Friends Tamil Chat

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

2nd April 2013 - விரல் போனால் என்ன?

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 ஏப்ரல் மாதம் 02-ம் தேதி - செவ்வாய் கிழமை
விரல் போனால் என்ன?
...

சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கநுபவி. - (2 தீமோத்தேயு 1:8).

.

அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து சீனா நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த கப்பல். மாலை வேளையில் கப்பலின் மேல் தட்டில் ஒரு கிறிஸ்தவ குருவானவரும், ஒரு வியாபாரியும் உரையாடி கொண்டிருந்தனர். வியாபாரி கேட்டார், 'சீனாவிற்கு என்ன விஷயமாக போகிறீர்கள்?' என்று. 'இயேசுவை அறிவிக்க போகிறேன்' என்றார் குருவானவர். ஒரு நிமிடம் அதிர்ந்து போன வியாபாரி, 'சீனாவுக்கு மிஷனெரிகள் செல்வது வீண். ஒரு முறை மர்பி என்ற குரு சென்றிருந்தார். ஒரு நாள் அவரை தூக்கிக் கொண்டு போய் அவரது கையின் மூன்று விரல்களை துண்டித்து விட்டனர். அவர் இப்போது அமெரிக்காவிலிருக்கிறார். இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரிந்திருந்தால் சீனாவிற்கு போக துணிந்திருக்க மாட்டீர்கள்'எனறார். குரு அமைதியாக சிரித்துக் கொண்டார். பின்பு பல காரியங்களை பகிர்ந்து கொண்டனர். சற்று நேரத்தில் அவர்களுக்கு தேநீர் பரிமாறப்பட்டது. தேநீரை வாங்கிய குருவின் கையை கண்ட வியாபாரி திகைத்துப் போனார், ஏனென்றால் அவரது கையில் மூன்று விரல்கள் இல்லை. ஆம், அன்று சீனாவுக்கு சென்ற மர்பி இவரே!
.
யாரை நான் அனுப்புவேன், யார் என் காரியமாய் போவான் என்ற கேள்வியை தேவன் தன்னிடம் கேட்பதாக உணரும் யாராலும் அமைதியாய் இருக்க முடியாது. ஆகவே தான் பவுலின் வாழ்விலே காவல்களும், அடியும், உதையும், கல்லெறிதலும், சேதமும், மோசங்களும், சொந்த ஜனங்களால் வந்த உபத்திரவங்களும் பசியும், தாகமும் வந்த போதிலும் அவைகள் ஒன்றுமே அவரை ஊழியம் செய்வதிலிருந்து சோர்ந்த போக செய்யவே இல்லை. 'நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காக கட்டப்படுவதற்கு மாத்திரமல்ல, மரிக்கவும் ஆயத்தமாயிருக்கிறேன்' என்று சவாலிட்டார். விரல் போனால் என்ன? என்று மீண்டும் அம்மக்களை தேடிச் சென்ற மர்பி போதகரைப் போல, அப்போஸ்தலனாகிய பரி;சுத்த பவுலைப் போல கிறிஸ்துவுக்காக ஆவியில் வைராக்கியம் கொண்டு ஊழியம் செய்யும் ஊழியர்கள் இந்நாட்களில் தேவனுக்கு தேவை.
.
ஊழியம் செய்ததனிமித்தம், வந்த நிந்தனையால், உபத்திரவத்தினால், சொந்த ஜனத்தாரின் அவமானப் பேச்சினால் சோர்ந்து போயுள்ள அருமை சகோதரனே, சகோதரியே, நான் சவுக்கடி பட்டால் என்ன, என் விரல் போனால் என்ன? என்று கேட்ட பக்தர்களின் வைராக்கியம் உங்களையும் பற்றி பிடிக்கட்டும். 'அவர்கள் என்னை அவமானப்படுத்தினால் என்ன? என்னை நிந்தித்தால் என்ன? நான் மீண்டும் கிறிஸ்துவின் பணியை உற்சாகமாய் செய்வேன். நான் மீண்டும் அங்கு செல்வேன். என் இலக்கு பூமிக்குரியதல்ல, அதைவிட மேலான ஜீவ கிரீடமே! அதை யாரோ ஒருவரது வார்த்தைக்காக ஒருபோதும் இழக்க மாட்டேன்' என வைராக்கியமாய் இன்றே புறப்படுவோமா? கர்த்தர் நம்மோடிருக்கிறார்! ஆமென் அல்லேலூயா!

.


வியாதியோ வறுமையோ வேதனையோ

எதுவும் பிரிப்பதில்லை

உயிர் உள்ள வரை உம்மைத்தான் நேசிப்பேன்

வேறெதற்கும் நான் அடிமைப்படேன்

.
என் நேசர் நீர் தானை
யா

நேசிக்கின்றேன் உம்மைத்தானையா

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, வியாதியோ, வேதனையோ எந்த பாடுகளுமோ உம்முடைய அன்பிலிருந்தும், உமக்கு நாங்கள் செய்யும் ஊழியங்களிலிருந்தும் பிரித்து விடாதபடி, உயிர் உள்ளவரை உம்மையே நேசித்து உமக்கே ஊழியம் செய்ய பெலனைத்தாரும் தகப்பனே. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.