Friends Tamil Chat

வெள்ளி, 31 ஜனவரி, 2014

31st Jan 2014 - உபத்திரவத்தின் மூலம் பாடம்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2014 ஜனவரி மாதம் 31-ம் தேதி - வெள்ளி கிழமை
உபத்திரவத்தின் மூலம் பாடம்
கடைசியில் இருக்கும் ஜெப குறிப்புக்காக ஜெபிக்கவும்.

நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். - (சங்கீதம் 119:71).

.

ஒருதேவனோடு நெருங்கி வாழ்நத ஒரு வியாபாரி தன் வியாபாரம் செழித்தவுடன் தேவன் விட்டு விலகி தூரமாய் சென்று விட்டார். சபையிலுள்ள மூத்தவர்கள் அவரை மீண்டும் தேவனண்டை வரும்படி புத்தி சொன்னார்கள். ஆனால் அவரோ தன் வியாபாரத்திலே முனைப்பாக இருந்துவிட்டார்.

.

ஒரு நாள் வியாபாரியின் மூன்று பிள்ளைகளில் மூன்றாவது மகனை ஒரு விஷப்பாம்பு கடித்ததால் அவன் மரணத்தருவாய்க்கு வந்தான். மருத்துவர்கள் கைவிட்டு விட்டார்கள். இச்சூழ்நிலையில் இவர் மிகுந்த பாரத்தோடு சபை மூப்பர் ஒருவரை ஜெபிக்கும்படி அழைத்தார்.

.

வந்த மூப்பர் ஞானமுள்ள தேவ மனிதர், அவர் ஜெபிக்க தொடங்கி, 'தேவரீர் நீர் இந்த பிள்ளையை கடிக்கும்படி ஒரு பாம்பை அனுப்பினதற்காக நன்றி செலுத்துகிறேன். நாங்கள் கடந்த ஆறு ஆண்டுகளாய் இந்த குடும்பம் உம்மைத் தேடும்படி எடுத்துக் கொண்ட எந்த முயற்சியும் பலனளிகக்வில்லை. ஆனால் எங்களால் முடியாததை இந்த பாம்பு நொடிப்பொழுதில் செய்து முடித்து விட்டதே! இப்போதும் இவர்கள் தங்கள் பாடத்தைக் கற்றுக் கொண்டார்கள். இயேசுவின் நாமத்தில் தயவு கூர்ந்து இந்த பிள்ளையை சுகமாக்கும், இனியும் இவர்கள் உம்மை நினைவுகூர்வதற்கு எந்த ஒரு பாம்பும் வரும் நிலை ஏற்படாதிருக்க அருள் செய்யும்' என்று ஜெபித்து முடித்தார். சற்று நேரத்திற்குள் பிள்ளையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, தேவன் அற்புத சுகத்தை கொடுத்தார்.

.

பொதுவாகவே மனித இயல்பு அப்படியாயிருக்கிறது. இப்பூமிக்குரிய வாழ்வு எந்த துன்பம் இல்லாமலும், தரித்திரம் இல்லாமலும், நோய் இல்லாமலும் சொகுசான வாழ்க்கை இருக்குமென்றால் தேவனைக் குறித்த சிந்தை கிட்டத்தட்ட ஒருவருக்குமே ஏற்படாது. இதன் நிமித்தமே தேவன் இவ்வுலகத்தில் பாதுகாப்பற்ற வாழ்வையும், துன்பங்களையும் உபயோகித்து, தேவையான நேரத்தில் நாம் அவரிடம் திரும்பவும், அவரை தேடவும் வைக்கிறார். காரணம் நம் சரீரத்தை விட ஆத்துமா மேன்மையானதல்லவா? இப்படித்தான் தீமைகளை நம் ஆத்துமாவிற்கு நன்மையாக மாற்றுகிறார்.

.

பிரியமானவர்களே, நம் வாழ்வில் வரும் பிரச்சனைகளும், வியாதிகளும், பாடுகளும் நம் அன்பின் தேவனால் அனுமதிக்கப்பட்டதே! தேவன் நம்மீது கொண்ட அன்பின் சின்னமாகவே இவைகள் இருக்கின்றன. அவருடைய சித்தமில்லாமல் நம் தலையிலிருந்து ஒரு முடியும் கூட கீழே விழுவதில்லை. ஆம், தீமைகளை தேவன் உபயோகித்து, அதன் மூலம் நம்மை பாவங்களிலிருந்தும், பின்மாற்றத்திலிருந்தும் திரும்பும்படி செய்கிறார். இதன் மூலம் பரலோகத்திலுள்ள நம் நித்திய வீட்டை கண்டுகொள்ளும்படி தேவன் நடத்துகிறார். ஆமென் அல்லேலூயா!

.

சோதனைகள் வந்தாலும் சோர்ந்து போகாதே

வேதனைகள் வந்தாலும் தளர்ந்து போகாதே

பெலன் தரும் தேவன் இருக்கிறார்

கிருபையால் உன்னை நிரப்பிடுவார்

.

