Friends Tamil Chat

திங்கள், 10 மார்ச், 2014

10th March 2014 - ஆயத்தமா? ஆயத்தமா?

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மார்ச் மாதம் 10-ம் தேதி - திங்கட் கிழமை
ஆயத்தமா? ஆயத்தமா?
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். - (எபேசியர் 5:15-16).

.
கடந்த வெள்ளியன்று கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் சென்றுக் கொண்டிருந்த விமானம் கடலில் மூழ்கி அதிலிருந்த 239 பேரும் கடலில் மரித்துப் போனார்கள் என்ற செய்தி அனைவரையும் உலுக்கிற்று. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சிறந்த ஒரு விமானமாக கருதப்படுகிறது. இதுவரை இதுப் போன்ற பெரிய நிகழ்ச்சிகள் எதுவும் மலேசியன் ஏர்லைன்ஸில் ஏற்பட்டதில்லை.

.

உறவினர்கள், பெற்றோர், கணவன், மனைவி, பிள்ளைகள் என்று எல்லாருமே செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அன்று புறப்பட்டு சென்ற பயணிகள் அனைவருக்கும் இன்று தாங்கள் மரிக்க போகிறோம் என்று தெரியாது. தாங்கள் சேர வேண்டிய இடத்தை அடைந்து, தங்கள் வேலைகளை தொடருவோம் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் யாரும் எதிர்ப்பாராத வேளையில் ஒருவருமே பிழைக்க முடியாதபடி அப்படியே கடலில் மூழ்கி மரித்தார்கள். பைலட் சரியில்லை என்றும் சொல்ல முடியாது, அவர் தன்னால் இயன்றதை செய்து, எப்படியாவது கரை சேர்க்க வேண்டும் என்று தன் முழு முயற்சிகளையும் எடுத்திருப்பார்.

.

மரித்த இவர்கள் எல்லாரும் பாவிகள், கர்த்தரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அதனால் அவர்களுக்கு அப்படி ஏற்பட்டது என்று சொல்ல முடியுமா? இல்லை, இதே போன்ற சம்பவம் நடந்தபோது, கர்த்தர் அவர்களை குற்றப்படுத்தி சொல்லவில்லை, 'சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்' (லூக்கா 13:4-5). ஆம், கர்த்தர் யாரையும் குற்றப்படுத்தவில்லை.

.

பிரியமானவர்களே, வசனம் சொல்கிறது, 'ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்' என்று. நாம் காண்கிற இந்த நாட்கள் மிகவும் பொல்லாதவைகளாய் இருக்கிறதை நாம் காண்கிறோம். பத்து வருடங்களுக்கு முன் பயமின்றி தெருவில் நடந்த பெண்களுக்கு இப்போது யாருடைய துணையுமில்லாமல் நடக்க முடியாது என்ற நிலை ஆகியிருக்கிறது. திடீர் திடீர் என்று எதிர்பாராத மரணங்கள், கதிகலங்க வைக்கிறது. நாம் ஆயத்தமாய் இல்லை என்றால், நித்தியத்தை எங்கு கழிப்போம்?.

.

இந்த உலகத்தின் காரியங்களுக்காகவே நாம் நம் நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தால், மறுமைக்கான காரியங்களை எப்போது சிந்திக்க போகிறோம்? மறுமை வாழ்வுதான் நித்தியமானது. நித்தியம் என்றால், முடிவே இல்லாதது. அதைக் குறித்துதான் நாம், இந்த உலக வாழ்வை விட அதிகமாக சிந்திக்க வேண்டியதாகும்.

.

அந்த விமானத்தில் சென்றிருந்தவர்களுக்கு ஒரு தருணம் கொடுக்கப்பட்டு, 'உங்களுக்கு இப்படி ஆகப்போகிறது, உங்கள் நித்திய வாழ்வை எப்படி தெரிந்து கொள்ளப்போகிறீர்கள்' என்று கேட்டிருந்தால், ஒருவேளை அவர்கள் ஆயத்தமாகி இருந்திருக்க கூடும். மரணம் எதிர்பாராத நிலையில் அவர்களுக்கு வந்தபோது, ஆயத்தமாக இருந்தவர்கள் பாக்கியவான்கள், ஆயத்தாமாயிராதவர்கள் நித்தியத்தை எங்கு செலவழிப்பார்கள்?.

.

கர்த்தருடைய வருகையும் இப்படித்தான் எதிர்பாராத வேளையில் வர இருக்கிறது. திருடனைப் போல வருகிறேன் என்று சொன்னவர் சீக்கிரம் வர இருக்கிறார். திருடன் ஒரு நாளும் நான் வந்து திருடப்போகிறேன் என்று சொல்லி வந்து திருடுவதில்லை, நாம் நினையாத நேரம், வெளியே சென்றிருக்கும் நேரம், நாம் தூங்கும் நேரம் வந்து திருடிக் கொண்டு செல்வான். அதுப்போல நம் இயேசுகிறிஸ்துவும், யாரும் அறியாத நேரத்தில் வருவார். 'சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே' (1தெசலோனிக்கேயர்5:4) என்று பவுல் சொன்னதைப்போல ஆயத்தமாய் இருப்பவர்கள் பாக்கியவான்கள். ஆயத்தமாய் இராதவர்களோ????? கர்த்தர் எப்போது வந்தாலும் அவருக்கு எதிர்கொண்டு செல்லத்தக்கதாக ஆயத்தமாவோம். நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுவோம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார். மாரநாதா! அல்லேலூயா!

