Friends Tamil Chat

வியாழன், 28 பிப்ரவரி, 2013

28th Feb 2013 - பலனளிக்கும் தேவன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
28th Feb 2013 - Thursday
பலனளிக்கும் தேவன்
...

'நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமல்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'. - (மாற்கு 9:41).


ரேபோல்டஸ் (Ray Boltz) என்பவர் எழுதிய Thank You என்கிற பாடலிலிருந்து இந்த நாளின் தியானம் எழுதப்பட்டது.

'ஒரு நாள் பரலோகத்திற்கு சென்றது போல கனவு ஒன்றை கண்டேன். அந்த கனவில் இதை வாசிக்கிற நீங்களும் என்னோடு பரலோகத்தின் பொன்னான வீதிகளில் உலாவ வந்தீர்கள். அங்கிருந்த பளிங்கு கடலின் ஓரத்தில் கடலின் அழகை ரசித்த வண்ணம் நீங்களும் நானும் பேசி கொண்டிருந்தோம். சூரியனோ, சந்திரனோ இல்லாவிட்டாலும் சொல்லி முடியாத ஒரு மகிமையான ஒளி பரலோகத்தை நிறைத்திருந்தது. தேவனுடைய சொல்லி முடியாத கிருபைகளை எண்ணி நம் இருவருடைய இருதயமும் பூரிப்பினால் நிறைந்திருந்தது.

அப்போது உங்களுடைய பெயரை சொல்லி யாரோ அழைக்க, நீங்கள் திரும்பி பார்த்தபோது, ஒரு மனிதன் உங்களை நோக்கி புன்முறுவலோடு நடந்து வந்தார். இது யார் என்று நீங்கள் திகைத்து ஆச்சரியத்தோடு பார்த்து கொண்டிருக்கும்போது அம்மனிதன் அருகே வந்து, 'சகோதரனே, என்னை ஒரு வேளை உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம், நான் சிறுவயதாயிருக்கும்போது நீங்கள் செல்லும் ஆலயத்திற்கு வருவேன். அங்கே நீங்கள் சிறுபிள்ளைகளுக்காக சன்டே கிளாஸ் எடுப்பீர்கள். சபையிலுள்ள மற்றவர்கள் இதை பெரிதாக நினைக்காவிட்டாலும், உத்தமமாய் அந்த ஊழியத்தை செய்தீர்கள். ஓவ்வொரு வாரமும் நீங்கள் எனக்கு போதித்த சத்தியங்களும், கற்று கொடுத்த ஜெபங்களும் என் உள்ளத்தில் எழுதப்பட்டு கொண்டே இருந்தது. ஒரு நாள் அப்படிப்பட்ட ஜெபவேளையில் என் இருதயத்தை இயேசுவுக்கு கொடுத்தேன். இரட்சிக்கப்பட்டேன். அன்று தொடங்கிய என் கிறிஸ்தவ வாழ்க்கை ஆசீர்வதமாக நிறைவேறி இன்று நான் மகிமையான இந்த பரவோக இன்பத்தில் இருக்கிறேன். இரட்சிப்பின் வழியை எனக்கு காண்பித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி! நன்றி!

அந்த மனிதன் பேசி சென்ற சில நிமிடங்களிலேயே மற்றொரு நபர் அங்கே வந்தார். அவர் நீங்கள் பார்த்திராத வேறொரு நாட்டு நபர் போல் இருந்தார். அவர் வந்து உஙகளிடத்தில் 'சகோதரனே என்னை உங்களுக்கு நிச்சயமாக தெரியாது. ஆனால நான் இங்கே இருப்பதற்கு நீங்களும் ஒருகாரணம். உங்கள் சபையிலிருந்து மிஷனெரி ஒருவர் எங்கள் மத்தியிலே தனனை அர்ப்பணித்து வந்தார். எங்கள் இன மக்களுக்கு இரடசிப்பு எவ்வளவு அவசியம் என்பதை குறித்து உங்கள் மத்தியில் பாரத்தோடு பகிர்ந்து கொண்டபோது அவரது வார்த்தைக்கு நீங்கள் செவி கொடுத்தீர்கள். உங்களிடத்தில் கொடுப்பதற்கு அதிக பணம் இல்லாவிட்டாலும் உங்கள் கையிலிருந்தததை முழுமனதோடு கொடுத்தீர்கள். அதினிமித்தம் அந்த மிஷனெரி எங்கள் மத்தியில் பணியாற்றி எங்கள் இன மக்களையே இரடசிப்பிற்குள் வழி நடத்தினார். நண்பரே நீங்கள் கிறிஸ்துவுக்காக கொடுத்த காணிக்கைக்கு நன்றி! நன்றி!

சற்றுநேரத்தில் இன்னொருவர் வந்தார். உங்களுக்கு அவரை கொஞ்சம் அடையாளம் தெரிந்தது. ஒருமுறை அவருக்கு கைப்பிரதி கொடுத்து சுவிசேஷம் அறிவித்தீர்கள். உங்களுக்கு அதிகமான திறமையில்லை என்று சொல்ல, இதுதான் என்னால் முடிந்ததென்று அந்த ஊழியத்தை ஜெபத்தோடு செய்தீர்கள். அதினிமித்தம் நான் இங்கு வந்தேன் என்று கூறி உங்களுக்கு நன்றி கூறினார்.

பின் ஒருவர் வந்தார், அவர் உங்களிடம் 'நீங்கள் திறப்பின் வாசலில் எங்கள் தேசத்திற்காக ஜெபித்தீர்கள். எங்கள் தேசம் இரும்பு திரையாக சுவிசேஷத்திற்க்கு எதிர்த்து நின்ற தேசமாகும். நீங்கள் சபையாக ஜெபித்த ஜெபத்தை கேட்டு, சுவிசேஷத்தின் வாசல்களை தேவன் திறந்தார். அதினால் இரட்சிக்கப்பட்டு, இப்போது நான் பரலோகத்தில் இருக்கிறேன். உங்கள் ஜெபத்திற்காக நன்றி' என்று கூறினார். இந்த You Tube லிங் கிளிக் பண்ணி இந்த பாடலை பார்க்கவும்.

http://www.youtube.com/watch?v=UFrdJ2V3r7Y

இப்படியாக ஒருவர் பின் ஒருவராக உங்கள் நிமித்தம் தொடப்பட்ட மக்கள் வந்து உங்களுக்கு நன்றி கூறினார்கள். நீங்கள் செய்த சிறிய சிறிய காரியங்களும் சிறிய தியாகங்களும் பூமியில் கண்டு கொள்ளப்படாமல் இருந்தாலும் பரலோகில் அது வெளியரங்கமாக விளங்கலாயிற்று. இன்னும் அநேகர் உங்களிடம் நன்றி கூற வந்து கொண்டேயிருந்தனா.

கடைசியாக இயேசுகிறிஸ்து உங்களருகில் வந்து 'மகனே, உன்னை சுற்றிப்பார், உன் பலன் மிகுதி' என்றார். பரலோகத்தில் கண்ணீருக்கு இடமே இல்லை என்றாலும், உங்கள் கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வழிந்து வந்ததை கண்டேன்'.

