Friends Tamil Chat

வெள்ளி, 6 ஜூன், 2014

06th June 2014 - பெற்றோரை நோக்கும் பிள்ளைகள்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜூன் மாதம் 06-ம் தேதி - வெள்ளிக்கிழமை
பெற்றோரை நோக்கும் பிள்ளைகள்
..............................

இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி, அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக. - (உபாகமம் 6:6-8)

.

நம் பிள்ளைகள் நம்முடைய பிரதிபிம்பமாக இருக்கிறார்கள். உருவத்தில் மாத்திரமல்ல, நம்முடைய செய்கைகள், நம்முடைய பேச்சுகள், நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கைளின் பிரதிபிம்பமாக நம்முடைய பிள்ளைகள் இருக்கிறார்கள்.

.

ஒருமுறை ஒரு தகப்பன் ஒரு வார்த்தையை சொல்லி தன் பிள்ளையை திட்டுவதை பார்த்தேன். அதன்பின் ஒரு நாள் அந்த பிள்ளை அதே வார்த்தையை சொல்லி தன் தங்கையை திட்டுவதை கண்டேன். கெட்ட காரியங்கள் பிள்ளையின் இருதயத்தில் வெகு சீக்கிரம் பிடித்து கொண்டு விடும். பிள்ளைகளுக்கு பெற்றோரே ஒழுக்கத்தின் பாடம் கற்று கொடுக்கும் பள்ளியாக இருக்கிறார்கள். பிள்ளைகள் பள்ளிக்கு சென்று கற்று கொள்வதை பார்க்கிலும் தங்கள் வீட்டிலேயே அந்த ஒழுக்கத்தின் பாடங்களை கற்று கொள்கிறார்கள்.

.

பிள்ளைகளை 'கர்த்தர் மேல் அன்பு செலுத்து' என்று சொல்லிகொடுப்பதை விட அதை நாம் செயலில் காட்டும்போது பிள்ளைகள் அதை சீக்கிரமாய் பிடித்து கொள்வார்கள். தினமும் தகப்பன் வேதம் வாசிப்பதை பார்க்கும் பிள்ளைகள் பெற்றோர் சொல்லாமலே வேதத்தை வாசிக்க ஆரம்பிப்பார்கள். பெற்றோர் முழங்கால் படியிட்டு ஜெபிப்பதை பார்க்கும் பிள்ளைகள் தாங்களும் முழங்கால் படியிட்டு ஜெபிக்க ஆரம்பிப்பார்கள். பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் பிரதிபலிப்பாக இருக்கிறார்கள்.

.

சிகரெட் பிடிக்கும் தகப்பனுடைய பிள்ளைகள் தாங்களும் சிகரெட் பிடிக்க கற்று கொள்வார்கள். நாம் நம் பிள்ளைகளுக்கு கெட்ட முன் உதாரணமாக ஒருபோதும் இருக்க கூடாது. சினிமா பார்க்கும் பெற்றோரின் பிள்ளைகளும் சினிமா பார்ப்பார்கள். அவர்களுக்கு அது ஒரு பாவமாக தோன்றாது. ஏனெனில் அது அவர்கள் வீட்டில் சாதாரணமாக நடக்கும் விஷயம். இப்படி எத்தனையோ காரியங்களை பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து கற்று கொள்கிறபடியால், பெற்றோர் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

.

ஒருவரும் எல்லாவற்றிலும் சரியான பெற்றோராக இருக்க முடியாது. ஆனால் முடிந்த வரை பிள்ளைகளை கர்த்தருடைய வழியில் நடத்துவிக்க பழக்க வேண்டும். நாம் கர்த்தரை பிரியப்படுத்துவதை நம் பிள்ளைகள் தங்கள் கண்களால் காண வேண்டும். நாம் கர்த்தரை நேசிப்பதால் எதையெல்லாம் செய்கிறோம் என்பதை நம் பிள்ளைகள் காண வேண்டும். நாம் நம் பெற்றோரை கனப்படுத்துவதை நம் பிள்ளைகள் காண வேண்டும். அப்போது அவர்கள் பெரியவர்களாகும்போது, அவற்றை அவர்களும் செய்வார்கள்.

