Friends Tamil Chat

வெள்ளி, 30 ஜனவரி, 2015

30th January 2015 - சரீரமாகிய ஆலயம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 ஜனவரி மாதம் 30-ம் தேதி - வெள்ளிக்கிழமை
சரீரமாகிய ஆலயம்
..................

உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். - (1கொரிந்தியர் 6:19-20).

.

நம்மில் அநேகர், அளவுக்கு மீறி வேலைகளை செய்து, மிகவும் சோர்ந்து, களைப்படைந்துப் போகிறோம். ஒரேயடியாக வேலை வேலை என்று அதிலேயே கவனமாக இருப்பதால் நம் சரீரத்தைக் குறித்து கவலையற்றவர்களாக காணப்படுகிறோம்.

.

நம்முடைய ஆவிக்குரியக் காரியங்களும், உணர்ச்சிகளுக்குரிய, சிந்தனைகளுக்குரிய காரியங்களும் நம் சரீரத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது. நம் சரீரத்தை கவனமாக பராமரிக்கத் தவறும் போது, நம் சரீரம்மாத்திரமல்ல, நம்முடைய எல்லா சிந்தனை, உணர்ச்சி, ஆவிக்குரிய வகைகளிலும், நோய்வாய்ப்பட்டுப் போகிறோம். இந்நாட்களில் தொலைக்காட்சிகளில் நம் உடல்நிலையைக் குறித்த அநேக மருந்தகளையும், உடற்பயிற்சி கருவிகளையும், குறித்த விளம்பரங்களையும் காண்கிறோம். அந்த விளம்பரங்களைப் பார்த்து, வாங்கி, சரீரத்தின் தோல் சுட்டுக் கொண்டதுதான் மிச்சம்!

.

நாம் சற்று யோசித்துப் பார்ப்போம், நாம் எந்த அளவு நம்முடைய சரீரத்தை கவனமாக காத்துக் கொளகிறோம் என்று? நாம் தேவையான அளவு தண்ணீரைக் குடிக்கிறோமா? வேலை வேலை என்று தண்ணீர் குடிக்கக் கூட நேரமில்லை என்றுக் கூறுகிறோமா? எத்தனையோ வியாதிகளுக்கு, தண்ணீர் குடிப்பதே மருந்தாக இருக்கிறது! ஏன், உடல் பருமனைக் குறைக்கவும் கூட தண்ணீர் அதிகமாக உதவுகிறது. சாப்பிட வேண்டிய உணவுகளை நாம சாப்பிடுகிறோமா? இல்லாவிட்டால் ஏதோ வயிற்றை நிரப்ப வேண்டும் என்று எது கிடைக்கிறதோ அதை சாப்பிட்டு வயிற்றை நிரப்புகிறோமா?

.

அநேகருடைய வேலை அமர்ந்தே செய்யும் வேலையாயிருக்கும். வேலை முடிந்த பிறகு நாம் ஒரு அரை மணி நேமாவது நடக்கிறோமா? அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. தேவையான அளவு தூங்குகிறோமா? ஒரு நாளைக்கு ஆறு மணியிலிருந்து ஏழு மணி நேரம் தூங்க வேண்டும். ஆனால் வேலை வேலை என்று ஓய்வெடுக்காமல், தூக்கமில்லாமல், வேலை செய்து உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்வதால் என்ன பயன்? அநேகர், சரியான நேரத்தில் உணவருந்த மாட்டார்கள். வேலை வேலை என்று பிஸியாக இருந்துவிட்டு, நேரம் கெட்ட வேளையில் சாப்பிடுவார்கள். வயிற்றில் அல்சர் வந்தப பிறகு மருந்து எடுத்து என்ன பயன்? சிலர் காலை வேளை எதையும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இரவு வேளை உணவை விடலாம். ஆனால் காலை வேளை உணவு மிகவும் முக்கியம். அது Breaking the fast அதனால் தான் அது Break fast.

.

சிலர், புகைபிடித்து, அல்லது வேறு காரியங்களுக்கு தங்கள் சரீரங்களில் இடம் கொடுத்து அதை அசுசிப்படுத்துகிறார்கள். நமது சரீரம் தேவனுடைய ஆலயமாக இருப்பதால் அவற்றை நாம் கண்டிப்பாக நிறுத்தியே ஆக வேண்டும். நீங்கள் உங்களுடையவர்களல்லவென்று அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; இயேசுகிறிஸ்து நம் மாசில்லாத இரத்தத்தை சிந்தி உங்களை மீட்டுக் கொண்டாரே, தமது, குற்றமில்லாத இரத்தத்தை கிரயமாக செலுத்தி உங்களை மீட்டுக் கொண்டாரே, பின் எப்படி அதை கெட்ட காரியங்களுக்கு பயன்படுத்த முடியும்?

.

சாப்பிட வேண்டிய அளவு சாப்பிட்டு, தூங்க வேண்டிய அளவு தூங்கி, நடக்க ணே;டிய அளவுநடந்தால், நம் உடல் நலத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். அகஸ்டின் ஜெபக்குமார் அண்ணன் அவர்கள், ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டி கொஞ்சம் கூட அதிகமாக சாப்பிட மாட்டார்கள். என்னதான ருசியாக இருக்கட்டும், அந்த அளவு தான். அந்த மாதிரி குறிப்பிட்ட அறவு மாத்திரம் சாப்பிட்டு, தங்கள் உடல் நலத்தைக் காத்து அநேகருக்கு பிரயோஜனமாயிருக்கும்படி, கர்ததருடைய ஊழியத்தை செய்யும்படி தங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறர்கள். Father. Berchmans அவர்களும் அப்படித்தான். அவர் சொல்வார், இன்னும் கர்த்தருக்கு என்று ஓடியாடி உழைக்க வேண்டாமா? இப்படி சாப்பிட்டு உடல் நலத்தைக் கெடுத்தால் பிறகு எப்படி கர்த்தருக்கு ஊழியம் செயவது? என்று சொல்வார்கள்.

.

