Friends Tamil Chat

வெள்ளி, 31 மே, 2013

31st May 2013 - தேவனை குறித்தே மேன்மை பாராட்டுவோம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 மே மாதம் 31-ம் தேதி – வெள்ளிக்கிழமை
தேவனை குறித்தே மேன்மை பாராட்டுவோம்
...

நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர். - (சங்கீதம் 119:98).

.
கி.பி 1623 ல் பிறந்து 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தவர் விஞ்ஞானி பிளேஸ் பாஸ்கல் (Blaise Pascal) என்ற பிரெஞ்ச் நாட்டு மேதையாவார். இவர் கண்டுபிடித்ததோ கணக்கில் அடங்காதவை. சாலையோரத்தில் மண்களை தோண்டும் JCB இயந்திரத்தை உருவாக்கினவர் இவர். 50 பேர் செய்ய வேண்டிய வேலையை மிகச்சுலபமாக சில மணி நேரத்தில் செய்து முடிக்கும்படி இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படி அநேக இய்நதிரங்களை கண்டுபிடித்தவர் இவர். தனது 11 ஆவது வயதில் அதிர்வினால் உண்டாகும் அலைகளை குறித்து இவர் எழுதியதை கண்ட பெரிய விஞ்ஞானிகளும் வியந்தனர். இன்று விஞ்ஞானிகளால் அதிகம் பயன்படும் பாஸ்கல் விதியை கண்டுபிடித்தவரும் இவரே.

.

பாஸ்கல் தனது 18 ஆவது வயதில் மிகக்கடுமையான வியாதிகளால் தாக்கப்பட்டார். நரம்பு தளர்ச்சியினால் கடுமையாக வேதனைப்பட்டார். தலைவலி, வயிற்றெரிச்சல் எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கும். பின் ஏற்பட்ட பக்கவாதத்தினால் ஒரு குச்சியின் உதவியுடன் நடக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டார். இவரது முகத்தில் எரிச்சலும், கோபமுமே இருந்தது. சிரிப்பதும் புன்முறுவல் பூப்பதும் மிகமிக அரிது. இந்நாட்களில் தனது நண்பர்கள் மூலம் ஆண்டவரை ஏற்று கொண்டார். பின் கொஞ்ச நாட்களுக்குள்ளாகவே மறுமைக்குள் சென்று விட்டார்.

.

இப்படிப்பட்ட நாட்களில் ஒரு நாள் தனது நண்பர்களுடன் குதிரை வண்டியில் சென்று கொண்டிருந்தார். வண்டி ஒரு பாலத்தை கடக்கும் போது குதிரைகள் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்தன. இருப்பினும் இவர் உட்கார்ந்திருந்த பெட்டி, ஆற்றில் விழாமல், பாலத்தின் மீது தொங்கி கொண்டிருந்தது. ஒரு சிராய்ப்பு கூட இல்லாமல் உயிர் தப்பினார். இச்சம்பவத்திற்கு பின் ஒரு இரவில் தேவனிடமிருந்து வல்லமையான வெளிப்பாடுகளை பெற்று மீண்டும் தேவனிடம் கிட்டி சேர்ந்தார். இந்த அனுபவத்தை ஒரு சிறு தாளில் இப்படியாக எழுதினார். 'தத்துவ ஞானி, மேதைகளின் தேவனல்ல, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவன் என்னை சந்தித்தார்' என்று எழுதின இந்த தாளை அவர் ஒவ்வொரு நாளும் அணியும் உடையில் சேர்த்து இணைத்து கொள்வார். இன்றும் கூட அவரது உடையும் எழுதப்பட்ட தாளும் நினைவாக வைக்கப்பட்டுள்ளது.

.

பிரியமானவர்களே, உலகத்திலுள்ள அநேகரின் கருத்து என்ன தெரியுமா? ஒருவனுக்கு ஞானம் அறிவு இருந்தால் அவன் கடவுளை நம்பி வாழாமல் தன்னையே நம்பி வாழலாம் என்பர். ஆனால் இந்த உலக புகழ் பெற்ற விஞ்ஞானியோ ஆண்டவரின் பாதமே தஞ்சம் என வாழ்ந்ததை பார்க்கிறோம். 'ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்' (எரேமியா 9:23-24) என்ற வசனத்தை போல அவர் 'பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்' என்ற கர்த்தரை குறித்தே மேன்மை பாராட்டினார். அவருடைய கண்டுபிடிப்புகளிலெல்லாம் பெரிய கண்டுபிடிப்பு இயேசுகிறிஸ்துவே உலக இரட்சகர் என்று கண்டுபிடித்ததே என்று தனது புத்தகத்தில் அழகாக எழுதி வைத்துள்ளார். அவர் தனது ஞானத்தையோ, அறிவையையோ சார்ந்து வாழாமல் தேவனையே சார்ந்து வாழ்ந்ததினால் கர்த்தர் அவரை அதிக ஞானமுள்ளவராக்கி, அநேகருக்கு பிரயோஜனமான காரியங்களை கண்டுபிடிக்க கிருபை செய்தார். நாமும் தேவனை குறித்தே மேன்மை பாராட்டி, அநேகருக்கு பிரயோஜனமாக நம் வாழ்க்கையை வாழுவோமா? பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன்' என்றபடி அவரை அறிந்து உணர்ந்திருக்கிறதை குறித்து மேன்மை பாராட்டி, நம் ஞானம் அறிவு கல்வி செல்வம் எல்லாம் குப்பை என்று உணர்ந்து, அவருக்குள் வாழ தேவன் தாமே கிருபை செய்வாராக, ஆமென் அல்லேலூயா!

.

என் ஞானம் கல்வி செல்வம் எல்லாம்

ஒன்றுமில்லை குப்பை என்றெண்ணுகிறேன்

என் நீதி நியாயங்கள் அழுக்கான கந்தை

என்றே உணர்ந்தேன் என் இயேசுவே

அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம்

அனுக்கிரகம் தர வேண்டுமே

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக பிதாவே, எங்களுடைய எல்லா மேன்மையும் வீணானவை என்பதை உணர கிருபை செய்யும். உம்மை குறித்து அறிந்து உணர்ந்திருப்பதே எங்கள் மேன்மை என்பதையும், பெரிய விஞ்ஞானிகளாயிருந்தாலும் சிலர் உம்மை தவிர வேறு எதை குறித்தும் மேன்மை பாராட்டாதபடி உம்மையே தங்கள் வாழ்வில் மேன்மை பாராட்டினதை போல எங்கள் வாழ்விலும் எங்கள் பெருமை எதுவும் இல்லாதபடி உம்மை குறித்தே மேன்மை பாராட்ட கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

.

