Friends Tamil Chat

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

29th August 2014 ¬ - கர்த்தருடைய உக்கிரகத்தின் நாள்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி - வெள்ளிக்கிழமை
கர்த்தருடைய உக்கிரகத்தின் நாள்
........

கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார். - (செப்பனியா 1:18) .

.

ஒரு பணக்கார பெண் ஒரு வைத்தியரிடம் தன் கால் வலிக்காக பார்க்க சென்றிருந்தாள். அந்த வைத்தியர், 'உனக்கு முன் நான்கு பேர் இருக்கிறார்கள். நீ போய் உன் பேர் வரும் போது வா' என்று அனுப்பினார். அதற்கு அந்த பெண் 'நான் யார் தெரியுமா? நான் நினைத்தால் உன்னை வேலையிலிருந்தே எடுத்து விட முடியும், ஏன் நான் கை நீட்டி உன்னை அடிக்கலாம், இந்த நாட்டின் சட்டப்படி யாராவது வைத்தியரை அடித்தால் 500 பணத்தை கட்ட வேண்டும் அதை ஒரு நிமிடத்தில் கட்டி நான் வெளியே வந்து விடுவேன்' என்று அகங்காரத்தோடு பேசினாள். அதற்கு அந்த வைத்தியர், 'நானும் உன்னை அடித்து, அதே 500 பணத்தை கட்டி வெளியே வந்துவிடுவேன்' என்று கூறினார். சில பணக்காரர்களுக்கு பணம்தான் தங்கள் பெலன், அது அவர்களை எப்போதும் காப்பாற்றும் என்று நம்பி கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் பணம் ஒன்றுமில்லாமற்போகும் என்பதை அவர்கள் அறிவதில்லை. அவர்களுடைய இருதயத்தில் அவர்களுடைய பொருள் அவர்களுக்கு அரணான பட்டணம் போலிருக்கிறது, அதனால் அதை கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று துணிகரம் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இயேசுகிறிஸ்து 'ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும்' என்றார் - (லூக்கா 19:25).

.

கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே சடிதியாய் அழிவு வரும். அப்போது மனிதருடைய வெள்ளியும் பொன்னும் அவர்களை தப்புவிக்கமாட்டாது. தங்கள் செல்வ பெருக்கினால் மகிழ்ந்து, உலகத்தில் உள்ள அத்தனை அக்கிரமங்களையும் செய்து கொண்டு, சந்தோஷமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மேல் அழிவு சீக்கிரமாய் வரும். 'ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்ந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள். உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின. உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்தது, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும் கடைசி நாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்' (யாக்கோபு 5:1-3) என்று வேதம் எச்சரிக்கிறது. ஐசுவரியவான்களின் மேல் கர்த்தரின் நாளில் தீங்கு சடுதியாய் வரும்.

.

நம் தேவன் எரிச்சலின் தேவன். அவருடைய பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு. கிருபையின் காலம் நிறைவடையும்போது, மனந்திரும்புதலின் காலமும் நிறைவடையும். 'உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்' (லூக்கா 21:34) என்று இயேசுகிறிஸ்து எச்சரித்தார்.

.

பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும். யாரும் தப்ப முடியாது. மக்கள் தங்கள் தங்கள் வேலைகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு, கர்த்தரை மறந்து, தங்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும்போது சடுதியாக முடிவு வரும். அவர்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் வரும். அப்போது யாரும் தப்ப முடியாது. ஒருவேளை அதிக பொருட்களை சேர்த்து வைத்ததினால், ஒரு மனிதன் தனக்குள்ளாக இப்படி சொல்லிக் கொள்வானேயானால், 'ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்துவைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். - (லூக்கா 12:19-20).

.

நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கு கர்த்தருடைய நாள் என்று வந்தாலும் அவரை சந்திக்க நீங்கள் ஆயத்தமா? இன்று மரணம் நேரிட்டாலும் நான் கர்த்தரை சந்திப்பேன் என்ற நிச்சயம் உங்களுக்கு இருக்கிறதா? மரணத்தின் பின் மனம் திரும்புதல் இல்லை, இரட்சிப்பு இல்லை, எந்த நினைவும் அங்கு இல்லை. வாழ்ந்திருக்கும் இந்த நாளில் தானே அவருடைய இரட்சிப்பை பெற்று கொள்ள ஆயத்தமா? 'பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு, பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; அவருடைய கோபாக்கினையின் மகாநாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்' (வெளிப்படுத்தின விசேஷம் 6:15-17). பூமியின் ராஜாக்களிலரிருந்து அடிமைகள் வரைக்கும் அநேகர் தங்களை ஆயத்தப்படுத்தி கொள்ளவில்லை. ஆனால் மகாநாள் வந்தபோதோ அவர்கள் தங்களை ஒளித்து கொள்ள வகை தேடுகிறார்கள். ஆனால் தங்களை ஒளித்து கொள்ளவோ, மறைந்து கொள்ளவோ முடியாது. ஆகவே கிடைக்கப் பெற்றிருக்கும் இந்த நாட்களில் தானே, கிருபையின நாட்கள் நிறைவுபெறுமுன்னே, இரட்சிக்கப்படுவோம். அவரை தேடி அவரை பற்றி கொள்வோம். 'கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது; கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான். அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்' (செப்பனியா 1:14-15).

.

லௌகீக கவலைகளினாலும்

இலச்சை மிகுந்த வெறியினாலும்

எம் இதயம் பாரம் அடையாமல்

எச்சரிக்கையுடன் காத்திருப்போம்

இரவும் பகலும் விழிப்பாய்

இருதயம் நொறுங்கி ஜெபிப்போம்

கற்புள்ள கன்னிகையாக நாமும்

கர்த்தர் வருகைக்கு காத்திருப்போம்

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசிக்கிற நல்ல தகப்பனே, இந்த நல்ல நாளுக்காக உம்மை துதிக்கிறோம். கர்த்தரின் மகா உக்கிரத்தின் நாள் சீக்கிரமாய் வருகிறபடியால், நாங்கள் எந்தவித லௌகீக கவலைகளினாலும், வெறியினாலும் பாரமடையாதபடிக்கு, எங்களை காத்து, எங்களை ஆயத்தபடுத்த கிருபை செய்யும். ஐசுவரியவான்கள் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிப்பது அரிது என்று சொன்னீரே ஐசுவரியத்தை நீர் எங்களுக்கு கொடுத்த நோக்கத்தை நிறைவேற்றி, அந்த ஐசுவரியத்தினால் உம்மை கனப்படுத்த உதவும் தகப்பனே. கர்த்தரின் கோபாக்கினை நாளிலே நாங்கள் பாடுகளை அனுபவிக்காதபடி, கிடைக்கப்பெற்றிருக்கிற இந்த கிருபையின் நாட்களில் உம்மை ஏற்றுக்கொண்டு, உம்முடைய வழிகளில் நடக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
குறிப்பு

pray1another

அன்பு வாசகர்களே, வேதாகம கேள்வி - பதில் போட்டி - இன்று கடைசி நாள், பதிலை அனுப்புங்கள்.தேவன் தாமே வானத்தின் பலகணிகளை திறந்து ஆசீர்வதிப்பாராக! ஆமென் அல்லேலூயா!

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.