கர்த்தருக்கென்று பெரிய காரியங்களை சாதிக்க வேண்டுமா? உங்கள் மனநிலையும் சிந்தனைகளும் சரியாக வேலை செய்ய வேண்டாமா? உங்கள் உடல் நலத்தை பேணிக் கொள்ளுங்கள். நமது சரீரம் தேவனுடைய ஆலயமாயிருக்கிறபடியால், ஆவியானவர் வாசம் செய்யும் ஆலயமாயிருக்கிறபடியால், நாம் நம் சரீர பாண்டங்களை ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய நமது சரீரத்தினாலும் நமது ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துமபடியாக நமது சரீரங்களை சரியானபடி காத்து அவருக்கென்று சாட்சியாக இன்னும் அநேக ஆண்டுகள் வாழ்ந்து அவரை மகிமைப் படுத்துவோமாக. ஆமென் ஆல்லேலூயா!

.

தேவாதி தேவன்

தினந்தோறும் தங்கும்

தேவாலயம் நாமே

ஆவியான தேவன்

அச்சாரமானார் அதிசயம் அதிசயமே

.

ஜெபம்
எங்களை நேசிக்கிற எங்கள் நல்ல தகப்பனே, எங்கள் சரீரத்திற்கும் ஆவிக்கும் உரிமையாளரே, அவற்றை நாங்கள் காக்க வேண்டிய விதத்தில் காத்துக் கொள்ள எங்களுக்கு கிருபைச் செய்யும். நீர் தங்கும் தேவாலயமாக எங்கள் சரீரம் இருப்பதால் அதை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள ஞானத்தைத் தாரும். நல்ல ஆரோக்கியத்தை கொடுத்து, உமக்கென்று வாழ கிருபைச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.......

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

வியாழன், 29 ஜனவரி, 2015

29th January 2015 – சத்திய வேதம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 ஜனவரி மாதம் 29-ம் தேதி - வியாழக்கிழமை
சத்திய வேதம்
..........

புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்.. - (ஏசாயா 40:8) .

.

வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டை பர்மிய மொழியில் மொழி பெயர்ப்பதற்கு அதோனிராம் ஜட்சன் (Adoniram Judson) என்ற அருமையான மிஷனரிக்கு 20 வருடங்கள் ஆனது. 1824, இங்கிலாந்திற்கும், பர்மாவிற்கும் இடையில் நடந்த போரில் அவர் மிஷனரியாக இருந்த காரணத்தால் ஜட்சன் சிறையிலடைக்கப்பட்டார். அவரது மனைவி புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பை எடுத்து, தாங்கள் இருந்த குடிசையின் தரையில் புதைத்து வைத்தார்கள். ஆனால் ஈரப்பசையின் காரணமாக, அது பூஷணம் பிடிக்க ஆரம்பித்தது. அதைக் கண்ட அவரது மனைவி, அதை எடுத்து, ஒரு பஞ்சில்உருட்டி, அதை ஒரு தலையணை போல செய்து, அதை சிறையிலிருக்கும் தன் கணவரிடம் கொண்டுப் போய் கொடுத்தார்கள். ஆனால் அடுத்த ஒன்பது மாதங்களில் ஜட்சனை இன்னும் மோசமான சிறையில், அவருடைய கால்களில் ஐந்து சங்கிலிகளால் கட்டி, அவரை மாற்றினர். அவரோடு இன்னும் நூறு பேரை அடுத்த நாள் காலையில், தூக்கிலடப்போவதாக அறிவித்தனர். அவருடைய தலையணை சிறைச்சாலையின் தலைவனுக்கு கொடுக்கப்பட்டது. அதை அறிந்த அவரது மனைவி, அதைவிட நல்ல தலையணையை கொடுப்பதாகவும், தன் கணவனது தலையணையை தனக்கு கொடுக்கும்படியாகவும் வேண்டி, அதை பெற்றுக் கொண்டார்கள்.

.

அடுத்த நாள், கர்த்தர் அவரை தூக்கிலிடாதபடி அதிசயமாயக் காத்தார். அவரை வேறோரு சிறைக்கு கொணடுச் சென்றார்கள். திரும்பவும் அவரது தலையணை அவருக்கு கிடைத்தது. ஒரு நாள், அந்த சிறையின் பாதுகாவலர் அந்த தலையணையை பிடுங்கி, அது வீணானது என்று அதை வெளியே தூக்கி எறிந்தார். அப்போது அந்தப் பக்கமாய் வந்த ஒரு கிறிஸ்தவர் அதை தற்செயலாக எடுத்துப் பார்த்தபோது, அதில் பொக்கிஷமான வேத வாக்கியங்கள் இருப்பதைக் கண்டார். அதை எடுத்து பத்திரமாக பாதுகாப்பாக வைத்தார். போர் முடிந்தபிறகு அந்த வேத வார்த்தைகள் பத்திரமாக இருப்பதுக்கண்டுபிடித்து, அதை அச்சட்டனர். புத:து வருடங்சகள் கழித்து, 1834ஆம் ஆக்கப்பட்டு, முழு வேதாகமமும் கடினமான மொழி என்றுச் சொல்லப்படுகிற பர்மிய மொழியில் அச்சிடப்பட்டு, வெளியாக்கப்பட்டது.

.

அடுத்த முறை உங்கள் கைகளில் வேதம் தவழும்போது, அது உஙகள் சொந்த மொழியில் வருவதற்கு எத்தனைப் பேர் எத்தனை தியாகம் செய்திருக்கிறார்கள், எத்தனை துன்பங்களுக்கும் இடையூறுகளுக்கும், எத்தனை இன்னல்களுக்கும் உள்ளானார்கள் என்பதை அறிந்து, அப்படி வேதனைகளை அனுபவித்தும் மற்றவர்கள் கர்த்தருடைய வேதத்தை காண, படிக்க வேண்டும் என்று பாடுபட்ட ஒவ்வொருவருக்காகவும் கர்த்தரை துதியுங்கள்.

.