...
.
..
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 30 மே, 2013

30th May 2013 - இரண்டு வகை சோதனைகள்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 மே மாதம் 30-ம் தேதி - வியாழக் கிழமை
இரண்டு வகை சோதனைகள்
....

மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். - (1 கொரிந்தியர்10:13).

.
ஒரு மூன்று வயது சிறுவன் பெற்றோருக்கு தெரியாமல் பீரோவை திறந்து ஏதோ ஒரு பொருளை எடுத்துத் தின்று விட்டான். அதற்கு அந்த தாயும், தகப்பனும், அந்த சிறுவனை கன்னத்தில் அறைந்தார்கள். தொடர்ந்து நான்கு மணி நேரங்கள் அடித்து கொண்டே இருந்தார்கள். அந்த சிறு குழந்தை அழுது அழுது தூங்கக் கண்களை மூடினாலும் விடவில்லை. முகத்தில் தண்ணீரை தெளித்து, தோளைப்பிடித்து, குலுக்கி, காதை திருகி தொடர்ந்து நான்கு மணி நேரம் அந்த தண்டனை நிறைவேறியது. அந்த சிறுவன் செய்த தவறுக்கு அவ்வளவு கடினமான தண்டனையா என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஆனால் அந்த தண்டனை அன்பினால் வெளிப்பட்டது என்பதை பின்னர்தான் அறிய முடிந்தது.
.
நடந்தது என்னவென்றால், அச்சிறு குழந்தை பீரோவை திறந்து கைக்கு கிடைத்த தூக்க மாத்திரைகளில் பத்தை எடுத்து விழுங்கி விட்டது. டாக்டரிடம் அழைத்து சென்றார்கள். அவர் சுமார் நான்கு மணி நேரம் குழந்தையை தூங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது குழந்தை சரியாகி விடும். ஒரு வேளை தூங்கி விட்டால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று கூறியிருந்தார். ஆகவேதான் அந்த பெற்றோர், குழந்தையை அடித்து, கிள்ளி, காதை திருகி தூங்க விடாமல் செய்து, அந்த உயிரை காப்பாற்றி விட்டனர். ஆம், பெற்றோர் அவனை தண்டிக்கவில்லை. அன்பினிமித்தம் சிட்சித்தனர்.
.
நம்முடைய வாழ்விலும் நமக்கு ஏற்படுகிற சோதனைகளுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது சோதனை பரிட்சையைப் போன்றது, தேவன் தமது பிள்ளைகளை பெலப்படுத்தி, மற்றவர்கள நம்மை பின்பற்றும்படி நல்ல ஒழுங்கை கற்றுக் கொடுக்கவும், சாட்சியாக நம்மை நிலைநிறுத்தவவும், இச்சோதனையை அனுமதிப்பார்.
.
ஆபிரகாம் ஈசாக்கை பலியிட சோதிக்கப்படுதல், யோபுவின் சோதனை போன்றவை இம்முதலாம் வகை சோதனைகள். இவர்களை போன்று அநேக நேரங்களில் நாம் தனிமையில் கஷ்டப்படுவதை போலவும், கைவிடப்பட்டதைப் போலவும் உணரலாம். 'இதோ நான் முன்னாகப் போனாலும் அவர் இல்லை, இடது புறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன், வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார். ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். அவர் என்னை சோதித்தப்பின்பு நான் பொன்னாக விளங்குவேன்' (யோபு 23: 8-10) என்று யோபு கூறுகிறார். இதிலிருந்து நமக்கு வருகிற சோதனைகள் நம்முடைய மேன்மைக்காக, நம்மை பரிசுத்தப்படுத்தவே என்பதை புரிந்துக் கொள்ளலாம். ஆனாலும் சோதிக்க தேவன் கேடான காரியங்களை செய்வதி;ல்லை. சாத்தானை அனுமதிக்கிறார். இவ்வகை சோதனையை நாம் பொறுமையோடு சகிக்க வேண்டும். அதன்பின் பொன்னாக விளங்குவோம்.
.
இரண்டாவது சோதனை பாவத்தின் மீதான விருப்பம். இந்த சோதனைகளை; மனிதனுடைய பாவ சுபாவத்தால் அல்லது இருதயத்திலிருந்து ஏற்படுகிறது. நாம் பாவத்தில் விழுந்து தேவனுக்கு தூரமாகும்படி சாத்தான் எப்பொழுதும் பாவமான ஆசைகைள, இச்சைகளை நம் இருதயத்தில் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறான். இச்சை, பண ஆசை, புகழ், பெருமை எல்லாம் இவற்றுள் அடங்கும்.
.
சாத்தான் ஏவாளை சோதித்தான். ஏவாள் பாவம் செய்தாள். இயேசுவை சோதித்தான், இயேசு சோதனையை ஜெயித்தார். ஆகவே இந்த இரண்டாவது வகை சோதனையானது தேவனிடத்திலிருந்து வருவதில்லை. அது சாத்தானிடத்திலிருந்தும், நம் பாவ மாம்சத்திலிருந்தும் வருகிறது. அது நமது மேன்மைக்கானதுமல்ல. பாவம் செயய வேண்டும் என்ற விருப்பம் சாத்தானிடத்திலிருந்தே வருகிறது. ஆகவே இப்படிப்பட்ட சோதனையிலிருந்து விடுவிக்கப்படும்படி நாம் எப்பொழுதும் விழித்திருந்து ஜெபிக்க வேண்டும். 'நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது' (மாற்கு 14:38) என்று இயேசுகிறிஸ்து கூறினாரே.
.
முதலாவது சோதனை அல்லது பரிட்சையை நாம் பொறுமையோடு சகிக்க வேண்டும். இரண்டாவது சோதனையை அல்லது பாவ விருப்பத்தை ஜெயிக்க வேண்டும். தேவன் கொடுக்கும் சோதனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும்படியாக போக்கையும் அவர் உண்டாக்குகிறபடியால், நாம் தப்பித்துக் கொள்ள முடியும் ஆனால் சாத்தான் கொடுக்கும் சோதனையில் கர்த்தரின் உதவியோடு, ஆவியானவரின் ஒத்தாசையோடு நாம் ஜெயிக்க வேண்டும். தேவன் நமக்கு உதவி செய்ய வல்லவராயிருக்கிறார். ஆமென் அல்லேலூயா!

.


போராட்டம் பாடுகள் நம் வாழ்வில் வந்தாலும்

சோர்ந்திடவே வேண்டாம்

உலகத்தை ஜெயித்தவர் நம்முடன் இருக்கையில்

ஜெயம் ஜெயம் ஜெயம் நமக்கே

.

