Friends Tamil Chat

செவ்வாய், 13 மே, 2014

13th May 2014 - நீதிக்குரிய ஆயுதங்கள்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மே மாதம் 13-ம் தேதி - செவ்வாய்க்கிழமை
நீதிக்குரிய ஆயுதங்கள்
....

துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால் மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பை செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது. - (பிரசங்கி 8:11).

.

ஒருவர் தான் எப்போதும் வாங்கும் புத்தக கடையில் புதிதாக வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்திற்கு ஆர்டர் பண்ணியிருந்தார். அதை கண்ட புத்தக கடைக்காரர், அவர் அதற்கு முன் வாங்கியிருந்த புத்தகத்திற்கு இன்னும் பணத்தை செலுத்தவில்லை என்று கண்டு, அவருக்கு ' பாக்கி பணத்தை கொடுத்தப்பின் அடுத்த புத்தகம் அனுப்பப்படும் ' என்று பதில் அனுப்பினார். அதற்கு அந்த மனிதர், ' நான் அனுப்பிய ஆர்டரை கேன்சல் செய்து விடுங்கள், அத்தனை நாள் வரை நான் காத்திருக்க முடியாது ' என்று பதில் அனுப்பினார்.

.

நாம் இப்போது வாழ்கிற நாட்களில் மக்கள் தாங்கள் வாங்கிய பொருட்களுக்கு உடனே பணத்தை செலுத்த விரும்புவதில்லை. அதனால்தான் கிரடிட் கார்ட்கள் இப்போது மிகவும் அதிகமாக உபபோகப்படுத்தப்பட்டு வருகின்றன.

.

கார்கள் வாங்குவோர்க்கு செய்திதாளில் வினம்பரம், ' நீங்கள் இப்போது பணத்தை செலுத்த தேவையில்லை, ஆறு மாதம் கழித்து முதல் தவணையை செலுத்தினால் போதும் ' என்று புத்தம் புது காரை எடுத்து செல்ல அனுமதிக்கின்றனர். கம்பெனிகளுக்கு தெரியும், பணத்தை கொஞ்ச நாட்கள் கழித்து செலுத்துவது மக்களுக்கு மிகவும் பிடித்ததாக இருப்பதால் இந்த மாதிரி சலுகைகளை காட்டி தங்கள் பொருட்களை வாங்க வைக்கின்றனர்.

.

சாத்தானும் இந்த மாதிரியை தான் பின்பற்றுகிறான். நாம் செய்த பாவத்திற்கு ஏற்ற தண்டனை உடனே கிடைக்காமல் போவதால், இன்னும் நாட்கள் இருக்கிறது, தண்டனை வரும்போது பார்த்து கொள்ளலாம் என்று மனிதனை துணிகரமாக பாவம் செய்ய வைக்கிறான். ஒருவன் பாவம் செய்யும்போது உடனே தண்டனை கிடைத்;தால் எந்த மனிதனும் பாவம் செய்வதற்கு முன் ஒரு தரம் யோசிப்பான். ஆனால் உடனே தண்டனை வராததால் அவன் தன்னை பாவத்திற்கு விற்று போடுகிறான். ' துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால் மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பை செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது ' என்று சாலொமோன் ஞானி கூறுகிறான்.

.

ஆனால் நாம் வாங்கிய பொருட்களுக்கான பட்டியலோ, பில்லோ நாளடைவில் நமக்கு வந்து நாம் ஒரு நாள் அதற்கான பணத்தை கட்ட வேண்டி இருப்பதுப்போல நாம் செய்த பாவத்திற்கு தக்க தண்டனையை நாம் ஒருநாள் அனுபவிக்க வேண்டி வரும். ' பாவி நூறுதரம் பொல்லாப்பை செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுககு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை: அவன் தேவனுக்கு முன்பாகப் பயப்படாதிருக்கிறபடியால், நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை ' - (பிரசங்கி 8:12-13).

.

' பாவத்தின் சம்பளம் மரணம்: தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய காத்தாராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்திய ஜீவன் ' - (ரோமர் 6:23). பாவத்தின் விளைவு எப்போதும் மரணமும், துயரமும் நஷ்டமுமே. அந்த பயங்கர பாவத்தை துணிகரமாக செய்யும்போது, அதற்கான விளைவுகளை எதிர்பார்த்தே ஒருவன் செய்கிறபடியால், அதற்கேற்ற தண்டனையை அவன் பெறத்தான் வேண்டும். ஒரு மனிதன் மற்றொரு மனிதனை கொலை செய்தான் என்றால், அவன் அதற்கேற்ற தண்டனையை பெறுவான் என்று அவன் அறிந்தே துணிகரமாக அந்த பாவத்தை செய்கிறான்.

.

இப்படி ஒவ்வொரு பாவத்தின் விளைவுகளும் மரணத்தையே விளைவிக்கும். ஆனால் தேவனுடைய கிருபையால், நாம் நம் பாவங்களை அறிக்கையிட்டு, தேவனிடம் மன்னிப்பு பெற்றால், இரண்டாம் மரணமாகிய நரக அக்கினிக்கு தப்புவிக்கப்படுவோம்.

.

' ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாக பாவத்திற்கு ஒப்புகொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள் ' - (ரோமர் 6:12-13). அப்படி நீங்கள் செய்யும்போது, ' இப்போது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானாதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்கு கிடைக்கும் பலன், முடிவோ நித்திய ஜீவன் ' - (ரோமர் 6:22). ஆமென் அல்லேலூயா!

.

அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய்

அற்புத நாதா உம் கரத்தில்

அனைத்தும் உமக்கே சொந்தம் என்று

அன்பரே என்னையே தத்தம் செய்தேன்

அனைத்தும் கிறிஸ்துவுக்கே எந்தன்

அனைத்தும் அர்ப்பணமே

என் முழு தன்மைகள் ஆவல்களும்

அனைத்தும் கிறிஸ்துவுக்கே

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். எங்கள் சரீரங்களையும், எங்கள் அவயவங்கள் அனைத்தையும் உமக்கு சர்வாங்க தகனபலியாக ஒப்புக்கொடுக்கிறோம். இந்த சரீரததில் பாவம் ஆளாமல், எங்கள் அவயவங்கள் ஒவ்வொன்றையும் நீதிக்குரிய ஆயுதங்களாக உமக்கே ஒப்புக்கொடுக்கிறோம். நீரே எங்களையும் எங்கள் சரீரத்தின் அவயவங்களையும் பரிசுத்தப்படுத்தி, ஆளுகை செய்வீராக. அதன் பலனாகிய பரிசுத்தமாக்குதலை பயத்தோடும் பக்தியோடும் நாங்கள் பெற்று, உமக்கென்று வாழ கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.