Friends Tamil Chat

புதன், 5 மார்ச், 2014

05th March 2014 - மாற்றப்பட்ட வாழ்க்கை

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 மார்ச் மாதம் 05-ம் தேதி - புதன் கிழமை
மாற்றப்பட்ட வாழ்க்கை
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். - (2 கொரிந்தியர் 5:10).

.

ஒரு நாள் ஆல்பர்ட் நோபல் அவர்கள் தினசரி செய்தித்தாளை வாசித்தபோது, இறந்தவர்களின் புகைப்படத்தை போடும் இடத்தில் அவருடைய புகைப்படமும், அதன் கீழே டைனமைட்டை கண்டுபிடித்தவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அது தவறுதலாக பிரசுரிக்கப்பட்டிருந்தாலும், நோபல் அவர்களை அந்த காரியம் அதிகமாக சிந்திக்க வைத்தது.

.

அந்த காலத்தில் டைனமைட் மற்றவர்களை அழிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. தன்னை மற்றவர்கள் நினைக்கும்போது, மற்றவர்களை அழிப்பதற்காக இந்த மனிதர் டைனமைட்டை கண்டுபிடித்தார் என்று சொல்வார்களே என்று நினைத்து மனம் உடைந்து போனார்.

.

அந்த செய்தி வெளியிடப்பட்டதன் வழியாக நோபல் தன் வாழ்க்கையையே மாற்ற தீர்மானித்தார். உலகத்தின் சமாதானத்திற்காக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்து அதற்காக பாடுபட ஆரம்பித்தார். இன்று சமாதானப்பரிசு என்றாலே நோபல் பரிசு என்று சொல்லும் அளவிற்கு அவர் வாழ்க்கை மாற்றப்பட்டது. நோபல் என்றால் டைனமைட் என்ற சொல் மாறி, சமாதானப்பரிசு என்றால் நோபல் என்றாகிவிட்டது. ஏனென்றால் அந்த மனிதர் தன் வாழ்வின் நோக்கத்தையும், தன்னுடைய வழியையும் மாற்றினபடியால், மற்றவர்களுக்கு அவர் மேல் இருந்த எண்ணம் முற்றிலும் மாற்றப்பட்டது. அல்லேலூயா!.

.

வேதத்திலும் சவுல் என்று சொல்லப்பட்ட மனிதர், சபைகளை பாழ்ப்படுத்துபவர் என்று அழைக்கப்பட்டார். பழைய ஏற்பாட்டு நியமனங்களின்படி, தான் செய்வது சரி என்று, இயேசுவை தெய்வமாக ஏற்றுக் கொள்ளாதவராக, அப்படி ஏற்றுக் கொண்டவர்களை அரசின் அதிகாரத்தோடு, துன்பப்படுத்தி, சபைகளை பாழ்ப்படுத்தினார். சவுல் என்றாலே சபைகள் பயப்படும் அளவிற்கு அவர்களை துன்பப்படுத்தினார்.

.

ஆனால் ஒரு நாள் வந்தது, இயேசுகிறிஸ்து அவருக்கு தமஸ்குவின் தெருவில் தரிசனமாகி, 'நீ துன்பப்படுத்துகிற கிறிஸ்து நானே' என்று சொல்லி, அவரை சந்தித்தபோது, தன் வாழ்க்கையை அப்படியே மாற்றி விட்டார். சபைளை அழித்த சவுல் இப்போது சபைளை கட்ட ஆரம்பித்தார். சபையாரை துன்பப்படுத்தின சவுல் பவுலாக மாறி, கிறிஸ்துவுக்காக மற்றவர்கள் யாரும் படாத பாடுகளை பொறுமையாக ஏற்றுக் கொண்டு சகித்தார். அவருடைய நோக்கமும், வழியும் மாறினது. இன்று அவரை நாம் நினைக்கும்போது, சபைகளை ஸ்தாபித்தவர், புதிய ஏற்பாட்டு சபை நடக்க வேண்டிய வழிகளை காட்டும் 13 நிருபங்களை எழுதினவர், கர்த்தருக்காக தன் ஜீவனை குப்பையாக எண்ணினவர் என்று சொல்லதக்கதாக அவருடைய வாழ்கை மாறினது. அல்லேலூயா!.