இயேசு நல்லவர் இயேசு வல்லவர்

என்றென்றும் மாறாதவர் அவர்

என்றென்றம் மாறாதவர்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்களுக்கு ஏற்படும் சோதனைகளில் நீர் எங்களை திருத்தும்படி, எங்களை பரிசுத்தப்படுத்தும்படி அனுமதிக்கிறவைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டு நீர் விரும்புகிற வண்ணம் சுத்தமாக, திருந்தி உமக்கு பிரியமாக வாழ கிருபை செய்யும். பிசாசானவன் தந்திரமாக எங்களை சோதனைக்குள் பிரவேசிக்க வைத்து, உம்மை விட்டு எங்களை பிரிக்காதபடி, பாவ சோதனைகளுக்கு நாங்கள் தப்பித்துக் கொள்ளும்படி எங்களை காத்தருளும். உம்முடைய வழிகளிலே நடந்து உமக்கு சாட்சிகளாக ஜீவிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 29 மே, 2013

29th May 2013 - துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 மே மாதம் 29-ம் தேதி - புதன் கிழமை
துதி எடுத்தால் சாத்தான் ஓடுவான்
...

நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார், அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள். - (சங்கீதம் 40:3) .

.
ஜேம்ஸ் ஹூவரும் அவரது மனைவியும் புதிதாக திருமணமானவர்கள். அவர்கள் போர்னியோ என்னும் ஆசியாவிலுள்ள உலகின் மூன்றாவது மிகப் பெரிய தீவிலே ஊழியம் செய்யும்படி வந்திருந்தார்கள். புதிதாக அவர்கள் வந்திருந்தபடியால் அவர்களுக்கு அந்த மக்களின் மொழி தெரியாது. இரவில் ஒரு குடிசையில் தங்கலாம் என்று தீர்மானித்து, ஒரு குடிசையில் போய் சேரும்போது, அவர்களை சுற்றி அந்த தீவை சேர்ந்த மக்கள் கூடிவிட்டார்கள். அந்த ஜனங்கள் மிகவும் மோசமானவர்கள் என்று அவர்கள் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தார்கள். ஆனாலும் எல்லா புத்திக்கும் மேலான தெய்வீக சமாதானம் அவர்களை நிரப்பியிருந்தது.
.
அந்த மக்கள் இவர்களிடம் தங்கள் மொழியில் ஏதேதோ பேச ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது ஹூவர் அவர்களின் மனைவி தன் கையில் வைத்திருந்த சிறிய ஆர்கனை வைத்து, பழைய கீர்த்தனைகளில் ஒன்றை பாட ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்! அந்த ஜனத்தில் ஒவ்வொருவராக தங்கள் கைகளில் இருந்த தடிகளை கீழே போட்டு விட்டு, தூங்க ஆரம்பித்தார்கள். பாடலை பாடி முடிக்கும்போது அவர்கள் அனைவரும் தரையில் படுத்து நன்கு தூங்கி விட்டிருந்தனர். ஹூவரும் அவரது மனைவியும் அங்கேயே முழங்கால் படியிட்டு, கர்த்தருக்கு நன்றி செலுத்தினார்கள்.
.
இப்படி தொடர்ந்து பத்து நாட்கள் நடந்தது. அதன் முடிவில் அந்த மக்கள் அவர்களை பற்றி தெரிந்து கொண்டு, அவர்களோடு நட்புக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
.
ஹூவர் அவர்கள் 30 வருடஙகள் கழித்து மரித்தபோது, அந்த தீவில் 91 சதவிகிதம் பேர் கிறிஸ்தவர்களாக மாறி இருந்தனர். அந்த தீவும் நன்கு முன்னேற்றமடைந்ததாகவும், ஹூவர் மரித்ததற்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்கள் தேசியக்கொடியை பாதி கம்பத்திலும் பறக்க விட்டிருந்தனர்.
.
கர்த்தரை துதிக்கும் துதி நம் வாயில் இருந்தால் சத்துரு ஓடுவான் என்பது நிச்சயம். 'மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள்' (2 நாளாகமம் 20:1) இப்படி எதிர்பாராதவிதமாக யோசபாத் என்னும் யூத இராஜாவிற்கு விரோதமாக அநேக ஜாதியார் கூடி வந்தபோது, யோசபாத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல், யூதாவெங்கும் உபவாசத்தை கட்டளையிட்டு, கர்த்தரை நோக்கி ஜெபித்தார். 'பின்பு அவன் ஜனத்தோடே ஆலோசனைபண்ணி, பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான். அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத் தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்' (2 நாளாகமம் 20:21-22) என்று வேதத்தில் காண்கிறோம். அவர்கள் துதி செய்ய தொடங்கின உடனே யோசபாத்திற்கு விரோதமாக வந்திருந்த அத்தனை கூட்டத்தாரும் ஒருவருக்கொருவர் தங்களுக்குள்ளேயே யுத்தம் செய்து ஒருவரை ஒருவர் வெட்டி மடிந்து போனார்கள்.
.
பிரியமானவர்களே, 'எனக்கு விரோதமாக அநேகர் கூடி என்னை பகைக்கிறார்கள். எனக்கு விரோதமாக காரியங்கள் செய்கிறார்கள்' என்று கூறுகிறீர்களோ, கர்த்தரை துதிக்க ஆரம்பியுங்கள். அவருடைய மகத்துவத்தை போற்றி பாடுங்கள். அவருடைய கிருபைகளை சொல்லி துதியுங்கள். உங்கள் கண்களுக்கு முன்பாக சத்துருக்கள் ஓடுவதை காண்பீர்கள்.
.
துதிக்கும் ஒரு விசுவாச வீரனுக்கு முன்பாக யாரும் நிற்க முடியாது. துதிக்கு அத்தனை வல்லமை உள்ளது. ஒரு பிரசங்கம் செய்பவர் ஒரு நல்ல செய்தியை தரலாம். ஒரு ஜெபிக்கிற வீரன் ஜெபத்திற்கு பதிலை கொண்டு வரலாம். ஆனால் துதிக்கிறவனோ கர்த்தரையே அந்த இடத்திற்கு கொண்டு வந்து விடுகிறான். ஏனெனில் நம் தேவன் துதிகளின் மத்தியில் வாசம் செய்கிறவர். எங்கே அவரை துதிக்கிற துதி இருக்கிறதோ அங்கே அவர் வந்து விடுகிறார்.
.
'துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது' (நீதிமொழிகள் 15:8) என்று வேதம் கூறுகிறது. நம் மனதிலும், செய்கைளிலும் துன்மார்க்கத்தை வைத்து கர்த்தரை துதிப்போமானால், அது கர்த்தருக்கு அருவருப்பானது. ஆனால் சுத்த இருதயத்தோடு, நமக்கு வரும் பிரச்சனைகளின் நடுவில் கர்த்தரை துதிப்போமானால் கர்த்தர் அதில் வந்து இறங்கி, நமக்கு ஆசீர்வாதத்தை கட்டளையிடுகிறார். நமது சத்துருக்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள். ஆமென் அல்லேலூயா!
.
கர்த்தரை துதிக்கும் துதியினால் எப்போதும் நம் வாய் நிறைந்திருக்கட்டும். அவரை புகழந்து பாடும் பாடல்களினால் நம் இருதயம் எப்போதும் நிறைந்திருக்கட்டும். அப்போது தேவ பிரசன்னம் எப்போதும் நம்மோடு இருக்கும். சத்துரு வெட்கப்பட்டு ஓடுவான். ஆமென் அல்லேலூயா!

