Friends Tamil Chat

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2013

16th August 2013 - அறிவிப்பு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி - வெள்ளி கிழமை
அறிவிப்பு
...

அன்பு அனுதின மன்னா வாசகர்களுக்குஇதை அனுப்பும் சகோதரன் மீண்டும் சுகவீனமாக இருப்பதால் நாங்கள் சிகிச்சைக்காக செல்ல இருப்பதால் இரண்டு வாரங்கள் அனுதின மன்னா வெளிவராது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சகோதரனுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் என்று வேண்டிக் கொள்கிறோம். கர்த்தரை நம்புகிறவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை என்பதை விசுவாசிக்கிறோம். பரம வைத்தியராகிய கர்த்தரே சகோதரனை தொட்டு சுகமளிக்க வல்லவர் என்பதையும் விசுவாசிக்கிறோம்.

.

கர்த்தருக்கு சித்தமானால் செப்டம்பர் மாதம் முதல் மன்னா வெளிவரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஜெபிக்கிற உங்களுக்கு எங்களது நன்றி!

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வரும் எங்கள் இப்பொழுதும் சுகவீனமாய் இருக்கும் சகோதரனை உமது கரத்தில் அர்ப்பணிக்கிறோம். நாங்கள் சுகமாய் இருப்பதே உமது சித்தமாய் இருப்பதால் சகோதரனுக்கு பூரண சுகத்தை கொடுக்கும்படி உம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறோம். உலக மருத்துவர்கள் என்ன சொன்னாலும், பரம வைத்தியராகிய நீரே எங்களுக்கு சுகத்தை கொடுக்க வல்லவர். ஆகவே நீர் தொட்டு சுகப்படுத்தும்படி வேண்டிக் கொள்கிறோம். இப்போதும் சகோதரன் வைத்தியரிடம் செல்லும்போது, நீரே அந்த வைத்தியருக்கு நல்ல ஞானத்தைக் கொடுத்து என்ன வியாதி என்பதை கண்டுபிடித்து, சரியான மருத்துவ சிகிச்சை செய்ய கிருபை செய்யும். ஊழியம் எந்த விதத்திலும் தடைபடாதபடி, சத்துருவானவன் கொடுக்கிற எல்லா தடைகளையும் இயேசுகிறிஸ்துவின் இணையற்ற நாமத்தில் கட்டுகிறோம். சகோதரனுக்கு நல்ல சுகத்தை கொடுத்து, மீண்டும் ஊழியப்பாதையில் நிலைநிறுத்துவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

16th August 2013 - ஏழு, நீ அதை கேளு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி - வெள்ளி கிழமை
ஏழு, நீ அதை கேளு
....

கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது - (சங்கீதம் 12:6).

.
சமீபத்தில் ஒரு விஞ்ஞானி ஒரு மனிதன் தன்னிடம் காண்பிக்கப்பட்ட எந்த ஒரு பட்டியலிலும் ஏழு காரியங்களை சரியாக நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார். மற்றொரு விஞ்ஞானி 'அதனால்தான், ஏழு என்கிற காரியம் நாம் இருக்கிற இந்த உலகில் அடிக்கடி காணப்படுகிறது. உதாரணமாக, ஏழு உலக அதிசயங்கள், ஏழு ஸ்வரங்கள், ஏழு கடல்கள், கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு, வாரத்தில் நாட்கள் ஏழு, வானவில்லின் நிறங்கள் ஏழு.' என்று கூறினார்.

.

அது சரியென்றாலும், வேதத்தில் ஏழு என்கிற எண் மிகவும் விசேஷித்தாய் இருக்கிறது. அதை குறித்து ஆராய்ந்தால் மிகவும் அற்புதமான ஒரு எண்ணாக இந்த ஏழு திகழ்கிறது. இந்த எண் வேறு எந்த எண்களைக் காட்டிலும் அதிகமான முறை உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏழு என்ற எண்ணும், அதின் பெருக்கு தொகையான எண்களுமே அதிகமாக வேதத்தில் காணப்படுகிறது. ஏழு என்பதற்கு முழுமை அல்லது பரிபூரணம் என பொருள்படும். ஏழு என்ற வார்த்தை ஆங்கிலத்தில் 287 தடவை வருகிறது, அதாவது 7x41 (Seven) ஏழாவது என்ற வார்த்தை 98 தடவை, அதாவது 7x14 (Seventh) ஏழு முறை என்ற வார்த்தை 7 தடவை வருகிறது (Seven Fold) எழுபது என்ற வார்த்தை 56 தடவை வருகிறது அதாவது 7 x 8.

.

தேவன் ஏழாவது நாளில் ஓய்ந்திருந்து அந்த நாளை பரிசுத்தபடுத்தினார். ஆபிரகாமுக்கு ஏழு ஆசீர்வாதங்கள் ஆதியாகமம் 12:2-3-ல் கூறப்படுகிறது. பிரதான ஆசாரியன் ஏழு முறை பலியின் இரத்தத்தையும், அபிஷேக எண்ணெயையும் கர்த்தருக்கு முன்பாக கிருபாசனத்தின் மேல் தெளிக்க வேண்டும். யோசுவா எரிகோவை சுற்றி வந்தபோது, ஏழு ஆசாரியர்கள், உடன்படிக்கை பெட்டியை சுமந்தபடி, ஏழு எக்காளங்களை முழக்கி, ஏழாவது நாள், ஏழு தடவை சுற்றி வந்து ஜெயத்தை சுதந்தரித்தார்கள். வெளிப்படுத்தின விசேஷத்தில் ஏழு சபைகளைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. மற்றும், ஏழு பொன் குத்து விளக்குகள், ஏழு நட்சத்திரங்கள், ஏழு முத்திரைகள், ஏழு எக்காளங்கள், ஏழு கண்கள், ஏழு ஆவிகள், ஏழு கோபகலசங்கள், ஏழு இடிமுழக்கங்கள், என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

.