வால்டர் என்னும் பிரஞ்சு மொழி நாத்திகன், கிறிஸ்து இல்லை, வேதம் பொய்யானது என்று தான் மரிக்கும் நாள் வரைக் கூறி வந்தான். ஆனால் மரிக்கும்போது, அவன் சொன்னான், 'நான் தேவனாலும், மனிதர்களாலும் கைவிடப்பட்டு, என் நித்தியத்தை நரகத்தில் கழிக்கப் போகிறேனே' என்று கதறியவனாக மரித்தான். எந்த வீட்டில் இருந்து, அவன், தேவன் இல்லை என்றுச் சொன்னானோ, அந்த வீட்டிலேயே வேதாகம சங்கம், அச்சு பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்து, இலடசக்கணக்கான வேதாகமங்களை, அச்சிட்டு வெளிவரச் செய்ய தேவன் உதவி செய்தார்.

.

உலகில் எத்தனையோ அறிவாளிகளும், தத்துவ ஞானிகளும் எழுதிய புத்தகங்கள் உண்டு, எத்தனையோப் பேர், வேதாகமம் என்று இருப்பதையே யாரும் அறியாதபடி அதை அழித்துப போடுவோம் என்று சூளுரைத்து, அதற்காக போராடினர். ஆனால் அவர்கள்தான் அழிந்துப் போனார்களேத் தவிர சத்திய வேதமோ என்றென்றும் தனித்தன்மையோடு இன்றும் நிற்கிறது. அதற்கு இணையான புத்தகம் இந்த உலகில் இல்லை இல்லை இருக்கப் போவதும் இல்லை. உலகிலேயே இன்றுவரை அதிகமாய் விற்கப்படும் புத்தகங்களில் ஒன்று அல்ல, ஒரே புத்தகம் வேதப் புத்தகமாகும்.

.

புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும். ஆமென் அல்லேலூயா!

.

வானம் அகலும் பூமி அழியும்

வேத வசனம் நிலைத்திருக்கும்

பரமன் வேதம் என்து செல்வம்

பரவசம் நிதம் அருளும்

சத்திய வேதம் பக்தரின் கீதம்

.

ஜெபம்
எங்களை நேசித்து, எங்களுக்கு உம்முடைய சத்திய வேதத்தை கொடுத்த நல்லக் கர்த்தரே உம்மைத் துதிக்கிறோம். உம்முடைய எல்லா பிரஸ்தாபஙகளைப பார்க்கிலும் உம்முடைய வார்த்தையை மகிமைப் படுத்தி இருக்கிறீரே உமக்கு நன்;றி, இந்த கிருபையுள்ள வார்த்தைகளை எங்கள் சொந்த மொழியில் வாசிக்கச செய்த உமது மட்டில்லாத கிருபைக்காக உம்மைத துதிக்கிறோம். அதை எங்களுக்கு கிடைக்கத்தக்கதாக அதை மொழி பெயர்த்த, அதற்காக எண்ணற்ற இன்னல்களை அனுபவித்த ஒவ்வொரு பரிசுத்தவானகளுக்காகவும் உம்மைத் துதிக்கிறோம். எங்களை ஆற்றித் தேற்றும் உம்முடைய வார்த்தைகள் ஒவ்வொன்றுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
........

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

புதன், 28 ஜனவரி, 2015

28th January 2015 - எதைக் குறித்தும் பயப்படாதே

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 ஜனவரி மாதம் 28-ம் தேதி - புதன் கிழமை
எதைக் குறித்தும் பயப்படாதே
...................

நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். - (ஆதியாகமம் 15:1).

.

இந்நாட்களில் பயம் என்னும் காரியம் மனிதனை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. சிலருக்கு எதையெடுத்தாலும் பயம். சிலருக்கு இருட்டைக் கண்டால் பயம், சிலருக்கு வியாதியைக் குறித்து பயம், சிலருக்கு எதிர்காலத்தை நினைத்து பயம், இப்படி பயம் பல விதங்களில் மனிதனுக்கு வருகிறது.

.

ஒரு வாலிபன், அவனுக்கு ஒரு வியாதியும் இல்லை, ஆனால் தனக்கு எப்போதும் நெஞ்சில் வலியிருப்பதைப் போல ஒரு உணர்வு, தான் சீக்கிரம் மரித்துவிடுவோமோ என்று பயம். அதனால் தினமும் ஆஸ்பத்திரிக்குச் சென்று, தினமும் ECG எடுத்துப் பார்த்து திருப்திபட்டுக் கொள்வான். அங்குள்ள டாக்டர்களும் நர்சுகளும் இவன் வந்தால், தினமும் ECG எடுக்கத்தான் வருகிறான் என்று ஆரம்பத்தில் அக்கறையாக கவனித்தவர்கள், பிற்பாடு ஒரு வருடகாலமானபோது, அவனை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். ஏனென்றால், அவனுடைய ECG எப்போதும் நார்மலாக இருந்தது. ஒரு நாள் அவன், உண்மையில் நெஞ்சுவலியுடன் வந்தபோது, அவனை கவனிப்பார் இல்லை. எல்லாரும் மற்ற நோயாளிகளுடன் பிஸியாக இருந்தபடியால், அவன் எப்போதும் வருகிறவன்தானே என்று மெத்தனமாக விட்டுவிட்டார்கள். ஆனால் அவன் உண்மையாகவே நெஞ்சுவலிவந்து, அந்த நாளில் மரித்துப் போனான். இது உண்மையில் நடந்த சம்பவம். யோபு சொல்வதுப் போல 'நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது' - (யோபு 3:25) அந்த வாலிபனுக்கு நேரிட்டது.

.

இன்னும் சிலருக்கு இந்த வியாதி தனக்கு வந்து விடுமோ, கேன்சர் வந்து விடுமோ, இரத்த பரிசோதனை செய்யும் போது ஏதாவது ஒரு லெவல் அதிகமாக வந்துவிட்டால் போதும், உடனே தனக்கு இருதய வியாதி வந்து விடுமோ என்று பயங்கர பயம். இது கிறிஸ்தவர்களையும் அதிகமாய் பாதிக்கிறது என்றால் மிகையாகாது. வியாதி வருவதைக் குறித்து மாத்திரமல்ல, அது வந்தால் தான் சீக்கிரம் மரித்துப் போய் விடுமோ என்பதுதான் மிகப் பெரிய பயம்.

.

