Friends Tamil Chat

ஞாயிறு, 30 ஜூன், 2013

இந்த வார வாக்குத்தத்தம் & விவிலிய விடுகதைகள் : - 30th June 2013

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

விவிலிய விடுகதைகள்

  கையின் மேல் தலை

 உடலின் மேல் வறுமை -அவன் யார்?

 

விடை: சோம்பேறி. நீதி 6:9-11.

====================================

 விடாமல் விரட்டி விடும்

 தொடாமல் துரத்தி விடும்

 வீட்டின் வாசற்படியில்

 நித்தமும் படுத்திருக்கும் -அது எது?

 

விடை: பாவம். ஆதி 4:7.

====================================
 சாவுக்கு பயந்து ஓடி

ஊரை விட்டு வந்து

சூரைத் தஞ்சம் கொண்டு

அயர்ந்த நித்திரை செய்த

ஆண்டவரின் அடியான் -அவன் யார்?

 

விடை: எலியா. 1 இராஜா 19:1-6.

====================================

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

 

வெள்ளி, 28 ஜூன், 2013

28th June 2013 - தாயின் அன்பிலும் மேலான அன்புடையவர்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஜுன் மாதம் 28-ம் தேதி - வெள்ளி கிழமை
தாயின் அன்பிலும் மேலான அன்புடையவர்
.....

'ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை'. - (ஏசாயா 49:15).

.
தாயின் அன்பிற்கு ஈடாக இந்த உலகத்தில் வேறு அன்பில்லை என்று கூறுவார்கள். தாயின் அன்பு அத்தனை வலியது, உண்மையானது. வேதமும் தாயின் அன்பை குறித்து அருமையாக வெளிப்படுத்துகிறது. ஒரு தாய் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல் இருப்பாளோ? அப்படி ஒரு நாளும் நடப்பதில்லை. ஆனாலும் அப்படியே நடந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்று தேவன் நம்மை பார்த்து கூறுகிறார்.

.

சமீபத்தில் நான் பார்த்த ஒரு காட்சி என் மனதை உருக்கியது. ஒரு 38 வயதுள்ள பெண் மூளை வளர்ச்சி குன்றியவள், அவளுக்கு வலிப்பு வியாதியும் உண்டு. அவளால் சரியாக பேச முடியாது. அவளுக்கு வலியானாலும் சரி, சந்தோஷமானாலும் சரி, பசியானாலும் சரி, அவளால் கத்ததான் முடியும். வார்த்தைகள் வாயிலிருந்து வராது. நன்கு சாப்பிட்டு, உடல் பருமனாக காணப்பட்டது. அவளை பார்த்து கொள்ளும்படி ஒரு பெண் இருந்தாள். இருப்பினும் அவளுடைய வயது சென்ற தாயார் அவள் அருகிலேயே உட்கார்ந்து, அவள் கத்தும்போதெல்லாம் அவள் தலையை வருடி, அவளை தேற்றி. அமைதி படுத்த முயன்று கொண்டிருந்தார்கள்.

.

அந்த வயதான தாயாரை பார்த்த போது என் மனம் பரிதாபம் கொண்டது. அவர்களிடம் போய் 'இந்த உங்கள் மகள் இப்படி ஆவதற்கு என்ன காரணம்?' என்று விசாரிக்க ஆரம்பித்தேன். அவர்கள் சொன்ன சம்பவம் என்னை உருக்கிற்று. இந்த பெண் வயிற்றில் இருக்கும்போது, அவர்களுடைய ஒரே மகன், நான்கு வயதுள்ளவன், தெருவை கடக்க முயன்றபோது, காரில் மோதி, அந்த இடத்திலேயே மரித்து போனான். அதை கண்ட அவர்களின் இருதயம் நொறுங்குண்டது. வயிற்றிலும் வாயிலும் அடித்து அழுது அழுது மிகவும் கலங்கி எப்பொழுதும் அழுதபடி இருந்தார்கள். அவர்களின் அந்த நிலை வயிற்றில் உள்ள குழந்தையை தாக்கியது. அந்த குழந்தை பிறந்த போது மூளை வளர்ச்சி குன்றியதாக, எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாததாக பிறந்தது. அதற்கு பின் பிறந்த குழந்தைகள் சாதாரணமானதாக பிறந்தாலும், இ;ந்த குழந்தையை பராமரிப்பது பெரிய காரியமாக காணப்பட்டது.

.

மற்ற பிள்ளைகள் எல்லாரும் திருமணமாகி கணவர் வீட்டிற்கு போய் விட்டார்கள். இப்போது தனித்து விடப்பட்டவர்கள் தகப்பனும் தாயும் அந்த பிள்ளையும் மாத்திரமே. தகப்பனும் அந்த பெண்ணின் 30ஆவது வயதில் மரித்து போனார். தாய் மிகவும் நலிந்த சரீரமும், பெலவீனமுமானவர்கள். அவர்களுக்கும் இருதய நோய் இருந்து மருந்து மாத்திரை சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். அந்த வயதிலும் அவர்கள் அந்த பெண்ணை குளிப்பாட்டி, கழுவி, உணவு ஊட்டி பராமரித்து வருகிறார்கள். அந்த பெண்ணுக்கு சிறு காய்ச்சல் என்றாலும், நமக்கு பாரமாயிருக்கிறாளே, மரித்து போகட்டும் என்று விட்டுவிடாமல், டாக்டரிடம் கூட்டி சென்று மருந்துகளை வாங்கி கொடுத்து கவனித்து கொள்கிறார்கள். அந்த நிலையை பார்த்த போது என் கண்கள் கலங்கியது. இன்னும் எத்தனை காலம் இப்படி நடக்குமோ தெரியாது.

