவர்கள் செய்யும் எந்த காரியமும்

வாய்க்காதே போகும். அல்லேலூயா!
.

.
5. வெறுமையாக்கப்படுதல்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார்

என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னைவெறும்

பாத்திரமாக வைத்துப்போனான; வலுசர்ப்பம்போல என்னைவிழுங்கி, என்

சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத்

துரத்திவிட்டான் (எரேமியா 51:34) இந்த இடத்தில் வலுசர்ப்பம் போல

என்னை விழுங்கி, வெறுமையாக பாத்திரமாக வைத்துப்போனான் என்று

சொல்வதை காண்கிறோம். நான் எல்லாவற்றையும் இழந்து வெறுமையாக

இருக்கிறேன் என்று சொல்கிறீர்களா? அது சாத்தானின் திட்டம் என்பதை

அறிந்து கொள்ள வேண்டும். நம் பாத்திரம் நிரம்பி வழியும்படி

ஆசீர்வதி;க்கிறவர் தேவன். நம்மை வெறுமையாக்குகிறவன் சாத்தான்.
.

.
தொடர்ந்து நாளைய தினத்திலும் கர்த்தருக்கு சித்தமானால் இதன்

தொடர்ச்சியை காண்போம். சத்துருவை ஜெயிக்கும்படியாகவே நமக்கு

தேவன் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தையும், அதிகாரமுள்ள வசனத்தையும்

கொடுத்திருக்கிறார். நாம் அவற்றை வைத்து நிச்சயமாகவே சத்துருவின்

மேல் ஜெயம் எடுக்க வேண்டும். அப்படி ஜெயம் பெற்றவர்களாக வாழ

தேவன் தாமே ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென்

அல்லேலூயா!

.

.
சர்ப்பங்களை மிதித்திடவும்

தேள்களை நசுக்கிடவும்

அதிகாரம் உண்டு வல்லமை உண்டு

தோல்வி இல்லை வெற்றி நமக்கே - என்றும்

தோல்வி இல்லை வெற்றி நமக்கே

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, சாத்தான் தந்திரமுள்ளவனாய் ஆதிக்காலத்தில் இருந்தே மனிதர்களை வஞ்சித்து கொண்டிருக்கிறான் என்பதை நாங்கள் அறிந்தவர்களாக உணர்ந்தவர்களாக அவனை இயேசுவின் நாமத்தினால் ஜெயித்து வெற்றி எடுக்க எங்களுக்கு உதவி செய்யும். மேலே சொல்லப்பட்ட காரியங்களில் எதுவும் எங்கள் வாழ்வில் காணப்படாதபடி எங்களை பாதுகாத்தருளும். உம்முடைய இரத்தக் கோட்டைக்குள்ளே வைத்து எங்களை மூடிக் கொள்ளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 28 ஜனவரி, 2013

28th Jan 2013 - பலிபீடத்தை கட்டுவோம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஜனவரி மாதம் 28-ம் தேதி - திங்கட் கிழமை
பலிபீடத்தை கட்டுவோம்
...

தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார். அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள். நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான். -(ஆதியாகமம் 35: 1-3)

