Friends Tamil Chat

புதன், 19 பிப்ரவரி, 2014

19th Feb 2014 - பின்னிட்டு பார்க்க வேண்டாம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 பிப்ரவரி மாதம் 19-ம் தேதி - புதன் கிழமை
பின்னிட்டு பார்க்க வேண்டாம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார். - (லூக்கா 9:62).

.
அமெரிக்க தேசத்திலே ஆத்தும பாரமுள்ள சபையொன்றிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு ஒருவர் மிஷனெரியாக அனுப்பப்பட்டார். அநேக நாட்கள் பயணத்திற்குப் பின் ஆப்பிரிக்க எல்லைப்பகுதியை அடைந்தார். அங்கிருந்து ஒரு துடுப்பு படகு மூலம் மக்கள் வாழும் பகுதியை நோக்கிச் சென்றார். மாலை மயங்கும் அந்நேரத்திலே மக்கள் இடும் ஆரவாரங்களை கேட்ட அவர், காரணமறிய துடுப்பை ஆர்வமாகப் போட்டு காதை கூர்மையாக்கினார். அவர் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தபடி, அம்மக்கள் மனிதர்களை சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவருடைய உள்ளத்தில் பயம் ஏற்பட ஆரம்பித்தது.
.
இருப்பினும் தான் அனுப்பப்பட்டதன் நோக்கத்தை கண் முன் நிறுத்தி முன்னேறினார். பின் ஒரு இடத்தில் இறங்கி, படகை கரையில் கட்டிவிட்டு சென்றார். ஊழியம் செய்ய ஆரம்பித்தார். வருடங்கள் உருண்டோடின. ஊழியத்தின் பலனை காண முடியவில்லை. மக்களிடமுள்ள நிர்விசாரமும் மாறவில்லை.
.
ஒரு நாள் மிகவும் சோர்வுற்றவராக, அடர்ந்த காட்டிற்குள் சென்று கதறி அழுதார். 'ஆண்டவரே, நான் தியாகத்தோடுதானே இங்கு வந்தேன். ஜெபத்தில் போராடித்தானே ஆத்துமாக்களை சந்திக்கிறேன். ஏன் கனியை காண முடிவில்லை?' என கதறினார். கதறலுக்கு நடுவே ஒரு மெல்லிய சத்தத்தை உள்ளத்தில் உணர்ந்தார். 'மகனே, நீ தியாகத்தோடும், ஜெபத்தோடும்தான் ஊழியம் செய்கிறாய். ஆனால் உன் நம்பிக்கையை எங்கு வைத்திருக்கிறாய், உயிருக்கு ஆபத்து வந்தால் தப்பித்து விடலாம் என கரையில் கட்டியுள்ள படகின் மீதா, அல்லது என் மீதா?' என ஆண்டவர் கேட்டதை உணர்ந்தார் அந்த ஊழியர்.
.
உடன்தானே உள்ளத்தில் உணர்த்தப்பட்டவராக நேராக சென்று படகு கட்டப்பட்டிருந்த கயிற்றை அறுத்தெடுத்தார். அது தண்ணீரில் மிதந்து எங்கே சென்றது. அன்று முதல் ஆவியில் அனலடைந்தவராய் உற்சாகமாய் மக்களை சந்தித்தார். தேவன் ஆத்துமாக்களை கொள்ளைப் பொருளாய் அவருக்கு கொடுத்தார்.
.
எலியா தீர்க்கதரிசியின் மூலம் ஊழிய அழைப்பை பெற்ற எலிசா அதுவரை தன் வாழ்வின் ஆதாரத்திற்கு நம்பிக்கையாக இருந்த ஏர் மாடுகளை அடித்து, மாடுகளின் மேல் வைக்கப்படும் மரத்தினாலே ஜனஙக்ளுக்கு அதை சமைத்து கொடுத்து விட்டு, எலியாவின் பின் சென்றார். 'என்றோ ஒரு நாள் ஊழியத்தில் சோர்வு ஏற்படுமாயின் திரும்பி வந்து ஏர்மாடுகளை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் ஒருபோதும் தனக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அப்படி செய்தார்.
.
பிரியமானவர்களே நம்முடைய நம்பிக்கை எதன் மேல் உள்ளது? படிப்பு, பதவி பரம்பரை சொத்து, பேங்க் பேலன்ஸ் இவைகளின் மேல் உள்ளதா? இல்லை இவற்றை எல்லாம் கொடுக்கும் தேவன் மேல் உள்ளதா? வங்கியில் பணம் வைத்திருப்பதோ, சொத்து வைத்திருப்பதோ பாவம் அல்ல, ஆனால் அதன்மேல் நம் முழு நம்பிக்கையும் வைக்கும்போது அது பாவமாகிறது.