பிரியமானவர்களே, நாம் கர்த்தருக்காக செய்யும் ஒரு சிறிய காரியமும் வீணாகப்போகப்போவதில்லை. 'நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமல்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்று இயேசுகிறிஸ்து கூறினார். அவருடைய நாமத்தினிமித்தம் நாம் கொடுக்கிற ஒரு கலசம் தண்ணீருக்கும் பலன் இருக்கும்போது, நாம் அவருடைய நாமத்தினிமித்தம் படுகிற பாடுகள், தியாகமாய் செய்கிற காரியங்கள் எதுவும் நிச்சயமாக வீணாகப் போகப் போவதேயில்லை. கர்த்தர் நிச்சயமாக ஏற்ற நேரத்தில் அதன் பலனை தருவார். ஒருவேளை உலகத்தினர் அதை கண்டு கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் பரலோகத்தில் அதற்குரிய கனம் உண்டு, அதற்குரிய பலன் உண்டு, அதற்குரிய பாராட்டுதல் உண்டு. மனம் தளர்ந்து போகாமல், கர்த்தருக்காக உண்மையாய் உழைப்போம், அறுவடை செய்வோம், பலனை எதிர்பாராமல் உள்ளத்தில் அன்போடு கர்த்தருக்காக பெரிய காரியங்களை செய்வோம். கர்த்தர் நாமம் மகிமைப்படட்டும்! ஆமென் அல்லேலூயா!

உமக்காகப் பாடுபட்டோன் நஷ்டப்பட மாட்டானே

உமக்கென்று ஜீவன் விட்டோன் சாகா ஜீவன் பெற்றானே

உம்மை வல்ல மீட்பர் என்று சொல்லி, நித்தம் பற்றுவேன்

கஸ்தி பட்டும் சாவை வென்று, வாடா கிரீடம் பெறுவேன்

ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, கர்த்தருக்காக நாங்கள் செய்யும் எந்த காரியமும், எந்த தியாகமும், எந்த ஊழியமும், எந்த பாடுகளும் வீணாய் போகாது என்கிற நம்பிக்கைக்காக உம்மை துதிக்கிறோம். நாங்கள் எந்த பலனையும் எதிர்பாராமல், அப்பா எங்களுக்கு பாராட்டின கிருபைகளை நினைத்து, தம் சொந்த குமாரனையே எங்களுக்காக ஈந்த மட்டற்ற அன்பை நினைத்து, உள்ளத்தின் ஆழத்தில் உம்மை நேசிக்கிற நேசத்தோடு அப்பாவுக்கென்று உழைக்க கிருபை தாரும். பேர் புகழுக்காக நாங்கள் எதையும் செய்யாமல், உம்முடைய நாமம் ஒன்றே உயர்த்தத்தக்கதாக உண்மையாய் உழைக்க கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

27th Feb 2013 - பாதுகாக்கும் தேவன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
27th Feb 2013 - Wednesday
பாதுகாக்கும் தேவன்
....

உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். - (சங்கீதம் 91:1).


புகழ்பெற்ற நீச்சல் வீரர் ஒருவர் இருந்தார். அவர் கல்லூரி மாணவர்களுக்கு நீச்சல் கற்று கொடுக்கும் ஆசிரியராகவும் பணி புரிந்தார். தன்னுடைய மீந்த நேரங்களில் நீந்துவது அவரது விருப்பமான பொழுதுபோக்காக இருந்து வந்தது. அவர் வேலை செய்த கல்லூரியில் ஒரு நீச்சல்குளம் ஒன்று இருந்தது. எப்போதெல்லாம் நேரம் கிடைக்குமோ அப்போதெல்லாம் அங்கு சென்று நீந்தி மகிழ்வது அவருடைய வழக்கம்.

அவருக்கு ஒரு நண்பர் இருந்தார். அவரும் அவருக்கு நேரம் கிடைக்கும்போது இவரோடு நீந்த செல்வார். இவர் நீந்துவதற்கு முன் செய்த ஒரு காரியம் நண்பருக்கு புரியாத புதிராக இருந்தது. ஒருநாள் தன் நண்பரையே அவர் கேட்டார், ' நண்பரே, ஒவ்வொரு நாளும் மேலே ஏறி நீரில் குதிப்பதற்கு முன், நீர் உம்முடைய கால் விரல்களை தண்ணீரில் நனைத்து கொள்வது ஏன்?' என்று கேட்டார். அப்போது அவர் நடந்த சம்பவத்தை கூற ஆரம்பித்தார்;

'பல ஆண்டுகளாக நான் இந்த குளத்தில் நீந்த வருகிறேன். ஒருநாள் இரவில் என்னால் தூங்க முடியவில்லை. நன்றாக நீந்தினால் அந்த களைப்பினால் ஒருவேளை தூக்கம் வரும் என்று நினைத்தவனாக இந்த குளத்திற்கு வந்தேன். அன்று நிலா முழுமையாக பிரகாசமாக இருந்தது. நன்கு பிரகாசமாக இருந்ததால் நான் மின்சார விளக்கை ஏற்றாமல், இந்த குதிக்கும் பலகையின் மீது ஏறி குதிக்க தயாரானேன்.

அப்போது சட்டென்று ஒரு நாளும் கவனித்திராத ஒரு நிழலை கண்டேன். நிலாவின் ஒளி பிரகாசத்தில் நான் கைகளை விரித்து தாவும் நிலையில் நின்ற என் சொந்த நிழல் குளத்தின் எதிர் சுவரில் அழகான சிலுவை வடிவமாக காட்சியளித்தது. இதற்கு முன் நான் ஒரு நாளும் அந்த சிலுவை போன்ற நிழலை கவனித்ததேயில்லை. அது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை கொடுத்தது. நான் குதிக்காமல், அந்த சிலுவையையே பார்த்தவாறு கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தேன். என்னையுமறியாமல், 'சிலுவை ஓரு புனித சின்னம்' என்று பாடலை பாட ஆரம்பித்தேன்.

அதன் பின் என்னையுமறியாமல், நான் அங்கு தண்ணீரில் குதிக்காமல், அந்த பாடலை பாடியவாறே கீழே இறங்கினேன். சில படிகள் இறங்கியும் கால்களில் நீர் படவில்லை. கடைசி படியையும் விட்டிறங்கி, குளத்தின் அடித்தளத்தில் நின்றேன். குளத்தை சுத்தப்படுத்த குளத்தின் காவலாளி தண்ணீர் முழுவதையும் அகற்றியிருந்ததை அப்போதுதான் நான் உணர்ந்தேன். அந்த சிலுவை நிழலால் நான் கவர்ச்சிக்கப்பட்டு, என் கவனம் திசை மாற்றப்படாதிருந்தால் நான் தண்ணீரில்லாத குளத்தில் குதித்திருந்திருப்பேன், மரணத்தை தழுவியிருப்பேன். தண்ணீர் இல்லாததால் தான் என நிழல் எதிர் சுவரில் தெரிந்தது என்றும், மற்ற நாட்களில் என் நிழல் கீழே நீரில் விழுகிறதால் தெரியவில்லை என்றும் உணர்ந்தேன்.

அந்த அற்புத விடுதலையை உணர்ந்த போது என் உடல் சிலிர்த்தது. அந்த குளத்தின் அடித்தளத்திலேயே முழங்கால் படியிட்டு என்னை பாதுகாத்த கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு நன்றி சொன்னேன். அந்த நாளிலிருந்து இன்று வரை குதிக்குமுன் நான் என் கால் விரல்களை தண்ணீரில் நனைத்து நீர் அகற்றப்படவில்லை என்பதை அறிந்து பின் குதிப்பது எனக்கு வழக்கமாகி விட்டது' என்று உணர்ச்சி மேலிட கூறினார்.