...
மேற்கண்ட வசனத்தில்; தேவன் யாக்கோபிடம் 'உனக்கு தேவன் தரிசனமான இடத்தில் அவருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கு' என்று கட்டளையிடுகிறார். அதை கேட்ட யாக்கோபு, தன் வீட்டாரையும், தன்னோடு கூட இருந்த மற்றவர்களையும் பார்த்து, 'உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள். நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்' என்று அழைக்கிறார்.
.
தேவன் அவரிடம் 'ஒரு பலிபீடத்தை உண்டாக்கு' என்றுதான் சொல்கிறார். ஆனால் யாக்கோபோ 'உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கி உங்களை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்' என்று அவர்களை சுத்தம் செய்கிறார். கர்த்தரை நேசிக்கிறவர்கள் அவருடைய இருதயத்தை அறிந்திருக்கிறார்கள். அந்நிய தெய்வங்களோடும், அசுத்தத்தோடும் கர்த்தருக்கு பலிபீடம் கட்ட முடியாது என்று யாக்கோபு அறிந்திருந்தபடியால், தேவன் சொல்லாத காரியங்களையும் அவர் தன்னோடு இருப்பவர்களுக்கு செய்யும்படி சொல்கிறார். அவர் அப்படி சொன்னவுடனே, அப்பொழுது அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபினிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப் போட்டான் (4ம் வசனம்).
.
விசுவாசிகளாயிருந்தாலும், அவிசுவாசிகளாயிருந்தாலும் இயேசுகிறிஸ்துவுக்கென்று ஒரு இடம் ஒவ்வொருவரின் இருதயத்திலும் நிச்சயமாய் உண்டு. 'நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று. சிறைச்சாலைக்காரன் நித்திரை தெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான். பவுல் மிகுந்த சத்தமிட்டு: நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கின்றோம் என்றான். அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து, அவர்களை வெளியே அழைத்து வந்து: ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்' (அப்போஸ்தலர் 16:25-30). சிறைச்சாலைக்காரன் கர்த்தரை அறியாதிருந்தும், அவனுக்குள் கர்த்தருக்கென்று ஒரு இடம் இருந்தபடியால் அவன் கர்த்தரை குறித்து சொன்னபோது, அவரை ஏற்றுக் கொண்டான். அப்படி தேவனுக்கென்று ஒவ்வொருவருடைய இருதயத்திலும் ஒரு இடத்தை கர்த்தர் கொடுத்திருக்கிறபடியால், ஒவ்வொருவரும் கர்த்தருக்கென்று இருதயத்தில் ஒரு பலிபீடத்தை கட்டவே வேண்டும்.
.
'அப்பொழுது அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபினிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப் போட்டான்' (ஆதியாகமம் 35:4). யாக்கோபு தன் குடும்பத்தாருக்கு கட்டளையிட்டபோது, அவர்கள் உடனே கீழ்ப்படிந்து, தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபினிடத்தில் கொடுத்தார்கள். அவர்கள் தேவனை தொழுது கொள்ளுகிறவர்களாயிருந்தாலும், அவர்களுக்குள்ளே அந்நிய தெய்வங்கள் இருந்தது. அவற்றை எல்லாம் வாங்கி யாக்கோபு ஒரு மரத்தின் கீழ் புதைத்து போட்டார்.
.
நம் ஒவ்வொருவரின் இருதயத்திலும், நம்முடைய அந்நிய தெய்வங்கள் ஏதாவது இருந்தால், பாவமான காரியங்கள், தேவன் விரும்பாத அருவருக்கிற பாவங்கள், நம்மை தேவனை விட்டு பிரிக்கிற காரியங்கள் இருந்தால் அவற்றை நம்மை விட்டு அகற்றி, நம்மை சுத்தம் பண்ணிக்கொள்ள வேண்டும். 'இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்' (மத்தேயு 15:19) என்று இயேசுகிறிஸ்து கூறினார். இவற்றை எல்லாம் அகற்றி விட்டு, இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, நம் பலிபீடத்தை நம் இருதயத்தில் கட்டுவோமானால், கர்த்தர் நமக்காக யுத்தம் செய்வார். நம்முடைய எதிரியாகிய சாத்தான் நம்மை ஒன்றும் செய்ய முடியாது.
.
யாக்கோபின் குடும்பத்தாரும், அவரோடு இருந்த மற்றவர்களும் அந்நிய தெய்வங்களை அகற்றி, தங்களை சுத்தம் செய்து கொண்டு, கர்த்தர் கட்டளையிட்டபடி பெத்தேலுக்கு செல்ல ஆரம்பித்தார்கள். அப்போது அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டானதினால், அவர்கள் யாக்கோபின் குமாரரைப் பின்தொடராதிருந்தார்கள் (ஆதியாகமம் 35:5).
.
அப்படி சுத்தம் செய்து கொண்டு அவர்கள் கர்த்தருக்கென்று பலிபீடத்தை கட்டும்படி பிரயாணம் செய்தபோது, அவர்களுடைய எதிரிகளால் அவர்களுக்கு எந்த உபத்திரவமும், எந்த பாடுகளும், எந்த துன்பங்களும் வராதபடி, தேவன் அவர்களை காத்துக் கொண்டார்.
.
நம் இருதயத்தில் பரிசுத்தமான பலிபீடத்தை கட்டுவோம். கர்த்தர் அதில் நாம் ஏறெடுக்கும் நன்றி பலிகளை பிரியமாய் ஏற்றுக்கொள்வார். நம் எதிரியாகிய சாத்தான் நம்மை பின்தொடராதபடி காத்துக் கொள்வார். ஆமென் அல்லேலூயா!

