Friends Tamil Chat

வியாழன், 23 அக்டோபர், 2014

24th October 2014 - காலை நேரம் இன்ப ஜெப தியானமே

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 அக்டோபர் மாதம் 24-ம் தேதி - வெள்ளிக்கிழமை
காலை நேரம் இன்ப ஜெப தியானமே
..........

அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். - (சங்கீதம் 143:8).

.

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அமெரிகாவின் 16ஆவது ஜனாதிபதியாக இருந்தவர் இவர். அந்நாட்களில் ஒரு நாள் அதிகாலையில் மூத்த அரசு அலுவலர்கள் அவரை பார்த்து ஒரு முக்கியமான காரியத்தில் அவருடைய ஆலோசனையை பெறும்படி சென்றிருந்தார்கள். அவரது அறையின் அருகில் சென்ற போது அவர் யாருடனோ பேசி கொண்டிருந்தது போல் பேச்சு குரல் கேட்டது, ஆகவே இவரை தொந்தரவு செய்ய மனமில்லாமல் அவர் வரும் வரை பக்கத்து அறையில் காத்திருந்தனர்.

.

வெகு நேரம் கழித்து ஆபிரகாம் லிங்கன் வெளியே வந்தார். 'ஐயா நாங்கள் காலை 5 மணிக்கே வந்து விட்டோம். நீங்கள் யாருடனோ பேசி கொணடிருந்தீர்கள். ஆகவே காத்திருந்தோம்' என்றனர். 'வேறு யாருமல்ல, நான் ஆண்டவரோடு பேசி கொண்டிருந்தேன்' என்று ஆபிரகாம் சொன்னவுடன் அவாகளுக்கொல்லாம் பெரிய ஆச்சரியம்! அவர்களது வியப்பை கண்ட ஆபிரகாம் சிறிது விளக்கம் அளித்தார். 'நான் சிறு பையனாக இருககும் போது காடுகளில் விறகு வெட்டி ஜீவனம் செய்து வந்தேன். என் பாட்டி தான் என்னை பராமரித்து வந்தார்கள். அவர்கள் எனக்கொரு வேதத்தை கொடுத்து ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் எழுந்தவுடன் அதை தியானிக்க வேண்டும் என்றும், ஆண்டவருடன் மாத்திரமே முதலில் பேச வேண்டும் என்றும் கூறினார்கள். அந்த பாடத்தை இன்னும் விட்டு விடாமல், முதலில் ஆண்டவருடன் நான் பேசுகிறேன்' என்றார்.

.

நாம் முதலில் யாரோடு பேசுகிறோம்? அன்றைய செய்தி தாளுடனா? அல்லது தொலைகாட்சி பெட்டியுடனா, அல்லது மற்றவர்களுடனா? யாருடன் முதலில் பேசுவீர்கள்? அதிகாலையில் எழும்பும் பழக்கம் உண்டா? தொலைபேசி அழைப்போ, அல்லது யாரோ எழுப்பிதான் நீங்கள் எழுவதுண்டா? இவர்கள் உங்களை எழுப்புவதற்கு முனபே தேவனோடு உறவாடி, அவருடைய பிரசன்னத்தில் மகிழ்ந்திருப்பீர்களானால் தூங்கி வழிந்த முகத்தோடு அல்ல, புன்சிரிப்போடு எழுந்தரிப்பீர்கள். யாரையும் புன்சிரிப்போடு சந்திப்பீர்கள். அந்த நாளின் எல்லா காரியங்களிலும் நிதானத்தோடு யோசித்து செயல்படுவீர்கள். அன்று வரும் பிரச்சனைகளினால் பதற்றப்பட்டு உங்க்ள சமாதானத்த இழக்க மாட்டீர்கள். கர்த்தரை நம்பி அவர் பொறுப்பில் விட்டு விடுவீர்கள்.

.

ஆம், அதிகாலை நேரத்தை அன்பருடன் செலவிடுவது ஒரு இன்பமான வேளை. 'என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப்பார்க்கிலும் என் வருமானம் நல்லது. என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும் படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்' (நீதிமொழிக்ள 8:17-21). இந்த இடத்தில் இயேசுகிறிஸ்துவைப்பற்றி கூறப்பபட்டுள்ளது. அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள் என்றுஇயேசுகிறஸ்து கூறுகிறார். அப்படி அவரை அதிகாலையில் தேடி கண்டடையும்போது, அவர்களை ஆசீர்வாதத்தின் ஊற்றுகளாக தேவன் மாற்றுகிறார். ஐசுவரியமும் கனமும், நிலையான பொருளும், நீதியும் அவர் நமக்கு கொடுத்து, நம்முடைய களஞ்சியங்களை நிரப்பி, நீதியின் பாதைகளில் நம்மை நடத்துகிறார்.

.

உலக மனிதர்கள் யாருடனும் பேசும் முன்பே உலகை படைத்த தேவனுடன் பேசுவது எத்தனை பாக்கியம்! அந்த நாளை அவருடைய பொற் பாதத்தில் சமர்ப்பித்து, அந்த நாளுக்குரிய கிருபைகளை பெற்று கொண்டு ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்க தேவன் தாமே நம் ஒவ்வொருக்கும் கிருபை தருவாராக! ஆமென் அல்லேலூயா!

.

அதிகாலையில் உம் திருமுகம் தேடி

அர்ப்பணித்தேன் என்னையே

ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்

அப்பனே உமக்கு தந்தேன்

ஆராதனை ஆராதனை

அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே

.

ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, காலைதோறும் உம்முடைய கிருபைகள் புதியவைகளாய் இருந்து, உம்மை தேடி வருகிறவர்களை அன்பு கூர்ந்து, அந்த புதிய கிருபைகளால் அவர்ளை நிரப்புகிறவரே உம்மை துதிக்கிறோம். நாங்கள் இந்த உலகத்தில் எந்த மனிதரையும சந்திப்பதற்கு முன் உம்மை சந்தித்து விட கிருபை செய்யும். ஒவ்வொரு நாளும் உம்மிலே களிகூர்ந்து ஆரம்பித்து, உலகத்தில் நாங்கள் எதிர்கொள்ளுகிற ஒவ்வொரு காரியத்திலும் வெற்றியை பெற்று கொள்ள எங்களை தயார்படுத்தும். அதிகாலையில் என்னை தேடுகிறவர்கள் என்னை கண்டடைவார்கள் என்று சொன்னீரே, உம்மை கண்டு கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
.....

pray1another

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.