பிரியமானவர்களே, இந்த சகோதரன் தேவனை நம்பி இருந்தபடியால், அவருடைய ஆபத்து காலத்தில் தேவன் அவரை காப்பாற்றினார். வசனம் சொல்கிறது, 'எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது' என்று வாசிக்கிறோம். கிறிஸ்துவின் அடைக்கலத்தில் வந்த ஒவ்வொருவருக்கும் அவரே புகலிடமாக தஞ்சமாக இருக்கிறார். நாம் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கிற பாதுகாப்பு அவராலே நமக்கு அருளப்பட்டிருக்கிறது. நாம் அறியாதபடி நம்மை சூழ்ந்து இருக்கிற ஆபத்துகள் அதிகம். நாம் அறியாதபடி நாம் மாட்டி கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம். ஆனாலும் தேவனை நாம் அறிந்து அவருக்குள் இருக்கும்போது நம்மை அவர் பாதுகாத்து நம்மை சுற்றி வேலியடைத்து காத்து கொள்கிறார்.

யோபு புத்தகத்தில் நாம் வாசிக்கும்போது, சாத்தான் தேவனிடம், கேட்கிறான், 'நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ?' (யோபு 1:10) என்று. அப்படியென்றால் கிறிஸ்துவை ஏற்று கொண்ட ஒவ்வொருவரையும், அவர்களுடைய வீட்டையும், அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி தேவன் அவர்கள் அறியாமலே சுற்றிலும் வேலி அடைத்து வைத்து காக்கிறார். அல்லேலூயா!

கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா; கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா - (சங்கீதம் 127:1) என்று வாசிக்கிறோம். தேவன் நம்மை காத்து கொள்ளாவிட்டால் நாம் விழித்திருந்து காத்து கொள்வது எல்லாம் விருதாவாயிருக்கும்! அவரை அண்டிக்கொள்வோம். அவரின் பாதுகாப்பை பெற்று வாழ்வோம். வேறு எந்த பாதுகாப்பும் விருதாவே! ஆமென் அல்லேலூயா!

தேவன் எந்தன் அடைக்கலமாமே

ஒருபோதும் பொல்லாப்பு வராதே

சர்வ வல்ல தேவன் தாபரமாய் நின்றே

விடுவித்துக் காத்திடுவார்

..

துதிப்போம் அல்லேலூயா பாடி

மகிழ்வோம் மகிபனைப் போற்றி

மகிமை தேவ மகிமை

தேவ தேவனுக்கே மகிமை அல்லேலூயா

ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, தேவனே நீரே எங்கள் கோட்டையாக எங்கள் அரணாக, எங்கள் துருகமாக, எங்கள் தஞ்சமாக இருக்கிற தயவிற்காக உமக்கு ஸ்தோத்திரம். நீர் அறியாதபடி எங்களுடைய தலையிலுள்ள ஒரு முடியும் கூட கீழே விழாது என்கிற நம்பிக்கைக்காக உமக்கு ஸ்தோத்திரம். எங்களுடைய போக்கையும் வரத்தையும், எங்கள் வேலையிடங்களிலும் உம்முடைய கிருபையினால் இந்த நாள் வரை பாதுகாத்து வருகிற கிருபைக்காக உமக்கு நன்றி. தொடர்ந்து எங்களையும், எங்களுடைய வீட்டையும், எங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி நீர் வேலியடைத்து காத்து கொள்வதற்காக உமக்கு கோடி ஸ்தோத்திரங்கள் தகப்பனே. எங்கள் துதி ஸ்தோத்திரங்களை இயேசுகிறிஸ்துவின் மூலமாக உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

26-Feb-2013 - பயப்படாதிருங்கள்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
பயப்படாதிருங்கள்

நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். - (ஆதியாகமம் 15:1).


இந்நாட்களில் பயம் என்னும் காரியம் மனிதனை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. சிலருக்கு எதையெடுத்தாலும் பயம். சிலருக்கு இருட்டைக் கண்டால் பயம், சிலருக்கு வியாதியைக் குறித்து பயம், சிலருக்கு எதிர்காலத்தை நினைத்து பயம் இப்படி பயம் பல விதங்களில் மனிதனுக்கு வருகிறது.

ஒரு வாலிபன், அவனுக்கு ஒரு வியாதியும் இல்லை, ஆனால் தனக்கு எப்போதும் நெஞ்சில் வலியிருப்பதைப் போல ஒரு உணர்வு, தான் சீக்கிரம் மரித்துவிடுவோமோ என்று பயம். அதனால் தினமும் ஆஸ்பத்திரிக்குச் சென்று, தினமும் ECG எடுத்துப் பார்த்து திருப்திபட்டுக் கொள்வான். அங்குள்ள டாக்டர்களும் நர்சுகளும் இவன் வந்தால், தினமும் ECG எடுக்கத்தான் வருகிறான் என்று ஆரம்பத்தில் அக்கறையாக கவனித்தவர்கள், பிற்பாடு ஒரு வருடகாலமானபோது, அவனை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். ஏனென்றால், அவனுடைய ECG எப்போதும் நார்மலாக இருந்தது. ஒரு நாள் அவன், உண்மையில் நெஞ்சுவலியுடன் வந்தபோது, அவனை கவனிப்பார் இல்லை. எல்லாரும் மற்ற நோயாளிகளுடன் பிஸியாக இருந்தபடியால், அவன் எப்போதும் வருகிறவன்தானே என்று மெத்தனமாக விட்டுவிட்டார்கள். ஆனால் அவன் உண்மையாகவே நெஞ்சுவலிவந்து, அந்த நாளில் மரித்துப் போனான். இது உண்மையில் நடந்த சம்பவம். யோபு சொல்வதுப் போல 'நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது' - (யோபு 3:25) அந்த வாலிபனுக்கு நேரிட்டது.

இன்னும் சிலருக்கு இந்த வியாதி தனக்கு வந்து விடுமோ, கேன்சர் வந்து விடுமோ, இரத்த பரிசோதனை செய்யும் போது ஏதாவது ஒரு லெவல் அதிகமாக வந்துவிட்டால் போதும், உடனே தனக்கு இருதய வியாதி வந்து விடுமோ என்று பயங்கர பயம். இது கிறிஸ்தவர்களையும் அதிகமாய் பாதிக்கிறது என்றால் மிகையாகாது. வியாதி வருவதைக் குறித்து மாத்திரமல்ல, அது வந்தால் தான் சீக்கிரம் மரித்துப் போய் விடுமோ என்பதுதான் மிகப் பெரிய பயம்.