.


நன்றி பலிபீடம் கட்டுவோம் - நல்ல

தேவன் நன்மை செய்தார்

செய்த நன்மை ஆயிரங்கள்

சொல்லி சொல்லி பாடுவேன்

நன்றி தகப்பனே நன்மை செய்தீரே

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்களில் பாவம் இருக்குமானால், அந்நிய தெய்வங்கள் எங்கள் இருதயத்தில் காணப்படுமானால் அதினால் பாவங்களும் சாபங்களும் எங்களை தொடருமே, தேவனே அவற்றை அகற்றி விட்டு, எங்கள் தேவனுக்கு எங்கள் இருதயத்தில் பரிசுத்த பலிபீடத்தை கட்டவும், தேவன் எங்கள் பலிகளை ஏற்றுக்கொள்ளவும் ஜெபிக்கிறோம். நீர் விரும்புகிற பரிசுத்தத்தில் நாங்கள் வளர கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

27th Jan 2013 - யாருக்கு மேன்மை?..

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஜனவரி மாதம் 27-ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை
யாருக்கு மேன்மை?
....

பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். - (யாத்திராகமம் 32:26).

.
எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை நடத்தி வந்த மோசேயை தேவன் தம்மோடு தனித்திருக்கும்படி மலைமேல் அழைத்தார். மோசே மலையிலிருந்து இறங்கி வர தாமதமாகிறது. 40 நாட்களாக மோசேயை காணாத ஜனங்கள் ஆரோனை பிடித்து, எங்கனை முன் நடத்தி செல்ல தெய்வங்கள் உண்டாக்க வேண்டுமென்று வற்புறுத்தி, ஒரு கன்றுகுட்டியை உருவாக்கி இதுவே தங்களை நடத்தி வந்த தெய்வம் என்று வணங்க ஆரம்பித்தார்கள். அவர்கள் செய்த தவறு என்ன தெரியுமா? இதுவரை நடத்தி வந்த தேவனுடைய மேன்மையை அவர்கள் விளங்கி கொள்ளவில்லை. மாறாக எல்லாவற்றிற்கும் காரணம் மோசேதான் என்று அவனை பிடித்து கொண்டார்கள். இன்னொரு விதத்தில் சொல்ல போனால், மோசேதான் இப்பொழுது அவர்களின் தேவன். தேவனைவிட அவர்க்ள மோசேயை அதிகமாய் நம்பினர். ஆகவேதான் மோசே இல்லையென்றவுடன் அதற்கு பதிலாக சில தெய்வங்கள் எங்களை நடத்தி செல்ல வேண்டுமென்று அவர்கள் தீர்மானித்தனர். தேவனுக்கும் மேலாக ஒரு மனிதனை உயர்த்தும் அவல நிலை. இந்நாட்களில்; கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்நிலை அதிகமாக காணப்படுகிறது.

.

கிறிஸ்தவ வட்டாரத்தில் ஒரு ஊழியருடைய கூட்டத்திற்கு மக்கள் அதிகமாக கூடிவிடுகிறார்கள் என்றால், ஏறக்குறைய அவ்வூழியரை ஜனங்கள் தெய்வமாக்கி விடுகிறார்கள். ஒரு ஜெப விண்ணப்பம் என்றாலும், ஆலோசனை தேவை என்றாலும், ஆறுதலுக்கானாலும், விடுதலைக்கென்றாலும், முதலாவது அவ்வூழியருக்கு கடிதம் எழுதவும், போன் பண்ணவுமே யோசிக்கின்றனர். பெயரளவில்தான் இயேசு அங்கிருக்கிறார், மறைமுகமாக இயேசுகிறிஸ்து ஓரம் கட்டப்படுகிறார். ஊழியர்களிடம் ஜெபம் பண்ணவதும், ஆலோசனை கேட்பதும் தவறல்ல. ஆனால் அவர்களை விக்கிரகம் ஆக்கி விடுவதுதான் மகாப்பெரிய தவறு. அவ்வூழியர் இல்லாவிட்டால், தங்கள் வாழ்வில் எதுவும் நடக்காது என்ற எண்ணம் அவர்கள் வாழ்வை வஞ்சித்து விடுகிறது. பிரச்சனையின் நேரத்தில் அவ்வூழியரோடு தொடர்பு கொள்ள முடியாமல் போனால், எல்லாமே இழந்து விட்டதை போல இடிந்து போய் உட்கார்ந்து விடுகின்றனர். ஆனால் அண்ட சராசரத்தின் முழு ஆளுகையும் தம் கரத்தில் வைத்திருக்கிற தேவனை நோக்கி தங்கள் கண்களை ஏறெடுக்க மறந்து விடுகின்றனர்.