.


சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்

நடந்து செல்லுவேன்

சாத்தானின் சகல வலிமையை வெல்ல

அதிகாரம் எனக்குண்டு

.
என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்

துதிப்பேன் துதிப்பேன் துதித்துக் கொண்டே இருப்பேன்

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, சுத்த இருதயத்தோடு எங்கள் தேவனை துதிக்கும் துதி எப்போதும் எங்கள் வாயில் நிறைந்திருக்கட்டும் தகப்பனே. எங்கள் இருதயத்திலும் உம்மை எப்போதும் உயர்த்தி பாடி கொண்டே இருக்கவும் கிருபை செய்யும். துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் தேவன் எங்களோடு இருப்பதால், சத்துரு எந்த விதத்திலும் எங்களுக்கு தீங்கு செய்ய முடியாதென்பதை நாங்கள் உணர்ந்து உம்மை துதித்துக் கொண்டே இருக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 28 மே, 2013

28th May 2013 - விடுதலையாக்கும் தேவன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 மே மாதம் 28-ம் தேதி - செவ்வாய் கிழமை
விடுதலையாக்கும் தேவன்
...

சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். - (யோவான் 8:32,36).

.
டேல் கேலோவேய் (Dale Galloway) என்பவர் தாம் எழுதிய புத்தகத்தில், ஒரு சம்பவத்தை எழுதியிருந்தார். ஒரு நாள் அவர் ஆலயத்தில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தபோது அந்த பெரிய ஆலயத்தின் ஒரு திறந்த ஜன்னல் வழியாக ஒரு சிறு பறவை உள்ளே வந்தது. ஆலயத்தின் குறுக்கும் நெடுக்குமாக அந்த பறவை பறந்து திரிந்தது. பின்னர், சற்று நேரம் கழித்து, அது வெளியே போக முயற்சித்தது. அதற்காக அது சுற்றிலும் பறந்து வெளியே போகும் வழியை தேடியது. சற்று தாழ்வாக வந்துபோது, அந்த சகோதரன் அதை பிடிக்க முயற்சித்தார். ஆனால் அது மீண்டும் உயரே எழும்பி பறக்க ஆரம்பித்தது.

.

அவர் அந்த பறவை பறந்த இடத்திற்கெல்லாம், கூடவே சென்றார். ஆனால் அந்த பறவை அவர் கைகளில் சிக்காமல், தானே வெளியே போக வழியை தேடிக் கொண்டிருந்தது. கடைசியில் ஒரு வர்ணமிட்ட கண்ணாடி ஜன்னலில், அதுதான் வெளியே போகும் வழி என்று நினைத்து, அங்கு போய் மேலே வேகமாக மோதியபோது, அடிபட்டு கீழே விழுந்தது. அப்போது அதை கையில் எடுத்த அந்த சகோதரன், 'நீ மட்டும் என்னை அனுமதித்திருந்தால், நான் எப்போதோ உன்னை விடுவித்திருப்பேன். ஆனால், நீயோ என் கையில் வராமல், உன் இஷ்டத்திற்கு பறந்து சென்றாய், கடைசியில் இதோ அடிபட்டு கீழே விழுந்து இப்போது என் கையில் கிடைத்திருக்கிறாய்' எனக் கூறி ஜன்னலை திறந்து அதை வெளியே விட்டார். அது தன் செட்டைகளை அடித்து, விடுதலையோடு பறந்து சென்றது.

.

அப்போது அவர் சில வருடங்களுக்கு முன், தான் எப்படி உடைந்து போனவராக, குழப்பம் நிறைந்தவராக, என்ன செய்வது எங்கே செல்வது என்று திகைத்திருந்த வேளையில் கர்த்தரின் கரத்தில் விழுந்தபோது, அவர் அவருடைய இருதயத்தின் புண்களை காயம் கட்டி, அவரை பாவத்திலிருந்து விடுதலையாக்கி, அவர் அறியாத உயரத்தில் கொண்டுபோய் விட்ட தயவை நினைத்து கர்த்தரை துதிக்க ஆரம்பித்தார்.

.

நீங்களும் எங்கு செல்வது எப்படி பிரச்சனையிலிருந்து வெளியே வருவது என்று திகைத்து நிற்கிறீர்களோ? அந்த சிறு பறவையைப் போல பேதைகளாய், வழிதெரியாமல் திகைத்து முட்டி மோதி கொண்டிருக்கிறீர்களோ? யார் என் பிரச்சனையை தீர்ப்பார் என கலங்கி கொண்டிருக்கிறீர்களோ? குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். ஆமென், இயேசுகிறிஸ்து உங்கள் பிரச்சனைகளிலிருந்து உங்களை விடுவிக்க வல்லவர். நீங்கள் விசுவாசத்தோடு கர்த்தரை நோக்கி என் பிரச்சனைகளுக்கு பரிகாரி நீர்தான் ஆண்டவரே என்று அவரது கரங்களில் விழும்போது அவர் நிச்சயமாகவே பிரச்சனைகளுக்கு பரிகாரியாக இருந்து விடுதலையை தருவார்.

.

என் பிரச்சனையை தீர்க்க அந்த ஆண்டவன் வந்தாலும் முடியாது என்று சொல்கிறீர்களா? நம் இயேசுவால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. அன்று கானா ஊர் கல்யாணத்தில் திராட்சரசம் குறைவு பட்டபோது, வெறும் தண்ணீரை சுவையான திராட்சரசமாக மாற்றிய தேவன் நம் தேவனல்லவா? உங்கள் வாழ்க்கை வெறும் தண்ணீராக சுவையற்றதாக பயனற்றதாக இருக்கிறதா? அதை சுவை நிறைந்த ரசமாக மாற்ற தேவனால் மாத்திரமே கூடும். ஆமென் அல்லேலூயா! குறைவுகளை நிறைவாக்குகிற தேவன் நம் தேவன்!

.