சங்கீதங்களில் 126 சங்கீதங்கள் தலைப்புகளோடு உள்ளன. (7x18)அவைகளில் ஏழு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. தாவீது (56 சங்கீதங்கள் எழுதப்பட்டுள்ளன)

2. கோராகின் புத்திரர் (11)

3. ஆசாப் (12)

4. ஏமான் (1) (சங்கீதம் 88)

5. ஏத்தான் (1) (சங்கீதம் 89)

6. மோசே (1) (சங்கீதம் 90)

7. சாலமோன் (1) (சங்கீதம் 72)

.

புதிய ஏற்பாட்டில் ஏழு சங்கீதங்களின் வசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்கீதம் 69 ன் வசனங்கள் புதிய ஏற்பாட்டில் ஏழு தடவை வருகின்றன. யோவான் சுவிசேஷத்தில் ஏழு அற்புதங்களை குறித்து எழுதப்பட்டிருக்கிறது.

.

மத்தேயு சுவிசேஷம் 13-ம் அதிகாரத்தில் ஏழு உவமைகள் கூறப்பட்டிருக்கின்றது. இன்னும் எத்தனையோ வசனங்கள் ஏழு என்ற எண்ணை பயன்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது. அடுத்த முறை நாம் வேதம் வாசிக்கும்போது, ஏழு என்ற எண் வரும்போது நிறுத்தி, தேவன் இந்த இடத்தில் என்னிடம் என்ன சொல்ல விரும்புகிறார்? என்று யோசித்து, அவருடைய ஞானத்திற்காக ஜெபிப்போம். கர்த்தருடைய ஞானம் அளவற்றது. அவருடைய வார்த்தைகளில்தான் எத்தனை பொருள்கள் அடங்கியிருக்கின்றன! இந்த அற்புத தேவனை தெய்வமாக கொண்டிருக்கும் நாம் எவ்வளவு பாக்கியவான்கள்! ஆமென் அல்லேலூயா!

.

எந்தன் உதடும் உந்தனை போற்றும்

என் கரங்கள் குவிந்தே வணங்கும்

பாக்கியம் நான் கண்டடைந்தேனே

யாக்கோபின் தேவனை என் துணையே


ஜெபம்

யோசனையில் பெரியவரும், செயல்களில் மகத்துவமானவருமாகிய எங்கள் நல்ல தகப்பனே, உம்முடைய ஞானம் பெரிது ஐயா. உம்முடைய வார்த்தைகளில் உள்ள பொக்கிஷங்களை காண எங்கள் கண்களை திறந்தருளும். ஞானத்தில் குறைவுள்வர்களாகிய எங்களை உம்முடைய ஞானத்தினால் நிரப்புவீராக. ஏழு என்ற எண்ணை கொண்டு இந்த நாளில் எங்களோடு கூட இடைப்பட்ட தயவிற்காக ஸ்தோத்திரம். இன்னும் நாங்கள் வேதத்தின் இரகசியங்களை கற்றுக்கொள்ள கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

15th August 2013 - நீயுனக்கு சொந்தமல்லவே

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி - வியாழக்கிழமை
நீயுனக்கு சொந்தமல்லவே
....

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? - (மத்தேயு 16:26).

.
ஒரு 24 வயது சீன வாலிபன் தன் ஆத்துமாவை 10 யானுக்கு (சீன பணம்) ஏலம் விடுவதாக இன்டர்நெட்டில் ஒரு ஏலக்கம்பெனியின் மூலமாக அறிக்கை விட்டான். உடனே அதை வாங்குவதற்கு 58 பேர் போட்டி போட்டனர். ஒரு வாரத்திற்குள் அவனுடைய ஆத்துமாவிற்கு 681 யான் (Yuan) வரை ஏலம் பேசப்பட்டது. ஆனால் அவன் ஏலம் இட்ட கம்பெனி, கடவுளுக்கு மாத்திரம் தான் ஆத்துமாக்களின் மேல் உரிமை உள்ளதென்று சொல்லி அந்த ஏலத்தை தடை செய்தது. இது உண்மையில் நடந்த சம்பவம்! என்ன ஒரு வினோதமான காரியம்!

.

ஏன் ஒரு மனிதன் மிகச்சிறிய பணமான 10 யானுக்கு தன் ஆத்துமாவை ஏலம் விட வேண்டும்? வேதத்தில் சில பேருடைய காரியங்கைள பார்க்கும்போது இது ஒன்றும் பெரிய காரியமாக தோன்றவில்லை! யூதாஸ் காரியோத் 30 வெள்ளி காசுக்காக இயேசுகிறிஸ்துவை காட்டி கொடுத்து தன் ஆத்துமாவை இழந்தான், ஆகான் ஒரு பாபிலோனிய சால்வைக்காகவும், இருநூறு வெள்ளி சேக்கலுக்காகவும், ஒரு பொன்பாளத்துக்க்காவும் தன் ஆத்துமாவை இழந்தான் (யோசுவா 7), எலிசாவின் வேலைக்காரனாகிய கேயாசி, ஒரு தாலந்து வெள்ளிக்காகவும், இரண்டு மாற்று வஸ்திரங்களுக்காவும் தன் ஆத்துமாவை இழந்து போனான் (2 இராஜாக்கள் 5), ஏசாவோ ஒரு கோப்பை கூழுக்காக தன் சேஷ்ட புத்திர பாகத்தையே இழந்தான். என்ன ஒரு பரிதாபமான முன் உதாரணங்கள்!

