Friends Tamil Chat

வியாழன், 30 ஏப்ரல், 2015

30th April 2015 சந்திரன் இரத்தமாக மாறும்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 ஏப்ரல் மாதம் 30-ம் தேதி - வியாழக் கிழமை
ந்திரன் இரத்தமாக மாறும்
....

'பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்'. - (ஆதியாகமம் 1:14).

.

இந்த நாட்களில் நாம் எங்கு பார்த்தாலும் Blood Moon என்று சொல்லப்படுவதை கேட்டு கொண்டிருக்கிறோம். சமூக வலையங்களில், அநேக சபைகளில் என்று எல்லாரும் அதை பற்றி பேசி கொண்டிருப்பதை காண்கிறோம். நான் ஆரம்பத்தில் இது எப்போதும் நடக்கிற சந்திர கிரகணம்தானே, இதற்கு ஏன் இத்தனை ஆர்ப்பாட்டங்கள் என்று நினைத்தேன். ஆனால் அதை குறித்து படிக்க வேண்டும் என்று நினைத்து படித்து, அது நமது ஆவிக்குரிய வாழ்விற்கு பிரயோஜனமாயிருக்கும் என்று எழுத ஆரம்பித்தேன்.

.

கிறிஸ்தவர்கள் யாரும் வான சாஸ்திரத்தை நம்புவதில்லை, நம்பவும் கூடாது. ஆனால் தேவன் சூரியனையும், சந்திரனையும் படைத்தபோது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்று சொன்னார். ஆகையால் அவைகள் நாம் வாழும் கடைசி நாட்களில் நமக்கு அடையாளமாக தேவனால் குறிக்கப்பட்டவைகளாக இருக்கின்றன.

.

'கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்' (யோவேல் 2:31) என்று வேதத்தில் வாசிக்கிறோம். சந்திரன் இரத்தமாக மாறுவது எப்போது நடைபெறுகிறது என்றால் சந்திர கிரகணத்தின் போது, பூமியானது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வருகிறது. அப்போது சூரியனுடைய ஒளிகதிர்கள் சந்திரனின் மேல் படாதபடி பூமி மறைக்கிறது. ஆனால் சில சூரியனுடைய கதிர்கள் வளைந்து சென்று சந்திரனில் படும்போது, சந்திரன் இரத்த நிலாவாக தெரிகிறது. இதனால் இது இரத்த நிலா என்றழைக்கப்படுகிறது.

.

இந்த சந்திர கிரகணம் வருடத்திற்கு இரண்டு முறை எப்போதும் நடைபெறுகிறது. நாம் எல்லாரும் அதை கண்டிருக்கிறோம். ஆனால் நான்கு சந்திர கிரகணங்கள் தொடர்ந்து அடுத்தடுத்து வரும்போது அது டெட்ராட் (Tedrad) என்றழைக்கப்படுகிறது. இது மிகவும் அபூர்வமான நிகழ்ச்சியாகும்.

.

சமீப காலத்தில் நான்கு சந்திர கிரகணங்கள் அடுத்தடுத்து, சென்ற வருடம், மற்றும் இந்த வருடத்திலும் வருவதாலும், மட்டுமல்ல அவை யூதர்களின் பண்டிகை நாட்களில் வருவதாலும் ஏதோ ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

.

இதுபோன்று யூதர்களின் பண்டிகை நாட்களில் நான்கு முறை டெட்ராட் என்று சொல்லப்படும் இரத்த நிலா முதலாம் நூற்றாண்டிலிருந்து பத்து முறையே நிகழ்ந்திருக்கிறது. கி.பி. 1492க்குப்பின் மூன்று முறையே நடைபெற்றிருக்கிறது. அவை:

.

Tetrad of 1493-1494

Tetrad of 1949-1950

Tetrad of 1967-1968

.

இந்த மூன்று முறை நிகழ்வுகளிலும் யூதர்களின் அரசியல் வாழ்வில் மிகப்பெரிய சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.

.

முதலாம் டெட்ராடின் போது (1493 – 1494) ஸ்பெயின் நாட்டின் அரசன் பெர்டினான்டும், அரசி இசபெல்லாவும், யூதர்களுக்கு கத்தோலிக்க மதத்தை தழுவும்படி நான்கு மாதங்களே தவணை கொடுத்து, அதற்குள் மாறாவிட்டால் நாட்டை விட்டே சென்று விட வேண்டும் என்று ஆணையிட்டார்கள். அதன்படி 1,65,000 - 40,000 யூதர்கள் நாட்டை விட்டு கடந்து சென்று விட்டனர் என்று கூறப்படுகிறது. மீதமிருந்த யூதர்கள் தங்கள் விசுவாசத்தை அறிக்கை செய்ய வேண்டும். அவர்கள் கத்தோலிக்க மதத்தை தழுவினாலும், அவர்கள் சித்தரவதை செய்யப்பட்டு, அப்போதும் அவர்கள் கத்தோலிக்க மதத்திற்கு உண்மையாயிருந்தால் உயிரோடு விடப்பட்டார்கள். மறுதலித்தால் அவர்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். அப்படி ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் எரிக்கபட்டதாக வரலாறு கூறுகிறது.

.