நான் சில நேரங்களில் மரிக்கும் மனிதர் முன்பு இருந்திருக்கிறேன். அவர்கள் மரிப்பதற்கு முன்பு தங்கள் கைகளை ஆட்டி போராடுவதை கண்கூடாக கண்டிருக்கிறேன். அப்போது நான் நினைப்பது உண்டு, சாவின் தூதன் வரும்போது, இவர்கள் சாகாதபடிக்கு அவனோடு போராடுகிறார்கள் என்று. மரித்தப்பின் அவர்களின் முகத்தில் வேதனையின் சாயல் தெரியும். கிறிஸ்து இல்லாமல் மரிக்கும் மானிடருக்கு சாவைக் குறித்த நம்பிக்கை இல்லை. நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக (எண்ணாகமம் 23:10) என்று பிலேயாம் தீர்க்கதரிசி வேண்டுகிறான். அநேக பரிசுத்தவான்கள், தங்கள் சாவு மிகவும் பயங்கரமாக, கொடியதாக, சித்தரவதை செய்யப்பட்டு மரித்தாலும், சந்தோஷமாக தங்கள் ஜீவனை ஒப்புக் கொடுத்தார்கள். ஏனென்றால் தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்ளூ என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான். (மத்தேயு 16:25) என்பதை அவர்கள் அறிவார்கள்.

பிரியமானவர்களே, நம்மைப் படைத்த தேவன் யார் என்கிற அறிவு நமக்கு இருக்க வேண்டும். அவர் சர்வ வல்லமையுளள் தேவன். அவர் சித்தமில்லாமல் நம் தலையிலிருந்து ஒரு முடிக் கூட கீழே விழுவதில்லை. அப்படி இருக்கும்போது, நாம் எதைக் குறித்தும் ஏன் கவலைப்பட வேண்டும்? பயப்பட வேண்டும்? ஜீவனுள்ள தேவன் நம்மோடு கூட இருக்கும்போது இருளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்? இருள் நம்மை சூழ்ந்தாலும் அவர் வெளிச்சமாய் நம்மைக் காத்துக் கொள்வாரே! இந்த உலகத்தில் இருக்கிறவனிலும் நமக்குள் இருக்கிறவர் பெரியவர். பெருங்காற்று அடித்து, கடல் கொந்தளித்தபோது, சீஷர்கள் பயந்திருக்கும்போது பயப்படாதிருங்கள் என்று சொல்லி அவர்களை கரைசேர்த்த தேவன் (யோவான் 6:18-21) இன்றும் நம் வாழ்க்கையில் வரும் கொந்தளிப்புகளையும், புயல்களையும் அடக்கி, நம்மை கரை சேர்க்க வல்லவராயிருக்கிறார். வேதாகமத்தில், 365 தடவை பயப்படாதிருங்கள் என்று தேவன் நம்மை ஆறுதல்படுத்துகிறார். அது வருடத்தின் ஒவ்வொரு நாளும் நம்மை பயப்படாதிருங்கள் என்று ஆறுதல் படுத்துவதற்கு சமம். தேவன் நம்மை நேசிப்பதால் நம்மை பயப்படாதிருங்கள் என்று தேற்றுகிறார்.

ஆகவே எதைக் குறித்தும் பயப்படாதிருங்கள். யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப்பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். - (ஏசாயா 43:1). என்று நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர், அவர் நம்மை கடைசி பரியந்தம் காத்துக் கொள்ள வல்லவராயிருக்கிறார்.

அநேகருக்கு எதிர்காலத்தை குறித்த பயம்! எதிர்காலம் நமக்குண்டு, அதனால் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. நம்மை உள்ளங்கைளில் வரைந்து நம்மை பாதுகாக்கிற தேவன் நமக்கு உண்டு. நம் ஜீவனைக் குறித்தும் நமக்கு என்னவாகுமோ என்றும் நாம் பயப்படக் கூடாது. தேவனை ஏற்றுக் கொண்டவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. இன்று நாம் மரி;த்தால் நாம் தேவனோடு இருப்போம். மரிக்காவிட்டால் தேவ்ன நம்மோடு கூட இருக்கிறார். ஆதலால் நாம் அஞ்ஞானிகளைப் போல பயப்படக்கூடாது. நம் காலங்கள் நம் கர்த்தருடைய கரங்களில் இருப்பதால் எதைக் குறித்தும் பயப்படாமல், எல்லாவற்றையும் தேவன் மேல் வைத்து அவருக்கென்று வாழ்வோம். பயப்படாமல் வாழ்வோம். ஆமென் அல்லேலூயா!

பயப்படாதே வலக்கரத்தாலே தாங்குவேனே

என்றதாலே ஸ்தோத்திரம்

பாசம் என்மேல் நீர் வைத்ததினால்

எவரும் பறிக்க இயலாதென்னை

ஜெபம்
எங்களை பயப்டாதிருங்கள் என்று சொல்லி தேற்றுகிற எங்கள் நல்ல கர்த்தாவே, உம்மைத் துதிக்கிறோம். நீர் எங்களுடன் இருக்கும்போது நாங்கள் எதைக் குறித்தும் பயப்பட தேவையில்லையே, நீர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வீரே அதற்காக உம்மைத துதிக்கிறோம். இந்நாட்களில் இருக்கிற பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தங்கள் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று தவிக்கிற ஒவ்வொருவரையும் உம்முடைய வார்த்தைகளினால் தேற்றுவீராக. ஆறுதல் படுத்துவீராக. அவர்களுடைய தேவைகளை சந்திப்பீராக. அவர்களுடைய எதிர்காலம் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய உம்மிடத்தில் உள்ளது என்பதை உள்ளத்தின் ஆழத்தில் விசுவாசிக்க அவர்களுக்கு உதவிச் செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

25th Feb 2013 - கர்த்தரையே சார்ந்து கொள்ளுதல்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
கர்த்தரையே சார்ந்து கொள்ளுதல்

'அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான். ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று'. - (2 இராஜாக்கள் 18:6,7).


ஒரு சிறு பெண் தன் தாயிடம் வந்து, 'அம்மா பாருங்கள், எனக்கு எல்லாம் ஒன்றும் சரியாகவே நடக்கவில்லை, கிளாஸில் டீச்சர் சொல்லி கொடுக்கிற அல்ஜீப்ரா பாடம் மனதில் பதிய மாட்டேன் என்கிறது, அதனால் பரிட்சையில் பெயில் ஆகி விட்டேன். என் அன்பு தோழி என்னை விட்டு விட்டு வேறு ஒருத்தியுடன் பிரண்ட் ஆகி விட்டாள், ஏனம்மா எனக்கு இப்படி நடக்கிறது' என்று அழுதாள்.

அப்போது அவளுடைய தாயார் கேக் செய்து கொண்டிருந்தார்கள். அவளிடம், 'உனக்கு கேக் செய்கிறேன், பிடிக்கும்தானே' என்று கேட்டார்கள். அப்போது அவள், 'ஆம், அம்மா எனக்கு நீங்கள் செய்கிற கேக் மிகவும் பிடிக்கும்' என்று கூறினாள்.

அப்போது அவளுடைய தாயார், ' இந்தா, கொஞ்சம் எண்ணெயை எடுத்து குடித்து கொள்' என்றார்கள். அதற்கு அவள், 'ஐயெ, சீ' என்றாள். 'சரி, இந்தா, இரண்டு பச்சை முட்டை அதையும் வாயிலே போட்டு கொள்' என்றார்கள், 'என்னம்மா, நீங்கள்' என்று அந்த பெண் கேட்டாள். அம்மா விடாமல், 'கொஞ்சம் மாவையும் அதோடு, சோடா உப்பையும் கூட சேர்த்து வாயில் போட்டு கொள்' என்று கூறினார்கள். அப்போது அந்த பெண், 'என்னம்மா நீங்கள் சொல்கிறீர்கள், அதையெல்லாம் எப்படி நான் அப்படியே வாயில் போட்டு கொள்ள முடியும்' என்று கேட்டாள்.