நான் சில நேரங்களில் மரிக்கும் மனிதர் முன்பு இருந்திருக்கிறேன். அவர்கள் மரிப்பதற்கு முன்பு தங்கள் கைகளை ஆட்டி போராடுவதை கண்கூடாக கண்டிருக்கிறேன். அப்போது நான் நினைப்பது உண்டு, சாவின் தூதன் வரும்போது, இவர்கள் சாகாதபடிக்கு அவனோடு போராடுகிறார்கள் என்று. மரித்தப்பின் அவர்களின் முகத்தில் வேதனையின் சாயல் தெரியும். கிறிஸ்து இல்லாமல் மரிக்கும் மானிடருக்கு சாவைக் குறித்த நம்பிக்கை இல்லை. நீதிமான் மரிப்பதுபோல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக (எண்ணாகமம் 23:10) என்று பிலேயாம் தீர்க்கதரிசி வேண்டுகிறான். அநேக பரிசுத்தவான்கள், தங்கள் சாவு மிகவும் பயங்கரமாக, கொடியதாக, சித்தரவதை செய்யப்பட்டு மரித்தாலும், சந்தோஷமாக தங்கள் ஜீவனை ஒப்புக் கொடுத்தார்கள். ஏனென்றால் தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான் (மத்தேயு 16:25) என்பதை அவர்கள் அறிவார்கள்.

.

பிரியமானவர்களே, நம்மைப் படைத்த தேவன் யார் என்கிற அறிவு நமக்கு இருக்க வேண்டும். அவர் சர்வ வல்லமையுளள் தேவன். அவர் சித்தமில்லாமல் நம் தலையிலிருந்து ஒரு முடிக் கூட கீழே விழுவதில்லை. அப்படி இருக்கும்போது, நாம் எதைக் குறித்தும் ஏன் கவலைப்பட வேண்டும்? பயப்பட வேண்டும்? ஜீவனுள்ள தேவன் நம்மோடு கூட இருக்கும்போது இருளைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்? இருள் நம்மை சூழ்ந்தாலும் அவர் வெளிச்சமாய் நம்மைக் காத்துக் கொள்வாரே! இந்த உலகத்தில் இருக்கிறவனிலும் நமக்குள் இருக்கிறவர் பெரியவர். பெருங்காற்று அடித்து, கடல் கொந்தளித்தபோது, சீஷர்கள் பயந்திருக்கும்போது பயப்படாதிருங்கள் என்று சொல்லி அவர்களை கரைசேர்த்த தேவன் (யோவான் 6:18-21) இன்றும் நம் வாழ்க்கையில் வரும் கொந்தளிப்புகளையும், புயல்களையும் அடக்கி, நம்மை கரை சேர்க்க வல்லவராயிருக்கிறார். வேதாகமத்தில், 365 தடவை பயப்படாதிருங்கள் என்று தேவன் நம்மை ஆறுதல்படுத்துகிறார். அது வருடத்தின் ஒவ்வொரு நாளும் நம்மை பயப்படாதிருங்கள் என்று ஆறுதல் படுத்துவதற்கு சமம். தேவன் நம்மை நேசிப்பதால் நம்மை பயப்படாதிருங்கள் என்று தேற்றுகிறார்.

.

ஆகவே எதைக் குறித்தும் பயப்படாதிருங்கள். யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப்பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன் (ஏசாயா 43:1). என்று நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர், அவர் நம்மை கடைசி பரியந்தம் காத்துக் கொள்ள வல்லவராயிருக்கிறார்.

.

அநேகருக்கு எதிர்காலத்தை குறித்த பயம்! எதிர்காலம் நமக்குண்டு, அதனால் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. நம்மை உள்ளங்கைளில் வரைந்து நம்மை பாதுகாக்கிற தேவன் நமக்கு உண்டு. நம் ஜீவனைக் குறித்தும் நமக்கு என்னவாகுமோ என்றும் நாம் பயப்படக் கூடாது. தேவனை ஏற்றுக் கொண்டவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. இன்று நாம் மரி;த்தால் நாம் தேவனோடு இருப்போம். மரிக்காவிட்டால் தேவ்ன நம்மோடு கூட இருக்கிறார். ஆதலால் நாம் அஞ்ஞானிகளைப் போல பயப்படக்கூடாது. நம் காலங்கள் நம் கர்த்தருடைய கரங்களில் இருப்பதால் எதைக் குறித்தும் பயப்படாமல், எல்லாவற்றையும் தேவன் மேல் வைத்து அவருக்கென்று வாழ்வோம். பயப்படாமல் வாழ்வோம். ஆமென் அல்லேலூயா!

.

பயப்படாதே வலக்கரத்தாலே தாங்குவேனே

என்றதாலே ஸ்தோத்திரம்

பாசம் என்மேல் நீர் வைத்ததினால்

எவரும் பறிக்க இயலாதென்னை

.

ஜெபம்
எங்களை பயப்டாதிருங்கள் என்று சொல்லி தேற்றுகிற எங்கள் நல்ல கர்த்தாவே, உம்மைத் துதிக்கிறோம். நீர் எங்களுடன் இருக்கும்போது நாங்கள் எதைக் குறித்தும் பயப்பட தேவையில்லையே, நீர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வீரே அதற்காக உம்மைத துதிக்கிறோம். இந்நாட்களில் இருக்கிற பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தங்கள் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்று தவிக்கிற ஒவ்வொருவரையும் உம்முடைய வார்த்தைகளினால் தேற்றுவீராக. ஆறுதல் படுத்துவீராக. அவர்களுடைய தேவைகளை சந்திப்பீராக. அவர்களுடைய எதிர்காலம் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய உம்மிடத்தில் உள்ளது என்பதை உள்ளத்தின் ஆழத்தில் விசுவாசிக்க அவர்களுக்கு உதவிச் செய்வீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
........

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

செவ்வாய், 27 ஜனவரி, 2015

27th January 2015 - பிரகாசிப்பிக்கிற ஒளி

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 ஜனவரி மாதம் 27-ம் தேதி - செவ்வாய்க்கிழமை
பிரகாசிப்பிக்கிற ஒளி
.........

நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். - (1பேதுரு 2:9).

.

