Friends Tamil Chat

திங்கள், 30 ஜூன், 2014

30th June 2014 - நன்மைகளை மறவாதிருப்போம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜூன் மாதம் 30-ம் தேதி - திங்கட் கிழமை
நன்மைகளை மறவாதிருப்போம்
...

'நீ புசித்துத் திர்ப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும்போதும்... உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக' -(உபாகமம் 8:12,13,18).

.

யூத் வித் எ மிஷன் (YWAM) என்பது வாலிபர்கள் மூலம் சுவிசேஷத்தை அறிவிக்கும் ஒரு மிஷனெரி ஸ்தாபனமாகும். இதன் ஸ்தாபகர் லாரன் கன்னிங்ஹாம் என்ற தேவ மனிதர் உலகெங்கும் சுவிசேஷம் அறிவிக்கவும், தேவையுள்ள இடங்களில் மருத்துவ உதவிகள் மூலம் கிறிஸ்துவின் அன்பை வெளிபபடுத்தவும், புது வழிகளை கையாள ஜெபித்துக் கொண்டிருந்த போது தேவன் கப்பல் ஒன்றை வாங்கும்படி அவரை வழிநடத்தினார்.

.

இந்த பெரிய திட்டத்தில் ஒவ்வொரு நாளும் தேவனின் அற்புத கரம் இருப்பதை அவர்கள் கண்டனர். அந்த நேரத்தில் மாவோரி என்ற நேர்த்தியான கப்பல் மிகக்குறைந்த விலைக்கு வந்தது. அதற்கான அட்வான்ஸ் தொகை ரூபாய் 40 இலட்சத்தை இங்கிலாந்திலுள்ள ஒரே நபர் காணிக்கையாய் கொடுத்தார். ஒவ்வொரு நாளும் பல இலட்சங்கள் வந்து குவிந்தன. முப்பது நாட்களுக்குள் மீதி தொகையை கொடுத்து கப்பலை பெற்றுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

.

ஒப்பந்தம் முடிய ஒரு வாரம் இருக்கும்போது திடீரென காணிக்கை வருவது நின்றது. பிலிப்பைன்ஸிலுள்ள தொழிலதிபர் ஒருவர் மீதமுள்ள பணம் அனைத்தையும் தான் தருகிறேன் என முன்வந்தார். ஆனால் அந்த பணத்தை அந்த நாட்டிலிருந்து வெளி கொண்டு வர அநேக தடைகள் காணப்பட்டது. இந்த நேரத்தில் லாரன் கண்ணீரோடு தேவ சமுகத்தில் காத்திருந்தபோது ஒரு தரிசனத்தை கண்டார்.

.

அதில் லாரனும் அவர்களின் ஸ்தாபனத்தின் மற்ற தலைவர்களும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை நோக்கி, 'தேவன் கப்பல் வாங்க பணத்தை தந்து விட்டார். கப்பல் நமக்கு கிடைத்து விட்டது' என்று லாரன் கூறவும், அனைவரும் கைகளை அசைத்து ஆர்ப்பரித்து கொண்டாட துவங்கினர்.

.

அப்பொழுது அந்த அறையின் ஒரு ஓரத்தில் ஒருவர் நிற்கக் கண்டார். லாரன் அவரை நெருங்கி சென்று பார்த்தார். அவர் அழுது கொண்டிருந்தார். இன்னும் நெருங்கி சென்று உற்று பார்த்தபோது, அவர் இருதயம் நொறுங்கியது. அவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துதான். கப்பலை தருகிறவர் அவர், ஆனால் இங்கோ ஊழியத்தலைவர்கள் இயேசுவை மறந்து கப்பலை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்!

.

இந்ததரிசனத்தை ஊழியர்களிடம் பகிhந்து கொண்டபோது, ஒவ்வொருவருடைய இருதயமும் நொறுக்கப்பட்டு அழுது தேவனிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டனர். மாவோரி கப்பலை வாங்க முடியாமற் போனாலும் ஒன்பது ஆண்டுகளுக்குப்பின் 'உயிர்தெழுதல்' என்னும் அர்த்தம் கொண்ட 'அனஸ்டாஸிஸ்' என்ற கப்பலை வாங்கி இன்றும் அதில் ஊழியம் செய்து வருகின்றனர்.

.

'கிடைக்கப்பெற்ற பரிசில் கொடுத்தவரை மறந்து விடாதீர்கள்' என்றார் ஏமி கார்மைக்கேல் அம்மையார். தேவன் நாம் மகிழ்ந்திருக்கும்படியாக, அநேக நன்மைகளை கிருபையாக தருகிறார். பணம், பொருள், வீடு, ஆஸ்தி, வாகனங்கள, ஆவிக்குரிய அனுபவங்கள் என்று அனைத்தையும் தருகிறார். அநேக நேரங்களில் அவற்றை கொடுத்த தேவனை விட கொடுக்கப்பட்ட பொருளின் மேலேயே நம் சிந்தனை நின்று விடுகிறது. அதில் பெருமை கொண்டு அதை நமக்கு கொடுத்த தேவனை மறந்து விடுகிறோம்.