அப்போது அந்த தாயார், 'ஆம் மகளே, இவையெல்லாம் தனியாக பார்த்தால், அப்படியே சாப்பிட்டு விட முடியாது, அவையெல்லாம், பச்சையாக, பிரயோஜனமற்றதாக விரும்பதகாததாக தோன்றும், ஆனால், அவற்றை சரியான விகிதத்தில் கலந்து, சரியான முறையில் சமைக்கும்போது, எல்லரும் விரும்புகிற அருமையான கேக் ஆக மாறும்.

அதுபோல, தேவனும் நம்முடைய வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு துன்பமான நிகழ்ச்சிகளையும், விரும்பதகாத காரியங்களையும், நாம் அவரை சார்ந்து கொள்ளும்போது, இனிமையாக மாற்றி தருவார்' என்று கூறினார்கள். அவர் எல்லா காரியத்தையும் தமது சித்தத்தின்படி செய்யும்போது, அவை நன்மையாக முடியும் என்பது அவருக்கு தெரியும். ஆனால், நாம் அவரை சார்ந்து, அவரை மாத்திரம் பற்றி கொண்டிருக்கும்போது, நம்முடைய எல்லா நம்பிக்கையற்ற நிலைமைகளையும் அவர் மாற்றி, நிச்சயமாக அற்புத விடுதலையை தருவார்.

எசேக்கியா இராஜா அரசனானபோது, 'அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான். ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அனுகூலமாயிற்று' (2 இராஜாக்கள் 18:6,7) என்று வேதத்தில் பார்க்கிறோம். அந்த ராஜா கர்த்தரை சார்ந்திருந்தபடியால், கர்த்தர் அவனோடிருந்தார், அவன் போகிற இடமெல்லாம் அவனுக்கு அனுகூலமாயிற்று. அவன் செய்தவற்றை எல்லாம் தேவன் ஆசீர்வதித்தார். அவனுக்கு எதிராக அசீரியா ராஜா பெரிய சேனையோடு, எருசலேமை சுற்றி வளைத்து, தேவனை தூஷித்து, மக்களை திடனற்று போக செய்த போது, எசேக்கியா ராஜா கர்த்தரின் ஆலயத்திற்கு சென்று ஸ்தானாபதிகள் கொண்டு வந்த நிருபத்தை கர்த்தருடைய சமுகத்தில் விரித்து முறையிட்டபோது, கர்த்தருடைய தூதன் புறப்பட்டு வந்து, அசீரியரின் பள்ளத்தாக்கில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரை அந்த ஒரு தூதனே சங்கரித்தான். கர்த்தர் அவனுக்காக யுத்தம் செய்தார். ஏனெனில் அவன் கர்த்தரையே சார்ந்து, அவருடைய கிருபைக்காக காத்திருந்தான். அவன் எதிரிகள் அவன் முன் முறியடிக்கப்பட தேவன் கிருபை செய்தார்.

உங்கள் வாழ்க்கையிலும் தொடர்ந்து துன்பமான காரியங்களா? நான் கர்த்தருக்கு பயந்து நடக்கிறவன், நடக்கிறவள், ஏன் எனக்கு இந்த பாடுகள் என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கு விரோதமாக அநேகர் கூட்டம் கூடியிருக்கிறார்களா? நீங்கள் கர்த்தரை மாத்திரம் சார்ந்து கொள்ளுங்கள். நீரே என் கதி என்று அவருடைய பாதத்தில் சரணடைந்து விடுங்கள். தீமையான யாவற்றையும் கர்த்தர் நன்மையாக மாற்றி தருவார். அவரே கதி என்று வந்த உங்களை அவர் வெட்கப்படுத்த விட மாட்டார். பெலமுள்ளவனுக்காகிலும், பெலனற்றவனுக்காகிலும் உதவிகள் செய்வது அவருக்கு லேசான காரியம்! கர்த்தரை நீங்கள் பற்றி கொள்ளும்போது, அவர் உங்களுக்காக யுத்தம் செய்வார், நீங்கள் ஜெயம் பெற்றவர்களாக வாழுவீர்கள்! ஆமென் அல்லேலூயா!

ஒரு தூதனாலே லட்சத்து வீரரை அழிப்பது லேசான காரியம்

தீமையான காரியங்களை நன்மையாய் முடிப்பதும்

லேசான காரியம் - உமக்கது லேசான காரியம்

லேசான காரியம் எதுவும் லேசான காரியம்

பெலமுள்ளவன் பெலனற்றவன்

பெலமுள்ளவன் பெலமில்லாதவன்

யாராயிருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம்

ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் எங்கள் நல்ல தகப்பனே, இந்த நல்ல நாளுக்காக உம்மை துதிக்கிறோம். நாங்கள் உம்மையே சார்ந்து ஜீவிக்கும்போது, எங்களுடைய காரியங்கள் எல்லாவற்றையும் நீர் அனுகூலமாக்குகிற தயவிற்காக உமக்கு நன்றி. உம்மை உறுதியாய்ப் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் என்ற வார்த்தையின்படி நீர் எங்களை காத்து கொள்வீராக. நீரே எங்களுக்காக யுத்தத்தை செய்யப்போகிறபடியால் உம்மை துதிக்கிறோம். ஜெயத்தை எங்களுக்கு தருகிறபடியால் உம்மை துதிக்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

24th Feb 2013 - கடைசி நிமிடத்தில் அற்புதம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
கடைசி நிமிடத்தில் அற்புதம்

'இனி தப்பிப் பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று, .......பவுல் அவர்கள் நடுவிலே நின்று...... உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது என்றான்.' – (அப்போஸ்தலர் 27: 20 - 22).


குளத்தில் குளித்து கொண்டிருந்த ஒருவன் திடீரென்று அதில் மூழ்கி விட்டான். அனைவரும் பதற்றத்தோடு அதை பார்த்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு மாத்திரமே நீச்சலடித்து, மூழ்கி கொண்டிருந்தவனை காப்பாற்ற முடியும். ஆனால் அவரோ அமைதியாக இருக்கிறார். தண்ணீரில் மூழ்கினவன் ஒரு தடவை, இரண்டு தடவை மூழ்கி, மூன்றாம் முறையாக மூழ்க ஆரம்பிக்கிறான். அப்போது நீச்சல் தெரிந்த இவர் குளத்திற்குள் பாய்ந்து சென்று நீரில் மூழ்கினவனை தூக்கி கொண்டு வந்து சேர்த்தார். ஏன் அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்து விட்டு மூன்றாம் முறை மூழ்க ஆரம்பித்தவுடன் பாய்ந்து சென்று காப்பாற்றினார்? பதிலை நீங்களே யூகித்திருப்பீர்கள்! தண்ணீரில் மூழ்கினவனை உடனே நாம் காப்பாற்ற முயற்சித்தால் காப்பாற்றுபனை மூழ்குகிறவன் கட்டி பிடித்து இருவரும் மூழ்க நேரிடும். மூழ்கினவன் தன் சொந்த பெலனை எல்லாம் இழந்தால்தான் அவனை காப்பாற்றுவது எளிது. இதுபோல தான் நமது சில தேவையிலும் தேவன் உதவி செய்ய கடைசி மணித்துளிவரை பொறுத்திருப்பதுண்டு.

