Friends Tamil Chat

வியாழன், 28 மார்ச், 2013

28th March 2013 - மனத்தாழ்மை

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 மார்ச் மாதம் 28-ம் தேதி - வியாழக் கிழமை
மனத்தாழ்மை
....

மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். - (பிலிப்பியர் 2:3).

.
மனத்தாழ்மை ஒவ்வொரு கிறிஸ்தவனையும் அலங்கரிக்க வேண்டிய பண்பு. நாம் மெய்யாகவே தாழ்மையுள்ளவர்களாயிருந்தால், புறக்கணிப்புகள், உபத்திரவங்கள், காட்டிக்கொடுக்கப்படுதல், புயல்காற்றுகள் இவை ஒன்றும் நம்மை கலக்கமடைய செய்ய முடியாது. தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் கிருபையளிக்கிறபடியினால் அவருடைய கிருமை நம்மை சூழ்ந்து கொள்ளும். இதை ஒரு அம்மையார் சிறிய உதாரணத்துடன் விளக்குகிறார்.

.

.
ஒரு பெரிய கர்வாலி மரமும் சிறிய புல்லும் பற்றிய ஒரு சிறுகதை உண்டு.

அக்கர்வாலி மரம் தன்னருகில் வளர்ந்து வந்த சிறிய புல்லை நோக்கி, 'ஓ

அற்பப்புல்லே, நீ எவ்வளவு பெலனற்றதும், நிலையற்றதும்

சிறியதுமாயிருக்கிறாய்! ஆனால் என்னைப் பார் நான் எவ்வளவு

உயர்தோங்கி பெரிய மரமாயிருக்கிறேன்' என்று அடிக்கடி பெருமையடித்துக்

கொண்டது. தன்னைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொள்ள அந்த

புல்லுக்கு ஒன்றுமில்லாதிருந்தபடியால் அது எப்போதும் அமைதியாகவே

இருக்கும். ஒரு நாள் ஒரு பலத்த புயல் காற்று வீசவே, அந்த பலம் வாய்ந்த

கர்வாலி மரம் ஆட ஆரம்பித்தது, தன்னால் இயன்ற மட்டும், நேராக நிமிர்ந்து

நிற்க முயற்சித்தும் அது வெகு சீக்கிரமாகவே பெருஞ்சத்தத்துடன் தரையில்

விழுந்து விட்டது.
.

.
புயல் காற்று ஓய்ந்தபோது, கர்வாலி மரம் புல்லுக்கு என்ன நேர்ந்தது என்று

அறியும்படி மெதுவாக அதனை எட்டிப்பார்த்தது. புல் எப்போதும் போல்

தழைத்து நின்று கொண்டிருந்தது. அதை கண்ணுற்று வியப்படைந்த

கர்வாலிமரம், 'ஓ, சிறிய புல்லே, அவ்வளவு உயர்ந்தோங்கிய என்னாலேயே

அப்பலத்த புயற்காற்றில் நிலைநிற்க முடியவில்லையே, நீ இவ்வளவு சிறிய

அற்பப்புல்லாயிருந்தும், உன்னால் எப்படி அப்புயலை சமாளிக்க

முடிந்தது?'என்று கேட்டது. அதற்கு அந்தப்புல் புன்முறுவுலுடன், 'அது

மிகவும் எளிதானது. காற்றும் புயலும் என் மீது வீசும்போது நான் தலை

குனிந்து கொள்வேன். அப்பொழுது அவை எனக்கு எந்த பிரச்சனையையும்

உண்டாக்காமல் எனக்கு மேலாக கடந்து சென்று விடும்' என்று பதிலளித்தது,
.

.
தாழ்மை எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நற்பண்பு பார்த்தீர்களா? நாம்

மற்றவரை மன்னிக்க பழகும்வரை ஒருக்காலும் மெய்யான மனத்தாழ்மையை

கற்றுக் கொள்ள முடியாது. மன்னிக்க முடியாத ஒவ்வொரு ஆவியின்

அடித்தளத்திலும் பெருமை நிறைந்திருக்கிறது. நம்மை யாராகிலும்

தரக்குறைவாய் பேசி அவமதிக்கும்போது நம் மனம் புண்படுமாயின்,

உண்மையில் புண்படுத்தப்பட்டிருப்பது நம்முடைய பெருமையே ஆகும்.
.

.
நாம் ஆழமாக புண்படுத்தப்பட்டிருக்கிறோம் என்று சொல்வோமாகில்

நம்மில் ஆழமான பெருமை இருக்கிறது என்றே பொருள். இருப்பினும் நாம்

அதை ஒத்துக் கொள்ள மனதற்றவர்களாயிருக்க கூடும். அதுவும்

பெருமையினிமித்தமே. மாறாக தாழ்மை நம் இருதயத்தில் தங்குமேயானால்

நிச்சயமாகவே தேவனுக்கு பிரியமற்ற அநேக காரியங்களிலிருந்து நாம்

தப்பிக்க முடியும். தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்.

தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிப்பதால் எப்போதும்

தாழ்மையையே தரித்துக் கொள்ள தேவன் நமக்கு கிருபை செய்வாராக!

ஆமென் அல்லேலூயா!

.

தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை

வாழ்நாளெல்லாம் அது போதுமே

சுகமுடன் தம் பெலமுடன்

சேவை செய்ய கிருபை தாருமே

ஜெபம்
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, தாழ்மையுள்ளவர்களுக்கு நீர் கிருபை அளிப்பதால், நாங்கள் எங்களை உம்முடைய சமுகத்தில் தாழ்த்துகிறோம் ஐயா. பெருமை எங்களுக்குள் வந்துவிடாதபடி, எங்களை எப்போதும் தாழ்த்த கிருபை தாரும். மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள் என்ற வசனத்தின்படி மற்றவர்களை எங்களிலும் மேன்மையுள்ளவர்களாக எண்ணும்படி தாழ்ந்த சிந்தையை எங்களுக்கு தருவீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
...

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.