இரண்டாவது டெட்ராடின் போது, (1949 - 1950) கி.பி 70 நூற்றாண்டில் தீத்து ராயனால் உலகமெங்கும் சிதறின யூதர்கள் 1878 வருடங்கள் சொந்த நாடில்லாதபடி உலகமெங்கும் பரவியிருந்தாலும் தாங்கள் யூதர்கள் என்பதை அவர்கள் மறக்கவில்லை. தங்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் என்றும், தேவன் அவர்களை சந்திப்பார் என்றும் விசுவாசித்திருந்தார்கள். ஹிட்லர் கொடூரமான முறையில் ஏறக்குறைய ஆறு இலட்சம் யூதர்களை விஷவாயு மற்றும் சித்தரவதையின் மூலம் கொன்றப்பிறகு, இரண்டாம் உலக மகா யுத்தத்தின்பின், மே மாதம் 1949ம் ஆண்டு இஸ்ரவேல் என்னும் நாடு பிறந்தது. யூதர்களுக்கென்று ஒரு தனி நாடு கொடுக்கப்பட்டது. அது இந்த இரண்டாவது டெட்ராடின் போது நடைபெற்றது.

.

மூன்றாவது டெட்ராடின்போது, (1967- 68) இஸ்ரவேலர் ஏற்கனவே தனி நாடு பெற்றிருந்தபோதும் எருசலேம் அவர்களின் கீழ் இல்லாதிருந்தது. யூதர்கள் வேறு நாடுகளில் சிதறடிக்கப்பட்ட போதும் எருசலேமின் முகமாய் திரும்பி, எப்படியாவது எருசலேம் திரும்ப அவர்களிடம் கிடைக்க வேண்டும் என்று சுமார் 1878 வருடங்கள் ஜெபித்ததன் விளைவாக தேவன் அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றினார். 1967ஆம் ஆண்டு யோர்தான் நாடு இஸ்ரவேலின் மேல் படையெடுத்து வந்தபோது இஸ்ரவேலர் பதிலடி கொடுத்து போரிட்டபோது, போரில் ஜெயமெடுத்து, எருசலேம் இஸ்ரவேலரின் கைகளில் வந்தது. அல்லேலூயா!

.

இப்படி 500 வருடங்களில் யூதர்களின் வாழ்வில் மிக பெரிய நிகழ்வுகள் இந்த டெட்ராட் எனப்படும் இரத்த நிலாவின் போது நடைபெற்றது. இப்போது 500 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த டெட்ராட் எனப்படும் அரிய இரத்த நிலா கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது.

.

ஏப்ரல் 14, 2014 - பஸ்கா பண்டிகை

அக்டோபர் 8, 2014 - கூடார பண்டிகை

ஏப்ரல் 4, 2015 - பஸ்கா பண்டிகை

செப்டம்பர் 28 - கூடார பண்டிகை

.

இதில் ஏற்கனவே முதல் மூன்று சந்திர கிரகணங்களும் நடந்து முடிந்து விட்டன. இன்னும் ஒன்றே ஒன்று செப்டம்பர் மாதம் 28ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த செப்டம்பர் 28ம் தேதி யூதர்களின் வாழ்விலும், ஏன் உலகத்திற்குமே மிகபெரிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருப்பதாக வேத வல்லுநர்கள் கூறுகின்றனர்.

.

'கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்' என்ற யோவேல் தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனத்தின்படி கர்த்தருடைய பயங்கரமான நாள் வருவதற்கு முன் சந்திரன் இரத்தமாக மாறும். 'அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று' (வெளிப்படுத்தின விசேஷம் 6:12) என்று இயேசுகிறிஸ்து ஆறாம் முத்திரையை உடைத்தபோது சந்திரன் இரத்தமாக மாறிற்று என்று பார்க்கிறோம்.

.

கர்த்தருடைய பயங்கரமான நாள் வருவதற்கு முன் இந்த இரத்தநிலா நிகழ்வதால் யூதர்கள் அதற்கு தங்களை ஆயத்தப்படுத்தி கொள்ள வேண்டும். அவர்கள் கிறிஸ்துவை மேசியாவாக ஏற்று கொள்ளாததால் அவர்கள் அந்திகிறிஸ்துவின் ஆட்சியை சந்திக்க வேண்டி வரும். ஆனாலும் இஸ்ரவேலர் அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று பவுல் அப்போஸ்தலன் எழுதுகிறார். 'இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபைவிட்டு, விலக்குவார் என்றும்ளூ நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது' (ரோமர் 11:26-27).

.

சரி யூதர்களுக்கு இந்த காரியங்கள் சம்பவித்தாலும், உலகத்தில் இருக்கும் அனைவருக்குமே பெரிய ஒரு சம்பவம் நடைபெற இருப்பதாக வேத வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். ஒருவேளை இந்த சமயத்தில் இயேசுகிறிஸ்துவின் வருகை இருக்கலாம் என்று அவர்கள் கூறுகின்றனர். 'அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்' (மத்தேயு 24:36) என்று வேத வசனம் திட்டமும் தெளிவுமாக கூறியிருந்தாலும், வேத வல்லுநர்கள் அடையாளங்களை வைத்து கிறிஸ்துவின் வருகை இந்த நாளில் இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

.

கிறிஸ்துவின் வருகை செப்டம்பர் மாதம் 28ம் தேதியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாம் அவரை சந்திக்க ஆயத்தப்பட வேண்டும். நான் ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற ஜெபம், 'இன்றைய நாளில் உம்முடைய வருகை இருக்குமென்றாலும் உம்மை சந்திக்கும்படி என்னை தகுதிப்படுத்தும், என் பாவங்களை கழுவி சுத்திகரித்தருளும், பாத்திரவானாய் மாற்றும்' என்பதே. அதுப்போல நாம் ஒவ்வொருவரும் அவருடைய வருகை இந்த நாளில் இருக்கும் என்றாலும் ஆயத்தமான நிலையில் காணப்பட வேண்டும். நாம் கடைசி நாட்களில் வந்திருக்கிறோம் எனபதை கிறிஸ்தவர்கள் கொல்லப்படுவதையும், பூமி அதிர்ச்சிகளையும், உலகத்தில் நடக்கிற மற்ற கிரியைகளையும் காணும்போது அறிய முடியும். ஆனால் நாம் ஆயத்தமாயிருக்கிறோமா என்பதே நாம் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

.