வேதத்திலே நாம் பார்ப்போமென்றால், சாறிபாத் விதவையின் வாழ்விலும் கடைசி வேளையில் இதே மாதிரியான ஒரு அற்புதம் நிகழ்ந்தது. கடும் பஞ்ச வேளையில் அவளிடமிருந்த எல்லா பொருட்களும் தீர்ந்து விட்டது. கடைசியாக பானையை வழித்தெடுத்தால் ஒரு படி மாவும், ஒரு கரண்டி எண்ணையும் தேறும். அதில் அடை செய்து சாப்பிட்டு விட்டு உயிரை விட எண்ணினாள். அந்த கடைசி கட்டத்தில் ஆண்டவர் எலியாவை அவளிடத்தில் அனுப்புகிறார். சில வேளைகளில் நம்முடைய வாழ்வில் நமது தேவை உச்சக்கட்டத்தை அடையும்போதுதான் தேவன் நமது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். காரணம் என்ன? நமது சொந்த முயற்சிகளினால் பல இடங்களுக்கு உதவி நாடி சென்று பலரை சந்தித்து, பல கதவுகளை தட்டி எங்கும் உதவிக்கான வாசல் அடைபடும் போது இறுதியில் ஆண்டவரிடத்தில் வந்து 'ஆண்டவரே நீரே என் தஞ்சம், வேறு கதி இல்லை' என்று நாம் சொல்லும் நிலைக்கு வரும்வரை தேவன் நமது வாழ்வில் குறுக்கிட மாட்டார். நாம் அவரிடம் சரணடைந்து அவர் பாதத்திற்கு வரும்வரை அவர் அமர்ந்திருப்பார்.

பிரியமானவர்களே, நானும் சாறிபாத் விதவையை போலத்தான் காணப்படுகிறேன் என்று கூறுகிறீர்களா? தேவன் இந்த இக்கட்டான சூழ்நிலையில் உங்களுக்கு உதவி செய்ய ஆயத்தமாயிருக்கிறார். ஆனால் நாம் ஒரு காரியத்தை கவனிக்க வேண்டும். அந்த விதவை பற்றாக்குறையின் மத்தியிலும் தேவனுடைய மனிதனுக்கு முதலில் கொடுத்தாள். பல சமயங்களில் நமது வாழ்க்கையிலும் எவ்வளவு சம்பாதிதத்hலும் பொத்தலான பையிலே போடுகிறோம். இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது ஆண்டவருக்காக கொடுக்க கற்று கொள்ள வேண்டும்.

வாழ்வின் கடைசி மணித்துளியில் வந்து நிற்கிறேன் என்று சொல்கிறீர்களா? மனிதர்களை நம்பி ஏமாந்து போனீர்களோ? கண்ணீரே உங்களுக்கு உணவாயிற்றோ? பிரச்சனைகளுக்கு முடிவு மரணம் தான் என எண்ணி சோர்ந்து போய்யுள்ளீர்களோ? தேவனின் பாதத்தில் சரணடையுங்கள். நூறு சதவிகிதம் அவரே கதி என்று அவர் பாதத்தில் விழுந்து விடுங்கள். விசுவாசத்தோடு அவருடைய வேளைக்காக காத்திருங்கள். ஏற்ற வேளையில் கட்டாயம் கர்த்தர் அற்புதம் செய்வார். ஆமென் அல்லேலூயா!

பயப்படாதே நீ மனமே – நான்

காத்திடுவேன் உன்னை தினமே

அற்புதங்கள் நான் செய்திடுவேன் - உன்னை

அதிசயமாய் நான் நடத்திடுவேன்

நான் உன்னை விட்டு விலகுவதில்லை

நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை

நான் உன்னை காண்கின்ற தேவன்

கண்மணிப்போல உன்னை காப்பேன்


ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, மனிதர்களை நம்பி சோர்ந்து போய், எல்லா உதவியும் அற்று போயிருக்கும்போது, நீரே எங்கள் உதவி; என்று உம் பாதத்தில் வந்து சரணடையும்போது, நிச்சயமான உதவிகளை செய்யும் பரிசுத்தரே உமக்கு கோடி நன்றிகள் ஐயா. ஏற்ற வேளையில் எங்கள் தேவைகளை சந்தித்து அற்புதம் செய்யும் அற்புதரே உம்மையே சார்ந்து நாங்கள் ஜீவிக்க எங்களுக்கு உதவி செய்யும். எங்கள் தேவைகளின் மத்தியிலும் கர்த்தருக்கென்று நாங்கள் கொடுத்து, அதினாலே அதிசயம் காண எங்களுக்கு கற்று தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

22nd Feb 2013 - இலவசமான இரட்சிப்பு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இலவசமான இரட்சிப்பு
....

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். - (ரோமர் 3:23,24).


இங்கிலாந்தை சேர்ந்த அநேக வீடுகளுக்கு சொந்தக்காரரான ஒருவர், புதிதாய் இரட்சிக்கப்பட்டிருந்தபடியால், தன் வீடுகளில் தங்கியிருக்கும், வாடகை குடிமக்களுக்கு, தேவனுடைய இரட்சிப்பு எப்படி இலவசம் என்பதை வெளிப்படுத்த வேண்டி, தனக்கு சொந்தமான வீடு மற்றும் நிலங்களின் சுவற்றில், ஒரு பெரிய போஸ்டர் ஒட்டி, குறிப்பிட்ட நாளில் காலை பத்து மணியிலிருந்து, 12 மணிவரை தான் ஒரு குறிப்பிட்ட லாட்ஜில் இருக்கப் போவதாகவும், யார்யார் தன்னிடம் கடன் பட்டிருக்கிறார்களோ, அவர்கள் வந்து தங்களுடைய கடன் பத்திரங்களை காட்டினால் அவர்களுக்கு அது மன்னிக்கப்படும் என்றும் எழுதி அந்த இடங்களில் ஒட்டியிருந்தார்.

அநேகர் அந்த போஸ்டரை பார்த்தார்கள். அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. இதுப்போல முட்டாள் தனமாக யாராவது செய்வார்களா என்று அவர்கள் ஒருவரோடொருவர் பேசி கொண்டார்கள். சிலர் இதில் ஏதோ தந்திரம் இருப்பதாக சொல்லி கொண்டார்கள். குறிப்பிட்ட அந்த நாள் வந்த போது, அந்த லாட்ஜின் முன் ஒரு பெரிய கூட்டம் கூடி இருந்தது. சரியாக தான் சொன்னபடியே, அந்த வீட்டு சொந்தக்காரர் ஓரு காரில் வந்து இறங்கினார். யாரிடமும் ஒன்றும் பேசாமல், உள்ளே போய் அலுவலகத்தில் அமர்ந்தார். வெளியே கதவு சாத்தப்பட்டிருந்தது.

கதவுக்கு வெளியே பெரிய கூட்டம். ஓவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்து கொண்டு வெளியே நின்றிருந்தார்கள். நிச்சயமாகவே அவர் நம்முடைய கடன்களை மன்னித்து விடுவாரா? ஒருவளை நாம் உள்ளே போனால் நம்மை அவர் முட்டாள் என்று நினைத்து தள்ளிவிடுவாரா? நான் முதலில் போக மாட்டேன், வேறு யாராவது போகட்டும் பின் நான் போகிறேன் என்று ஒவ்வொருவரும் பேசி கொண்டு நின்றிருந்தார்களே ஒழிய யாரும் முதலில் போக துணியவில்லை. அப்படியே நேரம் கழிந்து கொண்டிருந்தது.