.

'நீ புசித்துத் திர்ப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும்போதும், உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்து வந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும்,... எச்சரிக்கையாயிருந்து,... உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக' (உபாகமம் 8:12,13,17,18) என்று வசனம் கூறுகிறது.

.

நம்முடைய தாழ்மையில் நம்மை நினைத்து, நம்மை தெரிந்துக் கொண்டு, நம்மை இம்மட்டும் உயர்த்திய தேவனை மறந்து போவோமானால் அது எத்தனை பயங்கரமாயிருக்கும்! அநேக வேளைகளில் நம்முடைய செயல்களினால் தேவ ஊழியர் லாரனைப் போல நாம் நம் தேவனை புறம்பே தள்ளிவிடுகிறோம். நமக்கு தேவன் கொடுத்த நன்மைகளை முன்பாக வைத்து தேவனை பின்பாக தள்ளிவிடுகிறோம். தேவன் எத்தனையாய் வேதனைப்படுவார்!

.

நம்மை உயர்த்திய தேவனை நாம் மறந்துபோகாதபடி, நமக்கு கிடைத்த நன்மைகளிலேயே நம் முழு கவனத்தையும் செலுத்தி, தேவனை துக்கப்படுத்தாதபடி நம்மைக் காத்துக் கொள்வோம். ஆவிக்குரிய வரங்களை பெற்றுக் கொண்டவர்கள், தாங்கள் பெற்ற வரத்திலேயே கவனமாயிருந்து, அதிலே மேன்மைப்பாராட்டிக் கொண்டு, அதைக் கொடுத்த தேவனை மறந்து போகாதிருப்போமாக.

.

உலக மயக்கமும், ஐசுவரியமும் நம்மை நம் தேவனிடமிருந்து பிரிக்காதிருப்பதாக. எல்லாவற்றிலும் எந்த ஆசீர்வாதத்திலும் அதை நமக்கு கொடுத்த தேவனை மகிமைப்படுத்துவோம். கர்த்தர் அதில் பிரியமாயிருப்பார். இன்னும் நம்மை அதிகமாய் ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா!

.

எத்தனையோ நன்மைகளை என்

வாழ்வில் செய்தவரே

அத்தனையும் நினைத்து நான்

அதிகமாய் நன்றி சொல்வேன்

நன்றி உமக்கு நன்றி

என் தேவா உமக்கு நன்றி

.

நன்றி சொல்ல வந்தேன் நாதா என்

நாவினால் துதிக்கிறேன்

நன்றி உமக்கு நன்றி

என் தேவா உமக்கு நன்றி

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, எல்லா நன்மைகளுக்கும் ஊற்றானவரே, நீர் எங்களுக்கு கொடுத்த உலகப்பிரகாரமான, ஆவிக்குரிய நன்மைகளுக்காய் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் கொடுத்த நன்மைகளிலேயே நாங்கள் மூழ்கி, அதை கொடுத்தவராகிய உம்மை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க கிருபை செய்யும். எந்நாளும் அதிக நன்றியுள்ளவர்களாக இருக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

ஞாயிறு, 29 ஜூன், 2014

இந்த வார வாக்குத்தத்தம் & விவிலிய விடுகதைகள் : - 29th June 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

விவிலிய விடுகதைகள்

க கா கி கூ

த தா தி தூ

கண்ட கண்ட எழுத்திலெல்லாம்

கட்சி பல முழைத்துவிட

கரைவேட்டியில் கரையான்கள்  -அது என்ன?

 

விடை: தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் அதிகாரிகள். நீதி 28:2.

====================================

கர்த்தர் வரைந்த கோட்டிற்கு

என்றும் முடிவில்லை   -அது என்ன?

விடை: இரக்கம். புலம் 3:22.

====================================

வீடு வீடாய் மாறினாலும்

வீடு வீடாய் சுற்றினாலும்

இந்த வீட்டிற்கு போவதிலே தனிச் சிறப்பு

- அது எது?

விடை: துக்கவீடு. பிர 7:2.

====================================
நன்றி: 'வேதாகம நண்பன்'
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

 

வெள்ளி, 27 ஜூன், 2014

27th June 2014 - புலம்பலின் சுவர்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜூன் மாதம் 27-ம் தேதி - வெள்ளிக்கிழமை
புலம்பலின் சுவர்
...........

இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். - (மத்தேயு 24:1-2).

.

