Friends Tamil Chat

புதன், 24 செப்டம்பர், 2014

24th Sept 2014 - ஐசுவரிய பெருக்கு

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 செப்டம்பர் மாதம் 24-ம் தேதி - புதன் கிழமை
ஐசுவரிய பெருக்கு
................

பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். - (லூக்கா 12:15).

.

உலக பிரசித்தி பெற்ற தேவ ஊழியரான பில்லி கிரகாம் தனது சுய வரலாற்று புத்தகத்தில் ஒர நிகழ்ச்சியை பின்வருமாறு எழுதியிருந்தார்: "உலகிலுள்ள மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக இருந்த ஒரு மனிதர் தனது ஆடம்பரமான பங்களாவிற்கு என்னையும் என் மனைவி ரூத்தையும் மதிய உணவிற்கு அழைத்திருந்தார். எழுபத்தைந்து வயதான அவர் நாங்கள் இருந்த நேரம் முழுவதும் கண்ணீர் சிந்த கூடிய நிலையிலேயே இருந்தார். 'உலகிலுள்ள அனைவரைக் காட்டிலும் மிகுந்த வேதனையுள்ளவனாக நான் இருக்கிறேன், உலகில் நான் எங்கு எந்த இடத்திற்கு போக வேண்டுமென்று விரும்பினாலும் என்னால் அங்கு செல்ல முடியும். எனக்கு சொந்தமாக ஆகாய விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களும் இருக்கின்றன. எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய எல்லா காரியங்களும் என்னிடம் உள்ளன. ஆனால் நான் எப்போதும் நரகத்திலிருப்பதை போலவே உணர்கிறேன்' என்றார். நாங்கள் அவருக்காக ஜெபித்து விட்டு கடந்து வந்தோம்.

.

அன்று மதியம் அப்பகுதியிலுள்ள 70 வயது நிரம்பிய போதகர் ஒருவரை சந்தித்தோம். அவர் உற்சாகத்தினாலும், கிறிஸ்துவின் மேலும், பிறரின் மேலும் கொண்டிருந்த அன்பினாலும் நிறைந்திருந்தார். அவர், 'என்னுடைய பெயரில் இரண்டு பவுண் நாணயங்கள் கூட இல்லை. ஆனால் நான் மிகுந்த மகிழ்ச்சியோடிருக்கிறேன்' என்றார். அவர் எங்களை விட்டுசென்ற பிறகு, 'இவ்விருவரில் அதிக ஐசுவரியமுளள்வர் யார்' என்று நான் ரூத்திடம் கேட்டேன். எங்களிருவருக்கும் அதற்குரிய விடை தெரியும்" என்று எழுதியிருந்தார்.

.

பிரியமானவர்களே, நாம் பல ஆசீர்வாதங்களை பெற்றிருப்பவாகளாக வாழலாம். ஆனால் நமது வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்டதாக இருப்பதே மெய்யான ஆசீர்வாதமாகும். வேதத்திலே சாலமோன் ராஜாவின் வாழ்வில் ஏராளமான ஐசுவரியங்களும், ஆசீர்வாதங்களும் நன்மைகளும் காண்பட்டன. அவருடைய வாழ்விலிருந்த செழிப்பு கொஞ்சம் நஞ்சம் அல்ல. ஆனால் அவர் வாழ்வை குறித்து சொன்னது, 'எல்லாம் மாயையும் மனதுக்கு சஞ்சலமுமாயிருக்கிறது' என்பதே. அவர் தங்க தட்டில் சாப்பிடும் அளவிற்கு ஐசுவரியத்தை பெற்றிருந்த போதிலும் விரக்தியுள்ள வாழ்க்கையையே வாழ்ந்து முடித்தார்.

.

