Friends Tamil Chat

வியாழன், 30 அக்டோபர், 2014

30th October 2014 ஆவியின் கனியோ... சமாதானம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 அக்டோபர் மாதம் 30-ம் தேதி - வியாழக் கிழமை
ஆவியின் கனியோ... சமாதானம்
...........

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. -(கலாத்தியர் 5:22-23)

.

மூன்றாம் சுளை சமாதானம்:

.

இந்த நாட்களில் மனிதன் சமாதானத்தை தேடி எங்கெங்கோ அலைகிறான். நாட்டுக்கு நாடு சமாதானமில்லை, மனிதனுக்கு மனிதன் சமாதானமில்லை, மதத்திற்கு மதம் சமாதானமில்லை, குடும்பங்களுக்குள் சமாதானமில்லை, ஏன் மனிதனுக்குள்ளேயே சமாதானமில்லை.

.

சமாதானப் பேச்சு வார்த்தை என்று சொல்லி, பெரிய நாடுகளின் தலைவர்கள் கூட்டங்கள் கூட்டி பேசினாலும், எந்த முடிவும் எடுக்கப்படாமல், சமாதான குறைவையே ஒவ்வொரு நாடும் சந்தித்து வருகின்றன.

.

எந்த இடத்திலுமிருந்து சமாதானம் வராது. சமாதானத்தை தருகிறவர் இயேசுகிறிஸ்து மாத்திரமே ஏனெனில் அவரே சமாதானப்பிரபு என்றழைக்கப்படுகிறார். ஒரு கதை உண்டு, ஒரு முறை அமெரிக்க அதிபரும், ரஷிய அதிபரும், இஸ்ரவேலின் அதிபரும் சந்திக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் கர்த்தரிடம் ஒரு கேள்வியை கேட்டார்கள். முதலாவது, அமெரிக்க அதிபர் வெள்ளையினத்தவருக்கும், கறுப்பினத்தவருக்கும் எப்போதாவது சமாதானம் உண்டாகுமா? ஏன்று கேட்டார். அதற்கு கர்த்தர் உன்னுடைய வாழ்நாள் முழுவதிலும் அதைக் காண மாட்டாய் என்றார். அடுத்தது ரஷிய அதிபர், அமெரிக்காவிற்கும், ரஷியாவிற்கும் சமாதான உடன்படிக்கை ஏற்படுமா? ஏன்று கேட்டார். அதற்கு கர்த்தர் உன்னுடைய வாழ்நாள் முழுவதிலும் அதைக்காண மாட்டாய் என்று கூறினார். அடுத்ததாக இஸ்ரவேலின் அதிபர், கர்த்தரிடம், இஸ்ரவேலருக்கும், பாலஸ்தீனியருக்கும் இடையே சமாதானம் உண்டாகுமா? ஏன்று கேட்டார். அதற்கு கர்த்தர் என்னுடைய வாழ்நாள் முழுவதும் அதைக்காண மாட்டாய் என்றாராம். எருசலேம் என்பதற்கு சமாதானம் என்றுப் பொருள். ஆனால் இதுவரை அங்கு சமாதானம் என்பது துளியளவும் இல்லை.

.

நம்மைப் போல அல்ல, அரபியர் ஒருவரையொருவர் காணும்போது, சலாமாலைக்கும் என்று வாழ்த்து சொல்லிதான் சந்திக்கிறார்கள். ஆனால் சமாதானம் அவர்களிடம் கிடையாது. இஸ்ரவேலர் ஷாலோம் அலைக்கும் என்று வாழ்த்துகிறார்கள். அவர்களுக்குள் சமாதானம் இருந்தாலும், வெளிப்படையாக சமாதானம் என்பது இல்லை.

.

வேதத்தில் மூன்று சமாதானங்களைக் குறித்துப் பார்க்கிறோம்

.

1. தேவனிடத்தில் சமாதானம்: இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம் (ரோமர் 5:1).

.

2. உள்ளான சமாதானம்: நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் (பிலிப்பியர் 4:6-7).

.

3. வெளிப்புறத்தில் சமாதானம்: யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே (எபிரேயர் 12:14).