.

ஒரு தாய் தன் பிள்ளைக்கு தன் வியாதியின் மத்தியிலும், பெலவீனத்தின் மத்தியிலும் ஒன்றுக்குமே பிரயோஜனமில்லாத போதும் தன் பிள்ளை என்ற ஒரே காரணத்தினால், அது உயிரோடு இருப்பது தனக்கு பாரம் என்று நினையாதபடி தன் உயிரையே கொடுத்து வளர்க்கும் தாய்க்கு நிகரான அன்பு யாருக்கு உண்டு? நம் தேவனுக்கு மாத்திரமே உண்டு!!!

.

வேதம் சொல்கிறது, அப்படிப்பட்ட 'ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை' என்று. நம் தேவன் அந்த தாயிலும் மேலான அன்புள்ளவர். அவர் ஒருபோதும் நம்மை மறப்பதில்லை. சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு விரோதமாக காரியங்ளை செய்யலாம். பெற்றோரை குறித்து அனுதினமன்னாவில் எழுதியிருந்தபோது, ஒரு வாசகர் தன் பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டார். அவருடைய தாயார் அவர்கள் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல், மகன் காதலித்த பெண்ணை மணந்ததற்காக மகனுக்கு விரோதமாக அநேக உபத்திரவங்களையும், மந்திரங்களையும் ஏவி விட்டதாக எழுதியிருந்தார். அப்படிப்பட்ட பெற்றோரும் இந்த உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். சில தாய்மார், பிறந்த குழந்தை திருமண கட்டிற்கு வெளியே பிறந்ததால் பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் போட்டு விட்டு செல்கிறார்கள்.

.

அப்படிபட்டதாக தாயானவள் மறந்தாலும், கெட்ட செயல்களை செய்தாலும், நம் தேவன் நம்மை மறப்பதில்லை. அவர் நம் மேல் வைத்த அன்பு குறைவதில்லை. உலகத்தில் யார் நம்மை கைவிட்டாலும் நம்மை கைவிடாத தேவன் ஒருவர் உண்டு. நான் உங்களை திக்கற்றவர்களாய் விடேன் என்று வாக்குதத்தம் செய்தவர் நம்மை ஒரு நாளும் திக்கற்றவர்களாய் விடவே மாட்டார். தாயினும் தந்தையினும் நம் மேல் அதிகமாய் அன்பு கூர்ந்து, நம்மை அணைத்து கொள்வார். நம் கண்ணீரை துடைப்பார். என் தகப்பன் எங்களைவிட்டு மரித்து போனபோதும், என் தாய் என்னை விட்டு கடந்து போன போதிலும், என் தேவன் என்னை கைவிடாமல், என் வாஞ்சைகளை அறிந்து, என் தேவைகளை சந்தித்து, என்னை கரம் பிடித்து என்னை வழிநடத்தின தேவன் இன்றும் மாறாதவராயிருக்கிறார். திக்கற்ற பிள்ளைகளுக்கு அவரே தகப்பன் என்ற வசனத்தின்படி அவரே தகப்பனாக தாயாக இருந்து வழிநடத்தி வருகிறார்.

.

ஒருவேளை நீங்கள் நினைக்கிறீர்களோ, எனக்கு யாரும் இல்லை, என் தகப்பனும் என் தாயும் என்னை கைவிட்டார்கள் என்று? 'என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்' (சங்கீதம் 27:10) என்று தாவீது சொல்வது போல நம் நம்பியிருக்கிற அனைவரும் நம்மை கைவிட்டாலும் நம் தேவன் நம்மை கைவிடமாட்டார். அவர் நம்மை சேர்த்து கொள்வார். மனம் தளர்ந்து போகாதிருங்கள். யாருமே எனக்கு இல்லையே என்ற அங்கலாய்ப்பு வேண்டாம். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சர்வவல்லமையுள்ள தேவன் உங்களுக்கு தகப்பனாக இருந்து உங்களை தாங்குவார், உங்களை தேற்றுவார், உங்களை ஆற்றுவார், உங்களை விசாரிப்பார். என்னை தேற்றி வழிநடத்தின தேவன் உங்களையும் தேற்றி, உங்கள் கண்ணீரையும் துடைப்பார். அவருடைய அன்பில் மூழ்கி, அவரை நாமும் நேசிப்போமா? அவர் நம்மை அன்புகூர்ந்தபடி நாமும் அவரில் அன்புகூருவோமா?

.