ஒருவேளை செப்டம்பர் 28ம் தேதிக்குள் கர்த்தர் வந்துவிட்டால் நாம் அவரை முகமுகமாய் சந்திப்போமா? அல்லது, குன்றுகளே, மலைகளே எங்களை மறைத்து கொள்ளுங்கள் என்று ஓடி ஒளிந்து கொள்வோமா? கர்த்தர் ஏற்கனவே எச்சரிப்பின் சத்தத்தை தொனிக்க செய்து, அநேகர் இந்த நாட்களில் இந்த இரத்த நிலாவை குறித்து பேசியும், பகிர்ந்தும் வருகிறார்கள். நாம் நம்முடைய இருதயத்தை கடினப்படுத்தி, வானம் உண்டானது முதல் எல்லாம் அப்படியே தான் இருக்கிறது என்று ஆயத்தமாக்கப்படாமல் இருப்போமானால் நம்முடைய நிலைமை பரிதாபமாயிருக்கும். ஆகையால் கர்த்தருடைய வருகைக்கு அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டு, அவர் விரும்பும் பரிசுத்தத்தில் நிலைத்திருந்து ஆயத்தப்படுவோம். மாரநாதா! கர்த்தர் சீக்கிரம் வருகிறார்! ஆமென் அல்லேலூயா!

.

இருள் சூழும் காலம் இனி வருதே

அருள் உள்ள நாட்கள் பயன்படுத்தும்

திறவுண்ட வாசல் அடைபடுமுன்

நொறுங்குண்ட மனதாய் முன் செல்வோர் யார்?

.

திறவுண்ட வாசல் அடைபடுமுன்

நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார்?

நாட்கள் கொடியதாய் மாறிடுதே

காலத்தை ஆதாயம் செய்திடுவோம்

ஜெபம்

எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும் என்ற வார்த்தையின்படி நாட்கள் கர்த்தருடைய பயங்கரமான நாட்களுக்கு நேராக எங்களை வழிநடத்தி கொண்டிருப்பதால் எங்களை ஆயத்தப்படுத்தி கொள்ள கிருபை செய்யும். கர்த்தருடைய வருகை இந்த நாளில் இருக்குமென்றாலும் நாங்கள் ஆயத்தமான கன்னிகைகளை போல தயாராக இருக்கும்படி எங்களை கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவி சுத்திகரியும். அவருடைய வருகைக்கு எங்களைஆயத்தப்படுத்தும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

...

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

இந்த வார வாக்குத்தத்தம் & வேதாகம கேள்விகள் - :26 ஏப்ரல் 2015

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  அறிவிப்பு:   அநேக அனுதின மன்னா வாசகர்கள் தங்களுக்கு மன்னா வரவில்லை என்று எமுதுகிறார்கள் அதாவது ஏப்ரல் 17-ம் தேதிக்கு மேல் வரவில்லை என்று .  ஆனால் நாங்கள் தினமும் அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறோம்.  17-ம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அனுப்பமுடியவில்லை. மற்றப்படி 19-ம் தேதியிலிருந்து அனுப்பிக்கொண்டுதான் இருக்கிறோம்.. ஆகையால், இன்று இந்த வார வாக்குதத்த வசனமும் வேதாகம கேள்வியை அனுப்புகிறோம் இது எத்தனை பேருக்கு கிடைக்கிறது என்னு எங்களுக்கு பதில் எழுதுவீர்களோ அதை வைத்து நாங்கள் கிடைக்காதவர்களுக்கு தகுந்த காரியங்கள் செய்ய ஏதுவாக இருக்கும்.  தயவுசெய்து கிடைத்தவர்கள் பதில் எழுதவும்.  எல்லாவற்றிற்கு மேலாக  இந்த ஊழியம் தடை இல்லாமல் தொடர்ந்து நடக்க உங்களுடைள ஜெபம் தேவை ஆகையால் இந்த ஊழியத்தை உங்கள் ஜெபங்களில் தாங்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. 

 

வேதாகம கேள்வி-பதில் போட்டி

 I. இந்த வார கேள்விகள்:  26 ஏப்ரல் 2015.

********************************************************
.
1. அந்தியோகியாவில் உள்ள கிறிஸ்தவர்கள், கொடிய பஞ்சம் வந்த

   போது எதை சேகரித்து யூதேயாவிலுள்ள சகோதரருக்கு

   கொடுத்தனுப்பினார்கள்?
.
2. வெளிப்படுத்தின விசேஷத்தில், வெட்டுக்கிளிகள் எத்தனை

   மாதமளவும் மனுஷரை சேதப்படுத்துவதற்கு அதிகாரம்

   உடையவைகளாயிருந்தன?
.
3. இஸ்ரவேலிலே நியாயந்தீர்ப்பது அரிதாயிருந்தால் யாரிடத்தில் போய்

   விசாரிக்க வேண்டும் என்று மோசே கூறினார்?
.
4. தானியேல் கண்ட தரிசனத்தில் எத்தனை மிருகங்கள் காணப்பட்டது?
.
5. மோசே கற்பலகைகைளை உடைத்தப்பின்பு எத்தனை கற்பலகைகளை

    வெட்டிக் கொண்டு வரும்படி தேவன் கூறினார்?
.
.
.

 உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற

வெள்ளிக்கிழமைகுள் அனுப்பிவைக்கவும்.
.
.

குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய

பெயர்களை சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை

சகோதரியா என்று எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or  Sis. - Bro.)
.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.
.
.
.

கடந்த 19 ஏப்ரல் 2015. கேள்வி பதில்கள்:
.
.

1. ஸீலோவாம் என்பதற்கு என்ன பொருள்?
.
சரியான பதில் : அனுப்பப்ட்டவன் யோவான் 9:7

2. எரேமியா தீர்க்கதரிசியை தண்ணீரில்லா உளையான துரவிலிருந்து தூக்கி உதவி செய்தவன் யார்?
.
 சரியான பதில் : எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக் .

எரேமியா 38:12,13

3. பவுலோடு கப்பற்சேதத்தில் இருந்தவர்கள் எத்தனை பேர்?
.
சரியான பதில் : 276 பேர்  அப் 27:37

4. பூலோகத்தில் சாட்சியிடுகிற மூன்று யாவை ?
..
சரியான பதில் : ஆவி, ஜலம் , இரத்தம் (1யோ. 5.8)
. 
5. ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார்

 

    என்று புதிய ஏற்பாட்டில் கூறியிருக்கும் பழைய ஏற்பாட்டு விசுவாசி

    யார்?
.
சரியான பதில் : ஏனோக்கு (யூதா 15 )
.
.

 சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே உங்களை

ஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள்.
.

1) Sis.M.vijayarani Manonmani..2) Bro.Prabhu Johnson..
.
3) Bro.Rajesheela..4) Bro. Victor Jayakaran..
.
5) Sis.Chandralekha Martin..6) Bro. Christyshiba..
.
7) Mrs.Shoba Sunil..8) Bro. JEBAVEERASINGH J..
.
9) Miss. G. Stella (only 4)..10) Sis. K Sudha..
.
11) Dr. I. Dinaharan..12) Mrs.M.Amutha Sakthi Victor..
.
13) Sis. Geetharani..14) Bro. K.Elayaraja..
.
15) Sis.Kamini David..16) Mrs.Sweetlin Christopher..
.
17) Mrs. Judithara.J (only 4)..18)Mrs.T.L.Sheela Jasmine..
.
19) Sis. Saraswathy..20) Bro. Melvin David..
.
21) Bro.Nirmalraj..22) Sis.S.Beena..23)Mrs.E.J.Esther..
.
24) Bro.J.Antony Suther..25) Miss.V.Rajeswari@Deborah (only 4)..
.
26) Bro.Kanakalin Suji(only 3)..
.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக - ஆமென்
=========================================================


 

 

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

 

வெள்ளி, 24 ஏப்ரல், 2015

24 ஏப்ரல் 2015 - வண்ணத்துப்பூச்சியா - பச்சோந்தியா

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 ஏப்ரல் மாதம் 24-ம் தேதி - வெள்ளிக்கிழமை
வண்ணத்துப்பூச்சியா? பச்சோந்தியா?
.................

'நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்'. - (ரோமர் 12:2).

.

கிறிஸ்தவர்களில் இந்த நாட்களில் இரண்டு வகையினர் காணப்படுகின்றனர். ஒரு வகையினர் பக்தியின் வேஷத்தை தரித்தவர்கள். மற்றவர்கள் உண்மையிலேயே புதிதாக்கப்பட்டவர்களாக கர்த்தருக்குள் வளருகிறவர்கள்.

.

மேற்கண்ட வசனத்தில் வேஷந்தரித்தல், மற்றும் புதிதாகுதல் என்ற இரண்டு வார்த்தைகளை பார்க்கிறோம். வேஷந்தரித்தல் என்பது சபைக்கு வரும்போது, அவர்களை போல பரிசுத்தவான்கள் யாரும் இருக்க முடியாது என்பது போன்று மிகவும் பரிசுத்தமாய் தோற்றமளிப்பார்கள். அவர்கள் காட்டும் தாழ்மையும், மிகவும் அன்போடு இருப்பவர்கள் போலவும் காட்சியளிப்பார்கள். வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை போன்று, வெளியே பரிசுத்தமாயும், உள்ளேயோ எலும்பும், சகல அசுத்தமும் நிறைந்தவர்களாக காணப்படுவார்கள். அவர்கள் உள்ளத்தில் உள்ளதை அவர்கள் வெளிப்படுத்தாமல், போலியான ஒரு பரிசுத்தத்தை அணிந்து கொண்டு, அதையே வெளியே வெளிப்படுத்துகிறார்கள்.

.

புதிதாக்கப்படுதல் என்பது, உள்ளத்திலிருந்து உண்மையாக புதிதாக்கப்பட்டவர்களாக, மறுரூபமாக்கப்பட்டவர்களாக, கர்த்தருக்குள் வளருகிறவர்களை குறிக்கும்.

.

