Friends Tamil Chat

செவ்வாய், 11 மார்ச், 2014

11th March 2014 - கனி கொடுக்க வேண்டும்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மார்ச் மாதம் 11-ம் தேதி - செவ்வாய்க்கிழமை
கனி கொடுக்க வேண்டும்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார். - லூக்கா 13:8,9.

.

ஒரு வாலிபன் தன் வாழ்வில் விரக்தியடைந்தவனாக தன் வேலையை, தன் உறவுகளை, தன் ஆவிக்குரிய வாழ்க்கையை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, தன் வாழ்வையே முடித்துக் கொள்ள எண்ணி காட்டுப் பக்கம் சென்றான். தன் வாழ்வை முடிப்பதற்கு முன் கர்த்தரிடம் ஒரு வார்த்தை பேசிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன், 'ஆண்டவரே, நான் ஏன் என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு ஒரு காரணத்தை உம்மால் கூற முடியுமா' என்று ஆண்டவரிடம் கேட்டான்.

.

அப்போது ஆண்டவர், 'உன்னைச் சுற்றி இருக்கிற இந்தக்காட்டில் அந்த மூங்கில் மரத்தையும் அந்த பரணிச் செடியையும் (fern) பார்'. என்றார். 'ஆம் ஆண்டவரே, பார்ககிறேன்' என்று அந்த வாலிபன் கூறினான். ஷநான் இந்த மரங்களை இந்தக் காட்டில் விதைளை இட்டபோது இவைகளை நன்கு கவனித்துக் கொண்டேன். இவற்றிற்கு நல்ல தண்ணீர் கொடுத்தேன், நல்ல சூரிய வெளிச்சத்தைக் கொடுத்தேன். இரண்டையும் ஒரே மாதிரியாக வளர்த்தேன். பரணிச்செடி சீக்கிரமாய் பூமியிலிருந்து முளைத்து எழும்பிற்று. இந்த நிலம் முழுவதையும் தன் பச்சை இலைகளினால் அழகாக நிரப்பிற்று. ஆனால் இந்த மூங்கில் விதையோ ஒன்றும் வெளியே கொண்டு வரவில்லை. ஆனால் நான் அந்த மூங்கிலை போனால் போகட்டும் என்று விட்டுவிடவில்லை.

.

இரண்டாவது வருடமும் பரணிச்செடி அழகாக வளர்ந்தோங்கியது, ஆனால் மூங்கில் விதையிலிருந்து ஒன்றும் வரவில்லை. ஆனால் அதை அப்படியே நான் விட்டுவிடவில்லை.

.

அதே மாதிரி, மூன்றாம் நான்காம் வருடத்திலும் அந்த மூங்கில் விதையிலிருந்து ஒன்றும் வெளிவரவில்லை. ஆனால் அதை நான் போகட்டும் என்று விட்டுவிடவில்லை.

.

ஐந்தாவது வருடத்தில் ஒரு சிறு முளை அந்த விதையிலிருந்து முளைத்தெழும்பியது. பரணிச் செடியோடு வைத்துப்பார்க்கும்போது இந்த மூங்கில் ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. ஆனால் ஆறே மாதத்தில் இ;ந்த மூங்கில் மரம் 100 அடி உயரத்திற்கு உயரமாக வளர்ந்து பெரிதாக மாறியது. இந்த ஐந்து வருடங்களில், இந்த மூங்கில் மரம் கீழே வேர் விட்டு, மேலே உயர்ந்து வளர்வதற்கு பலத்ததை கொடுத்தது. அதுப் போல மகனே, நீ கஷ்டப்பட்ட வருடங்களில் உண்மையாக நீ வேர் விட்டுக் கொண்டிருந்தாய். இந்த மூங்கில் மரத்தை நான் எப்படி கைவிட்டுவிடவில்லையோ அதுப் போல உன்னையும் நான் விட்டுவிடவில்லை. உன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்த்து அதிருப்தி அடையாதே. பரணிச்செடியை நான் வைத்ததற்கு ஒரு நோக்கம்; உண்டெனறால், மூங்கிலுக்கு வேறு ஒரு நோக்கம் உண்டு. ஆனால் இரண்டுமே இந்த காட்டை அழகுப்படுத்துகிறது. அதுப் போல உன்னுடைய நேரமும் வரும், உன் நிலைமையும் மேலே உயரும் அது வரை பொறுத்திரு, என்றார்.

