Friends Tamil Chat

புதன், 2 ஏப்ரல், 2014

2nd April 2014 - பாவ சிந்தனைகள்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஏப்ரல் மாதம் 02-ம் தேதி - புதன் கிழமை
பாவ சிந்தனைகள்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ? - நீதிமொழிகள். 6:27.

.
1991ம் வருடம் ஜூன் மாதம் 12ம் தேதி பிலிப்பபைன்ஸ் நாட்டின் சுதந்திர நாளில் பினாடுபோ (Pinatubo) என்னும் எரிமலை வெடித்தது. அது 500 வருடத்திற்கு மேலாக அமைதியாக சலனமில்லாமல் இருந்தது. அது இனி வெடிக்கப் போவதில்லை என்று மக்கள் அதை மறந்திருந்த நேரத்தில், அது வெடித்தது. அப்போது 8 மணி நேரத்திற்கு மேல் பூமி அதிர்ந்தது. அது 50,000 அடி உயரத்திற்க்கு சாம்பல் புகையை மேலே கிளப்பியது. மாத்திரமல்ல, Typhoon Yunga என்னும் சூறாவளிக் காற்றும் சேர்ந்து வீசியதால் சாம்பலும் புகையும் சேர்ந்து, கறுப்பு மழை பெய்தது. அதனால் அந்த சனிக்கிழமை கறுப்பு சனிக்கிழமை (Black Saturday) என்று அழைக்கப்பட்டது.

.

அந்த மலையிலிருந்து சில மைல் தூரத்தில் அமைந்திருந்த அமெரிக்க விமானப்படை அந்த இடத்தை முழுவதுமாக விட்டுவிட வேண்டி வந்தது. ஆயிரக்கணக்கான மக்களும் அமெரிக்க வீரர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்ற, தப்பித்து ஓட வேண்டி இருந்தது. அநேக நாட்கள் அந்த எரிமலை வெடிக்காததால் மக்கள் அதை சாதாரண மலையாக நினைத்து வாழ்ந்து வந்தார்கள்.

.

இந்த எரிமலை எத்தனையோ வருடங்கள் அமைதியாக இருந்து, ஒரு நாள் வெடித்ததுப் போல நம்முடைய பாவ குணங்களும் நமக்குள் மறைந்து இருந்து, வெளியே தலைக்காட்டாமல், அமைதியாக இருக்கின்றது. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். அது அமைதியாக இருப்பதால், அது அப்படியே இருந்துவிடும் என்று நாம் நினைத்தால் அது ஒரு வேளை தவறாகி விடலாம்.

.

இதைத்தான் சாலமோன் ஞானி தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ? என்றுக் கேட்கிறார். அதாவது, பாவமானது அமைதியான எரிமலையைப் போல நமக்குள் எத்தனையோ நாடகள் தூங்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அது ஒரு நாள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். அப்போது அதனுடைய விளைவு மிகவும் மோசமாக இருக்கும். நாம் ஒரு வேளை நினைத்துக் கொண்டிருக்கலாம், நான் பாவம் செய்வதிலிருந்து வெளிவந்து விட்டேன். இனிமேல் பாவம் செய்ய மாட்டேன், நான் பரிசுத்தமாகி விட்டேன் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம்; ஆனால் ஒரு நாள் எரிமலை வெடிப்பதைப் போன்று, நமக்குள் கனிந்துக் கொண்டிருக்கிற பாவம் அதற்கு தருணம் கிடைக்கும்போது, வெடிக்க தவறுவதில்லை.

.

இதிலிருந்து நாம் எப்படி தப்பித்துக் கொள்வது? நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன் என்று சங்கீதக்காரன் சங்கீதம் 119:11 ல் கூறுகிறார். ஆம் அது தான் வழி. பாவ சிந்தனைகள் நம் இருதயத்தில் வரும்போது கர்த்தருடைய வார்த்தைகளை மனதில் கொண்டு வந்து, பிசாசுக்கு எதிர்த்து நிற்க வேண்டும். ஒரு சில நிமிட இன்பத்திற்காக பாவத்தைச் செய்துவிட்டு வாழ்நாள் முழுவதும் குற்ற உணர்வில் சிக்கித் தவிப்பதை விட பாவம் செய்யாதபடி நம்மை பாதுகாத்துக் கொள்வதே சிறந்தது. கர்த்தருடைய வார்த்தைகள் நம் இருதயத்தில் இருந்தால் பாவ நெருப்பு அல்ல, பரிசுத்த ஆவியானவரின் நெருப்பே நம் இருதயத்தில் கொழுந்து விட்டு எரியும். வார்த்தைகளை நம் இருதயத்தில் வைத்து வைப்போம், பாவம் செய்யாதபடி நம்மைக் காத்துக் கொள்வோம் இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார்.

.

சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்

பேரின்ப நாதா நீர் போதாதா?

பாழாகும் லோகம் வேண்டாமையா

வீணான ஆசை வேண்டாமையா

.