மோசே இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து மீட்டு வழி நடத்தி வந்த போது, அவர்களுக்கு முன்னால் சிவந்த சமுத்திரம் ஆரவாரத்தோடு அலையலையாய் அடித்து நின்றது. பின்னால், பார்வோனின் சேனைகள் அவர்களை பிடிக்க வேண்டும் என்று வெறியுடன் துரிதமாக தங்கள் இரதங்களை ஓட்டி வந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு எந்த பக்கமும் செல்ல முடியாத நிலைமை! என்ன செய்வது என்று திகைத்த நேரத்தில் அவர்கள் கர்த்தரின் கரத்தில் விழுந்தார்கள். கர்த்தரை நோக்கி பார்த்தார்கள். கர்த்தர் அந்த ஆரவாரமான கடலில் வழியை திறந்தார். அவர்கள் உலர்ந்த தரையில் நடப்பது போல அந்த கடலின் நடுவே நடந்து கடந்து சென்றார்கள். அவர்களை துரத்தி வந்த பார்வோனின் சேனை அதே சிவந்த சமுத்தரத்தில் மூழ்கி மரித்தார்கள்! என்ன ஒரு அற்புதமான தேவன் நம் தேவன்! உங்கள் பிரச்சனைகளும் சிவந்த சமுத்திரம் போல எதிரிட்டு வந்தாலும் அதன் நடுவே தேவன் உங்களுக்கு வழியை திறப்பார்! உங்களுக்கு எதிராக வரும் சத்துருவின் எல்லா தந்திரங்களையும் முறியடிப்பார்! உங்கள் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்! உங்கள் பிரச்சனைகளிலிருந்து உங்களை நிச்சயமாகவே தேவன் தப்புவிப்பார்! ஆமென் அலலேலூயா!

.

எரியும் சூளையோ ஏழு மடங்கு எரிந்தாலும்

என் தேவன் தப்புவிக்க வல்லவர்

எரிகோ கோட்டையே தடையாய் நின்றாலும்

அதை இடித்து நொறுக்க தேவன் வல்லவர்

நான் ஆராதிக்கும் தேவன் இயேசு

என்னை தப்புவிக்க வல்லவர்


ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இப்போதும், தங்கள் பிரச்சனைகளிலிருந்து வெளி வர முடியாமல் தவிக்கிற ஒவ்வொருவருக்காகவும் இந்த வேளை ஜெபிக்கிறோம் அப்பா. அவர்களுடைய பிரச்சனைகளிலிருந்து அவர்களை விடுவித்தருளும். அவர்களுக்கு ஒரு அற்புதம் செய்து அவர்களை விடுவித்தருளும். உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே, எல்லாமே உம்மாலே ஆகும் தகப்பனே. தயவாய் இரங்கி அவர்கள் தேவைகளை சந்திப்பீராக. தங்கள் நம்பிக்கையை உம் மீது வைத்து அற்புதத்தை பெற்றுக்கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

.

.


..
..
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 27 மே, 2013

27th May 2013 - கர்த்தரையே நம்பிடுவோம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 மே மாதம் 27-ம் தேதி - திங்கள் கிழமை
கர்த்தரையே நம்பிடுவோம்
....

கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள். - (சங்கீதம் 125:1).

.
ஒரு நாள் கடலிலே மீன் பிடிக்க சென்ற அந்தோனியின் படகு ஒரு சுழலில் சிக்குண்டதில் அவன் மரித்து போனான். அவனது மகனும் மீன் பிடிக்க சென்ற போது விஷ மீன் தாக்கி மரித்து போனான். இப்பொழுது பேரன் மீன் பிடிக்க செல்ல வலைகளை வாங்கி படகை ஆயத்தப்படுத்தி கொண்டிருந்தான். இதை கண்ட ஒருவர், 'உன் தாத்தாவும் அப்பாவும் கடலுக்குள் சென்று இறந்து போனார்கள். நீயும் செல்கிறாயே, உன் உயிர் மேல் உனக்கு ஆசையில்லையா?' என்றார். இவர்கள் இருவரது சம்பாஷணைகேட்டு கொண்டிருந்த ஒரு பெரியவர், அவரிடம், ' உன் தாத்தா எப்பொழுது இறந்தார்?' என்று கேட்டார். அதற்கு அவர், என் தாத்தா தூங்கும்போது இறந்தார்' என்றார். 'ஆம், உன் அப்பாவும் தூங்கும்போது நெஞ்சுவலி வந்து தானே இறந்தார். ஆகவே நீயும் அப்படி நினைத்து தினமும் தூங்காமல் இருக்கிறாயா?' என்று கேட்டார். பதிலே பேசவில்லை மற்றவர். 'அவன் மீன் பிடிக்க செல்கிறேன் என்றால் திரும்பி விடுவேன் என்ற நம்பிக்கையில் தான் செல்கிறான்' என்றார்.

.

இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் ஒரு நம்பிக்கையில்தான் வாழ்கின்றனர். சிலர் தங்கள் செல்வாக்கில் நம்பிக்கை வைக்கின்றனர். சிலர் தங்கள் கல்வி, ஞானம் இவற்றில் நம்பிக்கை வைக்கின்றனர். சிலர் தங்களிடமுள்ள சொத்து, பதவியில் நம்பிக்கை வைக்கின்றனர். இன்னும் சிலர் மூட நம்பிக்கை மீது தங்கள் நம்பிக்கையை வைத்து பயந்து வாழ்கின்றனர். இப்படி விதவிதமாய் மனிதன் ஒவ்வொன்றின் மீதும் வைக்கும் நம்பிக்கை அவ்வப்போது ஏமாற்ற்தையும், பயத்தையும் கொண்டு வரும். சூழ்நிலை மாறும்போதும், மனிதனின் மனநிலை மாறும்போதும் நம்பிக்கை இழந்து விடுவோம்.

.

ஆனால் நமது நம்பிக்கையை கன்மலையாம் தேவன் மேல் வைக்கும்போது, அது அசையாது. வேதத்திலே தேவனுடைய தாசனாகிய தாவீது அநேக முறை 'கர்த்தாவே நாம் உம்மை நம்பியிருக்கிறேன்' என்று கர்த்தர் மேல் உள்ள நம்பிக்கையை கூறி, தன்னை திடப்படுத்தி கொள்கிறார். எப்பக்கத்திலும் சத்துருவினால் நெருக்கப்படுகிற அவருக்கு தன்னையும் அறியாமல் பயம் வரும்போதும், 'நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன் என்றும், 'தேவனை நம்பியருக்கிறேன். நான் பயப்படேன்' என்றும் கூறுகிறார். ஒரு ராஜாவே தன் படை பலத்தையோ, பண பலத்தையோ நம்பாமல் தன் முழு நம்பிக்கையையும் தேவன் மேல் வைத்திருப்பாரானால், நாம் ஏன் இன்னும் நம் பிள்ளைகளையும், மற்ற மனிதர்களையும், செல்வாக்கையும், சொத்து சுகங்களையும் நம்பி, அவ்வப்போது பயந்து புலம்ப வேண்டும்?