.

நாம் இருக்கும் இந்த உலகத்தில் எத்தனையோ பேர், இது போன்ற மிக சிறிய காரியங்களுக்காக தங்கள் ஆத்துமாக்களை இழந்து கொண்டிருக்கின்றனர். பிசாசுக்கு அதை விற்று கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தெரியவில்லை தங்கள் ஆத்துமா எத்தனை விலையேறப் பெற்றதென்று!

.

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? என இயேசுகிறிஸ்து கூறினார். ஆம் இந்த உலகத்தின் ஆஸ்திகளையும், ஏன் முழு உலகத்தையும் ஆண்டு அனுபவிப்பனாக இருந்தாலும், தன் ஆத்துமாவை அவன் இழந்து போனால், அவனைவிட பரிதாபமானவன் இந்த உலகததில் வேறு யாரும் இல்லை!

.

ஒரு மனிதன் தன் ஆத்துமாவிற்கு ஈடாக என்னத்தை செலுத்தி அதை மீட்டுக் கொள்ள முடியும்? எப்போது ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து தேவன் அவர்களுக்கு கொடுத்திருந்த ஆளுகையை பிசாசின் கையில் கொடுத்தார்களோ அன்றிலிருந்து பிசாசின் ஆளுகைக்கு இந்த உலகம் விடப்பட்டிருக்கிறது. அதனால்தான், அவன் உலக இரட்சகரான இயேசுகிறிஸ்துவிடமே வந்து, அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். - (மத்தேயு 4:8-10). அவர் தம் வார்த்தையினால் அவனை மேற்கொண்டு தம் ஆத்துமாவை காத்து கொண்டார். அல்லேலூயா! நாமும் கூட சாத்தான் நம்மை இந்த உலகத்தின் ஆசைகளை காட்டி நம் ஆத்துமாவிற்கு விலை பேசும்போது கர்த்தருடைய வார்த்தைகளை பேசி நாம் நம் ஆத்துமாக்களை காத்துக் கொள்ள வேண்டும். நம் ஆத்துமாக்களை இந்த அழிய போகிற உலகத்தின் இச்சைகளுக்காக ஒரு போதும் விற்றுப் போட கூடாது.

.

மட்டுமல்ல, கிறிஸ்து நமக்காக, நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் பாடுபட்டு இரத்தம் சிந்தி தம் இரத்தத்தையே கிரயமாக செலுத்தி, நம்முடைய ஆத்துமாக்களை மீட்டு விட்டபடியால், நம் ஆத்துமாக்கள் கிறிஸ்துவுக்கு சொந்தமாகி விட்டன. உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களேளூ ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள் (1கொரிந்தியர் 6:19-20) என்று நாம் பார்க்கிறோம். இப்போது நாம் நமக்கு சொந்தமானவர்களல்ல, கிறிஸ்துவே அதற்கு சொந்தமானவர். ஆகவே நாம் நம் சொந்தத்திற்கு அதை பிரயோஜனப்படுத்த முடியாது. மற்றும் பிசாசுக்கு அதன் மேல் இப்போது எந்த அதிகாரமும் இல்லை. ஆமென் அல்லேலூயா!

.

உலகத்தின் எந்த பணக்காரரும் தன்னுடைய எல்லா பணத்தையும் செலுத்தினாலும் உங்கள் ஆத்துமாவை வாங்க முடியாது. அது அத்தனை விலையேறப் பெற்றது. அதனால்தான், தேவன் தம்முடைய சொந்த குமாரனையே இந்த உலகத்திற்கு அனுப்பி, அவருடைய மாசற்ற பரிசுத்த சொந்த இரத்தத்தினாலே நமது ஆத்துமாவை மீட்க கிருபாதார பலியாக அனுப்பினார். அவர் நம்மேல் வைத்த அன்பும் தயவும் பெரியது! அதை அசட்டை செய்யாமல், நம் விலையேறப்பெற்ற ஆத்துமாக்களை அழிந்து போகும் இந்த உலகத்தின் காரியங்களுக்காக விற்றுப்போடாதபடிக்கு காத்துக்கொள்வோமாக!

.

நீயுனக்கு சொந்தமல்லவே, மீட்கப்பட்ட பாவி

நீயுனக்கு சொந்தமல்லவே!

நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்

நீயுனக்கு சொந்தமல்லவே!

...

பழைய பாவத்தாசை வருகுதோ

பிசாசின்மேல் பட்சமுனக்கு திரும்ப வருகுதோ

அற்ப நிமிஷத்தாசை காட்டியே

அக்கினிக்கடல் தள்ளுவானே

நீயுனக்கு சொந்தமல்லவே

ஜெபம்

எங்கள் மேல் அன்பு வைத்து, உமது சொந்த குமானையே எங்களுக்காக இந்த உலகத்திற்கு அனுப்பி எங்கள் பாவங்களிலிருந்து எங்களை மீட்டு எங்கள் ஆத்துமாக்களை உமக்கு சொந்தமாக்கி கொண்டீரே உமக்கு நன்றி ஐயா. இந்த பொல்லாத உலகின் ஆசை இச்சைகளில் விழுந்து போய் விலையேறப்பெற்ற எங்கள் ஆத்துமாக்களை விற்று போடாதபடிக்கு எங்களை காத்துக்கொள்ளும். நாங்கள் எங்களுக்கு சொந்தமல்ல என்பதை எங்களுக்கு உணர்த்தும். எங்கள் ஆவி ஆத்துமா சரீரம் உமக்கே சொந்தம் என்று உமக்கே எங்களை அர்பணிக்கிறோம். ஏற்று எங்களை உமக்கென்று உருவாக்கும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

..