.

மட்டுமல்ல, கர்த்தருடைய கற்பனைகளை 'நீ உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசு' என்று தேவன் சொல்கிறார். அவைகளை குறித்து பேசி, அதன்படி பெற்றோராகிய நாம் நடக்கும்போது நம் பிள்ளைகள் கர்த்தருக்கு உகந்த பிள்ளைகளாக நடப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

.

அநேக பெற்றோர் தாங்கள் முன் உதாரணமாக இல்லாதபடியால், தங்கள் பிள்ளைகள் கெட்டுபோன பிறகு, ஐயோ, என் பிள்ளை இப்படியாகி விட்டானே என்று தலையிலடித்து கொள்வார்கள். பிள்ளைகளை கண்டிக்கும் நேரத்தில் நிச்சயமாக கண்டிக்க வேண்டும். யாராவது அவர்களுடைய பிள்ளைகளை குறித்து அவன் இப்படி இந்த வார்த்தைகளை சொல்லி தன் வகுப்பில் நடந்து கொண்டான் என்று அவனது பெற்றோரிடம் சொன்னால், அவர்கள், 'ஐயோ என் பிள்ளை அப்படியெல்லாம் சொல்ல மாட்;டான்' என்று தங்கள் பிள்ளையை தலைமேல் தூக்கி வைப்பார்கள். ஆனால் பெற்றோருக்கு தெரியாமல் பி;ளளை என்னென்வோ காரியங்களை செய்து கொண்டுவந்து நிற்பான். அதை பெற்றோரிடம் சொன்னால் அவர்கள் அதை நம்ப மாட்டார்கள். அவனை கூப்பிட்டு கேட்கவும் மாட்டார்கள், கண்டிக்கவும் மாட்டார்கள். பிள்ளையின் மேல் அப்படிப்பட்ட அபார நம்பிக்கை. தொடர்ந்து பிள்ளை துணிகரமாக அப்படி செய்து கெர்ண்டுதான் இருப்பான். பெற்றோர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யாராவது பிள்ளைகளை குறித்து தவறாக சொன்னால் அது உண்மையானதா என்று கண்டுபிடிக்க வேண்டும். சும்மா அப்படியே விட்டுவிடக் கூடாது. பெற்றோர் தன்னை கண்காணிக்கிறார்கள் என்பதை அறிந்து பிள்ளை திருந்த வாய்ப்புண்டு.

.

நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான் அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள் (நீதிமொழிகள் 20:7). அப்படிப்பட்ட நீதிமான்களாய், நம் பிள்ளைகளுக்கு முன் உதாரணமாக ஜீவித்து, நம்முடைய வாழ்க்கைக்கு பிறகு நம் பிள்ளைகள் பாக்கியவான்களாய் இருக்கும் கிருபையை தேவன்தாமே நம் ஒவ்வொருவருக்கும் தருவாராக! ஆமென் அல்லேலூயா!

.

இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும்

இந்த ஈவு தேவன் அருளும் சுதந்திரம்

அவராலே கிடைக்கும் பலன் கனியே

ஆயிரம் தலைமுறையாக

ஆண்டவரை சேவிப்போமே

.

ஜெபம்
எங்களை அளவில்லாமல் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உம்மை துதிக்கிறோம். பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன் என்று எங்களை ஆசீர்வதித்து, எங்களுக்கு கொடுத்த பிள்ளைகளுக்காக உமக்கு நன்றி. நீர் எங்களுக்கு கொடுத்த அந்த ஆசீர்வாதத்தின் கனிகளை சரியானபடி வளர்க்க எங்களுக்கு ஞானத்தை தருவீராக. உம்முடைய வழிகளில் அவர்களை நடத்தவும், வளர்க்கவும் கிருபை செய்வீராக. எங்கள் பிள்ளைகளை மற்றவர்கள் பார்க்கும்போது உண்மையிலேயே இந்த பிள்ளைகள் கிறிஸ்தவ பிள்ளைகள் என்று சொல்ல தக்கதாக எங்கள் பிள்ளைகள் மற்றவர்களுக்கு சாட்சிகளாக இருக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.