கடைசியல் 12 மணி ஆகப்போகும் நேரம், ஒரு வயதான தம்பதியினர், அங்கு வந்தார்கள். அவர்கள் தங்களுடைய கடன் பத்திரங்களை கையில் வைத்து கொண்டு, அங்கிருந்த கூட்டத்திடம் 'வீட்டு சொந்தகாரர் உள்ளே இருக்கிறாரா?' என்று கேட்டனர், 'ஆம் இருக்கிறார் ஆனால் இதுவரை யாருக்கும் கடன் மன்னிக்கப்படவில்லை' என்று கூறினர். அப்போது அந்த தம்பதியினர் கண்ணீருடன், 'அவர் ஒட்டியிருந்த போஸ்டர்களை பார்த்து நாங்கள் தொலை தூரத்திலிருந்து வந்தோம், இது பொய்யென்று எங்களுக்கு தெரியாது' என்று திரும்ப போக எத்தனிக்கையில், ஒருவர் 'யாரும் இதுவரை உள்ளே செல்லவில்லை' என்று கூறினார். அத்தம்பதியினர், 'அப்படியா? அப்படியானால் நாங்கள் உள்ளே போகிறோம்' என்று போக முயற்சித்த போது மற்றவர்கள், 'அவர் என்ன சொன்னார், உங்கள் கடன்களை மன்னித்தாரா என்று எங்களுக்கு திரும்ப வந்து சொல்லுங்கள், நாங்களும் போய் கேட்க வேண்டும்' என்று கூறினார்கள். அதற்கு அத்தம்பதியினர் சம்மதித்து, உள்ளே சென்றனர். அங்கு முன்னே அமர்ந்திருந்த காரியதரிசி, அவர்களுடைய பேப்பர்களை வாங்கி சற்று அமருமாறு கூறி உள்ளே சென்று, மீண்டும் திரும்பி வந்து, அவர்களுடைய கடனை எஜமானர் அடைத்து விட்டதாக கூறி அவருடைய கையொப்பம் இட்ட பத்திரத்தை எடுத்து கொண்டு வந்து அந்த காரியதரிசி அவர்களிடம் கொடுத்தார். அதை பெற்றுக் கொண்டு மிகவும் நன்றியுடன் அவருக்கு நன்றி செலுத்தி வெளியே செல்ல முற்படுகையில் காரியதரிசி, 'நீங்கள் 12 மணி ஆகும் வரை வெளியே செல்ல கூடாது' என்று கூறினார். அப்போது அவர்கள், வெளியே மற்ற மக்கள் தங்களுக்கு என்ன நேர்ந்தது என்று அறிய காத்திருப்பதாக சொன்னார்கள். அப்போது காரியதரிசி, 'உங்களுக்கு சொன்னது போல தான் மற்றவர்களுக்கும் சொல்லப்பட்டது. அவர்கள் உள்ளே வந்தால், அவர்களுடைய கடன்களும் மன்னிக்கப்படும்' என்று கூறி அவர்கள் அமர்த்தினார். சரியாக 12 மணியானதும் கதவுகள் திறக்கப்பட்டது. முதலில் அந்த வயதான தம்பதியினர் வெளியே வந்தனர். உடனே, வெளியே இருந்த கூட்டம் அவர்களிடம், 'என்ன உங்கள் கடன்களை அவர் மன்னித்தாரா, தன்னுடைய வார்த்தையை அவர் காப்பாற்றினாரா' என்று மாறி மாறி கேள்விகள் கேட்டனர். அந்த தம்பதியினர், ஆம் என்றனர். 'பின் ஏன் எங்களிடம் வந்து சொல்லவில்லை' என்று கேட்டனர். அப்போது அந்த தம்பதியினர், 'அவர் எங்களை உள்ளே அமர சொன்னார். நாங்கள் உள்ளே போய், அவரிடம் மன்னிப்பு பெற்றது போல நீங்களும் உள்ளே வந்தால் மன்னிக்கப்படும் என்று கூறினார். எங்களை உள்ளேயே இருக்க சொன்னார்' என்று கூறினர். சில விநாடிகளில், வீட்டு சொந்தக்காரரும் காரியதரிசியும் வெளியே வந்தனர். மற்றவர்கள், தங்கள் பத்திரங்களை கையில் பிடித்து கொண்டு 'ஐயா எங்களுக்கும் மன்னியும்' என்று கதறினர். அப்போது அந்த எஜமானர், 'இப்போது நேரமாகிவிட்டது, உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது, ஆனால் நீங்கள் அதை பயன்படுத்தி கொள்வில்லை, நீங்கள் உள்ளே வந்திருந்தால் நான் உங்கள் கடன்களை முழுவதுமாக மன்னித்திருப்பேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை' என்று கூறினார்.

எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். (ரோமர் 3:23:24) என்ற வேத வசனம் கூறுகிறது. ஆனால் அதை விசுவாசித்து பற்றி கொள்ளுகிறவர்கள் மன்னிக்கபடுகிறார்கள். அதை விசுவாசியாமல் அந்த கூட்டத்தாரைப் போல அவிசுவாசமாய் வாக்குவாதம்பண்ணிக் கொண்டிருப்பவர்கள், இலவசமாய் கிடைக்கும் இரட்சிப்பை இழந்துபோகிறார்கள். இலவச கலர் டிவி தருகிறர்கள் என்றால் அந்த இடத்தில் கூட்டம் அலைமோதும். ஒருரையொருவர் நெருக்கியடித்து, இடியும், மிதியும் பட்டு, எப்படியாவது அந்த டிவி கிடைக்க வேண்டும் என்று எந்த வேதனைகளையும் பொருட்படுத்தாத அதே மக்கள், விலையேறபெற்ற இரட்சிப்பை இலவசமாய் பெற்று கொள்ளுங்கள் என்றால் அதற்கு தயாராக இல்லை. ஏனென்றால், தங்கள் சரீரம் கிழிக்கப்பட்டு, அதில் கூர்மையான ஆயுதங்களால் கடாவபட்டு, இரத்தம் வழிய பாடுகளை சகித்தால் தான் தங்களுக்கு இரட்சிப்பு கிடைக்கும் என்கிற எண்ணம் அவர்கள் இருதயத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. அவையெல்லாம் தேவையில்லாமல், 'கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல' என்று எபேசியர் 2:8-9 -ல் வேதம் தெளிவாக நமக்கு சொல்கிறது. "நான் இந்த அளவு என் சரீரத்தை காயப்படுத்தி என் இரட்சிப்பை சம்பாதித்தேன்' என்று யாரும் பெருமை பாராட்டாதபடிக்கு இரட்சிப்பு யாருடைய கிரியைகளினாலும் உண்டானதல்ல. அது தேவனுடைய மிகப்பெரிய ஈவு. நம்முடைய எந்த கிரியைகளினாலும் அதை சம்பாதிக்க முடியாது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறதினாலேயே அந்த விலையேறப்பெற்ற இரட்சிப்பு பாவிகளாகிய நமக்கு கிடைக்கிறது. இலவசமாய் கிடைக்கிற அந்த இரட்சிப்பை இன்றே விசுவாசத்தோடு பெற்று கொள்வோமாக. இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள் (2 கொரிந்தியர் 6:2) கிருபையின் காலத்தில் அநுக்கிரக காலத்தில் இருக்கும்போதே நாம் அந்த இரட்சிப்பை பெற்றுக் கொள்ள கர்த்தர் கிருபை செய்வாராக!