நாம் பச்சோந்திகளை (Chameleon) பார்த்திருக்கிறோம். அவை தாங்கள் செல்லும் இடத்திற்கேற்றவாறு தங்கள் நிறத்தை மாற்றி கொள்ளும். சிவப்பான ஒரு இடத்திற்கு செல்லும்போது அது தன் நிறத்தை சிவப்பாக மாற்றி கொள்ளும், பச்சையான இடத்திற்கு செல்லும்போது, அதன் நிறத்தை பச்சையாக மாற்றி கொள்ளும். அது செல்லும் இடம் எதுவோ அதன் நிறம் எதுவோ அதுவாக தன்னை மாற்றி கொள்ளும் வகையை அது சேர்ந்தது. அதுபோல சில கிறிஸ்தவர்களும் வேஷந்தரிக்கிறவர்களாக, சபையிலோ, வேதப்பாட வகுப்பிலோ அங்கு இருக்கும் நிலைக்கு ஏற்றவாறு பரிசுத்தமாய் காட்சி அளிப்பார்கள். ஆனால் அதை விட்டு வெளியே உலகத்தில் வரும்போது, உலகத்திற்குரியவர்களாக மாறிவிடுவார்கள். எப்படி பச்சோந்தி, தன் நிறத்தை மாற்றினாலும், அது பச்சோந்தியாகவே இருக்கிறதோ, அப்படியே இவர்களும், தங்கள் உள்ளான இருதயத்தில் மாயக்காரர்களாகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களே அல்ல!

.

ஆனால் வண்ணத்துப்பூச்சியை பார்த்தோமானால், அது அற்புத விதமாக முழு மாற்றத்தையும் பெறும்போது, மிகவும் அழகுள்ளதாக மாறுகிறது. முதலில் கூட்டுப்புழுவாக இருந்த பூச்சி, புதிதாக்கப்படுவதினால், அது முற்றிலுமாக மாறி விடுகிறது. அதுதான் உண்மை கிறிஸ்தவ வாழ்க்கையாகும். உண்மை கிறிஸ்தவனாகும். சபைக்கு வரும்போதும், வெளியே செல்லும்போதும், அவர்கள் கிறிஸ்துவினால் மாற்றப்பட்டவர்களாக, புதிதாக்கப்பட்டவர்களாக, உருமாறினாலும், அது நிரந்தரமானதாக இருப்பார்கள். எப்படி வண்ணத்துப்பூச்சி, ஒரு முறை வண்ணத்துப்பூச்சியாக மாறியப்பின் அது வண்ணத்துப்பூச்சியாகவே இருக்கிறதோ, அப்படியே இவர்களும் புதிதாக்கப்பட்டப்பின,; மறுரூபமாக்கப்பட்டப்பின், உண்மை கிறிஸ்தவர்களாக, கர்த்தரின் சாயலில் பூரண வளர்ச்சியை அடைந்தவர்களாக இருப்பார்கள்.

.

பிரியமானவர்களே, நாம் எந்த நிலையில் இருக்கிறோம்? பச்சோந்தியை போல நாம் செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு நம்மை மாற்றி கொள்கிறவர்களாக, இந்த உலகத்திற்கு உரிய வேஷத்தை தரித்தவர்களாக இருக்கிறோமா? அல்லது, வண்ணத்துப்பூச்சியை போல உருமாற்றம் பெற்று, நம் மனம் புதிதாகிறதினால், கிறிஸ்துவை போல மறுரூபமாகி கொண்டிருக்கிறோமா? உலகத்தின் வேஷம் ஒரு நாள் கடந்து போய் விடும் (1 கொரிந்தியர் 7:31). வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாக வெளி தோற்றத்திற்கு பக்தியுள்ளவர்களாக வாழாதபடி, உள்ளேயே எல்லாவித அசுத்தத்தாலும் நிறைந்திருக்காதபடி, உள்ளான இருதயத்தில் மாற்றமுள்ளவர்களாக, பரிசுத்தமுள்ளவர்களாக வாழுவோமா? 'இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின (2 கொரிந்தியர் 5:17)' என்ற வசனத்தின்படி, வண்ணத்துப்பூச்சியை போல முற்றிலும் புதிதாக்கப்பட்டவர்களாக, மறுரூபமாக்கப்பட்டவர்களாக கர்த்தருக்காக எழும்பி பிரகாசிப்போமாக! ஆமென் அல்லேலூயா!

.

புதிதாக்கும் பரிசுத்தரே

புதுப்படைப்பாய் மாற்றுமையா

உடைத்துவிடும் உருமாற்றும்

பண்படுத்தும் பயன்படுத்தும்

.

ஆளுகை செய்யும் ஆவியானவரே

பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே

ஆவியானவரே - என் ஆற்றலானவரே

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த நாளிலும் புதிய கிருபைகளால் எங்களை நிரப்பும். பச்சோந்திகளை போல நாங்கள் இடத்திற்கேற்றவாறு எங்களை மாற்றி கொள்ளாதவாறு, உள்ளான இருதயத்தில் புதிதாக்கப்பட்டவர்களாக, வண்ணத்துப்பூச்சியை போல நிறம் மாறாதவர்களாக, உமக்கென்று பிரகாசிக்கிறவர்களாக எங்களை மாற்றும். எங்களை காண்கிறவர்கள் உண்மையிலேயே கர்த்தரால் மாற்றப்பட்ட மறுரூபமாக்கப்பட்ட புதிதான சிருஷ்டிகளாய் எங்களை காண கிருபை செய்யும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
**********

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 23 ஏப்ரல், 2015

23 ஏப்ரல் 2015 - மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 ஏப்ரல் மாதம் 23-ம் தேதி - வியாழக்கிழமை
மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்
.....................

அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். - (1 யோவான் 3:16,18).

.