பழங்குடி மக்களில் ஒரு வகையினர், ஒரு குகைக்குள் குளிரிலும், இருளிலும் வாழ்ந்து வந்தார்கள். குளிர் தாங்க முடியாமல், அவர்கள் இருளில், தங்களால் இயன்ற வரை சத்தமிட்டுக் கதறி அழுதுக் கொண்டிருந்தார்கள். அதுதான் அவர்களால் செய்ய முடிந்ததும் அறிந்ததும். அவர்கள் இருந்த இடம், மிகவும் துக்ககரமான இடமாக, அவர்கள் இடும் ஓலம் மரண ஓலமாக இருந்தது. அவர்கள் மகிழ்ச்சி என்பது என்ன என்று அறியாமல், இருளிலும் குளிரிலும்; வாழ்ந்து வந்தார்கள்.

.

ஒரு நாள் அவர்கள் அப்படி கதறிக் கொண்டு இருந்தபோது, அவர்களுக்கு ஒரு குரல் கேட்டது, 'நான் உங்கள் அழுகுரலைக் கேட்டேன், உங்களுக்கு உதவி செய்ய வந்திருக்கிறேன்' என்று அந்தக் குரல் கூறியது. அதைக் கேட்ட அந்த குகை வாழ்மக்கள் மத்தியில் ஒரு அமைதி ஏற்பட்டது. அவர்கள் வித்தியாசமான வார்த்தைகளை கேட்டதில்லை. ஆகையால் அவரிடம், 'நீர் எப்படி எங்களுக்கு உதவ போகிறீர்' என்றுக் கேட்டார்கள். அதற்கு அவர், 'என்னை நம்புங்கள், நான் உங்களுக்கு தேவையானதைக் கொண்டு வந்திருக்கிறேன்' என்றுக் கூறி எதையோ செய்ய ஆரம்பித்தார்.

.

அந்த பழங்குடியினர், அவர் என்ன செய்கிறார் என்று உற்றுப் பார்த்தார்கள். அவர், அங்கு குச்சிகளை வைத்து எதையோ செய்துக் கொண்டிருந்தார். அவரிடம் 'என்ன செய்கிறீர்' என்று ஒரு குரல் கேட்டது, அதற்கு அவர் பதில் சொல்லாமல், தொடர்ந்து செய்துக் கொண்டிருந்தபோது, மற்றொருக் குரல் 'என்ன செய்கிறீர்' என்று மீண்டும் சத்தமாகக் கேட்டது. அப்போது அவர், .உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக் கொண்டு வந்திருக்கிறேன். என்றுக் கூறி, தனது காலின் கீழே சேர்த்து வைத்திருந்த குச்சிகளை நெருப்பு வைத்து பற்ற வைத்தார். அந்தக் குச்சிகள் நெருப்பைப் பற்றிக் கொண்டு அந்தக் குகைக்குள் வெளிச்சத்தைக் கொண்டு வந்தது. அதைக் கண்ட அம்மக்கள், 'ஐயோ அதை அணைத்துப் போடும், அது எங்கள் கண்களை கூசப் பண்ணுகிறது' என்று கத்த ஆரம்பித்தார்கள். அப்போது அவர், 'ஆரம்பத்தில் வெளிச்சம் கூசத்தான் செய்யும், கிட்ட வாருங்கள், பழகிப் போகும்' என்றுக் கூறினார். ஒரு மனிதன், 'நான் வர மாட்டேன்' என்றுக் கூற மற்றவர்களும், 'ஆமாமாம் நாங்களும் வர மாட்டோம்;' என்று பிடிவாதம் பிடித்தனர். அப்போது அவர், 'உங்களுக்கு இருளும் குளிரும்தான் பிடித்திருக்கிறதா? உங்கள் பயங்களை உதறிவிட்டு, விசுவாசத்தோடு பக்கம் வாருங்கள்' என்று அன்போடு அழைத்தார்.

.

அதிக நேரம் யாரும் வரவில்லை. அப்போது அவர், 'பாருங்கள் இங்கு சூடாக இருக்கிறது' என்றழைத்தார். ஒரு பெண் அவர் அருகில் சென்று, 'ஆஹா ஆமாம் இங்கு சூடாக இருக்கிறது. நான் என் கண்களை திறக்க முடிகிறது' என்றுக் கூறி மற்றவர்களையும் வரும்படி அழைத்தாள். இன்னும் நெருப்பின் அருகில் சென்றபோது, அவளுடைய குளிரெல்லாம் மறைய ஆரம்பித்தது. மீண்டும் அவர்களை அவள் அழைத்தபோது, அவர்கள், 'உனக்கென்ன? அமைதியாயிரு, எங்களை விட்டுவிடு, நீ அந்த வெளிச்சத்தை எடுத்துக் கொண்டு போ' என்று அவளைச் சத்தம் போட ஆரம்பித்தார்கள். அப்போது அவள் அந்த மனிதரிடம், ஷஏன் இவர்கள் ஒளியினிடத்திற்க்கு வரமாட்டேன் என்கிறார்கள்? என்றுக் கேட்டாள். அப்போது அவர், 'அவர்கள் குளிரை மட்டும் அறிந்து வைத்திருக்கிறபடியால், குளிரிலும் இருளிலும் இருப்பதையே தான் விரும்புகிறார்கள், வேறு மாற்றத்தை விரும்பவில்லை' என்றுக் கூறினார். அவளிடம் 'நீயும் அவர்களிடமே போய் விடுவாயா? என்றுக் கேட்டார். அப்போது அவள், 'இல்லை, எனக்கு இந்த வெளிச்சமும், கதகதப்பும் வேண்டும். என்னால் குளிரைத் தாங்க முடியவில்லை. ஆனால் என் மக்கள் அப்படியே குளிரிலும் இருளிலும் இருப்பதையும் என்னால் பொறுக்க முடியவில்லை' என்றுக் கூறினாள். அப்போது அவர், ஷகவலைப்படாதே' என்றுக் கூறி, அந்த நெருப்பிலிருந்து ஒரு குச்சியை அவளிடம் கொடுத்து, 'நீபோய் உன் மக்களிடம் சொல், இது வெளிச்சம், இதன் ஒளி கதகதப்பானது, இது யார் யாருக்கு வேண்டுமோ அவர்களுக்கு கிடைக்கும். இருளிலும் குளிரிலுமிருந்து உங்களுக்கு விடுதலைக் கிடைக்கும் என்றுச் சொல்' என்று அவளிடம் கொடுத்தார்.

