Friends Tamil Chat

திங்கள், 17 பிப்ரவரி, 2014

17th Feb 2014 - லேசான காரியம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 பிப்ரவரி மாதம் 17-ம் தேதி - திங்கட் கிழமை
லேசான காரியம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? - (ரோமர் 8:32).

.

1988ஆம் ஆண்டு முதல் 'தேவ எக்காளம்' என்ற பத்திரிக்கையை வெளியிடும் சாமுவேல் என்ற தேவ ஊழியரை அநேகர் அறிவர். அவர் 22 வருடமாக கைப்படவே செய்திகளை எழுதினார். ஆகவே ஒரு தமிழ் தட்டச்சு எந்திரம் வேண்டுமென்று ஜெபிக்கலானார். அவர் அதைப் பெற்றுக் கொண்ட விதம் நம் விசுவாச வாழ்வை ஒரு படி மேலே கொண்டு போகும்.

.

1990 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசி நாளில் அவர் வீட்டிற்கருகிலுள்ள தோட்டத்திலுள்ள கிணற்றுக்கருகில் முழங்காலூன்றி ஜெபிக்க ஆரம்பித்தார். ஜெபத்தின் முக்கிய பகுதியாக தட்டச்சு வேண்டும் என்று ஊக்கமாய் ஜெபிக்க ஆரம்பித்தார். ஒரு சில மணி நேரங்கள் கழித்து நடந்துக் கொண்டே ஜெபித்துக் கொண்டு ஒரு பேரிக்காய் மரத்தண்டை வந்தார். அந்த மரத்திலே வெண்மையான கொழுந்து இலைகள் வெளிவரத் தொடங்கி இருந்தன.

.

சில மாதங்களுக்கு முன் அவர் பார்த்தபோது அம்மரம் குளிரின் காரணமாக இலைகளையெல்லாம் உதிர்த்து பட்டமரம் போல் காணப்பட்டது. ஆனால் இன்றோ பசுந்துளிராக இலைகளை விட்டிருந்தது. இன்னும் சில மாதத்தில் வெண்மையான பூக்கள். பின் சிறிய காய்கள் பின்னர் மரமே ஒடிந்து விடும் அளவிற்கு பேரிக்காய்களால் மரம் நிறைந்து விடும்.

.

இந்த மாட்சிமையான காரியத்தை செய்கின்றவராகிய தேவனாகிய கர்த்தர் எத்தனை மகத்துவமுள்ளவர் என்பதை நினைத்தபோது அவரது விசுவாசம் துளிர்விட்டது. 'இப்படிப்பட்ட சர்வ வல்லவர் அற்பனாகிய எனக்கு ஒரு தமிழ் தட்டெழுத்து எந்திரத்தை கொடுப்பது அத்தனை கடினமான கரியமா? நீர் எனக்கு அதை தந்தே ஆக வேண்டும். நீர் தாமதித்தால் கடன்பட்டாவது வாங்கி விடுவேன். எத்தனை நாள் கை வலிக்க எழுதுவது' என்று கூறிவிட்டு வீடு வந்து சேர்ந்தார்.

.

வீடு வந்து சேர்ந்து பதினைந்து நிமிடம் கூட ஆகியிருக்காது, அந்த நாளுக்குரிய தபால்கள் அவருக்கு கிடைத்தது. ஒரு சிறிய கவரில் கடிதம் எதுவும் இல்லாமல், அனுப்புபவரின் முகவரியும் இல்லாமல், ஒரு புதிய தட்டெழுத்து எந்திரம் வாங்க போதுமான பணம் நிறைந்த ஒரு டிராப்ட் வைக்கப்பட்டிருந்தது. அல்லேலூயா! மட்டுமல்ல, அதைச் சுற்றி ஒரு சிறிய வெள்ளைத்தாளில் 'இருக்கிறவராகவே இருக்கிறேன்' என்று எழுதப்பட்டிருந்தது. எத்தனை அற்புதமான தேவன் நம் தேவன் பாருங்கள்! அதைக் கண்ட அவரால் தேவ சமுகத்தில் ஆண்டவருடைய அன்பை நினைத்து அழுவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை.

.

பிரியமானவர்களே, நாம் எதற்காக ஆண்டவரிடம் ஜெபித்துக் கொண்டிருக்கிறோம். நாம் விரும்பி கேட்பது தேவ இராஜ்யத்தின் கட்டுமான பணிக்கும், விரிவாக்க பணிக்கும் உதவுமானால் அதை தேவன் இன்றே தருவார்.

.

நாம் கேட்பது தேவ சித்தத்திற்கு உட்பட்டதானால் நாம் தைரியமாக கர்த்தரிடம் நம் தேவைகளை சொல்லிக் கேட்கலாம். 'நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்' (1 யோவான் 5:14) என்று வேத வசனம் கூறுகிறதல்லவா? ஏனெனில் பெலமுள்ளவனுக்காகிலும், பெலமற்றவனுக்காகிலும் உதவிகள் செய்வது அவருக்கு லேசான காரியமல்லவா?.

.

கர்த்தரிடத்தில் அவருடைய சித்தத்திற்கு உட்பட்டதை கேட்போம். கர்த்தரிடமிருந்து அவற்றை அற்புதமாய் பெற்றுக் கொண்டு மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் இருப்போம். ஆமென் அல்லேலூயா!.