இந்த உலகத்தில் வாழ்கிற நாம் அநேகருக்கு நாமும் இந்த உலகத்தில் ஒரு பிரஜை என்பதுதான் எண்ணம். ஆனால் தேவனுடைய அன்பு நம்மில் இருப்பதால் ஒரு சிலருக்கு நாமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கிறோம். தேவையுள்ளவர்களுக்கு, காயப்பட்டவர்களுக்கு மற்றும் வேதனையிலிருப்பவர்களுக்கு, நாம் பேசும் ஒரு ஆறுதலான வார்த்தை, நாம் சிந்தும் ஒரு புன்னகை, லேசான தொடுதல், இவை அவர்களுக்கு உலகில் அவர்கள் வாழ்வதற்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கின்றன. போன வாரத்தில் ஒரு சகோதரி புறமதத்தை சேர்ந்தவர்கள், நான் வேலை செய்யும் இடத்தில் தன்னுடைய ஒரு குறையினிமித்தம் வந்திருந்தார்கள். அவர்களோடு நான் பேசும்போது, 'நீங்கள் கவலைப்படாதீர்கள், நான் உங்களுக்காக ஜெபிப்பேன்' என்று சொன்னேன். அடுத்த நாள் அவர்களை பார்த்தபோது, நான் சொன்னேன், 'நான் உங்களுக்காக ஜெபித்தேன், நீங்கள் சரியாகி விடுவீர்கள்' என்று அவர்களை சற்று அணைத்தவாறு கூறினேன். உடனே அவாகள் என்னை கட்டியணைத்து முத்தமிட்டு கண்ணீர் வடிக்க தொடங்கினார்கள். மிகவும் நன்றி என்று திரும்ப திரும்ப என்னை முத்தமிட்டார்கள். கண்களில் கண்ணீர் தாரை தாரையாக ஓடியது. நாம் பேசும் ஒரு சிறு ஆறுதலான வார்த்தையும், தொடுதலும், அவர்களுக்கு அத்தனை ஆறுதலை கொண்டு வந்ததை நினைத்தால், அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம் என்ற வார்த்தைதான் நினைவுக்கு வருகிறது.

.

ஒரு கிறிஸ்தவ சகோதரி, ஒரு மனநோய் இல்லத்தில் வேலை செய்துவந்தார்கள். அவர்கள் நினைத்தார்கள், கர்த்தர் படைத்த எந்த ஒரு சிருஷ்டிக்கும் அன்பு காட்ட வேண்டும் என்று. அவர்கள் வேலை செய்த இடத்தில் ஆனி என்கிற சிறுமி தனியாக ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தாள். இந்த சகோதரி, அந்த சிறுமிக்காக ஜெபித்து கதைகளை சொல்லி தனி பாசம் காட்ட ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் முரட்டாட்டமாக இருந்த அந்த சிறுமி அந்த பாசத்திற்கு கட்டுப்பட ஆரம்பித்தாள். சில மாதங்களில் சரியான அவள், அந்த இடத்திலிருந்து வீட்டுக்கு செல்லலாம் என்று அனுமதிக்கப்பட்டாள். அவளோ, தனக்கு கிடைத்த அன்பினால் தான் சுகமானதுபோல மற்றவர்களுக்கும் அன்புகூரும் ஒரு வாய்க்காலாக தான் மாற வேண்டும் என்று விரும்பி அங்கேயே இருந்து அநேகருக்கு ஆறுதலாக இருந்து வந்தாள்.

.

சில வருடங்கள் கழித்து, ஹேலன் கெல்லர், அவர்களுக்கு இங்கிலாந்தில், 'அமெரிக்காவின் மிகச்சிறந்த பெண்மணி' என்னும் விருது கொடுக்கப்பட்டது. அப்போது அவர்களிடம், 'உங்கள் குருடு மற்றும் செவிடு என்னும் குறைபாடுகளின் மத்தியிலும் நீங்கள் வெற்றிகரமாக செயல்பட காரணம் என்ன?' என்று கேட்டபோது, அவர்கள் சொன்னார்கள், 'ஆனி சுலைவான் மாத்திரம் இல்லையென்றால், நானும் இங்கு இல்லை' என்று கூறினார்கள். அந்த ஆனி சுலைவான் வேறு யாருமில்லை, ஹெலன் கெல்லருக்கு துணையாக அவர்களுக்கு செவியாக, பார்வையாக கூடவே இருந்து, ஒரு ஆசிரியைiயாக, வழிகாட்டியாக இருந்து அன்பு செலுத்தி, அவர்களை உருவாக்கினது, அந்த சிறுமி ஆனியாக இருந்த அந்த பெண்ணே!

.

இந்த உலகத்திற்கு அந்த கிறிஸ்தவ பெண் ஒரு பொருட்டல்ல, அவர்கள் ஒரு மனுஷி மாத்திரமே, ஆனால் ஆனிக்கு அவர்கள் உலகமாயிருந்து, அவர்களை மீட்டெடுத்தவர்கள், அதுப்போல ஹெலன் கெல்லருக்கு ஆனியே உலகமாக இருந்து அவர்களுக்கு விழியாக ஒலியாக இருந்து அவர்களை உயர்த்தினார்கள்.

.

ஒருவேளை நீங்கள் நினைக்கலாம், நான் யாருக்கும் பிரயோஜனமில்லாதவன் என்று. நீங்கள் செய்யும் காரியங்களை மற்றவர்கள் குறைவாக பேசலாம், ஆனால் ஒரு சிலருக்கு நீங்கள் தான் உலகம் என்பதை மறந்து போகாதீர்கள்! கர்த்தருடைய அன்பு உங்களுக்குள் விதைக்கப்பட்டிருந்தால், நீங்கள் அன்போடு செய்யும் ஒவ்வொரு செய்கையும் நிச்சயமாக ஒரு சிலருக்கு மிகவும் தேவையாகவும், உலகமாகவும் இருக்க முடியும்! இன்று நம்முடைய ஆறுதலான ஒரு வார்த்தை ஒரு ஆத்துமாவிற்காகிலும் ஆறுதலை கொண்டு வரட்டும், கண்ணீரை துடைக்கட்டும், நமது புன்னகை அவர்களுக்கு வாழ்வில் ஒரு புது நம்பிக்கையை கொடுக்கட்டும்! நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசியாத இந்த உலகத்தார் அவரும் ஒரு Avatar (ஒரு சகோதரன் எழுதியிருந்தார்) என்று நினைக்கலாம். ஆனால் அவரே நமக்கு ஜீவனாக, நமது வாழ்வாக, சுவாசமாக, உயிராக இருக்கிறார். அவரை விசுவாசிக்கிற நாம் அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். ஆமென் அலலேலூயா!