.

ஆம் பிரியமானவர்களே, இந்த உலகத்தில் இருளிலே வாழ்கிற மக்கள், ஒளி அவர்களிடத்தில் அனுப்பபட்டும், அதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. 'ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது (யோவான் 3:19). அவர்கள் கிறிஸ்து கிறிஸ்தவர்களுக்காக மட்டுமே என்று தவறான எண்ணத்தில் இருக்கிறார்கள். இயேசுவேயன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்கிற வார்த்தை அவர்கள் அறியாததால், இவரும் ஒரு கடவுள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவரே தெய்வம், இவரேயன்றி, இரட்சிப்படைவதற்கு வேறு நாமம் கொடுக்கப்படவில்லை என்பதை அறியாதபடி இருளிலும், அந்தகாரத்திலும் இருக்கிறார்கள். அப்படி இருளிலும் அந்தகாரத்திலும் இருந்த நம்மை, 'நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்' (1பேதுரு 2:9) என்று தேவன் தெரிந்துக் கொண்டு ஒளியைக் கொடுத்ததுப் போல, அந்த ஆச்சரியமான ஒளியாகிய கிறிஸ்துவை நாம் இருளில் வாழ்கிற மக்களுக்கு எடுத்துச் சென்று அவர்களை ஒளியினிடத்திற்கு கொண்டு வர வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். ஒருவரும் சேரக் கூடாத ஒளியில் வாசமாயிருக்கிற தேவனிடத்தில் சேரும் மக்களும், அந்த ஒளியின் வெளிச்சத்தை தாங்க கூடாதவர்களாக இருளே எங்களுக்குப் போதும் என்று இருளை விரும்புகிறதே அவர்கள் ஆக்கினைத்தீர்ப்பு அடைவதற்க்குக் காரணமாயிருக்கிறது. நாம் பெற்றுக் கொண்ட கிறிஸ்துவாகிய ஒளியை மற்றவர்களும் பெறச் செய்து, அவர்கள் ஒளியைக் கண்டு விலகி ஓடாதபடிக்கு, அவர்களும் நித்திய பரலோகத்தில் பங்குள்ளவர்களாய் மாறும்படி அவர்களையும், தேவனிடத்தில் கொண்டு வருவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக.

.

இருளில் வாழும் மாந்தர்

பேரொளியைக் கண்டு

இரட்சிப்பு அடைய வேண்டும்

இயேசு என்று சொல்ல வேண்டும்

.

ஜெபம்
எங்கள் ஒளியாகிய நல்ல தெய்வமே, உம்மை நாங்கள் துதிக்கிறோம். உலகத்தில் வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியாகிய இயேசுகிறிஸ்துவை உலகம் அறியாதபடிக்கு அவர்கள் கண்கள் குருடாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் உம்மைக் காணும்படி அவர்கள் கண்களை திறந்தருளும். ஒளியினிடத்தில் வரும்போது அவர்களுக்கு நித்திய ஜீவனும், பரலோக வாழ்வும் உண்டென்பதை அறிந்துக் கொள்ள அவர்களுக்கு கிருபைச் செய்யும். அவர்களுக்கு ஒளியை எடுத்துச் செல்கிறவர்களாகவும், உலகத்திற்கு ஒளியாகவும் இருக்கும்படியாக எங்களை மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
......

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

திங்கள், 26 ஜனவரி, 2015

26th January 2015 - யாரைச் சேவிப்பீர்கள்?

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 ஜனவரி மாதம் 26-ம் தேதி - திங்கட் கிழமை
யாரைச் சேவிப்பீர்கள்?
....

கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள். -யோசுவா-24:15.


ஒரு வாலிபன் தான் படித்து முடித்தவுடன் ஒரு நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தான். அவனுக்கு ஆயிரம் கனவுகள் இருந்தன. ஆயிரம் தேவைகள் இருந்தன. அந்த கனவுகளை எப்படி நனவாக்குவது என்று அறியாமல் தன் வருங்காலத்தை எப்படி உருவாக்குவது என்று சிந்தித்து கொண்டிருந்தான். சிறுவயது முதல் வேதத்தை வாசித்து வந்திருந்தான்.

.

அவனிடம் இரண்டு பேர் வந்தார்கள். ஒருவன் அவனிடம் 'என்னோடு வா. உனக்கு நிறைய பணம் தருகிறேன், நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள், உனக்கு பேர் புகழ் உண்டாக செய்கிறேன்' என்று ஆசை வார்த்தைகளை கூறினான். அதை கேட்டபோது அவனுக்கு ஆசையாக இருந்தது. அவனோடு போய் விடலாம் என்று. தான் விரும்பும் அத்தனையும் கிடைப்பது போல இருந்தது. தன் கனவுகள் நிறைவேறும் நாட்கள் அருகில் இருப்பது போல தோன்றிற்று.

.

மற்றவரோ அவனிடம் பொறுமையாக, ' என்னோடு வந்தால் உனக்கு பொன்னும் பொருளும் ஒருவேளை இருக்காது. நீ நிறைய தியாகம் செய்ய வேண்டி வரும். என் நாமத்தினிமித்தம் வேதனைகளையும் பாடுகளையும் அனுபவிக்க வேண்டி வரும். ஆனால் உன்னுடைய தியாகத்திற்கும் வேதனைகளுக்கும் ஏற்ற பலன் என்னிடம் உண்டு. என்னோடு வருவாயா?' என்றுக் கேட்டார்.

.

அந்த வாலிபன் இரண்டு பேரின் கண்களையும் பார்த்தான். முதலாவது நபரின் கண்களில் குரூரம் தெரிந்தது. மற்றவரின் கண்களில் கனிவும் பரிவும் தெரிந்தன. இரண்டாவது நபரையே அவன் தெரிந்துக் கொண்டு அவருடன் சென்றான்.

.

