Friends Tamil Chat

செவ்வாய், 5 மார்ச், 2013

5th March 2013 - பழையவைகள் ஒழியட்டும்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 மார்ச் மாதம் 05-ம் தேதி - செவ்வாய் கிழமை
பழையவைகள் ஒழியட்டும்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. - (2 கொரிந்தியர் 5:17).

.

தன்னுடைய வீட்டில் தேவையில்லாமல் இடத்தை அடைத்துக் கொண்டிருந்த ஏராளமான பழைய பொருட்களை விற்க ஒருவர் முன்வந்தார். பழைய பொருட்கள் வாங்குபவரை அழைத்து வந்து, ஒவ்வொரு பொருளாக எடைபோட்டு கொடுக்க ஆரம்பித்தார். ஆனால் அந்த மனிதர் சில பொருட்களை விற்க மனமின்றி, அது ஏதாவதொரு உபயோகத்திற்கு ஆகும் என எண்ணி அவைகளை தனியாக எடுத்து வைத்தார். விற்பதாக சொன்ன பொருட்களில் பாதிக்கு மேற்பட்ட பொருட்களை வீட்டிற்குள் எடுத்து வைத்து விட்டார். இதை பார்த்த வியாபாரி எரிச்சடைந்து 'ஐயா எல்லா பொருட்களையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், என்றைக்காவது உதவும்' என்று சொல்லிவிட்டு எழுந்து போய் விட்டார்.
.
சிலருடைய இரட்சிப்பின் அனுபவமும் இப்படியே உள்ளது, அவர்கள் தங்களிடமு;ளள எல்லா பாவ குணங்களையும், சுபாவங்களையும் அகற்றிட விரும்பி இயேசுகிறிஸ்துவை அழைக்கின்றனர். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களின் உள்ளான ஆத்துமாவிலுள்ள ஆகாத குணங்கள், பண்புகள், தன்மைகள், எண்ணங்கள் ஆகியவற்றை அகற்றும்படி செயல்படும்போது முற்றிலுமாக அவைகளை களைய அவர்கள் விரும்புவதில்லை. சில குணங்களும், பழக்கங்களும், சிந்தைகளும் தங்களைவிட்டு விலகாமல் இருப்பதையே விரும்புகின்றனர்.
.
ஜாதியுணர்வு, பணமோகம், அந்தஸ்து மிக்கவர்களாக அறியப்படுதல், தாழ்நதுபோக விரும்பாமை, வைராக்கியமாக இருத்தல், கசப்பை விட மறுத்தல் ஆகிய ஆகாத சுபாவங்களை தங்களிடம் வைத்துக் கொண்டே வேறு பல தீங்காகன குணங்களை விட்டு விட வாஞ்சிப்பர். ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஒரு ஒட்டு மொத்த மாறுதலுக்கு ஏதுவாகவே நமக்குள் கிரியை செய்ய விரும்புகிறார். சில விஷயங்களில் நாம் ஆவிக்கேற்றவர்களாக மாற விரும்பியும், வேறு சில விஷயங்களில் பழைய ஜென்ம சுபாவ நிலையில் நாம் நீடிக்கவும் விரும்பும்போது, ஆவியானவர் நம்மிடம் தொடந்து தங்கியிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இது ஒரு உண்மையான பரிசுத்த வாழ்விற்கான விருப்பம் அல்ல.
.
ஆவியானவர் நம்மிடம் கிரியை செய்து நம்மை முற்றிலும் பரிசுத்தமான ஒரு நிலைக்கு கொண்டு வர விரும்புகிறார். ஆகவே நாம் விரும்புகிற, விரும்பாத எல்லா காரியங்களையும் அவை தேவனுக்கு பிரியமற்றிருந்தால் அவற்றை அப்புறப்படுத்த ஆவியானவரை அனுமதித்து, ஒத்துழைக்க வேண்டியது மிக அவசியம்.
.
பிரியமானவர்களே, பழைய பொருட்களில் சில நமக்கு வேண்டுமென்று வைத்திருந்தோமானால், அவை துரு பிடிக்கும்போது நம்மை காயப்படுத்தி விடும். அதுப்போல பழைய சுபாவங்களும், வேண்டாத சுபாவங்களும் நம்மை காயப்படுத்துவதோடு, பிறருக்கும் இடைஞ்சலாக இருக்கும். அரைகுறை அர்ப்பணிப்பும், அரைகுறை விசுவாசமும் நம்மை நட்டாற்றில் விட்டுவிடும்;. முழுமையான சுத்திகரிப்பிற்காக நம்மை தேவ கரத்தில் முழுமனதோடு விட்டுக் கொடுப்போம். புதுவாழ்வை பெற்றுக் கொள்வோம். ஆமென் அல்லேலூயா!

.

சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே

விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே

பாவி நீசப்பாவி நானையா

தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ

.
பரிசுத்தர் கூட்டம் நடுவில்

ஜொலித்திடும் சுத்த ஜோதியே

அரூபியே இவ்வேளையில்

அடியார் நெஞ்சம் வாரீரோ

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த நல்ல வேளைக்காக உம்மை துதிக்கிறோம். நாங்கள் எங்கள் பாவ காரியங்களை முற்றிலும் வெறுத்து, நீர் விரும்பாத காரியங்கள் எதையும் எங்களுக்குள்ளே வைத்திருக்காதபடி, முற்றிலுமாய் அவற்றை விட்டுவிட கிருபை செய்யும். எங்கள் இதயத்தில் முழுமையாக நீரே அரசாளும்படி ஒப்புக்கொடுக்கிறோம். தேவன் விரும்பாத எந்த காரியமும் எங்கள் வாழ்வில் காணப்படாதபடி எங்களை முழுமனதோடு உம்மிடம் ஒப்புக் கொடுக்கிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

ஜெபக்குறிப்பு

pray1another

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, எங்கள் ஜெபத்தை கேட்பவரே, குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தப்படும், ஜெயமோ கர்த்தரால் வரும் என்ற வசனத்தின்படி, எங்கள் பிள்ளைகள் பரிட்சைக்கு தங்களை ஆயத்தப்படுத்தி, இந்த நாட்களில் எழுதிக் கொண்டிருக்கிறதை நீர் காண்கிறீரே உமக்கு நன்றி. நீரே அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஜெயத்தை தருவீராக. ஒவ்வொரு பிள்ளையும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து பாஸ் பண்ணும்படி அவர்களுக்கு விசேஷித்த ஞானத்தை தருவீராக. அவர்கள் படித்த பாடங்களை மறவாதபடி, நல்ல ஞாபக சக்தியையும், அறிவாற்றலையும் கொடுப்பீராக. எந்த பயமும் வந்து, அவர்கள் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் எழுத முடியாமல் போகாதபடி, உம்முடைய கிருபையால் அவர்களை சூழ்ந்து கொள்ளும்.

.

எங்கள் பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்று அவர்கள் பெயர்கள் செய்தித்தாள்களில் வரும்படியாக, நல்ல வெற்றியை அவர்களுக்கு கொடுப்பீராக. நீர் அப்படி செய்வதற்காக உமக்கு கோடானு கோடி நன்றி. எங்கள் ஜெப விண்ணப்பங்களை இயேசுகிறிஸ்து மகாஇராஜாவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.