இயேசுகிறிஸ்து ஒலிவமலையிலிருந்து சொன்ன இந்த முழு அதிகாரமும் இரண்டாவது மலைபிரசங்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வசனங்கள் மிகவும் முக்கியமானவை, ஏனென்றால் நான்கு சுவிசேஷங்களில் மூன்று சுவிசேஷங்களில் இந்த வசனங்கள் எழுதப்பட்டிருக்கிறது. (மத்தேயு 24, மாற்கு 13,14, லூக்கா 21,22). இந்த வசனங்கள் கர்த்தரின் வாயிலிருந்து வந்த பெரிய (நீளமான) தீர்க்கதரிசன வார்த்தைகள் எனவும் கூறலாம்.

.

ஓலிவ மலையிலிருந்து நாம் நேராக பார்த்தால் தேவாலயம் வெகு தெளிவாக காணலாம். அப்போதிருந்த தேவாலயம், உலக அற்புதங்களில் ஒன்றாக இருந்தது. எல்லா வகையிலும் யூதர்கள் பெருமைபட்டுக் கொள்ளும் வண்ணம், அந்த தேவாலய கட்டிடம் சிறந்த கற்களினாலும், காணிக்கைளினாலும் அலங்கரிக்கப்பட்டு (லூக்கா 21:5) கெம்பீரமாய் நின்றிருந்தது. அதை பார்த்துதான் இயேசுகிறிஸ்து 'இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்றார். அந்த சமயம், சீஷர்களுக்கு அது எப்படி சாத்தியமாகும் என்று யோசித்திருக்கலாம். ரோமர்கள் கி.பி. 70ல் எருசலேமை பிடித்தபோது, அநேக யூதர்கள் அந்த தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர். அப்போது அங்கிருந்த எல்லாவற்றையும் எரித்த ரோமர்கள், தேவாலயத்திற்கும் தீ வைத்தனர். தீ பற்றி எரிந்தபோது, சுத்த தங்கத்தினால் செய்யப்பட்டிருந்த அதனுடைய கோபுரத்தின் தங்கம் உருகி வழிந்தோடியது. அங்கு தஞ்சம் புகுந்திருந்த யூதர்கள் எரிந்து சாம்பலாயினர். தங்கம் உருகி அந்த கட்டிடத்தின் கற்களில் வழிந்திருந்தமையால் ரோம அதிகாரிகள், அந்த தங்கத்தை எடுக்க வேண்டி, ஒரு கல்லையும் வைக்காதபடி தங்கத்தை எடுக்கும்படியாக ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடி, எல்லாவற்றையும் இடித்து போட்டனர். அந்த முழு கட்டடிடமும் இருந்த இடம் தெரியாதபடி இடிக்கப்பட்டு போயிற்று.

.

இயேசுகிறிஸ்து கூறின தீர்க்கதரிசன வார்த்தையின்படியே தீத்து இராயனால் கி.பி. 70ல் முழு எருசலேமும் தரைமட்டமாக்கப்பட்டது. அதில் இருந்த 16,00,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

.

மோரியா மலை என்று அல்லது ஆங்கிலத்தில் Temple Mount என்றழைக்கப்படும் இடத்தில் அமைந்திருந்த அந்த தேவாலயம் ஏரோது அரசனால் கட்டப்பட்டதாகும். சாலொமோன் இராஜா கட்டின தேவாலயம் நேபுகாத்தநேச்சாரினால் இடிக்கப்பட்ட பின்பு, ஏரோது இராஜாவினால் கி.மு. 19-ல் இயேசுகிறிஸ்து இருந்த காலத்தில் இருந்த தேவாலயம் கட்டப்பட்டது. அது இயேசுகிறிஸ்துவின் தீர்க்கதரிசனத்தின்படி, கி.பி. 70ல் தீத்து இராயானால் இடிக்கப்பட்டது. இப்போது மீந்திருப்பது, புலம்பலின் சுவர் என அழைக்கப்படும் Western Wall மட்டுமே ஆகும். இது ஆலயத்தின் சுவர் அல்ல, ஆலயத்தை சுற்றியிருந்த சுவராகும்.

.

இந்த மீதமிருக்கிற புலம்பலின் சுவர் தேவாலயத்தின் ஒரு பகுதி என்பதால், யூதர்களுக்கு மிகவும் பரிசுத்தமான இடமாகும். அவர்களுக்கு தேவாலயம் இல்லாததால், அவர்கள் இந்த இடத்தில் கூடி தங்கள் வேத புத்தகமாகிய தோராவை வாசிப்பதும், அந்த சுவரின் முன் நின்று முன்னும் பின்னும் ஆடினவர்களாக, தங்கள் ஜெபங்களை ஏறெடுக்கிறார்கள். அவர்கள் இன்னும் மேசியா வர காத்திருக்கிறார்கள். மேசியா வந்து, தங்கள் தேவாலயம் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்பதே அவர்களுடைய ஜெபமாக இருக்கிறது.

.