.
தேவன் நம்மை நம்பி கொடுத்திருக்கும் ஊழியத்தில், வேலையில், மற்ற காரியங்களில் நாம் கவனத்தை வைக்காமல், தேவனை விட்டு பின் வாங்கிப் போய், நம் பழைய வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறோமா? தேவனும் வேண்டும், உலகமும் வேண்டும் என்று விட்டு வந்த உலக காரியங்களை பின்னிட்டுப் பார்க்கிறோமா?
.
கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்று இயேசு கூறினாரல்லவா? தேவனுடைய இராஜ்யத்திற்கு தகுதியுள்ளவர்களாகும்படி, உலகத்தை திரும்பிப்பார்த்து அதன்பின் போகாதபடி, கலப்பையில் கை வைத்து, இயேசுவையே நோக்கி முன் செல்வோம். தேவன் செய்த நன்மைகளை நாம் பின்னிட்டு திரும்பிப் பார்க்கலாம், ஆனால் உலகத்தை பின்னிட்டுப் பார்க்க வேண்டாம். நாம் ஜெபித்தால், அதற்கான கிருபையை கர்த்தர் நமக்கு தருவார். ஆமென் அல்லேலூயா!

.


வேதனை நெருக்கம் இன்னல்கள் இடர்கள்

எதுவும் பிரிக்காது

வெற்றி வேந்தன் என் இயேசுவின் அன்பால்

முற்றிலும் ஜெயம் பெறுவேன்

நிகழ்கின்ற காலமோ வருகின்ற காலமோ

வாழ்வோ சாவோ வல்ல தூதரோ

பிரிக்கவே முடியாது

.
இயேசுவின் பின்னால் நான் செல்வேன்

திரும்பி பார்க்க மாட்டேன்

சிலுவை என் முன்னால் உலகமே பின்னால்

இயேசு சிந்திய இரத்தத்தினாலே என்றும் விடுதலையே

ஜெபம்
எங்கள் அன்பின் நேச தகப்பனே, கலப்பையில் கைவைத்து நாங்கள் திரும்பி உலகத்தைப் பார்க்காதபடி எங்களை உமக்குள் வைத்துக் காத்துக் கொள்ளும். உலக கவர்ச்சிகளோ, பணமோ, வேலையோ வேறு எந்த காரியங்களும் எங்களை உம்முடைய அன்பிலிருந்து பிரிக்காதபடி காத்துக் கொள்ளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பின் நேச தகப்பனே, நீர் நல்லவர், வல்லவர், போதுமானவர். எங்கள் ஜெபத்தை கேட்பவர். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது என்று வேதம் கூறுகிறபடி, இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு நீதிமான்களாக்கப்பட்ட நாங்கள் உமது கிருபையை எதிர்ப்பார்த்து எங்கள் ஜெப விண்ணப்பங்களை உமது சமுகத்தில் வைக்கிறோம் தகப்பனே

.

சகோதரன் ஜெபஸ்டின் அவர்களுடைய வாழ்வின் தேவைகளை தேவன் சந்திப்பீராக. அவர் உம்மை முதலாவது தேடவும், உம்முடைய நீதியையும் பெற்று, பின் நீர் தருகிற ஆசீர்வாதங்களை பெற தேவன் கிருபை செய்வீராக.

.
சகோதரி துளசியின் சகோதரன் பால முரளி அவர்களுக்கு நான்கு மாதங்களாக வேலை இல்லாமல் இருப்பதால், தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும், குடும்பத்தையும் பராமரிக்கும்படியாக அவருக்கு அவருடைய படிப்பிற்கேற்ற வேலையை கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். அவர்கள் நீரே தேவனென்று அறிய கிருபை செய்தருளும்.
.
சகோதரி யமுனா கேரலின் வேலைக்காக அப்ளை செய்யும் இடங்களில் இன்டர்வியூவில் பாஸ் பண்ணினாலும், ஏதோ தடையினாலே அது கிடைக்காமற் போகிற படியினால், தேவன் தாமே எல்லா தடைகளையும் மாற்றுவீராக. தடைகளை தகர்க்கிறவராகிய நீர் யமுனாவிற்கு முன்பாக போய் எல்லா தடைகளையும் மாற்றி, மகளுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க கிருபை செய்வீராக. தேவன் செய்யப் போகிற தயவிற்காக உமக்கு ஸ்தோத்திரம்.
.
பஹ்ரெயினில் இருக்கிற சகோதரன் மனுவேல், கர்த்தரை விட்டு பின்வாங்கி இருக்கிற நிலையிலிருந்து மாறி, இந்த நாளின் செய்தியின்படி, கலப்பையில் கைவைத்து பின்னிட்டு பார்க்காதபடி, கர்த்தருக்குள் வளர கிருபை செய்யும். தினமும் வேதம் வாசித்து, ஜெபித்து ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற கிருபை செய்யும்.
எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.