ஜெபம்

எங்கள் நல்ல தகப்பனே, பாவம் ஒரு எரிமலையைப் போல எஙகளுக்குள்ளே புகைந்து எப்போது வெடிக்கலாம் என்று காத்துக் கொண்டிருந்தாலும், உம்முடைய வாக்கை இருதயத்தில் வைத்து, சத்துரு கொண்டு வரும் கவர்ச்சிகளுக்கு எதிர்த்து நிற்க எங்களுக்கு கிருபை தாரும் ஐயா. சிற்றின்பத்திற்காக பேரின்ப நாதராம் உம்மை விடாதிருக்க எங்களுக்கு கிருபைச் செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நீதிமான் செய்யும் ஊக்கமான ஜெபம் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது என்று சொன்னீரே, இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்ட நீதிமான்களாக நாங்கள் உம்முடைய சமுகத்தை நோக்கி பார்க்கிறோம் தகப்பனே,தயவாய் செவி சாய்த்து எங்கள் ஜெபத்தை கேட்பீராக.

.
பெயர் சொல்ல விரும்பாத சகோதரனின் மனைவி நான்கு மாத கர்ப்பிணியாக இருப்பதால் அதிகமாய் வாந்தி எடுத்து சோர்ந்து போவதால், தேவன் தாமே இரங்கி, அந்த சகோதரி வாந்தி எடுக்காதபடி சுகத்தை தருவீராக. கர்ப்பமாயிருக்கும்போது வாந்தி எடுப்பது சகஜம் என்றாலும், அதினால் உடல் நலம் கெட்டு போகாதபடி, சுகத்தை கொடுத்து கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதிப்பீராக.
.
மதுரையை சேர்ந்த பாஸ்டர் ஜான் செல்வம் அவர்கள் ஜிப்ஸிக்களின் மத்தியில் செய்யும் ஊழியத்தை அளவில்லாமல் ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். இந்த இனத்தவர் கர்த்தரை ஏற்றுக் கொண்டு சாட்சியாக வாழும்படி ஜெபிக்கிறோம். அவர்கள் மத்தியில் ஊழியம் செய்யும் உம்முடைய பிள்ளைகளுக்கு நல்ல ஞானத்தை கொடுத்து, அவர்களை வழிநடத்தும் கிருபைகளை கொடுப்பீராக. அவர்களின் தேவைகளை சந்திக்கும்படி ஜெபிக்கிறோம்.
.
சகோதரி ஆலிஸ் டயானா அவர்களுக்கு இருக்கும் வயிற்று வலியிலிருந்து பரிபூரண சுகத்தை கொடுக்கும்படி ஜெபிக்கிறோம். வயிற்று வலி எதனால் வருகிறது என்று கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சையை மேற்கொள்ளும்படி கிருபை செய்வீராக. பரிபூரண விடுதலையைக் கொடுப்பீராக.
.
பொது தேர்வு எழுதியிருக்கும் ஆல்பின் பினோ அதிகமான மதிப்பெண்கள் பெறும்படி ஜெபிக்க கேட்டிருப்பதால், தேவன் தாமே மகனுக்கு இரங்கி, திருத்துபவர்கள் கண்களில் தயவு கிடைத்து, தான் எழுதின பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி பாஸ் பண்ணும்படி கிருபை செய்வீராக. மகனின் இருதய வாஞ்சைகளை நிறைவேற்றுவீராக.
.
சகோதரன் சுனில் அவர்களின் வேலையிடத்தில் காணப்படும் எல்லா பிரச்சனைகளையும் மாற்றி சுமுகமாக வேலை செய்யும்படி கிருபை செய்வீராக. அதிகாரிகளின் கண்களில் இரக்கம் கிடைத்து, தன் வேலையில் உண்மையாக இருந்து, உயர்வு கிடைக்க கிருபை செய்வீராக.
.
தன் பெயர் எழுதியிராத சகோதரன் பிடெக் முடித்து, வேலை எங்கும் தேடி கிடைக்காத நிலையில், தன் தகப்பனாரும் வேலை இழந்திருக்கிறபடியால், கிடைத்த வேலையில் சேர்ந்து, தான் படித்த படிப்பிற்கும், வேலைக்கும் சம்பந்தமில்லாமல், பன்னிரண்டு மணி நேர வேலையில் மனம் சோர்ந்து போயிருக்கும் அந்த சகோதரனுக்கு அவர் படித்த படிப்பிற்கேற்ற வேலையை கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். பத்தாவது, பன்னிரண்டாவது வகுப்பில் தாலுக்காவிலேயே முதலாவது வந்தும், சரியான வேலை இல்லாமல் தவிக்கும் அந்த சகோதரனுக்கு ஒரு வேலையை கொடுத்து ஆசீர்வதியும் தகப்பனே. மகனுக்கு தயவாய் இரங்கும், கிருபை செய்யும்.
.
சகோதரி சாலம்மாள் அவர்களுக்கு இந்த மாதம் ஏழாம் தேதி பிரசவ நாள் குறித்திருக்கிறபடியால், அவர்கள் விருப்பப்படுகிறபடி ஒரு பெண் குழந்தையை கொடுத்து ஆசீர்வதிக்கும்படி ஜெபிக்கிறோம். ஆனாலும் உம் சித்தம் நிறைவேறட்டும் தகப்பனே. சுகப்பிரசவத்தை கொடுத்து ஆசீர்வதிப்பீராக. எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.