Friends Tamil Chat

புதன், 26 மார்ச், 2014

26th March 2014 - தேவனின் தெரிந்தெடுப்பு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மார்ச் மாதம் 26-ம் தேதி - புதன் கிழமை
தேவனின் தெரிந்தெடுப்பு
...

வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. - (சங்கீதம் 118:22-23).

.

முற்காலத்தில் கல்வி கற்றோரின் சதவிகிதம் ஏறக்குறைய வளர்ந்த நாடுகள் உட்பட எல்லா நாடுகளிலும் பின்தங்கியிருந்தது. இருப்பினும் தங்கள் குழந்தைகளை எப்படியாகிலும் கல்வி கற்க வைக்க வேண்டுமென்று பெற்றோர் விரும்பினர். இதறகாக அவர்கள் அதிக பிரயாசமெடுத்தனர். இந்த சூழ்நிலையில் ஒரு விவசாயி இங்கிலாந்தின் நாட்டுப்புறத்தில் தனது மகனை தொடக்கப்பள்ளி ஒன்றில் மிகுந்த சிரமத்திற்கிடையில் படிக்க வைத்தார். அப்பையன் ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சியடைந்ததும் உயர்நிலை பள்ளிக்கு செல்ல நகருக்கு செல்ல வேண்டியதாருந்தது. அது ஐந்து மைல்களுக்கும் அதிகமாக இருந்ததால் அந்த தகப்பன் தன் மகனை தோளின் மீது சுமந்தே சென்றார்.

.

பள்ளிக்கு சென்றதும் தலைமையாசிரியர் அவனுக்கு ஒரு நுழைவுத்தேர்வு வைத்தார். அதில் அவன் தேர்ச்சியடையாததால் அவனை தன் பள்ளியில் சேர்த்துக் கொள்ள முடியாதென்று புறக்கணித்தார். ஆனால் தகப்பன், தலைமையாசிரியரை நோக்கி, அவனை இதுவரை கஷ்டப்பட்டு படிக்க வைத்ததையும், அன்று அவனை தூக்கி சுமந்தே கொண்டு வந்ததையும அவரிடம் கூறி அவனை பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு கெஞ்சி மன்றாடினார். அவர் மீது இரக்கம் கொண்டு தலைமையாசிரியர் அந்த பையனிடம் ஒரு பேப்பரைக் கொடுத்து ஆஸ்திரேலிய நாட்டின் வரைப்படத்தை வரைய சொன்னார். அச்சிறுவன் எவ்வித அடித்தலுமின்றி அப்படியே வரைந்து கொடுத்தான். அதைப் பார்த்தவுடன் அவனுக்கு பள்ளியில் இடம் கொடுத்தார். தகப்பனார் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்.

.

அந்த சிறுவன் யார் தெரியுமா? அவர்தான் இங்கிலாந்து ஜனாதிபதியான லார்ட் வின்சென்ட் சர்ச்சில் ஆவார். சர்ச்சில் இரண்டாம் உலக மகா யுத்தத்தில் தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்பட்டார். வல்லரசு நாட்டிற்கு தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டவரின் பின்னணி இப்படியாக இருந்தது.

.

ஆம் நம் தேவனின் தெரிந்தெடுப்பை மனித மூளையால் கணிக்க முடியாது. அவர் ஞானிகளை வெட்க்கப்படுத்தும்படி பைத்தியங்களை தெரிந்து கொள்பவர். பலவான்களை வெட்கப்படுத்தும்படி பலவீனரை தெரிந்து கொள்பவர். உள்ளவைகளை அவமாக்கும்படி இல்லாதவைகளையும் அற்பமானவைகளையும் தெரிந்து கொள்பவர். ஆம், ஆடுகளின் பின்னால் அலைந்த தாவீதை இராஜாவாய் அபிஷேகம் பண்ணினவர். தாய் தகப்பனற்று எதிர்கால நம்பிக்கையற்றிருந்த எஸ்தரை இராஜாத்தியாய் உயர்த்தினவர் நம் தேவன்.

.

இவன் எல்லாம் தெரிந்தவன், என்ற தகுதியால் தேவன் ஒருவரையும் தெரிந்தெடுப்பதில்லை. அவரது தெரிந்தெடுப்பு வித்தியாசமானது, விசேஷமானது!

.

பிரியமானவர்களே, ஐயோ நான் ஒன்றுக்கும் தகுதியில்லையே, வீட்டில் யாருடைய நம்பிக்கைக்கும் பாத்திரன் இல்லையே என்று நினைக்கிறோமா? பூமியின் கடையாந்திரத்தில் ஒரு புழுவைப் போல எல்லாராலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்த என்னை தேவன் தெரிந்துக் கொள்ள முடியுமானால், உங்களையும் தெரிந்துக் கொள்வது நிச்சயமல்லவா?

.

தேவனின் தெரிந்தெடுப்பு இல்லாதவர்களையும், தள்ளப்பட்டவர்களையும், யாருடைய கவனமும் ஈர்க்காத, ஈர்க்கமுடியாதவர்களையும் சந்திக்கிறது. அவர்களை தகுதிப்படுத்தி கர்த்தர் தமக்கென்று உபயோகப்படுத்துகிறார். எத்தனையோப் பேர் சொல்ல முடியும், நான் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லை என்று நினைத்திருந்தேன், தேவன் என்னை தெரிந்தெடுத்து பயன்படுத்துகிறார் என்று.

.

'ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்' (2தீமோத்தேயு 2:21) என்ற வசனத்தின்படி கர்த்தரால் சுத்திகரிக்கப்பட்டு பரிசுத்தமாக்கப்பட்ட எவரும், எஜமானுக்கு உபயோகமான பாத்திரமாக முடியும். ஆகாது என்று மற்றவர்களால் தள்ளப்பட்டவர்களே அவருக்கு உபயோகமான பாத்திரமாக மாற்றப்பட்டு, அவருக்காக எழும்பி பிரகாசிக்கிறார்கள். அப்படிப்பட்ட பாத்திரமாக தேவன் நம்மையும் எடுத்து உபயோகிப்பாராக. ஆமென் அல்லேலூயா!

.

ஆடுகள் பின் அலைந்த அந்த

தாவீதை அழைத்தது நான்

தாவீதின் வேரில் கிளையாய் உதித்தவர்

தலையை நான் உயர்த்தவில்லையா

.

என் சமுகம் உன் முன் செல்லும்

ஒன்றுக்கும் கலங்காதே

உன்னை ஒருபோதும் கைவிட மாட்டேன்

அழைத்தவர் நான் தானே

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எல்லாராலும் தள்ளப்பட்டு, கைவிடப்பட்ட பாத்திரங்களை தேவன் தமக்காக தெரிந்துக் கொள்வதற்காக ஸ்தோத்திரம். எங்களை பரிசுத்தமாய் காத்துக் கொண்டு, தேவன் அழைத்த அழைப்பின் உறுதியாய் நிற்க தேவன் எங்களுக்கு கிருபை செய்வீராக. எங்களை அழைத்தவர் உண்மையுள்ளவராக இருப்பதுப்போல நாங்களும் உண்மையுள்ளவர்களாக இருக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.