...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 14 ஆகஸ்ட், 2013

14th August 2013 - கீழ்ப்படிதல்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி - புதன் கிழமை
கீழ்ப்படிதல்
....

அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம். - (1 சாமுவேல் 15:22).

.
ஊழியமானாலும் உலக வேலையானாலும் சரி, இடமாற்றம் என்பது அடிக்கடி நிகழ்வதுண்டு. திடீரென கட்டளையிடப்படும் இந்த மாற்றங்களை நாம் பெரும்பாலும் விரும்புவதில்லை. அவ்விடம் வசதி குறைவாகவோ, சவுகரியம் அற்றதாகவோ இருக்கலாம் என்ற தகவல்களை நாம் அறிய நேரிடும்போது நாம் அங்கு செல்ல விரும்புவதில்லை. அதனால் பல சாக்கு போக்குகளை சொல்ல முற்படுகிறோம்.

.

இதே சூழ்நிலை அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஆபிரகாம் என்ற ஐயரவர்களுக்கு வந்தது. அன்று கிராம பகுதிக்கு சென்று சுவிசேஷம் அறிவிக்க சென்றிருந்தார். அந்நாட்களில் தொலைபேசி வசதி இல்லாத காரணத்தால் போதகரின் மனைவி ஐயரிடம் ஆளனுப்பி, 'அதிக வசதி இல்லாத இடம், வேறு இடத்திற்கு மாறுதல் கேட்கவும்' என்று சொல்லி அனுப்பினார். போதகரிடமிருந்து ஒரே வரியில் பதில் வந்தது. 'ரோமர் 8:28ஐ வாசி' என்று. போதகரின் மனைவி வேதத்தை எடுத்து அவ்வசனத்தை வாசித்தார்கள். 'அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்' இதை வாசித்தவுடன் ஆண்டவருக்குள் தன்னை புதுப்பித்து கொண்டார்கள். குடும்பமாக தங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்திற்கு சென்றார்கள். ஆம், தங்களது சுய விருப்பங்களையும் ஆசைகளையும பின்னுக்கு தள்ளுபவர்கள் தானே ஊழியர்கள்!

.

இதே போன்ற ஒரு நிகழ்ச்சி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தது. ஆதியாகமம் 12ம் அதிகாரத்தில் அதை காணலாம். 'கர்த்தர் ஆபிராமை நோக்கி, நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும் உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டு புறப்பட்டு, நான் உனக்கு காண்பிக்கும் தேசத்திற்கு போ' என்று சொன்னார். கர்த்தர் ஆபிராமுக்கு சொன்னபடியே அவன் புறப்பட்டு போனான். அவனோடு அவன் மனைவியாகிய சாராயும் சென்றாள். 'நான் இவ்வளவு வருடமாய் பழகின தேசத்தையும், என் சொந்தக்காரர்களையும், நம் வீட்டையும் விட்டு எப்படி வருவது? புது இடம் எப்படி இருக்குமோ? என்ற பல கேள்விகளை சாராய் ஆபிராமிடம் கேட்டிருக்கலாம். ஆனால் எந்தவித ஸ்ட்ரைக்கும் சாராய் செய்ததாக தெரியவில்லை. ஆசையாய் பேசி பழகிய சொந்தக்காரர்களளையும், பத்திரமாய் பாதுகாத்து வந்த வீட்டு உபயோக பொருட்களையும் விட்டு விட்டு, கையில் வழிக்கு தேவையான உணவையும், ஒரு சில ஆடைகளையும் எடுத்து கொண்டு எங்கு, எப்படி வாழப்போகிறோம் என எதுவும் அறியாதவளாக ஆபிராமின் பின் நடந்தாள்.

.

இன்று பார்த்த இரண்டு பெண்மணிகளும் கடவுளின், கணவனின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தனர். தேவனது திட்டம் தங்கள் குடும்பத்தில் நிறைவேற இசைந்து கொடுத்தனர். அநேக காரியங்களை விட்டு கொடுக்கவும் தயங்கவில்லை. இவ்வித கீழ்ப்படிதலுக்கு நாம் நம்மை அர்ப்பணிப்போம்.

.

கீழ்ப்படிதலிலும் இரண்டு வகை உண்டு. ஒன்று மனதார கீழ்ப்படிதல், மற்றொன்று கட்டாயத்திற்காக கீழ்ப்படிதல். மனதார கீழ்ப்படிதல் அன்பினிமித்தம் நிகழும். நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய வார்த்தைக்கு மனதார கீழ்ப்படியும்படியாக அழைக்கப்பட்டிருக்கிறோம். அன்பினிமித்தம் நடக்கும் அந்த கீழ்ப்படிதலால் மட்டுமே, நாம் விட வேண்டிய காரியங்களை மனப்பூர்வமாய் விட்டுவிட முடியும். அது நம்மை தவறான வழியில் நடத்தும் உயிர் நண்பனாய் இருக்கலாம். நாம் தேவனோடு ஐக்கியம் கொள்வதை தடுக்கும் பிடித்த பொழுதுபோக்காய் இருக்கலாம். அல்லது பிறர் மெச்சும் கௌரவ வாழ்க்கையாகவோ, வேலையாகவோ சகல சவுகரியமும் அடங்கிய வீடாகவோ இருக்கலாம். தேவனுக்கு கீழ்ப்படிய வேண்டுமானால் விட்டுவிட வேண்டியவைகளை மனப்பூர்வமாய் விட வேண்டும். அப்படிப்பட்டதான கீழ்ப்படிதலுக்குள்ளாக நாம் நம்மை ஒப்புக்கொடுத்து, கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிய தேவன் தாமே நமக்கு கிருபை செய்வாராக. ஆமென் அல்லேலூயா!

.

