Friends Tamil Chat

திங்கள், 8 டிசம்பர், 2014

08th December 2014 – இவ்வளவாய் அன்புகூர்ந்த தேவன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 டிசம்பர் மாதம் 08-ம் தேதி - திங்கட் கிழமை
இவ்வளவாய் அன்புகூர்ந்த தேவன்
...........

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். - (யோவான் 3:16).

.

ஒரு சபையின் ஆராதனையில் போதகர் ஆராதனையை முடித்து விட்டு, அன்று பேச வந்திருந்த விசேஷித்த போதகரை குறித்து அறிமுகம் செய்து விட்டு போய் உட்கார்ந்தார். அந்த வயதான போதகரும் ஒரு உதாரணத்தின் மூலம் செய்தியை சொல்ல ஆரம்பித்தார்.

.

'ஒரு தகப்பனும், அவருடைய மகனும், மகனுடைய நண்பனும், என்று மூவருமாக பசிபிக் கடலில் ஒரு படகில் உல்லாச பயணமாக சென்றிருந்தார்கள். நடுக்கடலில் சென்று கொண்டு இருந்தபோது, திடீரென்று புயல் உருவாக ஆரம்பித்தது. படகு நடுக்கடலில் மாட்டி கொண்டது. தகப்பன் படகை ஓட்ட நன்கு அறிந்திருந்தவரானாலும், படகு புயலில் சிக்கி கொண்டதால் என்ன செய்வது என்று திகைத்த நேரத்தில் படகு கவிழ்ந்து மூன்று பேரும் கடலில் விழுந்தார்கள்' அவர் சொல்லி கொண்டிருந்த சம்பவத்தை இரு வாலிபர்கள் உன்னிப்பாக கேட்டு கொண்டிருந்ததை அந்த போதகர் கவனித்தவாறே அந்த சம்பவத்தை தொடர்ந்தார்.

.

அந்த தகப்பன், தன் கையில் கிடைத்த கயிற்றை ஒரு பக்கத்தை தன் இடுப்பில் கட்டிக்கொண்டு, மற்ற நுனியை இரண்டு பிள்ளைகளில் யாருக்கு கொடுப்பது என்று மனதில் போராடியவாறு பொங்கி எழும் அலைகளின் மத்தியில் போராடும் தன் மனதை கட்டுப்படுத்தியவாறு, தன் மகன் இரட்சிக்கப்பட்டவன் என்பதையும், மற்றவனோ இன்னும் இரட்சிக்கப்படவில்லை என்பதையும் அறிந்திருந்த தகப்பன், தன் மகனிடம் 'மகனே, நான் உன்னை நேசிக்கிறேன்' என்று கதறியவாறே, அந்த கயிற்றின் மற்றொரு நுனியை எடுத்து, மற்ற பையனிடம் வீசினார். அதை பிடித்தவாறே இருவரும் படகை பிடித்து கொண்டு கரை வந்து சேர்ந்தனர். மகனோ, கொந்தளிக்கும் கடலில் கண்களின் முன்பாக மூழ்கி போவதை கண்டவாறே தகப்பன் கரையில் போய் விழுந்தார். அவனது சரீரம் திரும்ப கிடைக்கவே இல்லை.

.

இதை சொல்லிவிட்டு போதகர் சற்று நிறுத்தியபோது, அந்த இரண்டு வாலிபர்களும், அவர் என்ன சொல்ல போகிறார் என்று ஆவலோடு அவர் முகத்தை பார்த்து கொண்டிருந்தார்கள்.

.

போதகர் தொடர்ந்தார், அந்த தகப்பன் தன் மகன் மரித்தாலும், இயேசுவோடு கூட என்றும் ஜீவித்திருப்பான் என்றும், மற்ற வாலிபனோ, ஒருவேளை மரித்திருந்தால், நித்திய நரகத்திற்கு சென்றிருப்பான் என்பதை அறிந்திருந்ததால், நண்பனை காப்பாற்ற வேண்டி தன் சொந்த மகனை அவர் தத்தம் செய்தார்.

.