.

பிரியமானவர்களே, உங்கள் நம்பிக்கை எதன் மேல் உள்ளது? வயதான பின் என் பிள்ளைகள் என்னை கவனித்து கொள்வார்கள் என்று அவர்களை நம்புகிறீர்களோ? என் கடன் பாரத்தை என் பெற்றோர் கொடுக்கும் சொத்தின் மூலம் சரி செய்து கொள்ளலாம் என்று அவர்களை நம்புகிறீர்களோ? நான் வேலை பார்க்கும் கம்பெனி ஒரு பிரச்சனையும் இல்லாதது, ஆகவே எனக்கு எந்த பண கஷ்டமும் வராது என்று உங்கள் கம்பெனியை நம்புகிறீர்களோ? என் படிப்பிற்கு யாரும் கூப்பிட்டு வேலை கொடுப்பார்கள் என்று படிப்பை நம்புகிறீர்களோ? நான் உடலுக்கு கேடு விளைவிக்காத உணவையே உண்கிறேன், நல்ல உடற்பயிற்சி செய்கிறேன், என் ஆரோக்கியத்திற்கு எந்த கேடும் வராது என்று உங்கள் பெலனை நம்புகிறீர்களோ? ஒரு சகோதரன் முப்பத்தைந்து வயதானவர், நன்கு உடற்பயிற்சி செய்து உடலை கட்டு கோப்பாக வைத்திருந்தார். அளவான குடும்பம், நல்ல வேலை, சரியான உணவு எல்லாம் இருந்தும், ஒரு நாள் கடைக்கு போய் சாமான்களை வாங்கி வந்தவர், 'நெஞ்சு வலி, கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா' என்று தன் மகனிடம் சொல்லி, அவன் தண்ணீர் கொண்டு வருவதற்குள் அவர் உயிர் பிரிந்து விட்டது, பக்கத்தில் வைத்தியர் இருந்து, அவர் வந்து CPR செய்தும் எந்த பலனும் இல்லாமல் அவர் சிறு பிள்ளைகளை அனாதையாக விட்டு மரித்து போனார். ஆம், நாம் நம்பியிருக்கிற காரியங்கள் எல்லாம் ஒரு நாள் நம்மை விட்டு போகலாம், கைவிட்டு விடலாம். ஆனால் 'கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்'. நம் நம்பிக்கையை கர்த்தர் மேல் வைப்போமா? நாம் எதுவும் நிலைத்திராத காரியங்கள், மனிதர்கள் மேல் நம் நம்பிக்கையை வைக்கும்போது, பிரச்சனைகள் வரும்போது நாம் அசைந்து போகிறவர்களாக மனம் பதறி நம்பிக்கையற்றவர்களாக மாறி விடுவோம். ஆனால் கர்த்தர் மேல் நம் நம்பிக்கையை வைக்கும்போது, பர்வதத்தை போல எந்த பிரச்சனை வந்தாலும் அசையாதவர்களாக, கர்த்தரை உறுதியாய் பற்றி கொண்டு பயமின்றி வாழ முடியும். கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான் (நீதிமொழிகள் 16:20), கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான் (நீதிமொழிகள் 28:25) என்று பார்க்கிறோம். ஆகவே நம்மை செழிக்க வைக்கிற, நம்மை பாக்கியவானாய் மாற்றுகிற கர்த்தர் மேல் நம் நம்பிக்கையை வைப்போம். அவர் நம்மை ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா!

.

கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர்

சீயோன் மலைபோல் உறுதியுடன்

அசையாமல் இருப்பார்கள்

...

கர்த்தரை நேசித்து அவர் வழியில்

நடக்கும் மனிதர் பேறுபெற்றோர்

உழைப்பின் பயனை உண்பார்கள்

நன்மையும் நலமும் பெறுவார்கள்


ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எங்கள் நம்பிக்கையே நீர்தான் ஐயா. உம்மையன்றி நாங்கள் எதில் மேல் நம்பிக்கை வைத்தாலும் அதினால் எந்த பயனும் இல்லையே தகப்பனே. உலகத்தின் காரியங்களில் நாங்கள் எங்கள் நம்பிக்கையை வைக்காமல், உம்மேல் எங்கள் முழு நம்பிக்கையையும் வைத்து, சீயோன் மலை போல் அசையாமல் வாழும்படி எங்களுக்கு கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

..


..
..
..
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வெள்ளி, 24 மே, 2013

24th May 2013 - உலகம், மாமிசம், பிசாசின் மேல் வெற்றி

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 மே மாதம் 24-ம் தேதி – வெள்ளிக்கிழமை

உலகம், மாமிசம், பிசாசின் மேல் வெற்றி

....

'அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்'. - (எசேக்கியேல் 14:14).

.
இந்த அதிகாரத்தில் தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிச மூலம் 'மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து, பாவஞ்செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி' பஞ்சம், பட்டயம், கொள்ளை நோய், துஷ்ட மிருகங்கள் ஆகிய நான்கு தீங்குகளை அந்த தேசத்தின் மேல் வரப்பண்ணுவேன்' என்று கூறுகிறார். 'அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்' என்று பார்க்கிறோம்.

.

சமீபத்தில் எகிப்தில் தோன்றின மங்கின குதிரையின் படங்களை அனுதின மன்னாவில் வெளியிட்டிருந்தோம். வெளிப்படுத்தின விசேஷத்தின் ஆறாம் அதிகாரம் 8-ம் வசனத்தின் முத்திரை உடைக்கப்பட்டு, மங்கின குதிரை வெளிப்படுகிறது. 'நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலை செய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது' (வெளிப்படுத்தின விசேஷம் 6:8). பாருங்கள், இந்த இடத்திலும், பஞ்சம், பட்டயம், சாவு, துஷ்டமிருகங்களினால் கொலை செய்யப்படுவதை காண்கிறோம்.

.

இந்த தீங்குகள் நேரிடும்போது, நோவா. தானியேல், யோபு போன்ற பழைய ஏற்பாட்டு பக்தர்கள் இருந்தாலும், அவர்கள் தங்கள் ஆத்துமாக்களை மாத்திரம் தப்புவிப்பார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அது ஏன் அவர்கள் பெயர்கள் மாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது? ஏன் அவர்கள் மாத்திரம் தங்கள் ஆத்துமாக்களை தப்புவிப்பார்கள்?

.