அந்த சுவரின் இடுக்குகளில் ஆயிரக்கணக்கான ஜெப விண்ணப்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. எல்லா நாட்டை சேர்ந்தவர்களும் வந்து அந்த இடத்தில் தங்கள் விண்ணப்பங்களை வைக்கலாம்.

.

புலம்பலின் சுவரில் ஆண்களுக்கென்று பிரத்யேகமாக ஜெபிப்பதற்கு என்று ஒரு பெரிய அறை சுவரை ஒட்டி அமைக்கப்பட்டுளளது. அதில் பெண்கள் செல்வதற்கு அனுமதியில்லை. அங்கு செல்லும் எந்த ஆணும் தங்கள் தலையில் யூதர்கள் அணியும் தொப்பியை அணிந்துதான் செல்ல வேண்டும். பெண்கள் ஜெபிக்க அந்த சுவரிலேயே இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒரு பக்கம் பெண்கள் ஜெபிக்கிறார்கள். அவர்கள் கைகளில் ஒரு ஜெப புத்தகம் இருக்கிறது. அதை அந்த சுவரின் முன் நின்று முன்னும் பின்னும் ஆடி ஆடி சொல்லி கொண்டிருக்கிறார்கள்.

.

நாங்கள் அங்கு சென்றிருந்தபோது, 13 வயதான ஆண்மக்களை அங்கு தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும்படி அந்த இடமே பெரிய விழா கோலம் பூண்டிருந்தது. ஆனாலும் பெண்கள் (அம்மாமார்), தனியாகதான் நின்று அந்த கொண்டாட்டத்தை பார்க்கவேண்டியிருந்தது.

.

புலம்பலின் சுவரை ஒட்டி, பெரிய இடம் ஆயிரக்கணக்கான யூதர்கள் வந்த ஜெபிக்கும்படியாக ஒதுக்கப்பட்டள்ளது. ஆந்த இடத்தின் சுவரில் ஆறு கறுப்பு நிற விளக்குகள் தாவீதின் நடசத்திரத்துடன் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. அது என்ன என்று கேட்டபோது, ஹிட்லரின் காலத்தில் அவனால் கொல்லப்பட்ட ஆறு இலட்சம் யூதர்களை நினைவு கூறும்பொருட்டு அந்த விளக்குகள் தொடர்ந்து எரியப்பட்டு வருகின்றது என்று கூறினார்கள்.

.

மேசியாவின் வருகைக்கு எதிர்பார்த்து கொண்டிருக்கும் யூதர்கள் 2000 வருடத்திற்கு முன் கிறிஸ்து வந்து அவர்களுக்காகவும் தமது குற்றமற்ற இரத்தத்தை சிந்தி மரித்தார் என்பதை இன்னும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். 'அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை' - (யோவான் 1:11). அந்திகிறிஸ்து வந்து, அவர்களுக்கு தேவாலயம் கட்டப்படுவதற்கு உதவி, பின் அந்த தேவாலயத்தில் நானே மேசியா என்று கூறும்போதுதான் யூதர்கள் அறிந்து கொள்வார்கள் இயேசுகிறிஸ்துவே மேசியா என்று. அவர்கள் இரட்சிக்கப்படுவதற்காக நாம் ஜெபிக்க வேண்டும். ஏனெனில் அந்திகிறிஸ்துவின் காலத்தில் அதிகமாய் பாடுபட போகிறவர்கள் யூதர்களும் கிறிஸ்தவர்களுமே! 'எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக' - (சங்கீதம் 122:6). ஆமென் அல்லேலூயா!

.

எருசலேமே! எருசலேமே! என் பிரிய சாலேமே!

விரும்பி வந்தேன் பார்,

இதோ பார், இதோ பார்

இந்த நாளாயினும் இந்த நாளாயினும்

இணங்க மனமோ எந்தனிடம் பெற

சமாதானம் சமாதானம்

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நீர் தெரிந்து வழிநடத்திய ஜனமாகிய இஸ்ரவேலருக்காக ஜெபிக்கிறோம். சாலேம் நகரம் என்று அழைக்கப்பட்டாலும் இன்னும் சமாதானம் இல்லாதபடி அநேக போர்களினால் பாடுபட்டு கொண்டிருக்கும் உம்முடைய ஜனத்திறகாக ஜெபிக்கிறோம். தீவிரவாதங்களினால், அந்த மக்களின் உயிர் சூறையாடப்படுகிறதே, கண்ணோக்கி பாரும் தகப்பனே, அவர்களுக்கு இரங்கும். அந்த ஜனம் கிறிஸ்துவை கண்டு கொள்ள அவர்கள் கண்களை திறந்தருளும். அவர்களும் இரட்சிக்கப்பட கிருபை செய்யும். அந்திகிறிஸ்துவின் காலத்தில் அநேக பாடுகளுக்குள்ளாக செல்ல இருக்கும் அந்த மக்களுக்காக ஜெபிக்கிறோம். தேவரீர் அவர்களுக்கு சமாதானத்தை தருவீராக. எருசலேம் நகரம் சமாதானத்தோடு சந்தோஷத்தோடு அமைதியாக வாழ கிருபை செய்வீராக.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.......