.

பிரியமானவர்களே, நாம் இறந்தபிறகு, நம்மைக் குறித்து என்ன சொல்லப்படும்? குடிகாரன், சண்டைக்காரன், புறங்கூறுகிறவன், சபைகளை கெடுத்தவன், மற்றவர்களை சந்தோஷமாக வாழ வைக்காதவன், குடும்பத்தை அழித்தவன், அழித்தவள், மற்றவர்களுக்கு ஒரு உதவியையும் செய்யாதவன், செய்யாதவள் என்று சொல்வார்களோ? அல்லது, சபைக்கு தூணாய் இருந்தவன், சபையை நேசித்தவன், குடும்பத்தை நேசித்தவன், மற்றவர்களோடு அன்போடும், ஐக்கியத்தோடும் வாழ்ந்தவன், உத்தமன், நீதிமான் என்று சொல்வார்களோ?.

.

நம்மையே ஒரு முறை ஆராய்ந்துப் பார்ப்போம். நாளை யாருக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. ஆனால் கொடுக்கப்பட்டிருந்த காலத்திற்குள் பவுலும், நோபலும் தங்கள் கொடிய வழிகளை விட்டு, நன்மைக்கு ஏதுவாக தங்கள் வாழ்க்கையை மாற்றியதுப் போல நம்முடைய துன்மார்க்க வழிகளை விட்டு திரும்புவோம். கர்த்தருக்கு பிரியமான வழிகளில் நடப்போம், அப்போது தானாகவே மற்றவர்கள் விரும்பும் வாழ்க்கையாக நம் வாழ்க்கை மாறும். இனிமேலும் தாமதியாதபடி, குடும்பமும், சபையும் சமுதாயமும் நேசிக்கிறவர்களாக மாறுவோம். கர்த்தரும் அதில் பிரியப்படுவார். ஆமென் அல்லேலூயா!.

.

மாயை உலகினில் வாழுகின்றேன் நான்

பாவி என்னை தெரிந்துக் கொண்டீர்

பாதை மாறி பயணம் போனேன்

பாதியிலே என்னை அழைத்தீரே

பாசம் காட்டி பாதை மாற்றி

பரிந்து என்னை தூக்கினீரே

ஜெபம்
எங்கள் அன்பின் பரம தகப்பனே, இந்த நாளிலும் எங்கள் வாழ்க்கை எப்படியெல்லாம் இருந்திருந்தாலும், இந்த நாளில் எங்களை உமக்குமுன் இருக்கிற வண்ணமாகவே படைக்கிறோம் தகப்பனே, எங்களை மாற்றும். மற்றவர்கள் வெறுக்கிறவண்ணம் நாங்கள் வாழ்ந்திருந்தால் எங்கள் வாழ்க்கை மற்றவர்கள் விரும்பும் வண்ணம் மாறட்டும் ஐயா. மற்றவர்களுக்கு பிரயோஜனமற்றவர்களாக நாங்கள் வாழ்ந்திருந்தால், பிரயோஜனமுள்ளவர்களாக எங்களை மாற்றுமே. எங்கள் வாழ்வின் நோக்கங்களும், வழிகளும் சிறந்தவைகளாக விளங்கட்டும், எங்கள் அப்பாவை மகிமைப்படுத்துகிறதாக இருக்கட்டும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பின் நேச தகப்பனே, இதுவரை நாங்கள் செய்து வருகிற எல்லா ஜெபத்தையும கேட்டு, அதனதின் நேரத்தில் நேர்த்தியாய் பதில் தரப் போகிற உம்முடைய மகத்தான கிருபைக்காக உம்மை துதிக்கிறோம்.

