Friends Tamil Chat

வெள்ளி, 1 நவம்பர், 2013

1st November 2013 - நமது பெலன்

This email contains graphics, so if you don't see them, click here to view it in your browser.
அனுதின மன்னா
A free Daily Devotion in Tamil right to your email!
2013 நவம்பர் மாதம் 01-ம் தேதி – வெள்ளிக்கிழமை
நமது பெலன்
....

உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு. - சங்கீதம் 16:11.

.
புத்தம் புதிய இந்நன்நாளில் தமது புத்தம் புதிய கிருபைகளை தருகின்ற புனிதராகிய இயேசுகிறிஸ்துவின் நல் நாமத்தில் வாழ்த்துக்கள். நவம்பர் மாதம் ஆரம்பித்து விட்டது. கடந்த 10 மாதங்களாக காத்த நம் கர்த்தர் இனி வரும் நாட்களையும் காக்க வல்லவராய் இருக்கிறார். அவருக்கே சகல துதி கனம் மகிமை உண்டாகுவதாக.

.

எமி கர்மைக்கேல் அம்மையார் இந்தியாவிற்கு வந்து அனாதைகள், இளவயதுள்ள விதவைகள் மற்றும் தேவதாசிகள் என்னப்பட்ட சிறுமிகளை வைத்து 50 வருடங்களுக்கு மேலாக காப்பகம் வைத்து நடத்தி வந்தார். இன்றும் டோனாவூரில் அந்த காப்பகம் நடைபெற்று வருகிறது. வயதான காலத்தில் சிலமுறை கீழே விழுந்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டு, தனது கடைசி இருபது வருடங்கள் படுத்த படுக்கையாகிவிட்டார்கள்.

.

அப்படியிருந்தும் அவர்கள் படுக்கையிலிருந்தபடியே அநேக புத்தகங்களையும், பாடல்களையும் கவிதைகளையும் எழுதினார்கள். அது அநேக ஆயிரங்களுக்கு ஆறுதலை கொண்டு வந்தது.

.

தனது உதவியற்ற நிலைமையிலும் அவர்கள் கர்த்தருடைய பிரசன்னத்தை அனுபவித்தார்கள். "கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்தே தமது பெலன்" என்று அவர்கள் மகிழ்ந்திருந்தபடியால் அவர்களுடைய படுக்கைக்கு அவர்களை காணச் சென்றவர்கள் தேற்றப்பட்டு, கர்த்தரை துதித்தபடி வந்தார்கள்.

.

ஒரு முறை உலகபிரசித்திப் பெற்ற தேவ ஊழியர் பில்லிகிரகாம் இந்தியாவிற்கு வந்திருந்தபோது டோனாவூரில் கார்மைக்கேல் அம்மையாரை சந்திக்கச்சென்றிருந்தார். திரும்பும்போது அவரை ஜெபிக்க வேண்டினர். அவர் ஜெபித்த போது தேவனுடைய பிரசன்னம் அந்த அறையில் அளவில்லாமல் நிரம்பியிருந்தபடியால் அவர் தொடர்ந்து ஜெபிக்க முடியாமற்போயிற்று. ஏமி அம்மையார் ஜெபித்து முடித்தார்கள். மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக்கூடாமற்போயிற்று, கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று. - (1 இராஜாக்கள். 8:11)

.

நமது குறைகளில் நாம் முறுமுறுத்துக் கொண்டே இருக்கிறோம் அல்லவா? நமது குறைகளிலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே நமது பெலன் என்று நாம் கர்த்தரை துதிக்க கற்றுக் கொண்டால் தேவ பிரசன்னம் நம்மை அளவில்லாமல் சூழ்ந்து கொள்ளும்;

.

பெலத்தின் மேலே மா பெலனே

புதுபெலன் நாம் பெற்றிட

சால்வைதனை எலிசா அடைந்தாற்போல்

சோர்வின்றி பெலன் என்றும் நாடுவோம்


ஜெபம்

நல்ல தகப்பனே எங்களது குறைகளில் நாங்கள் அதிப்திபட்டு குறைகளையே பெரிதாக்கிக் கொண்டிராமல் நிறைவான உம்மை துதிக்கவும், உமக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே எங்கள் பெலன் என்னும் இரகசியத்தை உணரவும் கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

.

...
...
அனுதின மன்னா குழு
இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. மேலும் விவரங்களுக்கு எங்கள் வெப்சைட்டை பார்க்கவும்.
Our Site: www.AnudhinaManna.net
Contact Us at: anudhinamanna@gmail.com
You can visit our site's archive section for our previous anudhina manna devotionals.
Not interested any more? Want to unscriber from this mailing list? Click here to unsubscribe.