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 26 ஜூன், 2014

26th June 2014 - மற்றவர்களை காணும் விதம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜூன் மாதம் 26-ம் தேதி - வியாழக்கிழமை
மற்றவர்களை காணும் விதம்
...........

இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். - (மத்தேயு 7:4-5).

.

ஒரு வயதான பெண்மணி, தன்னுடைய பல்லின் வேதனைக்காக ஒரு பல் டாக்டரிடம் சென்றிருந்தார்கள். அவர்கள் முதல் தடவையாக அந்த வைத்தியரிடம் சென்றிருந்தார்கள். காத்திருக்கும் அறையில் டாக்டரின் அழைப்பிற்காக காத்திருந்தார்கள். அப்போது அங்கு ஒரு பலகையில் அந்த டாக்டரின் பெயரும் அவருடைய பட்டங்களும் எழுதப்பட்டிருந்தன. அந்த வயதான பெண்மணி அமர்ந்திருக்கும்போது, அவர்களுக்கு அந்த பெயரில், ஒரு அழகிய உயரமான வாலிபன் 40 வருடங்களுக்கு முன் தன்னோடு படித்தது ஞாபகத்திற்கு வந்தது. ஒரு வேளை அந்த மாணவனாய் இருக்குமோ என்று அவர்கள் யோசித்து கொண்டே இருக்கும்போது, அவர்களை அழைக்கும் சத்தம் கேட்டது.

.

உள்ளே சென்ற அந்த மாணவன்தானா என்று பார்த்தபோது, நிச்சயமாய் அந்த மாணவனாக இருக்க முடியாது என்று தீர்மானித்தார்கள். ஏனெனில் அந்த வைத்தியர், மிகவும் வயதானவராக, முடியெல்லாம் கொட்டி, பாதி மொட்டையாக இருந்ததை பார்த்து, ஒருபோதும் இந்த வயதான மனிதர் என்னோடு படித்தவராக இருக்க முடியாது என்று நினைத்தவர்களாக, தான் படித்த பள்ளியின் பெயரை சொல்லி, 'இந்த பள்ளிக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்களா' என்று கேட்டார்கள்.

.

அதற்கு அவர், 'ஆம் ஆம் நான் அங்கு தான் படித்தேன்' என்று கூறினார். எந்த வருடம் எனறு கேட்டதற்கு அவர் வருஷத்தை சொன்னார். அப்போது அந்த வயதான பெண், சந்தோஷத்தோடு, 'நீர் என்னுடைய வகுப்பில்தான் இருந்தீர்' என்று கூறினார்கள். அதற்கு அந்த வைத்தியர், 'அப்படியா? நீங்கள் எந்த பாடத்தை சொல்லி கொடுத்தீர்கள்' என்று கேட்டார்.

.

அநேக முறை நாம் நம் வயதில் இருக்கும் மற்றவரை பார்த்து, எனக்கு இன்னும் அந்த அளவு வயதாகி விடவில்லை என்று நினைத்து கொள்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை பார்க்கும்போது நாம் நினைக்கிற மாதிரிதான் அவர்களும் நினைக்கிறார்கள் என்பதை மறந்து போகிறோம். சில குண்டு பேர்வழிகளை பார்க்கும்போது, ஆஹா நாம் அந்த அளவு குண்டாக இல்லை என்று நினைத்து கொள்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை பார்க்கும்போது, அப்பா, இந்த அம்மா எவ்வளவு குண்டு என்று நினைக்கிறார்கள் என்பது நமக்கு தெரிவதில்லை. நம்முடைய சரீர அளவு நமக்கு தெரிவதில்லை.

.

அதுப்போல நம்முடைய ஆவிக்குரிய வாழ்விலும், சிலருடைய வாழ்க்கையை பார்த்து நாம் நல்ல வேளை அந்த அளவு பாவம் செய்யவில்லை என்று நினைத்து கொள்கிறோம். அதுப்போல அவர்களும் தங்கள் வாழ்வில் உள்ள பாவங்களை பார்க்காதபடி, நாம் காண்கிற வண்ணமே காண்கிறார்கள் என்பதை நாம் மறந்து போகிறோம்.

.

அதைத்தான் இயேசுகிறிஸ்துவும் 'இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்' என்று கூறினார். மற்றவர்கள் செய்கிற தவறுகள் நமக்கு பெரிய காரியமாகவும், அது எப்படி அவர்கள் செய்யலாம், கடவுள் பயம் இல்லை? எனறு சொல்கிற நாம் அதையே நாம் செய்ய நேரிடும்போது அது நம்முடைய பெலவீனம் என்று சொல்வது நிச்சயமாக மாய்மாலமான காரியமாகும்.

