Friends Tamil Chat

வியாழன், 31 ஜூலை, 2014

31st July 2014 - அன்புகூரும் கணவன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜூலை மாதம் 31-ம் தேதி - வியாழக்கிழமை
அன்புகூரும் கணவன்
..................

புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். - (எபேசியர் 5:25).

.

கல்யாணம் ஆன புதிதில் கணவன் தன் மனைவியின் மேல் வைக்கும் அன்பு மிகவும் அற்புதமானது. மனைவி தனக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் என்பது போல தங்க தட்டில் ஏந்தி நடப்பது போல மனைவியை தாங்கி நடப்பது வழக்கம். கொஞ்சம் தூரம் நடந்து விட்டால், ஐயோ உனக்கு கால் வலிக்கிறதா? காலை அமுத்திவிடட்டுமா? என்று காலை அமுக்கி விட்டு, என்னனென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்து விடுவது வழக்கம்! மனைவியின் பெயரை என்னன்ன விதமாக கூற முடியுமோ அந்தபடி யெல்லாம் கூப்பிட்டு அழைப்பது இதற்கு விதிவிலக்கல்லாத கணவன்மார் யாரும் இல்லை என கூறலாம். ஆனால் கால போக்கில் ஒவ்வொரு வருடமும் அந்த அன்பு குறைந்து என்ன நடக்கிறது என்பதை கீழ்கண்டவாறு காணலாம்:

.

கணவன் மனைவியிடம் முதல் வருடம்:

.

என் பிரியமே, என் இனிமையே, நான் உன்னை குறித்து மிகவும் கவலைப்படுகிறென். நீ அன்று மழையில் கொஞ்சம் நனைந்தபோதே நான் நினைத்தேன், ஐயோ என் உயிரான உனக்கு ஏதோ ஆகிவிடுமோ என்று, என் அன்பே, இன்று நான் வேலையில் இருந்து வந்தவுடன், ஆஸ்பத்திரிக்கு போவோம், நீ தும்மினால் உன் உடம்புக்கு ஆகாது, காய்ச்சல் வந்தால் உன்னால் தாங்க முடியாது! நீ டாக்டர் கொடுக்கும் மருந்தை சாப்பிட்டு நன்கு ஓய்வெடுக்க வேண்டும். சரியா? நீ ஒன்றும் சமைக்க வேண்டாம், நான் கடையில் இருந்து வாங்கி வந்து விடுகிறேன். நீ நன்கு ஓய்வெடு.

.

இரண்டாம் வருடம்: என் அன்பே, எனக்கு இந்த இருமல் சத்தமெல்லாம் பிடிக்காது, நான் டாக்டரை போகும் வழியில் வர சொல்லியிருக்கிறேன், அவர் வருவார். மாத்திரை சாப்பிட்டு விட்டு ஓய்வெடு. எனக்கு வேலைக்கு நேரமாகி விட்டது.

.

மூன்றாம் வருடம்: கொஞ்ச நேரம் நீ படுத்து எழுந்திருந்தால், இந்த சளியெல்லாம் கொஞ்சம் அடங்கும் என்று நான் நினைக்கிறென். நேரம் கிடைக்கும்போது கொஞ்சம் ஓய்வெடு.

.

நான்காம் வருடம்: பார், நீ வீட்டில் எல்லா வேலையும் முடித்த பின்பு கொஞ்சம் ஓய்வெடு, இப்படி இருமி கொண்டு இருக்காதே.

.

ஐந்தாம் வருடம்: நான் அன்று வாங்கி வந்த இருமல் சிரப்பை கொஞ்சம் குடியேன், எப்பப்பார் இருமிக் கொண்டு இருக்கிறாய்.

.

ஆறாம் வருடம்: உப்பு தண்ணீர் எடுத்து வாயை கொப்பளி, சும்மா கடல் சீல் மாதிரி இருமிக்கொண்டு இருக்காதே.

.

ஏழாம் வருடம்: வாயில் கையை வைத்து இருமு, எனக்கு இருமலை கொடுத்து விடுவாய் போலிருக்கிறது!

.

அந்த மனைவிக்கு ஏழு வருடமாய் இருமல் இல்லை. ஓவ்வொரு வருடத்திலும், அவள் ஏதாவது நோய் வந்தால், கணவனின் பதில் இதுவாகாத்தான் இருக்கும்.

.

நான் ஒவ்வொரு கணவனும் இப்படித்தான் என்று கூறவில்லை. ஆனால் நாளாக நாளாக கணவனின் அன்பு குறைய துவங்குகிறது. ஆரம்பத்தில் இருந்த ஈடுபாடு குறைய ஆரம்பிக்கிறது. காலையில் எழுந்தோம், வேலைக்கு சென்றோம், மாலை வீடு திரும்பினோம், சாப்பிட்டோம், படுத்தோம், எழுந்தோம், திரும்ப அதே மாதிரியான அடுத்த நாள் வேலைகள்!! இப்படித்தான் அநேகருடைய வாழ்நாட்கள் போய் கொண்டிருக்கிறது. ஒரு குருவி தன் கூட்டை விட்டு தன் குஞ்சுகளுக்கு இரையை தேடி, கூட்டிற்கு திரும்ப வந்து,காலையில் திரும்ப இரை தேட போவது போல வாழ்க்கையை நாம் அமைத்து கொண்டிருக்கிறோம்.

.