.

ஊழியர்களும் மனிதர்கள் தான் என்பதை நாம் முதலாவது அறிந்து கொள்ள வேண்டும். நீதிமான் ஒருவனாகிலும் இல்லை (ரோமர் 3:10) என்று வேதம் நமக்கு கூறுகிறது. ஊழியர்களாயிருந்தாலும் பாவத்தில் விழாதபடி பரிசுத்தமாய் தங்களை காத்து கொண்டிருக்கிற ஊழியர்கள் மிகவும் குறைவே. தேவ கிருபையால் ஒவ்வொருவரும் நிற்கிறார்களே தவிர அவர்கள் தேவன் இல்லை. பண ஆசை, பெண் ஆசை, புகழின் ஆசை இவைகளில் விழாதபடி தங்களை காத்து கொண்டிருக்கிற ஊழியர் மிகவும் குறைவே. ஆகவே ஊழியர்களை Hero Worship செய்வது மிகவும் ஆபத்தானது. நம்முடைய எல்லா ஆராதனைக்கும், புகழுக்கும், ஸ்தோத்திரங்களுக்கும் பாத்திரர் நம் கர்த்தர் மட்டுமே. தேவ ஊழியர்கள் எல்லாரும், அவரை தொழுது கொள்ளவும், அவரை அறிவிக்கின்ற வேலைக்காரர்களாகவும் இருக்கின்றார்களே தவிர, தேவனுக்கு ஈடு ஒருவரும் இல்லை. இல்லவே இல்லை. யாரும் இந்த காரியத்தில் மோசம் போக கூடாது. ஒரு ஊழியர் பின்வாங்கி போனால், அவரை பின்பற்றின அத்தனை பேரும் பின்வாங்கி போவார்கள். மனிதனை பின்பற்றினால் அதுதான் விளைவு. தேவனை முன்மாதியாக வைத்து, அவரையே நாம் பின்பற்றுவோம்.

.

ஒரு ஊழியரை அவருடைய ஊழியங்களை பார்த்து, என் மகனை இந்த ஊழியர் போல ஆக்கும் தகப்பனே என்று ஆரம்ப காலங்களில் நான் ஜெபித்ததுண்டு. ஆனால் அந்த ஊழியர் விழுந்து போன போது, ஐயோ நான் இந்த ஊழியரை போலவா என் மகன் ஆகவேண்டும் என்று ஜெபித்தேன் என்று கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டேன். நாம் கர்த்தரைத்தான் எல்லாவற்றிற்கும் முன்மாதிரியாக வைக்கவேண்டும். மனிதர்கள் ஒருவரையும் நாம் முன்மாதிரியாக வைக்க கூடாது.

.

அப்படி ஊழியர்களை நாம் நமக்கு முன்மாதிரியாக வைக்காமல், கர்த்தரோடுள்ள நமது உறவை புதுப்பித்து கொண்டு முன்செல்ல வேண்டும். அதாவது கர்த்தரோடு நான் இருக்கிறேன் என்ற நிச்சயமான அஸ்திபாரத்தின்மேல் நாம் உறுதியாக நிற்கிறவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய ஒரே இலக்கு, 'இயேசுவை போல மாற வேண்டும்' என்பதாகவே இருக்க வேண்டும். அது திசைமாறி எந்த ஊழியர் மேலும் சென்று விடாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும். ஊழியரை கண்ணோக்கி கொண்டிருப்போமானால், எளிதில் பின்மாற்றித்தில் விழுந்து விடுவோம். ஆகவே இப்படிப்பட்ட காரியத்தில் சாத்தான் நம்மை வஞ்சித்து விடாதபடி கவனமாயிருப்போம். நம் வாழ்வின் முதலிடம் தேவனுக்கே, முழு இடமும் தேவனுக்கே கொடுத்து வாழ தேவன் தாமே நமக்கு உதவி செய்வாராக. ஆமென் அல்லேலூயா!