.

மனிதர் யாரிடமும் பாசம் காட்டுவோம்

இயேசு மந்தைக்குள் அழைத்திடுவோம்

அதி உற்சாகமாய் அதி சீக்கிரமாய்

இராஜ பாதையை செவ்வையாக்குவோம்

நம் இயேசு ராஜாவே இதோ வேகம் வராரே

அதி வேகமாய் செயல்படுவோம்

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் எங்கள் நல்ல தகப்பனே, உம்முடைய குமாரனாகிய கிறிஸ்து எங்களுக்காக மரித்ததினால் அன்பு என்ன என்று நாங்கள் விளங்கி கொள்ள கிருபை செய்தீரே உமக்கு நன்றி. எங்களை காண்கிறவர்கள் கிறிஸ்துவை காணும்படியாக எங்கள் அன்பை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த கிருபை செய்தருளும். நாங்கள் இந்த உலகத்தாருக்கு ஒரு பொருட்டாக இல்லாவிட்டாலும், எங்கள் மூலமாக ஒரு சிலராவது, உமது அன்பை பெற்று அவர்களுக்கு நாங்கள் உலகமாகவும் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும் இருக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
**************

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 22 ஏப்ரல், 2015

22nd April 2015 - பாலைவனம் வந்தால் என்ன

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 ஏப்ரல் மாதம் 22-ம் தேதி - புதன் கிழமை
பாலைவனம் வந்தால் என்ன
......................

இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். - (ஏசா- 43:19)

.

சமீபத்தில் எங்கள் சபையிலிருந்து நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து தூர இடத்தில் சபையின் ரிட்ரீட் வைத்திருந்தார்கள். அங்கு செல்வதற்கு ஒரு வனாந்தரத்தை கடந்துதான் செல்ல வேண்டும். சபையினர் ஒவ்வொரு குழுக்களாக காரில் அங்கு சென்றடைந்தார்கள். நாங்கள் ஏழு பேராக பாஸ்டர் காரை ஓட்டிக்கொண்டு, முன்பு சென்றவர்கள் கைபேசியில் எப்படி வரவேண்டும் என்று காட்டி கொடுக்க அதன்படி இரவு 9 மணியளவில் புறப்பட்டோம்.

.

சரியான பாதையில் போய் கொண்டிருந்தபோது, பாதையை விட்டு விலகி போகும்படியாக முன்பு சென்றவர்கள் அனுப்பியிருந்த வழிமுறையில் சொன்னபடியால் நாங்கள் அந்த வழியாக செல்ல ஆரம்பித்தோம். போகும்போதே தார் ரோடிலிருந்து மண் ரோடு ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே சென்றடைந்திருந்த ஒரு சகோதரியிடம் கேட்டபோது, அவர்கள் ஆம், நாங்களும் அந்த மண் பாதையில்தான் வந்தோம். சரியான வழிதான் என்று சொன்னார்கள்.

.

அப்படியானால் நாம் சரியாகத்தான் போய் கொண்டிருக்கிறோம் என்று நினைத்து, தொடர்ந்து போக ஆரம்பித்தோம். போக போக வழியில் கருந்தேள்கள், வண்டுகள், பூச்சிகள் என்று பல உயிரினங்களை பார்த்து கொண்டேதான் போய் கொண்டிருந்தோம். இரவு இருட்டானபடியால் எல்லா உயிரினங்களும் வெளியே நடமாட தொடங்கியிருந்தன.

.

கடைசியில் போய் சேர்ந்தபோது, அது வேறு இடத்தை காண்பித்தது. என்ன ஆயிற்று? ஏன் இந்த இடத்தில் வந்து சேர்ந்தோம்? எப்படி வழி தவறிற்று என்று கேள்விகள் கேட்டபடியே சரி திரும்ப நாம் விட்ட ரோட்டை பிடிப்போம் என்று வழியிலே செல்ல ஆரம்பித்தபோது, இன்னும் வழிமாறி, நடு வனாந்தரத்தை அடைந்தோம்.

.

சுற்றிலும் கும்மிருட்டு, ஆள் நடமாட்டமே இல்லை. மணி அப்போது 12 நள்ளிரவு. வண்டியின் சக்கரங்கள் மண்ணில் புதைந்து விட்டது. என்ன செய்வது என்று தெரியான சூழ்நிலை! எல்லாரும் ஜெபித்து தானே இங்கு வர ஆரம்பித்தோம், என்னவாயிற்று என்று கேள்விகள். ஐந்து பேர் இறங்கி, பின்வரும் பாடலை பாட ஆரம்பித்தோம்:

.

வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே

இறைமகனார் இயேசுவால் நடந்திடுமே

தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே

இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே

.

வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே

காரிருளில் பேரொளி வீசிடுமே

வனாந்தரமே வழியாய் வந்தாலும்

வல்லவரின் கரமே நடத்திடுமே

.

உன்னை அதிசயம் காண செய்வேன்

நீ அற்புதம் கண்டிடுவாய்

.