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, கீழ்ப்படிதலே எங்கள் வாழ்க்கையில் மேல்படிக்கு செல்வதற்கான வழி என்பதை உணர்ந்து நீர் போதிக்கும் வார்த்தைகளுக்கும், உமக்கும் கீழ்ப்படிய உதவி செய்வீராக. நீர் சொல்லுகிறபடி விட்டுவிட வேண்டிய காரியங்களை நாங்கள் விட்டுவிட்டு, உம்மையே சார்ந்து கொண்டு, கீழ்படிந்து வாழ கிருபை தாரும். கட்டாயமாக அல்ல, மனப்பூர்வமாய் உம்முடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிய கற்று தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

12th August 2013 - தேவ வல்லமை

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி - திங்கட்கிழமை
தேவ வல்லமை
.....

தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். - (எபேசியர் 1:19).

.
ஒரு ஆஸ்பத்திரியில் இன்டென்சிவ் கேர் வார்டில் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் காலை 11 மணிக்கு ஒரு படுக்கையில் இருந்த நோயாளிகள் மரித்து கொண்டே இருந்தனர். அவர்களுக்கு எந்த விதமான நோயாயிருந்தாலும் அந்த படுக்கையில் வருகிற ஒவ்வொருவரும் மரித்தனர். இது ஒரு மாதத்திற்கு மேல் நடந்து கொண்டே இருந்தது. யாருக்கும் புரியவில்லை, ஏன் அந்த நேரத்தில் அப்படி நடக்கிறது என்று.

.

ஆகவே உலக அளவில் சிறந்த ஆய்வாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அடுத்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர்களும், எல்லா டாக்டர்களும் நர்சுகளும் அந்த வார்டிற்கு முன்பு கூடியிருந்தனர். எப்படியாவது இன்று கண்டுபிடித்து விட வேண்டும் என உறுதியுடன் எல்லாரும் அமைதியாக காத்திருந்தனர். சிலர் சிலுவைகளையும், வேத புத்தகத்தையும் ஒருவேளை பிசாசின் தந்திரமாய் இருந்தால் அதை விரட்ட வேண்டும் என்று நினைத்து தயாராக காத்திருந்தனர்.

.

சரியாக 11 மணியானது, எல்லாரும் என்ன நடக்குமோ என்று காத்திருந்த போது, அந்த வார்டை சுத்தம் செய்கிற கிளீனர் வந்து அந்த படுக்கையில் இருந்த நோயாளி சுவாசிக்கிற மெஷினின் பிளக்கை பிடுங்கி விட்டு, தன் மெஷினின் பிளக்கை சொருகி சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

.

இந்த கதை ஒருவேளை உண்மையில்லாமல் இருக்கலாம், ஆனால், இது வெளிப்படுத்தும் ஒரு கருத்து சக்தி இல்லாவிட்டால், அதன் முடிவு மரணமே!

.

ஒருமுறை உயிர்த்தெழுதல் இல்லை என்ற சாதிக்கும் சதுசேயர்கள் இயேசுகிறிஸ்துவிடம் வந்து, ஒரு பெண் ஏழு பேரை மணந்து அந்த ஏழு பேரும் மரித்ததாகவும், உயிர்த்தெழுதலில் அவள் யாருடைய மனைவியாய் இருப்பாள் என்று அவரிடம் உயிர்த்தெழுதல் இல்லை என அர்த்தத்தில் அவரிடம் கேட்டனர். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.. (மத்தேயு 22:29,30) என்று கூறினார். நம்மில் அநேகர் அவருடைய வல்லமையை உணராதவர்களாக தப்பான எண்ணங் கொண்டவர்களாகவே இருக்கிறோம். தேவனுடைய வல்லமையை, பெலனை குறித்து, புதிய ஏற்பாட்டில் அநேக இடங்களில் பார்க்கிறோம். கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது - (ரோமர் 1:16). கிறிஸ்துவின் சுவிசேஷம் தேவ பெலன் என பார்க்கிறோம். சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது - (1 கொரிந்தியர் 1: 18) சிலுவையின் உபதேசம் நமக்கு தேவ பெலனாயிருப்பதை காண்கிறோம். தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார். - (1 கொரிந்தியர் 6:14) உயிர்த்தெழுதலின் வல்லமையை நமக்கு தேவ பெலனாயிருப்பதை காண்கிறோம்.

.

மட்டுமல்ல, பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்று இயேசுகிறிஸ்து கூறினார் (அப்போஸ்தலர் நடபடிகள் 1:8). இங்கு வசனத்தை பாருங்கள், பரிசுத்த உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைவீர்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நாட்களில் பரிசுத்த ஆவியானவர் வரும்போது, கீழே விழுவதும் மற்றும் அநேக காரியங்களும் நடக்கிறது. ஜாக்கிரதையாய் இருப்போம்!

.

தேவ பெலன் வரும்போது நாம் கர்த்தருக்கு சாட்சிகளாய் இருப்போம். பரிசுத்த ஆவியானவர் நம்மை எல்லா சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையில்லாமல் ஊழியம் செய்வதும் வீணானதே. ஏனெனில் கிரியை செய்கிறவர் அவரே.

.

இன்று யாராவது ஆவிக்குரிய வாழ்வில் மரித்தவர்களாயிருந்தால் அது அவர்கள் தேவ பெலனை பெற்று கொள்ளாததே காரணம், உடனே நாம் எந்த வல்லமையில் இருக்கிறோம் என்று பார்த்து, எல்லா வல்லமையையும் தருகிற சர்வ வல்லமையுள்ள தேவனின் மேல் சார்ந்து, அவருடைய வல்லமையை பெற்று கொள்ளுவோம். அவர் தருகிற வல்லமை நம்மை அவருக்கு நேராய், இந்த உலகத்தில் பாவமில்லாமல் வாழ வேண்டிய கிருபைகளை நமக்கு பெற்று தரும். அவருக்கு சாட்சியாய் வாழ கர்த்தர் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

.

இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார்

எனக்கென்ன ஆனந்தம்

எந்தன் இதயமே உம்மை பாடும்

எந்தன் நினைவுகள் உமதாகும்

ஜெபம்

எங்கள் பெலனாகிய கர்த்தாவே உம்மில் அன்பு கூறுவோம். எங்களை பெலத்தினால் நிறைக்கிறவரே உம்மை துதிக்கிறோம். பெலனில்லாதவன் ஆவிக்குரிய வாழ்வில் மரிப்பானே, உம்முடைய பெலனை பெற்றுக்கொள்ள கிருபை செய்யும். மற்றும் எங்களை பெலப்படுத்துகிற தேவ ஆவியானவரை பெற்று உமக்கென்று சாட்சியாக வாழ கிருபை செய்வீராக. நீரே எங்கள் வாழ்வின் பெலனாய் இருப்பதற்காக உம்மை துதிக்கிறோம். தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நாங்கள் அறியும்படிக்கு, நீர் எங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்று உம்மிடத்தில் வேண்டிக் கொள்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

..

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

இந்த வார வாக்குத்தத்தம் & விவிலிய விடுகதைகள் : -11th August 2013

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

விவிலிய விடுகதைகள்

இரண்டெழுத்து பெண்

மூன்றெழுத்து ஆணை மணந்து

ஓபேதை பெற்றாள்   -அவள் யார்?

 

விடை: ரூத். மத் 1:5.

====================================
 மறுபடியும் மறுபடியும் சொன்னாலும்

மனதுக்குள் இது வருவதில்லை.

மற்றக் கவலைகள் மலையாய் சேர

மறுபடியும் அது தேவைதானே  -அது என்ன?

 

விடை: சந்தோஷம். பிலி 4:4.

====================================

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

 

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

9th August 2013 - எதை நாடுகிறோம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி - வெள்ளி கிழமை
எதை நாடுகிறோம்?
.....

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். - (மத்தேயு 6:33).

.
நம் ஒவ்வொருவருடைய விருப்பங்களும் நமது வயதுக்கும், நாம் இருக்கும் நிலவரத்திற்கும் தக்கதாக வேறுபடுகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள நல்ல மதிப்பெண்கள் பெற்று தங்களுக்கு நல்ல வேலையை பெற்று தரக்கூடிய தொழிற்கல்வி கற்க்க விரும்புகின்றனர். படித்து முடித்தவர்கள் அதிக வருமானத்தை தரக்கூடிய நல்ல வேலையில் சேர பிரும்புகின்றனர். நல்ல வேலையில் சேர்ந்தவர்கள் வெளிநாடு சென்று அதிக பணம் சம்பதிக்க விரும்புவர். இப்படி நல்ல வேலை, நல்ல வாழ்க்கை துணை, நல்ல வீடு என்று நம்முடைய விருப்பங்கள் விரிந்து கொண்டே போகின்றன. 'எனக்கு' இவையெல்லாம் வேண்டும் என்று இன்னும் பல விருப்பங்கள் நம் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் உண்டு.

.

ஆனால் 'என்னில்' இவையெல்லாம் வேண்டுமென்று நாம் எவற்றை எல்லாம் விரும்புகிறோம்? தாவீது கொல்கிறார், 'தேவனே சுத்த இருதயத்தை 'என்னிலே' சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். ஈசோப்பினால் என்னை சுத்திகரியும்' என்று தாவீது தன்னிலே பெற்று கொள்ள வேண்டியவற்றிற்காக ஜெபிக்கிறார். ஆனால் அவர் பாவத்தில் விழுந்து விட்டபின்பே இந்த ஜெபத்தை ஏறெடுத்தார். நாம் பாவத்தில் விழுந்து விடாதபடிக்கு அனுதினமும் காலையில் எழுந்தவுடன் இந்த ஜெபத்தை ஏறெடுக்க பழகி கொண்டால் நம்மை பாவத்தில் விழாதபடி தேவன் காத்து கொள்வார்.

.

நம்முடைய ஜெபத்திலே அதிக பாரத்தையும், நேரத்தையும் எடுப்பது 'எனக்காகவா' அல்லது 'என்னிலே' மாற்றம் கொண்டு வாரும் என்று ஜெபிப்பதற்காகவா? என் கடன் பாரம் தீர வேண்டும், என் வீடு கட்டி முடிக்க உதவும், என் பிள்ளை நன்றாக படிக்க வேண்டும், என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும், எனக்கு நல்ல துணை கிடைக்க வேண்டும் என்பது தானே நம் ஜெபத்தில் அதிகம்! ஆனால் தாவீதை போல தேவனே என்னில் மாற்றம் தாரும் என ஜெபிப்பவர்கள் வெகு சிலரே. என்னில் தாழ்மையை தாரும், பொறுமையாயிருக்க செய்யும், அன்பு நிறைந்த உள்ளத்தை என்னிலே சிருஷ்டியும் என நமக்குள் ஏற்பட வேண்டிய மாற்றத்திற்காக நாம் அதிகமாக ஜெபிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நமது ஒவ்வொரு அவயவங்களையும் கர்த்தருடைய பலிபீடத்தில் வைத்து அவர் நம்மை பரிசுத்தப்படுத்தும்படி மன்றாடுவோம். அந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் ஆண்டவரின் நினைவாய் இருக்க ஜெபிப்போம். நம் வாயின் வார்த்தைகளெல்லாம் பிறர் காயம் ஆற்ற கூடியதாக இருக்க ஜெபிப்போம்.