காலங்கள் மாறிடலாம் கர்த்தர் மாறுவதில்லை

மாந்தர்கள் மறந்திடலாம் இயேசு மறப்பதில்லை

ஜெபம்
எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, நீர் எங்கள் நன்மைக்காவே தீமைகளையும், பாடுகளையும், துன்பங்களையும் அனுமதிக்கிறீர் என்று உணர்ந்து, உம்மை இன்னும் அதிகமாய் தேடவும், எங்களுடைய தீய வழிகளிலிருந்து நாங்கள் திருந்தி, உம்மிடம் நெருங்கி ஜீவிக்கவும் கிருபை செய்யும். பரலோக இராஜ்யத்திற்கு பாத்திரவான்களாக எங்களை மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
ஜெபக்குறிப்பு

pray1another


எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எதைக் கேட்டாலும் அதைத் தருவதாக வாக்களித்தவரே, உம்மிடத்தில் எங்கள் விண்ணப்பங்களை வைக்கிறோம் தகப்பனே,

.
சகோதரன் சுகுமாரன் இரட்சிக்கப்படவும், அதன் மூலம் அவருடைய முழுக்குடும்பமும் இரட்சிக்கப்படவும் ஜெபிக்கிறோம். கர்த்தரை அறிகிற அறிவில் அவர் வளரவும், வேதத்தை வாசித்து, கர்த்தரைப் பற்றிக் கொள்ளவும் ஜெபிக்கிறோம்.
.
சகோதரன் ஜான்சன் அன்டனி அவர்களுக்கு நிரந்தரமான, அவருடைய படிப்பிற்கேற்ற ஒரு வேலையைக் கொடுத்து ஆசீர்வதிக்கும்படியாக ஜெபிக்கிறோம். அவருடைய இருதய வாஞ்சைகளை நிறைவேற்றும்படியாக ஜெபிக்கிறோம்.
.
சகோதரன் சௌந்தரராஜ் அவர்களின் சரீரத்தில் இருக்கிற பிரச்சனைகள் மாறவும், அவருடைய லோன் பிரச்சனைகள் மாறவும், அவருடைய ஊழியத்தை தேவன் ஆசீர்வதிக்கவும் ஜெபிக்கிறோம்.
.
சகோதரன் பிராங்க்ளின் தேசாய் அவர்களின் மகன் டாக்டர் ஜெபா அவர்கள் வரும் பிப்ரவரி மாதம் 3 தேதி எழுத இருக்கிற யுனிவர்சிட்டி பரிட்சையில் நல்லபடியாக எழுதி முடிக்கவும், நல்ல மதிப்பெண்களோடு வெளிவரவும் தேவன் கிருபை செய்வீராக. வெளிநாட்டில் இருக்கிற அவருடைய மற்ற நான்கு பிள்ளைகளுக்கும் நல்ல வேலைகள் கிடைக்கவும் ஜெபிக்கிறோம்.
.
சகோதரன் இம்மானுவேல் ஏஞ்சலோ அவர்கள் சென்னையில் புரோகிரமராக வேலைக்கு சேர்ந்து செய்து கொண்டிருந்தாலும், அவருடைய படிப்பு பி.காம் ஆக இருப்பதால், தன்னுடைய வேலையை சரியாக செய்ய முடியவில்லை என்றும், அதிக நேரம் எடுத்தாலும், சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் அவதிப்படுவதால், அவருடைய படிப்பிற்கேற்ற வேலையை அந்த கம்பெனியிலேயே கிடைக்கவும் தேவன் கிருபை பாராட்டும்படியாக ஜெபிக்கிறோம். உம்மால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே, தயவாய் அவருடைய வாஞ்சையை நிறைவேற்றுவீராக.
.
சகோதரன் அனுதீப்குமார் அவர்களின் சகோதரியின் மகள் ஹரிணிக்கு மூன்றறை வருடங்கள் ஆகியும், உட்காரவோ, எழுந்து நடக்கவோ, நிற்கவோ முடியாதபடி இருக்கிறபடியால், தேவன் அந்த குழந்தைக்கு ஒரு அற்புதத்தை செய்வீராக. நாங்கள் இந்துக்கள், ஆனால் கர்த்தர் எங்களுக்கு ஒரு அற்புதம் செய்வார் என்று விசுவாசிக்கிறோம் என்று அவர்கள் எழுதியிருக்கிறபடியால், அவர்களுடைய விசுவாசத்தை கனப்படுத்தி, தேவன் ஒரு அற்புதத்தை அந்த குழந்தைக்கு செய்யும்படியாக ஒருமனமாக ஜெபிக்கிறோம் தகப்பனே, நீரே அற்புதங்களை செய்கிறவர் என்பதையும், இன்றும் ஜீவிக்கிறவர் என்பதையும் அந்த குடும்பம் அறியும்படியாக தேவன் பெரிய காரியத்தை செய்வீராக. எங்கள் துதி ஸ்தோத்திரங்களையும், விண்ணப்பங்களையும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உமக்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே ஆமென்.


...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.