உம்மை போல இந்த உலகிலே

வேறொருவரும் இல்லையே

அம்மாவும் நீரே என்

அப்பாவும் நீரே என்

ஆத்தும நேசர் நீரல்லோ என்

இதய துடிப்பும் நீரல்லோ

...

அன்பை தேடி நான் அலைந்து திரிந்தேன்

மனித உறவுகளால் நொறுக்கப்பட்டேன்

வேதனையில் நான் வாடுகையில் - உம்

அன்பினால் என்னை உயிர்ப்பித்தீர்

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, தாயின் அன்பிலும் மேலான அன்புடையவரே, உம்முடைய அன்பிற்கு ஈடாக வேறு எந்த அன்பும் இல்லையே. திக்கற்றவர்களின் தகப்பனாக தாயாக நீரே இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். தகப்பனும் தாயும் கைவிட்டாலும் எங்களை சேர்த்து கொள்கிறவர் நீர்தானல்லவோ! உம்முடைய அன்பிற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம் தகப்பனே.அந்த அன்பில் மூழ்கவும், நாங்களும் உம்மில் அன்பு செலுத்தவும் எங்களுக்கு கற்று தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 27 ஜூன், 2013

27th June 2013 - மெய்யான கிறிஸ்தவன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஜுன் மாதம் 27-ம் தேதி - வியாழக் கிழமை
மெய்யான கிறிஸ்தவன்
...

நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். - (யோவான் 13:35).

.
ஓரு கிராமத்தில் அநேக கிறிஸ்தவர்கள் இருந்தனர். அங்கிருந்த ராணி என்ற வாலிப பெண்ணுக்கு கிறிஸ்தவத்தின் மீது சற்று ஈர்ப்பு இருந்தது. காரணம் தான் சிறுவயதில் கேட்ட சுவிசேஷமே! பின் கொஞ்சம் கொஞ்சமாக வேதத்தை வாசிக்க ஆரம்பித்தாள். ஒரு வருடத்தில் வீட்டிற்கு தெரியாமல் வேதத்தை மூன்று முறை வாசித்து விட்டாள். அவ்வப்போது பொது கூட்டங்களில் கலந்துகொண்டாள்.

.

வெள்ளை உடை அணிந்து ஆராதனைக்கு போகிறவர்களை தேவதூதர்கள் போல் எண்ணினாள். அந்நிய பாஷை பேசி பரவசமாக ஆராதிப்பவர்களை பார்க்கும்போது, இவர்கள் பரலோகத்திற்கு தகுதி பெற்ற பரிசுத்தவான்கள் என்று நினைத்தாள். சுவிசேஷத்தை பிரசங்கித்தவர்களை பேதுருக்கள் என்றும் மேடையில் முழங்கியவர்களை எலியாக்கள் என்றும், சபை நடத்துபவர்களை சத்தியவானகள் என்றும் எண்ணினாள்.

.

மாதங்கள் உருண்டன. சபைக்கு செல்ல ஆரம்பித்தாள். ஆனால் அங்கோ வெள்ளை உடை உடுத்தின பலருடைய கறைபடிந்த இருதயங்ளை காண நேரிட்ட போது அதிர்ச்சியடைந்தாள். அந்நிய பாஷை பேசினவர்கள் அன்பற்ற வார்த்தைகளை பேசியதை கேட்டபோது, கேள்விகள் பல எழும்பின. நாங்க்ள இயேசுவின் அடிமைகளென பேசின பலரும் தங்களது வாழ்ககை பாதையில் பணம், பொருள், ஆடம்பரம், அந்தஸ்து, புகழ் ஆகியவற்றக்கு அடிமைகளாயிருப்பதை கண்டபோது யார் சத்தியவான் என கேட்க நாவு துடித்தது.

.

சில இடங்களில் விசுவாசிகளை பாதுகாக்க வேண்டிய போதகர்களே, வேலியே பயிரை மேய்ந்த அநியாயத்தையும், பசுத்தோல் போர்த்திய புலிகளாக, வெளியே பரிசுத்தர்களாக, சாதுக்களாக, ஆனால் உள்ளேயோ விசுவாசிளை பட்சிக்கிற போதகர்களாக இருப்பதை கண்டு திடுக்குற்றாள்.

.

ஆனால் வேதத்தை வாசிக்க வாசிக்க தவறு தன் பக்கமே இருக்கிறது என உணர்ந்தாள். கிறிஸ்தவர்களையும், ஊழியர்களையும் வெளித்தோற்றத்தை கொண்டு அடையாளம் கண்டதே அத்தவறு. ஆனால் வேதம் கூறும் அடையாளங்கள் வேறு என்பதை அறிந்தாள். மரத்தை கனிகளால் அறிவது போல பரிசுத்தவான்களை அவர்களின் செயலினால் அறிந்திட சொன்னார் இயேசு. ஒருவரையொருவர் நேசிப்பதை அடிப்படையாக வைத்து அவர்கள் தேவனுடைய புத்திரர்களா? என அறிய சொன்னார். ஊழியர்களின் செய்தியை வேதத்தின் வெளிச்சத்தை கொண்டு பகுத்தறிய சொன்னார்.

.