.

நம் ஆண்டவர் நம்மை கனி கொடுக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார். நாமோ கனிக் கொடாதிருக்கும்போது அவர் நம்மை விட்டு விடுவதில்லை. இந்த வருடமும் இருக்கட்டும் என்று சுற்றிலும் கொத்தி, எருப் போட்டு நம்மை வளர்க்கிறார். நம்மை ஒருபோதும் சுத்தபடுத்தி, எருப் போடுவதை அவர் நிறுத்துவதே இல்லை. அடுத்த வருடமாவது கனிக் கொடுக்க மாட்டோமாவென்று அவர் தொடர்ந்து காத்திருக்கிறார்.

.

கர்த்தரே நம்மை நிறுத்தாமல் தொடர்ந்து சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கும்போது நாம் ஏன் விரக்தியடைய வேண்டும்? நல்ல நாட்கள் நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கின்றன. கெட்ட நாட்கள் நமக்கு படிப்பினையைக் கொடுக்கின்றன. இரண்டுமே வாழ்வில் முக்கியம். எவ்வளவு கஷ்டப்படுகிறீர்களோ அந்த அளவு நீங்கள் பலம் மிகுந்தவர்களாக மாறுகிறீர்கள். எந்த அளவு நீங்கள் துன்பங்களை சகிக்கிறீர்களோ, அந்த அளவு சகிப்புத் தன்மையும், பொறுமையும் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். கீழே வேர் பற்றி மேலே கனிக் கொடுப்பீர்கள். ஆகையால் உங்கள் இருதயத்தை தளர விடாதீர்கள். கர்த்தர் நம்மை விட்டுவிடவில்லை. ஆகையால் தைரியம் கொண்டு கர்த்தருக்காக வாழுங்கள். கனி கொடுங்கள். இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார்.

.

யாக்கோபே நீ வேரூன்றுவாய்

பூத்துக் குலுங்கிடுவாய்

காய்த்து கனி தருவாய்

பூமியெல்லாம் நிரப்பிடுவாய்

ஜெபம்
எங்களை நேசிக்கிற நல்ல தகப்பனே, எங்கள் வாழ்வில் வரும் துன்பங்களைக கண்ட நாங்கள் சோர்ந்துப் போகாமல், நாங்கள் எங்கள் துன்பங்களில் வேரூன்றி மேலே கனிக் கொடுக்கக் கிருபைச் செய்யும். நீர், நாங்கள் எப்போது கனிதருவோம் என்று எங்களைச் சுத்தம் செய்து காத்திருப்பதற்காக ஸ்தோத்திரம். எங்கள் ஒவ்வொருவரையும் கனிக் கொடுக்கிறவர்களாக மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு

pray1another

கர்த்தருக்குள் பிரியமானவர்களே, மலேசியாவிலிருந்து பெய்ஜிங் சென்ற விமானம், கடலில் விழுந்து அனைவரும் மரிக்கவில்லை என்றும், அது கடலிலேயே விழவில்லை என்றும் செய்திகள் வந்துக் கொண்டிருக்கிறது. அது வானிலே திடீரென்று மாயமாய் மறைந்து போயிற்று என்றும், அதை தேடிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. நாம் அந்த விமானத்தில் பயணம் செய்கிறவாகள் பத்திரமாய் தரை இறங்கும்படியாகவும், தங்கள் குடும்பங்களோடும் இணையும்படியாகவும் ஜெபிப்போம்.
.
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த வேளையிலும், மலேசிய விமானத்தில் பயணம் செய்த அந்த 239 பேருக்காகவும் உம்மிடம் ஜெபிக்கிறோம் தகப்பனே, அவர்கள் என்ன ஆனார்கள் என்று இதுவரை தெரியாத நிலையில், எல்லாவற்றையும் அறிந்த உம்மிடம் ஜெபிக்கிறோம். அவர்களை பத்திரமாய் திரும்பி வரவும், தங்கள் குடும்பங்களோடு இணையவும் கிருபை செய்யும். இதற்காக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறோம். எப்படியாவது அவர்களது நிலைமையை அறிந்து, அவர்களை கண்டுபிடிக்க கிருபை செய்யும்.
.
தன் பெயரை அறிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட சகோதரியின் மகன் கடந்த வருடம் திருமணம் செய்து, மாமியார் பிரச்சனை பண்ணுவதால், அவர்கள் திருமணம் பிரச்சனைக்குள்ளாக கடந்து செல்வதால், தேவன் தாமே அந்த மாமியாரோடு பேசி, தம்பதிகளின் வாழ்வில் குறுக்கிடாமல், அவர்களை ஒன்றாக வாழவைக்கும்படியாக ஜெபிக்கிறோம். சகோதரியின் மகள் இந்த மாதத்தில் புதிய வேலையில் சேர இருப்பதால் தேவன் தாமே நல்ல ஞானத்தை கொடுத்து, தன் வேலையில் உண்மையாக இருக்க கிருபை செய்யும். ஏற்ற துணையை கொடுத்து ஆசீர்வதிக்கவும் ஜெபிக்கிறோம்.
.
திருவனந்தபுரத்தில் இருக்கும் சகோதரி இலக்கியா தங்கியிருக்கும் ஹாஸ்டலில் வார்டன் தேவையற்ற பிரச்சனை பண்ணுவதால், மிகவும் சோர்ந்து போயிருக்கும் சகோதரிக்காகவும், மற்ற தோழிகளுக்காகவும் ஜெபிக்கிறோம். அவர்கள் வேறு இடத்திற்கு மாறவும் வழி இல்லாதபடி இருப்பதால், தேவன் தாமே இரங்கி, வேறு நல்ல வார்டன் கிடைக்கவும், அல்லது இருக்கிற வார்டன் சரியானபடி மாறவும் கிருபை செய்யும்படி ஜெபிக்கிறோம்.
.
சகோதரி கவிதா மெர்சி அவர்களின் ஆறுவயது மகன் அருளுக்கு சிறுநீர் போகும் டியூபில் அடைப்பு இருந்து, அடுத்த மாதம் ஆபரேஷன் செய்வதாக இருப்பதால், தேவன் தாமே அந்த ஆபரேஷனில் உம்முடைய கரம் இருந்து, செய்யப்போகிற வைத்தியர்கள் சரியானபடி செய்ய கிருபை செய்வீராக. அந்த ஆபரேஷன் கழிந்து எந்த பிரச்சனையும் இல்லாமல், மகன் வாழ கிருபை செய்வீராக.
.
சகோதரி சரஸ்வதி அவர்களின் சகோதரி யுவராணிக்கு ஏற்ற துணையை தேவன் தாமே கொடுத்து, ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். கர்த்தருக்கு பயந்து இரட்சிக்கப்பட்ட மகனை துணைவனாக கொடுக்கும்படி ஜெபிக்கிறோம்.
.
சகோதரன் சாமி அவர்களின் சகோதரன் ஜெயப்பாலும், சகோதரி ரேவதியும் ஆலயத்திற்கு வரும்படி அவர்கள் இருதயங்களில் கிரியை செய்யும்படியாக ஜெபிக்கிறோம். சகோதரனுக்கு இருக்கிற எல்லா பண பிரச்சனைகளும் மாறும்படியாகவும், தேவன் தாமே தேவைகளை சந்திக்கும்படியாகவும் ஜெபிக்கிறோம். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.


...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.