சில கணவன்மாருக்கு 50 வயதானாலும், 60 வயதானாலும், தங்கள் மனைவி இன்னும் மிகவும் இளமையானவள் என்ற எண்ணம் எப்போதும் மனதில் உண்டு, அவர்களுக்கு அந்த வயதிலும் ஆசையும் நேசமும் உண்டு. மனைவியோ அப்படியல்ல, அவளுடைய பிள்ளைகள் பெரியவர்களான பின்பு அவர்களை பற்றிய எண்ணங்களுக்குத்தான் அவள் முதலிடம் கொடுப்பாளே தவிர, மற்ற எண்ணங்களுக்கு அவள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதை அறியாதிருக்கிற கணவன்மார், என் மனைவி என்னுடன் ஒத்துழைப்பதில்லை என்று குறை சொல்வார்கள். அநேக வீடுகளில் பிரச்சனை வருவதற்கு காரணமே அதுதான். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். உண்மையாய் அன்புகூருகிற கணவன் தன் மனைவியை எந்த நிலையிலும் நேசிப்பான். தனக்க தேவையான நேரத்தில் அன்புகூர்ந்து விட்டு, பின் அவளை அடிமையை போல நடத்துகிற எவனும் அவளிடத்தில் உண்மையாய் அன்பு கூருகிறவனல்ல!

.

'நான் என் மனைவிக்கு எல்லாம் வாங்கி தருகிறேன். அவளுடைய தேவைகளை எல்லாம் சந்திக்கிறேன் வேறு என்ன அவளுக்கு வேண்டும்' என்று நீங்க்ள கேட்கலாம். நீங்கள் எல்லாம் வாங்கி கொடுத்து, அவளிடம் சற்று அமர்ந்து பேசாவிட்டால், நீங்கள் அவளுக்கு எதை செய்தாலும் பயனில்லை! ஒரு நாள் நீங்கள் கடைக்கு போய் அவளுக்கென்று ஒரு புடவை எடுத்து கொண்டு வந்து, 'பார், உன் கலருக்கு இந்த புடவை எடுப்பாய் இருக்கும்' என்று வாங்கி கொடுத்து பாருங்கள், ஊரில் உள்ள எல்லாருக்கும் அவள் சொல்வாள், 'பாருங்கள், என் கணவர் எனக்கு வாங்கி கொடுத்த புடவை' என்று.

.

இரண்டு பேரும் வேலைக்கு போகிற தம்பதியர் என்றால், கணவர் மனைவியின் வேலையில் பங்கு கொண்டு செய்வது மிகவும் அவசியம். நான் ஒரு சில வீடுகளில் பார்த்திருக்கிறேன், மனைவி காலையிலிருந்து, மாடு மாதிரி வேலை செய்து, உணவு செய்து, கணவனுக்கு எல்லாம் டேபிளில் வைத்து தயாராக வைத்திருக்க வேண்டும். கணவன் காலையில் எழுந்து, பேப்பர் படித்து, கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பார், மனைவி கிடந்து, அவசர அவசரமாக எல்லாவற்றையும் செய்து, பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, தானும் தயாராகி வேலைக்கு ஓட வேண்டும். அந்த மாதிரி கணவன் எப்படிப்படடவன்? மனைவியை அடிமை மாதிரி நடத்தும் காரியங்கள், தேவனுக்கு அருவருப்பானவை! ஏவாளை தேவன் காலின் எலும்பிலிருந்து படைக்கவில்லை, அவளை காலின் கீழ் போட்டு மிதிப்பதற்கு, தலையின் எலும்பிலிருந்து எடுக்கவில்லை, தலையின் மேல் அமர்ந்து அதிகாரம் செய்வதற்கு! அவர் விலா எலும்பிலிருந்து எடுத்தார், இருவரும் சமம் என்பதற்காக, ஆனால் தேவன் கணவரை குடும்பத்தின் தலையாக வைத்திருப்பதை மனைவிகளும் உணர்ந்து, கணவனுக்குரிய மதிப்பை தர வேண்டும். இப்படி ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து, ஒருவரையொருவர் மதித்து வாழும் குடும்பங்களில் தேவன் வந்து வாசம் பண்ணுகிறார். அதை ஆசீர்வதிக்கிறார். அப்படிப்பட்ட குடும்பங்களாக நம் குடும்பங்கள் திகழ தேவன் தாமே கிருபை செய்வாராக!

.

இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு

அன்பு நிறைந்திடும் இடம் உண்டு

இன்பம் உண்டு சமாதானம் உண்டு

வெற்றி உண்டு துதிபாடல் உண்டு

இராஜாதி இராஜா இயேசு

என்றென்றும் ஆண்டிடுவார்

.
ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து எங்களுக்கென்று அருமையான கணவரையும் மனைவியையும் கொடுத்து, ஆசீர்வதித்திருக்கிற நல்ல தகப்பனே உம்மை துதிக்கிறோம். புருஷர்கள் தங்கள் மனைவியிடம், உண்மையான அன்புகூர கிருபை செய்யும். இந்நாட்களில் சத்துருவானவன் குடும்பங்களை பிரிக்கும்படி கிரியை செய்து கொண்டிருக்கிற கொடிய நாட்களில், ஒவ்வொரு குடும்பங்களையும் அன்பின் ஐக்கியத்தால் நிறைத்தருளும். கணவன் மனைவியிடையே அன்பை ஊற்றும். மரணம் பிரிக்கும்வரை நீயே என் மனைவி, நீரே என் கணவர் என்று ஒவ்வொருவரும் தங்கள் மனைவியினிடத்திலும், கணவரிடத்திலும் உண்மையாக இருக்க கிருபை செய்யும். நீரே இந்த குடும்பங்களை இணைத்தீர் என்று விசுவாசித்து, தேவன் விரும்புகிற குடும்பங்களாய் உமக்கென்று சாட்சிகளாக விளங்க கிருபை செய்யும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.......

