Friends Tamil Chat

திங்கள், 7 ஏப்ரல், 2014

7th April 2014 - விசுவாசியே நீ பதறாதே

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஏப்ரல் மாதம் 07-ம் தேதி - திங்கட் கிழமை
விசுவாசியே நீ பதறாதே
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது. - (நீதிமொழிகள் 24:10).

.
ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு பெண்ணின் மேல் ஒரு கரப்பான் பூச்சி வந்து அமர்ந்தது. அதைக் கண்டவுடன் அவள் கத்தி கூப்பாடு போட ஆரம்பித்தாள். பெண்கள் அருவருக்கிற பூச்சி இந்த கரப்பான் பூச்சியாகும். உடம்பை உதறி தன் மேலிருந்த பூச்சியை பயத்தோடு தள்ளிவிட்டபோது, அது பக்கத்தில் இருந்த மற்றொரு பெண்ணின் மீது விழுந்தது.

.

அந்த பெண்ணும் அதே மாதிரி கத்தி, ஆர்ப்பாட்டம் பண்ணி, தன் மீது இருந்த பூச்சியை தள்ளிவிட்டாள். அது அங்கு உணவு பறிமாறிக் கொண்டிருந்த சர்வர் மேல் விழுந்தது. அதைக் கண்ட அந்த சர்வர் அந்த பெண்கள் போல கூப்பாடு போடவில்லை. ஆர்ப்பாட்டம் பண்ணவில்லை. அது சரியாக தான் கையில் பிடிக்கும் இடத்திற்கு வந்தவுடன், அதை கையில் பிடித்து வெளியேக் கொண்டுப் போய் நசுக்கிவிட்டு வந்தார்.

.

பிரியமானவர்களே, அந்த சர்வர் செய்ததையும், அந்த பெண்கள் செய்ததையும் பார்க்கும்போது, எந்த ஒரு ஆபத்தானதோ, பயப்படக்கூடிய சூழ்நிலை வரும்போது, நாம் எப்படி அதை கையாளுகிறோம் என்பது எத்தனை முக்கியம் என்று சிந்திக்க ஆரம்பித்தேன். அந்த சர்வர் நிதானமாய் செயல்பட்டதுப்போல நாம் செயல்படுவோம் என்றால் பாதிக்கு மேல் பிரச்சனையே நம் வாழ்வில் இருக்காது.

.

ஒரு வேளை நாம் வேலை செய்யும் இடத்திலோ, நம் குடும்பத்திலோ யாராவது நம்மிடம் சத்தம் போட்டு விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். நாமும் திரும்ப சத்தம் போட்டு, பெரிய குழப்பத்தை உண்டுப்பண்ணுவதற்குப் பதில் அமைதியாக அதை கையாளுவோமென்றால் இன்னும் அதிக பிரச்சனை வராதபடி காத்துக் கொள்ள முடியும்.

.

விசுவாசிக்கிறவன் பதறான் (ஏசாயா 28:16) என்று வசனம் கூறுகிறது. கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்து, அமைதியாக நம் காரியங்களை செய்வோமானால், நாம் செய்த நன்மையை மற்றவர்கள் தீமையாக எடுத்துக் கொண்டாலும், கர்த்தர் அவர்களோடு இடைப்பட்டு, தங்கள் தவறை உணரச் செய்வார். பதறிப் போய் நாம் வாய்க்கு வாய் பேசி, பிரச்சனையை அதிகப்படுத்துவோமானால், அதினால் லாபம் யாருக்கும் இல்லை. தேவையற்ற மனச்சங்கடங்களும், விரோதங்களும், சண்டைகளுமே ஏற்படும். நம் விசுவாசம் எந்த அளவு இருக்கிறது என்பதும் தெரிந்து விடும்.

.

நம் வாழ்வில் என்ன சூழ்நிலை வந்தாலும், அதை நாம் அமைதியாக கையாளும்போது, கர்த்தர் நமக்கு துணையாக இருந்து நாம் வெற்றி எடுக்க உதவி செய்வார். பதறிப் போவோமானால் எல்லாமே தலைகீழாக மாறிவிடும் அபாயம் உண்டு. ஆகவே கர்த்தரை சார்ந்து, விசுவாசத்தில் ஊன்றக் கட்டப்பட்டு, நிதானமாக, அமைதியாக நடந்துக் கொள்ள தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை தருவாராக. ஆமென் அல்லேலூயா!

.

விசுவாசியே நீ பதறாதே

விசுவாசியே நீ கலங்காதே

விசுவாசத்தால் நீதிமான்

இன்றும் என்றும் பிழைப்பான்

.