.

பிரியமானவர்களே, அன்று சாலொமோன் ராஜா இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்த ஞானமுள்ள இருதயத்தை மட்டும்தான் கேட்டான். ஆனால், தேவன் அவன் கேளாத மற்ற எல்லா ஐசுவரியங்களையும் அவனுக்கு கொடுக்கவில்லையா? அதுபோல நமது எண்ணமும் 'எனக்கு எனக்கு' என்றிராதபடி 'என்னிலே' என்று ஜெபிக்கிறவர்களாய் மாறுவோம். சுத்திகரிக்கப்பட்ட பாத்திரத்திலே எவரும் பாலை ஊற்றுவார்கள். இல்லாவிட்டால் பாத்திரத்திலுள்ள அசுத்தம் பாலை கெடுத்து விடும். அதுபோல நம்மை சுத்தமாக காத்து கொள்வோமானால், நமக்கு வேண்டிய ஆசீர்வாதங்கள் தானாய் வந்து நம் வாழ்வை நிரப்பும். நமது சரீரத்திற்காக அல்ல, ஆத்துமாவிற்காக கவலைப்படுவோம். சரீரத்தின் தேவைகளை தேவன் பார்த்து கொள்வார். ஆமென் அல்லேலூயா!

.

என் ஆத்துமாவும் சரீரமும்

என் ஆண்டவர்க்கே சொந்தம்

இனி வாழ்வது நானல்ல

என்னில் இயேசு வாழ்கின்றார்

...

கர்த்தாவே உம் கரத்தில்

நான் களிமண் போலானேன்

உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்

என்னை எந்நாளும் நடத்திடும்

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் எங்கள் சரீர தேவைகளுக்காக மாத்திரம் ஜெபிக்கிறவர்களாக இல்லாதபடி, எங்கள் ஆத்தும ஈடேறும்படியாக ஜெபிக்கிறவர்களாக எங்களை மாற்றும். எங்கள் உள்ளான மனிதன் பெலப்படும்படியாக, ஆவியின் கனி எங்களில் காணப்படும்படியாக நாங்கள் எங்கள் ஆத்துமாவை ஒவ்வொரு நாளும் உம்முடைய கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறவர்களாக எங்களை மாற்றும். முதலாவது தேவனுடைய ராஜயத்தை தேடுங்கள், மற்றவை கூட கொடுக்கப்படும் என்றீரே, முதலாவது உமது ராஜ்யத்திற்கடுத்தவைகளை தேட கிருபை தருவீராக. அதினால் சரீர தேவைகளை பெற்று கொள்ள கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

8th August 2013 - நூறத்தனையான பலன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி - வியாழக்கிழமை
நூறத்தனையான பலன்
....

'இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'. - (மாற்கு 10:30).

.
ஒரு பெரிய பணக்காரன் இயேசுகிறிஸ்துவிடம் வந்து, 'நான் நித்திய ஜீவனை சுதந்தரிக்க ஆசைபடுகிறேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டான். அப்பொழுது கர்த்தர், 'பத்து கற்பனைகளையும் கைகொள்' என்று கூறினார். அதற்கு அவன், 'அவற்றை எல்லாம் நான் என் சிறுவயது முதல் கைப்பற்றி வருகிறேன். வேறு ஏதாவது செய்ய வேண்டுமா?' என்று கேட்டான். அப்போது இயேசுகிறிஸ்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: 'உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா' என்று அன்போடு கூறினார். ஆனால் அவன் பெரிய பணக்காரனாயிருந்தபடியால், அவற்றையும், அந்த பணத்தின் சொகுசு வாழ்க்கையையும் விட்டு விட மனமில்லாமல், துக்கத்தோடு போய் விட்டான். இயேசுகிறிஸ்துவிடம் வந்து துக்கத்தோடு சென்றவன் இவன் ஒருவன் மாத்திரமே!

.

இதை கவனித்து கொண்டிருந்த அப்போஸ்தலனாகிய பேதுரு, 'ஐயா, இந்த மனிதன் தன் ஐசுவரியத்தை விட்டு விட்டு வர இவ்வளவு கஷ்டப்படுகிறானே, தன்னுடைய பரலோக வாழ்வையே அதற்காக தியாகம் செய்து விட்டு போகிறானே, எங்களை பாருங்கள், நீர் எங்களை அழைத்தவுடன் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மை பின் தொடர ஆரம்பித்து விட்டோம். எங்கள் மனைவி பிள்ளைகளையும், சொத்தையும், எங்கள் தொழிலாகிய மீன் பிடித்தலையும் கூட விட்டுவிட்டு உம்மை பின்தொடர்ந்து வந்திருக்கிறோமே, எங்களுக்கு என்ன கிடைக்கும்?' என்று இயேசுகிறிஸ்துவிடம் கேட்டார்.

.

இன்று அநேக ஊழியக்காரர்கள் தங்கள் சொத்துக்களை விற்று தேவ ஊழியத்திற்கு வந்திருக்கிறார்கள். சிலர் தாங்கள் படித்த கல்வி சான்றிதழ்களை கிழித்துவிட்டு, கர்த்தருடைய ஊழியத்தை நிறைவேற்றுகிறார்கள். சிலர் தங்கள் வீடுகளையும், தங்கள் கார், பங்களா என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கர்த்தருக்காக, கர்த்தர் சொல்லும் இடத்தில் சென்று ஊழியம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உள்ளத்தில், பேதுருவை போல 'இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, எங்களுக்கு என்ன ஐயா கிடைக்கும்' என்ற கேள்வி இருந்தால், நிச்சயம் அவர்களுக்கும் பதில் உண்டு. பேதுரு இந்த கேள்வியை கேட்டதினால்தான் கர்த்தரிடமிருந்து அருமையான பதில் நமக்கும் கிடைத்தது. 'அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்று அருமையான பதிலை கூறுகிறார். அது அப்படியே அப்போஸ்தலனாகிய பேதுருவின் வாழ்வில் நடந்தது.

