Friends Tamil Chat

வியாழன், 22 ஜனவரி, 2015

22nd January 2015 - காலங்கள் கர்த்தருடைய கரத்தில்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2015 ஜனவரி மாதம் 22-ம் தேதி - வியாழக்கிழமை
காலங்கள் கர்த்தருடைய கரத்தில்
........................

அஞ்சனம் பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்பட வேண்டும். - லேவியராகமம். 20:27.

.

ராசிபலன், வாஸ்து, நியூமராலஜி, அதிர்ஷ்ட கல், கண் திருஷ்டி இவற்றை நீங்கள் நம்புகிறீர்களா?

.

இன்றைய தொலைக் காட்சி சேனல்களில் ராசிபலன் நிகழ்ச்சிகள் பல வருகின்றன. உங்களைப் பற்றி லேசான புகழ்ச்சியுடன் ஆரம்பிக்கும் அந்த பிறந்தநாள் ராசி பலனகளை உற்றுக் கவனித்தால் அது அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்கும். சிலருக்கு செய்தித்தாளில் தினமும் வரும் ராசிபலன் பக்கத்தைப் பார்த்தபின்தான் எதையுமே செய்வார்கள். இதற்கு படித்தவர்களும் விதிவிலக்கல்ல.

.

நாம் நம் தாயின் கருவறையில் உருவான நொடியை ஆண்டவர் மட்டுமே அறிந்துள்ளார். அப்படியிருக்கும்போது ஒரு மனிதன் எப்படி அதை வைத்து வாழ்க்கையை கணிக்க முடியும்? நாம் பிறந்த நாளை குறித்து வைப்பது பாஸ்போர்ட் எடுப்பதற்கும், பள்ளியில் சேர்ப்பதற்கும் மற்றும் கொண்டாடுவதற்காகவும் மாத்திரமே இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, எதிர்காலத்தை கணிக்க பயன்படுத்துவோமானால் அது வேதத்தின்படி கொடிய பாவமாகும்.. இதில் கிறிஸ்துவை அறியாதவர்கள் ஈடுபடுகிறார்கள் அவர்கள் அறியாமையினால் செய்கிறார்கள். ஆனால் கிறிஸ்தவன் என்ற பெயரோடு இவைகளின் மேல் நம்பிக்கை கொண்டிருப்போமானால் அது கண்டிக்கத்தக்க பாவமாகும்.

.

பூமி சூரியனை எப்போதும் சுற்றிக் கொண்டேயிருக்கிறது. அதனால் பூமியிலுள்ள எந்த ஒரு பொருளும் நிலையான இடத்திலோ, திசையிலோ இருப்பதில்லை என்பது தான் உண்மை. அப்படியிருக்கும்போது வாஸ்து எப்படி சரியாகும்? கிரகங்கள் ஒன்பது என்பதே விஞ்ஞானத்தில் சர்ச்சையாயிருக்க அவற்றை ஆணிவேராக கொண்ட ராசிகள்,பலன்கள், பரிகாரங்கள் எப்படி சரியாகும்?

.

நாமிருக்கும் பூமி, சந்திரன், கோள்கள் எல்லாம் பால்வழி (Milky Way) அண்டத்தை சேர்ந்தது. இதில் 10,0000000000 (10x10) நட்சத்திரங்கள் உண்டு. ஒவ்வொன்றும் சூரியனை விட பெரியது. இதைத்தவிர எரிகோள்கள், இயற்கை கோள்கள், மனிதன் அனுப்பிய செயற்கை கோள்கள் என்று பல இருக்கின்றன. ஒரு நிமிடம் இந்த அண்ட சராசரத்தை கற்பனை செய்து பாருங்கள். அவைகள் நம் கற்பனைக்கு எட்டாத தூரத்தில் இருக்கின்றன.

.

நாம் வாழுகிற இவ்வுலகத்தில், சாலைகளில் செல்லும், சில ஆயிர வாகனங்களிலே எத்தனை விபத்துகள்! எத்தனை போக்குவரத்து நெரிசல்கள்! ஆனால் தேவன் படைத்த பல்லாயிரம் மில்லியன் எண்ணிக்கை கொண்ட இந்த கோள்கள் எந்தவித விபத்தோ, நெரிசலோ இன்றி அதினதின் பாதையில் சென்றுக் கொண்டே இருக்கின்றன. இவற்றைப் படைத்த தேவன் எவ்வளவு பெரியவர்!

.

நமது காலங்கள் கர்த்தருடைய கரத்தில் இருக்கின்றன என்று வேதம் தெளிவாய் சொல்லும்போது, நமது கரத்தை யாரிடமோ நீட்டி, என்னுடைய எதிர்காலம் என்ன் என்றுக் கேட்பது கிறிஸ்தவர்களாகிய நமக்கு வெட்கக்கேடு! நாம் நம்மைப் படைத்த தேவனை விசுவாசிக்காமல் அவரை அலட்சியம் பண்ணுகிறோம் என்பதுதான் அதன் அர்த்தமாகும்.

.

நாள் குறித்து, திருமணத்திற்கு ராகுகாலம் கெட்டகாலம் என்று பார்க்கும் பழக்கம் கிறிஸ்தவர்களை விட்டு ஓழிய வேண்டும்! கர்த்தர் படைத்த எந்த நாளும் நல்ல நாளே! எந்தக் கிழமையும் நல்ல கிழமையே! நாம் செய்யும் எந்த காரியத்திலும், தேவனை மாத்திரம் முன்னே வைத்து, அவருடைய ஆசீhவாதத்தோடு எல்லாம் நடக்கட்டும்! தினமும் ராசிபலன் பார்க்கும் பழக்கம் கிறிஸ்தவர்களிமிருந்து மாறட்டும்! கர்த்தரை மாத்திரம் நம்பி ஜீவிப்போம் அவருடைய சித்தமின்றி நம் தலையிலுள்ள் ஒரு முடியும் கீழே விழாது! நம்மை அவர் தம் உள்ளங்கைகளில் வரைந்து வைத்துள்ளார். நாம் செய்யும் இந்த அசுத்தமான பழக்கங்களினால் நம்மைப் படைத்த தேவனை துக்கப்படுத்தாதபடி நம்மைக் காத்துக் கொள்வோமாக! ஆமென் அல்லேலூயா!

.

கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்

கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும்

கைவிடா காத்திடும் பரமனின்

கரங்களை நாம் பற்றிக் கொள்வோம்

.

ஜெபம்
இரக்கமும் உருக்கமும் நிறைந்த எங்கள் நல்ல தகப்பனே, இந்த நல்ல நாளுக்காக நாங்கள் உம்மைத் துதிக்கிறோம். எங்கள் காலங்கள் உமது கரத்தில் இருப்பதற்காக நன்றி. நாங்கள் இந்த உலகத்தின் பாரம்பரியங்களில் சிக்கி அதனுடைய வழிகளில் நடவாமல், உம்மை மாத்திரம் நம்பி ஜீவிக்க கிருபைச் செய்யும். அண்டசராசாத்தையும் படைத்த சர்வ வல்ல தேவன் எங்கள் தகப்பனாயிருக்க நாங்கள் எந்த மனிதனின் குறி சொல்லுதலையோ வேறு எதையுமே சாராமல் எங்கள் அப்பாவை மாத்திரம் சார்ந்து ஜீவிக்க கிருபைச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.......

pray1another

.....

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.