பாஸ்டர் வண்டியை மெதுவாக ஓட்ட ஆரம்பித்தார். ஒரு சகோதரன் வண்டியை பின்னாக இருந்த தள்ள ஆரம்பித்தார். என்ன அதிசயம்! வண்டி சக்கரம் மெதுவாக வெளியே வர ஆரம்பித்தது. அப்படியே அவர் ஓட்டிக் கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று விட்டார். வழியில் நிறுத்தினால் மணலில் சக்கரம் மீண்டும் புதைந்து விடுமோ என்று.

.

வண்டியின் கீழே இறங்கின எங்களுக்கு சுற்றிலும் கும்மிருட்டு, கைகளில் இருந்த மொபைலில் இருந்த சிறு வெளிச்சத்தில் நடக்க ஆரம்பித்தோம். கால் கீழே வைத்தால் புதை மணல் போல பாதிகால் மணலில் புதைந்தது. அடுத்த காலை எடுத்து வைப்பதற்குள் மேல் மூச்சி, கீழ் மூச்சி வாங்க ஆரம்பித்தது. சரியான பாதை இருக்கும்போதே நடப்பதற்கு கொஞ்சம் கஷ்டம், அந்த மணலில் எப்படி நடப்பது,வழியில் பாம்போ, தேளோ இருந்தால் என்ன செய்வது? ஜெபித்துக் கொண்டே கஷ்டப்பட்டு, நடந்து காரை சென்றடைந்தோம். பயங்கரமான அனுபவம்!

.

தூரத்தில் ரோட்டில் ஒன்றிரண்டு கார்கள் போவது தெரிந்தது. மணலிலேயே வண்டியை மெதுவாக ஓட்டி சென்று, சரியான பாதையை சென்றடைந்தோம். அல்லேலூயா!

.

அன்று ஒரு நாள் ஆகார் தன் குழந்தை இஸ்மவேலை தூக்கி கொண்டு, வனாந்தரத்திலே அலைந்து திரிந்தார்கள் என்று வேதம் கூறுகிறது. இப்போது இருக்கிற அதி நவீன கருவிகளை வைத்திருந்த நாங்களே வனாந்தரத்தில் அலைந்து திரிந்தோம் என்றால் அந்த காலத்தில் ஆகார் என்ன செய்திருப்பார்கள்? நாங்கள் சென்றது இரவு, ஆகார் சென்றது பகலில், சூரியன் தகிக்கும் கடும் வெப்பத்தில், நடு வனாந்தரத்தில், தண்ணீர் கிடையாத நேரத்தில், நான் என் பிள்ளை சாவதை காண மாட்டேன் என்று தூரத்தில் சென்று அழுது கொண்டிருந்த ஆகாரின் கண்ணீரை தேவன் கண்டார். அல்லேலூயா! 'தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார். தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார். நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினாலே பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்' (ஆதியாகமம் 21:17-18).

.

பிரியமானவர்களே என் வாழ்க்கை வனாந்தரமாய் இருக்கிறது. எங்கு செல்வது என்று தெரியாமல் திகைக்கிறேன், யார் எனக்கு உதவுவார் என்று கலங்கி நிற்கிறீர்களோ? சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்கிறது எனக்கு கைகொடுப்பார் யார் என்று திகைக்கிறீர்களா? 'இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்' என்று சொன்ன அற்புத தேவனை நீங்கள் பிடித்து கொண்டால் அவர் உங்களுக்கு அற்புத வழியை திறந்து கொடுப்பார். வனாந்தரத்திலே வழியை காட்டுவார். வறண்ட வாழ்க்கையை செழிப்பாக மாற்றுவார்.

.

நாம் எங்கு செல்வது, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கும் நேரங்களில் கர்த்தரே அன்றி நமக்கு வழி வேறு யாருமில்லை. நாங்கள் பாட ஆரம்பித்தபோது, எங்களுக்கு அற்புதமாக விடுதலை கொடுத்தவர், உங்கள் வாழ்க்கையில் வரும் வனாந்தரமான காரியங்களிலிருந்தும் விடுதலை கொடுப்பது நிச்சயம்! அவரையே பற்றி கொள்வோம். விடுதலை பெற்று கொள்வோம். ஆமென் அல்லேலூயா!

.

பாலைவனம் வந்தால் என்ன – என்னை

படைத்தவர் என்னோடுண்டே

பாடிடுவேன் பாதை காட்டிடுவார்

பயணத்தை தொடர்ந்திடுவேன்

.

என்னை சுற்றிலும் இயேசு உண்டு

என் முன்னே செல்கின்றாரே.

.
ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, பாலைவனத்தில் நாங்கள் தடுமாறி நின்ற போது, எங்களுக்கு பாதை காட்டின தேவன் நீரல்லவோ, நீர் எங்களோடு இருக்கும்போது, தடையாக நின்ற வனாந்தரத்திலும் வழியை காண்பித்து, பயணத்தை தொடர செய்தவராகிய உம்மை துதிக்கிறோம். வாழ்க்கையே வனாந்தரமாய், என்ன செய்வது என்று தத்தளித்து கொண்டிருக்கிற ஒவ்வொருவருக்கும் சரியான வழியை காட்டுவீராக. இருக்கிற பிரச்சனைகளிலிருந்து விடுதலையை கட்டளையிடுவீராக. உம்மை பற்றி கொள்ளும்போது உம்முடைய கரம் அவர்களை நடத்தும் என்பதை அவர்கள் உணர்ந்து உம்மையே சார்ந்த ஜீவிக்க கிருபை தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
*******

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.