Friends Tamil Chat

செவ்வாய், 29 அக்டோபர், 2013

29th October 2013 - கோபம் வேண்டாமே

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 அக்டோபர் மாதம் 29-ம் தேதி - செவ்வாய் கிழமை
கோபம் வேண்டாமே
...

நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது. - (எபேசியர் 4:26).

ஒரு சாது தன் சீடர்களிடம் 'கோபப்படும்போது ஏன் ஒருவர் மற்றவரைப் பார்த்து கத்துகிறார்?' என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைத் தந்தார்கள். ஒரு சீடன் 'நாம் நம்முடைய பொறுமையை இழந்து விடுகிறோம். அதனால் சத்தம் போட்டு கத்துகிறோம்' என்றான். அதற்கு சாது, 'ஏன், அவர்கள் பக்கத்தில் தானே இருக்கிறார்கள்? பின் ஏன் கத்த வேண்டும்' என்று மீண்டும் கேட்டார்.

.
சீடர்கள் ஒவ்வொரு பதிலை கொடுத்தார்கள். அதில் ஒன்றிலும் திருப்தி

அடையாத சாது சொன்னார், 'ஏன் கோபம் வரும்போது கத்துகிறார்கள்

தெரியுமா? கோபம் வரும்போது அவர்களின் இருவரின் இருதயமும்

ஒருவரையொருவர் விட்டு, தூர போய் விடுகிறது. அவர்களையுமறியாமல்,

தாங்கள் மற்ற நபரோடு தூர போய் விட்டோம் என்கிற எண்ணத்தினால்

சத்தமாய் கத்துகிறார்கள்' என்றார்.
.

.
அப்போது ஒரு சீடன், 'கோபம் வரும்போது கத்துகிறார்கள், ஆனால் அன்பு

வரும்போது?' என்று கேட்டான். 'அன்பு வரும்போது அவர்கள் மெதுவாக

பேசுகிறார்கள். காதில் கிசுகிசுப்பாய் பேசினாலும் அது நன்கு கேட்கும்,

ஏனெனில் அவர்கள் இருதயம் மிகவும் அருகில் இருப்பதால். கடைசியில்

அவர்கள் பேசக்கூட வேண்டாம். ஒருவரையொருவர் பார்த்துக்

கொண்டாலே போதும், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று விளங்கிக்

கொள்ளும்' என்றுக் கூறினார். அது எத்தனை உண்மை!
.

.
திருமணமான புதிதில் மற்றவர்கள் கேட்காத வண்ணம் மெதுவாக பேசிக்

கொள்ளும் தம்பதியர், நாளாக நாளாக ஒருவர் ஏன் பேசுகிறார் என்று

நினைக்கும் வண்ணம் மிகவும் சத்தமாக கத்தி, பேசி சண்டைப் போட்டுக்

கொள்ளுகிறார்கள்.
.

.

அதே தம்பதியர், நாளாக நாளாக எதுவும் பேசாமலே கண்களினாலே

பார்த்து ஒருவரை யொருவர் புரிந்துக் கொள்ளும் காலக்கட்டத்திற்குள்ளும்

வருகின்றனர். புது தம்பதியினர் போல பழைய தம்பதிகள் அதிகம் பேசிக்

கொள்ளாவிட்டாலும், இருவரும் இருதயம் ஒத்திருப்பதால் அதிகமாய்

பேசாவிட்டாலும், ஒருவரையொருவர் புரிந்துக் கொள்கின்றார்கள்.

.
.
சில வேளைகளில் பழைய தம்பதியராயிருந்தாலும், கோபம் அளவு கடந்து

வரும்போது, எதையுமே நினைக்காமல் ஒருவரையொருவர் வார்த்தைகளால்

தாக்கி, புண்பட்டு, அன்று முழுவதும் சாப்பிடாமலும், அப்படியே

ஜெபிக்காமலும் தூக்கத்திற்கு செல்கின்றனர்;. பசியினாலும்,

கோபத்தினாலும் தூக்கமும் வராமல், எழுந்துப்போய் சாப்பிடவும் வறட்டு

கௌரவம் விட்டுக் கொடுக்காமல், பாடுபடுவார்கள். ஏன் இந்தப்பாடுகள்?

சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்பாக மன்னித்து மறந்து, ஜெபித்துவிட்டு

படுத்தால், அடுத்தநாள் புதிய நாளாக, அன்றலர்ந்த மலராக

புத்துணர்ச்சியோடு எழுந்தரிக்கலாமில்லையா?
.

.
தம்பதியர் மட்டுமல்ல, மற்றவர்களும் மனதில் கோபத்தை வைத்துக்

கொண்டிருப்பது சரியல்ல, எந்த புதிய புண்களையும் சீக்கிரம்

ஆற்றிவிடலாம். ஆனால் அது சீழ்வைத்து, வீக்கம் கட்டிப் போனால் அதை

ஆற்றுவது கடினம். அதுப்போல கோபம் கொண்டாலும் மனதில் வஞ்சம்

வைத்து பழிவாங்கத் துடிக்காமல், அதை அன்றே மன்னித்து,

மறந்தோமானால், அதனால் நமக்கு பின் விளைவுகள் இராது. ஆனால்

மனதில் வைத்து எப்போதும் பழிவாங்க வேண்டும் என்ற வெறியோடு

செயல்பட்டால், அதனால் நம் உடல் நலம் கெடுவதுடன், அதிலிருந்து

விடுபட்டு வருவது கடினமாகலாம்.

.
.
பிரியமானவர்களே, கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள் என்று

வேதம் சொல்கிறதே! கோபம் மனிதனுக்கு வருவது இயற்கை, ஆனால்

அந்த கோபத்தில் கொலையோ, பேசத்தகாதவைகளை பேசுவதோ,

மற்றவர்களை புண்படுத்துவதோ பாவமாகும். பின் வருந்தினாலும், செய்த

காரியத்தை மாற்ற முடியாதே! ஆகவே கோபம் கொண்டாலும் பாவம்

செய்யாதிருக்க கர்த்தரின் உதவியை நாடுவோம். சூரியன் அஸ்தமிப்பதற்குள்

நம் கோபமும் அடங்கட்டும். எந்த வகையிலாவது அதை அகற்றி விட்டு,

தூங்கப்போகும்போது, கர்த்தருடைய இனிய நினைவுகளால் நிரம்பி

உறங்குவோம்! ஆமென் அல்லேலூயா!

.

.

சண்டை தர்க்கங்களை விட்டு ஓடு

அன்பு அமைதியை தினம் நாடு

தினம் தேடு நீ தினம் தேடு

.

ஓடு ஓடு விலகி ஓடு

வேண்டாத அனைத்தையும் விட்டு ஓடு

ஓடு ஓடு தொடர்ந்து ஓடு

இயேசுகிறிஸ்துவை நோக்கி ஓடு

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருக்க எங்களுக்கு உதவி செய்யும். தேவையற்ற காரியங்களால் நாங்கள் ஒருவரையொருவர் கோபமூட்டி, வெறுப்பை வளர்த்துக் கொண்டிராதபடி, சூரியன் அஸ்தமிக்குமுன் மன்னித்து மறக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.