.

லேசான காரியம் எதுவும் லேசான காரியம்

பெலமுள்ளவன் பெலனற்றவன் யாராயிருந்தாலும்

உதவிகள் செய்வது லேசான காரியம் - இயேசுவுக்கு

லேசான காரியம்

.

மண்ணை பிசைந்து மனிதனை

படைப்பது லேசான காரியம்

மண்ணான மனிதர்க்கு மன்னாவை தருவது

லேசான காரியம் இயேசுவுக்கு லேசான காரியம்


ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் அப்பாவிற்கு எதுவும் கொடுப்பது லேசான காரியமாயிருந்தாலும், உம்முடைய சித்தத்திற்குட்பட்டதை கேட்டு பெற்றுக் கொள்ளும்படியாக ஞானத்தை தாரும். அற்புதங்களை இயேசுவின் நாமத்தினாலே பெற்று ஆசீர்வாதமாக இருக்க கிருபை செய்யும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம் என்று வேத வாக்கியம் உரைக்கிறபடி உமது சித்தத்தின்படி உம்முடைய சமுகத்தில் ஜெபிக்கிறோம் ஐயா. தயவாய் செவி சாய்த்து விண்ணப்பங்களை கேட்பீராக. பதிலை தருவீராக.
.
சகோதரி ஆலிஸ் டயானா அவர்களின் மாமா மாரடைப்பினால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருப்பதால், தேவன் தாமே அவரை சுகமாக்கும்படியாக ஜெபிக்கிறோம். பரிபூரண விடுதலை பெற்று உமக்கு சாட்சியாக வாழ கிருபை செய்வீராக.
.
ஓமனில் இருக்கும் சகோதரி வித்யா பத்மினி அவர்கள் ஒரு லெக்சரராக, தன்னுடைய மூன்று பிள்ளைகளோடு அந்த தேசத்தில் இருப்பதாலும், கணவர் இந்தியாவில் இருப்பதாலும் தேவன் தாமே அவருக்கும் ஓமனில் நல்ல வேலை கிடைத்து, குடும்பமாக ஒன்று சேர்ந்து வாழ கிருபை செய்வீராக. சகோதரி கர்த்தருக்கு சாட்சியாக அந்த தேசத்தில் வாழவும், அநேகரை கர்த்தருக்குள் கொண்டு வரும் கருவியாக அவர்களை நீர் எடுத்து பயன்படுத்தவும் ஜெபிக்கிறோம்.
.
சகோதரன் ஆல்பர்ட் அவர்களின் வேலை மிகவும் கடினமாக இருக்கிறபடியால், தேவன் அவருக்கு இரங்கும்படியாக ஜெபிக்கிறோம். தன் வேலையினிமித்தமாய் மிகவும் வருத்தத்தில் இருக்கும் அவருக்கு தேவன் தாமே இரங்கி, அவருடைய வேலையை இலகுவாக்கி தரும்படியாக ஜெபிக்கிறோம்.
.
சகோதரன் அற்புதராஜ் அவர்களின் நண்பர் சங்கர மூர்த்தி அவர்களுக்கு சிறுநீரக குழாயில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டு, டாக்டர்களாலும் சரிப்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், தேவன்தாமே அவரை தொட்டு சுகப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம். நீர் அற்புதங்களை செய்கிற தேவன் என்பதை அவர் காணும்படி, ஒரு அற்புதத்தை அந்த சகோதரனின் வாழ்வில் செய்வீராக. நீரே தேவன் என்பதை அறிந்து அவர் உமக்கு சாட்சியாக மாறும்படி அவர் வாழ்வில் பெரிய அற்புதத்தை செய்வீராக.
.
போதகர் மோகன்தாஸ் அவர்களின் இருபத்தாறு வயதுடைய ஒரே புதல்வன், எம்பிஏ முடித்தவர், மூன்று சகோதரிகளுக்கு பிறகு பிறந்தவர், போதகரும், அவருடைய மனைவியும் நீலகிரியில் ஊழியக்காரியமாக சென்றிருந்தபோது, கடந்த நவம்பர் மாதம் 13ம் தேதி சென்னையிலிருந்து வரும் வழியில் ஸ்கூட்டர் விபத்தில் சிக்கி, இடத்திலேயே நித்திரை அடைந்து விட்டபடியால், போதகருக்கும், அவருடைய மனைவிக்கும் தேவன்தாமே உலகம் கொடுக்க முடியாத ஆறுதலினால் நிரப்பும்படியாக ஜெபிக்கிறோம். நாங்கள் என்ன சொல்லி, ஆறுதல் அளிக்க முடியும் தகப்பனே, தேவனே சகலவித ஆறுதல்களின் தேவன், நீரே ஆறுதலை தர முடியும். உம்மையே பற்றிக் கொள்ளவும், சமாதானத்தினால் நிரப்பப்படவும் ஜெபிக்கிறோம். தொடர்ந்து உம்முடைய ஊழியத்தில் நிலைத்திருந்து, அநேகருக்கு ஆறுதலைக் கொடுக்கும் கருவியாக அவர்களை பயன்படுத்துவீராக. வருகிற மே மாதம் நடக்க இருக்கிற சம்மர் கேம்பிலும் தேவரீருடைய கரம் கூட இருந்து வழிநடத்தும்படியாக ஜெபிக்கிறோம். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.


...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.