நோவா: நோவா உலகத்தின் மேல் ஜெயம் கொண்டவராக காணப்பட்டார். எத்தனையோ பேர் அவரிடம் மழையா பெய்ய போகிறது? என்று அவரை கேலி பண்ணினாலும், பேழையை கட்டி அவரும், அவருடைய குடும்பமுமாக எட்டு பேர் மாத்திரம் காக்கப்பட்டார்கள். பேழைக்குள் இருந்தவர்கள் காக்கப்பட்டார்கள். பேழைக்கு வெளியே இருந்தவர்கள் அழிக்கப்பட்டார்கள். '...அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் காக்கப்பட்டார்கள். அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது,...' (1பேதுரு 3:21) என்று பார்க்கிறோம். பேழையிலே காக்கப்பட்டது, ஞானஸ்நானத்திற்கு ஒப்பாக கூறப்பட்டுள்ளதை பாருங்கள். 'விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்' (மாற்கு 16:16) இந்த வார்த்தைகளின்படி, ஞானஸ்நானம் பெற்றவர்கள் காக்கப்படுவார்கள். மற்றவர்கள் ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவார்கள்.

.

தானியேல்: தானியேல் மாம்சத்தின் மேல் வெற்றி பெற்றவராக காணப்பட்டார். 'தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்'. - (தானியேல் 1:8). தானியேல் வாலிப பிராயத்தில் இருந்தாலும், திராட்சரசம் தனக்கு வேண்டாம் என்று தன் இருதயத்தில் தீர்மானம் செய்து அதன்படி நடந்து கொண்டார். நாமும் கூட மாம்சீகத்திலே வெற்றி பெற்றவர்களாக நடக்க வேண்டும். மாம்ச இச்சைகளுக்கும், ஜீவனத்தின் பெருமைக்கும் நீங்கினவர்களாக காணப்பட வேண்டும். மதுபானத்தையோ, சிற்றின்பங்களுக்கோ நாம் இடம் கொடாமல், பேரின்ப நாதரை மகிமைப்படுத்தும் வாழ்வையே வாழ வேண்டும். தானியேல் அவற்றை வெறுத்ததால் தாழ்ந்து போய் விடவில்லை. புறஜாதியான இராஜா கர்த்தரை மகிமைப்படுத்தும்படியாக வாழ்ந்து காட்டி, பெரும்பான்மையான மக்கள் மத்தியில் சிறுபான்மையான தானியேலின் தேவனே தேவன் என்பதை நிரூபித்து காட்டினார். கர்த்தர் அவரையும், அவருடைய தோழர்களையும், அடிமைகளாக வந்த அந்த நாட்டில் பெரிய அதிபதிகளாக மாற்றினார். அல்லேலூயா!

.

யோபு: யோபு சாத்தானின் மேல் வெற்றி பெற்றவராக காணப்பட்டார். சாத்தான் எத்தனை தான் சோதனைகளை கொண்டு வந்தாலும், கர்த்தரை தூஷிக்காதபடி வாழ்ந்து தன் உத்தமத்திலே நிலை நின்றவர். தேவனே சாத்தானிடம் அவரை குறித்து சவால் விடும்படி உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தார். அவர் தன் பிள்ளைகள், சொத்துக்கள், சுகங்கள் எல்லாவற்றையுமே இழந்துவிட்ட போதிலும், தேவனை தூஷிக்காதபடி பரிசுத்தமாய் வாழ்ந்த அவருக்கு எல்லாமே இரட்டிப்பாய் திரும்பவும் கிடைத்தது.; தேவனுக்கு முன்பாக சாத்தான் தோல்வியடைந்தான். இந்த நாளில் தேவன் நம்மை குறித்து சாத்தானிடம் சவால் விடும்படியான வாழ்க்கையை நாம் வாழ்கிறோமா, அல்லது அவர் வெட்கப்படும்படியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

.

இப்படிப்பட்ட மூன்று புருஷர்களை போல நாமும் இந்த கடைசி நாட்களில் வாழும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். இந்த மனிதர்களை போல உலகத்தின் மேலும், மாம்சத்தின் மேலும், சாத்தானின் மேலும் வெற்றி பெற்றவர்களே, உலகத்தில் வர இருக்கிற பஞ்சம், பட்டயம், கொள்ளைநோய், துஷ்ட மிருகங்களின் பாடுகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்களின் ஆத்துமாக்களே தப்புவிக்கப்படும். நாம் அவர்களை போல வாழ்ந்து, வரப்போகும் உபத்திரவ மற்றும் மகா உபத்திரவ காலத்திற்கு தப்புவோமா? ஞானஸ்நானம் எடுக்காதவர்கள், சீக்கிரமாய் ஞானஸ்நான சாட்சிக்கு நம்மை ஒப்புக்கொடுப்போமா? கர்த்தர் சீக்கிரம் வருகிறார். ஆயத்தமாவோம். ஆமென் அல்லேலூயா!

.

சுயவெறுப்பின் கோட்டிற்கு வா - நீ வா

நயமாக அழைக்கிறார் வா - நீ வா

உலக மாமிச ஆசை

வீண் என தள்ளி விட்டு வா வா - நீவா

இயேசுவைப் பின்பற்ற வா

...

ஆசைகள் அனைத்தையும் அழித்திட வா - நீ வா

உன்னை சிலுவையில் பதித்திட வா - நீ வா

இச்சையின் வலையில் நீ

சிக்கி விடாதே வா, வா - நீ வா

இயேசுவைப் பின்பற்ற வா

ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உலக, மாமிச இச்சைகளை வெறுத்து, சாத்தானின் மேல் ஜெயம் எடுத்து கர்த்தருக்காக வாழும்படியாக எங்களை ஒப்பு கொடுக்கிறோம் தகப்பனே. நோவா, தானியேல், யோபுவை போல வாழவும், வரப்போகும் மகா உபத்திரவ காலத்திற்கு எங்களையும், எங்கள் குடும்பங்களையும் தப்புவித்து கொள்ளும்படியாக எங்களை அர்ப்பணிக்கிறோம். ஞானஸ்நான சாட்சிக்கு ஒப்புக்கொடுக்காதவர்கள் இந்த கடைசி நாட்களில் ஒப்புக்கொடுக்கவும் கர்த்தருடைய வார்த்தைக்கு செவி கொடுத்து கீழ்ப்படியவும் கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

.

..
..
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 23 மே, 2013

23rd May 2013 - சாபத்தை கொண்டு வருபவை பாகம் இரண்டு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 மே மாதம் 23-ம் தேதி - வியாழக் கிழமை
சாபத்தை கொண்டு வருபவை பாகம் இரண்டு
...

மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். - (கலாத்தியர் 3:13).

.