.

இந்த மூன்று வகை சமாதானமும் ஒரு மனிதனுக்குள் இல்லாவிட்டால் அவனது வாழ்வு நரகமாகவே இருக்கும். தேவனோடும், நம் உள்ளான மனிதனோடும், வெளியுலகில் உள்ள மற்றவர்களோடும் நாம் சமாதானம் அற்றிருப்போமானால் நம் வாழ்வில் சமாதானம் என்பது துளியும் இராது.

.

நம் வாழ்வில் சமாதானம் எப்போது வரும்? சமாதானக்காரணராகிய இயேசுகிறிஸ்து வரும்போது மட்டுமே! ஏனெனில் அவர்தான் சொன்னார், சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்ளூ உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக (யோவான் 14:27) என்று நம்மை ஆற்றினவர் அவர்தாமே!

.

ஒரு மனிதன் கையில் ஒரு துப்பாக்கியுடன் ஒரு பேங்க்கை கொள்ளையிட சென்றான். அவன் அதில் 6000 டாலரை கொள்ளையடிக்கும்போது, பிடிபட்டான். அவனுடைய துப்பாக்கி மியூசியத்திற்கு சென்றது. அவனுடைய துப்பாக்கி பழைமை வாய்ந்த அருமையான ஒரு துப்பாக்கி. ஆதை விற்றால் 10,000 டாலர் விலைபோயிருக்கும். ஆனால் அதை அவன் அறியாதவனாக வங்கியை கொள்ளையடிக்க சென்று, பிடிபட்டு, சிறையில் வாடினான்.

.

அதுப்போல கிறிஸ்தவர்களும், கிறிஸ்துவே நம்முடைய சமாதான காரணர் (எபேசியர் 2:14) என்பதை அறியாதவர்களாக, சமாதானத்தை தேடி அங்கும் இங்கும் அலைகிறார்கள். ஏந்த சூழ்நிலையிலும் கர்த்தர் நமக்குள் இருந்தால், ஆவியின் கனியாகிய சமாதானம் நம்மை சூழ்ந்திருக்கும். எந்த புயல் அடித்தாலும் மனதின் அடியில் அசைக்க முடியாத சமாதானம் நிறைந்திருக்கும்.

.

இயேசுவோடு பயணம் செய்த சீஷர்கள் நடுக்கடலிலே புயல் வீசி கடல் கொந்தளித்தபோது, 'ஆண்டவரே எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள். அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று' (மத்தேயு 8:25-26) என்று காற்றையும் கடலையும் அதட்டி அமைதிப்படுத்தினவர், நம் வாழ்வில் கர்த்தர் இருந்தால் வீசும் புயலையும், காற்றையும் அதட்டி நம் வாழ்விலும் வசந்தம் வீசச்செய்வார்.

.

தேவ சமாதானத்தினால் நாம் ஒவ்வொருவரும் நிரம்பியிருப்போம். ஆவியின் கனியாகிய சமாதானம் நிறைந்திருக்கும்போது, நம் நித்திரை இனிமையாயிருக்கும், நம் குடும்ப வாழ்வு, சபை, சமுதாய வாழ்வு இனிதாயிருக்கும். சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. (2தெச-3:16). ஆமென் அல்லேலூயா!

.

யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்

ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே

.

கர்த்தர் நாமம் என் புகலிடமே

கருத்தோடு துதித்திடுவேன்

.

ஜெபம்
எங்கள் அன்பின் சமாதானக் கர்த்தரே, சமாதானம் இன்றி தவிக்கிற ஒவ்வொருவருக்கும் சமாதானத்தை கட்டளையிடுவீராக. என்னுடைய சமாதானத்தையே கொடுக்கிறேன் என்று சொன்ன இயேசுகிறிஸ்துவின் சமாதானம் ஒவ்வொருவரையும் நிரப்பட்டும். எந்த சூழ்நிலையிலும் ஆவியின் கனியாகிய சமாதானம் எங்கள் வாழ்வில் நிறைந்து காணப்பட கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
........

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.