ஆம், கிறிஸ்தவர்களின் உண்மையான பரிசுத்தத்திற்கு வெளிப்புற நடக்கையும் சாட்சி கொடுக்க வேண்டும். ஆயினும் அவர்களுடைய அன்பின் செயல்பாடு, தாழ்மை, நேர்மை, பிறர் நலம் தேடும் பண்பு, கபடற்ற வார்த்தை, பெருமையை பிரதிபலிக்காத நடவடிக்கை போன்றவற்றினாலேயே உண்மையான கிறிஸ்தவன் யார், மாய்மாலக்காரன் யார் என்பதை அடையாளம் கண்டுபிடிப்பதற்காக தேவன் நம்மை இரட்சிக்கவில்லை. இப்படிப்பட்ட உண்மை கிறிஸ்தவ செயல்பாடுகள் நம்மில் காணப்பட வேண்டும் என்றே இயேசு விரும்புகிறார். அப்படிப்பட்டவர்கள் தான் உண்மையான பரிசுத்தவான்கள்!

.

பிரியமானவர்களே, பிறர் கண்களை கவரும் சில ரோஜாக்களில் மணமிருப்பதில்லை. ஆனால் வண்ணத்து பூச்சிகளும், வண்டுகளும் தானாகவே வந்து மொய்ப்பது மணமும், தேன் சுவையுமுள்ள பூக்களையே! வெளித்தோற்றத்தால் மட்டும், பிறரை தன் பக்கத்தில் ஈர்ப்பது மெய் கிறிஸ்தவனல்ல, தேவன் விரும்பும் சுகந்த வாசனையும், கனியும் நம்மிடம் காணப்படும்போது அதை பிறர் அடையாளம் கண்டு, நம்மூலம் கிறிஸ்துவை ருசிபார்ப்பது நிச்சயமல்லவா? அப்படிப்பட்டதான தேவன் விரும்பும் சுகந்த வாசனை வீசுகிறவர்களாக, நற்கனிகளை கொடுக்கிறவர்களாக நாம் மாறி, கிறிஸ்துவை மற்றவர்களுக்கு பிரதிபலிப்போமா?

.

உம்மை வருத்தும் வழியில் நடந்தால்

என்னைத் திருத்த வேண்டும் தேவா

கருத்தோடு உமது வசனம்

கற்றுத் தந்து நடத்த வேண்டும்

...

என் பார்வை சிந்தை எல்லாம்

நீர்காட்டும் பாதையில் தான்

என் சொல்லும் செயலும் எல்லாம்

உம் சித்தம் செய்வதில் தான்

...

மகிமை, மாட்சிமை மாவேந்தன் உமக்கே

துதியும் கனமும், தூயோனே உமக்கே


ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, வெளியே பார்வைக்கு பரிசுத்தவான்களாக, பரிசுத்தவாட்டிகளாக இல்லாதபடி, உள்ளான இருதயத்தில் தேவன் விரும்பும் கனிகளும், உண்மையும், உத்தமும் எங்களிலே காணப்பட கிருபை செய்வீராக. எங்களை காண்கிறவர்கள் உண்மையிலேயே கிறிஸ்துவை காணும்படியாக எங்கள் நடை, உடை, சொல், செயல், எல்லாம் உம்மை பிரதிபலிக்கதக்கதாக, இருதயத்திலிருந்து எங்கள் செயல்கள் வெளிப்பட கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 26 ஜூன், 2013

26th June 2013 - யாரும் போக விரும்பாத இடம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஜுன் மாதம் 26-ம் தேதி - புதன் கிழமை
யாரும் போக விரும்பாத இடம்
....

உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப் போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். - (மாற்கு 9:43-44).

.
சில இடங்களுக்கு நாம் அடிக்கடி போக விரும்புவோம். எனக்கு ஆஸ்ரேலியா, மொரிஷியஸ் நாடுகளுக்கு போக வேண்டும் என்று விருப்பம் உண்டு. அதுப்போல உங்களுக்கும் சில இடங்களுக்கு போக விருப்பம் உண்டாயிருக்கும். ஆனால் சில இடங்களுக்கு நாம் போக விருப்பப்பட மாட்டோம். அதை குறித்து நமக்கு தெரியும்.

.

ஆனால் நாம் அனைவரும் போக விரும்பாத இடம் ஒன்று உண்டு. அதுதான் நரகம். சிலருக்கு என் வாழ்க்கையே நரகமாக இருக்கிறது என்று சொல்வார்கள். அவர்கள் உண்மையான நரகத்தை பற்றி அறியாததினாலே அப்படி சொல்கிறார்கள். நாம் நினைப்பதற்கும் அதிகமான இருளும், பயங்கரங்களும் சூழ்ந்திருக்கும் இடம் இந்த நரகமாகும். யாருக்கும் அங்கு போக விருப்பம் இல்லாவிட்டாலும் அநேகர் அதை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை சந்தித்திராத நேரம் வரை அவர்கள் அதற்கு நேராகத்தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.

.

