Friends Tamil Chat

திங்கள், 28 அக்டோபர், 2013

28th October 2013 - ஆலயத்திற்கு செல்வோம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!

2013 அக்டோபர் மாதம் 28-ம் தேதி – திங்கட்கிழமை

ஆலயத்திற்கு செல்வோம்
.....

சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம், நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். - எபிரேயர் - 10:25.

.
ஒரு மனிதர் சபைக்கு ஒழுங்காக செல்பவர், ஒரு முறை ஒரு செய்தித்தாளில் எடிட்டர் பக்கத்திற்கு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சபைக்குச் செல்வது பிரயோஜனமில்லை என்றும், தான் கடந்த30 வருடங்களாக சபைக்குச் செல்வதாகவும், அங்கு, ஏறக்குறைய 3000 போதகங்களைக் கேட்டிருப்பதாகவும், ஆனால் இப்போது, போதகர் செய்த பிரசங்கங்களில் ஒன்றுக் கூட தன் நினைவில் இல்லையென்றும், போதகர் தன் நேரத்தையும், அவருடைய நேரத்தையும் வீணடிப்பதாகவும் எழுதியிருந்தார். மற்றவர்களும் அதில் சேர்ந்து விவாதிக்க ஆரம்பித்தார்கள். இது சில வாரங்களுக்குச் சென்றது. கடைசியில் ஒரு விசுவாசி எழுதினார், "எனக்கு திருமணமாகி 30 வருடங்கள் ஆகிறது. என் மனைவி ஏறக்குறைய 3200 தடவை உணவுகளை சமைத்து தந்திருக்கிறாள். அவள் என்ன சமைத்தாள் என்று கேட்டால் எனக்கு எதுவும் ஞாபகமில்லை, ஆனால் அவைகள் என் உடலுக்கு ஆரோக்கியத்தையும் நான் வேலை செய்வதற்கு எனக்கு சக்தியையும் கொடுத்து வருகின்றன. என் மனைவி சமைத்துக் கொடுத்திருக்கவில்லை என்றால், நான் இந்நேரம் சரீரபிரகாரமாக மரித்திருப்பேன். அதுப் போல நான் ஆலயத்திற்குச் சென்று கர்த்தருடைய வார்த்தைகளை கேட்கவில்லை என்றால் ஆத்தும ரீதியாக எப்போதோ மரித்திருப்பேன். தேவன் எனக்கு கொடுத்த சரீர, ஆத்மீக உணவுகளுக்காக ஸ்தோத்திரம்" என்றார்.

.

சிலருக்கு ஆலயத்திற்கு செல்வதென்றால் மிகவும் கஷ்டம். ஏனென்றால் அன்று ஒருநாள்தான் படுக்கையிலிருந்து லேட்டாக எழுந்து, ஆற அமர சாப்பிட்டு, ஓய்வெடுக்கலாமே என்ற எண்ணம். தேவனுடைய வீட்டிற்குச்சென்று அங்கு அவருடைய ஆசீர்வாதத்தை பெற்று வரும்போது நம் வாழ்க்கை செழிப்பாக மாறும். கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன் என்று தாவீது ராஜா தான் ஒரு அரசனாயிருந்தாலும் பல அலுவல்கள் இருந்தாலும் ஆலயத்திற்கு செல்லும்போது மிகுந்த மகிழ்ச்சியாயிருந்தார். மத்திய கிழக்கு நாடுகளில் எத்தனை நாடுகளில் சபைக்குச் செல்ல முடியாத தடை! அங்கு ஞாயிற்றுக் கிழமைதான் சபை என்றில்லை, வாரத்தில் எந்த நாளும் சபைக்குச் செல்லலாம், அப்படி தடையில்லாதபோது வேலையினிமித்தமாக போக முடியாத சூழ்நிலை! நம்மில் எத்தனைப் பேருக்கு ஞாயிற்றுக் கிழமை ஓய்வுநாள்! 84 ம் சங்கீதம் முழுவதும் வாசித்துப் பாருங்கள். ஆலயத்திற்கு செல்வதைக் குறித்து அருமையான வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கினறன. எனக்கு சில நேரங்களில் சபைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டபோது இந்த அதிகாரத்தை வைத்து கதறி அழுதிருக்கிறேன். கர்த்தர் கிருபையாய் இரங்கி வாரந்தோறும் செல்லும் பாக்கியத்தைக் கொடுத்திருக்கிறார். அப்பாவின் வீட்டிற்கு செல்லும்போது அவர் நம்மை நன்மைகளினால் திருப்தியாக்குகிறார். அவர் செய்த நன்மைகளை எழுதப்போனால் இந்த பக்கம் முழுவதும் போதாது. ஆலயத்திற்கு செல்வதற்கு சோம்பல் படாதீர்கள்! ஆலயத்திற்கு போவோம் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வோம்.

.

ஜெபம்

எங்களை நேசிக்கிற எங்கள் பரம பிதாவே, சிலர் சபை கூடுதலை விட்டு விடுவதுப் போல நாங்கள் விட்டு விடாதபடிக்கு உம்மேல் நாங்கள் அதிகமாய் அன்பு கூர கிருபை செய்யும். உம் வீட்டின் நன்மையினால் திருப்தியாக கிருபை செய்யும். ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன் என்று சங்கீதக் காரனோடு நாங்களும் சேர்ந்து உம்மைத் தொழுகிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே எங்கள் துதிகளை ஏறெடுக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

..
...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.