நம் பரம தகப்பனும், தம்முடைய ஒரே பேறான குமாரனை நாம் இரட்சிப்படைய வேண்டி, அவரை தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தாரே, இன்றே அவர் அளிக்கும் பாதுகாக்கும் கயிற்றை பிடித்து கொண்டு அவரிடம் வந்து விடுங்கள், இன்றே இரட்சிப்பை பெற்று கொள்ளுங்கள்' என்று கூறி, தன்னிடத்தில் வந்து அமர்ந்தார். அவருக்குப்பின் போதகர் வந்து, சபையை முடித்தபோது, அந்த இரண்டு வாலிபர்களும், அந்த வயதான போதகரின் முன் வந்து, 'நீர் எங்களுக்கு சொன்ன கதை அற்புதமாக இருந்தது, நீங்கள் சொன்ன மாதிரி எந்த தகப்பன், தன் சொந்த மகனை விட்டு விட்டு மற்றவனை காப்பாற்ற முடியும்?' என்று கேட்டார்கள். அப்போது அந்த வயதான போதகர், தன் கண்களை துடைத்து கொண்டு, 'உங்களால் நம்ப முடியவில்லை இல்லையா? உங்களுக்கு தெரியுமா? அந்த தகப்பன் நான் தான் என்றும், என் மகனின் அந்த நண்பன் உங்கள் போதகர் என்றும் சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?' என்று கேட்டார்.

.

ஒரு உலகப்பிரகாரமான தகப்பன் தன் பிள்ளையை மற்ற பிள்ளை இரட்சிக்கப்படும்படியாக பலியாக கொடுக்கும்போது, நமது பரம தகப்பன் தமது சொந்த குமாரனை நாம் இரட்சிக்கப்படும்படியாக அனுப்பியது அதிக நிச்சயமல்லவா? அவர் நம்மேல் வைத்த அளவில்லாத நேசத்தால் தமது சொந்த குமாரன் என்றும் பாராமல் அவரை நமக்காக கொடுத்தாரே, அவருக்கு, ஆயிரம் நாவுகள் இருந்தாலும் துதி சொல்லி முடியாது. இன்றே இரட்சண்ய நாள் என்று அவர் கொடுக்கும் இலவசமான இரட்சிப்பை நாம் பெற்று கொள்வோமா?

.

அன்று ஒரு நாள் தேவன் ஆபிரகாமை அழைத்து, 'உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு' (ஆதியாகமம் 22:2) என்று கூறினபோது, அதற்கு அவன் கீழ்ப்படிந்தபோது, அந்த மகனை பலியிடாதபடி காத்து கொண்ட நல்ல தேவன் ஒரு நாள் தம்முடைய ஒரே பேறான குமாரனையே உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாக அனுப்பி, உலகத்தை பாவத்திலிருந்து மீட்டெடுத்தாரே! அவர் நம்மேல் வைத்த நேசமும் பாசமும் எத்தனை பெரியது! அந்த நேசத்தை உணர்ந்தவர்களாக நாமும் அவர் நம்மை அழைக்கும் சத்தத்தை கேட்டு அவரிடம வந்து விடுவோமா?

.

உங்க நேசம் பெரியது

தேவனின் நேசம் பெரியது

அது அளவிட முடியாதது

அது பாரபட்சம் இல்லாதது

இயேசுவின் நேசத்தினால்

என் உள்ளமெல்லாம் பொங்குதம்மா

என் உள்ளமெல்லாம் பொங்குதம்மா

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசிக்கிற எங்கள் நல்ல தகப்பனே, உம்முடைய அளவற்ற நேசத்திற்காய், பாசத்திற்காய் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் மேல் நீர் வைத்த நேசத்தினால், உம்முடைய ஒரே பேறான குமாரனையே எங்களுக்காக தந்தருளி, எங்கள் பாவத்தை போக்கும் ஜீவாதார பலியாக அவருடைய திரு இரத்தத்தினால் எங்கள் பாவங்களை போக்கினீரே உமக்கு கோடி நன்றிகள் ஐயா. நாங்களும், எங்கள் தகப்பனாகிய உம்மையும், உமது ஒரே பேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவையும், எங்களது தேற்றவாளனாகிய பரிசுத்த ஆவியானவரையும் நேசிக்கிறோம் தகப்பனே. நீர் எங்கள் மேல் வைத்த நேசத்தை நாங்கள் உணர்ந்து, எங்கள் பாவத்தை அறிக்கையிட்டு, நீர் கொடுக்கும் இரட்சிப்பை பெற்று கொள்ளுகிறோம் தகப்பனே. இயேசுகிறிஸ்துவை எங்கள் சொந்த இரட்சகராக ஏற்று கொள்கிறோம் ஐயா. எங்களை மன்னித்து, நித்திய ஜீவனை எங்களுக்கு கொடுப்பீராக. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.