.

சிங்கப்பூரில் உள்ள சகோதரன் பாலமுருகன் அவர்களின் பணத்தேவைகளை சந்திக்கும்படியாக ஜெபிக்கிறோம். தான் இருக்கும் இடத்தில் ஆசீர்வாதமாகவும், உமக்கு சாட்சியாக வாழவும் கிருபை செய்யும்.
.
ஸ்ரீலங்காவிலுள்ள சகோதரி நிரோஷினி அவர்களின் திருமணம் வரும் 22ம் தேதி நடக்க இருப்பதால், தேவன் அந்த திருமண வைபவத்தை ஆசீர்வதித்து தரும்படி ஜெபிக்கிறோம். திருமணத்தின் தேவைகளை கர்த்தர் சந்திப்பீராக. கானா ஊரில் நடந்த திருமணத்தில் குறைவுகளை நிறைவு செய்த தேவன், இந்த திருமணத்திலும் எல்லா குறைவுகளையும் நிறைவு செய்து குடும்பமாக அவர்களை ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். அவர்களின் குடும்பத்தை சேர்ந்த சிறுவன் தணேஷ் விபத்தில் சிக்கி, தலையில் அடிபட்டு, ஆஸ்பத்திரியில் இருப்பதால், தேவன் தாமே அச்சிறுவனை தொட்டு சுகப்படுத்தவும், சீக்கிரமாய் அவன் சுகமாகி வீடு வந்து சேரவும் கிருபை செய்யும்.
.
குவைத்தில் உள்ள ஒரு சகோதரன் தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டு, விண்ணப்பத்திருப்பதால், அவருடைய திருமணம் நிச்சயக்கப்பட்டு இருக்கிற இந்த வேளையில், அவருடைய குடும்ப பாரம் அதிகமாக இருப்பதால், தான் திருமணம் செய்வதால், எந்த உதவியும் குடும்பத்திற்கு செய்ய முடியாமல் போய் விடுமோ என்று பயப்படுகிற அவருக்கு, தன் குடும்பத்திற்கு உதவி செய்ய மறுக்காதவாறு திருமணம் செய்ய இருக்கும் பெண்ணின் மனநிலை இருக்கும்படியாக கிருபை செய்தருளும். புகை பிடிக்கும் பழக்கத்தை எப்படியாவது விட்டுவிடும்படியாக அவருக்கு உதவி செய்தருளும். அவருடைய சகோதரியின் கணவர் விபத்தில் சிக்கியதால், கால்களில் அடிபட்டு, எந்த கடினமான வேலை செய்யவும் முடியாமல் இருப்பதால், தேவன் தாமே அவருக்கு பரிபூரண சுகத்தை கொடுக்கவும், அவருடைய குடும்பத்தை நடத்த தேவையான பண வசதிகளை செய்து கொடுக்கவும் ஜெபிக்கிறோம். இந்த சகோதரன் வாஞ்சிக்கிற கர்த்தருக்குள் கனி கொடுக்கிற ஜீவியத்தை செய்யும்படியாக தேவன் அவருக்கு கிருபை செய்வீராக. இருதயத்தின் வாஞ்சைகளை நிறைவேற்றும்படியாக ஜெபிக்கிறோம்.
.

சகோதரன் கோவிந்தராஜ் அவர்களுக்காக நாங்கள் அவர் தான் என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பத்தில் உள்ளதால் படிக்க வேண்டுமா, அல்லது வேலையை தொடர வேண்டுமா என்ற குழப்பத்தில் உள்ளதால், தேவன் அவருக்கு தெளிவை கொடுக்கும்படியாக ஜெபித்தோம். தேவன் அ;நத ஜெபங்களை கேட்டு, அவருக்கு ஒரு தெளிவை காண்பித்ததற்காக உமக்கு கோடி நன்றிகளை ஏறெடுக்கிறோம். தொடர்ந்து சகோதரனோடு இருந்து, ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.


...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.