அவன் வாழ்வில் அவரின் மூலம் நிறைய கற்று கொண்டான். அவரையே தன் வாழ்வில் தலைவராக கொண்டு செயல்பட்டான். அவன் வாழ்வு மலர்ந்தது. அவர் சொன்னார், 'நீ என்னோடு பாடுபட்டால் நீ என்னோடு கூட ஆளுகையும் செய்வாய்' என்று.

.

ஒரு வேளை அவன் மற்றவனை தெரிந்து கொண்டிருந்தால், இந்த உலகத்தில் அவனுக்கு பெயர் புகழ் கிடைத்திருக்கும், ஏராளமான நண்பர்கள் கிடைத்திருப்பார்கள். ஆனால் அவனை வழிவிலக செய்திருப்பார்கள். நித்திய நரகத்திற்கு ஏதுவாக அவன் வாழ்ந்திருப்பான்.

.

இந்த உலகத்தில் காண்கிற உலக புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்கள் என்று பெயர் பெற்றவர்களின் முடிவு எப்படி இருந்தது, இருக்கிறது என்பதை நாம் அறிந்திருக்கிறோம். எவ்வளவோ பணம் உண்டு, புகழ் உண்டு, கேட்டதெல்லாம் உடனுக்குடன் கிடைத்ததுண்டு. எல்லாம் இருந்தும் அவர்கள் வாழ்வில் எல்லாமே வெறுமைதான். எல்லாம் இருந்தும் கிறிஸ்து அவர்கள் வாழ்வில் இல்லாததால் அவர்கள் வேண்டுகிற சமாதானம் இல்லை. அதனால்தான் தற்கொலை செய்து சாகிறார்கள். உதாரணத்திற்கு ராபின் வில்லியம்ஸ். அவருக்கு புகழ் இருந்தது. பணம் இருந்தது. எல்லாரையும் சிரிக்க வைத்தார். ஆனால் அவர் அப்படிப்பட்ட தவறான தற்கொலை முடிவை எடுப்பார் என்று யாருமே சிந்தித்ததில்லை.அந்த மனிதர் கிறிஸ்துவை அறிந்திருந்தாரானால் எத்தனை நலமாயிருந்திருக்கும்!

.

ஆனால் கர்த்தரை பின்பற்றுகிறவர்களுக்கோ, பொன்னும் பொருளும் இல்லையென்றாலும், கர்த்தர் கொடுக்கிற சமாதானம் அவர்கள் இருதயத்தில் ஆளுகிறபடியால் அவர்கள் இப்படிப்பட்ட தவறான முடிவிற்கு ஒருபோதும் வர மாட்டார்கள். கர்த்தர் அவர்களோடு இருப்பதால் இந்த உலகத்தின் காரியங்களில் அவர்களுக்கு வெற்றி உண்டு என்பதை அவர்கள் அறிந்திருப்பதால் அவர்களுக்கு நித்திய நம்பிக்கை உண்டு.

.

இந்த நாளில் நாம் யாரை தெரிந்துக் கொள்வோம்? பணம், புகழ், நண்பர்கள் என்று உலகத்தின் மேன்மைகளை காட்டி நம்மை தன் பக்கம் இழுக்கும் சாத்தானையா?

.

தம் தியாகத்தினால், தம் சொந்த இரத்தத்தையே சிந்தி நம்மை கிரயமாக கொண்ட கிறிஸ்துவையா? ஒருவேளை கிறிஸ்தவ வாழ்க்கை ரோஜாப்பூ படுக்கை அல்ல என்றாலும், கிறிஸ்து நம்மோடு இருப்பதால் இவ்வுலக பாடுகள் நம்மை எதுவும் செய்ய முடியாது என்பதையும், உலகம் தரக்கூடாத சமாதானத்தினால் அவர் நம்மை நிரப்பி நடத்துகிறார் என்பதையும் மறுக்க முடியாதல்லவா? பாடுகள் வேதனைகள் மத்தியில் அவற்றிலிருந்து நமக்கு விடுதலை தரும் தேவன் நம் பக்கம் உண்டு. நம் கண்ணீரை காண்கிற தேவன் ஒருவர் உண்டு, வேதனை அறிகிறவர், கதறலை கேட்கிறவர் உண்டு. அதற்கு பதிலை கொடுத்து ஆற்றி தேற்றுகிறவர் உண்டு என்பதை நாம் மறுக்க முடியாது.

.

கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள். ஆமென் அல்லேலூயா!

.

கர்த்தரையே சேவிப்பது

ஆகாததென்று கண்டால்

யாரை நீ சேவிப்பாயென்பதை

இன்றே தீர்மானம் செய்வாய்

.

நானும் என் வீட்டாருமோவென்றால்

கர்த்தரையே சேவிப்போம்

நீயும் சேவிப்பாயா நீயும் சேவிப்பாயா?

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே இந்த உலகத்தின் கவர்ச்சிகளும், இன்பங்களும் ஒவ்வொருவரையும் தன் பக்கம் இழுத்தாலும் அவற்றிற்கு கீழ்ப்படிந்து போய் விடாமல், எங்களை அன்புடன் தம் பக்கம் இழுக்கிற கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிகிற இருதயத்தை ஒவ்வொருவருக்கும் தாரும். உலக இன்பங்கள் நிரந்தரமானதல்ல என்பதை உணர்ந்து, நித்திய வாழ்வில் பரலோகத்தின் சந்தோஷத்தை அனுபவிக்கிறவர்களாக கர்த்தரையே சேவிக்க எங்களுக்கு கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...


...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.

ஞாயிறு, 25 ஜனவரி, 2015

இந்த வார வாக்குத்தத்தம் & வேதாகம கேள்விகள் - : 25 ஜனவரி 2015

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
இந்த வார வாக்குத்தத்தம்

  இந்த வாக்குதத்தம் தெரியவில்லை என்றால் 'Display Images'-

யை Click - கிளிக் செய்யவும்.