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 30 ஜூலை, 2014

30th July 2014 - நீ என்னை நம்பினபடியினால்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜூலை மாதம் 30-ம் தேதி - புதன் கிழமை
நீ என்னை நம்பினபடியினால்
.................

'நீ போய், எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்குக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்..இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரப்பண்ணுவேன்.. ஆனால் அந்நாளிலே உன்னைத் தப்புவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ பயப்படுகிற மனுஷரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை. உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்துக்கு இரையாவதில்லை; நீ என்னை நம்பினபடியினால் உன் பிராணன் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்'. - (எரேமியா 39:16:18).

.

இந்த வார்த்தைகள் எரேமியா தீர்க்கதரிசிக்கு அவர் காவற்சாலையிலிருந்த தண்ணீர் இல்லாத உளையாயிருந்த துரவிலே தூக்கி போடப்பட்டு, பின் எபெத்மெலேக்கின் மூலமாக விடுவிக்கப்பட்டு, காவற்சாலையின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்தபோது கர்த்தர் அவர் மூலமாக எபெத்மெலேக்குக்கு வாக்குதத்தம் பண்ணின வார்த்தைகளாகும். எபெத்மெலேக்கு புறஜாதியை சேர்ந்தவன், அவன் ராஜாவின் அரண்மனையில் வேலையில் இருந்தவன், எத்தியோப்பியாவை சேர்ந்தவன். இருப்பினும் அவனுக்கு தேவன் அந்த வாக்குதத்தத்தை கொடுத்தார். ஏன் கொடுத்தார்? ஏன் என்றால், எரேமியாவின் சொந்த ஜனங்களே அவரை தண்ணீர் இல்லாத உளையாயிருந்த துரவிலே போட்டபோது, இந்த எபெத்மெலேக்கு தானே ராஜாவிடம் சென்று, எரேமியாவிற்காக பரிந்து பேசினான். மட்டுமல்ல, தானும் தன்னோடு முப்பதுபேரும் சேர்ந்து, எரேமியாவை அந்த உளையான துரவிலிருந்து மீட்டார்கள். 'அவர்கள் எரேமியாவைத் துரவிலே போட்டதை ராஜாவின் அரமனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான்; ராஜாவோ பென்யமீன் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அப்பொழுது எபெத்மெலேக் ராஜாவின் அரமனையிலிருந்து புறப்பட்டுப்போய், ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவனே, இந்தப் புருஷர் எரேமியா தீர்க்கதரிசியைத் துரவிலே போட்டுச் செய்தது எல்லாம் தகாத செய்கையாயிருக்கிறது; அவன் இருக்கிற இடத்திலே பட்டினியினால் சாவானே, இனி நகரத்திலே அப்பமில்லை என்றான்.

.

அப்பொழுது ராஜா எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியனை நோக்கி: நீ இவ்விடத்திலிருந்து முப்பது மனுஷரை உன்னுடனே கூட்டிக்கொண்டுபோய், எரேமியா தீர்க்கதரிசி சாகாததற்குமுன்னே அவனைத் துரவிலிருந்து தூக்கிவிடு என்று கட்டளையிட்டான். அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனுஷரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு, ராஜாவின் அரமனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து, கிழிந்துபோன பழம்புடவைகளையும் கந்தைத்துணிகளையும் எடுத்துக்கொண்டுபோய், அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவண்டைக்குத் துரவிலே இறக்கிவிட்டு, எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியன் எரேமியாவுடனே: கிழிந்துபோன இந்தப் பழம்புடவைகளையும் கந்தைகளையும் உம்முடைய அக்குள்களில் கயிறுகளுக்குள் அடங்கவைத்துப் போட்டுக்கொள்ளும் என்றான்; எரேமியா அப்படியே செய்தான். அப்பொழுது எரேமியாவைக் கயிறுகளால் தூக்கி, அவனைத் துரவிலிருந்து எடுத்துவிட்டார்கள்; எரேமியா காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான்'. - (எரேமியா 38:7-13).

.

எபெத்மெலேக் ஏன் அதை செய்தான்? அவன் புறஜாதியானவனாய் இருந்தாலும், அவன் கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்திருந்தான் என்று வேதம் சொல்லுகிறது. அந்த நம்பிக்கை, அவனை தேவனுடைய தீர்க்கதரிசியாகிய நெகேமியாவை காப்பாற்ற வைத்தது. அந்த நேரத்தில் அரண்மனையில் பெரிய வேலையில் இருந்தவர்களும், பெரிய ஆட்களும் இராஜாவின் இருதயத்தை நெகேமியாவிற்கு எதிராக திருப்பி கொண்டிருந்தாலும், துணிந்து போய், நெகேமியாவிற்காக பரிந்து பேசி, அவரை சாவிலிருந்து தப்புவித்த எபெத்மெலேக்கின் செய்கையை மனிதர்கள் யாரும் பாராட்டவில்லை. ஆனால், தேவன் அதை பார்த்தார்;. அவனை பாராட்டினார், வாக்குதத்தங்களை கொடுத்தார்.