கர்த்தரின் கை குறுகவில்லை

கர்த்தரின் வாக்கு மாறிடாதே

சுத்தர்களாய் மாறிடவே

சுதன் அருள் புரிந்தனரே

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நாங்கள் எந்த சூழ்நிலைகளை சந்திக்க நேரிட்டாலும், அமைதியாக நிதானமாக நடந்துக் கொள்ள கிருபை தாரும். பதறிப் போய் தேவையற்ற வார்;தைகளை பேசி மற்றவர்களோடு விரோதத்தை சம்பாதிக்காதபடி, தேவன் காத்துக் கொள்ளும். ஆபத்தான சூழ்நிலையிலும் கர்த்தரை சார்ந்து, நிதானமாக நடந்துக் கொள்ள பெலன் தாரும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பின் நேச தகப்பனே, இதுவரை நாங்கள் செய்து வருகிற எல்லா ஜெபத்தையும கேட்டு, அதனதின் நேரத்தில் நேர்த்தியாய் பதில் தரப் போகிற உம்முடைய மகத்தான கிருபைக்காக உம்மை துதிக்கிறோம்.
.

சகோதரி பாலின் பிரகாஷ்க்காக ஜெபிக்கிறோம் தகப்பனே. அவர்களுடைய கணவருக்கு கோயம்புத்தூரில் வேலைக் கிடைத்து, அவர்கள் அங்கு தங்க தீர்மானித்திருக்கிறபடியால், சகோதரிக்கும் அங்கு ஒரு நல்ல வேலைக் கிடைத்து செட்டில் ஆக தேவன் கிருபை செய்வீராக. வரும் 11ம் தேதி நடக்க இருக்கிற இன்டர்வியூவில் செலக்ட் ஆகி, அவர்கள் அங்கு வேலைக்கு சேர கிருபை செய்யும்.

.

சகோதரன் மார்பின் அவர்கள் எம் இ முடித்து, டீச்சிங் வேலை பிடிக்காமல், வேலையை விட்டுவிட்டபடியால், அவர் விரும்புகிறபடி. அவருக்கு அவருடைய படிப்பிற்கேற்ற நல்ல வேலையை கொடுத்து ஆசீர்வதிக்கவும், உமக்கென்று சாட்சியாக வாழவும் கிருபை செய்வீராக.

.

சகோதரன் டேவிட் காமராஜ் அவர்கள் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்துக் கொண்டு, தன்னுடைய விடுமுறை நாட்களில் கர்த்தருக்கென்று ஊழியம் செய்கிறபடியால், அவர் செய்யும் ஊழியங்களை ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். கர்த்தருக்காக எதையாவது செய்ய வேண்டும் என்று அவர் வாஞ்சிக்கிறபடியால், தேவன் தாமே அந்த வாஞ்சைகளை நிறைவேற்றும்படியாக ஜெபிக்கிறோம். அவருடைய வேலையிடத்தில் இருக்கிற பிரச்சனைகளை நீக்கி போடும்படியாகவும், அவருடைய குடும்பத்தை தேவன் பொறுப்பெடுத்து ஆசீர்வதிக்கும்படியாகவும் ஜெபிக்கிறோம்.

.

சகோதரி ஸ்வீட்லின் அவர்களின் சகோதரி சுஜி அவர்களுக்கு திருமணமாகி ஆறுவருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதபடியால், தேவன் தாமே இரங்கி, அவர்களுக்கு ஒரு குழந்தையை கொடுத்து ஆசீர்வதிக்குமபடியாகவும், அவர்களுடைய கண்ணீரை துடைக்கும்படியாகவும் ஜெபிக்கிறோம்.

.

பெயர் சொல்ல விரும்பாத சகோதரனின் மனைவி அல்சர் வியாதியினால் மிகவும் அவதிப்படுவதாலும், எதையும் சாப்பிட முடியாமல் இருப்பதாலும், தேவன் தாமே அவர்களை குணப்படுத்தும்படியாக ஜெபிக்கிறோம். பரிபூரண விடுதலையை கட்டளையிடுவீராக. நன்கு சாப்பிட கிருபை செய்வீராக.

.

சகோதரன் மில்டன் பெலிஸ் அவர்கள் எழுதியிருக்கிற ஜெபக்குறிப்பின்படி, மதசார்பற்ற ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்படியாகவும், அவர் அனுப்பியிருக்கிற லிஸ்டில் இருக்கிறவர்கள் தேர்தலில் உமக்கு சித்தமாயிருப்பின் வெற்றிப்பெறும்படியாகவும் ஜெபிக்கிறோம். ஆட்சிக்கு வருகிற எந்த கட்சியாயிருந்தாலும், சுவிசேஷத்திற்கு எதிர்ப்பு சொல்லாத, தடை விதிக்காத ஆட்சி வரும்படியாக ஜெபிக்கிறோம். எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.


...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.