 

 

வேதாகம கேள்வி-பதில் போட்டி

I. இந்த வார கேள்விகள்:  25 ஜனவரி 2015.

.
1) பிறக்கும்போது கையில் சிவப்பு நூல் கட்டப்பட்ட பிள்ளை எது?
.
2) பொன்னினால் கன்றுக்குட்டியைச் செய்தவர்கள் யார்?
.
3) பொன் கடுக்கன்களை கொள்ளையிட்டவர்கள் யார்?
.
4) பொன்னினால் சுண்டெலிகள் செய்தவர்கள் யார்?
.
5) பொன்னினால் ஏபோத் செய்தவன் யார்?
.
உங்களுடைய பதிலை வேத வசன ஆதாரத்துடன் வருகிற வெள்ளிக்கிழமைகுள்


அனுப்பிவைக்கவும்.
.
குறிப்பு : சரியான பதிலை எழுதுபவர்கள் தயவுசெய்து தங்களுடைய பெயர்களை


சரியாக எழுதவும்.கூடவே எழுதுபவர் சகோதரனா இல்லை சகோதரியா என்று


எழுதவும். (Mr. - Mrs. - Miss. - or  Sis. - Bro.)
.
இதை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கவும்.
.

.
II. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்'
=======================================

.
1) படத்தை நன்கு கவனியுங்கள். - இந்த சம்பவம் என்ன?
.
2) பரிசுத்த வேதாகமத்தின் எந்த புத்தகத்தில்?
.
3) எந்த அதிகாரத்தில்?
.
4) எந்த வசனம் எனக் கூறுங்கள்.........
.
=================================================
இந்த சம்பவம் என்ன?
.


=================================================
கடந்த  வார கேள்வி பதில்கள்: 18 ஜனவரி 2015.
.
1. கப்பல்களைச் செய்த ஒரு ராஜா யார்?
.
சரியான பதில் : யோசபாத் - 1இராஜாக்கள் 22:48
.
2. கப்பலில் தூங்கிக்கொண்டிருந்த இருவர் யார்? யார்?
.
சரியான பதில் : யோனா - யோனா 1:5,  இயேசு - மாற்கு 4:38
.
3. யாருடைய சஞ்சலம் கடற்கரை மணலைப் பார்க்கிலும்

   பாரமாயிருக்கும்?
.
சரியான பதில் : யோபு - யோபு 6:2,3
.
4. வெண்கல பர்வதங்களை கண்டவர் யார்?
.
சரியான பதில் : சகரியா - சகரியா 6:1
.
5. நெற்றி வச்சிரக்கல்லைப் போலானவன் யார்?
.
சரியான பதில் : எசேக்கியல் -  எசேக்கியல் 3:9

.
===========================================
.
சரியான பதிலை எழுதியவர்கள் : வாழ்த்துக்கள் கர்த்தர் தாமே

உங்களைஆசீர்வதிப்பாராக, தொடர்ந்து பங்கு பெறுங்கள்.

.
.
1) Sis.Chandralekha Martin..2) Sis. Vijayarani Manonmani..
.
3) Sis.Sobitha Lawrence...4) Bro. Victor Jayakaran....
.
5) Bro.S.Rajesh…6) Bro.R.Silas...7) Sis.R.Sheela..
.
8) Sis.Angelin Gladys…9) சகோதரி சரஸ்வதி..
.
10) Bro.L.Samuel George.11) Mrs.Sudha Kirubanandhan.
.
12) Miss.G.Stella….13) Bro.Simson Rakesh..
.
14) Mrs.Merlin Jayaraj...15) Bro Jebaveerasingh J
.
16) சகோ. தமிழ்மணி...17).Bro.Ramakrishnan R
.
18) Miss.J.Sharon Rachel Mahima..19) Sis. Monica..
.
20) Mrs. Hannah Ezekiel..21) Sis.Latha Priyanka
.
22) Mrs.Christy Mohan..23) Bro. Prabhu Johnson
.
24) Mrs. Santhi Justin..25) Bro.K.Elayaraja..
.
26) Mrs.Kala Simon...27) Mrs. Deepa R.Theodore
.
28) Sis. Anita Priyakumar..29) Mrs.Jeyaseeli Jawahardoss

.

2. 'வேதாகம படத்தை பாருங்கள் - பதிலை கூறுங்கள்' சரியான விடை :
=======================================

.
 பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள் அவள்

நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி

அதைக் கொண்டுவரும்படி செய்தாள். அதை திறந்தபோது பிள்ளையை

கண்டாள். பிள்ளை அழுதது.- யாத்திராகமம் 2:5,6.
.
.

வேதாகம படப் போட்டிக்கு மட்டும் சரியான பதிலை எழுதியவர்கள் :
.

.
.

1) Sis.Chandralekha Martin..2) Sis.Vijayarani Manonmani...
.
3) Bro.K.Solomon David..4) Sis.Sobitha Lawrence..
.
5) Bro.Victor Jayakaran..6) Bro.S.Rajesh..
.
7) Bro.R.Silas.8)Sis.R.Sheela..9) Sis.R.Devika
.
10) Sis.Angelin Gladys.11) சகோதரி சரஸ்வதி..
.
12) Sis.Jothi Suba..13) Bro.L.Samuel George.
.
14) Mrs.Sudha Kirubanandhan..15) Miss.G.Stella
.
16) Mrs.Merlin Jayaraj..17) Bro Jebaveerasingh J..
.
17) சகோ. தமிழ்மணி.....18) Ms.Deborah Vasanthi..
.
19) Bro.Dr.I.Dinaharan...20) Bro.Ramakrishnan R..
.
21) Miss.J.Sharon Rachel Mahima..22) Mrs. Hannah Ezekiel
.
23) Sis.Vasanthi..24) Miss.V.Rajeswari@Deborah
.
25) Mrs.Jenifer Jayanraj..26) Sis.Latha Priyanka
.
27) Mrs.Christy Mohan..28) Sis.Florence John..
.
29) Bro.Prabhu Johnson....30) Mrs. Santhi Justin
.
31) Bro. K.Naveen Prabhakaran..32) Bro.K.Elayaraja..
.
33) Mrs. S.Merlin Jayakumar..34) Mrs.Kala Simon..
.
35) Mrs. Deepa R.Theodore..36) Sis. Anita Priyakumar..
.
37) Mrs.Jeyaseeli Jawahardoss..38) Mrs.Kiruba John..
.
========================================================

அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.