.

கண்களை பதிய வைப்போம்

கர்த்தராம் இயேசுவின் மேல்

கடந்ததை மறந்திடுவோம்

தொடர்ந்து முன்செல்லுவோம்

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எந்த ஊழியரையும் நாங்கள் உமக்கு மேலாக நேசிக்காதபடிக்கு எங்களை காத்தருளும். இயேசுவையே நோக்கி பார்த்து, எங்கள் ஓட்டத்தை முடிக்க எங்கள் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வீராக. அப்பா, ஜப்பானில் சுனாமியினாலும், பூமி அதிர்ச்சியினாலும் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் உம் திரு கரத்தில் தருகிறோம் தகப்பனே, எத்தனையோ பேர் தங்களுக்கு பிரியமானவர்களை இழக்க கொடுத்து துக்கத்தில் வாடி கொண்டிருக்கலாம், எத்தனையோ பேர் வீடுகளை இழந்து, கொடிய குளிரில் பாடுபட்டு கொண்டிருக்கலாம், அவர்களை காத்தருளும், ஆறுதலை தாரும். மிகவும் அதிகமாக பாதிப்புக்குள்ளாகி இருக்கும் ஜப்பானியர்கள், இந்த கடைசி நாட்களில், தங்கள் சொந்த பலத்தை சார்ந்திராமல், ஜீவனுள்ள தேவனாகிய உம்மை அறிந்து கொள்ளவும், உம்மை சார்ந்து ஜீவிக்கவும் கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வெள்ளி, 25 ஜனவரி, 2013

25th Jan 2013 - இதுவே நொறுங்குதல்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஜனவரி மாதம் 25-ம் தேதி – வெள்ளி கிழமை
இதுவே நொறுங்குதல்
.....

தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். - (சங்கீதம் 51:17).

.
தேவன் நொறுங்குண்ட இருதயத்தை புறக்கணியார் என்பது நம் எல்லாருக்கம் தெரியும்.. அப்படி நொறுங்குதல் என்றால், நம் துன்பங்களின் நடுவில் கர்த்தரிடம் கதறுவதா? அல்லது மற்றவர்கள் செய்த துன்பத்தில் மனம் உடைந்து நொறுங்கி போவதா? நொறுங்குதல் என்றால் என்ன? இந்த நொறுங்குதலை விவரிப்பது அவ்வளவு எளிதல்ல! ஆனால், இயேசுவை சிலுவையில் அறைந்தபோது அவரிடமிருந்து ஏற்பட்ட பிரதிபலிப்பிலிருந்து இதற்கான விடையை தெளிவாக காணலாம்.

.

என் சாட்சி வாழ்விற்கு களங்கம் கற்பிக்கப்படும் போதும், வேண்டுமென்றே என்னைக் குறித்து பொய்யாய் திரித்து பேசப்படும்போதும், என் விழிகள் இயேசுவை நோக்கி பார்த்து, என் இயேசுவும் அவ்வாறு பொய்யாய் குற்றம் சாட்டப்படுகையில் வாய் திறவாமல் இருந்ததை நினைவு கூர்ந்தேன். அப்பொழுது என் சிரம் தாழ்த்தி இவ்விதமாய் நான் குற்றம் சாட்டப்பட்டதை சிறிதும் நியாயப்படுத்த முயற்சிக்காமல் அப்படியே ஏற்றுகொண்டேன். இதுவே நொறுங்குதல்.

.

பகிரங்கமாய் என்னை உதாசீனம் செய்துவிட்டு எனக்கு முன்பாக வேறொருவரை உயர்த்தும்போது, என்விழிகள் இயேசுவை நோக்கி பார்த்து அவரையும் ஜனங்கள் 'இவரை அகற்றும், பரபாசை எஙகளுக்கு விடுதலையாக்கும்' என சத்தமிட்டதை நினைவுகூர்ந்தேன். அப்போது என் சிரம் தாழ்த்தி இவ்விதமாய் நான் தள்ளுண்டதை ஏற்றுக் கொளகிறேன் என்றேன். இதுவே நொறுங்குதல்

.