.

இன்று நம்முடைய உருவத்தை கண்ணாடியில் பார்க்கும்போது, உண்மையில் நாம் இருக்கும்வண்ணமாகவே ஒத்துக்கொள்வோம். அதுப்போல வேத வசனமாகிய கண்ணாடியில் நம் வாழ்க்கையில் காணப்படும் குற்றங்களை ஒத்து கொண்டு நம்முடைய வாழ்க்கையை இருக்கிற வண்ணமாகவே கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம். முதலாவது நாம் நம்மை காண்ணாடியில் பார்க்கிற மாதிரி மற்றவர்களையும் பார்ப்போம். அப்படி இல்லாதபடி, மற்றவர்களை பூதக்கண்ணாடியிலும் நம்மை சாதாரண கண்ணாடியிலும் பார்க்கும்போது, அநேக வித்தியாசங்கள் தோன்ற தான் செய்யும். எப்போது நம்மை பார்க்கிற மாதிரி மற்றவர்களை பார்க்கிறோமோ அப்போதுதான் நாம் ஆவிக்குரிய வாழ்விலும் உயருவோம், முன்னேறுவோம்.

.

முதலாவது நம் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போட்டுவிட்டு, பின்பு நம் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்க்கும்படியாய் கர்த்தர்தாமே நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

.

உம்மை போலாக்கும் இயேசுவே

உம்மை போலாக்கும்

உள்ளத்தை அன்பால் நிரப்பி

என்னை உம்மை போலாக்கும்

.
ஜெபம்
எங்களை அன்புடன் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். நாங்கள் எங்களை காண்கிற வண்ணமாகவே மற்றவர்களையும் காண உதவி செய்யும். மாய்மாலமான ஜீவியம் செய்யாதபடி, உண்மையாய் நாங்கள் இருக்கிற வண்ணமாக எங்களை உமக்கு அர்ப்பணிக்க கிருபை செய்யும். எங்களில் காண்ப்படுகிற குறைகளை எடுத்து போடவும், மற்றவர்கள் குறைகளை பெரிதாய் காணாதபடிக்கும் எங்களுக்கு கிருபை செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.........

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 25 ஜூன், 2014

25th June 2014 - உம்முடைய சித்தம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜூன் மாதம் 25-ம் தேதி - புதன் கிழமை
உம்முடைய சித்தம்
......

நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். - (யோவான் - 14:13).

.

ஐந்து வயது நிரம்பிய சிம்சோன், தன் தாயுடன் தனது பிறந்த நாளுக்காக பொம்மை கடைக்குச் சென்று தனக்கு பிடித்த விளையாட்டுச் சாமான் வாங்கச் சென்றான். அங்கு அநேக பொம்மைகளும் விளையாட்டுச் சாமானங்களும் நிரம்பி இருந்தன. அதில் அவனுக்கு விருப்பமான, கலர்கலர் விளக்குகளுடன் விதவிதமான சத்தங்களுடன் வேகமாய் செல்லும் கார் இருந்தது. அதைக் கண்டவுடன் அவன் தன் தாயிடம் அடம் பிடித்து இந்த கார்தான் எனக்கு வேண்டும் என்று கேட்டு தொந்தரவு செய்தான். தாயும் பார்க்கலாம் என்று கூறி விட்டு பின்பு வீடு திரும்பினார்கள்.

.

அடுத்த நாள் பிறந்தநாள் பரிசாக அவன் விரும்பிய அதே கார் அவனுக்கு கொடுக்கப்பட்டது. அதைக் கண்ட அவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அப்பொழுது அவன் சகோதரன் 'அட மடையா! இந்த காருக்கே நீ இவ்வளவு சந்தோஷப்படுகிறாயே, அம்மா உனக்கு இதைவிட பெரிதான ரிமோட் கண்ட்ரோல் கார் வாங்கி கொடுக்க இருந்தார்கள். ஆனால் நீ இதை வாங்க வற்புறுத்தியதால் இதை வாங்கிக் கொடுத்தார்கள்' என்றான். அதைக் கேட்டபோது சிம்சோனின் இருதயம் கனத்தது.

.

இதைப் போலத்ததான் நாம் தேவனிடம் நமது தேவையை கதறி, கெஞ்சி கேட்டுப் பெற்றுக் கொள்கிறோம். கர்த்தரும் அதைத் தருகிறார். ஆனால் தேவன் ஒருவேளை நாம் கேட்டதைவிட நன்மையானதை கொடுக்கச் சித்தமாயிருந்திருப்பார். ஆனால் நம் ஜெபம் அதை தடை செய்திருக்கும். நாம் ஜெபிக்கும்போது 'உம்முடைய சித்தத்தின்படி எங்களுக்கு வாய்க்கச் செய்யும்' ஆண்டவரே என்று அவருடைய சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து ஜெபிக்கும் போது அவர் நன்மையானவற்றையே நமக்கு தர வல்லவராயிருக்கிறார்.