.

எரேமியாவிடம் ஆண்டவர் சொல்கிறார், 'நீ போய், எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்குக்குச் சொல்லவேண்டியது' என்று வாக்குதத்தங்களை சொல்லி, விசேஷித்த கிருபைகளை தேவன் அவனுக்கு கொடுக்கிறார்.

.

தேவன் தமது ஊழியருக்கு நீங்கள் செய்யும் காரியங்களை கவனிக்கிறார். நீங்கள் அவர் மேல் வைக்கும் நம்பிக்கையை அவர் அறிந்திருக்கிறார். '..இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரப்பண்ணுவேன்.. ஆனால் அந்நாளிலே உன்னைத் தப்புவிப்பேன்' என்று சொல்லி அதன்படியே எபெத்மெலேக்கை தப்புவித்த தேவன், இன்றும் நாம் செய்யும் காரியங்களையும், நாம் அவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையையும் கவனித்து, தீங்கு நாளில் நம்மையும் காப்பாற்றுவார். நமக்கு தீங்கு வரும் நாளில் நெருக்கடி நேரத்தில் நம்மை காப்பாற்ற தேவன் வல்லமையுள்ளவராகவே இருக்கிறார். நாம் தேவன் மேல் வைக்கும் நம்பிக்கையை விட்டுவிடாமலும், அவருக்காக செய்யும் எந்த செயலையும் யாரும் கவனிக்கவில்லையே என்று சோர்ந்து போகாமலும், தொடர்ந்து செய்வோம். யார் கவனிக்காவிட்டாலும், தேவன் நம்மை காண்கிறார். நம்முடைய செயல்களுக்கு அவர் பதிலளிப்பார்;. ஆமென் அல்லேலூயா!

.

நெருக்கடி வேளையில் பதில் அளித்து

பாதுகாத்து நடத்திடுவார்

உன்னோடு இருந்து ஆதரித்து

தினமும் உதவிடுவார்

நீ செய்த நன்மைகளை நினைவு கூர்ந்திடுவார் - 2

உனது திட்டங்களெல்லாம் நிறைவேற்றி முடித்திடுவார் - 2

நிறைவேற்றி முடித்திடுவார்

.
ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எபெத்மெலேக்கு செய்த நல்ல காரியத்தை நீர் மறக்காமல், அவனுக்கு வாக்குதத்தத்தை கொடுத்து, அவனுடைய நெருக்கத்தின் நாளில் அவனை காத்தீரே உம்மை துதிக்கிறோம். அதுப்போல எங்களுடைய நெருக்கதின் நாளிலும், நாங்கள் உம்முடைய ஊழியருக்கு செய்த நன்மைகளையும், நாங்கள் உம்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையையும் நீர் கண்டு, எங்களையும் விடுவிக்க வல்லவராயிருக்கிறீரே அதற்காக உம்மை துதிக்கிறோம். அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன் என்று சொன்னீரே, துன்பங்கள் எங்கள் மேல் புயல் போல் வரும் போதும், நெருக்கங்கள் எங்களை சூழ்ந்து கொள்ளும்போதும் எங்களை விடுவிப்பீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
............

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 29 ஜூலை, 2014

29th July 2014 - மனமகிழ்ச்சி நல்ல மருந்து

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜூலை மாதம் 29-ம் தேதி - செவ்வாய்க்கிழமை
மனமகிழ்ச்சி நல்ல மருந்து
................

'மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்'. - (நீதிமொழிகள் 17:22).

.

ஒரு போதகரின் மனைவி ஒரு வாரத்திற்கு ஒரு கேம்ப் கூட்டத்திற்கு போக அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் இருந்த இடத்திலிருந்து தூரமாக அந்த இடம் இருந்ததால், அங்கு தங்குவதற்கான வசதிகளை குறித்து அறிய விரும்பினார்கள். விசேஷமாக பாத்ரூம் வசதிகளை குறித்து அவர்கள் அறிய விரும்பினார்கள். அதை எப்படி டாய்லெட் என்று எழுதுவது, அது அநாகரீகமாக இருக்குமே என்று எண்ணி, பல விதத்தில் யோசித்து, பாத்ரூம் கம்மோட் (Bathroom Commode) என்பதை குறிக்கும் வகையில் 'நான் இருக்க போகும் இடத்தில் சொந்தமாக ஒரு BC இருக்கிறதா' என்று கேட்டு எழுதியிருந்தார்கள்.

.

அதை பெற்று கொண்ட அந்த கூட்டத்தை ஒழுங்கிபடுத்தியவருக்கு BC என்றால் என்னவென்று தெரியவில்லை. கூட இருந்த அநேகரிடம் அதை குறித்து கேட்டபோது, அவர்களுக்கும் புரியவில்லை. கடைசியில் ஒருவர், 'அந்த அம்மா பாப்டிஸ்ட் சபையை சேர்ந்தவர்கள். ஆகவே Baptist Church என்பதை சுருக்கமாக BC என்று குறிப்பிட்டுள்ளார்கள்' என்று கூறினார்.

.