.

அவர் வருகை எதிர்ப்பார்க்கும் பக்தர்க்கு
அவர் வருகை மாபெரும் மகிழ்ச்சி
அவர் வருகை எதிர்பாராத மாந்தர்க்கு
அவர் வருகை மாபெரும் அதிர்ச்சி

.

என் இயேசு இராஜன் வருவார்
எண்ணிலடங்கா தூதரோடே
என்னை மீட்ட இயேசுஇராஜன்
என்னை சேர்க்கவே வருவார்

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, இயேசுகிறிஸ்துவின் வருகை மிக சமீபத்தில் திருடனை வருவதைப் போல இருக்கப் போகிறபடியால், நாங்கள் எந்த நிலையிலும் அவருடைய வருகைக்கு ஆயத்தமாயிருக்க கிருபை செய்யும். அந்த மலேசியன் ஏர்லைன்ஸில் பயணம் செய்த பயணிகள் எதிர்பாராத நேரத்தில் மரணத்தை சந்தித்ததைப் போன்று நாங்கள் எதிர்பாராத நேரத்தில் என்ன காரியங்கள் நேர்ந்தாலும் நாங்கள் பரிசுத்தமாய் எங்களை பாதுகாத்து, கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்பட கிருபை செய்யும். அந்த பயணிகளை இழந்து தவிக்கிற ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஆறுதலையும் தேறுதலையும் தந்து, ஆற்றுவீராக. தேற்றுவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் ஜெபங்களை கேடடு, அதிசயவிதமாய் பதில் கொடுக்கிற அன்பு தயவிற்காக உமக்கு எங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்துகிறோம். தேவன் எத்தனை நல்லவர், எங்கள் விண்ணப்பங்களுக்கு செவி கொடுக்கிறீரே, பதில் கொடுக்கிறீரே உமக்கு கோடி நன்றிகள் ஐயா

.

சகோதரன் எட்வின் அவர்களுக்காக நாங்கள் ஜெபித்த ஜெபங்களை கேட்டு, அவர்களுக்கு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் கொடுத்தீரே உமக்கு நன்றி ஐயா. தொடர்ந்து சகோதரனுடைய தேவைகளை சந்தித்து, உமக்கு சாட்சியாக வாழ கிருபை செய்யும்.

.

சகோதரி விக்டோரியா அவர்களுடைய குடும்பத்திற்காக ஜெபிக்கிறோம் தகப்பனே, இருக்கிற கடன் பாரங்களை மாற்றிப் போடுவீராக. செழிப்பை கட்டளையிடுவீராக. அவர்களுடைய பிள்ளைகளின் படிப்பை ஆசீர்வதித்து, எதிர்காலத்தை ஆசீர்வதிப்பீராக. குடும்பமாய் உம்மையே பற்றிக் கொண்டு, வாழ கிருபை செய்யும்.

..

சகோதரன் யோகநாதன் அவர்களின் மகள் கேசியா படிக்கும் கல்லூhயில் ரேகிங் முற்றிலும் எடுத்துப் போடப்பட்டதற்காக உம்மை துதிக்கிறோம். எங்கள் ஜெபங்களை கேட்டு, பதில் கொடுத்தீரே உமக்கு நன்றி. தொடர்ந்து மகளோடு இருந்து படிப்பை ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம்.

.

கடந்த மூன்றாம் தேதி கத்தாரில் இருக்கும் சகோதரி அன்பு ஸ்டேன்லி அவர்களுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று ஜெபித்த எங்களுடைய விண்ணப்பத்தை கேட்டு, அவர்களுக்கு ஒரு நல்ல வேலையை தேவன் கட்டளையிட்டதற்காக உமக்கு ஸ்தோத்திரம். நன்றி தகப்பனே, தொடர்ந்து சகோதரியின் வேலையில் தேவனுடைய கரம் இருந்து, நல்ல ஞானத்தை கட்டளையிட்டு, உமக்கு உத்தம சாட்சியாக விளங்க கிருபை செய்தருளும்.

.

சகோதரன் மனோவினுடைய சகோதரிக்காக ஜெபிக்கிறோம் புறமதத்தில் இருக்கும் அவர்களுக்கு கர்த்தரை ஏற்றுக் கொள்ளவும், உம்முடைய விசுவாசத்தில் பெருகவும், கர்த்தருக்கு பயந்து, இரட்சிக்கப்பட்ட ஒரு ஏற்ற துணையைக் கொடுத்து ஆசீர்வதிக்கவும் ஜெபிக்கிறோம். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.