.

என் வாழ்விலும் ஒருமுறை என் மனதில் சத்துருவானவன் சில எண்ணங்களை கொண்டு வந்தான். 'நீ கர்த்தருக்காக எத்தனையோ காரியங்களை செய்கிறாயே, தியாகங்களை செய்கிறாயே, உன்னை பாராட்டுவாரும், உன்னை போற்றுவாரும் யாரும் இல்லையே, நீ ஏன் இவற்றை செய்ய வேண்டும்?' என்று எண்ணங்களை மனதில் கொண்டு வந்து கொண்டேயிருந்தான். நான் கர்த்தருக்காக செய்வது சிறிய காரியமாயிருந்தாலும், அவன் என்னிடம் நான் என்னவோ பெரிய காரியங்களை செய்வது போலவும், பெரிய தியாகங்களை செய்தது போலவும் எண்ணத்தில் கொண்டு வந்து, என்னுடன் போராட ஆரம்பித்தான். அது ஒரு பெரிய போராட்டமாகவே இருந்தது. இந்த எண்ணங்களை கொண்டு வந்த அடுத்த நாள், நான் சத்துருவிடம் நேரடியாக, ' இதோ பார் சாத்தானே, நான் மற்றவர்கள் புகழ வேண்டும் என்பதற்காகவோ, மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காகவோ கர்த்தருடைய ஊழியத்தை செய்யவில்லை. கர்த்தர் மேல் நான் கொண்டிருக்கும் அன்பினால் இவற்றை செய்கிறேன். நான் இந்த ஊழியங்களை செய்ய ஆரம்பிக்கும்போதே, தேவனிடம், என் பெயரோ, புகழோ வேண்டாம் தகப்பனே, உம்முடைய நாமம் மாத்திரம் இவற்றின் மூலம் மகிமைப்பட வேண்டும் என்று கேட்டுத்தான் இந்த ஊழியங்களை ஆரம்பித்தேன். ஆகவே நீ என்னை எந்த எண்ணங்களை கொண்டும் அசைக்க முடியாது, போ உன் அஸ்திராயுதங்களை எடுத்து கொண்டு, வேறு யாரிடமாவது காட்டு, என்னிடம் எதுவும பலிக்காது' என்று கட்டளையிட்டேன். அன்று சென்றவன்தான், இன்று வரை என்னிடம் வாலாட்ட வரவேயில்லை. வரவும் முடியாது.

.

நாம் கர்த்தருக்காக எதை இழந்தாலும், கர்த்தர் இந்த உலகத்திலேயே மனைவியை தவிர மற்ற எல்லாவற்றையும் நூறத்தனையாகவும், பரலோக வாழ்விலே நித்திய ஜீவனையும் நமக்கு தருகிறார். நான் இன்று என் வேலையிடத்திலும், குடும்பத்திலும், ஆவிக்குரிய வாழ்க்கையிலும் அனுபவிக்கிற ஆசீர்வாதங்கள் தேவன் எத்தனையாய் தம் வார்த்தையில் உண்மையுள்ளவராயிருக்கிறார் என்பதை வெளிப்படுத்தி காட்டி கொண்டேயிருக்கின்றன.

.

கர்த்தருக்காக எதையாவது இழந்திருக்கிறீர்களா? ஊழியக்காரர்களே, உங்கள் சொத்தையும், உங்கள் வீட்டையும், உங்கள் எல்லாவற்றையும் இழந்து கர்த்தர் சொன்ன இடத்தில் ஊழியத்தை நிறைவேற்றி கொண்டிருக்கிறீர்களா? கர்த்தர் உங்கள் தியாகத்தையும், நீங்கள் அவர்மேல் கொண்டிருக்கிற அன்பையும் அறிந்திருக்கிறார். நிச்சயமாகவே அவர் நூறத்தனையாக எல்லாவற்றையும் திருப்பி தருவார். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கர்த்தருக்காக உண்மையாக வாழ்வோம். அவருடைய நாமம் மகிமைப்படும்படியாக ஜீவிப்போம். நம் பெயர் புகழ் எதுவும் இல்லாமல், அவருடைய நாமம் மாத்திரம் நம்மில் மகிமைப்படும்படியாக வாழ்வோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா!

.

கிறிஸ்துவுக்காய் இழந்தவர் எவரும்

தரித்திரர் ஆனதில்லை

இராஜ்ஜிய மேன்மைக்காய்

நஷ்டப்பட்டோர் கஷ்டப்பட்டதில்லை

...

உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்

உலகத்தின் இறுதிவரை

கல்வாரி தொனிதான் மழைமாரி பொழியும்

நாள் வரை உழைத்திடுவோம்


ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, கிறிஸ்துவின் இராஜ்யம் பரவுவதற்காக எத்தனையோ பேர் தங்கள் ஜீவனையும், தங்களுடைய அன்புக்குரியவர்களையும், தங்கள் சொத்து சுகங்களையும் இழந்திருக்கிறார்களே, அவர்களுக்கு ஆறுதலாக தேவன் கொடுத்த அருமையான வாக்குதத்தத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம். உமக்கென்று கொடுத்தவர்கள் எதையும் இழக்கவில்லை, கஷ்டப்படுவதில்லை என்ற உற்சாகத்தை கொடுத்து, இன்னும் உமக்கென்று அதிகமாக உழைக்க கிருபை தருவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

..

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.