ஆகவே, அந்த கூட்டத்தை ஒழுங்குபடுத்தியவர், இவ்வாறு மறு பதில் அனுப்பினார், 'அன்புள்ள அம்மா, இந்த பதில் கடிதத்தை எழுதுவதற்கு சில காலம் எடுத்து கொண்டதற்கு மன்னிக்கவும், நீங்கள் குறிப்பிட்டுள்ள BC ஒன்பது மைல் தொலைவில் உள்ளது. ஒரே நேரத்தில் 250 பேர் ஒன்றாக அமரக்கூடிய இடமாக உள்ளது. நீங்கள் அடிக்கடி போக வேண்டும் என்றால், அது கொஞ்ச தொலைவில் அமைந்துள்ளதால், கொஞ்சம் சிரமம் ஏற்படும் என்று நினைக்கிறேன். தூரத்தில் அமைந்துள்ளதால் அங்கு வருபவர்கள் தங்களுடனே சாப்பாட்டையும் கொண்டு வந்து விடுகிறார்கள். அவர்கள் சீக்கிரமாக வந்து, நேரம் கழித்து தான் போகிறார்கள்.

.

நானும் என் மனைவியும் கடைசியாக சென்றது, ஆறு மாதங்களுக்கு முன்பு, அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால், நாங்கள் நின்று கொண்டே இருக்க வேண்டியிருந்தது. ஆகவே இன்னும் அநேகர் உட்காரும்படியாக பணத்தை வசூலித்து கொண்டிருக்கிறார்கள். நான் தொடர்ந்து போகாதிருப்பது எனக்கு மிகவும் வேதனையாயிருந்தாலும், வயதாகிவிட்டால், அவ்வளவு தூரம் செல்வது கடினமாக உள்ளது. நீங்கள் இங்கு வருவதாயிருந்தால், நானே உங்களை அழைத்து கொண்டுபோய் உங்களோடு அமர்ந்து, மற்றவர்களுக்கும் உங்களை அறிமுகப்படுத்தி வைப்பேன் நன்றி' என்று பதில்கடிதம் அனுப்பினார்.

.

இதை படித்து, நன்கு சிரித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மனமகிழ்ச்சி நல்ல மருந்து என்று வசனம் சொல்கிறது. நாம் மனம் திறந்து, வாய் விட்டு சிரிக்கும்போது, நமது நுரையீரல்கள் விரிவடையும்போது, இரத்த ஓட்டம் நன்றாக செயல்படும். இரத்த ஓட்டம் நன்கு செயல்படும்போது, நோய்கள் மாறி போகும். அதைதான் நல்ல மருந்து என்று வசனம் சொல்கிறது. சிலர் வாய் விட்டு சிரிக்க கூடாது என்பார்கள். தமிழ்நாட்டில் ஒரு பழமொழி 'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்' என்பதாகும். நம் முன்னோர்கள் அதை அறிந்திருந்தபடியால்தான் அதை குறித்து பழமொழி எழுதி வைத்துள்ளார்கள்.

.

அதுப்போல முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும் என்றும் வேதம கூறுகிறது. மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பார்த்ததில் முறிந்த ஆவி உள்ள மனிதனின் White Blood Cells எண்ணிக்கை குறைவாக உற்பத்தி ஆவதால், அவனுக்கு வியாதியை எதிர்க்கும் தன்மை குறைவுபடுவதாக கூறுகிறார்கள். மற்றும் எலும்புகளில் Bone Marrow வினால் உருவாக்கப்படும் Red Blood Cells குறைவுபடுகிறது.

.

வாய் விட்டு சிரிக்கும்போது, நம்மிடத்தில் காணப்படும் சுயப்பரிதாபம், துக்க உணர்ச்சி, மற்றும் சில வேளைகளில் பெரிய வியாதிகளும் கூட அகன்று போகும். அதற்கு அநேக சாட்சிகள் உண்டு. நம் உடல் உறுப்புகளின் ஒவ்வொரு செல்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன.

.

ஆனால், சினிமாக்களில் காணப்படும் சிரிப்பு நிகழ்ச்சிகள் அசுத்தங்களை கொண்டு மனிதனின் இருதயத்தை அசுசிப்படுத்தி விடுகின்றன. அந்த சிரிப்புகளினால் அல்ல, தூய்மையான சிரிப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு, இப்போது இன்டர்நெட்டின் மூலமாகவும், ஆங்கிலத்தில் கிறிஸ்தவ நண்பர்கள் அனேக சிரிப்பு நிகழ்ச்சிகளை வைத்துள்ளார்கள்.

.

எல்லாவற்றிற்கும் மேலாக 'கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான்' (நெகேமியா 8:10). ஆம் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே நம்முடைய பெலன். மற்ற எதினாலும் நாம் அடையும் மகிழ்ச்சி நம்முடைய பெலனை எடுத்து விடும். ஆனால் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே நமது பெலன். ஆமென் அல்லேலூயா!

.

இதயங்கள் மகிழட்டும்

முகங்கள் மலரட்டும் (சிரிக்கட்டும்)

மனமகிழ்ச்சி நல்ல மருந்து

மன்னித்து அணைத்துக்கொண்டார்

மகனாய் சேர்த்துக்கொண்டார்

கிருபையின் முத்தங்களால் புது உயிர்தருகின்றார்

கோடி நன்றி பாடிக் கொண்டாடுவோம்

மனமகிழ்ச்சி நல்ல மருந்து

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். எங்கள் மனம் எப்போதும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கவும், அதுவே எங்களுக்கு நல்ல மருந்தாக இருக்கவும் கிருபை செய்யும். முறிந்த ஆவியை யாரால் தாங்க முடியும் என்று சொன்னீரே, முறிந்த ஆவி எலும்புகளையும் உலர பண்ணுமே, அப்படிப்பட்ட முறிந்த ஆவிக்கு நாங்கள் இடம் கொடாமல், எப்பொழுதும் உம்மிலே மகிழ்ச்சியாக இருக்கவும் அதுவே எங்கள் பெலனாக இருக்கப்போகிற தயவிற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 28 ஜூலை, 2014

28th July 2014 - அளவற்ற ஆழமான அன்பு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜூலை மாதம் 28-ம் தேதி - திங்கட் கிழமை
அளவற்ற ஆழமான அன்பு
...............

சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். - 1 கொரிந்தியர் 13: 7.

.

B.E. சிவில் இஞ்ஜினியரிங் படித்து முடித்த பிரபுவுக்கு அரபு நாடுகளில் ஒரு கட்டிடம் கட்டும் கம்பெனியில் வேலை கிடைத்தது. பிரபுவும் அவன் அம்மாவும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக நேசித்ததினால், மகன் வெளிநாடு செல்வதை பிரபுவின் தாயார் விரும்பவில்லை. இருப்பினும், தன் குடும்ப பொருளாதார தேவைகளை நினைத்து சம்மதித்தார். பிரபு அரபு நாடு சென்றதும் அவனை ஆச்சரியப்பட வைத்தது, பேரீச்சம் மரங்களும், பேரீச்சம் பழங்களும் தான். அதுவும் அவ்வப்போது மரத்தில் பறிக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும். புதிய (Fresh) பேரீச்சம் பழங்களை பார்க்கும் பிரபுவுக்கு அவன் அம்மா ஞாபகம் வரும். காரணம் பிரபுவின் அம்மாவுக்கு பேரீச்சம் பழம் என்றால் உயிர். புதிய பேரீச்சம் பழம் இந்தியாவில் கிடைப்பது அரிது என்பதை அறிந்த பிரபு, ஒரு மாத லீவில் இந்தியா வந்த தன்னுடைய நண்பன் விநோத் மூலம் புதிய பேரீச்சம் பழப்பெட்டி ஒன்றை வாங்கி தன் தாயாருக்கு கொடுத்து அனுப்பினான்.

.

பலவித காரணங்களால், விநோத் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மூன்று நாட்களை கழிக்க வேண்டியதாயிற்று. நான்காம் நாள் வேகமாக தன் சொந்த ஊருக்குச் சென்று தன் குடும்பத்தாரை சந்தித்து விட்டு, பிரபுவின் வீட்டிற்கு சென்று, பொருட்களையும், பேரீச்சம் பழப்பெட்டியையும் கொடுத்தான். தன் மகன் அன்போடு, ஆவலோடு கொடுத்தனுப்பிய பெட்டியை உடைத்து ஆசையோடு பேரீச்சம் பழங்களை ருசித்தாள் தாயார். பழம் 'வெகு ஜோர்' என்று சொல்லி தன் கணவருக்கும், தன் மகளுக்கும் கொடுத்தார். இருவரும் பழத்தை சாப்பிட்டுவிட்டு முகத்தை சுழித்தனர். காரணம், பேரீச்சம் பழங்கள், பழசாகி விட்டன. கெட்டுப் போகிற வாசனை பெட்டியிலிருந்து வந்தது. ருசியும் குறைந்து விட்டது. பிரபுவின் அப்பாவும், தங்கையும் அவன் அம்மாவை சாடினார்கள். கெட்டுப் போன பழத்தை சாப்பிட்டுவிட்டு, நன்றாக, ருசியாக இருக்கிறது என்று ஏன் பொய் சொல்ல வேண்டும் என்று கேட்டனர். அதற்கு பிரபுவின் அம்மா 'நான் ருசித்தது என் அன்பு மகன் பிரபுவின் அன்பையே தவிர, பேரீச்சம் பழத்தையல்ல' என்றாராம். பிரபுவின் அம்மாவின் பதில் இருவரையும் சிந்திக்க வைத்தது.

.

அன்பானவர்களே! மேற்கண்ட சம்பவத்தில் பிரபுவின் அம்மா கெட்டுப்போன பழத்தின் ருசியை அறியாமல் போனதற்கு காரணம், தன் மகன் தன் மேல் வைத்திருந்த அளவற்ற அன்பாகும். நாம் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக நேசிக்கும் போது தான், மேலான தன்மைகள் நம்மில் வெளிப்படும். இதைத்தான் நம் ஆண்டவர் இயேசு மாற்கு 12:30-ல் 'உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக' என்று சொல்லுகிறார். நம்மில் அநேகர் ஆண்டவருக்காக பல காரியங்கள் செய்யலாம். தியாகங்கள் செய்யலாம், பாடுகளை அனுபவிக்கலாம். ஆனால் இவை அனைத்தும், நம் ஆண்டவர் மேல் அதிகமான அன்பு வைத்து, முழுமனதோடு மனப்பூர்வமாய் செய்தால் மட்டுமே, அது ஆண்டவருக்கு பிரியமாய் இருப்பார். இயேசுவின் அன்பு நமக்காக ஜீவனைக் கொடுத்த அன்பு (1யோவான் 3:16) அந்த அன்புக்கு ஈடாக நாம் அவருக்கு என்ன செய்கிறோம். ஆண்டவருக்கு பாடுகளை சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ளுகிறவர்கள் உண்மையிலேயே அவரை அதிகமாக நேசிப்பவர்கள். 2கொரிந்தியர் 12:10-ல் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன் என்று பவுல் இயேசுவின் மேல் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறார். நாம் கிறிஸ்துவுக்காக பாடுகளை அனுபவிப்பதில் சந்தோஷப்படுகிறோமா? தயங்கி ஓடி விடுகிறோமா? சிந்திப்போம்.