பணம், பொருள், புகழ், ஆஸ்தி, அந்தஸ்து இவைகளையே உலக மக்கள் ஆசீர்வாதமென நாடி தேடுகின்றனர். ஆனால் உண்மையான ஐசுவரியம் என்பது நமக்கு வெளியே என்னென்ன செழிப்புகள் இருக்கிறது என்பதல்ல, நமக்குள்ளே இருதயத்தில் காணப்படும் சந்தோஷம், நிறைவு திருப்தி, நற்குணம் இவையே உண்மையான ஆசீர்வாதங்களாகும். ஒருவரது செழிப்பான வாழ்வை மற்றவர் பார்க்கும்போது பசுமையான புல்வெளி போல தோன்றும், ஆனால் அது உண்மையல்ல, 'ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல' என்று இயேசுகிறிஸ்து கூறினார்.

.

கிறிஸ்துவை ஏற்று கொண்ட ஒவ்வொருவருக்கும், தேவன் காட்டும் வழி, உலகப்பிரகாரமான ஆஸ்தியும், மேன்மையும் புகழும், அந்தஸ்தும் அல்ல, 'இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்' (மத்தேயு 6:32-33) என்று இயேசுகிறிஸ்து கூறினார். நம் வாழ்வில் தேவனுடைய ராஜ்ஜியத்தை தேடும்போது, அவர் நமக்கு கொடுக்கும் சந்தோஷம், மன நிறைவு, சமாதான வாழ்வு நிறைவான அமைதி வேறு எவற்றாலும், யாராலும் தர முடியாது. அதுவே மெய்யான ஆசீர்வாதமாகும். கர்த்தர் தரும் ஐசுவரியத்தில் வேதனை இருக்காது. கண்ணீர் இருக்காது, துயரம் இருக்காது. பில்லிகிரகாம் சந்தித்த ஐசுவரியவானிடம் ஐசுவரியம் இருந்தது, பொருள் இருந்தது, ஆனால், அதோடு கூட வேதனையும், கண்ணீரும் இருந்தது. ஏனெனில் அது தேவனில்லாத ஆசீர்வாதம். 'கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்' (நீதிமொழிகள் 10:22) என்று வேதம் கூறுகிறது. முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடும்போது, நிச்சயமாகவே தேவன் வேதனையில்லாத ஆசீர்வாதத்தை கட்டளையிடுவார். ஆமென் அல்லேலூயா!

.

நிலம் பொன்னுள்ளோரை நீ பார்க்கும்போது

நினை கிறிஸ்துவின் ஐசுவரியம் உண்டுனக்கு

பணங்கொள்ளா போராசீர்வாதத்தை பார் பரலோக

பொக்கிஷமும் வீடும் பார்

எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள்

கர்த்தர் செய்த நன்மைகள் யாவும்

ஆசீர்வாதம் எண்ணு ஒவ்வொன்றாய்

கர்த்தர் செய்த யாவும் வியப்பை தரும்

.
ஜெபம்
எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, இந்த புதிய மாதத்திற்குள் நாங்கள் காலடி எடுத்து வைக்க கிருபை பாராட்டினீரே உமக்கு நன்றி. கடந்த எட்டு மாதங்களும் எங்களை கண்ணின் மணிப்போல காத்து வந்தீரே உமக்கு நன்றி ஐயா. நாங்கள் உலகத்தின் ஐசுவரியத்தை நாடி தேடுகிறவர்களாக இல்லாமல், தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடி உம்மிடத்திலிருந்து வரும் ஆசீர்வாதத்தை பெற்று கொள்ள கிருபை செய்வீராக. இந்நாட்களில் மனிதன் எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று எத்தனையோ நூதன வழிகளை நாடி தேடினாலும், கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும், அதனோடே அவர் வேதனையை கூட்டார் என்ற பொன் வார்த்தைகளை மறந்ததினால், வேதனையையும், கண்ணீரையும் சேர்த்து வாழ்ந்து கொண்டிருக்கிற பரிதாபமான வாழ்க்கையை தேவரீர் காண்கிறீரே, உண்மையான ஆசீர்வாதத்தை ஒவ்வொருவரும் பெற்று கொள்ள தேவன் கிருபை செய்வீராக. ஐசுவரிய பெருக்கு ஒரு நாளும் அவனுக்கு ஜீவனல்ல என்பதை உணர்ந்து, ஐசுவரியத்தை அல்ல, அதை தருகிற தேவனாகிய உம்மையே நோக்கி பார்க்க கிருபை செய்யும்.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.......

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.