.

நம் தேவனுக்கு கொடுக்க முடியாத பெரிய தேவை என்று ஒன்றுமில்லை. ஆகையால் பெரிய காரியங்களுக்காக ஜெபிப்போம் பெரிய பதிலை பெற்றுக் கொள்வோம். ஆமென் அல்லேலூயா!

.

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே

இந்நாளில் உம் சித்தம் போல்

நடத்திச் செல்லுமையா

ஆவியானவரே

.

ஆவியானவரே

பரிசுத்த ஆவியானவரே

.

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக பிதாவே, இந்த நாளுக்காக உமக்கு ஸ்தோத்திரம். பெரிய தேவனிடமிருந்து பெரிய காரியங்களை பெற்றுக் கொள்ள எங்களை எழுப்பி ஏவும். எங்களது தேவைகளுக்காக மட்டுமல்ல, எங்களது தேசத்திற்காக பெரிய காரியங்களை செய்ய, பெற்றுக் கொள்ள உதவும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 24 ஜூன், 2014

இரண்டு மனம் வேண்டாம் - 24th June 2014

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜூன் மாதம் 24-ம் தேதி - செவ்வாய்க்கிழமை
இரண்டு மனம் வேண்டாம்
...................

'இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது' - (மத்தேயு - 6:24).

.

இத்தாலி நாட்டின் புகழ்பெற்ற பாடகர் லூசியானோ பவரோட்டி (Luciano Pavarotti) ஒரு முறை சொன்னார், அவருடைய சிறுவயதில் அவருடைய தந்தை ரொட்டி செய்பவராக இருந்தார். அவர் பவரோட்டியை பாடுவதற்கு ஊக்கமளித்தார். நன்கு பாடுவதற்கு 'பாடி பாடி குரல் வளத்தை பெருக்க வேண்டும்' என்று அவருடைய தந்தை அவருக்கு அறிவுறுத்தி வந்தார். பின்னர், Arrigo Pola என்பவரின் கீழ் இருந்து முறையாக பாட்டுபாட கற்று கொண்ட பவரோட்டி, தன் தகப்பனிடம் வந்து, 'நான் பாடல் கற்று கொடுக்கும் ஆசிரியராக வேண்டுமா? அல்லது பாடகனாகவே இருக்க வேண்டுமா' என்று கேட்டார். அப்போது அவருடைய தந்தை, 'நீ இரண்டு நாற்காலிகளில் அமர வேண்டும் என்று விரும்பினால், நீ அவைகனின் நடுவே விழுந்து போவாய், உன் வாழ்க்கையில் வளம் பெற வேண்டுமானால், ஒரே ஒரு நாற்காலியில் அமர பார்' என்று அறிவுரை கூறினார்.

.

'பின், அவருடைய அறிவுரையின்படியே நான் ஏழு வருடங்கள் படித்து, முதன் முதலாக வெளிப்படையாக பாட ஆரம்பித்தேன். அதன்பின் ஆபரா பாடல்களில் பாடுவதற்கு இன்னொரு ஏழு வருடங்கள் ஆனது, ஆனால் என் தந்தையின் அறிவுரையின்படி நான், ஒரே ஒரு காரியத்தில் மாத்திரம் என் கவனத்தை செலுத்தினதினால், நான் தேர்ச்சி பெற்ற பாடகனாக மாறினேன். புத்தகம் எழுதுவதானாலும், எதை செய்வதானாலும் முழு முயற்சியுடன் ஈடுபடவேண்டும். எல்லாவற்றையும் விட ஒன்றை மட்டும் தெரிந்து கொண்டு, அதிலே முழு கவனத்தையும் செலுத்தி, முதலிடம் பெற வேண்டும்' என்று கூறினார்.

.

பவரோட்டி கூறியது உலக காரியத்திற்காக என்றாலும், ஆவிக்குரிய காரியத்திற்கும் அது பொருந்தும். நாம் உலகமும் வேண்டும் தேவனும் வேண்டும் என்று இரண்டு நாற்காலிகளிலும் உட்கார முயன்றால், இரண்டுக்கும் நடுவில் விழுந்து போவோம்.

.

'இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது' என்ற இயேசுகிறிஸ்து கூறினார்.

.