நியாய தீர்ப்பின் நாள் நெருங்குதே

நேசர் வர காலமாகுதே

மாய லோகம் நம்பி மாண்டிடும்

மானிடரை மீட்க மாட்டீரோ

ஜெபம்

எங்களை அளவில்லாமல் நேசிக்கும் நல்ல தகப்பனே, எங்களுடைய எந்த கிரியைகளும் சம்பாதிக்க முடியாத விலையேறப்பெற்ற இரட்சிப்பை நீர் எங்களுக்கு இலவசமாய் கொடுத்த தயவிற்காக உமக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம். அதை விசுவாசத்தோடு பெற்று கொள்ள எங்கள் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்யும். நாட்கள் கொடியதாய் இருக்கிறபடியால், இப்போதே கிருபையின் காலத்தில் ஒவ்வொருவரும் மிகப்பெரிய ஈவாகிய இரட்சிப்பை பெற்று கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

.

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 21 பிப்ரவரி, 2013

21st Feb 2013 - கவலைப்படாதீர்கள்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
...
கவலைப்படாதீர்கள்
....

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? - (மத்தேயு 6:25).


ஒரு கணவனும் மனைவியும் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை குறித்து பேசி கொண்டிருந்தார்கள். கணவர் 'ஐயோ இந்த காலத்தில் மற்ற பிள்ளைகள் படிக்கிறதையும் வாங்குகிற மார்க்குகளையும் பார்த்தால் நம்ம பிள்ளைகள் எங்கே போய் நிற்பார்களோ தெரியவில்லை! பிற்காலத்தில் ஒரு நல்ல வேலை கிடைப்பது என்பது மிகவும் கஷ்டம் போலிருக்கிறது. ஒரு நல்ல வேலை கிடைக்காவிட்டால் இந்த பிள்ளைகள் என்ன செய்யும்?'என்று கவலைப்பட ஆரம்பித்தார். ஆனால் மனைவியோ, ' பாருங்கள் நம் பிள்ளைகளுக்கு தேவன் கொடுத்திருக்கிற அருமையான தாலந்துகளை! அவன் கிட்டாரை எடுத்து பாட ஆரம்பித்தால் எல்லாரும் நின்று கேட்டுவிட்டு தான் போவார்கள். நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? கர்த்தருடைய கரத்தில் நம் பிள்ளைகளின் எதிர்காலம் இருப்பதால் அவர் பார்த்து கொள்வார்' என்று கூறினார்கள். இருவரும் கர்த்தரின் மேல் அன்புள்ளவர்கள்தான், அவர்மேல் நம்பிக்கை உள்ளவர்கள்தான். ஆனால் கவலை என்று வரும்போது, கர்த்தரைவிட பிரச்சனைகளும் போராட்டங்களுமே பெரிதாக தெரிகிறது.

புதிய ஏற்பாட்டில் மாத்திரம் 25 தடவை கவலையை குறித்து எழுதப்பட்டிருக்கிறது. நாம் கவலைப்படும்போது, நம்முடைய எண்ணங்களும், நம்முடைய சிந்தனைகளும் கர்த்தரை நோக்கி பார்ப்பதை விட்டுவிட்டு, பிரச்சனைகளையே நோக்கி பார்க்க ஆரம்பிக்கிறது. பேதுரு கடலின் மேல் நடந்து கர்த்தரை நோக்கி பார்த்தபடியே நடக்க ஆரம்பித்த போது வெற்றிகரமாக நடக்க ஆரம்பித்தார். ஆனால் எப்போது கடலையும் அலைகளையும் பார்க்க ஆரம்பித்தாரோ கடலில் மூழ்க ஆரம்பித்தார்.

இயேசுகிறிஸ்து விதைக்கிறவனை குறித்த உவமையில் 'வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள். இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள்' (மாற்கு 4:18-19) என்று கூறுகிறார். இந்த மக்கள் கர்த்தருடைய வசனத்தை கேட்டு ஏற்று கொள்கிறார்கள். ஆனால், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், இச்சைகளும் அவர்கள் கேட்ட வசனத்தை அவர்களிலிருந்து எடுத்து போட அவர்கள் யாருக்கும் பயனற்றவர்களாக, தாங்கள் கேட்ட வசனத்தை மறந்தவர்களாக, தங்கள் கவலைகளிலேயே தங்கள் காலத்தை கழிக்கிறவர்களாக வாழ்ந்து முடித்துவிடுகிறார்கள்.

'ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?' என்று இயேசுகிறிஸ்து கூறினார். அவர் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லும்போது நாம் கவலைப்பட்டால் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமற் போகும் பாவத்திற்கு உள்ளாகிறோம் அல்லவா?

தேவன் மேல் நம் நம்பிக்கை பூரணமாக இருந்தால் நிச்சயமாக நாம் எதை குறித்தும் கவலைப்பட மாட்டோம். கர்த்தருடைய கரத்தை மீறி எதுவும் நிச்சயமாக நம் வாழ்க்கையில் நடப்பதில்லை, நடக்க போவதும் இல்லை. ஆகையால் எதற்கு கவலைப்பட வேண்டும்? 'அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்' (1 பேதுரு 5:7) என்று வேதம் நமக்கு போதிக்கிறது. ஆகையால் நம்முடைய கவலைகளை அவர் மேல் வைத்துவிட்டு நம்மை விசாரிக்கிற தேவனிடத்தில் நம்மையும் நம் கவலைகளையும் வைத்துவிடுவோம். அவர் பார்த்து கொள்வார். ஏனெனில் அவரே நமது யெகோவாயீரே! எல்லாவற்றையும் பார்த்து கொள்கிற தேவன்! நம் தேவைகளை சந்திக்கிற தேவன்! நம் கவலைகளை அறிந்த தேவன்! நமக்காக அற்புதங்களை செய்கிறவர்! ஆமென் அல்லேலூயா!

உன்னை விசாரிக்கும் தேவனுண்டு - உன்

கவலையை அவர் மேல் வைத்துவிடு

கண்ணீர் கவலை துடைக்கும் தேவன்

உன்னைத் தேற்றிடுவார்

..

கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு

அவர் உன்னை ஆதரிப்பார்

நீதிமான் கால்களை

தள்ளாடவே ஒட்டார்

ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எங்கள் கவலைகளை கர்த்தர் மேல் வைத்துவிட்டு, நீர் எங்களை விசாரிக்கிற தேவனாக இருக்கிறபடியால் உம்மையே சார்ந்து கொள்ள கிருபை செய்யும். எங்கள் கண்ணீரை துடைத்தருளும். எங்களை தேற்றுகிற தேற்றரவாளரே, எங்களை தேற்றி, தேவைகளை சந்திப்பீராக. வீணாக கவலைப்பட்டு, எங்களை வருத்தி கொள்ளாதபடி எல்லாவற்றையும் உம்முடைய பாதத்தில் வைத்து விடுகிறோம். நீர் அற்புதங்களை செய்து எங்களை காத்து கொள்ளப்போவதற்காக நன்றி! எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.