.

துன்பங்களினாலே வியாகுலத்தினாலே உம்மை பிரிவேனோ

சோதனையினாலே வேதனையினாலே உம்மை பிரிவேனோ

எதை இழந்தாலும் என்ன நேர்ந்தாலும்

என்னை பிரித்திடவே முடியாதே

கண்ணீர் கவலையெல்லாம் - என் அன்பை பிரித்திடுமோ

.

இயேசுவே உம் அன்பிலிருந்து

என்னை பிரிக்க முடியுமோ

சூழ்நிலைகள் மாறினாலும்

எந்தன் அன்பு மாறுமோ

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் எங்கள் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். நீர் எங்கள் மேல் வைத்த அன்பிற்கு ஈடாக என்னத்தை நாங்கள் செலுத்த முடியும் தகப்பனே, என்ன நேர்ந்தாலும், எதை இழந்தாலும் எங்களை உம்முடைய அன்பை விட்டு பிரிக்கவே முடியாது தகப்பனே. நாங்கள் உம்மை எங்கள் முழு மனதோடு நேசிக்கிறோம் தகப்பனே. நீரே எங்களுக்கு எல்லாவற்றிற்கும் எல்லாமாக இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த உலகத்திற்காய் ஆதாயத்திற்காய் உம்மை நாங்கள் நேசிக்கவில்லை தகப்பனே, எங்கள் அப்பாவின் அன்பை நினைத்து நாங்கள் உம்மில் அன்பு கூறுகிறோம். எங்கள் துதி கன மகிமையை இயேசுகிறிஸ்துவின் இணையற்ற நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் எங்கள் நல்ல தகப்பனேஆமென்.
.....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

ஞாயிறு, 27 ஜூலை, 2014

இந்த வார வாக்குத்தத்தம் & விவிலிய விடுகதைகள் : - 27th July 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

விவிலிய விடுகதைகள்

 கையினால் வரைந்தால் அது சித்திரம்

கைக்குள் வரைந்தால் நீ பத்திரம் -அது எங்கே?


விடை: கர்த்தரின் உள்ளங்கையில் – ஏசா 49:16.

====================================

வீட்டிலே துரத்தலாம்

வீதிக்கு அனுப்பலாம்

ஒதுக்கப்பட்டு, துரத்தப்பட்டு

ஓரமாய் கிடந்தவன்

காலம் வர, நேரம் வர

முக்கியமாய் மாறினான்   -அது என்ன?


விடை: மூலைக்கு தலைக்கல் – சங் 118:22.

====================================

ஊர் ஊராக சுற்றியவன்

ஊதாரியாக வாழ்ந்தவன்

சொந்தம் விட்டு பறந்தவன்

சொத்தை எல்லாம் அழித்தவன்

தவிட்டை தேடி தவித்தவன்

தகப்பனை நாடி நடந்தவன்  -அவன் யார்?

 

விடை: இளைய மகன் – லூக்கா 15:11-24.

====================================
நன்றி: 'வேதாகம நண்பன்'

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

 

வெள்ளி, 25 ஜூலை, 2014

25th July 2014 - நீதிமானின் வெளிச்சமும் மகிழ்ச்சியும்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜூலை மாதம் 25-ம் தேதி - வெள்ளிக்கிழமை
நீதிமானின் வெளிச்சமும் மகிழ்ச்சியும்
.....................

நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. - (சங்கீதம் 97:11).

.

சே! என்ன வாழ்க்கை! ஒரே வெறுப்பாக இருக்கிறது. எனக்கென்று என்ன சந்தோஷம் இருக்கிறது என கேட்பவரா நீங்கள்? அல்லது பாவம் நிறைந்த இவ்வுலகிலே கட்டுபாடுகள் இல்லாமல் வாழ்வை அதன் போக்கில் அனுபவித்தால் என்ன? என்ற கேள்வி கேட்பவரா நீங்கள்? 'எப்படியாவது சந்தோஷமாக இருக்க வேண்டும்' என்பது தானே உங்கள் எண்ணம்! முதலில் எது சந்தோஷம் என தெளிவுபடுத்தி விட்டால் இரு கேள்விகளுக்கும் விடை கிடைத்து விடும்.

.

இப்போது நீங்கள் இரு காட்சியினை கற்பனை செய்து கொள்ளுங்கள். கிராமத்தை இளமஞ்சல் வெயிலிலேயும், நகரத்தை இரவிலும் காண்பது கொள்ளை அழகல்லவா? அதிகாலை.. ஆரஞ்சு சூரியன் குளத்தில் குளித்து எழும்ப, சுற்றியுள்ள தென்னஞ்சோலை, பூ பூண்ட பனிமூக்குத்தி, இருபுறமும் பசுமையான வயல்வெளியில், இடையில் உள்ள பாதையில் அதிகாலையில் அந்த வாசனையை முகர்ந்தவாறு நடக்கும் மகிழ்ச்சி என கிராமச்சூழல் ஒரு வித மன ரம்மியம், சோடியம், மெர்க்குரி விளக்குகள் வெளிச்சத்தில் விளம்பர பேனர்கள், உயர்ந்து நிற்கும் கான்கிரீட் கட்டிடங்கள், வீறிட்டு செல்லும் வாகனங்கள் என பரபரப்பான நகரச்சூழல், எல்லா நகரமும் இயற்கையான கிராமங்களை அழித்து சில ஜோடிப்புகளுடன் உருவாக்கபட்டதாயினும், சிலருக்கு நகர வாழ்கைதான் மகிழ்ச்சி. அதுப்போல இயற்கையாக தேவன் தந்த இன்பமான பரிசுத்தத்தை அழித்து ஏற்படுத்தியது தான் மனிதன் உண்டாக்கிய சிற்றின்பமாகிய பாவங்கள்!