இயேசுகிறிஸ்து நரகத்தை குறித்து நமக்கு தெளிவாக வெளிப்படுத்தி இருக்கிறபடியால் நரகம் என்பது மிகவும் உண்மையான இடமாகும். சில கிறிஸ்தவ பிரிவுகள் நரகம் என்பது பொய் என்று போதிக்கிறார்கள். ஆனால் நரகம் என்பது மிகவும் உண்மையான இடம் என்று வேதத்தின் வெளிச்சத்தில் காணப்போகிறோம். இயேசுகிறிஸ்து நரகத்தை குறித்து 11 தடவைகள் கூறியிருக்கிறார். அதிலிருந்து அது உண்மை என்பது விளங்குகிறதல்லவா?

.

நரகத்தில் யார் வாழ்கிறார்கள்? இயேசுகிறிஸ்து மிகவும் தெளிவாக கூறுகிறார், '...பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்' - (மத்தேயு 25:41) என்று. உபத்திரவ காலத்தின் முடிவில் சாத்தானும், அந்திகிறிஸ்துவும், கள்ளதீர்க்கதரிசியும் நரக அக்கினியில் தள்ளப்படுவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவர்கள் மட்டுமல்ல, சில தூதர்களும் அங்கே இருக்கிறார்கள். 'தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்' (யூதா 6). அவர்கள் மட்டுமல்ல, இயேசுகிறிஸ்து ஒருகூட்ட மக்களையும் அங்கே அனுப்புகிறார். 'அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள (மத்தேயு 25:41). அவர்கள் கர்த்தர் விரும்பின காரியங்களை செய்யாதபடி இருந்தபடியால் அவர்கள் நித்திய ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்பட்டார்கள். 'அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று' (யோவான் 3:18). கிறிஸ்துவை விசுவாசியாதவர்கள் யாவரும் அங்கே அனுப்பப்படுவார்கள்.

.

சரி, நரகம் என்பது எப்படி இருக்கும்?

.

  • நரகம் என்பது மிகவும் தாகமாய் இருக்கும் இடம். - (லூக்கா 16:24-26)
  • நரகம் என்பது அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படும் இடம். - (வெளிபடுத்தின விசேஷம் 14:10-11)
  • நரகம் என்பது அழுகையும் பற்கடிப்பும் உள்ள இடம். - (லூக்கா 13:28)
  • நரகம் என்பது தேவனுடைய சந்திதானத்திலிருந்து பிரிக்கிற இடம். - (2 தெசலோனிக்கேயர் 1:10)
  • நரகம் என்பது நினைவுப்படுத்தப்படும் இடம். நாம் செய்த தவறுகளும், பாவங்களும் நினைவுப்படுத்தப்பட்டு, நம்மை துன்புறுத்தும் இடம். - (லூக்கா 16:25)
  • நரகம் என்பது தேவனுடைய கோபம் கொட்டப்படும் இடம்.
  • நரகம் என்பது நித்திய நித்தியமான முடிவேயில்லாதது. - (மாற்கு 9:43-44)

.

இப்படிப்பட்ட இடத்திற்கு செல்ல யார் தான் விரும்புவார்கள்? நாம் இந்த இடத்திற்கு செல்லாதபடி நம்மை காத்து கொள்ள முடியும்! அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அல்லேலூயா! 'உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று' - (யோவான் 3:16-18) ஆம், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாக நரகத்திற்குள்ளாக தீர்க்கப்படான். ஆனால் அவரை விசுவாசியாதவர்களோ, ஏற்கனவே ஆக்கினை தீர்ப்புக்கு உட்பட்டாயிற்று என்று வசனம் நமக்கு போதிக்கிறது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதினால் மட்டுமே நாம் நரக ஆக்கினையிலிருந்து தப்ப முடியும். கர்த்தரை இதுவரை விசுவாசியாதவர்கள் விசுவாசித்து நரக ஆக்கினைக்கு தப்பும்படியாக இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. விசுவாசித்தவர்கள் இன்னும் பரிசுத்தத்தை பெற்று பரலோக வாழ்க்கைக்கு ஆயத்தமாகும்படி கர்த்தர் நமக்கு போதிக்கிறார். 'அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்'. - (வெளிப்படுத்தின விசேஷம் 22:11-12) என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து நம்மை பார்த்து கூறுகிறார். அநியாயத்திலும் அசுத்தத்திலும் வாழ்ந்து கர்த்தரின் வருகையில் வெட்கப்பட்டு நிற்போமா? அல்லது பரிசுத்தத்திலே முன்னேறி தேவனை சந்திக்க ஆயத்தப்படுவோமா? நம்மையே ஆராய்ந்து பார்ப்போமாக! கர்த்தர் சீக்கிரம் வருகிறார்! ஆமென் அல்லேலூயா!

.

எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்

எல்லா அநீதிக்கும் கூலிபெறுவாய்

கல்வாரி சிலுவை அண்டிடுவாய்

கர்த்தரை நம்பியே தப்பிடுவாய்

...

தேவன் வருகின்றார் வேகம் இறங்கி

தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி

பூமிதனை நியாயம் தீர்த்திடுவார்

பூலோக மக்களும் கண்டிடுவார்

...