நான் ஒழுங்குபடுத்திய திட்டங்கள் அனைத்தும் நசுங்குண்டு, நான் பல்லாண்டுகளாக பிரயாசப்பட்ட என் உழைப்புகள் அத்தனையும் சிலருடைய சுயநல விருப்பத்தால் நாசமாக்கப்பட்டதை காணும்போதும், என் விழிகள் இயேசுவை நோக்கிப் பார்த்து, தன்னைப் புறம்பே தள்ளி சிலுவையில் அறைந்தவர்களுக்கு தன்னை ஒப்புக் கொடுத்து, தோல்வி என கருதப்பட்ட ஸ்தானத்தை அவர் ஏற்றுக் கொண்டதை நினைவு கூர்ந்தேன். இப்போது என் சிரம் தாழ்த்தி இவ்விதமாய் எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை கொஞ்சமும் கசப்புணர்வு இல்லாமல் ஏற்றுக் கொள்கிறேன் என்றேன். இதுவே நொறுங்குதல்.

.

தேவனோடு சீர் பொருந்தி பரிசுத்தமாய் வாழ்வதற்கு பிறரிடம் மன்னிப்பு கேட்டு இவ்வொப்புரவாகுதலின் தாழ்மை வழியை நான் நிச்சயமாய் கடந்து சென்றே ஆகவேண்டும் என்று அறிந்த போது, என் விழிகள் இயேசுவை நோக்கி பார்த்து, இயேசுவும் தன்னைத்தானே வெறுமையாக்கி, சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்படிந்து தன்னைத்தானே தாழ்த்தினார் என்ற வசனத்தை நினைவு கூர்ந்தேன். இவ்வித ஒப்புவாகுதலால் பகிரங்கமாக்கப்படும் என் அவமானத்தை ஏற்றுக் கொள்கிறேன் என்றேன். இதுவே நொறுங்குதல்.

.

ஒருவர் என்னிடம் நடந்து கொள்ளும் விதமானது இனி மன்னிக்கவே முடியாது என்ற உச்சக்கட்டத்தை எட்டும்போது மனம் வெதும்ப என் விழிகள் இயேசுவை நோக்கி பார்த்து, அவர் கொடூரமாய் சிலுவையில் அறையப்பட்ட போதும் 'பிதாவே இவர்களை மன்னியும், தாங்கள்செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே' என ஜெபித்ததை நினைவு கூர்ந்தேன். அப்போது என் சிரம்தாழ்த்தி, மற்றவர்களின் எப்பேர்ப்பட்ட கொடிய செய்கைகளும் என் அன்பின் பிதாவின் அனுமதியுடனேயே சம்பவிக்கிறது என ஏற்றுக்கொண்டேன். இதுவே நொறுங்குதல்.

.

இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை. அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார். - (1 பேதுரு 2:21-23)

.

இதுபோன்று எல்லாவிதத்திலும் இயேசுகிறிஸ்து பாடுகளை சகித்து நமக்கு முன்மாதிரியாக நொறுக்கப்பட்டார். நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். - (எபிரேயர் 4:15). ஆகவே சோர்ந்து போகாதிருப்போம். நம் பிரச்சனையில் கர்த்தர் நம்முடனே இருக்கிறார். அல்லேலூயா!

.

கிறிஸ்துவின் பொருட்டு நொறுக்கப்பட்டால்

பாக்கியம் நமக்கு பாக்கியமே

சோர்ந்து போகாதே நீ

சோர்ந்து போகாதே

அதி சீக்கிரத்தில் நீங்கிவிடும்

இந்த லேசான உபத்திரவம்

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும்; எங்கள் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். நாங்கள் படும் எந்த பாடுகளையும் எங்கள் இயேசு முதலிலே சுமந்து தீர்த்துவிட்டார் என நாங்கள் அறியும்போது, எங்கள் பாரங்கள், எங்கள் சுமைகள் எங்களுக்கு ஒன்றுமில்லாததாக தோன்றுகிறது. எங்கள் பாடுகளின் மத்தியில் அதை மாற்றுவதற்கும் எங்களை தேற்றுவதற்கும் எங்கள் இரட்சகர் எங்களுக்கு இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
....

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.