நம்மில் அநேகர், ஞாயிற்று கிழமைகளில் மட்டும் ஆலயத்திற்கு சென்று வந்துவிட்டு, பின்னர் வருகிற வழியிலேயே கரி இறைச்சி வாங்கி வந்து, சமைத்து சாப்பிட்டு விட்டு, சாயங்காலத்தில் டிவி முன்னால் உட்காருவதுதான், எல்லா நிகழ்ச்சியும் முடிந்த பிறகே எழுவது, பின் ஜெபமாவது ஒன்றாவது, படுத்து தூங்கி, அடுத்து நாளிலிருந்து, வேலைக்கும் வீட்டுக்கும் ஒரே ஓட்டம்தான்! இதில் கர்த்தருக்கு எங்கே நேரம்? யாராவது ஊழியக்காரர் என்ன ஐயா ஜெபிக்கிறீர்களா? என்று கேட்டால் எங்கே ஐயா, ஒரே பிஸி என்று சொல்வார்கள். ஆலயத்திற்கு சென்று காணிக்கை போட்டுவிட்டு வந்தால் ஏதோ பெரிய காரியத்தை செய்து விட்டு வந்ததை போன்ற நினைப்பு! 'பூமியும் அதின் நிறைவும் என்னுடையது' என்ற கர்த்தருக்கு நீங்கள் போடும் காணிக்கை எந்த வகையில் திருப்திபடுத்தும்? நீங்கள் உங்களையே காணிக்கையாய் தருவதையே கர்த்தர் எதிர்ப்பார்க்கிறார். தேவனுக்கும் உலக பொருளுக்கும், உலகத்திற்கும் ஒரு நாளும் ஒரே நேரத்தில் நாம் ஊழியம் செய்ய முடியாது.

.

நாம் படித்திருக்கும் ஜியாமெட்ரியில் (Geometry) இரண்டு புள்ளிகளுக்கு இடையில் ஒரே ஒரு கோடு மாத்திரம் தான் வரைய முடியும். ஒரு புள்ளியிலிருந்து அநேக கோடுகளை ஆரம்பிக்கலாம். ஆனால் அது முடியும்போது அது வேறு இடத்தில்தான் முடியும். ஆகவே, நமக்கும் தேவனுக்கும் இடையில் அல்லது நமக்கும் உலகத்திற்கும் இடையில் ஒரே ஒரு கோடு மாதிரி உறவுதான் இருக்க முடியும். இரண்டுக்கும் இடையில் இருந்தால் விழுந்து போவோம். இந்த கடைசி நாட்களில் தேவனுக்காக காரியங்களை சாதிக்க வேண்டிய நாம் இப்படி இரண்டு பக்கத்திலும் இருந்தால் யாருக்கும் எந்தவித பிரயோஜனமுமில்லை. அனலுமில்லாமல் குளிருமில்லாமல் இருந்தால் வாந்தி பண்ணிபோடுவேன் என்று கர்த்தர் எச்சரிக்கிறார். கர்த்தர் நம்மை வேண்டாம் என்று சொல்வாரானால், நமக்கு எந்த நம்பிக்கையும் இல்லாமல் போகும்.

.

யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, 'கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்' - (யோசுவா 24:15). இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய சொந்த ஜனம் தான். ஆனாலும் அவர்கள் வழிவிலகி வேறே தேவர்களை சேவித்தார்கள். அப்போது தேவனுக்காக யோசுவா வைராக்கியமாய் எழுந்து இந்த வார்ததைகளை அந்த ஜனத்திற்கு சொன்னார். அதுப்போல நாமும் இந்த நாட்களில் கர்த்தரும் வேண்டும், உலகமும் வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள். ஆனால், நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம். ஆமென் அல்லேலூயா!

.

கர்த்தரை மாத்திரம் சார்ந்து ஜீவிப்போம். உலகமும் அதன் எல்லாமும் ஒரு நாள் அழிந்து போகும். அழிந்து போகின்ற ஒன்றை நாம் சார்ந்து வாழாதபடி அழியாத தேவனை நாம் சார்ந்து கொள்வோம். கர்த்தருக்காக சாதிப்போம். நம் வாழ்க்கை ஆசீர்வாதமாக இருக்கும்.

.

யார் வேண்டும் நாதா நீரல்லவோ

எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ

யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ

எங்கே நான் செல்வேன் உம்மையல்லால்

சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்

பேரின்ப நாதா நீர் போதாதா

மனம் போன வாழ்க்கை வாழ்க்கையல்ல

வாழ்வேனே என்றும் உமக்காக நான்

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழி நடத்தும் நல்ல தகப்பனே, இந்த நல்ல வேளைக்காக நன்றி செலுத்துகிறோம். நீர் அன்றி வாழ்வேது நாதா? இந்த உலகத்தின் காரியங்கள் சீக்கிரமாய் கடந்து போகும் தகப்பனே, நீரே எங்களுக்கு வேண்டும் ஐயா. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான் என்று சொன்னீரே, இருமனமுள்ளவர்களாய் அல்ல, ஒரே மனமாய் உம்மை மாத்திரம் பின்பற்ற எங்களுக்கு கிருபை செய்யும். யோசுவாவைப்போல கர்த்தரையே சேவிப்போம் என்று உம்மையே பின்பற்ற கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
......

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.