இயேசு கிறிஸ்து வருகின்றார்

இந்தக் கடைசி காலத்திலே

கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்

கண்டு புலம்பிடுமே


ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக பிதாவே, பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நரகத்திற்கு மனிதர்களாகிய நாங்கள் போவது உம்முடைய சித்தம் அல்ல என்று உம்முடைய சொந்த குமாரனையே உலக இரட்சிப்பிற்காக தந்த அன்பின் தேவனல்லவா? இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, நரகத்திற்கு நீங்கலாகி, பரலோகத்திற்கு பாத்திரவான்களாக மாறும்படியாக இதுவரை விசுவாசியாத ஒவ்வொருவருக்கும் கிருபை செய்யும். விசுவாசியாதவர்கள் எப்படியாவது இரட்சிப்பிற்குள் வரும்படியாக, நரக ஆக்கினைக்கு தப்பித்து கொள்ளும்படியாக அவர்களுக்கு உணர்த்துவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

....
..
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 25 ஜூன், 2013

25th June 2013 - அனலாக வாழ்வோம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஜூன் மாதம் 25-ம் தேதி - செவ்வாய் கிழமை
அனலாக வாழ்வோம்
...

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன். - (வெளிப்படுத்தின விசேஷம் 3:15-16).

.
ஒரு பெரிய மைதானத்தில் குறுக்கே ஒரு தடுப்பு போடப்பட்டிருந்தது. அதில் ஒரு பக்கம் இயேசுகிறிஸ்து நின்று ஜனங்களை அழைத்துக் கொண்டிருந்தார். மறுபக்கம் சாத்தான் நின்று அநேகரை தன் பக்கமாக அழைத்துக் கொண்டிருந்தான். இரண்டு பக்கமும் மக்கள் வந்து சேர்ந்து கொண்டிருந்தனர். இது கொஞ்ச நேரமாக போய்க் கொண்டிருந்தது.

.
திடீரென்று ஒருவன், இந்த பக்கமும் சேராமல், அந்த பக்கமும் சேராமல், வைக்கப்பட்டிருந்த வேலியின் மேல் போய் ஏறிக் கொண்டான். சிறிது நேரத்தில் இயேசுகிறிஸ்துவும், அவரோடு இருந்த மக்களும் மறைந்து போனார்கள். அப்படியே சாத்தானும் அவனோடு இருந்தவர்களும் மறைந்து போனார்கள்.
.
வேலியின் மேல் இருந்தவன் மாத்திரம் அப்படியே இருந்தான். சிறிது நேரத்தில் சாத்தான் அங்கு எதையோ தேடிக் கொண்டு வந்தான். வேலியின் மேல் இருந்தவன் 'என்ன தேடுகிறாய்' என்று கேட்டான். சாத்தான், 'ஓ, நீ இங்குதான் இருக்கிறாயா? உன்னைத் தேடித்தான் நான் வந்தேன்' என்றான்.
.
அப்போது வேலியின் மேல் இருந்த மனிதன், 'ஏன் என்னைத் தேடுகிறாய்? நான் வேலியின் மேல் இருக்கிறேன், உனக்கும் சொந்தமில்லை, இயேசுவுக்கும் சொந்தமில்லை' என்றுக் கூறினான். அதற்கு சாத்தான், 'அது சரிதான், ஆனால் வேலி எனக்கு சொந்தம்' என்று கூறினான்.
.
பிரியமானவர்களே, நாம் அநேக வேளைகளில் இப்படித்தான் இரண்டும் கெட்டான் நிலைமையில் காணப்படுகிறோம். கிறிஸ்தவர்களுக்குள் கிறிஸ்துவைப் பற்றிய தரிசனமும், உலகத்தை வெறுத்து, கர்த்தரை மாத்திரம் பற்றிக் கொண்டிருந்தால், இந்நேரத்தில் இந்தியா இயேசுவை சந்தித்திருக்கும். ஆனால் கிறிஸ்தவர்களாகிய நம்மால் உலகத்தையும் விட முடியவில்லை, இயேசுவையும் விட முடியவில்லை. இரண்டுமே வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
.
கிறிஸ்து நமக்காக இரத்தத்தை சிந்தியது ஏதோ ஒரு வாழ்க்கை வாழ வேண்டியல்ல, நாம் அவருக்குள் வாழ வேண்டும் என்பதற்காகவே. அவருடைய விலையேறப்பெற்ற இரத்தம் சிந்தப்பட்டது, நாம் ஏனோதானோ என்று வாழ்வதற்காக அல்ல, நாம் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்வதற்காகவே. தேவனுடைய ஒரே பேறான குமாரனுடைய இரத்தம் சிந்தப்பட்டது, நாம் உலகத்திற்கும் வாழ்ந்து கொண்டு, கிறிஸ்துவுக்கும் வாழ்ந்து கொண்டிருப்பதற்காக அல்ல, நான் வாழ்ந்தால் அவருக்காக வாழ்வேன் என்று வைராக்கியமாக வாழ்வதற்காகவே.
.
'நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்' என்று இயேசுகிறிஸ்து கூறியிருக்கிறாரல்லவா? அது எத்தனை பரிதாபமான நிலைமை! 'இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது' (மத்தேயு 6:24) என்று இயேசுகிறிஸ்து கூறினாரே!
.
பிரியமானவர்களே, நாம் ஒரு காலை சேற்றிலும், ஒரு காலை மேட்டிலும் வைத்துக் கொண்டிராதபடி, கர்த்தரையே முழு மனதோடு பின்பற்றுவோம். உலகமும் அதன் ஆசை இச்சைகளும் ஒரு நாள் ஒழிந்துப் போய் விடும். அதை பின்பற்றி போனவர்களும் அப்படியே போய் விடுவார்கள். ஆனால் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களோ, என்றென்றும் அழியாமல் நித்திய நித்தியமாய் கர்த்தரோடு வாழுவோம். ஆமென் அல்லேலூயா!