நேற்றைய தினத்தில் சில காரியங்கள் நம் வீட்டிற்கு சாபத்தை கொண்டு வரும் என்று பார்த்தோம். இன்றைய நாளில் நாம் செய்யும் சில காரியங்கள் சாபத்தை கொண்டு வரும் என்று வேத வசனத்தின் அடிப்படையில் காணப்போகிறோம்.

.
1. கர்த்தராகிய தேவனை விட்டு அந்நிய தெய்வங்களை நாம் பின்பற்றினால்

சாபம் வரும் என்று வேதம் கூறுகிறது. "எங்கள் தேவனாகிய கர்த்தரின்

கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற

வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப்

பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும்" (உபாகமம் 11,28)
.
2. மற்ற தேவர்களின் விக்கிரகங்களை வீட்டிற்கு கொண்டு சென்றால் சாபம்

வரும். "அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை அக்கினியினால்

சுட்டெரிக்கக்கடவாய்; நீ அவைகளால் சிக்கிக்கொள்ளாதபடிக்கு,

அவைகளில் இருக்கிற வெள்ளியையும் பொன்னையும் இச்சியாமலும், அதை

எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக; அவைகள் உன் தேவனாகிய

கர்த்தருக்கு அருவருப்பானவைகள். அவைகளைப்போல நீ

சாபத்துக்குள்ளாகாதபடி அருவருப்பானதை உன் வீட்டிலே

கொண்டுபோகாயாக; அதைச் சீ என்று வெறுத்து முற்றிலும்

அருவருக்கக்கடவாய்; அது சாபத்திற்குள்ளானது" (உபாகமம் 7:25-26)
.
3. தன் தகப்பனுக்கும் தாய்க்கும் உரிய கனத்தை கொடுக்காதவன்

சபிக்கப்பட்டவன் என்று வேதம் கூறுகிறது "தன் தகப்பனையும் தன்

தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன்" (உபாகமம் 27:16)
.
4. பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன்

.
5. குருடனை வழிதப்பச்செய்கிறவன் சபிக்கப்பட்டவன்

.

6. பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன்.

.
7. யாதொரு மிருகத்தோடே புணர்ச்சி செய்கிறவன் சபிக்கப்பட்டவன்

.
8. ஒளிப்பிடத்திலே பிறனைக் கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன்

.
9. குற்றமில்லாதவனைக் கொலைசெய்யும்படி பரிதானம் வாங்குகிறவன்

சபிக்கப்பட்டவன்
.
10. தேவனுடைய கற்பனைகளை விட்டு விலகுகிறவர்கள்

சபிக்கப்பட்டவர்கள் உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட

அகங்காரிகளை நீர் கடிந்துகொள்ளுகிறீர் (சங்கீதம் 119: 21)
.
11. மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன்

புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன்

சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 17:5)
.
12. கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்

(எரேமியா 48:10)
.
13. தன் மந்தையில் கடா இருக்கையில் கெட்டுப்போனதை ஆண்டவருக்கு

நேர்ந்துகொண்டு பலியிடுகிற கபடஸ்தன் சபிக்கப்பட்டவன் (மல்கியா 1:14)

கர்த்தருக்கு நம்முடைய சிறந்ததையே கொடுக்க வேண்டும். நமது

தாலந்துகளோ, நமது காணிக்கைகளோ எதுவாயினும் சிறந்ததையே

அவருக்கு கொடுக்க வேண்டும்.
.
14. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச்

சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள்

ஆசீர்வதிக்கப்படும் என்றார் (ஆதியாகமம் 12:3) ஆபிரகாமின் சந்ததியாகிய

இஸ்ரவேலரை நாம் சபிக்கக்கூடாது. அவர்களை ஆசீர்வதிக்கவே

வேண்டும். அவர்களை ஆசீர்வதிக்கிறவர்களை கர்த்தர் ஆசீர்வதிக்கிறார்.

அவர்களை சபிப்பவர்களை கர்த்தர் சபிக்கிறார்.
.
15. நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல்,

நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு

சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன்

சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் (கலாத்தியர் 1:8) தவறான உபதேசம்,

கள்ள உபதேசம் அல்லது போதகம் செய்பவர்கள் சபிக்கப்பட்டவர்கள்.
.
உபாகமம் 28ஆம் அதிகாரம் முழுவதும் தேவனுடைய வார்த்தைகளுக்கும்,

கற்பனைகளுக்கும் கீழ்ப்படிந்தால் என்ன ஆசீர்வாதங்கள் என்றும்,

கீழ்ப்படியாவிட்டால் என்னென்ன சாபங்கள் என்றும் குறிப்பிப்பட்டுள்ளது.
.
இவை செய்கிற அனைவரும் சபிக்கப்பட்டவர்கள் என்று வேதம்

திட்டவட்டமாய் கூறுகிறது. ஆனால் நாம் தவறி இந்த காரியங்களை

செய்திருந்தால், அதை தேவனிடம் அறிக்கையிட்டு அவரிடம் மன்னிப்பு

கேட்கும்போது, அவர் மன்னித்து நமக்கு ஆசீர்வாதத்தை கட்டளையிடுகிறார்.
.
நாம் ஐயோ அந்த சாபம் என்னைப் பற்றிக் கொள்ளுமோ, பரம்பரை சாபம்

என்னை தொடர்ந்து பிடிக்குமோ என்று பயப்படத் தேவையில்லை.

ஏனெனில் மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று

எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின்

சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார் என்ற வசனத்தின்படி

நாம் அனுபவிக்க வேண்டிய சாபங்களை கிறிஸ்து நமக்காக சாபமாகி, அந்த

சாபங்களுக்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார் என்று வேதம்

கூறுகிறது. அல்லேலூயா!

.
பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே

பூலோகம் வந்தாரையா

நிந்தையை நீக்கவே பரலோகம் சேர்க்கவே

சிலுவையை சுமந்தாரையா

கண்ணீரை துடைத்தாரையா

சந்தோஷம் தந்தாரையா

எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசிக்கிற நல்ல தகப்பனே, இந்த நாளிலும் எந்தெந்த காரியங்களை செய்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று வேதம் எங்களுக்கு கூறுகிறபடியால் இவற்றில் எதையும் நாங்கள் செய்யாதபடி எங்களை காத்துக் கொள்ளும். கிறிஸ்து எங்களுக்காக சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு எங்களை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டபடியால் நாங்கள் பாக்கியவான்களாய் மாறியிருக்கிற தயவிற்காக உமக்கு ஸ்தோத்திரம். சாபம் என்று தெரிந்த காரியங்களில் நாங்கள் ஒன்றையும் செய்யாதபடி எங்களை வழிநடத்தும். . எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.