.

உலக இன்பத்தையும் இயேசுவையும் நான் ஏன் ஒரே நேரத்தில் ஏற்றுகொள்ள கூடாது? என கேட்கலாம். பிரச்சனை என்னவென்றால் சாத்தானுக்கு இன்பமாக தெரிபவை இயேசுவுக்கும், இயேசுவுக்கு இன்பமாக தெரிபவை சாத்தானுக்கும் அருவருப்பானவைகள். ஆதாம் ஏவாளின் உள்ளத்தில் பரிசுத்தம் தான் இன்பம் என்ற எண்ணத்தை தேவன் வைத்திருந்தார். ஆனால் சாத்தானோ பாவம் தான பரவசம் என்று அவர்களுக்கு போதித்தான். இந்நாட்களிலும் பரிசுத்தம் தான் இன்பம் என்பதை பல திரைகள் கட்டி பிசாசானவன் மனிதனுக்கு மறைக்க முயற்சி செய்கிறான்.

.

பரிசுத்தம் எப்படி இன்பமாகும், அது ஒரு கட்டுபாடுதானே! என சிலருக்கு சந்தேகம் வரலாம். ஒரு நெல்லிக்காயை எடுங்கள், அதை பொறுமையாக சாப்பிடுங்கள். பின் நீர் அருந்தி பாருங்கள். தித்திப்பை உணருவீர்களல்லவா? புளிப்பான நெல்லிக்காயில் இனிப்பு எங்கிருந்தது? ஒரு ஸ்பூன் சீனியை விட நெல்லிக்காயில் இனிப்பு உடலுக்கு ஆரோக்கியம்! அதுபோல சகிப்பு தன்மையும், இச்சை அடக்கத்தையும் கொண்ட பரிசுத்தம் ஆரோக்கியமான உத்திரவாதமுள்ள இன்பம்.

.

தேவபிள்ளைகளே! நான் தேவனுக்கு முனபாக பரிசுத்தமாக ஜீவிக்கிறேன் என்கிற தாழ்மையான வாக்குமூலமே உண்மையான இன்பம், அதுவே உங்களின் வாழ்க்கைக்கு திருப்தியையும், இரவில் உறக்கத்தையும் தரும். இந்த இன்பம் இல்லாதவரை எந்த இன்பமும் உங்களை திருப்தி செய்யாது. உலகத்தில் இன்பத்தை தேடுவீர்களென்றால் அது ஓட்டையுள்ள பாத்திரத்தை நிரப்ப எடுக்கும் முயற்சியாகவே இருக்கும். தெரிந்தெடுப்பு உங்களுடையது.

.

'நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது' மகிழ்ச்சிக்கு முன்பாக வெளிச்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. 'இவ்விதமாய் யூதருக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் உண்டாயிற்று' (எஸ்தர் 8:16). இந்த வசனத்திலும் மகிழ்ச்சிக்கு முன்பாக வெளிச்சம் இருப்பதை கவனியுங்கள். ஆகவே மகிழ்ச்சி நமக்கு வேண்டுமென்றால், வெளிச்சம் முதலாவது நமக்கு வேண்டும். 'இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்' (யோவான் 8:12). உலகத்திற்கு ஒளியாயிருக்கிற, வெளிச்சமாயிருக்கிற இயேசுகிறிஸ்து நம் உள்ளத்தில் இருந்தால், மகிழ்ச்சி தன்னாலே நம் இருதயத்தை நிரப்பும். நீதிமான்கள்; கிறிஸ்துவாகிய வெளிச்சத்தில் நடக்கும்போது, அவர்களுக்காக மகிழ்ச்சி ஏற்கனவே விதைக்கப்பட்டிருப்பதால், அது தன் காலத்திலே செடியாகி, மரமாகி, மகிழ்ச்சியாகிய கனியை கொடுக்கும். ஆமென் அல்லேலூயா!

.

காரிருள் நம்மை சூழ்ந்தாலும்

கர்த்தர் ஒளியாவார்

ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்

உலகின் ஒளி நாமே

.

இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்

இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்
.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, கிறிஸ்துவை ஏற்று கொண்ட ஒவ்வொருவரையும் நீதிமான்களாய் மாற்றியிருக்கிற உம்முடைய கிருபைக்காக உம்மை துதிக்கிறோம். அப்படிப்பட்ட நீதிமான்களுக்காக வெளிச்சமும், மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டு, அவர்கள் களிகூரும் பொருட்டு, நீர் கொடுத்திருக்கிற மகிழ்ச்சிக்காக உம்மை துதிக்கிறோம். உலகத்தின் மகிழ்ச்சி கடந்து போகும், அவைகளையல்ல, உம்மிலே களிகூருகிற மகிழ்ச்சியினாலே நாங்கள் நிரம்பியிருக்க தக்கதாக தேவன் எங்களுக்கு கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
......

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.