.
ஆவி அனலுள்ளதாய்

அவியாமல் பாதுகாப்பாய்

அனலுமில்லாமல் குளிருமில்லாமல்

ஜீவிப்பது பரிதாபம்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் ஒவ்வொரு நாளும் கர்த்தருக்கு பயந்து அனலுள்ள ஜீவியம் செய்யும்படியாக எங்களை வழிநடத்தும். உலகமும், வேண்டும், கர்த்தரும் வேண்டும் என்று நாங்கள் ஜீவிப்போமானால், அது எங்களை நரகத்திற்கே கொண்டு போய் விடும் என்பதை உணர்ந்தவர்களாக கர்த்தரையே முழு இருதயத்தோடும் சேவிக்கவும், நேசிக்கவும் கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 24 ஜூன், 2013

24th June 2013 - சரியாக செய்து முடிப்போம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஜுன் மாதம் 24-ம் தேதி - திங்கள் கிழமை
சரியாக செய்து முடிப்போம்
.....

'ஈராம் கர்த்தருடைய ஆலயத்துக்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய எல்லா வேலையையும் செய்து முடித்தான்'. - (1 இராஜாக்கள் 7:40).

.
தேவன் நாம் செய்யும் வேலைகளில் அதை எப்படி செய்கிறோம், எப்படி முடிக்கிறோம் என்பதில் மிகவும் கவனமுள்ளவராயிருக்கிறார். தேவனுடைய ராஜ்யத்தில் அநேக முறை அநேகர் ஆரம்பித்த வேலைகளில் எதிர்ப்பும், உற்சாகமும் ஊக்குவித்தலும் இல்லாததின் காரணமாக தங்கள் ஓட்டத்தை பாதியிலேயே நிறுத்தி இருக்கின்றனர். ஆவிக்குரிய ஓட்டத்தில் உற்சாகமாக ஆரம்பித்த அவர்கள் பாதியிலேயே நிறுத்தி பரிதாபமாக காணப்படுகின்றனர்.

.

வேதம் நாம் ஆரம்பித்த எந்த வேலையையும் சரியானபடி முடிக்க வேண்டும் என்றே போதிக்கிறது. இயேசுகிறிஸ்து தாம் இந்த உலகத்திற்கு வந்து, உலக மக்களுக்காக மாசற்ற தம்முடைய இரத்தத்தை சிந்தி இரட்சிப்பை சம்பாதித்து கொடுத்து, எல்லாவற்றையும் முடித்தவராக, பிதாவின் சித்தத்தை நிறைவேற்றினவராக, சிலுவையில் தொங்கி கொண்டிருந்தபோது, எல்லாம் 'முடிந்தது' என்று முழக்கமிட்டார். அப்போஸ்தலனாகிய பவுலும் தான் படுகிற அத்தனை பாடுகள் மத்தியிலும், 'ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்' (அப்போஸ்தலர் 20:24) என்றே தைரியமாக கூறுகிறார். நமக்கு தேவன் ஒரு வேலையை செய்ய கொடுத்தால், அதை நாம் ஜெபத்தோடும், தேவ ஆலோசனையை பெற்றும் ஞானத்தோடு செய்ய வேண்டும். ஜெபித்து அவருடைய கிருபையை பெற்று கொண்டபின், என்ன தடை வந்தாலும் எதிர்த்து நின்று நம்மால் இயன்றதை, சிறந்ததை செய்து முடிக்க வேண்டும்.

.

'உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்: இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம் பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?' (லூக்கா 14: 28-30) என்று ஒரு உவமையை இயேசுகிறிஸ்து கூறுகிறார். ஒரு வீட்டை கட்ட துவங்கினால் அதை கட்டி முடிக்கும்வரை திட்டமிட்டு அந்த வேலையை ஆரம்பிக்க வேண்டும். திட்டமில்லாமல் வேலையை ஆரம்பித்து, பின் அது பாதியில் நிறுத்தபட்டு போகும் என்றால், இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று மற்றவர்கள் பரிகாசம் செய்வார்கள். ஆகையால் எந்த ஒரு வேலை செய்வதற்கு முன்னும் சரியான திட்டம் நிச்சயமாக இருக்க வேண்டும். திட்டமில்லாமல் செய்யும் எந்த காரியமும் சரியாக வாய்க்காது. உதாரணமாக சிலர் ஆலயத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக சரியான நேரத்தில் எழுந்து புறப்பட ஆரம்பிப்பார்கள். ஆனால் சரியான திட்டம் இல்லாதபடியால், நேரத்தை எப்படி ஒதுக்க வேண்டும் என்கிற ஞானமில்லாதபடியால், எத்தனை அவசர அவசரமாக செய்தாலும், நேரம் கடந்து தான் ஆலயத்திற்கு வருவார்கள். எழுந்தரிக்கும்போதே, இன்ன இன்ன நேரத்தில் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று சரியான நேரத்தை தீர்மானித்து அதன்படி செய்யும்போது நிச்சயமாக சரியான நேரத்தில் அதை செய்து முடிக்க முடியும். அநேகர் அந்த திட்டம் இல்லாமல் காரியங்களை செய்வதால் நேரம் வீணாக கழிகிறது. உருப்படியாக வேலை செய்து முடிக்க முடிவதில்லை. இந்த காரியம் மட்டுமல்ல, எந்த காரியம் செய்வதற்கும் ஒரு திட்டம் அவசியம்.

.

அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில் அவர்களை கடிந்து கொண்டு, 'ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?' (கலாத்தியர்3:3) என்று கேட்கிறார். ஆவியிலே நம் ஓட்டத்தை ஆரம்பம் செய்த நாம் பாதியில் நிறுத்திவிட்டு, உலக வழிகளிலே செல்வோமென்றால், நாம் புத்தியீனர்களாகத்தான் இருப்போம்.

.

பின், தேவன் நமக்கு கொடுத்த வேலையில் நாம் எப்படி அந்த வேலையை செய்து முடிக்கிறோம் என்பதும் முக்கியமானது. ஏதோ செய்தோம், முடித்தோம் என்று இல்லாமல், அந்த வேலையை நம்முடைய முழு திறமையையும் காட்டி, சிறந்ததாக செய்து முடிக்க வேண்டும். அதை காணும் மற்றவர்கள் ஆச்சரியப்பட்டு, 'நீங்கள் இப்படி செய்ய எந்த காரியம் உங்களை தூண்டியது' என்று ஆச்சரியப்படும் விதத்தில் இருக்க வேண்டும். அப்போது நீங்கள் தேவனுடைய கிருபையை குறித்து சாட்சி சொல்லும்படியாக அது அமையும்.

.

ஆகவே நாம் ஒரு நல்ல காரியத்தையும் ஆரம்பிக்கும்போது, தேவ ஞானத்தோடும், ஜெபத்தோடும், சரியான திட்டத்தோடும், மாம்சீகத்தில் செய்யாமல், தேவ பெலத்தோடு செய்யும்போது, அது சிறந்ததாக, எல்லாரும் பாராட்டும் வகையில் தேவ நாமம் மகிமைப்படும் வகையில் அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. அப்படிப்பட்டதாக நாம் நம் எல்லா வேலைகளையும் செய்ய தேவன் தாமே நமக்கு உதவி செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

.

கற்றுத்தாரும் நான் கடைபிடிப்பேன்

சொல்வதை செய்து முடித்திடுவேன்

...

போவாஸ் போவாஸ்

போர்வையால் என்னை மூடுமையா

இயேசையா இயேசையா உம்

அன்பினால் என்னை மூடுமையா

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக பிதாவே, நீர் எங்களுக்கு சொல்லும் எந்த காரியத்தையும், ஞானத்தோடும், தேவ பெலத்தோடும், சரியான திட்டத்தோடும், சிறந்ததை செய்து முடிக்கும்படியாக எங்களை பெலப்படுத்தும். ஏதோ நாங்களும் செய்தோம் என்று ஏனோதானோவென்று இல்லாதபடி, செய்கிற காரியத்தை திருந்த செய்யும்படியாக கிருபை செய்யும். அதன்மூலம் உம்முடைய நாமம் மகிமைப்படும்படியாக செய்ய கற்றுதாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

..
..
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

ஞாயிறு, 23 ஜூன், 2013

இந்த வார வாக்குத்தத்தம் & விவிலிய விடுகதைகள் : - 23rd June 2013

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

விவிலிய விடுகதைகள்

 ஆபேலின் இரத்தம்

ஆறாகப் பாய்ந்தோட

உடன் வந்து இணைந்ததாம்

இன்னொரு இரத்த ஆறு -அது என்ன?

 

விடை: பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம் – மத் 23:35.

====================================

அடங்காத கிடாரி இவன்

அப்பம் சுடும் அடுப்பு இவன்

திருப்பிப் போடாத அப்பம் இவன்

விரும்பப்படாத பாத்திரம் இவன்

பேதையான புறாவாய், மோசம் போக்கும் வில்லாய்

உலர்ந்து போன வேரானான் - அவன் யார்?

 

விடை:  எப்ராயீம் – ஓசியா 7:1-10.

====================================

கர்த்தரின் பெட்டிக்கு முன்னே

தலை நிமிர நினைத்ததால்

தலையில்லா முண்டமாய்

தரையில் உருண்டு விழுந்தான் -அவன் யார்?

 

விடை: தாகோன் – 1 சாமுவேல் 5:1-5.

====================================

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.